Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காங்கேசன் துறைமுக அபிவிருத்திக்கு அமைச்சரவை அனுமதி – காணிகளும் சுவீகரிப்பு வடக்கின் வணிகச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, சிறிலங்கா அமைச்சரவை நேற்று முன்தினம் அனுமதி அளித்துள்ளது. காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்காக, நிலங்களை சுவீகரிக்கவும், உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்டத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்திருந்தார். இந்த திட்டத்துக்கு அமைச்சரவை நேற்று முன்தினம் அங்கீகாரம் அளித்துள்ளது. அதேவேளை, இன்று தொடக்கம் மூன்று நாட்கள் வடக்கில் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறி…

  2. படுகொலை சதித்திட்டம் பற்றிய உண்மைகள் எங்கே? – சிறிசேனவைக் கேட்கிறார் நளின் பண்டார சிறிலங்கா அதிபரைப் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கைக்காக ஐக்கிய தேசியக் கட்சி காத்திருப்பதாக, அந்தக் கட்சியைச் சேர்ந்த பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். “நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்தப் படுகொலைச் சந்தித்திட்டம் தொடர்பான உண்மைகளை இரண்டு வாரங்களுக்குள் வெளிப்படுத்துவேன் என்று கூறியி்ருந்தார். ஆனால் இரண்டு வாரங்களாகி விட்ட போதும், அவர் அளித்த வாக்குறுதிப்படி, இன்னமும் அதனை வெளிப்படுத்தவில்லை. சிறிலங்கா அதிபரும், நாமல் குமார் என்ற நபரும் சுமத…

  3. போதைப்பொருள் கடத்தல், சுற்றாடல் அழிவு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் அவர்களது பதவி நிலைகளை பார்க்காது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார். இன்று முற்பகல் அநுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் இடம்பெற்ற சுற்றாடல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அநுராதபுர மாவட்ட விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். சுற்றாடல் பாதுகாப்பின் முக்கியத்துவம் என்பது இன்று ஒரு முக்கிய விடயமாக அறியப்பட்டாலும் இது இன்னும் உரிய முறையில் நடைமுறை ரீதியாக மக்கள் மத்தியில் அமுல்படுத்தப்படவில்லை என்று ஜனா…

    • 2 replies
    • 481 views
  4. யாழ். வரணி இயற்றாலையிலுள்ள வீடோன்றில் கொள்ளையிட்ட நகை மற்றும் பணத்துடன் தப்பியோடிய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் வரணி இயற்றாலைப் பகுதியில் கடந்த 5ஆம் திகதி அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றது. வாள், கத்தி, பொல்லுகளுடன் புகுந்த மூவர் தூக்கத்தில் இருந்தவர்களை அச்சுறுத்தி. சுமார் ஒரு மணி நேரம் வீட்டை சல்லடை போட்டுத் தேடிய கொள்ளையர்கள், நகைகளையும் பணத்தைக் கொள்ளையிட்டனர். அத்துடன், அங்கு வெளிநாட்டு மதுபானத்தைக் குடித்தது மதுபோதையில் தடுமாறினர். சம்பவத்தை அறிந்த அந்தப்பகுதி இளைஞர்கள் உசரடைந்ததால் கொள்ளையர்களில…

  5. பாலியல் பலாத்காரத்திற்கு உடந்தையான பதின்ம வயதுச் சிறுமியின் தாயார் கைது… February 14, 2019 2ஆம் இணைப்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவதற்கு உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயாரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் உத்தரவிட்டார். கொக்குவில் பகுதியில் குடும்பப் பெண் ஒருவருடன் முறையற்ற உறவை வைத்திருந்த வான் சாரதி ஒருவர், அந்தப் பெண்ணின் பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தினார் என கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. …

  6. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கில் கடந்த 2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்படவேண்டிய ஹை றோட் செயற்றிட்டம் 3 வருடங்களாக தொடக்கப்படாத நிலையில், ஹை றோட் செயற்றிட்டம் நகைச்சுவையாக மாறியிருக்கின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் பிரதமர் முன்னால் கூறியிருந்தார். வடமாகாணத்திற்கு 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் ரணில் விக்கிரமசிங்க யாழ்.மாவட்ட செயலகத்தில் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்றங்கள் குறித்த ஆராய்வு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தாா். இதன்போது வீதி அபிவிருத்தி சம்மந்தமான விடயம் பேசப்படுகையில், …

  7. காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக வலயமாக்க நடவடிக்கை காங்கேசன்துறை துறைமுகத்தைச் சூழ பொருளாதார வலயமொன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறித்த துறைமுகப் பகுதியை பொருளாதார வலயமாக்கி வர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்திச் செய்யப்படுமென பிரதம அமைச்சர், ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இன்று யாழிற்கு விஜயம் செய்த அவர் (வியாழக்கிழமை) காங்கேசன்துறை துறைமுகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டார். இவ்விஜயத்தின் போது 45.27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் இத்துறைமுகத்தில் முன்னெடுக்கப்படுமென்று தெரிவித்தார். அத்துடன் இத்திட்டத்திற்குத் தேவையான நிலங்களை ஒதுக்கி எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் அபிவிருத்தித் திட்டத்தை நிறைவுச்செ…

  8. ‘வாழ்ந்த இடத்திலேயே இறுதி மூச்சை விடவேண்டும்’ என்பதே மக்களின் நிலைப்பாடு – பிரபாகணேசன் தாம் வாழ்ந்த இடத்திலேயே இறுதி மூச்சை விடவேண்டும் என்ற நிலைப்பாட்டில் கேப்பாபுலவு மக்கள் இருப்பதாக ஜனநாயக மக்கள் காங்கிராஸ் தலைவரும் ஜனாதிபதியின் வன்னிக்கான கருத்திட்ட பணிப்பாளருமான பிரபாகணேசன் தெரிவித்துள்ளார். சொந்த காணிகளை விடுவிக்குமாறு கோரி 714 ஆவது நாளாக போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கேப்பாபுலவு மக்களை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். போராட்டம் இடம்பெறும் கொட்டகைக்கு சென்று மக்களின் போராட்டத்தின் நியாயத்தன்மை மற்றும் படையினிரால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள…

  9. எம். றொசாந்த் / 2019 பெப்ரவரி 14 வியாழக்கிழமை, பி.ப. 02:25 நெடுந்தீவு வைத்தியசாலைகளில் கடந்த ஐந்தாண்டு காலமாக நிரந்தர வைத்தியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று (14) வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் மீளாய்வு கூட்டம் நடைபெற்றது. …

  10. இலங்கையின் வடக்கு மாகாண மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்திற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர், இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர். அப்போது யாழில் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர். இதற்கமைய கோப்பாய் பிரதேச செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு மாடிக்கட்டடத்தையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்திருந்தார். …

    • 2 replies
    • 798 views
  11. படத்தின் காப்புரிமை Fachrul Reza/NurPhoto via Getty Images Image caption கோப்புப்படம் இலங்கையில் உள்நாட்டு போர் நிறைவடைந்த பின்னர், வௌிநாடுகளில் குடிபெயர்வது படிப்படியாக முடிவுக்கு வந்த நிலையில் , தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. போர் சூழ்நிலை காணப்படாத போதிலும், இந்த வருடத்தில் இலங்கையிலிருந்து வௌியேறி வௌிநாடுகளில் குடிபெயர முற்பட்ட 80-க்கும் அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் பிரான்ஸூக்கு சொந்தமான ரீயூனியன் தீவை சென்றடைந்த 64 இலங்கையர்கள், அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு பிரான…

  12. பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாது ஒழிக்க கோரி யாழ்ப்பாணத்தில் இன்று விழிப்புணர்வு நடைபயணம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைப் பகுதியில் ஒன்று கூடியவர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாது ஒழிக்க கோரி பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு நடைபயணத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்து பலாலி வீதியூடாக பரமேஸ்வர சந்தி வரை சென்று, இராமநாதன் வீதியூடாக யாழ்.பல்கலைக்கழக வாயிலை நடைபயணம் அடைந்தது. பல்கலைகழக வாயிலிலும் சில நிமிடங்கள் கவனவீர்ப்புப் போராட்டம் இடம்பெற்று நடைபயணம் நிறைவடைந்தது. வல்லமை சமூக மற்ற…

  13. February 14, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn கடந்த 2009 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கொலை செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டுள்ள விசாரணைகளில் இதுவரை 12 கடற்படையினர…

  14. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ் போதான வைத்தியசாலைக்கான புதிய விபத்து மற்றும் அவசர அதி தீவிர சிகிச்சைப்பிரிவினை திறந்துவைக்கும் நிகழ்வு இன்று சுதேச சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டு குறித்த சிகிச்சைப்பிரிவினை திறந்து வைத்து வைத்திய சாலை சமூகத்திடம் கையளித்தார். குறித்த சிகிச்சை பிரிவானது 245 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு இரு பாலர்களுக்குமான தொழில்நுட்ப வசதியிலான பிரிவுகளும் திறந்து வைக்கப்பட்டன. …

  15. February 14, 2019 பணமோசடி – பயங்கரவாத எதிர்ப்பு நிதி கட்டமைப்பில், மூலோபாய குறைபாடுகளை கொண்ட 23 நாடுகளின் கறுப்பு பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பணமோசடி உள்ட்ட பயங்கரவாத நிதியளிப்பு அபாயங்களிலிருந்து, ஐரோப்பிய ஒன்றிய நிதி நிதிக்கட்டமைப்பை பாதுகாக்கும் வகையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்களது குறைபாடுகளை விரைவாக சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது …

  16. February 13, 2019 ஐக்கிய நாடுகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமை கூடடத் தொடரில் இரா. சம்பந்தன் மற்றும் சுமந்திரனுடன் இணைந்து இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கைக்கு அழுத்தத்தை கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். இந்தியா சென்றிருந்த மகிந்த ராஜபக்ச, அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்போதே இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க அரசு, இலங்கைக்கு எதிரான ஐ.நாவின் …

    • 4 replies
    • 660 views
  17. பலத்த பாதுகாப்புடன்- யாழ்ப்பாணத்தில் ரணில்!! பதிவேற்றிய காலம்: Feb 14, 2019 யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளுக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். யாழ்ப்பாண மாநகர சபை மைதானதை வந்தடைந்துள்ள அவர், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் பங்கேற்கவுள்ளார். https://newuthayan.com/story/10/பலத்த-பாதுகாப்புடன்-யாழ்ப்பாணத்தில்-ரணில்.html

  18. ஜனநாயக போராளிகளுடன் கலந்துரையாடிய ஸ்செலப்: பெண் தலைமைத்துவ குடும்பங்களை இலக்கு வைக்கும் நுண் நிதி பற்றியும் ஆலோசனை! சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான முன்மைச் செயலாளர் கிசெல ஸ்செலப், போருக்கு பின்னரான முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு,சமூக, பொருளாதார செயற்பாடுகள் சமூகநிலை, அரசியல் களத்தில் அவர்களது வகிபாகம் தொடர்பாக நேற்று ஜனநாயக போராளிகள் கட்சியினரிடம் கலந்துரையாடியுள்ளார். மேலும், இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் புதிய முறையிலான நில ஆக்கிரமிப்பு, வலிந்து காணாமல் செய்யப்பட்டோருக்கான பொறுப்பு கூறலில் காணப்படுகின்ற அசமந்தப்போக்கு, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளின்வழி செயற்படாமை தொடர்பாகவும் இந்த சந்திப்பில் கவனம் செலுத…

  19. றீயூனியனுக்கு படகில் சென்றவர்கள், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்… February 14, 2019 2ஆம் இணைப்பு…. சட்டவிரோதமாக ரீயூனியன் தீவுக்குச் சென்ற நிலையில் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 70 பேரையும் இன்று நாட்டிற்கு திருப்பியனுப்புவதற்கு, பிரான்ஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். விசேட விமானம் மூலம் இவர்கள் அனைவரும் இன்று, பிரான்ஸின் விசேட விமானத்தினூடாக நாட்டிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக, கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் உதவி விசாரணை பணிப்பாளர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற படகொன்று காணாமல…

  20. அடம்பன் கீலிக்கரையான் கடற்பகுதியில் 820 கிலோ பீடி சுற்றும் இலைகள் கொண்ட பொதிகள் மீட்பு : February 14, 2019 குளோபல் தமிழ்ச்செய்தியாளர் மன்னார்-அடம்பன் காவல்துறைப் பிரிவில் சுமார் 820 கிலோ கிராம் நிறை கொண்ட பீடி சுற்றும் இலைகள் அடங்கிய பொதிகளை இன்று வியாழக்கிழமை(14) காலை அடம்பன் காவல்துறையினர் மீட்டுள்ளனர். அடம்பன் காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து அவ்விடத்துக்கு சென்ற காவல்துறையினர் அடம்பன் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கீலிக்கரையான் கடற்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 13 பொதிகளைக்கொண்ட 820 கிலோ கிராம் எடை கொண்ட குறித்த பீடி சுற்றும் இலைகளை மீட்டுள்ளனர். எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்பட…

  21. வடக்கு மாகாணத்தின் எந்த ஒரு பாடசாலையும் பூரணமாக அபிவிருத்தி செய்யப்படவில்லை ; விஜயகலா நான்கு வருடங்களில் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு கிட்டத்தட்ட 6000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு பாடசாலையும் பூரணமாக அபிவிருத்தி செய்யப்படவில்லை கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன். தெரிவித்துள்ளார். யுத்தத்திற்கு உட்பட்ட பிரதேசம், யுத்தத்திற்கு உட்பட்ட மாகாணம் எனக் கூறி சர்வதேசத்திலே இருந்து நிதிகளை பெற்றுக் கொண்டு வந்து ஏனைய ஏழு மாகாணங்களையும் அபிவிருத்தி செய்தார்கள். கடந்த காலங்களில் அபிவிருத்தி என்ற போர்வையில் இங்கு எதுவுமே நடக்கவில்லை. என கடந்த கால அரசை கடுமையாக சாடினார் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன். தும்பளை சிவப்பிரகாச மகாவ…

  22. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுகாதார மற்றும் சுதேச அமைச்சினால் வடமாகாணத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த சுகாதார சேவை வைத்தியசாலைகளுக்கான 17 அம்புலன்ஸ் வண்டிகளை கையளிக்கும் நிகழ்வு இன்று கைதடியில் அமைந்துள்ள வடமாகாண முன்னாள் முதலமைச்சர் அலுவகத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வுக்கு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கலந்து கொண்டு இவ் அம்புலன்ஸ் வண்டிகளை உரிய சுகாதார வைத்திசாலை வைத்தியர்களிடம் கையளித்துள்ளார் இதில் மாவட்டங்களுக்காக யாழ்ப்பாணம் 08 வண்டிகளும், கிளிநொச்சி 03 வண்டிகளும், முல்லைத்தீவு 02வண்டிகளும், மன்னார் 03 வண்டிகளும், வவுனியா 01 வண்டிகளும் ஆதார, பி…

    • 2 replies
    • 588 views
  23. வெளிநாட்டிலிருந்து வந்தவர் மீது வாள்வெட்டு February 13, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வரணியில் கோயில் பிரச்சனை காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்த நபர் மீது வாள் வெட்டுக்கும்பல் தாக்குதலை நடாத்தியுள்ளது. குறித்த தாக்குதல் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் ஏவலில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதல் சம்பவத்தில் வேதராணியம் ஜெகதீசன் (வயது 48) என்பவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , தாக்குதலுக்கு உள்ளான நபர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து ஊருக்கு திரும்பியுள்ள அவர் ஊரில் உள்ள கோயில் ஒன்றின் பிரச்சனையில் தலையிட்டு உள்ளார். அதன் போது வெளிநாட்டில் வசிக்கும் நபரொரு…

    • 2 replies
    • 972 views
  24. காணாமலாக்கப்பட்டவரின் மனைவிக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை! மன்னார் பேசாலையைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட ஒருவரின் மனைவி பாதுகாப்பு கோரி மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த முறைப்பாடு வாய்மொழி மூலம் நேற்று (புதன்கிழமை) மனித உரிமை ஆணைகுழுவின் மன்னார் மாவட்ட உப காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேசாலை 8 ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட நபரொருவரின் மனைவியான ஆனந்த ராஜா எட்னா டயஸ் என்பவரே, தனக்கும் தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளார். குறித்த பெண்ணின் கணவன் காணாமலாக்கப்பட்ட விடயம் தொடர்பான வழக்கு 15ஆம் திகதி மன்னார் மேல் ந…

  25. கிளி.வெள்ளப்பெருக்குக்கு காரணம் இரணைமடுக்குளமா? – அறிக்கை கையளிப்பு கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அனர்த்தம் இரணைமடுக் குளத்தினால் ஏற்பட்டதா என்பதைக் கண்டறிய வட.மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் நியமித்த குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால அறிக்கை விசாரணைக் குழுவின் தலைவர் பொறியியலாளர் இரகுநாதனினால் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. இதன்காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்ததுடன், பல குடும்பங்களைச் சேரந்த மக்கள் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து, இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.