Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாட்டின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் ஒன்று யாழில் முன்னெடுக்கப்படவுள்ளது. சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டம் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது. “போலி சுதந்திர தினம் எமக்கு வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சம உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் யூட் தெரிவித்தார். மேலும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுளை தேடித்தருமாறும், நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். http:…

  2. தேசிய அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சியின் பத்து உறுப்பினர்கள்- ஆறுமுகன் தொண்டமான் அமைச்சுப் பதவியை ஏற்பார்? மகிந்த ராஜபக்ச தரப்பும் ஜே.வி.பியும் கடும் எதிர்ப்பு இலங்கை ஒற்றையாட்சியில், ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணி அறிவித்தமை தொடர்பாக மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய பொது ஜன பெரமுன மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் விமர்சித்துள்ன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் விமர்சித்துள்ளது. ஆனாலும் கட்சியின் பத்து உறுப்பினர்கள் ரணில் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள்…

    • 0 replies
    • 228 views
  3. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு அலரிமாளிகையில் சனிக்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவிக்கின்றது. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதி அமைச்சர் அலி சாயிர் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபிக்கின்றமை தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடன், தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபிக்கும் ந…

  4. தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறான வழியில் பயணிப்பதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பு தற்போது செல்லும் பாதை நம்மை நாமே அழித்துக்கொள்வதற்கு வழி வகுக்கும் என்பதே எமது கணிப்பீடூ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நலன்விரும்பிகளின் ஆலோசனைகள் மற்றும் காத்திரமான விமர்சனங்களை எல்லாம் சற்றும் கருத்தில் கொள்ளாமல், ஒரு சில தனி…

  5. ‘கூட்டமைப்பில் இணைபவர்களுக்கு மரபணுப் பரிசோதனை அவசியம்’ - ஞா.சிறிநேசன் Editorial / 2019 பெப்ரவரி 03 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 05:35 Comments - 0 க.விஜயரெத்தினம், வா.கிருஸ்ணா எதிர்வரும் காலங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைபவர்களுக்கு, மரபணுப் பரிசோதனை அவசியமாகுமென, அக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழூர்முனையில் பொங்கல் விழா, நேற்று (92) நடைபெற்றது. மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், புதிய …

  6. புலிகளின் கொள்கையை கூட்டமைப்பு செயற்படுத்தத் தவறிவிட்டது – சுரேஸ் குற்றச்சாட்டு! புலிகளின் கொள்கையை கூட்டமைப்பு செய்யத் தவறிவிட்டது என்றும் எதிர்வரும் மார்ச் மாதம் வரவுள்ள வரவு செலவு திட்டத்திற்கும் எவ்வித நிபந்தனைகளுமின்றி ஆதரவை வழங்குவார்கள் என்றும் சுரேஸ் பிரேமசந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால் இவர்கள் விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட முன்னரான காலத்திலும் மஹிந்த ஆட்சியிலும் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்தார்கள் என அவர் சுட்டிக்காட்டினார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், “வ…

  7. வடக்கில் 5 ஆயிரம் வீடுகளை அமைக்க நிதி ஒதுக்க முடியாது – அரசாங்கம் ஐக்கிய நாடுகள் வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கல் நிறுவனத்தின் அபிவிருத்தி திட்டதிற்கு திறைசேரியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்திற்குப் பின்னர் இடம்பெயர்ந்தவர்களுக்கு, செங்கலினாலான 25,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஐக்கிய நாடுகள் வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கல் நிறுவனத்தால் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த திட்டத்தின் செலவிற்கு தமது திறைசேரியில் இருந்து பணம் ஒதுக்கீடு செய்ய முடியாது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், வரவிருக்கு…

  8. 6 மாதிரிக் கிராமங்களில் 150 வீடுகளுக்கு அடிக்கல்!! பதிவேற்றிய காலம்: Feb 2, 2019 தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாதிரி வீட்டுத் திட்டத்துக்கு அமைவாக, வவுனியாமாவட்டத்தில் 6 மாதிரிக் கிராமங்களை உள்ளடக்கிய 150 வீடுகளுக்கு இன்று அடிக்கல் நடப்பட்டது. தரணிக்குளம் பகுதியில் மூன்று கிராமங்களும், கட்டடையர்குளம் ,தம்பனைசோலை, பீடியாபாம் ஆகிய கிராமங்களும் இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. வீடமைப்பு அதிகாரசபையின் வவுனியா மாவட்டப் பிரதி முகாமையாளர் சுசிகரன் தலைமையில் அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்றத. நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், வடமாகாண முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம், மாகாண முன்னாள் உறுப்பினர் செ.மயூறன், பிரதேச சபையி…

  9. இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட இரண்டு கடலோர ரோந்து படகுகளை சீஷெல்ஸ் நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று (01) முற்பகல் கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் நிறுவனத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கும் சீஷெல்ஸ் நாட்டுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சீஷெல்ஸுக்கு மேற்கொண்ட அரசமுறை பயணத்தின்போது வழங்கிய உறுதிமொழிக்கிணங்க இலங்கையின் அன்பளிப்பாக இந்த கடற்படை படகுகள் சீஷெல்ஸ் நாட்டுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த கடற்படை ரோந்து படகுகள் வெலிசரை கடற்…

  10. சுதந்திர தினத்தில் விடுதலையாகும் 545 சிறை கைதிகள் – அரசியல் கைதிகளுக்கு ஏமாற்றம்! சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்படும் கைதிகளில் எந்த தமிழ் அரசியல் கைதிகளும் இல்லை என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு 4 பெண்கள் உட்பட 545 சிறைக் கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாளை (திங்கட்கிழமை) விடுவிக்கப்படவுள்ளனர். அந்தவகையில் விடுவிக்கப்படவுள்ள கைதிகளின் பட்டியலில் தமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக ஆதவன் செய்தி சேவை அவரிடம் வினவிய போது, “விடுதலையாகும் க…

  11. பிரதமர் ரணில் சகல எம்.பி.க்களுக்கும் அழைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெளியே உள்ள சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள வருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அலரிமாளிகையில் அபிவிருத்தித் திட்டமொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெளியில் உள்ள சகலரும் எம்முடன் இணைந்து செயற்பட வாருங்கள். நாம் ஒன்று பட்டால் எவருக்கும் எம்மைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. நாம் கடந்த 2015 ஆம் ஆண்டு பாரிய சவாலுக்கு முகம்கொடுத்தோம். அவ்வருடத்தில் உலகில் அதிக கடன் பட்ட நாடுகளில் இலங்கையும் காணப்பட்டது. இருப்பினும், நாம் அவற்றை முகாமை செய்து மீண்டும் சும…

    • 0 replies
    • 197 views
  12. “அரசமைப்பு சாத்தியமில்லை என ஜனாதிபதி கூறுவதை ஏற்று நடக்க முடியாது. அவர் நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து செயற்பட்டாலும், நாங்கள் அதனைக் கைவிடப் போவதில்லை” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு வாகரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. அதில் அவர் தெரிவித்ததாவது, நாங்கள் ஓர் இருண்ட அரசியல் சூழ்நிலைக்குள் சென்று, அதிலிருந்து விடுபட்டு ஒரு நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கலாம் என்கின்ற சூழ்நிலையிலே தான் இந்தத் தை பிறந்திருக்கின்றது. தை பிறந்ததால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை திரும்பவும் துளிர…

  13. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த அரசாங்கம் அபிவிருத்தி என்ற பெயரில் போதைப் பொருட்களை விதைத்தார்கள்.வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அரசியல் வாதிகள் ஊடாகவே அதிக அளவில் போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றது என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா,மகேஸ்லரன் தெரிவித்தார். மன்னார்-அடம்பன் மகா வித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை (2) மாலை இடம் பெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். நெல்லை அறுவடை செய்ய விதைப்பது போல் வடக்கில் போதைப் பொருட்களை விதைப்பதற்கு அரசியல் வாதிகளே கார…

  14. February 3, 2019 அனுராதபுரத்தில் தனது குழந்தையை காணவில்லை என தாயார் முறைப்பாடு செய்திருந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக குழந்தை தேடப்பட்டு வந்தநிலையில். தற்போது, காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணைகளின் பின்னர், தாயாரே தனது குழந்தையை கொன்றிருப்பதாக தெரிய வந்துள்ளது. அனுராதபுரம் சாலியவௌ கிராமத்தை சேர்ந்த தெனுரி திஸாரா என்ற நான்கு வயதுச் சிறுமியை கடந்த நான்கு நாட்களாக 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடந்த 30ஆம் திகதி முதல் தேடுதல் இடம்பெற்றபோதும், இதுவரையில் சிறுமி கண்டுபிடிக்கப்படவில்லை. சிறுமியை தாயாரே கொன்றிரு…

  15. February 3, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn நாட்டில் தேசிய அரசாங்கம் ஒன்று அமைந்தால் தேசிய இனப்பிரச்சினையை தீர்க்க முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளும் இண…

  16. February 3, 2019 இலங்கைக்கான வெளியுறவு கொள்கைகளை வலுப்படுத்தவும் சர்வதேச உறவுகளை பேணவும் மகிந்த ராஜபக்ஸவின் வெளியுறவு அலுவலகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை எவ்வாறு சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவது என்பது தொடர்பில் கற்கைகளும் ஆராய்ச்சிகளும் இங்கு இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஸ சர்வதேச உறவுகள் நிலையம் எனப் பெயரிப்பட்டுள்ள இந்த நிலையத்தின் செயலாளராக ஜானக நிமலச்சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் இறைமை மற்றும் சுயாதிபத்தியத்தியத்தை மனதில் கொண்டு பிராந்திய நாடுகளை பங்க…

  17. 71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பு காலிமுகத்திடலில் February 3, 2019 நாளை நடைபெறவுள்ள இலங்கையின் 71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பு காலிமுகத்திடலில் கோலாகலமான முறையில் இடம்பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ள இந்த சுதந்திரதின வைபவத்தில் பிரதம விருந்தினராக மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ரஹிம் மொஹமட் கலந்துகொள்ளவுள்ளார். காலிமுகத்திடலில் நடைபெறவுள்ள சுதந்திர தின தேசிய வைபவத்தில் 865 இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக்கலைஞர்களின் பங்குபற்றலுடன் விசேட கலாசார நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், முப்படையினர் மற்றும்…

  18. யாழ்ப்பாணத்தில் கடந்த காலத்தில் வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களை மீண்டும் நாட்டிற்கு அனுப்புமாறு அந்நாட்டு அரசிடம் விண்ணப்பிக்க உள்ளதாக வடமாகாண சிரேஸ்ர பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொசாந்த் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் உள்ள வடமாகாண சிரேஸ்ர பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலையத்தில் இன்று (2) சனிக்கிழமை காலை ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணத்தில் கடந்த காலத்தில் நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாகியுள்ளனர். சிலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்…

  19. இலங்கையில் வருகின்றது தானியக்க ரயில் டிக்கெட் முறை! இந்த ஆண்டின் இறுதியில் இலங்கையில் ஒரு தானியக்க ரயில் டிக்கெட் முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எம். டி.ஜே.டி.பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் அதற்கான திட்டத்தை அமுல்படுத்த தாம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கை ரயில்வே திணைக்களம் இந்த திட்டத்திற்கான பல ஒப்பந்தங்களை பெற்றுள்ளதாகவும், இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டத்தின் கடன் வழங்குநர்களின் அங்கீகாரம் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது இந்த திட்டத்திற்காக நான்கு முன்மொழிவுகளை பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், அவற்றை மதிப்பீடு செய்து ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு சமர்ப்பிக…

  20. வடக்கில் போதைப் பொருள்ளை விதைக்கும் அரசியல்வாதிகள்!! பதிவேற்றிய காலம்: Feb 3, 2019 போரை முடிவுக்கு கொண்டு வந்த அரசு, அபிவிருத்தி என்ற பெயரில் போதைப் பொருள்களை விதைத்தார்கள். வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் அரசியல் வாதிகள் ஊடாகவே அதிக அளவில் போதைப் பொருள்கள் கடத்தப்படுகின்றன. இவ்வாறு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்லரன் தெரிவித்தார். -மன்னார்-அடம்பன் மகா வித்தியாலயத்தில் நேற்று இடம் பெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது, நெல்லை அறுவடை செய்ய விதைப்பது போல் வடக்கில் போதைப் பொருள்களை விதைக்கின்றார்கள். இதற்கு காரணம் அரசியல் வாதிகள். தங்களுடைய சுய இலாபத்…

  21. February 2, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn இலங்கையின் 71ஆவது சுதந்திரதினம் எதிர்வரும் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், கேப்பாபுலவு மக்கள் குறித்த நாளை துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ளனர். 704 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாபுலவு மக்கள், இலங்கை சுதந்த…

    • 1 reply
    • 334 views
  22. யாழ் ‘கஞ்சா நெட்வேர்க்’ பிரதான சூத்திரதாரி முஸ்லிம் காங்கிரஸ் யாழ் அமைப்பாளர்: பள்ளிவாசலில் தங்கியிருந்து கஞ்சா கடத்தல்! By admin - கோப்பு படம் யாழ் ஐந்து சந்தி பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் நேற்று முன்தினம் இரவு கைதானவர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் யாழ்ப்பாண அமைப்பாளர் ரோஷான் தமீன் ஆவார். யாழ்ப்பாணத்திற்கான பிரதான கஞ்சா விநியோகஸ்தர்களில் இவரும் ஒருவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். அண்மையில் வல்வெட்டித்துறையில் பெருந்தொகை கஞ்சா கைப்பற்றப்பட்டிருந்தது. இந்த கடத்தலிற்கும் இவருக்கும் தொடர்புள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியிலுள்ள பள்ளிவாசலுக்கு மு…

    • 21 replies
    • 1.9k views
  23. கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கியமைக்காக மாணவன் தாக்கப்படவில்லை – பிரதிக் காவல்துறைமா அதிபர் February 2, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கிய மாணவன் ஒருவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அச் சிறுவன் தாக்கப்பட்டத்திற்கும், கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கியமைக்கு எதுவித தொடர்புமில்லை என வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் ரொஷான் பனான்ர்டோ தெரிவித்துள்ளார். குறித்த சிறுவன் துவிச்சக்கரவண்டியில் பயணித்த போது மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் குறித்த சிறுவனது துவிச்சக்கர வண்டிக்கு முன்பாக தமது மோட்டார் சைக்கிளை திருப்பியதால் ஏற்பட்ட விபத்திலேயே இச் சிறுவன் காயமடைந்ததாகவும் அவர் மேலு…

    • 3 replies
    • 763 views
  24. தேசிய அரசில் இணையத் தயாராகும் சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் தேசிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ள யோசனை எதிர்வரும் 7ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் அதில் இணைந்து கொள்ளவுள்ளனர் என்று ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஒரு உறுப்பினருடன் இணைந்து, தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் யோசனையை ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ளது. அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலேயே ஐதேக இந்த யோசனையை முன்வைத்திருப்பதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேவேளை, இந்த தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு, அதிபர் சிறிச…

    • 0 replies
    • 240 views
  25. பிரிகேடியர் பிரியங்க மீதான பிடியாணை நீக்கம் – சிறிலங்கா வரவேற்பு பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக, பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடியாணையை விலக்கிக் கொண்டிருப்பதை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர், “பிரித்தானியாவின் சட்டமுறைமைக்குள் தலையீடு செய்ய நாங்கள் விரும்பவில்லை. சிறிலங்கா அதிகாரிக்கு விலக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்ற அனைத்துலக சட்டக் கோட்பாட்டை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.” என்று கூறியுள்ளார். லண்டனில் கடந்த ஆண்டு பெப்ரவரி 4ஆம் நாள் போராட்டம் நட…

    • 0 replies
    • 198 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.