Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மன்னார் உதவிக்கரம் அமைப்பின் 20 ஆண்டு நிறைவும் விழிப்புணர்வு பேரணியும் January 31, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் கறிற்றாஸ்- வாழ்வுதயத்தின் ஒரு பிரிவாகிய உதவிக்கரப் பிரிவு உதயமாகி 20 ஆண்டுகள் நிறைவையொட்டி விசேட நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை(31) காலை கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை செ. அன்ரன் அடிகளாரின் தலைமையில் உதவிக்கர நிலையத்தில் இடம் பெற்றது. 1999 ஆம் ஆண்டு மன்னார் மாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட உதவிக்கரம் அமைப்பு யுத்தம் காரணமாகவும் இயற்கை உபாதை, பிறவி குறைபாடு மற்றும் விபத்தினால்; அங்கங்களையும் உள் உறுப்புக்களையும் இழந்தவர்களுக்கான உதவிகள் மற்றும் மாற்று அங்கங்களை வழங்கி …

  2. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது கஞ்சா விற்பனை செய்யப்படும் தகவல் வழங்கிய மாணவன் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்த நிலையில் தற்போது தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். . சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ஜனாதிபதியின் பணிக்கு அமைய தேசிய போதை பொருள் ஒழிப்ப வாரம் பாடசாலைகள் தோறும் கடந்த 21 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை இடம்பெற்று வந்தது. இதன் போது பாடசாலைகள் இந்த ஐந்து நாட்களும் துறைசார்ந்தவர்களை அழைத்து போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்க வேண்டும். …

  3. “புலிகள் பயங்கரவாதிகளானால், அவர்களை அழித்த அரசின் நடைமுறையும் ஒருவித பயங்கரவாதமே” - சுமந்திரன் January 23, 2019 இந்த நாடு, ஒரேயொரு பிரச்சினையை, பல வருடங்களாகச் சந்தித்து வருகிறது. அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்ற ஒரேயோர் எண்ணத்தில் தான், தான் இந்த அரசியலுக்குள் பிரவேசித்ததாகவும் அது வெற்றியளித்தாலோ அல்லது தோல்வி கண்டாலோ, தன்னுடைய அரசியல் பயணம் தொடர்பான தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்காக, புதிய சமூக ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்படல் வேண்டுமென்றும் அதற்கான சகல முயற்சியையும் தான் எடுப்பதாகவும் தெர…

    • 21 replies
    • 2.3k views
  4. கிளிநொச்சி மாவட்டத்தில் மாணவர்கள் போதைப் பொருளிற்கு அடிமையாகி வருவதாக கிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவர் வைத்தியர் ஜெயராஜா இன்று தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போதைப்பொருள் பாவனையில் மாணவர்கள் அதிகம் ஈடுபடுவது தொடர்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து குறித் ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே வைத்தியர் மேற்கண்டவாறு தெரிவித்தார். https://www.ibctamil.com/srilanka/80/113173?ref=rightsidebar

  5. அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக மனோ கணேசன் கூட்டணி எச்சரிக்கை Jan 31, 2019 | 1:59 தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வுக்கு இணங்காவிடின், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி எச்சரித்துள்ளது. தோட்டத்தொழிலாளர்களுக்கான ஊதியத்தை குறைந்தபட்சம் 150 ரூபாவினால் அதிகரிக்காவிடின், அரசாங்கத்தில் இருந்து விலகுவோம் என்று, தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். ”நாங்கள் எமது நிலைப்பாட்டை ஏற்கனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோம். அவர் உங்களையும், அமைச்சர்கள் நவீன் திசநாயக்க மற்றும் ரவீந்திர சமரவீர ஆகியோரையும் சந்தி…

  6. January 31, 2019 இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி அல்லது அதற்கு முந்திய ஒரு சனிக்கிழமையில் நடத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பை விடுக்காமல், தனது பதவிக்காலம் முழுவதுமாக பதவியில் நீடிக்க முடிவு செய்தால், ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதிக்கும் இடையில் நடத்தப்பட வேண்டியது அவசியம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல…

  7. January 31, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான தாக்கல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வட மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக பா.டெனீஸ்வரனை நியமிக்க வேண்டும் என நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் …

  8. கரும்புலிகளின் சீருடை அணிந்து புகைப்படம் எடுத்த ஆறு இளைஞர்கள் கைது; 15 பேருக்கு வலைவீச்சு: ‘படம்’ காட்ட முயன்றார்களாம்! January 28, 2019 விடுதலைப் புலிகளின் கரும்புலி படையணியின் கறுமையான வரி சீருடையுடன் புகைப்படம் எடுத்த ஆறு இளைஞர்கள் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த இளைஞர்களே கைதாகியுள்ளனர். வடக்கில் புலிகள் மீளக்கட்டியெழுப்பப்படுவதை போல தோற்றத்தை காண்பித்து புலம்பெயர் தமிழர்களிடமிருந்து நிதியை பெறவே இவர்கள் நாடகமாடியிருக்கலாமென பொலிசார் தெரிவித்துள்ளனர். தகவல் ஒன்றை அடுத்து, வீடொன்றை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். எனினும், பொலிசார் தேடிச்சென்றவர் தப்பிச் சென்றிருந்தார். அந்த வீட்டில் இருந்த கணினியை சோதனைக்குட்படுத்திய போது, …

    • 31 replies
    • 2.1k views
  9. அது கடந்த 2018 டிசம்பர் 25 ஆம் திகதி. அதி­காலை நேரத்தில் குரு­நாகல் மாவட்டம் பொது­ஹர பொலிஸ் பிரிவின் கட்­டு­பிட்­டிய வீதியில் கோண்­வல பகு­தியில் அமை­யப்­பெற்­றுள்ள ஆலயம் ஒன்றில் இந்துக் கட­வுள்­களைக் குறிக்கும் உரு­வச்­சி­லைகள் அடை­யாளம் தெரி­யா­தோரால் அடித்து நொறுக்கி சேத­மாக்­கப்­பட்­டன. இந்த சம்­பவம் தொடர்பில் பொது­ஹர பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அதா­வது, கடந்த 2018 டிசம்பர் 26 ஆம் திகதி இத­னை­யொத்த ஒரு சம்­பவம் யட்­டி­நு­வர - வெலம்­பட பொலிஸ் பிரிவில் பதி­வா­னது. எம்.எப்.எம்.பஸீர் அது கடந்த 2018 டிசம்பர் 25 ஆம் திகதி. அதி­காலை நேரத்தில் குரு­நாகல் மாவட்டம் பொது­ஹர பொலிஸ் பிரிவின் கட்­டு­பிட்­டிய வீதியில் கோண…

    • 4 replies
    • 1.4k views
  10. அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்ள நடவடிக்கை – கோட்டாபய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கில், தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்வதற்கான ஆவணங்களை தயாரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விரைவில் எனது அமெரிக்க குடியுரிமை நீக்கப்படும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ தரப்பில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட நான் தயாராகி விட்டேன். அதற்கு மஹிந்த ராஜபக்ஸவி…

    • 3 replies
    • 910 views
  11. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வவுனியாவில் பாரிய போராட்டம் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வழங்கக் கோரி வவுனியாவில் நேற்று பாரிய கவனயீர்ப்புப் போராட்டமும் பேரணியும் நடத்தப்பட்டது. வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களிலும் இருந்து வந்த, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துலக சமூகம் இந்த விவகாரத்தில் தலையீடு செய்து தமக்கு நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். http://www.puthinappalakai.net/2019/01/31/news/36163

    • 0 replies
    • 214 views
  12. சிறிலங்கா படை அதிகாரிகளின் சடலங்களுடன் வருகிறது ஐ.நாவின் சிறப்பு விமானம் மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, அல் குவைடா தீவிரவாதிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு சிறிலங்கா படை அதிகாரிகளின் சடலங்களும் ஐ.நாவின் சிறப்பு விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்படவுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில் மேஜர் ஜெயவிக்ரம, சார்ஜன்ட் விஜேகுமார ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் ஆறு படையினர் காயமடைந்தனர். உயிரிழந்த இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளின் சடலங்களையும் ஏற்றிக் கொண்டு வரும், ஐ.நாவின் சிறப்பு விமானம், வரும் சனிக்கிழமை பிற்பகல் 3.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளது. இந்தச் சடலங்கள…

    • 0 replies
    • 360 views
  13. அமெரிக்காவுடன் பேச்சுக் கூட நடத்தவில்லை – ருவன் விஜேவர்த்தன சிறிலங்காவில் அமெரிக்காவின் இராணுவத் தளம் எதையும் அமைப்பது தொடர்பாக அந்த நாட்டுடன் எத்தகைய உடன்பாடும் செய்து கொள்ளப்படவில்லை என்று, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். அனுராதபுரவில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,“ எந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்காவில் வெளிநாடு ஒன்றின் இராணுவத் தளத்தை அமைப்பதற்கான தேவை இல்லை. அவ்வாறான எந்த நோக்கமும் கிடையாது. எதிர்க்கட்சியினர் மக்களை தவறாக வழிநடத்துவதற்காக, ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான ஏமாற்று வேலையில் ஈடுபடுகின்றனர். இங்கு பரவியுள்ள சேனைப் புழுவும் கூட அனைத்துலக சதித் திட்டம் …

    • 0 replies
    • 235 views
  14. இல்மனைட் அகழ்வுக்கு பாரிய எதிர்ப்பு ஆர்.ஜெயஸ்ரீராம் / 2019 ஜனவரி 30 புதன்கிழமை, பி.ப. 05:59 Comments - 0 மட்டக்களப்பு - வாகரை பிரதேசத்தில் கனிய மண் (இல்மனைட்) அகழ்வுத் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை நிறுத்துமாறு வலியுறுத்தி, வாகரை பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று (30) பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கதிரவெளி பிரதேசப் பொதுமக்களும் சமூக அமைப்பினரும் இணைந்து, இவ்வார்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களான பால்சேனை வடக்குத் தொடக்கம் வெருகல் வரையான கதிரவெளி, புதூர், புச்சாக்கேணி ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக, கனிய மணல் அகழ்வும் தொழிற்சாலை அமைக்கும் ஆரம்ப வேலைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக, ஆர்ப்பாட…

  15. புங்­கு­டு­தீவு வித்­தியா படு­கொலை வழக்கு சந்­தே­க­ந­பரை விடு­வித்­தமை தொடர்­பான விசா­ர­ணை­யைத் துரி­தப்­ப­டுத்த உத்­த­ரவு! பதிவேற்றிய காலம்: Jan 31, 2019 புங்­கு­டு­தீவு வித்­தியா படு­கொலை வழக்­கில் முதன்­மைச் சந்­தே­க­ந­பரை விடு­வித்­தமை தொடர்­பாக முன்­னாள் பிரதி பொலிஸ்மா அதி­ப­ருக்கு எதி­ரான வழக்­கில் விசா­ர­ணை­களை விரை­வு­ ப­டுத்­து­மாறு குற்­றப்­பு­ல­ னாய்­வுப் பிரி­வி­ன­ருக்கு ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்­றம் நேற்று உத்­த­ரவிட்­டது. குறித்த வழக்கு விசா­ரணை ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்­றில் நீதி­வான் ஏ.யூட்­சன் முன்­னி­லை­யில் நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. இதன்­போது குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் மேல­திக விசா­ரணை அறிக்­கை­யொன்றை தாக்­கல் …

  16. சட்­ட­வி­ரோத முறை­யில் பணம் அற­விட்­டால் அதி­பர்­க­ளுக்கு எதி­ரா­கக் கடும் நட­வ­டிக்கை கல்வி அமைச்­சர் அகி­ல­வி­ராஜ் எச்­ச­ரிக்கை பதிவேற்றிய காலம்: Jan 31, 2019 வச­தி­கள் மற்­றும் சேவைக் கட்­ட­ணங்­க­ளுக்கு மேல­தி­க­மாக சட்­ட­வி­ரோ­த­மான முறை­ யில் பணத்தை அற­வி­டும் அதி­பர்­க­ளுக்கு எதி­ரா­கக் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று எச்­ச­ரித்­தார் கல்வி அமைச்­சர் அகில விராஜ் காரி­ய­வ­சம். இது தொடர்­பில் அமைச்­ச­ரின் ஊட­கப் பிரிவு அனுப்பி வைத்­துள்ள அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது: வச­தி­கள் மற்­றும் சேவை கட்­ட­ணங்­கள் அறி­வி­டும் போது குறித்த பணம் தேசிய பாட­சா­லை­யா­யின் கல்வி அமைச்­சின் செய­ல­ரி­ட­மும், மாகாண பாட­சா­லை­யா­யின் ம…

  17. மாகாண சபைத் தேர்தலை, பழைய முறையில் நடத்துங்கள்… மகிந்த January 31, 2019 இலங்கையின் மாகாண சபை தேர்தலை, பழைய முறையில் நடாத்துவதற்குரிய நடவடிக்கைகளை, தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார். மாகாண சபைத் தேர்தல் காலதாமதமாவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரே காரணம் என ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்த்தரும், அமைச்சருமான கபீர்காசிம் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஸ இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் உடனடியாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விடுத்து, அவர் பதவி வில…

  18. வடக்கு, கிழக்கில், மீழ்குடியேற்றப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்… January 31, 2019 வடக்கு, கிழக்கு மகாணங்களில் மீள்குடியேற்றப் பணிகளை துரிதமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள், மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சி, திறன் ஆறறல் அபிவிருத்தி, இளைஞர் அலுவல்கள் அமைச்சர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (30.01.19) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பிலான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. …

  19. டிசம்பர் 7 இல் ஜனாதிபதி தேர்தல்? ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி அல்லது அதற்கு முந்திய ஒரு சனிக்கிழமையில் நடத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பை விடுக்காமல், தமது முழுப் பதவிக்காலமும் பதவியில் இருக்க முடிவு செய்தால், ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதிக்கும் இடையில் நடத்தப்பட வேண்டும். 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை ஒக்டோபர் 22ஆம் திகதி இறுதி செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது, இந்தநிலையில் அன்றைய தினம் தேர்தலுக்காக அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டால், குற…

  20. வட மாகாண சபையில் 34 இலட்சத்து 898 ரூபா சம்பள கொடுப்பனவுகளாக மாதமொன்றுக்கு செலவு January 30, 2019 வடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சிக் காலத்தில் அவைத் தலைவர், பிரதி அவைத் தலைவர், எதிர்கட்சி தலைவர் ஆகியோருக்காக மாதமொன்றிற்கு சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் அடங்கலாக சுமார் 34 இலட்சத்து 898 ரூபா மாதமொன்றுக்கு செலவிடப்பட்டுள்ளது. தகவலறியும் உரிமைச் சட்டத்தினூடாக வடக்கு மாகாண பேரவை செயலகத்திடமிருந்து இந்தத் தகவல் பெறப்பட்டது. எனினும் முதலமைச்சர் உள்ளடங்களாக அமைச்சர் வாரியத்தில் அங்கம் வகித்த 5 உறுப்பினர்களின் சம்பள விவரங்களை வெளியிட மாகாண பேரவைச் செயலகம் மறுத்துவிட்டது. அவர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகள் அமைச்சுக்கள் ஊடாகவே வழங்கப்பட்டன என்று அது ச…

  21. போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு வெகுவிரைவில் மரணதண்டனை: ஜனாதிபதி உறுதி! போதைப்பொருள் வியாபாரிகளுக்கு வெகுவிரைவில் மரணதண்டனை விதிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தறையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதை போன்று, போதைப்பொருள் வியாபாரமும் விரைவில் ஒழிக்கப்படும். அதற்கான பொறுப்பு முப்படையினருக்கும் வழங்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வியாபாரிகள் உலக அரசியலை வீணடிக்கின்றனர். ஆகவே இந்த போதைப்பொருள் வர்த்தகம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். பிலிபைன்ஸ் ஒரு …

  22. நாளைய வவுனியா போராட்டம் முக்கியமானது – மக்களை பெருமளவில் கலந்துகொள்ள விக்னேஸ்வரன் வேண்டுகோள் January 29, 2019 வவுனியாவில் காணாமல் போன மக்களின் உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் செய்தி ஒன்றை வெளிப்படுத்த வேண்டும் என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற இருக்கும் நீதிமன்ற வழக்கு விசாரணையில் கலந்துகொள்ள வேண்டி இருப்பதால் இந்த போராட்டத்தில் தன்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் தனது கட்சியின் முக்கியஸ்தர்களும் உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் என்றும் விக்னேஸ…

  23. January 30, 2019 Add Comment சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடினார் என்ற குற்றம்சாட்டி குடும்பத்தலைவர் ஒருவரை நாவாந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அந்த நபர் கடந்த வாரம் நாவாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமியை கடத்திச் செல்ல முற்பட்டார் என்றும், இன்றும் அதே நோக்கோடு அந்தப் பகுதியில் காணப்பட்டார் என்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நாவாந்துறை சந்தைப் பகுதியில் இன்று முற்பகல் ஒருவர் சந்த…

  24. பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பெப்ரவரி மாதம் யாழ்பாணத்துக்கு வருகை தரவுள்ளார். இந்தப் பயணத்தின் போது வடமாகாணத்தின் அபிவிருத்தி பணிகள் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள், காங்கேசன்துறையில் இடம்பெரும் அபிவிருத்தி பணிகள் குறித்து ஆராயவுள்ளனர். கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் வடமாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக கிளிநொச்சிக்கு வருகை தந்து, பிரதேச மக்களின் பிரச்சினைகள் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டார். https://newuthayan.…

  25. வவுனியா மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளில் படைப்புழுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளதால், அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த விழிபுணர்வு ஊர்வலம் வவுனியா விவசாய கல்லூரி மாணவர்களால் அதிபர் திருமதி கே.சந்திரகாசன் தலைமையில்முன்னெடுக்கப்பட்டது. வவுனியா, தாண்டிகுக்குளம் பகுதியில் உள்ள விவசாய கல்லூரியில் இருந்து ஊர்வலமாக வந்த விவசாய கல்லூரி மாணவர்கள், வவுனியா நகரம், திருநாவற்குளம், மடுகந்தை, கோவில்குளம் ஆகிய பகுதிகளுக்கு ஊர்வலமாகச் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்ததுடன், படைப்புழுக்களின் தாக்கம் தொடர்பிலும், அதனைக் கட்டுப்படுத்தும் வழிமுறை தொடர்பிலும் மக்களுக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.