Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. January 28, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn ஈழத் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத படுகொலை நிகழ்வுகளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒன்று. கிழக்கு ஈழத்தை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் உலுக்கிய அப் படுகொலை குறித்து உலகமே அதிர்ந்தது. ஈழத் தமிழ் இனத்தை இன அழி…

  2. மேலும் ஒரு தொகுதி காணி இம்மாத இறுதியில் விடுவிக்கப்படவுள்ளது January 28, 2019 பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவில், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள 225.31 ஏக்கர் காணி, இம்மாத இறுதியில் விடுவிக்கப்படுமென பிரதேச செயலாளர் ப.ஜெயராணி தெரிவித்துள்ளார். மேலும் அக்காணிகளுக்கு தற்போது பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வேம்பொடுகேணியில் ஏ9 வீதியிலிருந்து தெற்கு நோக்கி வரையுள்ள 200 மீற்றர் காணி ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் மேலும் 300 மீற்றர் வரையான காணியினை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2019/111415/

  3. ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் – அமைச்சரவைக் குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் : January 28, 2019 ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்; விமான நிறுவனம் தொடர்பில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு சமர்ப்பிக்கப்படவுள்ள பரிந்துரைகளில் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் எதிர்காலம் தொடர்பான பல கொள்கை ரீதியான பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்; விமான நிறுவனம் தற்போது ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளது என்பது குறிப்பி…

  4. காங்கேசன்துறை துறைமுகத்தில் விரைவு அபிவிருத்தி திட்டம் January 28, 2019 காங்கேசன்துறை துறைமுகப் பணிகள் 2021ஆம் ஆண்டு நிறைவடையும் போது, அங்கு சரக்குப் போக்குவரத்து கப்பல்கள் வந்து செல்லுமளவுக்கு விரைவு அபிவிருத்தி திட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். குறித்த துறைமுகத்துக்கு சரக்குக் கப்பல்கள் வந்துச் செல்வதால் நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிப்பதற்கான சந்தாப்பம் கிடைப்பதுடன், வடபகுதி மக்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளும் கிடைக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கடனுதவியின் 45.27 மில்லியன் டொலர்கள் நிதியுதவியின் கீழ் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இத்திட்டத்தை விரைவுப்படுத்துவதற்காக,ப…

  5. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பிளவு – முரண்பட்டவர்கள் சந்திரிகாவுடன் இணைய திட்டம் January 28, 2019 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதென, தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தக் கட்சியால் எடுக்கப்படும் தீர்மானங்களில் கடும் அதிருப்தி கொண்டுள்ளவர்கள், அதிலிருந்து வெளியேறுவதற்குத் தீர்மானித்துள்ளதமாகவும் தெரிவிக்கப்படுகின்றது இவ்வாறு அதிருப்தியடைந்துள்ளவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://globaltamilnews.net/2019/111401/

  6. தமிழ் பிரதேசங்களில் விகாரைகள் அமைக்கப்பட்டமையே கூட்டமைப்பினருக்கு கிடைத்த பரிசு – சிவசக்தி ஆனந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசுக்கு வழங்கி வரும் நிபந்தனையற்ற ஆதரவுக்குக் கிடைத்த பரிசே, தமிழ் பிரதேசங்களில் பௌத்த ஆலயங்கள் நிறுவப்பட்டமை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். தொடர் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்புலவு மக்களை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கடந்த நான்கு வருடங்களாக அரசுக்கு வழங்கி வரும் நிபந்தனையற்ற ஆதரவுக்குக் கிடைத்த பரிசே நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையும், செ…

  7. January 27, 2019 அடுத்து இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தன்னை போட்டியிடுமாறும் அதற்கான தயார்படுத்தல்களை செய்யுமாறும் தனது சகோதரரான மகிந்த ராஜபக்ஸ தன்னிடம் கூறியிருப்பதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். லங்கா தீப பத்திரிகையின் ஞாயிறு சிறப்பு பதிப்பிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அமெரிக்க குடியுரிமை பிரச்சினை பெரும்பாலும் தீர்க்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அடுத்த தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் போ…

  8. மத்தல விமான நிலையத்தின் ஒரு பகுதியை இந்தியாவிற்கு வழங்க நடவடிக்கை மத்தல விமான நிலையத்தின் 70 வீதமான பங்குகளை இந்தியாவுக்கு வழங்க, இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி வழங்கும் அமைச்சரவைப் பத்திரமும் தற்போது தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தல விமான நிலையத்தை கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்யும் உடன்பாட்டில் இலங்கை – இந்திய விமான நிலைய அதிகார சபைகள் கைச்சாத்திடவுள்ளன. இதுதொடர்பில், இரண்டு தரப்புக்களும் கலந்துரையாடியதன் பின்னர் அமைச்சரவைப் பத்திரங்களும் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தல விமான நிலையம் ஆதாயத்தைத்தரும் திட்டமாக இல்லாத காரணத்தினால் அதன் 70 வீதத்துக்…

  9. கொள்ளையடித்த பின்னர்- சிறுமியை வன்கொடுமைப்படுத்திய- இருவர் கைது!! பதிவேற்றிய காலம்: Jan 27, 2019 வீடு புகுந்து பணம் மற்­றும் நகை க­ளைக் கொள்­ளை­ய­டித்து பதின்ம வய­துச் சிறு­மியை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­திய சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்­களை 6 நாள்­க­ளின் பின்­னர் காங்­கே­சன்­துறை குற்­றத்­த­டுப்­புப் பிரிவு பொலி­ஸார் கைதுசெய்­துள்­ள­னர். தெல்­லிப்­ப­ழை­யைச் சேர்ந்த மகா­தே­வன் ரூபன் (வயது-28), ஏழா­லை­யைச் சேர்ந்த இரா­ஐ­கோ­பால் கிருஷ்ணகு­மார் (வயது-30) ஆகி­யோர் உள்­ளிட்ட 4 பேர் சந்­தே­கத்­தில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். மகா­தே­வன் ரூபன் மற்­றும் இரா­ஜ­கோ­பால் கிருஷ்ணகு­மார் இரு­வ­ரும் சிறு­மியை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உ…

  10. தமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் முதலாவது மத்திய குழுக் கூட்டம் யாழில் இன்று நடைபெற்றது. யாழ். கோவில் வீதியிலுள்ள விக்கினேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை காலையில் இக் கூட்டம் நடைபெற்றது. இதன் போது தமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு மற்றும் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுமென பலரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். http://globaltamilnews.net/2019/110563/

  11. அவுஸ்த்ரேலியாவினால் இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு மூன்று மூன்று துறைமுகு படகுகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வு கொழுப்பு துறைமுகத்தில் உள்ள இலங்கை கடற்படை தளத்தில் நேற்று முன்தினம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தலைமையில் இடம்பெற்றது. இத் துறைமுக படகுகள் 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய பிரதமர் மால்கம் ட்ருன்பலினால் இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக, குறித்த படகுகளை இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரையஸ் ஹட்ஷ்சன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் உத்தியோகப…

  12. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி அறிவியல் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட உப புகையிரத நிலையம் இன்று (27.01.2019) மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது. கொழும்பில் இருந்து புறப்பட்ட இந்தியா அரசினால் வழங்கப்பட்ட உத்திரதேவி புகையிரத்தில் வருகை தந்த அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அறிவியல் நகர் உப புகையிரத நிலையத்தை திறந்து வைத்தார். அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவை வட.மாகாண ஆளுநர் மற்றும் இந்திய துணைத் தூதுவர் ஆகியோர் வரவேற்றனர்.தொடர்ந்து தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நினைவுக் கல்லினை திறந்து வைத்தார். தொடர்ந்து கட்டடத்தை திறந்து…

  13. கிளிநொச்சிக்கு இன்று (27) நண்பகல் சென்ற ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இரணைமடுக்குள விவசாய சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றது. கடந்த வாரம் கலந்துரையாடிய விடயங்களின் முன்னேற்றம் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன் வடக்கு மாகாணங்களின் ஐந்து மாவட்டங்களினதும் விவசாயிகள் பொறியியலாளர்கள் அரச அதிகாரிகள் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தி அமையப்போகும் குழு தொடர்பிலும் விவசாயிகளுடன் இதன்போது ஆராயப்பட்டது. கிளிநொச்சி, இரணைமடு மற்றும் இரணைமடு குளத்திற்கு நீர் வரும் பகுதிகள் போன்றவற்றில் கடந்த ஐம்பது வருடங்களில் இடம்பெற்ற மழைவீழ்ச்சி மற்றும் குளத்தின் நீர் சேமிப்பு தொடர்பா…

  14. January 27, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்திற்கு வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவுக்கான பரிசே, முல்லைத்தீவு செம்மலை நீராவியடி புத்தர்சிலையும் விகாரையும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். …

  15. January 27, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn பிரிக்க முடியாத நாட்டிற்குள் தமிழ் மக்கள் அனைத்து உரிமைகளும் கிடைக்கப்பெற்றவர்களாய் வாழ வேண்டும் என்று வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சியின் அறிவியல் நகர் பகுதியில் புதிய பேருந்து நிலைய திறப்பு…

  16. January 26, 2019 முல்லைத்தீவு நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்துக்கு விசேட காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த கோவில் வளாகத்தில், புத்தர்சிலை அமைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் கடந்த வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கு விசாரணை, பெப்ரவரி 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதோடு, அபிவிருத்தி வேலைகளுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. அத்துடன், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை மன்றில் முன்னிஜலையாகுமாறு பணிப்புரையும் விடப்பட்டிருந்தநிலையிலேயே, இவ்வாறு விசேட காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட…

    • 6 replies
    • 709 views
  17. தமிழர்கள் தனித்துவத்தை பேண எத்தனிப்பது பிழை என்று சொன்ன பிரித்தானிய ராஜதந்திரிகளுக்கு பாடம் புகட்டி அனுப்பிய விக்னேஸ்வரன் பிரித்தானியாவின் தென்னாசிய திணைக்களத் தலைவரும் மேலும் இந்திய ஒருங்கமைப்பாளரும் ஆகிய ஃபேர்கஸ் ஒளல்ட், இலங்கையின் உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் முதல்செயலாளர் போல் ஃகிறீன், அலுவலர் ஜோவிடா அருளாநந்தம் ஆகியோர் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை இன்று (24.01.2019) காலை 11.45 மணியளவில் நீதியரசரின் வாசஸ்தலத்தில் சந்தித்தனர் . இந்த சந்திப்பின்போது பிரித்தானிய ராஜதந்திரிகள் தமிழ் மக்களின் அரசியல் தொடர்பில் தெரிவித்த சில கருத்துக்களுடன் உடன்பட மறுத்த விக்னேஸ்வரன் அவர்களுடன் தர்க்கம் செய்தார். பிரித்தானியாவில் பல நாடுகளில் இ…

    • 25 replies
    • 2.1k views
  18. வல்­வெட்­டித்­து­றைப் பொலி­ஸார் அதி­ரடி!! - 110 கிலோ கஞ்சா மீட்­பு பதிவேற்றிய காலம்: Jan 27, 2019 வல்­வெட்­டித்­துறை குச்­சம் ஒழுங்­கை­யில் வீடொன்­றி­ லி­ருந்து 110 கிலோ கஞ்சா மீட்­கப்­பட்­டுள்­ளது. கஞ்­சாவை வீட்­டில் பதுக்கி வைத்­தி­ருந்­தார் என்ற சந்­தே­கத்­தில் 45 வய­து­டைய ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். அவ­ரி­டம் கஞ்­சா­வைக்கொள்­வ­னவு செய்த வந்­த­வர்­கள் என்று கூறப்­ப­டும் இரு­வ­ரை­யும், அவர்­கள் பய­ணித்த வாக­னத்­தை­யும் பொலி­ஸார் வல்­வெட்­டித்­து­றைச் சந்­தி­யில் மடக்­கிப் பிடித்­த­னர். இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸார் தெரி­வித்­த­தா­வது: பரு­தித்­தித்­துறை கடற் பகுதி ஊடாக கஞ்சா கடத்­தப்­பட்­டுள்­ள­தாகப் பருத்­தித்­து­றைக் கடற்­ப­டை­யி­ன…

    • 1 reply
    • 523 views
  19. தமிழகத்தில் தஞ்சமடைந்த 83 இலங்கை அகதிகள் நாடுதிரும்பவுள்ளனர் இந்தியாவின் தமிழகத்திலிருந்து 83 இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர். இம்மாதம் 31 ஆம் திகதி 39 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து இரு விமானங்களில் இவர்கள் நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். இவ்வாறு நாடு திரும்பவுள்ளவர்களில் 34 ஆண்களும் 49 பெண்களும் உள்ளடங்குகின்றனர். யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இம்மாதம் 31 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர். இவர்களுக்கான இலவச விமான பயணச்சீட்டு வழங்கப்ப…

  20. தேசிய அரசாங்கத்தை அமைக்க முயற்சி (இராஜதுரை ஹஷான்) ஐக்கிய தேசிய முன்னணியுடன் கூட்டணி அரசாங்கத்தின் கொள்கையினை ஏற்றுக் கொண்ட அனைத்து தரப்பினரையும் ஒன்றினைத்து தேசிய அரசாங்கத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மீள் செலுத்த வேண்டிய அரசமுறை கடன்களை மீள்செலுத்துவதுடன், மக்களுக்கான அபிவிருத்தியினையும் முன்னெடுக்க ஐக்கிய தேசிய முன்னணியுடன் கூட்டணியமைத்துக் கொள்வதுடன் அனைத்து பங்காளி கட்சிகளையும் தேசிய அரசாங்கத்தின் ஊடாக ஒன்றிணைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் சகோதர கட்சிகளுக்கிடையி…

  21. மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைப்பு தெல்லிப்ழை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட இருபது மீனவக் குடும்பங்களுக்கு கடந்த வாரம் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டதாகப் பிரதேச செயலாளர் சி.சிவசிறி தெரிவித்தார். குறித்த உபகரணங்கள் யு.என்.டி.பியின் அனுசரணையுடன் வழங்கப்பட்டன. 3 இலட்சத்து 5 ஆயிரம் ரூபா பெறுமதியான படகுகளும் ஒரு இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பெறுமதியான படகுகளுக்கான இயந்திரங்களும் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/48816

  22. 700 ரூபாய் சம்பள உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து பொகவந்தலாவையில் போராட்டம் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் அதிகரிப்பு கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வந்த போதும் தற்போது 700 ரூபாயாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் பொகவந்தலாவை நகரில் சத்தியாகிரக போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக பொகவந்தலாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரின் கோரிக்கை என்னவெனில் ,1000 ரூபாய் அடிப்படை சம்பளம் வேண்டும்.தோட்ட தொழிலாளர்களை 700 ரூபாய்க்கு அடகு வைக்க வேண்டாம் என கோஷங்கள் எழுப்பியும் பதாகைகள் ஏந்தியும் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறுகையில், நாம் 1000 ரூபாய் எனக…

  23. 31 ஆம் திகதிக்கு முன், மீள் குடியேற்றப் பதிவுகளை, மேற்கொள்ள வேண்டும்.… January 27, 2019 பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலகப் பிரிவில், 225.31 ஏக்கர் நிலப்பரப்பில், ஹலோரஸ்ட் நிறுவனம் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளது. இந்தப் பகுதியில் தற்போது பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு வருவதனால் அவ்விடங்களின் காணிகளை கையளிக்கும் நிகழ்வு ஜனவரி மாதத்தின் இறுதியில் நடைபெறவுள்ளதாகப் பிரதேச செயலாளர் ப.ஜெயராணி அறிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், வேம்பொடுகேணியில் ஏ- 9 வீதியிலிருந்து தெற்கு நோக்கி ஏற்கனவே விடுவிக்கப்பட்ட 200 மீற்றர் பகுதியை அடுத்துள்ள மேலும் 300 மீற்றர் வரையான பகுதி விடுவிக்கப்படவுள்ளது. முகமாலையில் ஏ- 9 வீதிக்குச் சமனான வடக்கு நோக்கி ஏற்கன…

  24. மன்னார் மனித புதைகுழி எச்சங்கள் கையளிக்கப்பட்டன.. January 27, 2019 மன்னார் மனித புதை குழி அகழ்வு பணிகளின் போது அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களில் தெரிவு செய்யப்பட்ட சில மனித எச்சங்களில் காபன் பரிசோதனை செய்வதற்கு அடையாளப்படுத்தப்பட்ட 6 மனித எச்சங்கள் அடங்கிய பொதிகள் மன்னார் நீதவான் நீதி மன்ற நீதிபதியின் கட்டளைக்கு அமைவாக கடந்த புதன் கிழமை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் இருந்து விமான நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த நிலையில் ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தும் நேற்று காபன் பரிசோதனைக்காக தெரிவு செய்யப்பட்ட ஆய்வு கூடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த மனித எச்சங்கள் B/295 எனும் இ…

  25. தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகம் மீது தாக்குதல் கிளிநொச்சியில் தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. இனந்தெரியாதோரால் அலுவலகம் உடைக்கப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/தமிழர்-விடுதலை-கூட்டணி-அ/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.