ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு புலி நீக்க அரசியலையும் தமிழ் தேசிய நீக்க அரசியலையும் செய்துவருகிறது: த.ம. கூ பேச்சாளர் அருந்தவபாலன் முன்னாள் முதலைமைசர் விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று தலைமை ஏன் அவசியம், தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு புலி நீக்க அரசியல் மற்றும் தமிழ் தேசிய நீக்க அரசியலை செய்துவருகிறது, கொள்கை அடிப்படையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட பலர் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய அவசியம் போன்ற பல முக்கிய விடயங்கள் குறித்து தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கைபரப்பு செயலாளரும் பேச்சாளருமான அருந்தவபாலன் கனடாவின் CTR வானொலிக்கு அளித்த செவ்வியில் கலந்துரையாடுகிறார். http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்-தேசிய-கூட்டமைப்பு-13/
-
- 1 reply
- 301 views
-
-
நிறைவேற்று அதிகாரமுறையை ஒழிப்பதாக சந்திரிக்கா முதல் மைத்திரிவரை கூறினார்கள் : January 25, 2019 நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்கப் போவதாக சந்திரிக்கா, மகிந்த, மைத்திரி ஆகிய மூவரும் கூறியதாகவும், அதற்கான மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்டபோதும் அதனை அவர்கள், நிறைவேற்றவில்லை என்று எதிர்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தற்போது, மகாகாண சபைத் தேர்தலை நடத்துவதிலும், மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதிலும் ஓர் உறுதியான நிலைப்பாடு எட்டப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடாத்தக் கோரி டலஸ் அழகப் பெரும, பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை கொண்டுவந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மாகாண சபை அவசியம் எ…
-
- 1 reply
- 246 views
-
-
(நா.தனுஜா) ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்திற்கு முன்பதாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இலங்கை இந்து சம்மேளனம், இந்து இளைஞர் அமைப்பு மற்றும் இலங்கை குருக்கள் பேரவை என்பன இணைந்து இன்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் டி.அருண்காந்த் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்வதனால் நாட்டில் குறித்ததொரு மக்கள் தொகையினரின் வாக்குகள் இல்லாது போகும் என ஜனாதிபதி அஞ்சினால், அந்த…
-
- 2 replies
- 895 views
-
-
January 25, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn மதிய உணவுக்காக யாழில் உள்ள உணவகத்தில் வாங்கிய பார்சலில் மட்டத்தேள் காணப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையின் அருகில் உள்ள உணவகத்தில் வழமை போன்று வாடிக்கையாளர் ஒருவர் இன்று(2…
-
- 3 replies
- 816 views
-
-
இடமாற்றம் செய்யப்பட்ட அதிபர், ஆசிரியர்கள் அந்தந்த இடங்களுக்கு உடன் செல்ல கிழக்கு ஆளுநர் பணிப்பு கிழக்கு மாகாணத்தில் கல்வித் திணைக்களத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிபர்கள் ஆசிரியர்கள் குறிப்பிட்ட திகதியில் இடமாற்றப்பட்ட பாடசாலைகளுக்கு சென்று கடமையை பொறுப்பெடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் கட்டளை பிறப்பித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் முதலமைச்சின் செயலகத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட அதிபர்கள் ஆசிரியர்கள் ஏறாளமானோர் பங்குபற்றியிருந்தனர். இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மாகாண கல்விப் பணியகத்தின் செயல…
-
- 0 replies
- 252 views
-
-
அநீதிகளை வெளிக்கொண்டுவந்ததாலேயே ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தமையினாலேயே ஊடவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் படுகொலைக்கு நீதிகோரி யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிலையில், படுகொலைசெய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கொலை செய்யப்பட்ட அல்லது காணா…
-
- 0 replies
- 200 views
-
-
ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினை அண்டியப்பகுதியில் இரு குடிசைகள் இன்று(26) அதிகாலை வேளையில் இனந்தெரியாதோரால் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன. காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்குச் சொந்தமான காணியில் கடந்த எட்டு வருடங்களாக வசித்து வரும் குடியிருப்பாளர்களின் குடிசைகளே இவ்வாறு தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன. காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அங்கீகாரத்தினைப் பெற்று மேட்டு நிலப் பயிர்ச் செய்கையினை மேற்கொண்டு தமது ஜீவனோபாயத்தினை கடத்தி வரும் வருமானம் குறைந்த குடும்பங்களின் குடிசைகள் இன்று அதிகாலைவேளையில் தீயிடப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்க…
-
- 0 replies
- 203 views
-
-
700 ரூபாவை தான் வாங்கிக் கொடுக்க முடிந்தது : தொண்டமான் கைவிரிப்பு – VIDEO 700 ரூபா தான் என்னால் வாங்கிக்கொடுக்க முடியும் இதற்கும் மேல் யாருக்காவது வாங்கிக் கொடுக்க முடியுமென்றால் அவர்களுக்கு உதவ தயார் என இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களாக சம்பள பேச்சுவார்த்தை இழுபரியில் போனது. ஆனால் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. 1000 ரூபா சம்பளத்தை கேட்ட போதும் 855 ரூபாவை பெற்றுள்ளோம். அடிப்படை சம்பளம் 200 ரூபால் அதிகரித்துள்ளது. அத்துடன் மற்றைய கொடுப்பனவுகள் அடங்களாக 855 ரூபா கொடுக்கப்படவுள்ளது. நாங்கள் முடிந்தளவுக்கு சம்பளத்தை பெற்றுக்கொடுத்துள்ளோம். இதனை விடவும் கூட வாங்கிக்கொடுக்க எவருக்கேனும் முடியுமென்றால் அவர்களுக்கு தான் பூரண ஒத்துழைப…
-
- 0 replies
- 376 views
-
-
கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி இராணுவ முகாமிற்கு முன்னால் போராட்டம் January 26, 2019 முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் இன்றைய தினம் தமது காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த காணியில் அமைந்து இராணுவ முகாமிற்கு முன்னால் மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இம் மாதத்தின் ஆரம்பத்தில் இம்மக்களால் போராட்டம் மேற்கொள்ளப்பட்ட போது இம் மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த காணிகளை விடுவிப்பதுதொடர்பில் உரிய பதிலைத் தருவதாக அரச அதிகாரிகள் தெரிவித்திருந்த போதும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில் மக்கள் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் போராட்டம் இடம்…
-
- 0 replies
- 187 views
-
-
பிரிகேடியரிற்கு எதிரான பிடியாணை- மறுபரிசீலனை செய்யுமாறு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான பிடியாணையை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு பிரிட்டனை கேட்டுக்கொண்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை நோக்கி மரணஅச்சுறுத்தல் விடுத்த இலங்கையின் இராணுவ அதிகாரி பிரியங்க பெர்ணான்டோவிற்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மறுபரிசீலனை செய்யுமாறே வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிசை சந்தித்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் இந்த சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவு உட்ப…
-
- 4 replies
- 624 views
-
-
January 25, 2019 கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவை அப்பதவியல் இருந்து அகற்றுமாறு ஜனாதிபதியை வலியுறுத்தி, மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (25.01.19) காலை முதல் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு விடுத்த அழைப்பினை ஏற்று இந்த ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாடசாலைகள் இயங்கிய போதிலும் மாணவர…
-
- 2 replies
- 710 views
-
-
சிங்கப்பூரில் இருந்து திரும்பியதும் தாய்லாந்து கிளம்புகிறார் சிறிசேன சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்து தாய்லாந்துக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று அதிபர் செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்சுக்கு ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதையடுத்து, தற்போது சிங்கப்பூருக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பிய பின்னர், அவர் தாய்லாந்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா அதிபர் இந்த மாதத்தில் மேற்கொள்ளவிருக்கும் மூன்றாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். அதேவேளை, சிங்கப்பூர் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர்…
-
- 1 reply
- 372 views
-
-
சிறிலங்கா படையினர் மீதான தாக்குதல் போர்குற்றம் – என்கிறார் ஐ.நா பொதுச்செயலர் மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த இரண்டு சிறிலங்கா படையினர், கொல்லப்பட்டு. ஆறு பேர் காயமடைந்த தாக்குதலை, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் கண்டித்துள்ளார். உள்ளூர் நேரப்படி நேற்றுக்காலை 6.30 மணியளவில் சிறிலங்கா இராணுவ வாகனத் தொடரணி ஒன்றின் மீது கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. மாலியின் மத்திய பகுதியில் உள்ள டோன்ட்சா என்ற இடத்தில் நடந்த இந்த தாக்குதலில் கப்டன் உள்ளிட்ட இரண்டு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். மேலும் ஆறு சிறிலங்கா படையினர் காயமடைந்தனர் என்று ஐ.நா அறிவித்துள்ளது. இந்த தாக்குதல் கு…
-
- 0 replies
- 289 views
-
-
நாடாளுமன்றக் குழப்பம் – 59 எம்.பிக்கள் மீது குற்றச்சாட்டு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த நொவம்பர் மாதம் நடந்த குழப்பங்களில் தொடர்புடைய 59 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நாடாளுமன்றக் குழு பரித்துரைத்துள்ளது. கடந்த நொவம்பர் 14, 15, 16ஆம் நாள்களில் சிறிலங்கா நாடாளுமன்றத்தை நடத்த விடாமல், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் ஏற்படுத்திய குழப்பம், அதையடுத்து இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக விசாரிக்க பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான விசாரணைக் குழுவொன்றை சபாநாயகர் கரு ஜெயசூரிய நியமித்திருந்தார். இந்தக் குழு கடந்த செவ்வாய்க்கிழமை தமது அறிக்கையை சபா…
-
- 0 replies
- 203 views
-
-
‘ஆட்சியைத் தக்க வைப்பதில் வன்னி மக்கள் தாக்கம்’ Editorial / 2019 ஜனவரி 25 வெள்ளிக்கிழமை, மு.ப. 11:59 Comments - 0 அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைப்பதிலும், தொடரச் செய்வதிலும் வன்னி மாவட்ட மக்கள் பெற்றுத்தந்த அரசியல் அதிகாரம் பாரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னாரில் அல் பத்தாஹ் விளையாட்டரங்கில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு நேற்று (24) வழங்கப்பட்ட வரவேற்பு விழாவின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் அரசியல் வரலாற்றில் 52 நாள்கள் என்பது ஒரு கறைபடிந்த காலமாகவும் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கான போராட்ட நாள்களாகவுமே இருந்…
-
- 0 replies
- 311 views
-
-
January 24, 2019 முல்லைத்தீவு நாயாறு நீராவியடிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த புத்தர்சிலை, விவகாரம் தொடர்பில் இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்றுள்ள நிலையில் குறித்த பகுதியில் எவரும் நிர்மாணப் பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், நேற்றைய தினம், காவல்துறை மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு பிரதேச மக்களை மாத்திரமின்றி ஒட்டமொத்த தமிழ் …
-
- 1 reply
- 646 views
-
-
இலவன்குளம் - மறிச்சிக்கட்டி வீதியை திறந்து விட இணக்கம் Editorial / 2019 ஜனவரி 25 வெள்ளிக்கிழமை, பி.ப. 03:39 வில்பத்து சரணாலயத்துக்கு அணித்தாகச் செல்லும் B37 இலவன்குளம் - மறிச்சிக்கட்டி வீதியை, மீண்டும் பொதுமக்களின் பாவனைக்குத் திறந்து விடுவதற்கு, உயர் நீதிமன்றத்தில் இன்று (25) இணக்கம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான இறுதித் தீர்மானம், மார்ச் மாதம் 25ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதாக, சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தெரிவித்தார். இந்த வீதியை பொதுமக்கள் பாவனைக்குப் பயன்படுத்துவதை எதிர்த்து, 2010ஆம் ஆண்டு, சூழலியல் வனவளப் பாதுகாப்பு லிமிட்டட் என்ற அமைப்பால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணை, இன்று இடம்பெற்ற…
-
- 0 replies
- 286 views
-
-
கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்ன?அவ்வாறு அமையப்பெறுமாயின் அது நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலாகாதா என பிரதமரிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போதே அவர் இவ்வாறு கேழுப்பியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் - கடந்த சில தினங்களில் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த விடயங்கள் மற்றும் தகவல்கள் என்பவற்றின் பிரகாரம் அமெரிக்க தூதரகத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ள அமெரிக்க இராணுவ முகாம் ஒன்றினை இலங…
-
- 1 reply
- 480 views
-
-
January 25, 2019 மாலியில் ஐக்கிய நாடுகள் அமைதிப் படையினர் மீது இடம்பெற்ற குண்டுவெடிப்பு ஒன்றில் இலங்கை இராணுவத்தினர் இருவர் பலியாகியுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர் எனவும் கொல்லப்பட்டவர்களின் ஒருவர் இராணுவ கப்டன் தரத்தை சேர்ந்தவர்; எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலியின், டௌன்ட்ஜா என்ற பகுதியில் ஐ.நா படையில் இடம்பெற்றுள்ள இலங்கை இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில், அவர்களது வாகனத்தை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் கப்டன்…
-
- 1 reply
- 505 views
-
-
யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் 300 பரப்புக் காணியை அரசு சுவீரிப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் இன்று கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, நிலம் அளக்கும் நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. இந்தப் பகுதியில் காணியை சுவீகரிக்கப்படுவதாக யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தினால் அறிவித்தல் ஒட்டப்பட்டது. உரிமை கோரப்படாத காணிகள் சுவீரிக்கப்படுவதால், காணி உரிமையாளர்கள் இருந்தால், உடனடியாக பிரதேச செயலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் காணி உரிமையாளர்கள், காணி உரிமத்திற்குரிய ஆவணங்களைப் பிரதேச செயலகத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். …
-
- 0 replies
- 281 views
-
-
புதிய அரபு கல்லூரிகளை நிறுவத் தடை, சகல அரபுக் கல்லூரிகளும் வக்பு சபையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை நாட்டில் புதிதாக அரபுக்கல்லூரிகள் நிறுவப்படுவதைத் தடைசெய்வதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் அரபுக்கல்லூரிகள் அனைத்தையும் வக்பு சபையின் கீழ்ப் பதிவு செய்து அவற்றைக் கண்காணிப்பதற்கும் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் தீர்மானித்துள்ளார். அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் இது தொடர்பான அறிவுறுத்தல்களை வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.யாசீன் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் …
-
- 0 replies
- 378 views
-
-
January 25, 2019 Add Comment இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்தத்திற்கு இணங்க பொறுப்புக் கூறலுக்கான காலம் கடந்து வருகின்றமை பெரும் கவலையை ஏற்படுத்தியிருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை கவலை வெளியிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கமானது, சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதி அளித்திருந்தமையை சர்வதேச மன்னிப்புச் சபை நினைவுபடுத்தியுள்ளது. அதன்படி, உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டினை ஈடுசெய்தல் உள்ளிட்ட பொறுப்புக்கூறல்களை முன்னெடுப்பதற்கான காலம் கடந்து வருவதாகவும் அவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. …
-
- 0 replies
- 190 views
-
-
January 25, 2019 இலங்கை அரச படைகள், இறுதிப் போரின்போது போர்க்குற்றங்கள் எவற்றிலும் ஈடுபடவில்லை என்பதை தகுந்த சான்றுகள் மூலம் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என உலக தேசப்பற்றாளர் இலங்கையர் மன்றம் அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. அத்துடன், திடமான சான்றுகளை முன்வைத்து, சர்வதேச ரீதியில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்தியை நீக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறுக…
-
- 0 replies
- 153 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜனாதிபதியின் பணிப்புக்கமைய தேசிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் இடம்பெற்று வருகின்ற போதைபொருள் ஒழிப்பு வாரத்தில் கஞ்சா விற்பனை செய்பவரின் தகவலை காவல்துறையினருக்கு வழங்கிய மாணவன் பாடசாலைக்கு செல்ல முடியாத அளவுக்கு அச்சுறுத்தலுக்குள்ளாகி பாடசாலையை விட்டு விலகும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட கோணாவில் மகா வித்தியாலயத்தில் கடந்த 21 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை இடம்பெற்ற போதை பொருள் ஒழிப்பு வாரத்தில் ஒர் நாள் மாணவர்களுக்கு வழிப்புணர்வு கருத்துக்க…
-
- 0 replies
- 158 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,மடு சந்தியில் அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவகம் இன்று வெள்ளிக்கிழமை காலை வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் மடுச் சந்தியில் வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவகம் இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த பாரம்பரிய உணவகத்தினை கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அழைப்பின் பெயரில் வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் திறந்து வைக்கப்பட்டது. இதன் போது நானாட்டான் பிரதேச சபைத்தலைவர், மடு பிரதேச செயலாளர் , கிராம அபிவிருத்தி , மாவட்ட…
-
- 0 replies
- 317 views
-