Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விக்கினேஸ்வரன் அவர்களின் தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது கூட்டம் தொடர்பில் ஊடக சந்திப்பு

    • 0 replies
    • 228 views
  2. நாவன்மையால் தமிழரை நடுத்தெருவுக்கு கொண்டுவரும் சுமந்திரன். இந்த நாடு(ஶ்ரீலங்கா) , ஒரேயொரு பிரச்சினையை, பல வருடங்களாகச் சந்தித்து வருகிறது. அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்ற ஒரேயோர் எண்ணத்தில் தான், தான் இந்த அரசியலுக்குள் பிரவேசித்ததாகவும் அது வெற்றியளித்தாலோ அல்லது தோல்வி கண்டாலோ, தன்னுடைய அரசியல் பயணம் தொடர்பான தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்காக, புதிய சமூக ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்படல் வேண்டுமென்றும் அதற்கான சகல முயற்சியையும் தான் எடுப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், அந்த முயற்சி வெற்றியளித்தால், வந்த காரியம…

    • 7 replies
    • 1.3k views
  3. ஜெனிவாவுக்கு தயாராகும் பிரித்தானியா – தமிழர் தரப்பின் கருத்தறியும் முயற்சியில் இறங்கியது Jஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழ்மக்களினதும், தமிழ் அரசியல் தலைவர்களினதும் கருத்துக்களை அறிந்து கொள்ளும் முயற்சிகளில் பிரித்தானியா இறங்கியுள்ளது. ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ள நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் அதற்குப் பதிலளிக்க வேண்டிய நிலையில் உள்ளது. 2017ஆம் ஆண்டு சிறிலங்கா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில், மீண்டும், ஒரு தீர்மானத்தை ஜெனிவாவில் கொண்டு வரும் முனைப்புகள் தீவிரமடைந்திருக்கின்ற…

    • 0 replies
    • 432 views
  4. சம்பந்தனை சந்தித்த ஜப்பான், அவுஸ்திரேலிய தூதுவர்கள் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மற்றும் தனது சேவை காலத்தை நிறைவு செய்யவுள்ள அவுஸ்திரேலிய தூதுவர் ஆகியோர் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகிரா சுகியமா மற்றும் அவுஸ்திரேலிய தூதுவராக கடமையாற்றி தனது சேவை காலத்தை நிறைவு செய்யவுள்ள பிரைஸ் ஹட்ச்ஸ்ன் ஆகிய இருவருமே இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர் http://www.virakesari.lk/article/48665

  5. மன்னாரில் ஆயுதங்கள் மீட்பு மன்னார், பேசாலை - நடுக்குடா கடலோரப் பகுதியில் ஒரு தொகை வெடிகுண்டுகளை மீட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது ஒரு தொகை வெடிகுண்டுகளை நடுக்குடா கடற்கரையோரத்திலிருந்து மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலிக்கனைட் குச்சிகள், கிளைமோர் சுரங்கங்கள், ரப்பர் பூட்ஸ், ரொக்கெட் ஏவுதல்கள் மற்றும் வெடிமருந்துகள் ஆகியவை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/48678

  6. தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்தாலுக்கு தடைவிதித்தும் கடைகள் பூட்டுவதை தடைசெய்தும் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதிபதி இன்று (24) கட்ளையிட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். கிழக்கு மாகாண ஆளுநராக ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டமையை எதிர்த்து நாளை வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் பூரண ஹர்தால் அனுஷ்டிக்குமாறு கோரிக்கை விட்டிருந்தார் இந்நிலையில் எறாவூர் பொலிஸார் இந்த ஹர்த்தாலால் மாவட்டத்தில் ஒரு குழப்பகரணமான சூழலை ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் இதனால் பொது …

  7. ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமைக்கு ராஜபக்ஷ குடும்பத்தினரே காரணமென பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா குற்றம் சுமத்தியுள்ளார். எக்னெலிகொடவின் மனைவி சந்தியா, நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்திருந்தார். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், தனது கணவர் காணாமலாக்கப்பட்டமைக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுமே பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவித்துள்ளார். இதன்போது, தீப்பந்தங்களை ஏந்தியும், காளி தேவி வழிபாட்டிலும் ஈடுப்பட்…

  8. தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு மீண்டும் முயற்சிகள் ? January 25, 2019 மீண்டும் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும், அல்லது அரசாங்கத்தை ஆதரிக்கும் கட்சிகள், தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து நல்லாட்சிக்கான அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சியில் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் ஈடுபட்டுள்ளன எனவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. இதேவேளை ஒரே கொள்கையை உடைய கட்சிகளை தேசிய அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ள தயார் எனவும், தேசிய அரசாங்கம் தொடர்பான …

  9. இலங்கையில் அமெரிக்க படைத்தளம் – தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லையா? JVP கேள்வி.. January 25, 2019 அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படைக்கு இலங்கையில் தளம் அமைக்க அரசாங்கம் இடமளிப்பது இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாதா என ஜே.வி.பி பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளது. ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக, பாராளுமன்றத்தில் நேற்று இந்த ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பியிருந்தார். இந்தக் கேள்விக்கு பதில் அளித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, அமெரிக்காவுடன் இலங்கை அரசு பாதுகாப்பு உடன்படிக்கைகளை செய்து கொள்வது புதிய விடயமல்ல. இதற்கு முன்னர் இருந்த அரசுகளும் இவ்வாறான விடயங்களை செய்துள்ளன. எனினும் க…

  10. வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களையும் திரட்டி வவுனியாவில், மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி January 24, 2019 வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அமைப்பின் பிரதிநிதிகளின் சந்திப்பு ஒன்று இன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, வடக்கு கிழக்கின் எட்டுமாவட்டத்தையும் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதி வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இந்த பேரணி நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான வவுனியா மாவட்ட அமைப்பின் பேச்சாளர் கா. தவராசா இன்றைய சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது தெரிவித்துள்ளார். காணா…

  11. கர்ப்பிணியின் மீது மண்வெட்டி பிடியினால் தாக்குதல் – யாழில் சம்பவம் யாழ்.சாவகச்சேரியில், நிறைமாதக் கர்ப்பிணியின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.சாவகச்சேரி கெற்போலி பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் வீதியால் சென்றுக்கொண்டிருந்தபோது, வீதியில் வழிமறித்த முன்னாள் காதலன் மண்வெட்டி பிடியினால் அவரது வயிற்றில் பலமாக தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான பெண் கதறியதையடுத்து வீதியால் சென்றவர்கள் அப்பெண்ணை மீட்டு நோயாளர் காவு வண்டியின் (அம்புலன்ஸ்) மூலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்…

  12. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) சம்பள உயர்வை தரமறுக்கும் பெருந்தோட்டக் கம்பனிகளிடமிருந்து நிலங்களை பறித்து, அவற்றை தோட்டத் தொழிலாளர்களுக்கு பங்கிட்டு வழங்கி, அவர்களை சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும். அப்போதுதான் தோட்டத்தொழிலாளுக்கு சுதந்திரமாக வாழக்கூடிய நிலைமை உருவாகுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பியுமான வேலுகுமார் கோரிக்கை விடுத்தார். பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந…

  13. வெளிநாட்டின் உதவியுடன் இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதமா? January 24, 2019 வெளிநாடொன்றின் உதவியுடன், இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதத்துக்கும் மதவாதத்துக்கும் திட்டமிடப்பட்டுள்ளதா எனக் கேள்வியெழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பில், உடனடியாக விசாரணைகளை நடத்தி, சபைக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நேற்றையதினம் பாராளுமன்றில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அவர், மாவனெல்ல புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், சகோதரர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர் என்பதனை சுட்டிக்காட்டியதோடு, அவ்விரு முஸ்லிம் இளைஞர்களது தந்தையின் …

  14. கடந்த 9 மாதங்களில் மாத்திரம் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு 40,000 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவரும் ஜே.வி.பி.யின் எம்.பியுமான சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார். ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு 32,357 மில்லியனையும் 2015 இல் 16,000 மில்லியனையும் 2016 இல் 12, ஆயிரம் மில்லியன் நஷ்டத்தையும் எதிர்கொண்டது. இதேவேளை கடந்த 9 மாத காலத்தில் மாத்திரம் ஶ்ரீலங்கன் விமானச் சேவை நிறுவனம் 40 ஆயிரம் மில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/48658

  15. January 24, 2019 Facebook Twitter Google Plus Pinterest LinkedIn முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ஸவின் திருமண நிகழ்வில் விசேட அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டுள்ளார். தனது மகனின் திருமணத்தில் கலந்துகொள்ளுமாறு தருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், நிதியம…

  16. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த நகைத் திருட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இரண்டு நபர்களைக் கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களிடமிருந்து ஒரு தொகுதி தங்க ஆபரணங்களையும் கைப்பற்றியுள்ளனர். குடாநாட்டின் பல இடங்களிலும் அண்மைய நாட்களில் வழிப்பறிகளும் நகைத் திருட்டுக்களும் இடம்பெற்று வந்தநிலையில் அவை தொடர்பில் யாழ்ப்பாண காவல் நிலைய குற்றத்தடுப்பபு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தனர். இந்நிலையில் இந்த நகைக் கொள்ளைகளுடன் தொடர்புடைய ஒருவரையும் அந் நகைகளை உருக்கிக் கொடுக்கின்ற ஒருவரையும் இன்று வியாழக்கிழமை காவ…

  17. January 24, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn நாயாறு நீராவியடி ஏற்றத்தில் புத்தர் சிலை அமைத்து நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்ட செயலானது தமிழ் மக்களின் நெஞ்சங்களைப் புண்படுத்தும் செயலாகும் என முந்நாள் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.…

  18. January 24, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn திருமலையில் வைத்து 2016ம் ஆண்டு படுகொலையான சக ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதி கோரி எதிர்வரும் சனிக்கிழமை யாழில் …

  19. January 24, 2019 A சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யாகூப் Halimah Yacob ) புக்குமிடையிலான சந்திப்பு இன்று (24) முற்பகல் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கும் சிங்கப்பூருக்குமிடையில் காணப்படும் இருதரப்பு தொடர்புகளை பலமாக முன்னெடுத்து செல்வது தொடர்பாக இதன்போது அரச தலைவர்கள் கவனம் செலுத்தியதுடன், அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் தற்போது இலங்கை முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து சிங்கப்பூர் ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி செயலக…

  20. ஆறு தமிழக மீனவர்களும் விடுதலை இலங்கைக் கடலில் தத்தளித்த நிலையில் அண்மையில் மீட்கப்பட்ட ஆறு தமிழக மீனவர்களையும் மல்லாகம் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. இயற்கை அனர்த்தம் காரணமாக இலங்கைக் கடற்பரப்பிற்கு அண்மையில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் குறித்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தனர். தமிழகம் புதுக்கோட்டையில் இருந்து கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி மீன் பிடிக்க வந்த நிலையில் கடற்சீற்றம் காரணமாக குறித்த மீனவர்களின் படகுகள் சேதமடைந்தன. இந்நிலையில் ஆறு மீனவர்கள் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த போது கடற்படையினரால் மீட்கப்பட்டு, மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி இருந்தனர். அதனைத் தொடர்ந்து விளக…

    • 1 reply
    • 721 views
  21. பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு ரூ. 2 பில். ஒதுக்கீடு Editorial / 2019 ஜனவரி 24 வியாழக்கிழமை, மு.ப. 11:26 யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்காக, அரசாங்கத்தால், 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம், வடமாகாண அபிவிருத்தி அமைச்சினால் தயாரிக்கப்பட்டு, அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. குறித்த விமான நிலையத்னை நவீனமயப்படுத்தும் பணிகள், இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஓடுபாதை மாத்திரம், இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பலாலி-வ…

  22. யாழில் தடை செய்யப்பட்ட பெருமளவிலான எதனோல் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது January 24, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையில் தடை செய்யப்பட்ட பெருமளவிலான எதனோல் போதைப் பொருள் பாரவூர்தியில் கடத்திச் செல்லப்பட்ட போது விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். யாழில் ரோந்தில் ஈடுபட்டு வருகின்ற விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையிலையே இப் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது பாரவூர்தி ஒன்றுடன்; 372 எதனோல் போத்தல் கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஒவ்வாரு கொள்கலனும் 21 லீற்றர் கொள்ளளவைக் கொண்டவை என்பதுடன் மொத்தமாக 7420 லீற்றர் எதனோல் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்…

  23. கருத்து சுதந்திரப்படுகொலை – சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்ட – பிரகீத் காணாமல் ஆக்கப்பட்ட நாள் இன்று January 24, 2019 இலங்கையில் கடுமையாக நிலவிய கருத்துச்சுதந்திரப்படுகொலையை நினைவுபடுத்தும் நாள் இன்றாகும். இதேபோல் ஒரு நாளில் ஊடகவியலாளர் சுகிர்தராஜன் கொல்லப்பட்டதுடன் ஊடகவியலாளர் பிரகீத் காணாமல் ஆக்கப்பட்டார். இலங்கையில் நிலவிய கடுமையான ஊடக சுதந்திர மறுப்பை வெளிப்படுத்தும் இந்த இரு நிகழ்வுகளும் சர்வதேச ரீதியில் கவனம் பெற்றவை ஆகும். ஐந்து மாணவர் படுகொலையின் சாட்சி சுகிர்தராஜன் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் (டிசம்பர் 12, 1969 – சனவரி 24, 2006) இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர். எஸ்.எ…

  24. சேவையை ஆரம்பிக்கவுள்ளது உத்தரதேவி. இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள இரட்டை வலுகொண்ட ரயில் சேவை கொழும்பு முதல் காங்கேசன்துறைவரை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. அதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் உத்தரதேவி என்ற பெயரில் இந்த ரயில், சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. குறித்த ரயிலின் பரீட்சார்த்தப் பயணம் எதிர்வரும் 27ஆம் திகதி காலை 6 மணிக்கு போக்குவரத்து அமைச்சரின் தலைமையில் இடம்பெறவுள்ளது. இதையடுத்து, எதிர்வரும் 30ஆம் திகதி முதல் குறித்த ரயில் சேவை, முற்பகல் 10.45மணிக்கு கொழும்பிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கவுள்ளது. இதேவேளை, எதிர்காலத்தில் இந்தியாவிலிருந்து இரட்டை வலுகொண்ட 5 ரயில் தொகுதிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதுடன், சீனாவிலிருந்தும் ரயில்…

  25. இந்து ஆலயங்களைப் புனித பிரதேசமாக்க விரைவில் அமைச்சரவைப் பத்திரம்: அமைச்சர் மனோ புகழ்பெற்ற இந்து ஆலயங்களைப் புனித பிரதேசமாக்க விரைவில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படுமென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மன்னார் திருகேதிஸ்வர ஆலயத்திற்கு இன்று (புதன்கிழமை) காலை விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “திருக்கேதிஸ்வர பகுதிக்குச் சொந்தமான இதுவரை கையளிக்கப்படாத காணிகள் அனைத்தையும் மக்களின் பாவனைக்கும் ஆலயத்தின் பாவனைக்கும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளேன். அத்துடன் குறித்த அமைச்சரவைப் பத்திரத்தினை சமர்ப்பிக்கும் போது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.