ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு – எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் தீர்மானம்! வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடவுள்ளது. இவ்வருடத்தின் முதலாவது அமர்வென்பதால், சம்பிரதாயபூர்வமாக நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன. இன்றைய தினம் பார்வையாளர்களின் கூடம் மீண்டும் திறக்கப்படவுள்ளது. கடந்த காலங்களில் நாடாளுமன்றில் இடம்பெற்ற சர்ச்சைகளைத் தொடர்ந்து பொதுமக்கள் பார்வைக்கூடம் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் திறக்கப…
-
- 0 replies
- 251 views
-
-
யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் செயற்றிட்டம் ஆரம்பம் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் பணிப்பாளர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார். இதற்கு சர்வதேச அரசசார்பற்ற அமைப்புக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இறுதிப்போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளை கணக்கிடுவதற்கு இந்த எண்ணிக்கை முக்கியமானதெனக் குறிப்பிட்டுள்ள அவர், இறந்தவர்களை நினைவுக்கூர இது அவசியமெனவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தகாலத்தின் பி…
-
- 0 replies
- 366 views
-
-
யாழ். நீதிமன்றிலிருந்து தப்பிச்சென்ற சந்தேகநபர் மீண்டும் கைது யாழ்ப்பாணம் நீதிமன்றிலிருந்து தப்பிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் மீண்டும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு பொலிஸாரினால் முறையான தகவல்கள் வழங்கப்படாமையினால் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரியாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றசாட்டில் குடும்பஸ்தர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) கைதுசெய்திருந்த நிலையில், அவரை நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். தம்மால் அழைத்து வரப்பட்ட குறித்த சந்தேகநபரை நீதிமன்றில், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பாதுகாப்பில் ஒப்படைத்துவிட்டு நீதிமன…
-
- 0 replies
- 178 views
-
-
வடக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான ஆளுநர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சற்று முன்னர் சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சத்திய பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. இதன்படி, ரெஜினோல் குரே ஆளுநராக பதவி வகித்த, வடக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் சிரேஷ்ட ஆலோசகராக கடமையாற்றியிருந்தமை சுட்டிக்காட்டத் தக்கது. நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளராக கடமையாற்றிய, கீர்த்தி தென்னக்கோன், ஊவா மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சப்ரகமுவ மாகாண ஆளுநராக, சிரேஷ்ட வ…
-
- 2 replies
- 989 views
-
-
வடக்கு ஆளுனர் தெரிவில் என்ன நடந்தது?; சுந்தரலிங்கத்திற்கு கொடுத்த வாக்குறுதி என்னானது?: பின்னணியில் இயங்கிய ‘மகாராஜா’வின் கரங்கள்! January 7, 2019 வடமாகாண ஆளுனராக சுரேன் இராகவன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுனராக நியமிக்கப்படப் போவது அவரா, இவரா என பெரும் ஊகங்களும், எதிர்பார்ப்புக்களும் நிலவி வந்த நிலையில், யாருமே எதிர்பாராத ஒருவர் இன்று திடீரென ஆளுனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் எப்படி நியமிக்கப்பட்டார்? அதற்கு முன்னதாக, ஆளுனர் பட்டியலில் முதலிடத்தில் இருந்து, கடைசியில் அல்வா கொடுக்கப்பட்ட ஒருவரை பற்றிய தகவலை சொல்கிறோம். வடக்கு ஆளுனர் பட்டியலில் கடைசிவரை முதலிடத்தில் இருந்தவர் பி.சுந்தரலிங்கம். கொழும்பு மயூரபதி பத்திரகாளி தே…
-
- 1 reply
- 496 views
-
-
ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் அழிந்து விடாது ; முன்பள்ளி ஆசிரியர்கள் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் முன்பள்ளி ஆசிரியர்களாகவும், பண்ணைகளில் உணவு உற்பத்தி பணிகளில் ஈடுப்படும் பணியாளர்களாகவும் இருக்கின்ற ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தை மாற்று வழிகள் இன்றி அழிக்கும் நோக்கில் சிலர் செயற்பட்டு வருகின்றனர். எனவே இந்த ஆபத்திலpருந்து தங்களை பாதுகாக்குமாறு முன்பள்ளி ஆசிரியர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று 07 கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அலுவலகத்தில் பிற்பகல் மூன்று மணிக்கு இடம்பெற்ற சந்திப்பின் போதே இக் கோரிக்கையினை முன் வைத்துள்ளனர். கிளிநொச்சி …
-
- 0 replies
- 347 views
-
-
மதிப்பீடு செய்த பகுதியை விடுத்து வேறு பகுதியில் வீதி புனரமைப்பு January 7, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இரத்தினபுரம் கிராமத்தில் கிருஸ்ண ஆலய வீதியில் கம்பொரலிய திட்டத்தின் கீழ் வீதி புனரமைப்பு பணிகளுக்காக மதீப்பீடு செய்யப்பட்ட இடத்தை விடுத்து வேறு இடத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட இரத்தினபுரம் கிராமத்தில் உள்ள கிருஸ்ணர் ஆலய வீதி மிகவும் மோசமானதாக காணப்படுகிறது. இதுவரை காலமும் குறித்த வீதி புனரமைக்கப்படவில்லை, இந்த நிலையில் அரசின் கம்பொரலிய திட்டத்தின் கீழ் குறித்த வீதி தெரிவு செய்யப்பட்டு புனரமைப்புக்கு ஒப்பந்தகாரர்களிடம் வழங்க்கப்பட்டது. ஒப்பந…
-
- 0 replies
- 549 views
-
-
16 வயது சிறுமி கல்லடி பாலத்தில் குதித்து தற்கொலை மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுமியின் சடலம் இன்று (திங்கட்கிழமை) காலை 06 மணியளவில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க காரியாலயத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி நேற்று முன்தினம் பிற்பகல் மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். இதனையடுத்து குறித்த சிறுமியை ஆற்றில் தேடி வந்த நிலையில் அவரது சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடாவைச் சேர்ந்த 16 …
-
- 1 reply
- 466 views
-
-
January 7, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn போர்க்குற்றச் சாட்டுக்களுக்காக ராஜபக்ஸ குடும்பத்தினரை தண்டிக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடுகடந்த …
-
- 0 replies
- 490 views
-
-
நியாயமான தீர்வாக இருந்தால் ஆதரிப்போம் இல்லாவிடில் எதிர்ப்போம் - சித்தார்த்தன் தமிழ் மக்களுக்கு நியாயமான திர்வாக இருக்குமென்று கருதுகின்ற தீர்வை நாங்கள் ஆதரிப்போம். அவ்வாறு இல்லாவிடின் அதனை நாங்கள் எதிர்ப்போம் என தமிழ் தேசிய கூட்மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு நியாயமான திர்வாக இருக்குமென்று கருதுகின்ற தீர்வை நாங்கள் ஆதரிப்போம். அவ்வாறு இல்லாவிடின் அதனை நாங்கள் எதிர்ப்போம். ஆகவே மக்கள் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வே எமக்கு வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றோம். ஏனென்றா…
-
- 6 replies
- 1k views
-
-
இன அழிப்பு போரின் போது கொல்லப்பட்டோர் தொடர்பான எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதற்கு உதவுமாறு கோரிக்கை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு, மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக்குழு களத்தில் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு போரின் போது படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பான எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு மற்றும் மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக்குழு ஆகியன தமது இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன. தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் வசிப்ப…
-
- 0 replies
- 399 views
-
-
குடாநாட்டில் பதற்றம் கலந்த அச்சமான சூழ்நிலை தொடர்வதால் மக்கள் பீதியுடன் பொழுதைக் கழிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். கொக்குவில் பகுதியில் ஏராளமான இளைஞர்கள் பட்டப்பகல் வேளையில் வாள்களுடன் தாக்குதலுக்குத் தயாராக வந்தமை குடாநாடு எத்தகைய ஆபத்தான நிலையில் உள்ளதென்பதை எடுத்துக்காட்டிவிட்டது. அரசின் அசமந்தத்தால் அதிகரிக்கும் குற்றங்கள் குடாநாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யப்போவதாக அரசின் சார்பில் பாதுகாப்பு அதிகாரிகள் அடிக்கடி கூறிவருகின்றபோதிலும் குற்றச் செயல்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. மக்களும் பீதியில் உறைந்துபோய்க் கிடக்கின்…
-
- 0 replies
- 761 views
-
-
இலங்கை வட மாகாண ஆளுநராக முதன்முதலாக தமிழர் நியமனம் முனைவர் சுரேன் ராகவன் இலங்கையின் வட மாகாணத்திற்கான ஆளுநராக, தமிழரொருவர் முதன்முதலாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவால் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முனைவர் சுரேன் ராகவன், திங்கட்கிழமை பிற்பகல் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார். இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு, இலங்கை ஜனாதிபதியின் செயலகத்தில் இடம்பெற்றது. ரெஜினோல்ட் குரேவினால் வகிக்கப்பட்டு வந்த வட மாகாண ஆளுநர் பதவிக்கே, முனைவர் சுரேன் ராகவன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். யார் இவர்? பிரித்தானியாவின் கென்ட் பல்கலைக்கழகத்தின், அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் கல்லூரியில் தனது முதுமானிப்பட்டத்தை நிறைவு செய்த அவர், "இனத்…
-
- 0 replies
- 902 views
-
-
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை வழங்குமாறு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தரவுக்கெதிராக ஜனாதிபதி செயலகம் மேன்முறையீடு செய்யும் தீர்மானம் தொடர்பாக ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர இது தொடர்பில் குறிப்பிடுகையில், ஜனாதிபதியின் புதிய வருடத்தின் வாக்குறுதிக்கிணங்க ஊழலுக்கெதிராக போராடுவதற்கு உறுதியளித்துள்ளதுடன் 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எ…
-
- 0 replies
- 478 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் நகர மத்திய பகுதியில் அதிகம் மக்கள் நடமாடும் பகுதிகளில் இனம் தெரியாத சிலரால் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சிவசேனை என எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. மும்மதத்தை சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழும் நகரங்களில் மன்னார் மாவட்டம் மிக முக்கிய பங்கு வகிக்கின்ற நிலையில் இவ் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் நேற்று நள்ளிரவு நகரின் மத்திய பகுதிகள் மற்றும் பொது விளையாட்டரங்கு என சில பகுதிகளில் ‘சிவ பூமி மதம் மாற்றிகள் நுழையாதீர்கள்’ என மத ரீதியான அடையாளப்படுத்தப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப…
-
- 0 replies
- 774 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் முன்பள்ளி ஆசிரியர்களாகவும், பண்ணைகளில் உணவு உற்பத்தி பணிகளில் ஈடுப்படும் பணியாளர்களாகவும் இருக்கின்ற ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தை மாற்று வழிகள் இன்றி அழிக்கும் நோக்கில் சிலர் செயற்பட்டு வருகின்றனர் எனவே இந்த ஆபத்தில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு முன்பள்ளி ஆசிரியர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று 07-01-2019 கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அலுவலகத்தில் பிற்பகல் மூன்று மணிக்கு இடம்பெற்ற சந்திப்பின் போதே இக் கோரிக்கை…
-
- 0 replies
- 823 views
-
-
புலம்பெயர் தமிழ் மக்களிடையே தீவிரவாத போக்குடைய மிக சிறிய எண்ணிக்கையிலானோர் இருப்பதாக தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, அவர்களால் இலங்கையில் நியாயமான அதிகார பகிர்வு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கொழும்புக்கு விஜயம்செய்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஜெப்ரி வேர்ன் ஓர்டனுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின் போதே தமிழ் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறியிருக்கின்றார். இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் உடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு சென்றுள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும…
-
- 13 replies
- 1.9k views
-
-
யாழ் பருத்தித்துறையில் தமிழ் வாரஇதழ் தீயிட்டு எரிப்பு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் தமிழ் வாரஇதழின் முகப்பு பக்கத்தில் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் மத்தியில் தலைவர் வே.பிரபாகரன் நடந்து வரும் படம் பிரசுரிக்கப்பட்டிருந்த அதேவேளை, “ இரவு இரண்டு மணிக்கு பெண் கேட்ட தேசிய தலைவர் “ என்ற தலைப்பும் இ்டப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த செய்திக்கு இடப்பட்ட தலைப்பு , மற்றும் படம் என்பன வேண்டும் என்றே போடப்பட்டது என தெரிவித்தே பருத்தித்துறை பகுதிகளில் பத்திரிக்கையின் பிரதியை தீயிட்டு கொளுத்தி தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுளார்கள். குறித்த செய்தி தலைப்புடன் தொடர்புடைய செய்தியானது இந்தியாவை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான சங்கர் என்பவரது கதையாகும். தொடர் கொலைகளை செ…
-
- 0 replies
- 697 views
-
-
மைத்திரிக்கு தக்க பாடத்தை புகட்டுவேன் : என்கிறார் சந்திரிகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளுக்கு விரைவில் தக்க பாடம் புகட்டுவேன். என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்தி சேவையொன்றுக்கு வழங்கிய நேர் காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எனது தந்தையும் தாயும் நானும் பாடுபட்டு வளர்த்தோம். இந்தக் கட்சியைத் தலைநிமிரச் செய்தோம். நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் கட்சியாக இதனை வைத்திருந்தோம். ஆனால், இந்தக் கட்சியை இன்று நாசமாக்கிவிட்டார் மைத்திரி. முதலாவது நிலைக்கு நின்ற எனது தாய்க்கட்சி மைத்திரியின் சர்வாதிகார நடவடிக்கைகளினால…
-
- 0 replies
- 924 views
-
-
ரவிகரன் மற்றும் ஏழுபேர் மீதான வழக்கு ஒத்திவைப்பு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கடந்த 2018.08.02 ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்ததுடன், மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளுக்கு தமது கோரிக்கைகளை முன்வைக்கச் சென்றபோது, நீண்டநேரமாகியும் திணைக்களத்திற்குள் இருந்த அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காது இருந்த நிலையில் அலுவலகம் சேதமாக்கப்பட்டது. இவ்வாறு அலுவலகம் சேதமாக்க…
-
- 0 replies
- 498 views
-
-
இறுதிப்போரில் கொல்லப்பட்டவர்களின் பெயர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம் இலங்கையின் உள்நாட்டு மோதலின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ள இரு சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் இந்த நடவடிக்கைகளிற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பும் மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக்குழுவுமே இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளன. இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ளவர்கள் தங்களிடமுள்ள விபரங்களை வழங்கவேண்டும் என இரு அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஆகக்குறைந்த அளவில் இறந்தவர்களின் பெயர்களை சேகரிப்பதன் மூலமாவது அவர்களிற்கு மரியாதை செலுத்தவேண்டும் என ஐடிஜேபிய…
-
- 0 replies
- 725 views
-
-
மைத்திரி, ரணில், மஹிந்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - சம்பந்தன் இனவாதம், பிரிவினையை ஏற்படுத்தாமல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த தரப்புக்களைச் சேர்ந்தோர் ஓரணியில் நின்று புதிய அரசியலமைப்பை வெற்றி பெறச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்தார். புதிய அரசியலமைப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டாவாறு கூறிய அவர், நாட்டைப் பிரிப்பதோ, துண்டாக்குவதோ எமது நோக்கமல்ல. நீதி மற்றும் சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில் பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் தேசிய பிரச்சினைக்கான நிரந்தரத் த…
-
- 0 replies
- 600 views
-
-
த.தே.கூ.வின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நாளை hare தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுக் கூட்டம் நாளை காலை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூடவுள்ளது. இதன்போது புதிய அரசமைப்புக்கான வரைவு நகல் குறித்தும், ‘ஒருமித்த நாடு’, ‘ஒற்றையாட்சி’ ஆகிய சொற்பதங்கள் சம்பந்தமாகவே இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/47618
-
- 1 reply
- 486 views
-
-
9 வயது சிறுமியை கொலை செய்து புதைத்ததாக சந்தேகப்படும் தாய் மற்றும் அவரின் கள்ளக் காதலன் கைது! re 9 வயது சிறுமி ஒருவரை கொலை செய்து புதைத்ததாக சந்தேகப்படும் தாய் மற்றும் அவரின் கள்ளக்காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை ஹாலிஎல – கன்தேகெதர சார்ணியா தோட்டம் மஹதென்ன பிரிவில் சிறுமியொருவர் அவரின் வீட்டுக்கு அருகில் மரக்கறி தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய அவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 26 மற்றும் 30 வயதுடையவர்கள் என தெரிவிக்கபட்டுள்ளது. வவுனியா செட்டிக்குளத்தை சேர்ந்த குறித்த சிறுமியின் தாய் அவரது கணவனை பி…
-
- 0 replies
- 360 views
-
-
வரவு-செலவுத்திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பு 2019 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் அமைச்சரவை அனுமதிக்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன் பிரகாரம் அமைச்சரவைக்கூட்டம், இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதித் தலைமையில் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதால், அது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று நான்கு ஆண்டுகள் பூர்தியடைவதை முன்னிட்டு சில விசேட நிகழ்வுகள் நாளை இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வுகள் தொடர்பிலும் தீர்மானங்களை மேற்கொள்ளவே இன்று இந்த கூட்டம் இட…
-
- 0 replies
- 877 views
-