ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
கிழக்கு மாகாணத்துக்கு வருகை தந்த சிங்கப்பூர் வர்த்தகர் குழுவினர், சீனக்குடா விமான நிலையத்தில் இருந்து முதற்தடவையாக சிங்கப்பூருக்குப் பயணித்துள்ளனர். குறித்த குழுவினர் இரு நாள்கள் பயணமாக கிழக்கு மாகாணத்துக்கு வருகை தந்தனர். சுற்றுலா , மீன்பிடி, வர்த்தக உடன்படிக்கைகள் ஊடாக கிழக்கு மாகாணத்தில் சிங்கப்பூர் நாட்டின் முதலீடுகளை கொள்ளும் நோக்குடன் குழுவினரின் பயணம் அமைந்தது. இவர்கள் திருகோணமலையில் தங்கியிருந்து பல இடங்களுக்கு களப் பயணங்களிலும், சந்திப்புக்களிலும் ஈடுபட்டனர். இன்று சீன வர்த்தகர் ஒருவரின் சொந்த விமானத்தில் சீனக்குடா விமான நிலையத்தில் இருந…
-
- 2 replies
- 1.1k views
-
-
29 கட்சிகளுடன் பாரிய கூட்டணி அமைக்கும் மொட்டு கட்சி சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கு, 29 கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளன. சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மினுவங்கொடவில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், “நாட்டில் சிறிலங்கா பொதுஜன முன்னணி மாத்திரமே செயற்பாட்டு நீதியான கட்சியாக உள்ளது. நான் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை பெற்று விட்டேன். 2015 ஜனவரி மாதமே சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி விட்டேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappala…
-
- 0 replies
- 330 views
-
-
அரசியல் உறுதியற்ற நிலையால் பலாலி விமான நிலைய அபிவிருத்தியில் இழுபறி சிறிலங்காவின் அரசியல் உறுதியற்ற நிலையினால், இந்தியாவின் உதவியுடன் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம், தாமதமடைந்துள்ளது என்று இந்திய விமானத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை வரையுமாறு, இந்தியாவின் விமான நிலைய அதிகார சபையிடம் கடந்த செப்ரெம்பர் மாதம் இந்திய வெளிவிவகார அமைச்சு கோரியிருந்தது. எனினும், சிறிலங்காவின் அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இந்த திட்டத்துக்கு இன்னமும், இந்திய வெளிவிவகார அமைச்சு பச்சைக்கொடி காண்பிக்கவில்லை என்று வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. மியான்மாரின் க…
-
- 1 reply
- 434 views
-
-
அர்த்தம் தெரியாதவர்களே எதிர்க்கின்றனர்- ராஜித சேனாரத்ன அதிகாரப்பகிர்வின் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்ளாதவர்கள் தான், புதிய அரசியலமைப்புக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அதிகாரத்துக்கு வருவதற்கும், அதனை தக்கவைப்பதற்கும் அரசியல்வாதிகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டதால் தான் நாடு போருக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. 1950களில் இருந்து இந்த நிலை தான் காணப்பட்டது. புதிய அரசியலமைப்பு வரைவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றவர்களில் பெரும்பாலானவர்கள், ஒற்றையாட்சி அரசு அல்லது சமஷ்டி அரசில் அதிகாரப் பகிர்வு பற்றி தெரியாமல் இருப்பவர்கள் தான்.” என்றும் அவர் தெரிவித்து…
-
- 0 replies
- 484 views
-
-
நாமல் குமார மீது குறிவைக்கும் சிறிலங்கா இராணுவம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட உயர்மட்டப் பிரமுகர்களை படுகொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய, நாமல் குமார, சிறிலங்கா இராணுவ காவல்துறையினால் கைது செய்யப்படவுள்ளார். நாமல் குமார 2009ஆம் ஆண்டு சிறிலங்கா விமானப்படையில் இணைந்து கொண்டு பயிற்சியின் போது தப்பிச் சென்றவர் என்றும், பின்னர் 2011ஆம் ஆண்டில், சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த போது, தப்பிச் சென்றார் என்றும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டே நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். அத்துடன், சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து கொண்டபோது அவர் சமர்ப்பி…
-
- 0 replies
- 285 views
-
-
1 Min Read January 6, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn இந்தியாவின் காஞ்சிபுரத்திலே ஏழாவது முறையாக இடம்பெற்ற ஹிடின் ஐடோல் (Hidden Idol ) சர்வதேச பரதநாட்டியப் போட்டியில் கிராமிய நடன பிரிவில் யாழ்ப்பாணம் ச…
-
- 3 replies
- 944 views
-
-
இனப்படுகொலையாளியுடன் கம்சாஜினி குணரத்னம் சந்திப்பு! நோர்வே வாழ் தமிழீழ மக்களின் வாக்குகாளால் ஒஸ்லோவில் அரசியலுக்கு வந்த கம்சாஜினி குணரத்னம் நேற்றைய தினம் இனப்படுகொலையாளிகளில் ஒருவரான மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். தமிழீழ மக்கள் வரலாறு காணாத சோகத்தைச் சுமந்து, அழுவதற்கும் விதி அற்றவர்களாக, நில மீட்பு போராட்டங்களை நடத்திக்கொண்டும், காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒருவருடமாக வீதியில் போராடியும் கொண்டு இருக்கும் இவ் வேளையில் கம்சாஜினி குணரத்னம் இனப்படுகொலையாளிகளில் ஒருவரான மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளமை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. நீயா தமிழனின் பிள்ளை? சூடு சொரணை கொஞ்சமும் இல்லை சொல்லடா நீயும் தமிழனின் பிள்ளை? தோட்டத்தில்…
-
- 9 replies
- 1.4k views
-
-
வவுனியா, புதூரில் தப்பி ஓடிய ஆயுதாரியை தேடி சுற்றி வளைப்பு… January 2, 2019 வவுனியா, புதூர் பகுதியில் ஆயுதங்களுடன் சென்ற ஒருவரை சோதனையிட முற்பட்ட போது, அவர் தப்பியோடியமையால் குறித்த பகுதியினை இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சந்தேகநபர் விட்டுச்சென்ற பையிலிருந்து கைத்துப்பாக்கி, நான்கு கைக்குண்டுகள், கைத்துப்பாக்கிக்கான ரவைகள் உட்பட மேலும் சில பொருட்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவரின் நடமாட்டம் காணப்படுவதாக புளியங்குளம் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அப்பகுதியில் பதுங்க…
-
- 6 replies
- 1.5k views
-
-
நாட்டுக்குத் தேவைப்படுவது இனங்களுக்கு இடையில் வைராக்கியத்தை ஏற்படுத்தும் அரசமைப்பு அல்ல. இனங்களுக்கு இடையில் சமத்துவத்தை ஏற்படுத்தும் அரசமைப்பேயாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். அநுராதபுரம் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது, இன்று பல்வேறு யோசனைகள் கொண்டு வரப்படுகின்றன. நாட்டைப் பிளவுப்படுத்தும் அரசமைப்பை கொண்டு வருகின்றனர். இனங்களை நாசமாகும் அரசமைப்பை கொண்டு வருகின்றனர். பலவந்தமாக அரசமைப்பை நிறைவேற்றிக்கொள்ள முடியாது. அனைத்து இனங்களையும் ஒற்றுமைப்படுத்தும் அரசமைப்புக்குப் பதிலாக இனங்க…
-
- 0 replies
- 409 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு பகுதியில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் கடலில் மிதந்துவந்த ஒருதொகுதி வலைகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ள நிலையில் அவற்றினை முல்லைத்தீவு காவல்துறையினரிடம் கையளித்துள்ளனர் குறித்த வலைகள் அண்மையில் வலைஞர்மடம் பகுதியில் கரையொதுங்கிய இந்திய படகில் இருந்த வலைகளை ஒத்த வலையாக காணப்படுவதாகவும் அந்த படகில் இருந்த வலையாக இருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் http://globaltamilnews.net/2019/109108/
-
- 0 replies
- 396 views
-
-
January 6, 2019 புதிய அரசியலமைப்பின் வரைபினை மட்டுமல்ல அதன் யோசனைகளையும் கடுமையாக எதிர்ப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் சேஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டுக்கு அவசியமற்ற அரசியலமைப்பினை உருவாக்க முயலும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இன்று வடக்கு மக்களால் வெறுக்கப்பட்டவராக காணப்படுகின்றார் எனவும் அவரின் கனவு ஒருபோதும் நிறைவேறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் புதிய அரசியலமைப்பினை கோரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வடக்கு கிழக்கு உட்பட நாட்டில் வாழும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண இதுரையில் தமது எதிர்கட்சி பதவியை பயன்படு…
-
- 0 replies
- 386 views
-
-
January 6, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn சமஸ்டி என்றால் என்னவென்று தெரியாதவர்களே பிரிவினை வாதத்தை தூண்டிவருகின்றனர் எனவும் அவர்களால் பிரிவினைவாத பிரசாரம் இல்லாமல் அரசியல் செய்யமுடியாது எனவும் ஒற்றையாட்சிக்குள்ளேயே அதிகார பகிர்வு இடம்பெறும் எனவும் சுகாதார மற்றும் போசணை அமை…
-
- 0 replies
- 482 views
-
-
மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் இருந்த காளிகோயிலை இடித்து பொதுச்சந்தை அமைத்த முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நியமித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நியமனத்தின் ஊடாக கிழக்குமாகாண தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. இனவாத சிந்தனை கொண்டு செயற்படும் ஒருவரை அதுவும் கடந்த காலங்களில் கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக அவர்களது இருப்புக்கு எதிராக செயற்பட்ட ஒருவரை ஜனாதிபதி அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்தமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டமாவடி காளிகோயிலை இடித்து பொதுச்சந்தை கட்டியது நீதிபதியை மாற்றி நீதிமன்ற தீர்ப்பை மாற்…
-
- 8 replies
- 1.2k views
-
-
முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களை பராமரிக்கும் பொறுப்பு எல்லோருக்குமுள்ளது: பா.டெனிஸ்வரன்! January 5, 2019 மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட மாவீரர் குடும்பங்கள், புனர்வாழ்வு பெற்ற போராளிகள் குடும்பங்கள் சுமார் எழுபது பேருக்கு வாழ்வாதார உதவி முருங்கன் டொன்பொஸ்கோ பார்வையாளர் அரங்கில் இன்று (5)காலை 11 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது. நீலன் அறக்கட்டளை சார்பில் புலம்பெயர் உறவுகளால் அனுப்பி வைக்கப்பட்ட நிதியிலிருந்து வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டடுள்ளது. இந்த வழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வில் பொதிகளை வழங்கி வைத்த பின் உரையாற்றிய வட மாகாணசபை முன்னாள் அமைச்சர் ப.டெனிஸ்வரன்- “மண்மீட்பிற்காகவும் ம…
-
- 0 replies
- 374 views
-
-
வங்காலையில் சுட்டுக் கொல்லப்பட்ட வர்களுக்கு நினைவேந்தல்!! பதிவேற்றிய காலம்: Jan 6, 2019 மன்னார் வங்காலையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியனின் அடிகளார் மற்றும் மக்களின் 34 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. மன்னார் வங்காலையில் 1985 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 06ஆம் திகதி வங்காலை தூய ஆனாள் பங்குப் பணியாளராகச் சேவையாற்றிய அருட்பணி மேரிய பஸ்ரியன் அடிகளாரும், அவருடன் தங்கியிருந்த சிறுவர்களும், உதவியாளர்களும் பொது மக்களுமென 10 பேர் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியனின் அடிகளார் மற்றும் மக்களின் நினை அஞ்சலி வருடா வருடம் வங்காலை தூய ஆனாள் பங்குச் சமூகத்தால் நடாத்துப்பட்டு …
-
- 0 replies
- 607 views
-
-
செமட்ட செவண” 148 ஆவது மாதிரிக் கிராமம் மக்கள் பாவனைக்காக இன்று மட்டக்களப்பில் திறந்துவைப்பு. 2025 ஆம் ஆண்டில் “செமட்ட செவண” யாவருக்கும் வீடு பெற்றுக்கொடுக்கும் ஒரே நோக்கில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் நடிமுறைப்படுத்தப்படும் “செமட்ட செவண” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கும்புறுமூலையில் நிர்மாணிக்கப்பட்ட “பழமுதிர்ச்சோலை” 148 ஆவது மாதிரிக் கிராமம் இன்று (06) ஞாயிற்றுக்கிழமை வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் தனக்கென சொந்தமான வீட்ட…
-
- 0 replies
- 310 views
-
-
சோதிடருக்கு காரை பரிசளித்து 8.2 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தினார் மஹிந்தர்! எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது தனிப்பட்ட சோதிடரின் பாவனைக்காக கார் ஒன்றை வழங்கியதன் மூலம், மிஹின் லங்கா விமான நிறுவனத்துக்கு 8.2 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமான நிறுவனங்களின் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம், மஹிந்தவின் தனிப்பட்ட சோதிடரான சுமணதாச அபேகுணவர்த்தன, இதுதொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளார். “2017ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில், எனக்கு கார் ஒன்று வழங்கப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவி…
-
- 0 replies
- 373 views
-
-
ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்க குழு January 6, 2019 ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கான ஆய்வுகளை முன்னெடுத்து பரிந்துரைகளை மேற்கொள்வதற்காக ஐவர் கொண்ட குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாளை நியமிக்கப்படவுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவையில் காணப்படும் பிரச்சினைகளை தீர்த்து, அதனை மறுசீரமைப்பதற்கு தேவையான கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை பெற்று பரிந்துரைகளை முன்வைப்பதற்காகவே மேற்படி குழு நியமிக்கப்படவுள்ளது. இக்குழுவானது இரண்டு வார காலப் பகுதியில் அதன் பரிந்துரைகள் ஜனாதிபதிக்கு முன்வைக்க வேண்டும் என்பதுடன் குறித்த பரிந்துரைகளைக் கவனத்திற்கு கொண்டு ஸ்ரீலங்கன் விமான சேவை தொடர்பான அடுத்த கட்ட தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளது என்பது குறிப…
-
- 0 replies
- 408 views
-
-
இனங்களுக்கிடையில் வெறுப்பைத்தூண்டும் புதிய அரசியலமைப்பால் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. - மகிந்த January 6, 2019 இனங்களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டும் வகையில் அரசியமைப்பு ஒன்றை கொண்டு வருவதன் மூலம் நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அத்துடன் பலவந்தமாக புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்கு வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அம்பாறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2019/109044/
-
- 0 replies
- 314 views
-
-
நானாட்டான் பிரதேசத்துக்கு 800 வீடுகள் தேவை. January 6, 2019 மன்னார், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள மக்களுக்கு இது வரையில் 400 வீடுகள் வழங்கப்பட்டபோதும், புதிதாக திருமணம் முடித்தவர்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள், முன்னாள் போராளிகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என்று நானாட்டான் பிரதேச மக்களின் வீடில்லாக் குறைகளைத் தீர்ப்பதற்கு இன்னும் 800 வீடுகள் தேவைப்படும் எனப் பிரதேசத்தில் திரட்டிய தகவல்கள் தெரிவிக்கின்றன. நானாட்டான் பிரதேசத்தில் சென்ற வருடம் அதிகமாக வீட்டுத்திட்டங்கள் தொடா்பாகவே மக்கள் பிரதிநிதிகளிட மும், அரச அதிகாரிகளிடமும் மக்கள் முற…
-
- 0 replies
- 349 views
-
-
கட்சிக்கு சந்திரிக்கா பிரச்சினை, விரைவில் தீர்மானம்- இசுர தேவப்பிரிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆலோசகர் பதவி குறித்து தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டியுள்ளதாக மேல் மாகாண சபையின் முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்தார். முழுமையாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில், ராஜித சேனாரத்னவின் ஆசீர்வாதத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் வழிகாட்டலில் ஒரு குழு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் செயற்படுகின்றது. இவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதுபோன்ற நிலைமையில், கட்சியின் ஆலோசகராக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தொடர்ந்தும் வைத்திருப்பது பொருத்தமானது என்று நாம் நினைக்கவில்…
-
- 0 replies
- 338 views
-
-
ஜனநாயக இளைஞர் இணையம் இன்று வெளியிட்டுள்ள ஒரு சுவாரசியமான ஒலிநாடா - இரகசியமாக மகிந்தவுடன் தொடர்புகளை பேணிவந்ததால், கட்சியுடன் முரண்பட்டிருந்த சண். குகவரதனின் வலது கையாள் சஜீவானந்தன் 65 கோடி ரூபா பேரம் பேசுகிறார்
-
- 0 replies
- 260 views
-
-
வன்னியில் வெள்ளத்தினால் 43 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அழிவு அண்மையில் வன்னிப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால், 43 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அழிவடைந்துள்ளன என்று, சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்தமாதம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழையினாலும், குளங்கள் திறந்து விடப்பட்டதாலும், பாரிய வெள்ளம் ஏற்பட்டிருந்தது. இதனால், முல்லைத்தீவு மாவட்டத்தில், மொத்தம் 3932 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகத்தினால் மதிப்பிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில், 10,118 குடும்பங்களைச் சேர்ந்த 10,118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 2,297 ஏக்கர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன. அத்துட…
-
- 0 replies
- 438 views
-
-
முன்கூட்டியே அதிபர் தேர்தல் – தயாராகிறார் மைத்திரி அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, மகிந்த ராஜபக்சவுடன், சிறிலங்கா அதிபர் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அரசியலமைப்புக்கு அமைய, அதிபர் தேர்தலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 9ஆம் நாளுக்குப் பின்னர் எந்த நேரத்திலும் அறிவிக்க முடியும். சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவும் சிறிலங்கா அதிபருக்குக் கிடைக்கும் வாய்ப்பு உள…
-
- 0 replies
- 360 views
-
-
நீங்கள் வெள்ளத்தில் மிதக்க சுமந்திரன் ஹெலியில் திரிகிறார்’: பத்ரமுல்லே சீலரத்ன தேரர் கிளிநொச்சியில் சர்ச்சைப் பேச்சு! By admin - “உங்களின் வாக்குகளினால் நாடாளுமன்றம் சென்ற சுமந்திரன் உலங்கு வானூர்தியிலேயே பயணிக்கிறார். அவர் உத்தியோகபூர்வமற்ற பிரதமராக செயற்படுகிறார். மலையகத்தில் தொண்டமான் போன்றோரின் பிள்ளைகளும், இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகளின் பிள்ளைகளும் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால் இங்குள்ள இந்த பிள்ளைகள் ஏழைகளாகவே வாழ்கின்றனர்“ என தெரிவித்துள்ளார் பத்ரமுல்லே சீலரத்ன தேரர். கிளிநொச்சிக்கு இன்று வெள்ளிக்கிழமை (04) விஜயம் செய்த பத்ரமுல்லே சீலரத்ன தேரர் அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு நிவ…
-
- 3 replies
- 679 views
-