ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
இரணைமடு-யாழ்ப்பாணம் தண்ணீர் அரசியல் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கானது “இரணைமடு யாழ்ப்பாணம் நீர் வழங்கல் திட்டத்தின்” பேசு பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது. இரணைமடு-யாழ்ப்பாண நீர் வழங்கல் திட்டம் தொடர்பான அறிவியல் மற்றும் சமூகவியல் கருத்துகளை ஆய்வுக்குட்படுத்தாமல் வெறுமனே உணர்ச்சிகரமான விடயமாகவும் பிரதேசவாதத்தன்மையான விடயமாகவும் மட்டுமே சில பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இது தொடர்பாகக் கருத்தேற்றப் பரப்புரை செய்துவருவது எமது அறிவார்ந்த மக்களிடத்தில் பலத்த ஐயுறவை ஏற்படுத்தியுள்ளது. இரணைமடு நீர்ப்பாசனக்குளமானது கிளிநொச்சி மாவட்டத்தின் வேளாண் பொருண்மிய நலனுக்காகவே வடிவமைக்கப்பட்ட நிலையில் மக்கள்தொகைப் பெருக்…
-
- 2 replies
- 950 views
-
-
தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமையை ஏற்குமாறு, வட மாகாண முன்னாள் முதலைமைச்சரும் நீதியரசருமான சி.வி விக்னேஷ்வரனுக்கு, கூட்டணியின் செயலாளர் கநாயகம் வீ. ஆனந்த சங்கரி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று (05) விடுக்கப்பட்டுள்ள ஊடக, கூட்டணியின் செயலாளர் நாயகம் வி. ஆனந்த சங்கரி கூறியுள்ளதாவது, சுயநலத்தை உதறி தள்ளிவிட்டு, ஒன்றுபட்டு செயற்பாட வருமாறு, அக்கறைக் கொண்ட தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் நாளாந்தம் வளர்ந்துகொண்டே போகின்றதேயன்றி, தீர்வு எதுவும் ஏற்படுவதாக தெரியவில்லை என்றும் நடைமுறைகளை அவதா…
-
- 3 replies
- 667 views
-
-
(நா.தனுஜா) நாங்கள் எதிர்க் கட்சிப் பதவி விவகாரத்தில் இப்போதே எவரொருவர் தொடர்பிலும், எவ்வித கருத்துக்களையும் கூற விரும்பவில்லை எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை.சேனாதிராஜா, இவ்விடயம் தொடர்பில் கலந்தாலோசித்து தீர்வு காண்பதற்கான கால அவகாசம் உள்ளது எனவும் குறிப்பிட்டார். மேலும் எதிர் கட்சித் தலைவர் பதவி தொடர்பில் எதிர்வரும் 8 ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்பதாக இடம்பெறும் எமது கட்சிக் கூட்டம், கட்சித் தலைவர் கூட்டம் என்பவற்றில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் எடுப்போம் எனவும் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/47562
-
- 4 replies
- 1k views
-
-
தமிழ் தேசத்தின் அங்கீகாரத்திற்காக தொடர்ந்து போராடவேண்டும் – கஜேந்திரன் தமிழ்தேசத்தின் அங்கீகாரத்திற்காக தொடர்ந்து போராட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முண்ணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்தார். வவுனியா, கனராயன்குளத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தாார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழர்களுக்கான அடையாளம் ஒன்றை ஏற்படுத்துவதில் முன்னின்று செயற்பட்டவர்களுள் குமார் பொன்னம்பலமும் ஒருவர். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தமிழ் தேசத்தின் அங்கீகாரத்தை வேண்டி நகர்ந்தவேளையிலே அப்போராட்டத்தின் நியாயப்பாடுகளை சர்வதேசஅரங்கு வரை எடுத்துசென்றத…
-
- 1 reply
- 643 views
-
-
இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க அரசியல்வாதிகள் போல் பேசுவதைத் தவிர்க்க வேண்டுமென, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வட-கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என தொடர்ச்சியாக தாங்கள் கூறிவரும் நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பயந்து ஒளிந்திருந்தவர்கள் இப்போது இராணுவத்தை வெளியேற்ற வேண்டுமென கூறுவதாக, இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க கூறுகிறார். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என வினவியபோதே. அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க, தொடக்கத்தில் வந்த போது, இராணுவம் பற்றிய உள்நாட்டு வெளிநாட்டு மக்கள…
-
- 1 reply
- 678 views
-
-
குளோபல்தமிழ்ச் செய்தியாளர் வெள்ள அனர்த்தம் தொடர்பாக ஆராய்வதற்கு இடம்பெறும் கூட்டத்திற்கு வருமாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்த போதும் அவர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு,நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் பி ஹரிஸன் தெரிவித்துள்ளார். இன்று(05) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் வெள்ளம் அனர்த்த பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக குறிப்பாக எனது அமைச்சின் கீழ…
-
- 1 reply
- 511 views
-
-
கிழக்கு மாகாண ஆளுநர் நியமன விடயத்தில் தமிழ் தலைமைகள் தொடர்ச்சியாக எடுத்த முடிவுகளே காரணம் என, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநராக, ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளதாவது, தான், கிழக்கு அபிவிருத்தி அமைச்சை எடுத்தமைக்குத் துள்ளி குதித்து துரோகிப் பட்டம் சூட்டும் அளவுக்குச் சென்றதாகவும் இன்று, ஊருக்கு ஒரு அமைச்சர் என்ற நிலை, முஸ்லிம் மக்கள் மத்தியில் உருவாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். …
-
- 1 reply
- 592 views
-
-
கைதிகளின் விடுதலை விவகாரம்: நழுவிச் சென்ற அமைச்சர் Editorial / 2019 ஜனவரி 05 சனிக்கிழமை, பி.ப. 02:43 Comments - 0 -சண்முகம் தவசீலன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, நீதி அமைச்சர் தலதா அத்துக்கோளரவிடம் நேரடியாக கோரிக்கை விடுத்தார். எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவின் கோரிக்கை தொடர்பில், எந்தவொரு பதிலையும் வழங்காது அமைச்சர் தலதா அத்துக்கோரள நழுவிச்சென்றுள்ளார். ஒட்டுசுட்டான் பகுதியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு…
-
- 0 replies
- 434 views
-
-
நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்தமைக்காகத் தமிழர்களை ஒருபோதும் பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ளக் கூடாது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் முற்போக்கானவர்களான தயாசிறி ஜயசேகரவும் டிலான் பெரேராவும் தலைமை தாங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அவசரத்தால், தமிழர்கள் நியாயமான அதிகாரப் பகிர்வை இழக்கநேரிடும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலர் தயாசிறி ஜயசேரக தெரிவித்த கருத்துக்கு பதிலளித்து உரையாற்றும்போதே அவர் இதனை குறிப…
-
- 0 replies
- 631 views
-
-
(எம்.மனோசித்ரா) சபாநாயகர் கருஜய சூரியவின் அறிவிப்பிற்கு இணங்க எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்கிழமை பாராளுமன்ற அமர்வின்போது மஹிந்தராஜபக்ஷ எதிர்கட்சி தலைவர் ஆசனத்திலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்கட்சி ஆசனத்திலும் அமர்வார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். மேலும் எதிர்கட்சி காரியாலயம் மற்றும் எதிர்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியவற்றையும் ஒப்படைக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. எனவே 8 ஆம் திகதியிருந்து எதிர்கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் எதிர்கட்சியாக …
-
- 0 replies
- 373 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.தென்மராட்சி பகுதியில் பிரதேச செயலகத்தின் பெயரைப்பயன்படுத்தி வெள்ளநிவாரணத்திற்கு என மோசடியாக பணம் சேகரித்த இளைஞர் ஒருவரை அப்பகுதி இளைஞர்கள் மடக்கி பிடித்து காவல்துஐறயினரிடம் ஒப்படைத்துள்ளனர். சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகஸ்தர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டு எழுதுமட்டுவாள் வடக்கு பகுதியில் வெள்ள நிவாரணம் என பணம் வசூலித்துள்ளார். அது குறித்து சந்தேகம் கொண்ட அப்பகுதி இளைஞர்கள் அது தொடர்பில் கிராம சேவையாளருக்கு அறிவித்…
-
- 0 replies
- 729 views
-
-
முப்பது வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். உதவுவது அனைவரதும் கடமை : January 5, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு,நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் பி.ஹரிஸன் இன்று (05-01-2019) கிளிநொச்சிக்கு சென்றுள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயம் மற்றும் கால்நடைகள், குளங்கள் உள்ளிட்ட தனது அமைச்சின் கீழ் வருகின்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கே அமைச்சர் ஹரிஸன் தனது அமைச்சின் செயலாளர், மற்றும் கமநல் சேவைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம், கமநல நல காப்புறுதி சபையின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயரதிகார்கள் சகிதம் கிளிநொச்சிக்க…
-
- 2 replies
- 442 views
-
-
மகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அறிவிப்பு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை ஏற்றுக் கொண்ட தமது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். நேற்று நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே சபாநாயகர் கரு ஜெயசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில், மனோ கணேசனும், ரவூப் ஹக்கீமும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்கான மகிந்த ராஜஸபக்சவின் தகைமை தொடர்பாக கேள்விகளை எழுப்பியிருந்தனர். எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற வசதிகளைப் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து யாரேனும் விரும்பினால் நீதிமன்றத்தை நாட முடியும் என்றும் சபாநாயகர் இத…
-
- 2 replies
- 1k views
-
-
ராணுவம் பொம்மைகளையும் பொருட்களையுந் தந்து தரித்து நிற்கப் பார்க்கின்றார்கள். - விக்கினேஸ்வரன் January 5, 2019 ராணுவம் பொம்மைகளையும் பொருட்களையுந் தந்து தரித்து நிற்கப் பார்க்கின்றார்கள் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கான கேள்வி பதிலின் போதே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கேள்வி: வடகிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவம் வெளியேற்றப்படவேண்டும் என தொடர்ச்சியாக தாங்கள் கூறிவரும் நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பயந்து ஒளிந்திருந்தவர்கள் இப்போது இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என கூறுவதாக இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க கூறுகிறார். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன? பதில்: மகேஷ் சேனநாயக எனத…
-
- 1 reply
- 370 views
-
-
நாட்டை இரண்டாக்கும் கூட்டமைப்பின் சதியே புதிய அரசியலமைப்பு : January 5, 2019 புதிய அரசியலமைப்பின் மூலம் நாட்டை இரண்டாக்கும் செயற்பாடுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டு வருவதாகவும் அதற்கு தமது தரப்பினர் இடமளிக்கப் போவதில்லை எனவும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். நாட்டை இரண்டாக்கும் கூட்டமைப்பின் நோக்கத்தை நிறைவேற்ற இடமளிக்கப் போவதில்லை எனவும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியாக இருந்துகொண்டு தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் கூட்டமைப்பு செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில், பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்…
-
- 0 replies
- 613 views
-
-
சரத்பொன்சேகா – பாலித ஒருவரை ஒருவர் தாக்குவதனை நிறுத்துமாறு உத்தரவு January 5, 2019 பாராளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா மற்றும் பாலித தெரபெரும ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி ஊடகங்கள் முன் பிரசாரம் செய்வதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரசிங்க உத்தரவிட்டுள்ளார். மிக நெருங்கிய நண்பர்களாக இருந்த சரத் பொன்சேகா மற்றும் பாலித தெவரபெரும ஆகியோருக்கு இடையில் அண்மைக்காலமாக கருத்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. காகம் தலையில் எச்சமிட்டது என்பதற்காக காகங்களை சுட்டுக் கொல்லச் சொன்ன பொன்சேகா, அப்பத்தை ஒழுங்காக சுடவில்லையென சிப்பாய்களை முழந்தாளிடச் செய்த பொன்சேகா, வெள்ளைக்கொடி விவகாரத்தில் காட்டிக்கொடுத்த பொன்சேகா தன்னை இழிவாக பேசுவதா என பாலித தெவ…
-
- 0 replies
- 319 views
-
-
கிழக்கு ஆளுநர் நியமனமானது ஜனாதிபதியின் பழி தீர்க்கும் நடவடிக்கை : January 5, 2019 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிழக்கு ஆளுநராக ஹிஸ்புல்லாவை நியமித்திருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான பழி தீர்க்கும் நடவடிக்கையே என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப. அரியனேந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில், தற்போது ஆளுநர்களை நியமிக்க வேண்டிய தேவை இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், ஜனாதிபதி தனது தேவைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் சிறுபான்மையினரை சேர்ந்த எவரும் ஆளுநராக நியமிக்கப்படவில்லை எனவும் அப்படி ஒரு எண்ணம் ஜனாதிப…
-
- 0 replies
- 365 views
-
-
யாழில் ஆறு பாடசாலைகளுக்கெதிராக வழக்கு : January 5, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நுளம்பு பெருகும் சூழல் காணப்பட்டதாக யாழ்.நகர் பகுதிகளில் உள்ள ஆறு பாடசாலைகளுக்கு எதிராக சுகாதார பிரிவினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். யாழ்.பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் உள்ள பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றநிலையில் விசேட சோதனை நடவடிக்கைகளில் நுளம்புகள் பரவும் இடங்களை பேணியதாக தெரிவித்தே ஆறு பாடசாலைகளுக்கும் எதிராக யாழ்.நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேவேளை நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட யாழ்.பல்கலைகழகம் மற்றும் பல்கலைகழக மாணவர்கள் விடுதி வளாகங்களிலும் நுளம்பு குடம்பிகள் அதிகளவி…
-
- 0 replies
- 373 views
-
-
கலாநிதி தேவநேசன் நேசையா, தேசமான்ய விருதை ஜனாதிபதியிடம் கையளித்தார்… January 4, 2019 ஜனநாயகத்தை மீறியமைக்காக கலாநிதி தேவநேசன் நேசையா தனக்கு வழங்கப்பட்ட தேசமான்ய விருதை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக நேற்று கையளித்துள்ளார். ஜனநாயக கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரணான வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருவதாக கவலை தெரிவித்திருக்கும் ஓய்வுபெற்ற சிவில் சேவை அதிகாரியான கலாநிதி தேவநேசன் நேசையா கடந்த வருடம் தனக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட தேசமான்ய விருதுக்கான பதக்கத்தையும் சான்றிதழையும் திருப்பியனுப்பப்போவதாக அறிவித்திருக்கிறார். தற்போது வெளிநாட்டில் இருக்கும் கலாநிதி நேசையா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பகிரங்கக் கடிதமொன்றை எழுதிய…
-
- 5 replies
- 1.1k views
-
-
5 புதிய ஆளுனர்கள் – வடக்கிற்கு இன்னமும் இல்லை லங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐந்து மாகாணங்களுக்கு நேற்று மாலை புதிய ஆளுனர்களை நியமித்துள்ளார். மேல் மாகாண ஆளுனராக அசாத் சாலி நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுனராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மைத்ரி குணரத்ன, மத்திய மாகாண ஆளுனராகவும், சரத் எக்கநாயக்க, வட மத்திய மாகாண ஆளுனராகவும், பேசல ஜெயரத்ன, வடமேல் மாகாண ஆளுனராகவும் நேற்றுமாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றனர். வடக்கு, சப்ரகமுவ, ஊவா, மற்றும் தென் மாகாணங்களுக்கான ஆளுனர்கள் இன்னமும் நியமிக்கப்படவில்லை. சிறிலங்கா அதிபரின் உத்தரவின் பேரில், அனைத்து மாகாணங்க…
-
- 0 replies
- 715 views
-
-
மிகின் லங்கா காரில் வலம் வந்த மகிந்தவின் சோதிடர் மகிந்த ராஜபக்ச தனது தனிப்பட்ட சோதிடரின் பாவனைக்காக கார் ஒன்றை வழங்கியதன் மூலம், மிகின் லங்கா விமான நிறுவனத்துக்கு 8.2 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சிறிலங்கன் எயர்லைன்ஸ் மற்றும் மிகின் லங்கா விமான நிறுவனங்களின் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அதிபர் ஆணைக்குழுவிடம், மகிந்தவின் தனிப்பட்ட சோதிடரான சுமணதாச அபேகுணவர்த்தன, இதுதொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளார். “2017ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரில், எனக்கு கார் ஒன்று வழங்கப்பட்டது. மகிந்த ராஜபக்சவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி, தொலை…
-
- 0 replies
- 425 views
-
-
நாமல் குமாரவுக்கு வாய்ப்பூட்டு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்கு எந்த கருத்தையும் வெளியிடக் கூடாது என்று நாமல் குமாரவுக்கு நீதிவான் தடை விதித்துள்ளார். ஊழல் எதிர்ப்புச் செயலணியின் பணிப்பாளர் என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் நாமல் குமார, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டவர்களை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல்களை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் என்று இந்தியர் ஒருவரும், பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலி…
-
- 0 replies
- 322 views
-
-
மைத்திரி, ரணிலுக்கு சீன அதிபரின் தாமதமான வாழ்த்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த, சீனத் தூதுவர் செங் ஷியுவான், சீன அதிபரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை அவரிடம் நேரில் கையளித்துள்ளார். நேற்று முன்தினம், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த மாத இறுதியில் மகிந்த ராஜபக்சவுக்கு சீன அதிபரின் தனிப்பட்ட வாழ்த்துச் செய்தியை, சீனத் தூதுவர் கையளித்திருந்தார். கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு சீன அதிபரின் வாழ்த்துச் செய்தி கையளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சில நாட்களுக்கு முன்னதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜ…
-
- 0 replies
- 327 views
-
-
சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஒரே வேட்பாளர் – மகிந்த அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்லவில் நேற்று, பொதுஜன முன்னணி தலைமையகத்தில், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “நாங்கள் இரண்டு வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம். சரியான நேரத்தில் எமது வேட்பாளரை அறிவிப்போம். இப்போது நாங்கள் ஒரு பரந்தளவிலான கூட்டணி ஒன்றை உருவாக்க முயற்சிக்கிறோம். சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில், அதிபர் மைத்திரிபால சிறிசேன கட்சியை வலுப்படுத்தி வருகிறார்.…
-
- 0 replies
- 707 views
-
-
ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்கிய டிஐஜி உடுகம்பொல மரணம் சிறப்புச் செய்தியாளர்Jan 02, 2019 | 0:56 by in செய்திகள் வடக்கிலும் தெற்கிலும், ஏராளமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய, சிறிலங்காவின் முன்னாள் மூத்த பிரதி காவல்துறை அதிபர் பிறேமதாச உடுகம்பொல நேற்று மரணமானார். யாழ்ப்பாணத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த போது, வடக்கில் விடுதலைப் புலிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த உடுகம்பொல, 1989இல், தெற்கில் ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்குவதில் முக்கிய பங்காற்றினார். உடுகம்பொலவின் கீழ் உருவாக்கப்பட்ட சிறப்பு காவல்துறைக் குழு ஜேவிபி உறுப்பினர்களை வேட்டையாடுவதிலும், கிளர்ச்சியை ஒடுக்குவதிலும் தீவிர பங்காற்றியிருந்தது…
-
- 18 replies
- 3.4k views
- 1 follower
-