ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
வெள்ள நீர் வீடுகளுக்குள் சென்றிருந்தால், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை பாதிக்கப்பட்டவர்களாக அனைவருக்கும் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு இன்று(03) மாவட்டச் செயலகத்தில் சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அரச ஊழியர்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கும் இக் கொடுப்பனவை வழங்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் விடயத்திலும் பயனாளிகளை தெரிவு செய்வதிலும் குழப்பங்கள் , மற்றும் நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டிருந்த நிலையில் அதற்கு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க…
-
- 0 replies
- 177 views
-
-
January 3, 2019 தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வாக இருக்குமென்று கருதுகின்ற தீர்வை நாங்கள் ஆதரிப்போம். அவ்வாறு இல்லாவிடின் அதனை நாங்கள் எதிர்ப்போம் என தமிழ் தேசிய கூட்மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “மக்கள் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வே எமக்கு வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றோம். ஏனென்றால் இருக்கின்ற இந்த நிலையில் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருப்போம் பேசிக் கொண்டிருப்போம் என்று கூறி கடந்த எழுபது வருடமாக நாங்கள் பேசிக் கொண்டிருந்ததைப் போன்று இனியும் நாங்கள் பேசிக் கொண்டிர…
-
- 0 replies
- 207 views
-
-
சபாநாயகர் இன்று வடக்கிற்கு விஜயம் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று வடக்கிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். வடக்கில் சீரற்றகாலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைய நேரில்கண்டறிந்து, உதவி செய்வதற்காக சபாநாயகர் கருஜயசூரிய இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது சபாநாயகருடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் வடக்கிற்கு செல்லவுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் பற்றியும் விசேட கூட்டம் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தல் இடம்பெறவுள்ளது. http://www.virakesari.lk/article/47413
-
- 2 replies
- 496 views
-
-
நீர்கொழும்பு – கொப்பர சந்தியிலுள்ள வீடொன்றில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நாயொன்றை எரியூட்டி கொன்றமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 31 ஆம் திகதி இரவு நாய் அடைக்கப்பட்டிருந்த கூண்டிற்கு மண்ணெய் ஊற்றி எரியூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எரிகாயங்களுக்கு உள்ளான குறித்த நாய் நேற்றிரவு உயிரிழந்துள்ளது. லெப்ரடோ (labrador) இன நாயொன்றே இவ்வாறு தீ வைத்துக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை, நாய் அடைக்கப்பட்டிருந்த இடத்தில் கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள்…
-
- 1 reply
- 703 views
-
-
கோத்தா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக காணப்படுகின்ற போதிலும் அவர் தேர்தலில் போட்டியிடமாட்டார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது. தனது பிரஜாவுரிமையை இரத்துச்செய்யுமாறு கோரி அமெரிக்க அதிகாரிகளிடம் விண்ணப்பித்துள்ளதன் காரணமாக கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடமாட்டார் என ராஜபக்ச குடும்ப தகவல்கள் தெரிவித்தன என கொழும்பு டெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது நான் அறிந்தவரையில் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எதுவும் கோத்தபாய ராஜபக்சவிற்கு இல்லை என ஒருவர் தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ள கொழும்பு டெலிகிராவ் தான் தேர்தலில் போட்டியிடுவேன் என கோத்தபாய பலரை நம்பவை…
-
- 0 replies
- 870 views
-
-
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெப்ரி வான் ஓர்டன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை கொழும்பில் இன்று சந்தித்தார். சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார். https://newuthayan.com/story/16/ஐரோப்பிய-எம்-பியுடன்-கூட்டமைப்பின்-தலைவர்-சந்திப்பு.html
-
- 5 replies
- 1.4k views
-
-
மாகாண சபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படும் சாத்தியம் - நாடாளுமன்றத் தேர்தலை நடத்த மைத்திரி - ரணில் தரப்பு இணக்கம் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட மலையகத் தமிழ் முஸ்லிம் கட்சிகளும் சம்மதம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம் வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் உள்ளிட்ட ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக, உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. நாடாளுமன்றத் தேர்தலை இந்த ஆண்டின் முற்பகுதியில் நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய பிரதான இரு அரசியல் கட்சிகளும் விரும்பியுள்ளதாகவும் அதற்கேற்ற முறையில் இலங்கை நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை சம…
-
- 0 replies
- 364 views
-
-
கடன் பொறிக்குள் இலங்கை – மத்திய வங்கி ஆளுநர் தகவல்! இந்த வருடத்தில் 5.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை செலுத்த வேண்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநரான பேராசிரியர், இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் நேர்ந்த பொருளாதார வீழ்ச்சி தொடர்பில் இன்னும் கணக்கீடுகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், இந்த குழப்பத்தினால் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிந்தனை மற்றும் நம்பிக்கை ஊடாக கணக்கிட முடியாதுள்ளது. அத்தோடு, வரவு – செலவுத் திட்…
-
- 0 replies
- 460 views
-
-
அரச வங்கிகள் மீண்டும் கிரியெல்லவிடம் – சிறிலங்கா அதிபர் இணக்கம் அரசாங்க வங்கிகளை பொது நிறுவனங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். அமைச்சர்களின் பொறுப்புகள் மற்றும் விடயங்கள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட அரசிதழில், அரசாங்க வங்கிகள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது. முன்னர் அரசாங்க வங்கிகளை தன் பொறுப்பில் வைத்திருந்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனால் அதிருப்தி அடைந்திருந்தார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பழிவாங்கும் வகையில் செயற்படுகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். …
-
- 0 replies
- 218 views
-
-
மார்ச் 05ஆம் நாள் வரவுசெலவுத் திட்டம் சிறிலங்கா அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மார்ச் 05ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீர, இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் மார்ச் 05ஆம் நாள் முன்வைக்கவுள்ளார். அதற்கு முன்னதாக, வரும் பெப்ரவரி 05ஆம் நாள், நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நொவம்பர் மாதம் வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில், ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்றதால், 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது…
-
- 0 replies
- 307 views
-
-
ஊடகவியலாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள யாழ்.மாநகர சபை யாழ்.மாநகரசபையின் மாதாந்த மற்றும் விசேட அமர்வுகளில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு முதல்வரினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. யாழ். மாநகரசபையின் மாதந்த மற்றும் விசேட அமர்வுகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதாயின் குறித்த ஒவ்வொரு அமர்வின்போதும் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டிடம் எழுத்துமூல அனுமதி பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ். மாநகரசபை வளாகத்தில் மாநகரச் செயலாளரின் ஒப்பத்துடன் அறிவுறுத்தல் ஒட்டப்பட்டுள்ளது. குறித்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யாழ்.மாநகரசபையின் மாதாந்த, விசேட கூட்ட அமர்வுகளினை பார்வையிடுவதற்கு வரு…
-
- 0 replies
- 308 views
-
-
புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற விடமாட்டோம் – மகிந்த அணி கொழும்புச் செய்தியாளர்Jan 02, 2019 | 0:58 by in செய்திகள் நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டு புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று மகிந்த ராஜபக்ச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். “ஜேவிபி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன், புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒருபோதும் இடமளிக்காது. புதிய அரசியலமைப்பு தேவையா, அல்லது அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அரசியலமைப்பு மாற்றத்துக்கு, மக்களின் ஆணையை அரசாங்கம் பெற வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்…
-
- 2 replies
- 625 views
-
-
விசாரணையை திசை திருப்ப முயன்றவருக்கு தடுப்புக்காவல் கனகராசா சரவணன் / 2019 ஜனவரி 02 புதன்கிழமை, பி.ப. 07:09 Comments - 0 மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸார் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இடம்பெற்றுவரும் விசாரணையைத் திசை திருப்ப முயன்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, 90 நாள்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரொன, பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அவ்வதிகாரி தெரிவித்தார். வவுணதீவு, வலையிறவு பாலத்துக்கு அருகில் பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில், கடந்த வருடம் நவம்பர் மாதம் 19ஆம் திகதி நள்ளிரவு கடமையில் இருந்த பொலிஸார் இருவர், இனந்தெரியாதோரால் துப்பாக…
-
- 0 replies
- 698 views
-
-
விடுதலைப் புலிகளை அழித்த எமக்கு ரணிலை ஆட்சியிலிருந்து வீட்டிற்கு அனுப்புவது சவாலான விடயம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாங்கள் தோல்வியடையவில்லை. அதேபோல் புறமுதுகு காட்டி ஓடவும் இல்லை. ஆனால் எங்களை பார்த்து அரசியல் சூழ்ச்சிகாரர்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவிக்கின்றனர். நாங்கள் அரசியல் சூழ்ச்சி எதனையும் செய்யவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியினரே நீதிமன்றங்களை பயன்படுத்தி அரசியல் சூழ்ச்சியைத் செய்து எம்மை வெளியேற்றினார்கள். நாங்கள் நீதிமன்றில் தீர்ப்பிற்கு தலைவணங்குகின்றோம். நாட்டு மக்களின் நலன் கருதியே…
-
- 5 replies
- 884 views
-
-
90 பேர் கொண்ட வாள்வெட்டுக் குழுவை -விரட்டியடித்த கொக்குவில் இளைஞர்கள்!! பதிவேற்றிய காலம்: Jan 1, 2019 வன்முறைகளில் ஈடுபடும் நோக்குடன் மோட்டார் சைக்கிள்களில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதிக்கு வருகை தந்த இளைஞர்கள் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் சற்றுமுன்னர் கொக்குவில் காந்திஜி சனசமூக நிலையம் முன்பாக நடந்துள்ளது. சுமார் 30 மோட்டார் சைக்கிள்களில் 90 பேர் கொண்ட குழு, வாள்களுடன் வருகை தந்ததை அவதானித்த சிலர் ஒன்றிணைந்து அவர்களை மடக்கிப் பிடிக்க முற்பட்டனர். சுதாகரித்துக் கொண்ட குழுவினர் அங்கும் இங்கும் சிறதி ஓடினர். அவர்கள் 4 பேர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். 7 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டன. குறித்த நபர்கள் பொலிஸ் நிலையத்துக்க…
-
- 6 replies
- 1.1k views
-
-
சீரற்ற காலநிலையின் காரணமாக பல இன்னல்களுக்கு முகங்கொடுத்த வடக்கு மாகாண மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்கியதுடன், அவர்களின் நலன்புரி தேவைகளுக்காக தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முப்படையினர், பொலிஸார், மாகாண ஆளுநர்கள், அரச அதிகாரிகள், தன்னார்வ நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் விடுத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் இந்த விசேட நிவாரண வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டது. வெள்ளத்…
-
- 0 replies
- 332 views
-
-
“யாழ்ப்பாண மண்ணில் எனது தாய்மொழி தமிழில் சேவை செய்யக் கிடைத்ததையிட்டு பெருமடைகின்றேன். இந்தப் பெரும் பாக்கியத்தை வழங்கிய இறைவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன” என யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் தெரிவித்தார். “யாழ்ப்பாணம் மண்ணில் பணிபுரிவதற்கு நான் கொடுத்துவைத்தவனாக பெருமைப்படுகின்றேன். எனது இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி இந்த மக்களுக்கு சேவையாற்றுவேன் உறுதியளிக்கின்றேன்” என்றும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவானாகப் பதவியேற்ற பின்னர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தலைமையில் நடைபெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கான புத்தாண்டு உ…
-
- 0 replies
- 484 views
-
-
January 2, 2019 மாவனல்லைப் பகுதியில் புத்தர் சிலைகள் சிதைக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 07 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 16ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 07 சந்தேகநபர்களும் கடந்த 26ம் திகதி கைது செய்யப்பட்டதுடன், மேலும் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. மாவனல்லை, தெல்கஹகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பி ஆகிய இருவரே இவ்வாறு காவற்துறையினரால் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களாவர். …
-
- 1 reply
- 1.1k views
-
-
பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகம் தேசிய மரபுரிமையாகிறது – பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகம் தேசிய மரபுரிமையாக எதிர்வரும் 5ஆம் அறிவிக்கப்படவுள்ளதால், அன்றைய தினம் திகதி நாட்டிலுள்ள சகல பௌத்த நிலையங்களிலும் அரச நிறுவனங்களிலும் பௌத்த கொடியை ஏற்றி கௌரவத்தை செலுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (2.1.19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அவர் 2300 வருடங்களாக பௌத்த பிக்குகள் உள்ளடங்களாக இலங்கையின் பௌத்த மக்களால் போற்றி பாதுகாக்கப்படும் பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகத்தை இலங்கையின் தேசிய மரபுரிமை…
-
- 0 replies
- 576 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. யாழ்.கொழும்புத்துறை பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இருந்து சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்தும் நோக்குடன் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒரு தொகை வெடிபொருட்களை யாழ். காவற்துறை விசேட அதிரடி படையினர் மீட்டுள்ளனர். கொழும்புத்துறை பகுதியில் உள்ள சிறுவர் நீதிமன்றுக்கு அருகாமையில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் வெடி பொருட்கள் காணப்படுவதாக அதிரடி படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. குறித்த தகவலின் பிரகாரம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு குறித்த பகுதிக்கு சென்ற அதிரடி படையினர் அங்கிருந்து 01 கி…
-
- 0 replies
- 341 views
-
-
மகிந்தவின் வழிகாட்டலிலேயே பொதுஜன முன்னணி செயற்படும் – பசில் கி.தவசீலன்Jan 02, 2019 | 0:51 by in செய்திகள் மகிந்த ராஜபக்சவின் வழிகாட்டலின் கீழேயே, சிறிலங்கா பொதுஜன முன்னணி செயற்படும் என்று அந்தக் கட்சியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்தார். பத்தரமுல்லவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், “மகிந்த ராஜபக்சவின் பின்னணியுடனேயே, சிறிலங்கா பொதுஜன முன்னணி உருவாக்கப்பட்டது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவதையே சிறிலங்கா பொதுஜன முன்னணி எதிர்பார்த்திருக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, பொதுஜன முன்னணியில் கடந்த நொவம்பர் மாதம் இணைந்து கொண்டதாக அறிவித்த மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றக்…
-
- 0 replies
- 309 views
-
-
ஆபத்தான வாக்குறுதியை கூட்டமைப்புக்கு கொடுக்கவில்லை – அர்ஜூன ரணதுங்க கொழும்புச் செய்தியாளர்Jan 02, 2019 | 0:50 by in செய்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்காக, அரசாங்கம், நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்காவின் போக்குவரத்து மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். “பிரிவினைவாதம் அல்லது இனப் பிளவுகளைத் தூண்டிவிடும் செயல்களில் அரசாங்கம் ஈடுபட்டால், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படமாட்டேன். தனிநாட்டை உருவாக்கிக் கொடுப்பதாக கூட்டமைப்புக்கு அரசாங்கம் வாக்குறுதி கொடுத்திருப்பதாக, பரப்பப்படும் வதந்திகளில் உண்மையில்லை. ஆனால் நாட்டைப் பிளவுபடுத்த, கூட்டமைப்புக்…
-
- 0 replies
- 287 views
-
-
மலையக மக்கள் தொடர்பில் குரல்கொடுக்கத் தயார் - விக்கினேஸ்வரன் ஒரு வித்தியாசமான கேள்வி ஒன்று என்மீது தொடுக்கப்பட்டுள்ளது. அதனை இவ் வருட ஆரம்பத்தில் ஆராய்வோம் என வடமாகாணத்தின் முன்னாள் முதல்வர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு, கேள்வி:- நீங்கள் வடகிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் நலன் பற்றி மட்டும் பேசி வருகின்றீர்கள். மலையகத் தமிழர்களும் எங்களைச் சேர்ந்தவர்களே என்று மேடைகளில் பேசுகின்றீர்கள். ஆனால் அவர்கள் நலம் பற்றி எதுவுமே கூறுவதில்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரையில் எந்த வித மேலதிகக் கொடுப்பனவும் கொடுக்கப்படவில்லை. அதுபற்றி உங்கள் கருத்தைத் தெரி…
-
- 0 replies
- 436 views
-
-
வடக்கில் விக்கியும் தெற்கில் மஹிந்தவும் அடிப்படைவாதத்தை உருவாக்குகின்றனர் - அநுர வடக்கு மற்றும் தெற்கில் அடிப்படைவாத குழுக்கள் செயற்பட ஆரம்பித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த அடிப்படைவாத குழுக்களினால் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்ககூடாது எனவும் கோரிக்கை விடுத்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், வடக்கில் சி.வி. விக்னேஸ்வரனும் தெற்கில் மஹிந்த ராஜபக்ஷவும் அடிப்படைவாதத்தை தோற்றுவித்து வருகின்றனர். மேலும் புதிய அரசியல் அமைப்பை இறுதி செய்தவற்கு நீண்ட செய…
-
- 0 replies
- 407 views
-
-
கிளிநொச்சியில் வெள்ளம் அனர்த்தம் காரணமாக 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதம் January 2, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் அனர்த்தம் காரணமாக 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துள்ளன என மாவட்டச் செலயக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச சபைகள், மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள வீதிகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன. இவற்றுள் பல வீதிகள் மிகவும் மோசமாகவும், ஏனையவை பகுதியளவிலும் சேதமுற்றுள்ளன. இவ்வாறு சேதமுற்றுள்ள வீதிகளை விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் விரைந்து புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பெரும் இடையூறாக காணப்படும் …
-
- 0 replies
- 318 views
-