ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143279 topics in this forum
-
December 20, 2018 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் மஹிந்த ராஜபக்ஸ, பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையைப் பெற்றுள்ளமையினால், அவர் பாராளுமன்ற உறுப்பினர் அல்லவென வாதப் பிரதிவாதங்கள் வலுப்பெற்றுள்ளன. இது தொடர்பில…
-
- 0 replies
- 521 views
-
-
யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வல்லைவெளி முனியப்பர் வீதியில் இவற்றைக் காணக் கூடியதாகவுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் புலனாய்வுப் பிரிவு இதற்கு உரிமை கோரியுள்ளது. போர் மௌனித்ததே தவிர,போராட்டம் சாகவில்லை எனவும், தழிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைச் சுட்டிக்காட்டியும் சுவரொட்டியில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. https://newuthayan.com/story/16/புலிச்சின்னத்துடன்-சுவரொட்டி.html
-
- 4 replies
- 904 views
-
-
December 20, 2018 மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் திடீர் நோய்வாய்ப்பட்டதால் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை இன்று அவர் வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும், இதன் பின்னர் அவரை பொரல்லையில் உள்ள வைத்திய பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 340 views
-
-
‘சிங்கள பௌத்தர் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றவர் கோட்டாபய’ Editorial / 2018 டிசெம்பர் 20 வியாழக்கிழமை, மு.ப. 11:55 Comments - 0 கோட்டாபய இந்நாட்டிலுள்ள சிங்கள பௌத்தர் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றவர். அவர் கடந்த காலங்களில் இலங்கையிலுள்ள மத்திய வகுப்பினர் மற்றும் தொழில் வல்லுனர்களின் விருப்பங்களை வெற்றிக்கொண்டுள்ளார். அது தொடர்ந்து இருக்க வேண்டும். எமது புதிய கூட்டமைப்புக்கு அது மிகப் பெரிய இலாபம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றிரவு சிங்கள செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அண்மையில் ஏற்பட்ட தடங்கள்களை நீக்கி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தற்போது தெளிவான பாதையை உருவாக்கிய…
-
- 2 replies
- 671 views
-
-
யாழில் சகல பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறைகள் இரத்து Editorial / 2018 டிசெம்பர் 20 வியாழக்கிழமை, மு.ப. 11:15 யாழ் மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறையும் நேற்று மாலையிலிருந்து இரத்துச் செய்ய வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. யாழ் மாவட்டத்திலுள்ள 9 பொலிஸ் பிரிவுகளின் கீழ் கடந்த சில வாரங்களாக யாழில் இடம்பெற்ற குற்றங்களை தடுப்பது மிகவும் குறைந்துள்ளதுடன், பொலிஸாரின் பலவீனமான நடவடிக்கைகளும் குற்றங்களைத் தடுக்க முடியாமைக்கான காரணம் எனத் தெரிவித்து, இவ்வாறு பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த விடும…
-
- 1 reply
- 559 views
-
-
அமைச்சரவை விபரங்கள் இதோ ! அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிலையில், ஜனாதிபதி குறித்த அமைச்சுப்புபொறுப்புக்களை ஒவ்வொருவராக தனது உத்தியோகபூர்வ செயலகத்திற்கு அழைத்து பதவிப்பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொருளாதார, மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சராகவும், ஜோன் அமரதுங்க சுற்றுலாத்துறை, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சராகவும், காமினி ஜயவிக்ரம பெரேரா புத்தசாசனம் வடமேல் விவகார அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். …
-
- 0 replies
- 987 views
-
-
வடக்கு அபிவிருத்தி அமைச்சு பிரதமர் ரணில் வசம் Share பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரம் உட்பட பல அமைச்சின் அமைச்சராக சற்று முன்னர் நியமிக்கப்பட்டார். இதனடிப்படையில் தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரம், மீள் குடியேற்றம் மற்றும் மறுசீரமைப்பு, வடக்கு அபிவிருத்தி, தொழிற் பயிற்சி மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/46673?fbclid=IwAR2J9Bwl3IfGxwyOP9nLokS2YzhYlxq0xgFn3dYfIT_3yHwEm2vbJTGbskw
-
- 0 replies
- 548 views
-
-
இந்திய அரசினால் அண்மையில் வழங்கப்பட்ட புதிய தொடருந்து பரீட்சார்த்த வெள்ளோட்ட பயணமாக இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. கொழும்பில் இருந்தும் பயணத்தை ஆரம்பித்து இன்று மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் முதன்மை தொடருந்து நிலையத்தை வந்தடைந்தது. சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரை யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்தில் புதிய தொடருந்து தரித்து நின்கும். இதனை அதிகளவானோர் பார்வையிட்டு வருகின்றனர். https://newuthayan.com/story/17/யாழில்-புதிய-தொடருந்து.html
-
- 5 replies
- 939 views
-
-
இடைக்கால கணக்கறிக்கை நாளை சமர்ப்பிப்பு எதிர்வரும் 3 மாத காலப்பகுதிக்கான அரசாங்கத்தின் செலவுகளை சமாளிப்பதற்கென இடைக்கால கணக்கு அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதார நிலைமை மற்றும் தற்பொழுது இலங்கையிலுள்ள பொருளாதார சூழ்நிலை தொடர்பில் கவனத்திற்கொண்டு வழங்கக்கூடிய ஆகக்கூடிய நிவாரணத்தைப் பொதுமக்களுக்குப் பெற்றுக்கொடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். வழங்கக்கூடிய பொதுமக்களுக்கான ஆகக்கூடிய நிவாரணத்திற்கான விடயங்களும் இடைக்கால கணக்கு அறிக்கையில் உள்வாங்குமாறு பிரதமர், இலங்கை மத்திய வங்கிக்கு அறிவித்துள்ளார். அடுத்த வருடத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய வரவு செலவுத் த…
-
- 0 replies
- 397 views
-
-
உறவினர்களால் கைவிடப்பட்டு, கதறி அழுத முதியவர் கைதடியில் இணைக்கப்பட்டார்… December 20, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… உறவினர்கள் கைவிட்டு விட்டார்கள் என கைதடி முதியோர் இல்லம் முன்பாக நின்று கதறியழுத முதியவரை நேற்றைய தினம் முதியோர் இல்லத்தினர் இல்லத்தில் சேர்த்து உள்ளனர். வட்டுக்கோட்டையை சேர்ந்த 85 வயதுடைய சபாபதிப்பிள்ளை இராஜகோபால் என்பவரே அவ்வாறு முதியோர் இல்லத்தில் இணைந்துள்ளார். கடந்த ஏழு வருட காலமாக உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில் தனிமையில் வசித்து வந்ததாகவும் , தற்போது உடல் நல குறைவு ஏற்பட்டு உள்ளமையால் தொடர்ந்து தனிமையில் வசிக்க முடியாத காரணத்தால் இங்கு வந்ததாக முதியவர் தெரிவித்து உள்ளார். அதேவேளை முதியவரின் எதிர்காலத்தை கருத்த…
-
- 0 replies
- 428 views
-
-
மைத்திரியின் வேண்டத்தகாதோர் பட்டியலில் சிக்கித் தவிப்போர்… December 20, 2018 ஐக்கிய தேசிய முன்னணியினால், 35 பெயர்கள் அடங்கிய பெயர் பட்டியல், ஜனாதிபதியிடம் நேற்றிரவு கையளிக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், சமரச பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது இருந்த போதிலும் பெயர் பட்டியலிலிருந்து அறுவரின் பெயர்களை ஜனாதிபதி நீக்கியுள்ளார். அதில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பாலித்த ரங்கே பண்டார ஆகியோரின் பெயர்களை ஜனாதிபதி நீக்கவிட்டார். அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஐக்கிய தேசிய முன்னணிக்கு …
-
- 0 replies
- 361 views
-
-
தொடர்ந்து நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவேன் என்றும் தனது ஆட்சி காலம் முழுவதும் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவின் இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். இதேவேளை மகிந்த ராஜபக்சவுடன் முரண்பாடுகள் ஏதும் இல்லை என்றும் பரந்துபட்ட கூட்டணியில் செயற்படப்போவதாகவும் இதன்போது ஜனாதிபதி கூறியுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட முடியாது என்ற தனிப்பட்ட கருத்தை தான் இப்போதும் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் ஊழல் செயற்பாடுகளுக்கு எதிரான தமது போராட்டம் தொடரும் என்றும் இந்…
-
- 2 replies
- 523 views
-
-
பாரளுமன்றில் இப்போது இரண்டு எதிர்க்கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள். தன்னை நீக்காது, இன்னொருவரை நியமித்தது சபாநாயகரின் தவறான நடவடிக்கை. புதிதாக நியமனமான மகிந்த ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினர் அல்ல. பாரளுமன்ற அங்கத்தவராக இல்லாத ஒருவரை எதிர்க்கட்சி தலைவராக நியமனம் செய்தது அரசியல் அமைப்புக்கு முரணானது. மகிந்தவும் மேலும் 45 பேரும், SLFP யில் இருந்து விலகி, SLPP என்னும் கட்சியில் சேர்ந்த படியால், அவர்கள் தமது பாரளுமன்ற உறுப்புரிமையினை இழந்து விட்டனர். சபாநாயகரே , உங்கள் முடிவு, பாராளுமன்ற சம்பிரதாயங்களை கணக்கில் எடுக்காது, அவசரமாக எடுக்கப் பட்டதாக தெரிவதுடன், அது அரசியல் அமைப்பினை மீறுவதாகவும் உள்ளது என்று சம்பந்தர் பாராளுமன்றில் அறிவித்தார். பா…
-
- 10 replies
- 1.7k views
- 1 follower
-
-
புதிய அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்விற்கு ஜனாதிபதி வருகை புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாண நிகழ்விற்கு தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் அமைச்சரவை பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ள நிலையில், ஜனாதிபதி செயலகத்திற்கு உறுப்பினர்கள் வருகைதந்துள்ளனர். தற்போது பதவிப்பிரமாண நிகழ்விற்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதாக அங்கிருக்கும் எமது ஆதவன் செய்தியாளர் தெரிவித்தார். பிரதமர் ரணில் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை (3ஆம் இணைப்பு) புதிய அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்விற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளார். எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் ஜனாதிபதி ச…
-
- 0 replies
- 329 views
-
-
கனடாவுக்கு ஏத்துறோம் - ஏஜெண்சி முகவர் கைது. கனடாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 52 பேரிடம் வித்தியாசமாக சுத்தியவர் இன்று CID பொலிஸாரினால் கைதானார். 46 வயதான இந்த பெண்மணி, ஒவொருவரிடமும், அவர்களது பெயர்களிலேயே வங்கி கணக்கு திறந்து, பாஸ்புக், ATM கார்ட், PIN மட்டும் தன்னிடம் தந்து, பணத்தினை வங்கியில் இட்டு, தனக்கு அறிவிக்குமாறு சொல்லி இருந்தார். 50 பேர்களின் முறைப்பாடு கிடைத்ததால், அவரை கைது செய்ததாகவும், 26 இலட்ச்சம் பெறுமதியில் 350கிராம் தங்கமும் , 72 பாஸ்போர்ட்டும், 50 பாஸ்புக்குகள், 50 ATM கார்ட்கள், 50,000 ரூபா பணமும், பொலிஸாரினால் கையகப்படுத்தப் பட்டுள்ளன. நவகமுவா என்னும் ஊரில், திங்கள் இரவு இவர் கைதானார். அது சரி மிச்ச 2 பேர் எங்க.... கனடா…
-
- 9 replies
- 1.8k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரத்துடன் யாழில் லான்ட்மாஸ்ரர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. யாழ்.இந்து மகளீர் கல்லூரிக்கு அருகில் உள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வேளையே குறித்த விபத்து இடம்பெற்று உள்ளது. அதன் போது லான்ட்மாஸ்ரர் சாரதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். அதேவேளை நேற்றைய தினம் செவ்வாய்கிழமை கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன் விபத்துக்கு உள்ளான ஒருவர் தனது வலது கையை இழந்த நிலையில் ஆபத்தான நிலைமையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். …
-
- 1 reply
- 524 views
-
-
மஹிந்தவின் மற்றுமொரு உருவமே மைத்திரி.... கடந்த 29.11.2018 அன்று வவுனதீவு பொலிஸ் காவலரணில் வைத்து இரண்டு பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு படுத்தி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் கதிர்காமத்தம்பி-இராசகுமாரன் (அயந்தன்) என்பவரை மூன்று மாதங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கான விசேட அனுமதியை சிறிலங்கா சனாதிபதி வழங்கியுள்ளார். சனாதிபதியின் இச் செயலானது குரூரமான சர்வாதிகார போக்கையே காட்டுகின்றது அயந்தன் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும் இவரால் பொலிசார் சுட்டுக்கொல்லப்படவில்லை என்ற விடயத்தை உறுதிப்படுத்திய புலனாய்வுப் பொலிசார். அதன் பின்னரும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு பட்டவரை அடையா…
-
- 2 replies
- 849 views
-
-
(நா.தினுஷா) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனா அல்லது ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவா எதிர்கட்சி தலைவர் என்பதை பாராளுமன்றின் பெரும்பான்மையின் அடிப்படையில் தீர்மானிறக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. எதிர்கட்சி தலைவரை தெரிவு செய்வதில் எழுந்துள்ள சிக்கல் நிலை குறித்து விளக்கமளிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதேவேளை நிலையியல் கட்டளையின் பிரகாரம் எதிர்கட்சிதலைவர் பதவியினை யாருக்கு வழங்குவது என்பதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்னெடுப்பார் என்றும் அவர் தெரிவித்…
-
- 0 replies
- 737 views
-
-
December 19, 2018 முன்னாள் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸ தற்பொழுது முன்னாள் பிரதமராகி மீண்டும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக மாறப்போவதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பாக இரா.சம்பந்தன் இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டார். இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறினார். அத்துடன் முன்பு ஒரே சமயத்தில் இரண்டு பிரதமர்கள் நாட்டில் இர…
-
- 0 replies
- 357 views
-
-
December 19, 2018 மட்டக்களப்பில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அப்பாவிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது நாட்டை குழப்பும் வகையில் இடம்பெற்றுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்ற அமர்வின் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தின்போதே அவர் இதனைக் கூறினார். குறித்த திட்டமிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றும் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். நாட்டில் அரசியல் குழப்பநிலை ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் நடை…
-
- 0 replies
- 442 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களின் காணிகளை விரைந்து விடுவிக்குமாறு கிளிநொச்சி அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் புதிதாக பொறுப்பேற்றுள்ள கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரால்ப் நுகரவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். இன்று (19) கிளிநொச்சி படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த 45 காணி விடுவிக்கப்பட்ட நிகழ்வின் போதே இக் கோரிக்கையை விடுத்ததாக அரச அதிபர் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்னும் நூற்றுக்கணக்கான ஏக்கர் பொது மக்கள் மற்றும் அரச காணிகள் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிட்டத்தக்கது. …
-
- 0 replies
- 322 views
-
-
December 19, 2018 சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே நீண்ட காலமாக இருந்துவரும் நட்புறவை மேலும் பலப்படுத்தும் நோக்கில் சீன உதவி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 90 தண்ணீர் பௌசர்களை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த சில காலமாக நாட்டில் ஏற்பட்டிருந்த காலநிலை தாக்கங்களின் காரணமாக அரசாங்கம் ஆரம்பித்த நிவாரண நிகழ்ச்சித் திட்டத்திற்கு உதவும் வகையில் ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய இந்த தண்ணீர் பௌசர்களை அன்பளிப…
-
- 0 replies
- 628 views
-
-
(ஆர்.யசி) ஜனாதிபதி அரசாங்கத்தை தலைமைதாங்கும் நிலையிலும், அமைச்சரவை பிரதானியாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்ற நிலையிலும் இந்த அரசாங்கம் கூட்டணி அரசாங்கம் என்பதை மறுக்க முடியாது. ஆகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து நடத்தும் ஆட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே பிரதான எதிர்க்கட்சி என்பதை மறுக்க முடியாது. எனவே எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுகொடுக்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைபின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமித…
-
- 9 replies
- 1.7k views
-
-
வடக்கு , கிழக்கை இணைக்க இடமளியோம் : ஜே.வி.பி வடக்கு , கிழக்கு இணைப்பிற்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அந்தக் கட்சியின் பிரசார செயலாளரான விஜித ஹேரத் எம்.பியே இவ்வாறு தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தத்தில் வடக்கு- கிழக்கு இணைக்கப்பட்டது. ஆனால் அவை பலவந்தமாக இணைக்கப்பட்டதாக கூறி, உயர் நீதிமன்றத்தின் ஊடாக அதனை பிரித்தோம். இதனால் மீண்டும் வடக்கு – கிழக்கை இணைக்கும் செயற்பாட்டுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்பதுடன் நாட்டை பிளவுபடுத்தவும் அனுமதிக்கமாட்டோம் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். -(3) http://www.samakalam.com/செய்திகள்/வடக்கு-கிழக்கை-இணைக்க-இட/
-
- 0 replies
- 679 views
-
-
முல்லைத்தீவில் ஒருதொகுதி ஆயுதங்கள் மீட்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு தேராவில் காட்டுப்பகுதியிலிந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒருதொகுதி ஆயுதங்கள் முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தேராவில் காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் ஒருதொகுதி ஆயுதங்கள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் அங்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது இதன்போது ராங்கி செல்-1 மிதிவெடிகள் -5 81 மில்லிமீட்டர் எறிகணை -01 81வகை மோட்டர் குண்டு -2 கிறிஸ்ரி செல் -02 ஆர் பி ஜி -1 என்பனவே இதன்போ…
-
- 0 replies
- 476 views
-