ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143281 topics in this forum
-
வடக்கு , கிழக்கை இணைக்க இடமளியோம் : ஜே.வி.பி வடக்கு , கிழக்கு இணைப்பிற்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அந்தக் கட்சியின் பிரசார செயலாளரான விஜித ஹேரத் எம்.பியே இவ்வாறு தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தத்தில் வடக்கு- கிழக்கு இணைக்கப்பட்டது. ஆனால் அவை பலவந்தமாக இணைக்கப்பட்டதாக கூறி, உயர் நீதிமன்றத்தின் ஊடாக அதனை பிரித்தோம். இதனால் மீண்டும் வடக்கு – கிழக்கை இணைக்கும் செயற்பாட்டுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்பதுடன் நாட்டை பிளவுபடுத்தவும் அனுமதிக்கமாட்டோம் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். -(3) http://www.samakalam.com/செய்திகள்/வடக்கு-கிழக்கை-இணைக்க-இட/
-
- 0 replies
- 680 views
-
-
முல்லைத்தீவில் ஒருதொகுதி ஆயுதங்கள் மீட்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு தேராவில் காட்டுப்பகுதியிலிந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒருதொகுதி ஆயுதங்கள் முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தேராவில் காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் ஒருதொகுதி ஆயுதங்கள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் அங்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது இதன்போது ராங்கி செல்-1 மிதிவெடிகள் -5 81 மில்லிமீட்டர் எறிகணை -01 81வகை மோட்டர் குண்டு -2 கிறிஸ்ரி செல் -02 ஆர் பி ஜி -1 என்பனவே இதன்போ…
-
- 0 replies
- 477 views
-
-
பொன்சேகாவை அமைச்சராக நியமிப்பதற்கு சிறிசேன மறுப்பு முன்னாள் இராணுவதளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகாவிற்கு அமைச்சர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன அரசியல் நெருக்கடி ஆரம்பமானதன் பின்னர் சரத்பொன்சேகா தனது நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார் என்பதை காரணம் காட்டி சிறிசேன சரத்பொன்சேகாவை அமைச்சராக நியமிக்க மறுக்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன ஜனாதிபதியிடம் ஐக்கிய தேசிய முன்னணி சமர்ப்பித்துள்ள அமைச்சர்கள் பட்டியலில் சரத்பொன்சேகாவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இந்நிலையிலேயே சிறிசேன அதனை நிராகரித்துள்ளார். எனினும் ஐக்கியதேசிய கட்சி சிறிசேனவின் நிராகரிப்பை…
-
- 0 replies
- 581 views
-
-
வன்முறை குற்றச்சாட்டில் யாழில் கைதாகிய 11 பேருக்கு விளக்கமறியல் யாழில் கொள்ளை, வன்முறைக் குற்றச்சாட்டில் கைதாகிய 11 பேரை விளக்கமறியல் வைக்க மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாள்வெட்டு வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட 11 சந்தேகநபர்களையும் அடுத்தமாதம் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா இன்று உத்தரவிட்டார். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக பெற்றோல் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. அத்துடன், சுன்னாகம் பொலிஸ் நிலையம் மாற்றப்படவுள்ள வளாகத்துக்கும் கடந்த வாரம் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தபட்டது. இந்தநிலையில் வன்முறைக் …
-
- 0 replies
- 347 views
-
-
சட்டம் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதிக்கு வழங்கமாட்டோம்! – ஐ.தே.க. சட்டம் ஒழுங்கு அமைச்சு மற்றும் ஊடக அமைச்சை, எந்தவொரு சூழ்நிலையிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கமாட்டோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் பதவியேற்றுள்ளதோடு, எதிர்க்கட்சித் தலைவர் பதவி மஹிந்த ராஜபக்ஷவிற்கு சென்றுள்ளது. இந்நிலையில், புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று (புதன்கிழமை) பதவியேற்கவுள்ளது. இதுகுறித்து கொழும்பு ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்தபோதே அகில விராஜ் காரியவசம் மேற்குறித்த விடயத்தைக் கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு மற்றும் ஊடக அமைச்சுப் பொறுப்புகளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட …
-
- 0 replies
- 644 views
-
-
மைத்திரி- ரணிலின் அரசியல் மோதல் நிறைவடையவில்லை : அல்ஜசீரா இலங்கையின் அரசியல் பிரச்சினைகளுக்கு தற்காலிகமாக தீர்வு எட்டப்பட்டுள்ளதே ஒழிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இன்னும் முரண்பட்ட வகையிலேயே உள்ளனரென சர்வதேச ஊடகமான அல்ஜசீரா தெரிவித்துள்ளது. இலங்கை அரசியல் நிலவரம் தொடர்பாக அல்ஜசீரா இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. அது மேலும் கூறியுள்ளதாவது, இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளுக்கு நிரந்தர தீர்வு இன்னும் எட்டப்படவில்லை. அண்மையில் பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால நியமித்து, பிரதமர் ரணிலை அரசியலமைப்புக்கு முரணாக அப்பதவியிலிருந்து நீக்கம் செய்தார். இது இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்ப…
-
- 0 replies
- 394 views
-
-
SLFPயில் இருந்து SLPPயில் இணைந்துக்கொண்ட எவரும் மீண்டும் SLFPயில் இணையமாட்டார்கள்… December 18, 2018 ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து பொதுஜன பெரமுனக் கட்சியுடன் இணைந்துக்கொண்ட எந்தவொரு உறுப்பினரும் மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைய மாட்டார்களென, மஹிந்த ராஜபக்ஸ உறுதியளித்துள்ளாரென, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருப்பார்களென்றும் அவர்கள் எதிர்க்கட்சியிலிருந்து மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார்களென, பஷில் தெரிவித்துள்ளார். அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள், கட்சியில் இணைவதற்கான…
-
- 1 reply
- 667 views
-
-
முல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்பட்டது…. December 18, 2018 இன்று மாலை முல்லைத்தீவு இராயப்பர் தேவாலயத்தில் நடைபெற்ற இராணுவத்தின் நத்தார் கரோல் கீத நிகழ்வின் போது, புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பகுதிகளில் இராணுவம் வசமிருந்த 52.14 ஏக்கர் காணி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரனிடம் ஒப்படைக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னதாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார் 84,523 ஏக்கர் காணியை இராணுவத்தினர் பயன்படுத்தியதாக இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 69 ,754 ஏக்கர் காணி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள 263 ஏக்…
-
- 1 reply
- 546 views
-
-
அரசியல் குழப்ப நிலையை பயன்படுத்தி 46 பேருக்கு வட. மாகாணத்திற்கு நியமனம் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையை பயன்படுத்தி பெரும்பான்மையினத்தை சேர்ந்த 46 பேருக்கு வட. மாகாணத்திற்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த ஆறு வாரகாலமாக அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டிருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் எரிபொருள் மின் சக்தி அமைச்சராக நியமிக்கப்பட்ட சியம்பலாப்பிட்டியவே இந்த நியமனங்களை வழங்கியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த நியமனங்களை இரத்து செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அபிவிருத்தி செயலணியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நா…
-
- 2 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பு மயிலம்பாவெளி கிராமத்தில் இருந்து சவுதிஅரேபிய நாட்டிற்குச் சென்ற இளைஞர் ஒருவர் கடந்த ஒரு மாதகாலமாக குடும்பத்தாருடன் எந்தவித தொடர்வும் இல்லத நிலையில் அவர்குறித்து வேலைக்குச் சென்ற வீட்டு உரிமையாளரிடம் கேட்டபோது அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் அவரது தலை துண்டிக்கப்பட்டுள்ளதால் உடலை காட்டமுடியாது என கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மட்டக்களப்பு மயிலம்பாவெளி கிராமத்தில் இருந்து சவுதிஅரேபிய நாட்டிற்கு வீட்டுச் சாரதியாகச் சென்ற யோகராசா ரமேஸ் என்ற இளைஞர் வீட்டுச சாரதியாக இரண்டாவது தடவையாக ஒரே விட்டில் பணிபுரிந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர்(14.11.2018) தங்களது பெற்றோருடன் தொலைபேசியில் பேசிய குறித்த இளைஞர் …
-
- 0 replies
- 736 views
-
-
எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த! – சபாநாயகர் அறிவிப்பு எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வுகளின் போதே சபாநாயகர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். எனினும், சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி பொதுஜன பெரமுனவில் இணைந்தவருக்கும் அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுக்கொண்ட தரப்பிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன வாதிட்டு வருகின்றன. அத்தோடு, நாடாளுமன்ற தெரிவுக் குழுவை அமைத்து இதற்கு தீர்வுகாண வேண்டுமென்றும் அறிவித்துள்ளன. http://at…
-
- 10 replies
- 1.5k views
- 1 follower
-
-
தென்கொரியாவில் 90 வயதான பெண் ஒருவரை தீ விபத்தொன்றில் இருந்து காப்பாற்றிய இலங்கையருக்கு அந்த நாட்டின் நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இன்று அவருக்கான உத்தியோகப்பூர்வ குடியுரிமை சான்றிதழ் அந்த நாட்டின் குடிவரவு திணைக்களத்தினால் வழங்கப்பட்டதாக தென்கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தென்கொரியாவின் வடக்கு கயங்சாங் மாகாணத்தில் தொழில்புரிந்துவந்த குறித்த இலங்கையர், அங்குள்ள கட்டிடம் ன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் இருந்து 90 வயதான முதும் பெண் ஒருவரை காப்பாற்றினார். இதனை அடுத்து பாராட்டுகளைப் பெற்ற அவர் தொடர்பில் கடந்த வாரம் அந்த நாட்டின் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு, அவருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டது. http://…
-
- 0 replies
- 1.1k views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) பாரிய கூட்டணி அமைத்துக்கொண்டு ஸ்தீரமான நாடொன்றை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும். அதற்காகவே அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கு மாறிய விஜித் விஜயமுனி சொய்ஸா, தனது நிலைப்பாடு தொடர்பாக உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர், எமது கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுடனும் கட்சி போசகர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் இணைந்து செயப்படுவதில் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் மஹிந்…
-
- 0 replies
- 444 views
-
-
வடக்கு கிழக்கில் குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் பெருக்கெடுத்து யாழ்ப்பாணம் உடபட வடக்கில் கடந்த இரண்டு நாட்களாக கடும் காற்று வீசியதுடன் குளிரான காலநிலை நிலவியதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் நேற்றுக்காலை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் குறித்த பகுதிகளின் கடற்கரையினை பாரிய அலைகள் தாக்கியுள்ளதுடன், பல கரையோரக் கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது. இதனால், முல்லைத்தீவின் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள மீனவர்களின் வாடிகள், வலைகள் மற்றும் படகுகள் என்பன கடல் அலையினால் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் முல்லைத்தீவு கள்ளப்பாடு, தீர்த்தக்கரை வரையான கட…
-
- 4 replies
- 1.3k views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) நிறைவேற்று அதிகாரத்தை கட்டுப்படுத்த 19 ஆம் திருத்தம் சிறந்த தீர்வு அல்ல. 19 ஆம் திருத்தம் மூலமாக நிறைவேற்று அதிகாரம் ஒரு சிறியலவே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே புதிய அரசியல் அமைப்பின் மூலமாக முழுமையாக நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதி இன்று செய்த தவறை இனியொருமுறை செய்யாதிருக்க நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதே ஒரே வழிமுறை எனவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போது உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைபின…
-
- 0 replies
- 361 views
-
-
December 18, 2018 யாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவர் ஒருவரை கடத்திய இராணுவ சிப்பாய்கள் உட்பட 7 பேரை பொதுமக்கள் பிடிக்க முற்பட்ட வேளை 3 பேர் தப்பி சென்றுள்ளனர். இந்த நிலையில் 4 பேரை பிடித்த மக்கள், நையபுடைத்த பின்னர் காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு கேவில் முள்ளியானை சேர்ந்த சி.நமசியாவம் என்ற 60 வயது முதியவரை ஒருவரை, கார் மற்றும் தளபாடங்கள் விற்பனை செய்யும் வாகனம் ஒன்றில் சென்ற 7 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென…
-
- 0 replies
- 845 views
-
-
25,000 வீடமைப்பு திட்டத்திற்கு அனுமதி… ஆனால் பணமில்லை… டக்ளசினுடையதா, சுவாமிநாதனுடையதா அடுத்த குழப்பம் ஆரம்பிக்கலாம்! December 17, 2018 வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. மாலை 3 மணி தொடக்கம் 5 மணிவரை இடம்பெற்ற இந்த கூட்டம், வழக்கமான கூட்டங்களில் ஒன்றாகவே முடிவடைந்தது. செயலணியின் முன்னைய கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்டதைபோல, டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னதாக வடக்கு, கிழக்கில் தனியார் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாது என்பதை உணர முடிந்ததாக, இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட பல எம்.பிக்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர். வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான விசேட செயலணியின் கடந்த கூட்டங்களில் ஆராயப்பட்ட,…
-
- 0 replies
- 476 views
-
-
அரசில் இணைய சுதந்திரக் கட்சி எம்.பிக்களுக்கு தடை – மைத்திரி அதிரடி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அந்தக் கட்சியின் தலைவரும், அதிபருமான மைத்திரிபால சிறிசேன தடைவிதித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரும், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள விருப்பம் வெளியிட்டிருந்தனர். இது தொடர்பான பேச்சுக்களும் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், சிறிலங்கா அதிபர்,மைத்திரிபால சிறிசேன, நேற்று மாலை சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரையும் சந்தித்துப் பேசினார். இந்தக் கூட்டத்திலேயே அவர், சுதந்திரக் க…
-
- 0 replies
- 382 views
-
-
தேசிய ஜனநாயக முன்னணி (NDF) உதயமாக உள்ளது… December 17, 2018 தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளையும் இன்னும் சில கட்சிகளையும் ஒன்று சேர்த்து, புதிய கூட்டணி ஒன்றில் பயணிக்கவுள்ளதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதிப்படுத்தியிருக்கிறார். தேசிய ஜனநாயக முன்னணி (National Democratic Front – NDF) என்ற கூட்டணியே உருவாக்கப்படவுள்ளது. காலி முகத்திடலில் இன்று இடம்பெற்ற நீதிக்கான போராட்டப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இக்கூட்டணியை முதலில் “ஜனநாயகத் தேசியக் கூட்டணி” (Democratic National …
-
- 1 reply
- 621 views
-
-
நிறைவேற்று அதிகார ஒழிப்பு – நாடாளுமன்றில் இன்று விவாதம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று அதிபரின் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பது தொடர்பான விவாதம் நடத்தப்படவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், இன்று முதல்முறையாக நாடாளுமன்றம் கூடவுள்ளது. இன்றைய அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து அகற்றுவதில் முக்கிய பங்காற்றிய ஜேவிபி இன்றைய அமர்வின் போது, ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றைக் கொண்டு வரவுள்ளது. அதிபரின் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பது தொடர்பாக கொண்டு வரரப்படவுள்ள இந்த ஒ…
-
- 0 replies
- 269 views
-
-
திரிசங்கு நிலையில் மகிந்த – மொட்டு கட்சியிலும் இல்லையாம் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்னமும் தமது கட்சியில் சேர்த்துக் கொள்ளவில்லை என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த நொவம்பர் மாதம் 9ஆம் நாள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டதும், மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 50இற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டனர். இவர்களுக்கான உறுப்புரிமை அட்டை வழங்கும் நிகழ்வுகளும் நடத்தப்பட்டன. இந்த நிலையில் நாடாள…
-
- 0 replies
- 795 views
-
-
சுமந்திரனின் புதிய வாதம்- சூடுபிடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி மகிந்த ராஜபக்சவுக்கே வழங்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி வலியுறுத்தி வரும் நிலையில், அந்தப் பதவியை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்ததால் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக பதவி வகிக்க முடிந்தது. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணையப் போவதில்லை என்று முடிவு செய்துள்ள நிலையில், 101 ஆசனங்களைக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே இரண்டாவது பெரிய கட்ச…
-
- 0 replies
- 307 views
-
-
இணுவில் கிராமத்தை நல்லூருடன் இணைக்க வேண்டாமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் எமது இணுவில் கிராமத்துக்கு வலி தெற்கு பிரதேச செயலகம், வலிதெற்கு பிரதேசசபை என்பன மிக அருகாமையில் உள்ளன. இதனை பிரிப்பதால் நல்லூர் பிரதேச செயலகத்துக்கு எமது மக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே எமது கிராமத்தை வேறு பிரிவுடன் பிரிக்க நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்” என ஜே/189 கிராம சேவகர் பிரிவு மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டதுடன் மகஜர் ஒன்றும் நல்லூர் பிரதேச செயலகத்தில் நேற்று காலை கையளிக்கப்பட்டது. இது தொடர்பாக குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “வலிதெற்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஜே/189 கிராம சேவகர் பிரிவில் நீண்டகாலம…
-
- 0 replies
- 355 views
-
-
யாழில் இடம்பெற்ற கொள்ளை, குண்டுத்தாக்குதல் ; பொலிஸாரிடம் சிக்கியது கும்பல் யாழில் வாள்வெட்டு வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து ஹைஏஸ் வேன் ஒன்றும், மோட்டார் சைக்கிள் மற்றும் 6 வாள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கைது நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை இரவு ஆரம்பமாகி இன்று அதிகாலை வரை முன்னெடுக்கப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட அனைவரும் 20 மற்றும் 21 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர்கள் அரியாலை, மானிப்பாய், மற்றும் யாழ். நகர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்தனர். புன்னாலை…
-
- 0 replies
- 312 views
-
-
முல்லைத்தீவு பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை முல்லைத்தீவு துணுக்காய் தேறாங்கண்டல் பகுதியில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துக்காணப்படுவதாகவும் இதனால் பெருமளவான பயிரழிவுகள் ஏற்படுவதாகவும் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் தேறாங்கண்டல் பகுதியில் மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் பயிர் செய்கை நிலங்கள் ஆகியவற்றுக்குள் தொடர்ச்சியாக காட்டுயானைகள் உட்புகுந்து பெரும் அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது மாலை 6.00 மணிக்குபின்னர் ஊர் மனைகளுக்குள்ளும்,பயிர்ச் செய்கை நிலங்களுக்குள்ளும் புகும் காட்டுயானைகள் நெற் பயிர்களையும் ஏனைய மரவள்ளி பூசனி போன்ற தோட்டப்பயிர்களையும் அழித்து வருகின்றன. …
-
- 0 replies
- 304 views
-