ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143281 topics in this forum
-
இலங்கையில் காணமற்போனவர்களை நினைவுபடுத்தும் இணையத்தளம். மே 2009 இல் போரின் இறுதி நாட்களின் போது இராணுவத்தின் பாதுகாப்பில் இருந்து காணாமல்போனவர்களின் விபரங்களை நாங்கள் முதலில் பட்டியலிட்டு வருகின்றோம். மேலதிக தகவல்களை /திருத்தங்களை itjpsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தயவுசெய்து அனுப்பி வைக்கவும். குறிப்பு: சிலர் LTTE பெயரிலும் சிலர் அவர்களது சொந்தப் பெயரிலும் பதிவு செய்யப்பட்டிருப்பதால் சிலரின் பெயர் விபரங்கள் ஒன்றுக்கு மேற்பட்டதடவைகள் இருக்கலாம். வெற்றுப் பெட்டிகள் இன்னும் போதிய தகவல்கள் இல்லை என்பதை குறிக்கின்றன. http://www.disappearance.itjpsl.com/#lang=tamil
-
- 0 replies
- 418 views
-
-
படையினரை விடுவித்தால் தான் தமிழ் கைதிகள் விடுதலை – மைத்திரி நிபந்தனை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாயின், தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா படையினரும் அதுபோன்றே விடுவிக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறிலங்கா பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நேற்று முற்பகல் அதிபர் செயலகத்தில் பதவியேற்றார். இதையடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார். அப்போது அவர், “குற்றமிழைத்த விடுதலைப் புலிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அவர்களில் பலர் வெளிநாடுக…
-
- 0 replies
- 307 views
-
-
சுதந்திரக் கட்சி எம்.பிக்களுக்கு எதிராக முதலமைச்சர்கள் போர்க்கொடி ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கக் கூடாது என்றும், ஐதேகவுடன் கூட்டு அரசாங்கத்தை அமைப்பதில் இருந்து அவர்களை விலகி இருக்குமாறும், ஆறு மாகாணங்களின் தற்போதைய மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் கோரியுள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இவர்கள் நேற்றுமாலை மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவின் இல்லத்தில் சந்தித்து இந்தக் கருத்தை வெளியிட்டனர். இங்கு கருத்து வெளியிட்ட மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, “ஐதேகவுடன் மீண்டும் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் எண்ணம் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குக் கிடைய…
-
- 0 replies
- 326 views
-
-
சிறிலங்கா இராணுவத்துக்கு சீனா கட்டிக் கொடுத்துள்ள பிரமாண்ட அரங்க வளாகம் தியத்தலாவ இராணுவ பயிற்சி அகடமியில் சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட பணியக மற்றும் அரங்க வளாகம் சிறிலங்கா அதிபர் மற்றும் சீனத் தூதுவரால், சிறிலங்கா இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் இந்த நிகழ்வு தியத்தலாவ இராணுவ பயிற்சி அகடமியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சீனத் தூதுவர் செங் ஷியுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, மற்றும் சிறிலங்கா, சீனா இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக மேஜர் ஜெனரல் ஷென் யுன் தலைமையிலான சீன இராணுவத்தின், உயர் அதிகாரிகள் …
-
- 0 replies
- 299 views
-
-
இரவு விழுந்த குழியில் பகலில் விழ மாட்டோம்- புதிய அமைச்சரவை குறித்து ஐ.தே.க. புதிதாக அமைக்கப்படப் போவது ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவையே எனவும், இதனைஅமைக்கும் போது இரவு விழுந்த குழியில் பகலிலும் விழுவதற்கு நாம் ஒருபோதும் தயாரில்லையெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா தெரிவித்துள்ளார். எமக்கு எதிராக செயற்பட்ட, நாட்டின் ஸ்தீரத் தன்மையைக் குழப்பியவர்களை எம்முடன் ஒருபோதும் இணைத்துக் கொள்ளத் தயாரில்லை. இத்தகையவர்களுடன் கூட்டு அரசாங்கமொன்றை அமைக்க விரும்புவதுமில்லை. இதனால், ஐக்கிய தேசியக் கட்சி 30 அமைச்சர்களுடன் அமைச்சரவையை அமைக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். http://www.dailyceylon…
-
- 0 replies
- 472 views
-
-
அரசாங்கத்தில் இணையவுள்ள SLFP உறுப்பினர்களுக்கு விசேட அறிவிப்பு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள எந்தவொருவருக்கும் தனது சொந்த கருத்தின் அடிப்படையில் புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார். இருப்பினும், அவ்வாறு அரசாங்கத்துடன் இணைந்து கொள்பவர்களுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உதவிகள் கிடைக்க மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் போஷகராகவிருந்தவரும், அக்கட்சியினால் ஜனாதிபதியாக பதவி வகித்தவருமான மஹிந்த ராஜபக்ஷ பிரிதொரு அரசியல் கட்சியில் உறுப்புரிமை பெற்றுக் கொண்டுள்ளார். கட்சி மாறியுள்ளவருக்கே ஸ…
-
- 0 replies
- 352 views
-
-
புதிய அமைச்சரவை இன்று இல்லை, 48 மணி நேர அவகாசம்- UNP புதிய அமைச்சரவைக்கான நியமனங்கள் இன்றைய தினம் (17) இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவைப் பதவிகள் குறித்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதன் பின்னரேயே நியமனங்கள் இடம்பெறும் எனவும் கூறப்படுகின்றது. நேற்றைய தினம் (16) பிரதமர் நியமனம் இடம்பெற்றதன் பின்னர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் இடம்பெறவில்லையெனவும் குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும், அடுத்த 48 மணித்தியாலத்துக்குள் புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெறும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன ஊடகங்களிடம…
-
- 0 replies
- 306 views
-
-
புதிய அரசாங்கத்தின் ”பட்ஜட்“ பெப்ரவரியில் புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் முன்வைக்க முடியுமாக இருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா அறிவித்துள்ளார். அதற்கிடையில் இடைக்கால கணக்கு அறிக்கையொன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளதாகவும், இதற்கும் ஏரிரு நாட்கள் தேவைப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். நாளை (18) நடைபெறவுள்ள சபை அமர்வின் போது வரவு செலவுத் திட்டமோ, இடைக்கால கணக்கு அறிக்கையோ முன்வைக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அரச துறையிலுள்ளவர்களுக்கான ஜனவரி மாத சம்பளம் உட்பட அரச செலவினங்களுக்குத் தேவையான நிதியைப் பெற்றுக…
-
- 0 replies
- 207 views
-
-
மட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு – சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக நாவலடி-கல்லடி பிரதான வீதிகள் நீரினால் மூழ்கியுள்ளன. இதன்காரணமாக குறித்த பகுதியினுாடான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் நாவலடி கடல்நாச்சியம்மன் ஆலயத்தினுள்ளும் கடல் நீர் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கடல்கொந்தளிப்பு ஏற்படும் சமயங்களில் இலகுவில் கடல்நீர் உட்புகும் நிலையுள்ளதால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு இந்த வீதியை புனரமைத்து தருமாறு கடந்த காலங்களில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், இது தொடர்பில்…
-
- 0 replies
- 346 views
-
-
சண்டே டைம்ஸ் செய்தியின் படி, எதிர்கட்சியில் இப்போது மகிந்த ராஜபக்சவின் கட்சி அங்கத்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் ராஜபக்சவே எதிர்க்கட்சி தலைவராக வர இருக்கிறார். சம்பந்தன் வெறும் பாராளுமன்ற உறுப்பினராவார். http://www.sundaytimes.lk/181216/news/ranil-may-form-national-govt-325512.html
-
- 10 replies
- 1.4k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியின் குறிப்பிட்ட சில சுற்றயல் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து வலைவீசும் மருத்துவ மாபியாக்களின் கைகளில் மருத்துவர்கள் சிலர் உள்ளிட்ட சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சிலர் வீழந்துள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக முழங்காவில் ஆதார வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பப்படாது, வைத்தியர் ஒருவரால் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலைக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இவ…
-
- 11 replies
- 1k views
-
-
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சட்டவிரோத அரசாங்கத்தை விரட்டியடித்து ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை மீண்டும் ஆட்சி பீடம் ஏற்றியதில் பாரிய பங்களிப்பை ஆற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகைள் தமிழினப் படுகொலைக்கும், போர் குற்றங்கள் உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களுக்குமான நீதியை சர்வதேசத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளும் முயற்சிகளுக்கு பெரும் தடையை ஏற்படுத்திவிட்டதாக ஈபீஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் குற்றம்சாட்டியிருக்கின்றார். கொழும்பு அரசியலில் மைத்ரி – மஹிந்த அணிக்கும் – ரணில் தரப்பிற்கும் இடையே வெடித்த ஆட்சி அதிகாரம் தொடர்பான இழுபறியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலையிட்டதாலேயே தமிழ…
-
- 0 replies
- 392 views
-
-
‘கிறிஸ்து பிறப்பும் நத்தாரின் சிறப்பும்’ எனும் தொனிப்பொருளில் தேசிய நத்தார்விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மன்னாரில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. வர்த்தகம், நுகர்வோர், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் கிறிஸ்துவ மத அலுவல்கள் அமைச்சின் ஏற்பாடில் இடம்பெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டதுடன், அவருடன் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் வின்ஸ்டன் பெர்னாண்டோ ஆண்டகை, மற்றும் மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ…
-
- 0 replies
- 447 views
-
-
மடுத்திருத்தலத்தை அரசாங்கத்தின் புனித பிரதேசமாக்கும் முயற்சி தொலை நோக்கு பார்வையில் மிக அபாயமான பின்னடைவை ஏற்படுத்தலாம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இவ்விடையம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்கு இன்று சனிக்கிழமை (15) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,, இலங்கை அரசாங்கத்தின் நன்கு திட்டமிட்ட உள்நோக்கமுள்ள எண்ணத்துடன் புனித பிரதேசமாக்க அவசரகெதியில் முயல்வது இயல்பாகவே ஐயத்தை உண்டாக்குவதுடன் இச் செயலுக்குப்பின் மதங் கடந்த மிகப் பெரிய அரசியல் உண்டு என்பது மறுக்க ம…
-
- 0 replies
- 334 views
-
-
இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில் (2ஆம் இணைப்பு) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கான பதவிப்பிரமாணத்தை செய்து வைத்தார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதனுாடாக கடந்த ஆறு வாரகாலமாக இலங்கையில் நீடித்த அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய பிரதமராக ரணில் இன்று பதவியேற்பு ! ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.16 மணிக்…
-
- 1 reply
- 517 views
-
-
ஜயந்த தனபால ஒரு ஆங்கில புலமை குறைந்த சட்டத்தரணி. இலங்கையின் சட்ட மா அதிபராக பதவி ஏற்ற பின்னர், பிரிட்டிஷ் கவுன்சிலில் இருந்து ஆங்கில வகுப்பெடுக்க ஒருவர் வந்து போவதாக சொல்வார்கள். அண்மைய வழக்கில், ஜனாதிபதி சார்பில் ஆஜராகி தனது சட்ட புலமையினை காட்டிட வெளிக்கிட்டு, நல்ல குட்டு வாங்கி உள்ளார். பேராசிரியர் பீரிஸ், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் போன்றவர்கள் எழுதிக் கொடுத்ததை அப்படியே வாசிக்காமல் சமர்ப்பித்து இருக்கிறார் போல உள்ளது. இலங்கை பாராளுமன்றத்தை கலைத்தது, அரசியல் அமைப்பினை மீறிய செயல் ஆயின், அதுக்கு உயர் நீதிமன்றினை நாடி இருக்க வேண்டியதில்லை. மாறாக, ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்றில் பதிவி நீக்க மனுவை கொண்டு வந்திருக்க வேண்டும். அங்கே அது 2/3 பெரும…
-
- 1 reply
- 540 views
-
-
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாமல் ராஜபக்ஷ வாழ்த்து இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியல் பிரச்சினைக்கு அப்பால் தான் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்து தெரிவிப்பதாக அவர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் இனியாவது செயற்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார். மேலும், மேற்கத்தேய சக்திகளின் நிகழ்ச்சிநிரலின் கீழ் செயற்படாமல், மக்கள் பிரச்சினையை கருத்திற்கொண்டு செயற்படுவது அவசியமென நாமல் வலியுறுத்தியுள்ளார். http://athavannews.com/பிரதமர்-ரணில்-விக்ரமசிங்/
-
- 2 replies
- 511 views
-
-
இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டுள்ள தாழமுக்கம் அடுத்த 24 மணித்தியாலங்களில் பாரிய சூறாவளியாக மாற்றமடையும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மற்றும் இந்திய வானிலை அவதான மையங்கள் எச்சரித்துள்ளன. இதுதொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் தரிகையில், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் 2018 டிசம்பர் 13ஆம் திகதி காலை 05.30 மணிக்கு திருகோணமலைக்கு கிழக்கு- தென்கிழக்காக அண்ணளவாக 850 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 6.5N, கிழக்கு நெடுங்கோடு 88.7E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது. இத் தொகுதி வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடைவதுடன் …
-
- 2 replies
- 703 views
-
-
மன்னாரில் சில கிராமங்களில் இன்று காலையிலிருந்து கடல் நீர் கிராமங்களுக்குள் உட்புக ஆரம்பித்துள்ளது. சாந்திபுரம்,சௌத்பார்,எமில் நகர், ஜிம்ரோன் நகர், ஜீவபுரம், பனங்கட்டிக்கோட்டு கிழக்கு,மேற்கு ஆகிய கிராமங்களுக்குள், கடல் நீர் படிப்படியாக உட்புக ஆரம்பித்துள்ளதால், வீடுகளும் கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. மன்னார் புதையிரத வீதி பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் ஊடாகவே கடல் நீர் கிராமங்களுக்குள் செல்ல ஆரம்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட கிராமங்களை கிராம அலுவலகர்கள்,உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளனர். கடல் நீர் உட்புகுவதை…
-
- 1 reply
- 549 views
-
-
December 16, 2018 மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் எவரும் மீண்டும் ஐ.தே.கவுடன் இணைந்துக்கொள்ள மாட்டார்களென முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று மீகொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அவர், தான் இவ்வாறு தெரிவிப்பதற்குக் காரணம் குறித்த உறுப்பினர்களை கௌரவிப்பதற்காக என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துக்கொள்ளவுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையுமி…
-
- 0 replies
- 339 views
-
-
”சமாதானத்தை குழப்புகின்ற சக்திகளே படுகொலைக் கலாசாரத்தில் ஈடுபடுகின்றன' சமாதானத்தை குழப்புகின்ற சக்திகளே படுகொலைக் கலாசாரத்தில் ஈடுபடுகின்றனர் என மட்டக்களப்பில் வவுணதீவுப் பொலிஸாரின் படுnடிகாலைகளைக் கண்டித்து இன்று பிற்பகல் இடம்பெற்ற துண்டுப் பிரசுர விநியோகத்தின்போது தெரிவிக்கப்பட்டது. மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையின் Batticaloa District Civil Citizen Council இன் தலைவர் ரீ. திருநாவுக்கரசு தலைமையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் துண்டுப் பிரசுர விநியோகம் இடம்பெற்றது. அத்துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, -சாந்தியும் சமாதானமும் எமது தேவை- நாட்டில் யுத்த அவல நிலையும் சோதனைச் சாவடிகளின் அசௌகரியங்களும் இல்லாமல் செய்யப்பட…
-
- 0 replies
- 781 views
-
-
"அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் ஜனவரியில்" (நா.தினுஷா) எதிர்வரும் 26 ஆம் திகதி இந்த ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதோடு 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் பாராளுமன்றத்துக்கு கைளிக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார். மேலும் எதிர்வரும் ஜனவரி மாத்துக்கு பின்னர் பாராளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடுக்கான அனுமதி கிடைக்கப்பொவிட்டால் நிதியினை செலவுசெய்யவோ நிர்வகிக்கவோ முடியாது. ஆகையால் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற சேவைப்பிரிவுகளுக்கு அது பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும். அரச அதிகாரிகளின் கொடுப்பனவுகளிளும் பிரச்…
-
- 0 replies
- 323 views
-
-
வீடு திரும்பினார் சம்பந்தன் – ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல் கொழும்புச் செய்தியாளர்Dec 16, 2018 | 0:56 by in செய்திகள் மூன்று நாட்களாக கொழும்பில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நேற்று வீடு திரும்பினார். உடல்நலக் குறைவினால், இரா.சம்பந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலன் தேறியதை அடுத்து, நேற்றுக்காலை அவர், வீடு திரும்ப மருத்துவர்கள் அனுமதித்தனர். எனினும், தமது கண்காணிப்பில் மேலும் சில நாட்கள் ஓய்வெடுக்குமாறு இரா.சம்பந்தனுக்கு மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் அவர் மீண்டும் தமது பணிகளுக்குத் திரும்…
-
- 2 replies
- 989 views
-
-
புதிய பிரதமரானார் ரணில் – யாழில் வெற்றிக் கொண்டாட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றதையடுத்து யாழ்ப்பாணத்திலுள்ள அவரது கட்சி ஆதரவாளர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். நகரில் படடாசுகள் கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி திடீரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி நீக்கம் செய்தார். இதனையடுத்து புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பதவியில் அமர்த்தினார். இதனால் நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை தோன்றியது. இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக மீறல் செயற்பாட்டுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய…
-
- 0 replies
- 393 views
-
-
அரசுக்கு காத்திரமான அழுத்தத்தை கொடுத்து பௌத்தமயமாக்கலை நிறுத்துங்கள் December 16, 2018 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்புடன் ஆட்சிக்குழப்பநிலை முடிவுக்கு வந்துள்ள சூழ்நிலையில் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசுக்கு காத்திரமான அழுத்தத்தினைக் கொடுப்பதுடனூடாக திட்டமிடப்பட்ட பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழர் மரபுரிமை பேரவையினர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இக் கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை தொடர்பில் பொது மக்கள் கவலையும் அதிருப்தியும் கொண்டுள்ளனர். முல்…
-
- 0 replies
- 490 views
-