ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143283 topics in this forum
-
வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பிற்காக சென்ற 222 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்! இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பிற்காக சென்ற 222 இலங்கை பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளர் மாதவ தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவிலேயே அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும், சவூதி அரேபியாவில் மாத்திரம் 70 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “குவைட் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளிலும் இலங்கை பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர். கொலை, வாகன விபத்து, திடீர்மரணம், தற்கொலை போன்றவைகளால் இலங்கை பணியாளர்கள் உயிரிழக்கின்றனர். …
-
- 1 reply
- 149 views
-
-
பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைத் துணிகள் வழங்கப்படாமையை கண்டித்து சுவரொட்டிகள் December 8, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை துணிகள் வழங்கப்படாமையினால் கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 81 பாடசாலைகளில் சுமார் 32, 755 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர் இவர்களின் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் வறுமைக் கோட்டுக்குட்பட்டவர்கள். இந்த மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் பாடசாலை சீருடைக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற இலவச சீருடைத்துணிகளை நம்பியே இருக்கின்றனர். இந்த நிலையில் இவ்வருடத்திற்கான இலவச சீருடைத்துணிகள் வழங்கப்படாமையினால் புதிய சீருடைகளை தைத்துக்கொள்வதில் நெருக்கடிகளை …
-
- 3 replies
- 500 views
-
-
பாதீட்டை திருத்தம் செய்யுமாறு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவிப்பு.. யாழ்.மாநகர சபையில் இன்று இடம்பெற்ற வரவு செலவு வெளியீட்டில் வெளிநாடு செல்வதற்கும், ஆடம்பர செலவுக்கும் கூடுதலான பணம் செலவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையால் அதனை தாம் ஏற்க வில்லை எனவும், பாதீட்டை திருத்தம் செய்யுமாறும் தாம் சபையில் கோரியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். யாழ்.ஊடக அமைத்தில் இன்று மாலை ஊடகவியளாலர்களை சந்தித்த முன்னணியின் பிரதிநிதிகள், வெளிநாடு சென்று படித்து வந்தால் தான் யாழ்ப்பாணத்தில் கொட்டிக்கிடக்கும் குப்பைகளை எப்படி அகற்றுவது என்பது பற்றி தெரியவரு…
-
- 4 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் காவல்துறையினர் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இருவரும் தடுத்து வைக்கப்படு தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக வவுணதீவு இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் விசாரணை செய்யப்படுகின்றனர். வவுணதீவு, வலையிறவு பாலம் அருகில் பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடந்த மாதம் 29ஆம் திகதி நள்ளிரவு கடமையில் இருந்த காவல்துறையினர் இருவர் இனந் தெரியாதோரால் கொலை செய்யப்பட்டிருந்தனர். இச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடாத்தி வருகின…
-
- 0 replies
- 93 views
-
-
சிறிலங்காவைப் புறக்கணிக்கும் சுற்றுலா பயணிகள் – ரத்தாகும் முன்பதிவுகள் சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடிகளை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் வணிக முயற்சியாளர்களின் வருகைகள் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் அண்மைய அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், 20 வீதமான அறை முன்பதிவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று கொழும்பில் 200 அறைகளைக் கொண்ட, கோல் பேஸ் விடுதியின் முகாமையாளர் சந்திர மகோற்றி தெரிவித்துள்ளார். “வழக்கமாக எமது விடுதி நிரம்பியிருக்கும். முன்பதிவு ஒதுக்கீடு பயன்படுத்தப்படாது என்ற அச்சத்தினால் நாங்கள் தள்ளுபடிகளை வழங்குகிறோம்.” என்றும் அவர் கூறினார். அதேவேளை, ”பல்வேறு …
-
- 8 replies
- 1.6k views
-
-
கிழக்கு பட்டதாரிகளுக்கு 3ஆம் கட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் -தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் – தன்னானந்த தேரர் எச்சரிக்கை December 8, 2018 வடக்கு மாகாண பட்டதாரிகளுக்கு தற்போது வழங்கப்பட்டமை போன்று கிழக்கு மாகாண சபை வேலையற்ற பட்டதாரிகளுக்கு போட்டிப்பரீட்சை புள்ளிகளின் அடிப்படையில் 3 ஆம் கட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்க ஆளுநர் ரோகித போகல்லாகம நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத் தலைவர் தன்னானந்த தேரர் வலியுறுத்தியுள்ளார். கி கடந்த காலத்தில் இடம்பெற்ற வேலையற்ற பட்டதாரிகளின் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்த…
-
- 0 replies
- 123 views
-
-
வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூர் கைத் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் கண்காட்சி வடக்கு மாகாண இணைப்பாளர் கு,ரவிக்குமார் தலைமையில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சுமற்றும் தேசிய கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றமும் இணைந்து இந்தக் கண்காட்சியை நடாத்தவுள்ளன. இந்தக் கண்காட்சியில் இயற்கை முறை விவசாய பயிர்கள், மா வகைகள், எண்ணெய் வகைகள்,பனம் உற்பத்தி பொருட்கள் ,பால் உற்பத்தி பொருட்கள் ,துணி வேலைபாடுகள்,மர வேலை பாடுகள் ,மூலிகை குடிபானங்கள்,கடதாசி உற்பத்திகள்,உணவுகள், இயற்கையான மரக்கறிகள் போன்ற 7…
-
- 2 replies
- 1k views
-
-
உடனடியாக ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை December 8, 2018 உடனடியாக ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லையென என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஏனையவர்களின் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப தான் செயற்படப்போவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதி தேர்தலினை நடத்துவதா இல்லையா என்பது குறித்து தானே தீர்மானிக்கவேண்டும் எனவும் தனக்கு அவ்வாறான எண்ணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றின்போதே இனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் இரண்டாவது தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் தற்போதைக்கு இது குறித்து பதிலை தெரிவிக்க முடியாது எனவும் அதற்காக காலம் உள்ளது எனவும் தெரிவித்…
-
- 0 replies
- 134 views
-
-
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் குழு யாழ் மாநகரின் கழிவகற்றல் செயற்றிட்டம் தொடர்பில் ஆய்வு December 7, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் குழுவொன்று ஆராய்வு திட்டம் ஒன்றின் நிமிர்த்தம் யாழ் மாநகரசபைக்கு நேற்று (06) சென்றுள்ளனர். யாழ் மாநகரின் கழிவகற்றல் செயற்றிட்டம் தொடர்பில் (வீட்டுக்கழிவு, திண்மக்கழிவு) ஆராய்ச்சி செயற்றிட்டம் ஒன்று முன்னெடுப்பதாகவும், குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நேரில் வருகை தந்ததாகவும் அக் குழு குறிப்பிட்டது. குறிப்பிட்ட மாணவர் குழாமினை மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் சந்தித்து மாநகரின் கடந்தகால மற்றும் தற்போதைய கழிவகற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் விதம், அதில் மாநகரசபை மற்றும் …
-
- 2 replies
- 595 views
-
-
அனைத்து உதவித்திட்டங்களில் இருந்தும் ஒதுக்கப்பட்ட நானாட்டான் பிரதேச முன்னாள் போராளிகள் : December 8, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் வசிக்கும் முன்னாள் போராளிகள் மற்றும்; மாற்றுத்திறனாளிப் போராளிகள் தாம் அனைத்து உதவித்திட்டங்களில் இருந்தும் கைவிடப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். இவ் வருட ஆரம்பத்திலிருந்து நானாட்டான் பிரதேசச் செயலகம் மற்றும் ஜனாதிபதி செயலக இணைப்பாளர்களுடன் இரண்டு தடவைகளுக்கும் மேற்பட்ட கலந்துரையாடல்களை முன்னாள் போராளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிப் போராளிகள் இணைந்து மேற்கொண்டிருந்தனர். -குறித்த கலந்துரையாடல்களை தொடர்ந்து அதிகாரிகளினால் முன்னாள் போராளிகள் மற்றும், போராள…
-
- 0 replies
- 92 views
-
-
'சமபாலுறவாளர்களை அவமதித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மன்னிப்புக் கோர வேண்டும்' (நா.தனுஜா, எம்.மனோசித்ரா) நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதுடன், சமபாலுறவாளர்கள் மற்றும் திருநங்கைகளை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்காக மன்னிப்புக்கோர வேண்டும் என நாட்டிலுள்ள சமபாலுறவாளர்கள் மற்றும் திருநங்கைகளின் உரிமைகள் தொடர்பில் செயற்படும் அமைப்புக்கள் ஒன்றிணைந்து தெரிவித்துள்ளன. நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டல் மற்றும் சமபாலுறவாளர்கள், திருநங்கைகளின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தல் ஆகியவற்றை வலியுறுத்தி நாட்டிலுள்ள சமபாலுறவாளர்கள் மற்றும் திருநங்கைகளின் உரிமைகள் தொடர்பில் செயற்படும் அமைப்புக்கள், சிவில் சமூக அமை…
-
- 0 replies
- 529 views
-
-
விசாரணை நிறைவு ; தீர்ப்பு வரை இடைக்காலத் தடை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை இடைக்கால தடையுத்தரவு அமுலில் இருக்கும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 10 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது இன்று 4 ஆவது நாளாகவும் விசாரணைகள் இடம்பெற்றது. ஏற்கனவே உயர் நீதிமன்றினால் குறித்த மனுக்களை விசாரணை செய்ய நிர்ணயிக்கப்பட்ட மூன்று நாட்களும் நேற்றுடன் நிறைவடைந்த போதும், விசாரணைகள் நிறைவடையாததால் இன்று நான்காம் நாளாகவும் விசாரணைகளை தொடர் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற…
-
- 0 replies
- 431 views
-
-
இரணைமடு குளத்தின் வான்கதவுகள் ஜனாதிபதியினால் சம்பிரதாயபூர்வமாக திறப்பு! போருக்கு பின்னர் மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இரணைமடு குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாவட்ட அரசாங்க அதிபர் ரெஜினோல்ட் குரே, பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டனர். http://athavannews.com/ஜனாதிபதி-கிளிநொச்சிக்க/
-
- 1 reply
- 560 views
-
-
நாடாளுமன்ற கலைப்பு – திங்களன்றே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு? நாடாளுமன்றத்தைக் கலைத்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படமாட்டாது என்று தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று நான்காவது நாளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக, இந்த மனுக்கள் மீது மூன்று நாட்கள் விசாரணை நடத்தப்படும் என்றே அறிவிக்கப்பட்டது. அதனால், இன்று 7ஆம் நாள் வரை அரசிதழ் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், நேற்றைய மூன்றாவது நாள் விசாரணையின் முடிவில், இன்றும் வ…
-
- 0 replies
- 415 views
-
-
நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை நடாத்தக் கோரி மகிந்தவின் ஆதரவாளர்களால் மன்னாரில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ‘சிறிலங்கா பொது ஜன பெரமுன’ கட்சியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் பொது வைத்தியசாலை பிரதான வீதியில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம் மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் பஸார் பகுதிக்குச் சென்று பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ”மீண்டும் பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமிக்க வேண்டும். சுயாதினமான பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும் ” என்ற கோரிக்கையை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். …
-
- 0 replies
- 502 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. இரணைமடுகுளத்தின் வான்கதவினை திறந்து வைத்து அபிவிருத்தி செய்யப்பட்டபின் குளத்தினை விவசாயிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (07.12.18) இடம்பெற்றது. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். ஆனால் குறித்த நிகழ்வில் ஜனாதிபதி பிரசன்னமாவதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்னதாகவே நிகழ்வு இடம்பெற்ற இரணைமடுகுளத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஜனாதிபதியுடன் நிகழ்வில் கலந்து கொள்ளாது பொது மக்கள் கூடியிருந்த இடத்திலேயே நின்றதுடன், ஜனாதிபதி நிகழ்வை ஆரம்பித்தவுடன் அங்கிருந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இவருடன் கரைச்சி மற்றும் பளை பிரதேச சபை தவிசாளர்கள…
-
- 0 replies
- 403 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்திகள்… இரணைமடுகுளம் அதன் வான் பாயும் நிலையை அடைகின்ற போது நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக ஜனாதிபதியை அழைத்து வந்து திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார் கிளிநொச்சி இரணைமடுகுளத்திற்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று(05) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2178 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு தற்போது இரண்டு வருடங்களின் பின் குளத்தின் நீர் கொள்ளளவு முழுமையை எட்டியுள்ள நிலையில் ஆளுநர் றெஜினோல்ட் குரே விஜயம் செய்து நிலைமைகளை நேரில் ஆராய்ந்த…
-
- 9 replies
- 1.5k views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லையென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நோர்வேயில் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். மட்டக்களப்பில் இரண்டு பொலிஸார் சுட்டுக் கொலை செய்யப்பட்டமையுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், மீண்டும் புலிகள் புத்துயிர் பெறுவதாகவும் தெரிவித்திருந்தார். எனினும் இதனை மறுக்கும் பொன்சேகா போலியான தகவல்களை வெளியிட வேண்டாம் என கேட்டுள்ளார். முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். “நாங்கள் பொட்டு அம்மான…
-
- 11 replies
- 1.6k views
-
-
யாழ்.சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவிலடிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் க.பொ. த. சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 16 வயது மாணவியொருவர் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை(06) பிற்பகல்- 12.45 மணியளவில் இடம்பெற்றது. மோட்டார்ச் சைக்கிளில் இரு இளைஞர்கள் பயணித்த நிலையில் வேகமாக மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்தியமையே விபத்துக்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது. மாணவியின் துவிச்சக்கர வண்டியின் பின்புறமாக மோட்டார்ச் சைக்கிள் மோதியுள்ள நிலையில் மாணவி தூக்கி வீசப்பட்டுக் காயமடைந்துடன் மயக்கமடைந்த நிலையி…
-
- 0 replies
- 419 views
-
-
மீண்டும் ஆட்சிக்காக... மந்தி,ர தந்திரங்களை நாடும் மஹிந்த. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை கைப்பற்றுவதற்காக மீண்டும் மந்திர தந்திரங்களை நாடியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு முன்னர் மஹிந்த ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கிரக பலன்கள், மந்திர தந்திரங்கள் மீது நம்பிக்கை கொண்டு அதனடிப்படையில் செயற்பட்டார் என கூறப்பட்டது. மேலும் அந்நம்பிக்கைகளில் அடிப்படையில், தனது கைகளில் பல்வேறு விதமான ஆபரணங்களை மஹிந்த அணிந்ததுடன் வஜ்ஜிராயுதத்தை ஒத்த சிறிய ஆயுதமொன்றை தனது கையில் எந்நேரமும் வைத்திருந்ததாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போதும் ஆட்சியை கைப்பற்றுவதற்காக புலியின் நகம் போலுள்ள சிறிய ரக ஆ…
-
- 1 reply
- 528 views
-
-
விஜயகலாவின் வழக்கு விசாரணை பெப்ரவரிக்கு ஒத்திவைப்பு விடுதலைப் புலிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கை விசாரணை செய்த நீதவான், பெப்ரவரி மாதம் 22ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார். கடந்த ஜுலை மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன், இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கமென கருத்து வெளியிட்ட…
-
- 0 replies
- 439 views
-
-
ஜனநாயகத்தை வலியுறுத்தி மட்டக்களப்பில் பேரணி…. December 7, 2018 ஜனநாயகத்தை வலியுறுத்தி மட்டக்களப்பில் பேரணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை வலியுறுத்தும் குரல் எனும் தொனிப் பொருளில் றைஸ் சிறீலங்கா மற்றும் இலங்கை மெதடிஸ்த திரு அவையின் வட கிழக்கு மறை மாவட்டம் என்பன இணைந்து இந்த பேரணியை நடாத்திஉள்ளன. மட்டக்களப்பு நகரின் காந்திப்பூங்காவுக்கு முன்பாக இடம் பெற்ற ஜனநாயகத்தை வலியுறுத்தும் குரல் பேரணியில் சமயப் பிரமுகர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். இவர்கள் இலங்கையின் ஜனநாயகத்தை வலியுறுத்துவதுடன் நிலையான அமைதியும் நிரந்தரமான சமாதானமும் ஏற்பட வேண்டுமெனவும் இதன் போது வலியுறுத்தியுள்ளனர். தாய் நாட்டின் நற…
-
- 0 replies
- 412 views
-
-
MY3யின் வர்தமாணி அறிவித்தலுக்கு எதிரான மனுவின் இறுதிநாள் விசாரணை தொடர்கிறது – தீர்ப்பு வெளியாகுமா? December 7, 2018 பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (07.12.18) நான்காவது நாளாக மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 04 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் விசாரணைகளின் தீர்ப்பு இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள போதும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, …
-
- 0 replies
- 218 views
-
-
அச்சுவேலி தொண்டமனாறு வீதி வெள்ளத்தால் மூடியுள்ளதால் மக்கள் சிரமம் December 7, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அச்சுவேலி தொண்டமனாறு வீதி வெள்ளத்தால் மூடியுள்ளதால் அவ்வீதி வழியாக பயணிப்போர் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். குறித்த வீதி நீண்டகாலமாக திருத்தப்படாமல் குன்றும் குழியுமாக உள்ள நிலையில் தற்போது வீதியை மூடி வெள்ளம் ஓடுவதனால் வீதியில் பயணிக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். http://globaltamilnews.net/2018/105878/
-
- 0 replies
- 337 views
-
-
பால்நிலை வன்முறைக்கெதிராக யாழில் அமைதி ஊர்வலம். யாழ்ப்பாணத்தில் பால்நிலை வன்முறைக்கெதிராக அமைதி ஊர்வலமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றது. யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் வேலைத் தளங்களில் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை இல்லாது ஒழிப்போம் என்ற தொணிப் பொருளில் இவ் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. யாழ் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் நாவலர் கலாச்சார மண்டபம் வரை சென்று நிறைவடைந்தது. பெண்களை ஒதுக்காது புதிய வாய்ப்புக்களை வழங்குவோம்,நான் எல்லா வகையான வன்முறைக்கும் எதிரானவள்,வன்முறையை தவிர்ப்போம் பெண்களை வாழவிடுவோம் உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கையில் ஏந்தியவாறு பெண்கள் ஊர்வலத்தில் பங்குபற்றியிருந்தனர். ஊர்வலத…
-
- 1 reply
- 533 views
-