ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143283 topics in this forum
-
நாமல் குமார என்பவர் ஜனாதிபதியின் உளவாளி : அம்பாறை மாவட்ட SLPP வேட்பாளராகிறார் !! பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய சதி செய்ததாக வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ள கருத்து பாரிய பிரச்சினைக்குரிய ஒன்றாகும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 48 மணித்தியாலத்துக்குள் பொலிஸ் மா அதிபரை பாராளுமன்றத்திற்கு அழைத்து இது தொடர்பில் விசாரித்து தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சபாநாயகரிடம் அவர் கேட்டுள்ளார். நாமல் குமார என்பவர் ஜனாதிபதியின் உளவாளி எனவும், அவர் பொதுஜன பெரமுன கட்சியில் அம்பாறை மாவட்ட வேட்பாளராக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்…
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழில் சகோதரியுடன் தனித்திருந்த ஏழு வயது சிறுவனுக்கு ஏற்பட்ட கதி! தனது ஐந்து வயது சகோதரியுடன் வீட்டில் தனித்திருந்த ஏழு வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் யாழ்.தென்மராட்சி மறவன்புலோ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தந்தையார் ஏற்கனவே உயிரிழந்து விட்ட நிலையில் மேற்படி சிறுவன் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளார். நேற்றைய தினம்(25) குறித்த சிறுவனின் தாயாரும், அவனது மூத்த சகோதரனும் வேலைக்குச் சென்றுவிட உயிரிழந்த சிறுவனும், அவனது சகோதரியான ஐந்து வயதுச் சிறுமியும் வீட்டில் தனி…
-
- 11 replies
- 1.3k views
-
-
பருத்தித்துறையில் இன்று பொது மக்களால் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் தின ஏற்பாடுகளை பொலிஸார் தடுத்து நிறுத்தி மக்களை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். இச் சம்பவம் இன்று மாலை பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க அப் பகுதி மக்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையிலேயே அங்கு சென்ற பருத்தித்துறை பொலிஸார் மக்களை விரட்டியடித்தனர். மேலும் அங்கு கட்டப்பட்டிருந்த கொடிகளை அறுத்தெறிந்தும், வைக்கப்பட்டிருந்த மாவீரர்களது சிவில் உடையிலான புகைப்படங்களை அப்புறப்படுத்துமாறும் பொது மக்களை அச்சுறுத்திய பொலிஸார் அப் பகுதியில் இருந்து அவர்களை வெளியேற்றியுள்ளனர். இதனால் குறித்த பகுதியில் பதட்டமான சுழல் காணப்படுவதுடன் ப…
-
- 1 reply
- 1k views
-
-
மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் அவதானிக்க இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜார்ன் ரோட் (Jorn Rohde) மன்னாரிற்கு வருகை தந்து மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரடியாக அவதானித்ததோடு, அகழ்வு பணிகள் தொடர்பில் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸவுடன் கலந்துடையாடினார். மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள மனித புதை குழி அகழ்வு பணியானது கடந்த 12 ஆம் திகதி இடை நிறுத்தப்பட்டது. பலத்த மழை காரணமாகவும், அரச பணி காரணமாகவும் மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ வெளிநாடு சென்றதாலும் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப் பட்டிருந்தது. இந்த நிலையில் 105 ஆவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை (27) மீண்டும் அகழ்வு பணிகள்…
-
- 1 reply
- 926 views
-
-
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உயிர் நீத்த விடுதலை வீரர்களை நினைவுகூரும் மக்களின் உணர்வினை எந்த எதிர்ப்பினாலும் தகர்த்து விட முடியாது என வடக்கின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். "இலங்கையின் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தமது விடுதலை வீரர்களை நினைவுகூரும் உரிமைக்கு எதிராகத் தெற்கில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் துர்பாக்கிய நிலைமை காணப்படுகிறது." என்றும் அவர் தெரிவித்தார். "போரில் உயிர்நீத்த தமது பிள்ளைகளை தாய் தந்தையர் நினைவுகூர்ந்து அழுவதையோ, தமது உடன்பிறப்புக்களை சகோதரர்கள் நினைவுகூர்ந்து தேற்றிக் கொள்வதையோகூட சகித்துக்கொள்ள முடியாத தெற்கின் இழி மனோநிலையை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளவேண்டும்" என வ…
-
- 0 replies
- 642 views
-
-
மாவீரர் தினத்தை முன்னிட்டு அதிகளவான பொலிஸார் மற்றும்புலனாய்வாளர்கள் கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல சூழலில் குவிக்கப்பட்டிருந்த போதிலும்மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். மாவீரர்நாளை முன்னிட்டு கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல சூழலில் பெருமளவு இராணுவத்தினர்மற்றும் பொலிஸார், புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இன்றையதினம் தமிழீழ மாவீரர் நாள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், புலம்பெயர்நாடுகளிலும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டு வருகிறது. இந்நிலையில்வடகிழக்கு மாகாணங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை தடுப்பதற்கு …
-
- 1 reply
- 728 views
-
-
ஐ.நா பொதுச் செயலர் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் ஐ.நா பொதுச் செயலர் அன்ரனியோ குரெரெஸ், விரைவில் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று ஐ.நா அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். கடந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்த போது கொழும்பிலுள்ள ஐ.நா பிரதிநிதிகள் இதனைக் கூறியுள்ளனர். இப்போது ஐ.நா கவனம் செலுத்தி வரும் நாடுகளில் சிறிலங்கா உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஐ.நா பிரதிநிதிகள் தம்மிடம் கூறியதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் ஐ. நா பொதுச் செயலர் விரைவில் சிறிலங்காவுக்கு பயணம் செய்ய வாய்ப்…
-
- 3 replies
- 1.3k views
-
-
தடைகளை விதிக்கும் முடிவை இன்னமும் எடுக்கவில்லை – ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவில் உள்ள தனி நபர்களை வைத்து தடைகளை விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்மைய அரசியல் குழப்பங்களுக்கு காரணமான மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளை இலக்கு வைத்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சில மேற்குலக நாடுகள் தடைகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. எனினும், இத்தகைய எந்த நகர்வும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என்றும், இதுபற்றிய கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படவில்லை என்றும், ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள், கொழும்பு ஆங்கில வாரஇதழ் …
-
- 0 replies
- 1.9k views
-
-
சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி உடன்பாடு இல்லை – கைவிரித்தார் பசில் பரந்துபட்ட அரசியல் கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் வேறொரு சின்னத்தில் பொது அணியாக போட்டியிடுவதற்கு இரண்டு கட்சிகளும் உடன்பாட்டுக்கு வந்திருப்பதாக அமைச்சர் எஸ்.பி. திசநாயக்க கூறியிருந்தமை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “ இதுதொடர்பாக சில பேச்சுக்கள் நடத்தப்பட்ட போதிலும் இன்னமும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. எஸ்.பி.திசநாயக்க கூறியதில் எந்த உண்மையும் கிடையாது. ஒர…
-
- 0 replies
- 411 views
-
-
நான்கு, ஐந்து இராஜதந்திரிகளே குழப்பம் விளைவிக்கின்றனர் – சிறிலங்கா அதிபர் குற்றச்சாட்டு சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்து நான்கு ஐந்து இராஜதந்திரிகள் மாத்திரம் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர் என ஸ்ரீலங்கா மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வெளிநாட்டு செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை எந்த ஒரு நாடும் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியபோது மைத்திரிபால சிறிசேன, “நான்கு அல்லது ஐந்து இராஜதந்திரிகள் மாத்திரம் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்…
-
- 0 replies
- 633 views
-
-
கோப்பாய் அஞ்சலி நிகழ்விற்கு தடங்கல் ஏற்படுத்த முயன்ற பாதுகாப்பு தரப்பு -முழுமையான படங்கள் November 27, 2018 மாவீரர் தினத்தை அனுட்டிக்க இன்று வடக்கு, கிழக்கில் தீவிர ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், கடந்த மூன்றாண்டுகளின் பின்னர் இம்முறை இராணுவ, பொலிஸ் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ளன. அஞ்சலி நிகழ்வுகளிற்கு தடைகோரி கோப்பாய், ஊர்காவற்றுறை, கொக்கட்டிச்சோலை பொலிசார் நீதிமன்றங்களை நாடியிருந்தனர். இதில் கோப்பாயில் அமைந்துள்ள 51வது படைத்தலைமையகத்திற்கு முன்பாக மாவீரர் தினம் அனுட்டிப்பதற்கு எதிராக இரண்டு முறை பொலிசார் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். இந்த நிலையில், இன்று காலையில்முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் எம்கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோ…
-
- 0 replies
- 435 views
-
-
மட்டக்களப்பில் மாவீரர் நாள் நிகழ்வில் குழப்பம் விளைவிக்கும் தீய சக்திகள் மட்டக்களப்பு மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக பிரதேச இளைஞர்களாலும் மக்களாலும் இடம்பெற்ற பணியினை இலங்கை இராணுவத்தின் கைக்கூலிகளும், இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களும் நேரடியாகவும் தொலைபேசி அழைப்பு மூலமாகவும் மிரட்டி முடக்க முயன்றனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மேலும், துயிலுமில்லத்தில் பணியினை மேற்கொண்ட இளைஞர்களின் புகைப்படங்களை இராணுவப் புலனாய்வாளர்களுக்கு வழங்கி நேரடியாக அவர்களால் மாவீரர் நாளுக்காக வேலை செய்த இளைஞர்களும் மக்களும் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டு தங்கள் கடமையைச் செய்த…
-
- 0 replies
- 503 views
-
-
தம்பர அமில தேரர் வெளியிட்ட சிறைக்கு செல்லவுள்ள முக்கியஸ்தர்களின் பெயர் பட்டியல் எதிர் வரும் காலங்களில் வெகு விரைவில் சிறைக்கு செல்லவிருக்கும் அனைவரினதும் பெயர் விபரங்களையும் தம்பர அமில தேரர் வெளியிட்டுள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தம்பர அமில தேரர் விரைவில் சிறைக்கு தண்டனை பெற்று செல்லவிருக்கும் நபர்களின் பெயர் விபரங்களையும் எந்தெந்த குற்றங்களுக்காக சிறைக்கு செல்லவுள்ளார்கள் என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளார். இதன் காரணமாகவே மஹிந்த தரப்பு மைத்திரியோடு இணைந்து ஜனநாயத்திற்கு எதிரான சதி முயற்சியில் இறங்கியுள்ளது என்றும் தெரிவித்தார். அந்த வகையில், 1. மூன்றரை கோடி ரூபாய் ஊழல் மோசடி எதிர் வரும் டிசம்பர் மாதம் 4ஆம் த…
-
- 0 replies
- 504 views
-
-
பிரதமர் அலுவலகத்தினை கட்சி நடவடிக்கைகளிற்கு பயன்படுத்துகின்றார் நாமல் பிரதமர் அலுவலகத்தினை நாமல் ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி நடவடிக்கைகளிற்கு பயன்படுத்துகின்றார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது. மகிந்தராஜபக்சவின் அரசாங்கம் என தெரிவிக்கப்படுவதில் எந்த பதவியையும் வகிக்காத நாமல் ராஜபக்ச பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தினை அரசியல் நடவடிக்கைகளிற்காக பயன்படுத்தி வருகின்றார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது. நாமல்ராஜபக்ச இந்த அலுவலகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பிரதேச உறுப்பினர்களை சந்தித்து வருகின்றார் எனவும் கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது. நவம்பர் 25 ம் திகதி நாமல் ராஜபக்ச பொதுஜனபெரமுனவின் சூரியவெ உள்ளுராட்சி ச…
-
- 0 replies
- 242 views
-
-
மாவீரர் நாளான இன்று தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி : November 27, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மாவீரர் நாளான இன்று தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலிசெலுத்தப்பட்டது. இதன் போது மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவீரர்களின் உறவினர்கள் பொதுமக்கள்அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். http://globaltamilnews.net/2018/104695/
-
- 0 replies
- 694 views
-
-
மாவீரர் நினைவு தினம்: குடாநாட்டில் பலத்த பாதுகாப்பு. தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும். இதனையொட்டி தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் நினைவஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளால் கடந்த 1989ஆம் ஆண்டுமுதல், கார்த்திகை மாதத்தில் வரும் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு, இறுதிநாளான 27ஆம் திகதி ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது. எனினும், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு கடந்த அரசாங்கம் தடைவிதித்திருந்ததோடு, நல்லாட்சியிலும் அதே நிலைமை தொடர்கிறது. எனினும், ஆங்காங்கே இரகசியமாக நி…
-
- 2 replies
- 540 views
-
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் கொடிகள், உருவப்படங்கள் காட்சிப்படுத்த தடை யாழ்ப்பாணம், வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சீருடைகள், அவற்றை அணிந்த உருவப்படங்கள், கொடிகள் என்பவற்றை காட்சிப்படுத்த ஊர்காவற்துறை நீதவான் அ.ஜூட்சன் தடையுத்தரவு வழங்கியுள்ளார். சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு தடையுத்தரவு வழங்க வேண்டுமென கோரி ஊர்காவற்துறை பொலிஸார் நீதிமன்றில் மனு தாக்கல் ஒன்றை செய்தனர். குறித்த மனு மீதான விசாரணை நேற்றைய தினம் (திங்கட்கிழமை)நீதிமன்றத்தில் எடுத்துகொள்ளப்பட்டபோது, விடுதலை புலிகள் அமைப்பின் சீருடைகள், அவற்றை அணிந்த உருவப்படங்கள், கொடிகள் என்பன காட்சிப்படுத்துவதற்கு தடை…
-
- 0 replies
- 283 views
-
-
மாவீரர்களை அச்சமின்றி நினைவுகூரும் நிலை உருவாகியுள்ளது: சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மைத்திரி – மஹிந்த தலைமையிலான அரசாங்கம் ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் மாவீரர் தினத்தை நினைவுக்கூருவதற்கு மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவின் கோரிக்கைக்கு அமைய மாங்குளம் கற்குவாறியைச் சேர்ந்த ஒருவருக்கு வீடு புனரமைப்பு செய்யப்பட்டு நேற்று (திங்கட்கிழமை) மாலை கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாட்டினுடைய அதியுயர் சபையாக கருதப்படுகின்ற நாடாளுமன்றம் இன்று கேலிக்குரி…
-
- 0 replies
- 339 views
-
-
மாவீரர் நாள் நிகழ்விற்கு எதிராக தடையுத்தரவு கோரும் கோப்பாய் பொலிஸார்! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வினை நடத்துவதற்குத் தடை உத்தரவை வழங்குமாறு கோப்பாய் பொலிஸார் மனு நகர்த்தல் பத்திரத்தினைத் தாக்கல் செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கோப்பாயில் 512ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், நீதிமன்றின் இந்தக் கட்டளையை நடைமுறைப்படுத்தும் வகையில் வீரசிங்கம் சிறீதரன் மற்றும் செல்வர…
-
- 0 replies
- 240 views
-
-
மட்டக்களப்பில் மாவீரர் தின நினைவேந்தலில் ஈடுபடுவதற்கு கடும் நிபந்தனைகள்! மாவீரர் நினைவு தின நிகழ்வுகளின்போது விடுதலைப் புலிகளின் சின்னங்கள், கொடிகள் மற்றும் பாடல்கள் என்பவற்றைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) மாலை குறித்த தடை உத்தரவினைப் பிறப்பித்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொக்கட்டிச் சோலை பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிமுன்மாரி, மாவீரர் துயிலம் இல்லத்தில் நினைவுதினம் அனுஷ்டிக்க ஏற்பாடு இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் குறித்த மாவீரர் துயிலுமில்லம் அரச காணியில் அமைந்திருப்பதாகவும், அங்கு நினைவுக்கல் நாட்டுவதாகவும் விடுதலைப் புலிகளின்…
-
- 0 replies
- 215 views
-
-
ஆயிரம் ரூபாவிலிருந்து பின்வாங்கப்போவதில்லை: ஆறுமுகன் தொண்டமான் தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொடுக்காமல் ஓயப்போவதில்லை என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார். மனித சங்கிலி போராட்டம் தொடர்பில் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மனித சங்கிலிப் போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸோ மற்றும் ஏனையவர்களே உரிமை கோர முடியாது. இது மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஒரு போராட்டமாகும். ஆயிரம் ரூபாய் அடிப்படை என்பது தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று …
-
- 0 replies
- 217 views
-
-
யாழ்.பல்கலை கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடம் புதுப்பொலிவுடன்…. http://globaltamilnews.net/2018/104666/
-
- 1 reply
- 563 views
-
-
தமிழ் மக்களின் உரிமைக்களுக்காக உயிர்நீத்த எமது விடுதலைவீரர்களை நினைவுகூரும் எமதுமக்களின் உணர்வினை எந்த எதிர்ப்பினாலும் தகர்த்துவிட முடியாது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாவீரர் நாள் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “யுத்தத்தில் உயிர்நீத்த தமது பிள்ளைகளை தாய், தந்தையர் நினைவுகூர்ந்து அழுவதையோ, தமது உடன் பிறப்புக்களை சகோதரங்கள் நினைவுகூர்ந்து தேற்றிக் கொள்வதையோ கூட சகித்துக்கொள்ள முடியாத தெற்கின் மனோநிலையை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளவேண்டும். தமிழ் மக்க…
-
- 7 replies
- 896 views
-
-
தமிழீழ விடுதலையின் அனைத்து அங்கங்களும் பலமான அத்திவாரத்திலலேயே கட்டியெழுப்பப்ட்டன. அதற்கென ஆழமான பார்வையும், நீண்ட தீர்க்கமான வரைமுறையும் உண்டு. இன்று ஆட்டம் கண்டு நிற்கும் தமிழ் வாழ்வியலில் இவை புறம்தள்ளப்பட்டுவிடுமோ என்ற பேரச்சம் காரணமாக அதனை விரிவாக மீண்டும் ஒரு முறை எடுத்து வருகின்றேன். பெருமை கொள் இவ்வரலாற்றை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். அவை தீர்க்கதரிசனத்துடன் முன்கூட்டியே பதியப்பட்டுள்ளன. 2005 மாவீரர் நாளுக்கு வெளியான இப்பதிவை இன்றைய சூழலில் எடுத்து வருவதில் பெருமனநிறைவடைகின்றேன். "தமிழரின் வீர வரலாற்றில் என்றோ மாண்டுபோன வீரமரபு, மீண்டும் மறுபிறப்பு எடுத்தது. அடிமைத்தனத்தின் அமைதியைக் குலைத்துக் கொண்டு, ஒரு புயல் எழுந்தது. சருகாக நெரிபட்ட தமி…
-
- 1 reply
- 1.9k views
-
-
நாட்டை காக்கவே முடிவெடுத்தேன் - மஹிந்த ஐக்கிய தேசியக் கட்சியால் செய்ய முடியாமல் போன நாட்டை காப்பாற்றுவதற்காகவே ஜனாதிபதி எங்களிடம் ஆட்சியை ஒப்படைத்தார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாங்கள் கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி தற்காலிக அரசாங்கம் ஒன்றினை அமைப்பதாகவே தெரிவித்திருந்தோம். இந்த அரசாங்கத்தின் மூலம் தொடர்ந்தும் ஆட்சியை கொண்டு செல்வதற்கான எதிர்பார்ப்பு எமக்கு இருக்கவில்லை. கூட்டு எதிர்கட்சியின் ஒரு சில உறுப்பினர்களே இந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது முழு நாட்டுக்கு…
-
- 12 replies
- 1.5k views
-