ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143283 topics in this forum
-
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள மாவீரர் பெற்றோர்கள் ஒருதொகுதி பேர் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் வைத்து கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். சுவீஸ் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் மக்கள் புனர்வாழ்வு கழகத்தின் ஏற்பாட்டில் 300 மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் 25.11.18 அன்று கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். கண்ணன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் தாயார் சிவபாக்கியம் அவர்கள் ஏற்றிவைக்க தொடர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு பொது மாவீரர் திருவுருவப்படத்திற்கு புதுக்குடியிருப்பு வணிகர் சங்கதலைவர் செ.செல்வச்சந்திரன் மற்றும் கண்ணன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மலர் வணகத்தினை தொடக்கிவைத்…
-
- 0 replies
- 1.6k views
-
-
கூட்டமைப்பு பொதுத்தேர்தலில் படுதோல்வியை சந்திக்குமாம் – மஹிந்த அணி ஆருடம்! பொதுத்தேர்தல் ஒன்று வந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் பின்னடைவை எதிர்நோக்கும் என அரசாங்கம் ஆருடம் கூறியுள்ளது. கண்டியில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இவ்வாறு ஆருடம் கூறியுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர், ” நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு இன்னும் ஐந்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். முக்கிய உறுப்பினர்கள் எம்முடன் இணையவுள்ளனர். உரிய நேரத்தில், உரிய வகையில் அந்த சம்பவம் நடைபெறும். பொதுத்தேர்தலொன்று நடத்தப்பட்டால் எமக்கே வெற்றி நிச்சயம். 120…
-
- 1 reply
- 600 views
-
-
யாழில் முதன்முறையாக விசாலமான அரும்பொருட் காட்சியகம்: சிவபூமி அறக்கட்டளையின் மற்றொரு சிறப்புப் பணி யாழ்.நாவற்குழியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க திருவாசக அரண்மனைக்கு எதிர்ப்பக்கத்தில் மூன்று மாடிகள் கொண்டதாக சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தினால் சிவபூமி அரும்பொருட் காட்சியகம் நிர்மாணிக்கப்படவுள்ளது. குறித்த அரும்பொருட் காட்சியகத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை(23-11-2018) பிற்பகல் இடம்பெற்றது. சிவபூமி அறக் கட்டளையின் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி- ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கை மனித நேய அமைப்பின் தலைவரும், அகில இலங்கை இந்துமாமன்றத்தின் …
-
- 1 reply
- 640 views
-
-
யாழில் வெளிமாவட்டத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை: டக்ளஸ் வெளிமாவட்ட தொழிலாளர்களுக்கு யாழ்.மாவட்டத்தில் தொழில்வாய்ப்பு வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நடமாடும்சேவை ஒன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் யாழ். மாவட்ட அரச அதிபர் நாகலிங்கன் வேதநாயகன் தலைமையில் இந்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்த…
-
- 3 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகள் மீள எழத் தொடங்கியுள்ளனர் – விமல் குற்றச்சாட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மீள எழத் தொடங்கியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி பத்து இலட்சம் கையொப்பங்களை திரட்டும் நோக்கில் நேற்று (சனிக்கிழமை) கடவத்தையில் ஆரம்பமான நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் உரையாற்றிய அவர், கடந்த மூன்றரை ஆண்டு காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள எழத் தொடங்கியமை பற்றிய விபரங்கள் புலனாய்வுத் தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இயங்கச் செய்வதற்கு ஆர்வம் அல்லது…
-
- 5 replies
- 997 views
-
-
யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் இருந்து 2 கிலோ ரி.என்.ரி வெடிமருந்து விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டம் கடற்கரைப் பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் இருந்தே நேற்று இரவு (24) விசேட அதிரடிப் படையினர் குறித்த வெடிமருந்தினை மீட்டுள்ளனர்.விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கொய்யாத் தோட்டம் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கொண்டு செல்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போதே விசேட அதிரடிப் படையினர் குறித்த வெடிமருந்தினை மீட்டுள்ளனர்.மீட்கப்பட்ட 2 கிலோ நிறையுடைய ரி.என்.ரி வெடிமருந்தினை விசேட அதிரடிப் படையினர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.யாழ்ப்பாணம் பொலிஸார் மீட்கப்பட்ட வெடிமருந்து தொடர்பில் …
-
- 1 reply
- 1.8k views
-
-
கல்வி மட்டம் குறைவடைந்துள்ளமைக்கு வட மாகாண சபையே பொறுப்பேற்க வேண்டும் – சரா புவனேந்திரன் வடமாகாணம் கல்வி மட்டத்தில் 9வது மாகாணமாக விளங்குவதற்கு வடமாகாண சபையே பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா புவனேந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் கலந்துரையாடல் நேற்று(சனிக்கிழமை) யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்றது. அந்த கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கல்வித் தரத்தில் வடமாகாணம் 9வது இடத்திலும், கிழக்கு மாகாணம் 8வது இடத்திலும் இருக்கின்றது. வடகிழக்கு …
-
- 2 replies
- 1.9k views
-
-
மும்மொழித் தேர்ச்சித் தகுதிப்பாட்டுப் பரீசீலனையுடன் உள்வாங்கப்படுகின்ற இலங்கைப் பொலிஸார் இற்றைவரைக்கும் சிங்கள மொழியிலேயே மக்களின் குற்றங்களையும், முறைப்பாட்டையும் பதிவு செய்து வருகின்றனர். பொலிஸாரின் இந்த மொழியறிவுப் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழ் மக்களே. முறைப்பாட்டைப் பதிவு செய்யும்போது முறைப்பாட்டில் தாம் சொல்வதைச் சிங்களத்தில் எழுதுகின்ற பொலிஸார், முறைப்பாட்டை முறைப்பாட்டாளர் கூறுவதுபோன்றே குறிப்பிடுவதில்லை என்பது இற்றைவரைக்கும் பிரச்சினையாகவே இருந்து வருகின்றது. அத்தோடு குற்றங்களைப் பதிவு செய்யும்போ…
-
- 2 replies
- 594 views
-
-
யுத்தத்தினை ஒழிக்க வழங்கிய ஒத்துழைப்பே தற்போதும் எமக்குத் தேவை: மஹிந்த யுத்த காலத்தில் எமக்கு வழங்கிய ஒத்துழைப்பினை மக்கள் தற்போதும் எமக்கு வழங்கவேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அரசியல் குழப்பநிலை தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், “நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் மக்களிடையே குழப்பநிலையைத் தோற்றுவித்துள்ளது. நாம் நாட்டு மக்களுக்கான சிறந்த ஆட்சியினை வழங்கத் தயாராகவுள்ளோம். எமது கடந்தகால ஆட்சியில் பயங்கரவாதத்தினைத் தோற்கடிப்பதற்கு மக்கள் எமக்கு வழங்கியிருந்த ஒத்துழைப்பு தற்போதும் …
-
- 0 replies
- 517 views
-
-
November 25, 2018 பிரதமரை நியமித்தல், முன்னாள் பிரதமரை பதவியிலிருந்து நீக்கியமை, பாராளுமன்றத்தை கலைத்தல் மற்றும் ஒத்திவைத்தல், அமைச்சரவையை கலைத்தமை போன்ற தன்னால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் சட்டபூர்வமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அரசியலமைப்பிற்கு முரணான எந்தவொரு நடவடிக்கையையும் தான் மேற்கொள்ளவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்…
-
- 1 reply
- 529 views
-
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நினைவு தூபி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் சங்கம் மட்டு காந்தி பூங்காவில் நினைவு தூபி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் சங்க தலைவர் கே. கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டு நகரசபை பிரதி மேஜர் எஸ்.சத்தியசீலன் மாநகரசபை ஆணையாளர் கே. சித்திரவேல் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு இந்து சமய சடங்குகளுடன் நினைவு தூபிக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துனர். குறித்த நினைவு தூபி பேனா வடிவிலான தூபியாக அமைக்கப்படவுள்ளமை குறிப்பிப்படவுள்ளது http://www.virakesari.lk/article/45160
-
- 0 replies
- 314 views
-
-
தீவகம் வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாவீரர்களின் பெற்றோர் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், சமூக மட்ட பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மாவீரர்களின் கல்லறைகளிலும், மாவீரர்களின் சிதைவடைந்த நினைவிட சிதறல்களிலும் (நினைவிடத்திலும்) மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். https://newuthayan.com/story/14/தீவகத்தில்-மாவீரர்-நினைவேந்தல்.html
-
- 0 replies
- 388 views
-
-
இலங்கை அரசியலில் உலகப் பிரசித்தி பெற்ற இராஜதந்திரியாக உருவெடுத்தவர் ஜே.ஆர் ஜெயவர்த்தன. இவர் ஒரு முழுநேர அரசியல்வாதி. தனது மூளைப்பலத்தால், உள்நாட்டு அரசியல், பிராந்திய அரசியல், பன்னாட்டு அரசியல் என எல்லா மட்டங்களிலும் தனது ஆளுமையைச் செலுத்தியவர். உயர் கல்வி, உயர் சாதி மதிப்பு, பண பலம் என எல்லாம் கிடைக்கப் பெற்ற நபர். அவரிடமுள்ள மிக முக்கியமான விடயம் அல்லது மற்றவர்கள் விரல் சுட்டிக் குற்றம் சுமத்த முடியாத விடயம் அவரிடம் நூறு ரூபா கூட ஊழல் இல்லாததே. இந்த நபருடன் ஒப்பிடக்கூடிய ஒரு தமிழரோ, முஸ்லிமோ இல்லை. இந்த ஊழல் விடயத்தில் மிகவும் கண்ணியமான ஒருவராக இன்று…
-
- 0 replies
- 617 views
-
-
வியர்வை துளிகளின் கூட்டமைப்பு (டாபிந்து கூட்டியக்கம்) அமைப்பின் ஏற்பாட்டில் “எனது குரலுக்கு செவிமடுங்கள்” எனும் தொனிப்பொருளில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்திட்டம் வவுனியாவில் நடைபெற்றது. வவுனியாவில் தனியார் விடுதியில், மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் அமைப்பின் முக்கியஸ்தர்கள் அங்கத்தவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். வவுனியாவைச் சேர்ந்த ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான பெண்களும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். பெண்களிற்கெதிரான சர்வதேச வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினமான இன்று இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்த…
-
- 0 replies
- 820 views
-
-
புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருக்கின்றேன் – ஜனாதிபதி! நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய பெரும்பான்மையை நிரூபித்தால், புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிகையான “சண்டே டைம்ஸ்” க்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெரும்பான்மை இருந்தால் அவர் எந்த தடையுமின்றி பிரதமராக நீடிக்கலாம். அவருக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்று நிரூபிக்கப்பட்டால், அவர் ஒரு முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன். அத்தோடு மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ற்கான வாய்ப்பு இல்லை. நானே பதவியில…
-
- 2 replies
- 632 views
-
-
நாட்டின் அரசியல் குழப்ப சூழலில் தமிழ், முஸ்லிம் சமூகமும் அவர்களின் கட்சிகளும் மிகவும் நிதானமாகநடந்து கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா உலமா கவுன்சில் தெரிவித்துள்ளது.இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால தனக்கிருக்கும் அதிகாரத்தை வைத்து ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி மஹிந்த ராஜபக்ஷவை நியமித்ததை தொடர்ந்து இது விடயத்தில் நாடு இரண்டாக பிளவு பட்டுள்ளது. ஒரு தரப்பு ரணிலுக்கு ஆதரவாகவும் இன்னொரு தரப்பு மைத்திரி - மஹிந்தவுக்கு ஆதரவாகவும் உள்ளது.இந்த நிலையில் முஸ்லிம் தமிழ் கட்சிகள் நடு நிலை வகிப்பதற்கு பதிலாக ஒரு பக்க சார்பை காட்டுவதில் தீவிரமாக இருப்பது…
-
- 0 replies
- 310 views
-
-
சந்திரிகா -ரணில் புதிய கூட்டணி! November 25, 2018 இலங்கை அரசியலில் அதிரடி திருப்பமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கும், ஐக்கிய தேசியக்கட்சிக்குமிடையில் கூட்டணி குறித்த பேச்சுக்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. சுதந்திரக்கட்சியின் ஒரு அணியை இழுத்தெடுத்து, புதிய அணியை உருவாக்கியுள்ள சந்திரிகா குமாரதுங்க, அந்த அணியுடன் ஐக்கிய தேசிய முன்னணியுடன் உருவாகும் புதிய கூட்டணியில் தேர்தலை சந்திக்கிறார். இரண்டு தரப்பிற்குமிடையில் தேர்தல் கூட்டணி குறித்த இணக்கப்பாடுகள் எட்டப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கிவிட்டு, மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கியதன் மூலம் இலங்கை அரசியலில் கொந்தளிப்பான …
-
- 0 replies
- 492 views
-
-
மகிந்த ராஜபக்ச தரப்பினரை நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்கடிப்பதற்கு உதவிய- ஒக்டோபர் 26 ம் திகதிக்கு பின்னர் ஜனநாயகத்திற்கான நிலைப்பாட்டில் தடுமாற்றமின்றி காணப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இலக்குவைக்கும் நடவடிக்கைகளை மகிந்தராஜபக்சவிற்கு ஆதரவான சமூக ஊடகங்கள் முன்னெடுத்துள்ளன என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகரசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கன் எயர்லைன்சில் பணியாற்றிய பின்னர் நாமல்ராஜபக்சவின் உதவியுடன் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றியவருமான செனானி சமரநாயக்க தனது டுவிட்டர் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை இலக்குவைத்து கருத்துக்களை பதிவு செய்கின்றார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 453 views
-
-
வலி.மேற்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கடுமையாகத் தாக்கியுள்ளார். அத்துடன், முன்னணியின் உறுப்பினருடன் சென்ற இளைஞன் ஒருவரையும் ஈபிடிபி உறுப்பினரின் புதல்வர்கள் மற்றும் அவர் சார்ந்த கும்பல் வாளால் வெட்டிக்காயப்படுத்தினர். இந்தச் சம்பவத்தை பொலிஸ் நிலையத்துடனேயே முடிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு வழங்கியுள்ள அழுத்தத்தால், பொலிஸார் மூடி மறைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர். பொலிஸாரின் இந்த நடவடிக்கை சமூகப் பிரச்சினையாக பூதாகாரமாகும் பதற்ற நிலை வட்டுக்கோட்டையில் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கார்த்திகை விளக்கீடு நாளான நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இ…
-
- 0 replies
- 381 views
-
-
மாவீரர்கள் நினைவேந்தலுக்கு என பணம் வசூலிக்கும் குழு தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை! மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர்கள் நினைவேந்தலுக்கு என பணம் வசூலிக்கும் குழு தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் சிலர் இவ்வாறு மாவீரர் நினைவேந்தலுக்கென பணம் வசூலிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதாகவும் அவ்வாறானவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும் மட்டக்களப்பு மாவீரர் தின ஏற்பாட்டுக்குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். எந்தவித பண வசூலிப்பினையும் செய்யுமாறு கோரப்படவில்லையெனவும் சிலர் தங்களது சொந்த தேவைக்காக மாவீரர் தின நிகழ்வினை பயன்படுத்தமுனைவதாகவும் ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்…
-
- 0 replies
- 341 views
-
-
தமிழ் மக்கள் பேரவையிலிருந்து புளொட் அமைப்பு வெளியேற்றப்படவில்லை – சித்தார்த்தன் தமிழ் மக்கள் பேரவையில் இருந்து புளொட் அமைப்பு வெளியேற்றப்படவில்லை என அந்த அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ஆதவனின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அண்மையில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திலிருந்து புளொட் அமைப்பு வெளியேற்றப்பட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள் தம்மிடம் மன்னிப்பு கோரியதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும், தமிழ் மக்கள் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையென அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், தமிழ் ம…
-
- 0 replies
- 349 views
-
-
ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சிக்கல்! நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அவராலேயே மீளப்பெற்றுக் கொள்ள முடியாது என தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்த வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற்றுக் கொள்ளவோ அல்லது இரத்து செய்யவோ ஜனாதிபதிக்கே சட்ட ரீதியான அதிகாரம் கிடை…
-
- 0 replies
- 306 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் மருத்துவர்களின் ஆலோசனைக்கு இணங்க மாட்டிறைச்சி சம்பந்தமான உணவுகள் உட்கொள்வோர் உள்ளமையினால் சபையால் நிறைவேற்றப்பட்ட ”மாடு வெட்டத் தடை” தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்து தடையை நீக்குமாறு கோரி நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட 80, குடும்பங்களைச் சேர்ந்தோர் சபையிடம் தமது கையொப்பங்கள் அடங்கிய கோரிக்கையை கையளித்துள்ளனர். கடந்த செப்ரெம்பர் மாதம் நடைபெற்ற மாதாந்த அமர்வில் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கக்கோரி உறுப்பினர் மதுசுதன் கொண்டு வந்…
-
- 17 replies
- 1.9k views
-
-
சிறிலங்கா அரசியல்வாதிகள், குடும்பத்தினருக்கு எதிராக அனைத்துலக தடை தற்போதைய அரசியல் நெருக்கடிகள் நீடித்தால் சிறிலங்கா மீது தடைகளை விதிப்பது குறித்து சில நாடுகள் சிந்தித்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, வெளிநாட்டு நிதி உதவிகள் மற்றும் வேறு வடிவிலான உதவிகள் நிறுத்தப்படலாம் என்றே எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்போது, சில நாடுகள், வேறு விதமான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலமைப்பு மீறல்களுக்கு நேரடிப் பொறுப்பாக இருக்கும், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மீது சில நாடுகள் தடைகளை விதிக்கக் கூடும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. http:/…
-
- 0 replies
- 262 views
-
-
மகிந்தவின் தரப்பில் இரகசியப் பேச்சு நடத்தியவர்கள் – அம்பலமானது விபரம் மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுடன், இரகசியப் பேச்சுக்களை நடத்திய சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணி குழுவினர் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன. நான்கு பேர் கொண்ட, அரச தரப்புக் குழுவே கடந்த செவ்வாய்க்கிழமை இந்த இரகசிய சந்திப்பை நடத்தியிருந்தது. அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவின் தலைமையிலான இந்தக் குழுவில் அமைச்சர் மகிந்த சமரசிங்க, அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த மற்றும், கூட்டு எதிரணியின் வெளிவிவகாரக் குழு உறுப்பினராக இருந்த தரிந்து பாலசூரிய ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ரொரிங்டன் அவென்யூவில் உள்ள கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினனின் இல்லத்தில் இந்தச் …
-
- 0 replies
- 241 views
-