ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
முதலமைச்சர் உரையாற்றும் போது ஆபாசப்படம் பார்த்துக் கொண்டிருந்த உறுப்பினர்கள் மேல் மாகாணசபையில் நேற்று வரவுசெலவுத் திட்ட உரையை முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய நிகழ்த்திக் கொண்டிருந்த போது, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள், ஆபாசப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மேல் மாகாணசபையின் புதிய சபா மண்டபத்தில் நேற்று 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், முதலமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது. முதலமைச்சர் வரவுசெலவுத் திட்ட உரையை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள், ஆபாசப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பத்தரமுல்லவில் அமைக்கப்பட்ட புதிய சபா மண்டபத்தில், மாகாண சபை உறுப்பினர்களு…
-
- 2 replies
- 1.8k views
-
-
சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க ஐ.தே.க. தீர்மானம்! நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணான வகையில் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதென்றும், அதற்கெதிராக சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். அதன் பிரகாரம் எதிர்வரும் 24ஆம் திகதி கண்டியிலும், 27ஆம் திகதி களுத்துறையிலும், டிசம்பர் 3ஆம் திகதி கொழும்பிலும், டிசம்பர் 4ஆம் திகதி கிரிபத்கொடயிலும் உண்ணாவிரத போராட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அரசாங்கம் ஒன்று இல்லையென்றும், அதனால் புத…
-
- 0 replies
- 636 views
-
-
கண்ணிவெடி அகற்றும் பகுதிக்கு இங்கிலாந்து வீரர்கள் விஜயம்! இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கட் அணியின் சில வீரர்கள் மன்னாருக்குச் சென்றுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) அங்கு சென்ற அவர்கள், பெரியமடு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை நேரடியாக பார்வையிட்டுள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் ஜோ ரூட் உள்ளிட்ட வீரர்கள், பெரியமடு பகுதியில் இடம்பெறும் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிட்டதோடு, அதன் செயற்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்தனர். இங்கிலாந்து அரசின் நிதி உதவியுடன் ‘மெக்’ என்ற கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற அமைப்பு, பெரியமடு காட்டுப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்…
-
- 3 replies
- 720 views
- 1 follower
-
-
தமிழ் மக்களிற்கு ஆபத்தான சூழ்நிலை உருவாகலாம்- இராஜதந்திரிகளிடம் கூட்டமைப்பு இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் மோசமான விளைவுகள் ஏற்படலாம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளனர் ; தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிற்கும் இடையில் இன்று கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர். நாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் பாராதூரமான விளைவுகள் உருவாகலாம் இது …
-
- 2 replies
- 1.8k views
-
-
November 19, 2018 பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் என சொல்லப்படுவது ஒரு நிழல் அரசாங்கம் ஆகும். அதன் பிரதமர் எனப்படும் மகிந்த ஒரு நிழல் பிரதமர் ஆகும். அதன் அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் நிழல் அமைச்சர்கள் ஆவர். இவர்களின் முழு நேர தொழில் இன்று பாராளுமன்றத்தில் மிளகாய் பொடி தூவுவதும், நமது ஆட்சி ஆரம்பித்து வைத்த “கம்பெரலிய” என்ற ஊரெழுச்சி வேலைத்திட்டங்களை இடை நிறுத்தி வைப்பதும் ஆகும். எனவே இந்த மிளகாய் பொடி ஆட்சியின் நிதி நடவடிக்கைகளை முடக்க நாம் தீர்மானித்துள்ளோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். …
-
- 5 replies
- 757 views
-
-
ஜனாதிபதி தேர்தல் நடந்தால் மீண்டும் பொது வேட்பாளர் பொதுத் தேர்தலுடன் ஜனாதிபதி தேர்தலையும் நடத்த முடியுமா என்பது தொடர்பாக தற்போது ஆராயப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மைத்திரி தரப்பினர் இது தொடர்பாக ஆராய்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல தீர்மானிப்பராக இருந்தால் அந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக போட்டியிடுவார் என தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமாக இருந்தால் ஐக்கிய தேசிய கட்சியினால் இம்முறையும் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3) …
-
- 0 replies
- 424 views
-
-
மகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம் இலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்வரலாம் என இலங்கையிலுள்ள முக்கிய வெளிநாட்டு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை பிடிவாதமான பாதையில் செல்ல தீர்மானித்தால், இந்த சதிமுயற்சியில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக விசா தடை விதிக்கப்படலாம் என தெரிவித்துள்ள இராஜதந்திர வட்டாரங்கள் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளன http://www.virakesari.lk/article/44869
-
- 0 replies
- 766 views
-
-
பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம்- மங்களசமரவீர இலங்கை முன்னொருபோதும் சந்திக்காத பாரிய பொருளாதார குழப்பத்தை எதிர்கொள்ளும் நிலையிலுள்ளது என மங்களசமரவீர கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அறிக்கையொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 26 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பொறுப்பற்ற நடவடிக்கைகள் இலங்கை உடனடியாக செலுத்தவேண்டிய கடனை கூட செலுத்த முடியாத ஆபத்தை எதிர்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2014 ஜனவரியில் ராஜபக்ச பெற்ற கடனிற்காக 2019 ஜனவரியில் நாங்கள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ள மங்கள சமரவீர கடன்களை மீளச்செலுத்தும் விடயமும் பாராளுமன்றத்தின் கீழ் வருகின்றது எனவும் தெரிவித…
-
- 0 replies
- 1.7k views
-
-
பாராளுமன்றத்திற்கே இந்த நிலையெனில் சிறுபான்மையினரின் கதியென்ன? November 18, 2018 இலங்கையில் உயரிய சபையாகவும் ஜனநாயகத்தின் முழுவடிவமாகவும் உள்ள நாடாளுமன்றத்திற்கே குழப்ப நிலையென்றால் சிறுபான்மை மக்களின் நிலமை என்ன என்பதில் சர்வதேச சமூகம் அக்கறைகொள்ள வேண்டுமென சிவில் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே சிறுபான்மை மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எந்தவொரு அரசாங்கமும் முன்வரப்போவதில்லையென்பதை அண்மைக்கால அரசியல் நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியம் உட்பட பல்வேறு அமைப்புகள் இந்த கோரிக்கையினை சர்வதேச சமூகத்திடம் முன்வைத்துள்ளன. வடக்கு கிழக்கு மக்களுக்கான தீர்வினை வழங்கும் வகையில் சர்வதே…
-
- 3 replies
- 927 views
-
-
November 20, 2018 யாழ் மாவட்டத்தில் ஜனவரிமாதம் முதல் இன்று வரை 915 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலளவியல் திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவிப்பணிப்பாளர் பிரதீபன் தெரிவித்தார். அத்தோடு நவம்பர் மாதம் வரை 611.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில், நவம்பர் மாதம் முதல் இன்றுவரை 300.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது. இது சென்ற வருடத்தினோடு ஒப்புடுகையில் குறைவான அளவாக உள்ளதாகவும்,நவம்பர் மாதம் முடிவடைவதற்கு 10 நாட்கள் வரை இருக்கும் நிலையில் மழைவீழ்ச்சியின் அளவு அதிகரிக்கலாம் என எதிர்பார…
-
- 0 replies
- 1.1k views
-
-
November 20, 2018 ஜனாபதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை கடுமையாக எச்சரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் குறித்த உறுப்பினர்கள் நடந்துக்கொள்ளும் விதம் குறித்தே மஹிந்த எச்சரித்துள்ளார். அத்துடன் நாடாளுமன்றத்துக்குள் ஒழுக்கமாக நடந்துக்கொள்ளுமாறும், குழப்பங்கள் விளைவிப்பதன் மூலம் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்க முடியாதென்றும் கலந்துரையாடல்கள் மூலமே பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமென்றும் மஹிந்த இதன்போது தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 346 views
-
-
November 20, 2018 தமிழ்தேசிய கூட்டமைப்பு பச்சை நிறத்தின் மீது காதல் கொண்டு நிபந்தனை இல்லாமல் ஜ.தே.கட்சியை அல்லது ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவா ஜிலிங்கம், தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , சமகாலத்தில் உள்ள அரசியல் நிலமையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பேரம் பேச கூடிய சக்தியுடன் இருந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதா? ரணிலை ஆதரிப்பதா? என்பதல்ல இப்போதுள்ள பிரச்ச…
-
- 0 replies
- 999 views
-
-
November 20, 2018 பாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் காவற்துறை மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாக வழக்கறிஞர் சுனில் வடகல தெரிவித்துள்ளார். ஜனநாயகத்திற்கான வழக்கறிஞர்கள் என்ற பெயரில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த தினங்களில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பில் இதுவரையில் யாரும் முறைப்பாடு செய்யவில்லை எனவும் அவ்வாறு முறைபாடு ஒன்று செய்யப்படுமா என வழக்கறிஞர்கள் என்ற ரீதியில் எதிர்ப்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 245 views
-
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு முன்னாள் பிரதி அமைச்சர் கருணா பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். எனினும் அவருக்கு இன்றைய தினம் கருணா பிந்திய பிறந்தநாள் அதில், ‘இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனது தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, இலங்கையில் உங்களது சேவைக்கு நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்…கருணா. http://mutamil.com/archives/50340 வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
-
- 0 replies
- 621 views
-
-
இலங்கை தேசத்தின் மதிப்பிலும், பண்பாட்டிலும் அதன் இனங்களும் ,கலாசார பாரம்பரியங்களும் செல்வாக்குச் செலுத்துகின்றன, அந்தவகையில் இலங்கையின் பெரும்பான்மை இனமாக சிங்களவர்கள் இருந்தாலும் அவர்களிடம் " குலய" என்ற சாதி முறை செல்வாக்குச் செலுத்துவதுடன் ,அதனை அவர்கள் தமது பாரம்பரிய அடையாளமாகவும் கொண்டுள்ளனர், அவ்வாறான அடையாளத்திற்கு உதவி புரிந்த முஸ்லிம் முன்னோர் பற்றிய பதிவே இதுவாகும், #அறிமுகம், பேருவளைப் பிரதேசத்தின், களு கங்கையைச் சுற்றி உள்ள "களுமோதர" பிரதேசத்தின் வளர்ச்சி, பண்பாடு, வாழ்வியல் ,பனசல, பிக்குகளின் நடைமுறை என்பதில் "சலாகம" என்ற குலத்தினரின் பங்கு மிக அதிகமாகும், இவர்கள் இன்று நாட்டின் பல பாகங்களில் பரவி வாழ்ந்தாலும், வரலாற்றில் இத் தேசத்திற்கான…
-
- 16 replies
- 2.9k views
-
-
நிதி தொடர்பான பிரேரணைகளை எதிர்க்கட்சி முன்வைக்க முடியாது – தினேஸ் போர்க்கொடி நிதி தொடர்பான பிரேரணைகளை அரசாங்கத் தரப்பே நாடாளுமன்றத்தில் முன்வைக்க முடியும் என்று அவைத் தலைவரான அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். சிறிலங்கா பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை இடைநிறுத்தும், பிரேரணை ஒன்றை நேற்று நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஐதேகவினர் முன்வைத்தனர். அத்துடன், இந்தப் பிரேரணை சபாநாயகரிடமும் கையளிக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தினேஸ் குணவர்த்தன, “எதிர்க்கட்சியினர் இந்தப் பிரேரணையை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதனை பிரதி சபாநாயகரிடம் எழுத்துமூலமே சமர்ப்பிக்க ம…
-
- 0 replies
- 490 views
-
-
மகிந்த தரப்பிற்கு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு யாரிடம்? ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன மகிந்த ராஜபக்ச தரப்பிற்கு பெரும்பான்மையை பெற்றுக்கொடுப்பதற்கான பொறுப்பினை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூனறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைத்துள்ளார். மகிந்த ராஜபக்ச தரப்பிற்கு பெரும்பான்மையை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் கடந்த சில வாரங்களாக பசில் ராஜபக்ச ஈடுபட்டுவந்த நிலையில் தற்போது அந்த பொறுப்பிளைன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் திலங்கா சுமதிபால எஸ்பி திசநாயக்க லக்ஸ்மன் வசந்த பெரேரா ஆகியோரிடம் சிறிசேன வழங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியின் உத்தரவை தொடர்ந்து திலங்க சுமதிபால ஐக்கியதேசிய கட்சியின் பல உறுப்பினர்களையும் சிறுபான்மை…
-
- 0 replies
- 442 views
-
-
நாடாளுமன்ற சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களிடம் நட்டஈடு! நாடாளுமன்ற சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த உறுப்பினர்களிடமிருந்து நட்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆராய்வதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஒன்பதாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டதுடன், ஜனவரி ஐந்தாம் திகதி பொதுத் தேர்தலை நடத்துமாறும் அறிவுறுத்தியிருந்தார். இதற்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த 12ஆம் திகதி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தன. இந்த மனுவை விசாரித்த மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு, நாடாளுமன்றத…
-
- 0 replies
- 469 views
-
-
நாட்டை படுகுழியில் தள்ள கொடிய சூழ்ச்சி இடம்பெறுகிறது: ஐ.தே.க. தலைவர் நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்து பெற்றுக்கொண்ட ஜனநாயக, மனித உரிமைகள் மற்றும் கௌரவத்தை அழித்து படுகுழியில் தள்ள கொடியதோர் சூழ்ச்சி இடம்பெறுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இச்சந்தர்ப்பத்தில் நபிகளின் வாழ்க்கை முன்மாதிரியானது, ஆட்சியமைப்புக்கும் இன்றைய சூழ்நிலைக்கும் அவசியமாக உள்ளதென்றும், அதனை பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மீலாதுன் நபி பிறந்ததினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இச்சந்தர்ப்பத்தில் தமது பொறுப்பினை கைவிடாது அமைதியான, கண்ணியமான தேசத்திற்காக பாடுபடும் சக…
-
- 0 replies
- 566 views
-
-
பெரும்பான்மையினரை மையப்படுத்தியே அரசியல் நகர்வுகள் இடம்பெறுகின்றன: சி.வி இலங்கையில் பெரும்பான்மையினரின் கருத்தையும் அவர்களின் மதத்தையும் அடிப்படையாக கொண்டே அரசியல் நகர்வுகள் நடைபெறுகின்றது. இதனால் தமிழ் மக்கள் பற்றிய சிந்தனைகள் இவர்களிடம் ஒரே விதமாகவே காணப்படுகின்றதென வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஆட்சியாளர்களிடம் தமிழ் மக்கள் பற்றிய சிந்தனைகளில் வேறுபாடில்லை. இதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த …
-
- 0 replies
- 815 views
-
-
குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரியின் இடமாற்றம் ரத்து! – ஜனாதிபதி உத்தரவு குற்றப்புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரியான நிசாந்த சில்வாவின் இடமாற்றம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கமைய பொலிஸ் ஆணைக்குழு இதனை ரத்து செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்டமை, பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான பல வழக்குகளில் நிசாந்த சில்வா விசாரணை அதிகாரியாக செயற்பட்டுள்ளார். குறிப்பாக சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை, ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்டமை, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்…
-
- 0 replies
- 420 views
-
-
மகிந்தவிடம் இருந்து மீட்ட நாட்டை, மைத்திரியிடமிருந்து பாதுகாக்க வேண்டும்… November 19, 2018 ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அவரது அரசாங்கத்திடமிருந்து நாட்டினை மீட்டெடுப்பதற்காகவே 2015 ஆம் ஆண்டில் அனைவரும் ஒன்றிணைந்து போராடி மைத்திரிபால சிறசேனவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது ஜனநாயகத்தினை சீர்குலைக்கும் அவரிடமிருந்து நாட்டினைப் பாதுகாக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளதாக கவலைவெளியிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில. கருத்து வெளியிட்ட அவர், 2015 ஜனவரி மாதம் மைத்திரிபால சிறிசேன…
-
- 0 replies
- 693 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் மைத்திரிபால சிறிசேன… November 19, 2018 பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் நேற்றைய தினம் இடம்பெற்ற சர்வ கட்சி சந்திப்பின்போது தம்மால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுவதற்கு பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் சகல கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளமை தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, அரசியலமைப்பின் பிரகாரம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைவாக புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமித்ததன் பின்னர் ஒரு சில தரப்பினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் ஜனா…
-
- 0 replies
- 605 views
-
-
இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் கொலை – சந்தேக நபர்களுக்கு நிபந்தனையுடனான பிணை November 19, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உப காவல்துறைப் பரிசோதகர் ஹேமச்சந்திரா சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் கடும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகரின் வாகனத்துக்கு பாதுகாப்பு வழங்கிச் சென்ற காவல்துறை உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளை இடைமறித்த ஒருவர், அவருடைய கைத்துப்பாக்கியைப் பறித்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். சம்பவத்தில் படுகாயமடைந்த சார்ஜன்ட் ஹேமாவகே சரத் ஹேமச்சந்திர ய…
-
- 0 replies
- 301 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இன்று மத்திய சுகாதார அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நடமாடும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு என வர்ணிக்கப்படும் பென்ஸ் ரக அதிநவீன நோயாளர் காவுவண்டி ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது , அண்மையில் மத்திய சுகாதார அமைச்சு ஒரு தொகுதி அதி நவீன நோயாளர் காவுவண்டிகளை இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளுக்குப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. இதன்பிரகாரம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உட்பட வடமாகாண வைத்தியசாலைகள் சிலவும் இந்த நோயாளர் காவுவண்டிகளைப் பெற்றிருந்தன. எனினும் வடக்கில் உள்ள பிரதான பொது வைத்தியசா…
-
- 0 replies
- 757 views
-