Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இது அறத்தின் பால் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு… மகிந்த ராஜபக்ஸவை தமிழ் மக்களிடம் இறைவன் மண்டியிட வைத்துள்ளான். இது அறத்தின் பால் வழங்கப்பட்டிருக்கின்ற ஒரு தீர்ப்பாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களுக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு நிரந்தரமான தீர்வை பெற்றுத்தரக்கூடிய வகையில் அரசியல் யாப்பை அமுல் படுத்தவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்மக்களின் உரிமைக்கான போராட்டத்தை நசிக்கியது மட்டுமல்லாது பல்லாயிரக்கணக்கான தமிழர்களை முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்று கொத்துக்கொத்தாக கொன்று குவித்து விட்டு இன்று அதே தமிழ் மக்க…

  2. கிளிநொச்சி வைத்தியசாலைகளில் நிரந்தர வேலைவாய்ப்பினை இல்லாதொழிக்கும் யோசனைக்கு கடும் விசனம்…. November 5, 2018 1 Min Read November 5, 2018 Add Comment Share This! குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் சுகாதாரப் பணி உதவியாளர் நியமனங்களை மேற்கொள்வதன் மூலம் மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு காலத்திற்குக் காலம் நிரந்தர அரச வேலைவாய்ப்பினை வழங்கும் நீண்டகால நடைமுறை தற்போது இல்லாது போகும் ஆபத்து நேர்ந்துள்ளதாக சுகாதார துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது கிளிநொச…

  3. அரசியலில் பாரிய மாற்றம் நான் சொன்னதே நடந்தது – இனி முஸ்லீம் ஏகாதிபத்தியம் கிழக்கில் இல்லை - கருணா அம்மான் October 28, 2018 குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் இலங்கையின் அரசியலில் பாரிய ஏற்படும் என கடந்த ஓகஸ்ட் மாதத்தின் இறுதிப் பகுதியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்தார். தான் இதனையே எதிர்வு கூறியதாக கருணா தெரிவித்துள்ளார். இதேவேளை குரோதங்களை மறந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக தமது தலைவர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கருணா குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜபக்சவுடன் இண…

  4. ஐதேகவுக்கும், அனைத்துலகத்துக்கும் பலம் காட்ட கொழும்பில் இன்று ஜன மகிமய கி.தவசீலன்Nov 05, 2018 | 2:30 by in செய்திகள் ‘ஜன மகிமய’ என்ற பெயரில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று கொழும்பில் பாரிய பேரணியை நடத்தவுள்ளது. பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஆதரவு தெரிவித்தே, இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ள இந்தப் பேரணியில், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கவுள்ளனர். இதனை முன்னிட்டு, 1500 காவல்துறையி்னர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிறப்பு அதிரடிப்படையினரும் பாதுகாப்பில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவும், நாடாளுமன்ற…

  5. இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தாய்மண் இதற்கு முன்னர் எப்பொழுதும் இவ்வாறானதொரு நெருக்கடியான சூழ்நிலையை சந்திந்திருக்கவில்லை என்பதை சபாநாயகர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். https://www.newsfirst.lk/tamil/2018/11/சபாநாயகர்-கரு-ஜயசூரிய-வி/

  6. சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை November 5, 2018 சபாநாயகர் கரு ஜயசூரிய, தான் விரும்பியவாறு நாடாளுமன்றத்தை கூட்டுவாராயின், அவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு, ஆளும் தரப்பு ஆராய்ந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை, ஜனாதிபதியே விடுக்கவேண்டும். வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும், நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான இயலுமை, சபாநாயகருக்கு இல்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது. இந்தநிலையில் ஒத்திவைக்கப்பட்ட திகதிக்கு முன்…

  7. மஹிந்தவிற்கு, பிரதமர் ஆசனம் இல்லை – கரு ஜயசூரிய புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவருக்கு பிரதமர் ஆசனம் வழங்கப்படாது என்றும், புதிய அரசாங்க உறுப்பினர்கள் தொடர்ந்தும் எதிர்கட்சியிலேயே அமர வேண்டும் எனவும் இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வழங்கிய வாக்குறுதிக்கு விரோதமாக செயற்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி அல்லது 7 ஆம் திகதிக்கு கூட்டுவதாக தனக்கு வாக்குறுதி வழங்கியிருந்த போதும் அவர் அதனை மீறியுள்ளதாக கரு ஜயசூரிய குற்றம் சாட்டியுள்ளார். ஜனாதிபதியின் இவ்வாறான செயற்பாடு அ…

  8. யாழில்.. கொள்ளைக் கும்பலுடன், வர்த்தகர் ஒருவர் கைது! யாழில் நகைகளை கொள்ளையடித்து வந்த கொள்ளை கும்பலையும், அவற்றை கொள்வனவு செய்து வந்த வர்த்தகர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். தென்மராட்சி பகுதியிலுள்ள வங்கி ஒன்றின் முகாமையாளர் கடந்த வாரம் வங்கியிலிருந்து வீடு திரும்பிய வேளை மோட்டார் சைக்கிளில் வந்த இரு கொள்ளையர்கள் முகாமையாளர் அணிந்திருந்த மூன்றரைப் பவுண் தங்க சங்கிலியை அறுத்து சென்றனர். கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிள் இலக்கத்தை அடையாளம் கண்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முகாமையாளர் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மோட்டார் சைக்கிளின் உரிமையாளரை நேற்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) கைது செய்தனர். …

  9. புதுடெல்லி – மகிந்த இடையில் நம்பிக்கையோ, புரிந்துணர்வோ கிடையாது – பேராசிரியர் முனி புதுடெல்லிக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் எந்தவிதமான பரஸ்பர நம்பிக்கையே புரிந்துணர்வோ கிடையாது என்றும், ராஜபக்சவின் மீள் வருகையையிட்டு இந்தியா நிச்சயம் மகிழ்ச்சியடையவில்லை என்றும், இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியும், தெற்காசிய விவகாரங்களுக்கான நிபுணருமான பேராசிரியர் எஸ்.டி முனி தெரிவித்துள்ளார். The Straits Times இதழில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றிலேயே பேராசிரியர் எஸ்.டி முனியின் கருத்து இடம்பெற்றுள்ளது. “வெளிப்படையாக எதையும் கூறாவிடினும், ராஜபக்சவின் மீள்வருகை இந்தியாவுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவுக்கு ( புதுடெல்லியின்) அமைதியான ஆ…

    • 0 replies
    • 202 views
  10. சிறிலங்கா அதிபரின் சந்தர்ப்பவாதம் – மங்கள சமரவீர தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்து வந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இப்போது அவர்களை விடுவிக்கவுள்ளது, முற்றிலும் அரசியல் சந்தர்ப்பவாதம் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள் சமரவீர தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளை விடுவிக்க சிறிலங்கா அதிபரும், பிரதமரும் தயாராக இருப்பதாக நாமல் ராஜபக்ச கூறியுள்ளதற்கு பதிலளிக்கும் வகையில், தமது கீச்சகத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன 2015இல் இருந்து தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்து வந்தார். இப்போது விடுவிக்கப்படவுள்ளனர். இது அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் பாசாங்குத் தனத்தின் மற்றுமொர…

    • 0 replies
    • 469 views
  11. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 9ஆம் திகதி முதல் இழப்பீடு – டக்ளஸ் தேவானந்தா யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் 9ஆம் திகதி காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 320 பேருக்கும், அதனைத் தொடர்ந்து நண்பகல் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் 300 பேருக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன், அன்று மாலை யாழ்மாவட்ட செயலகத்தில் 170 பேருக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படவுள்ளன. இவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு புனரமைப்பு அதிகார சபையின் அதிகார…

    • 0 replies
    • 146 views
  12. வவுனியாவில், போதைப் பொருளுடன் மூவர் கைது! வவுனியா ஓமந்தை பகுதியில் காரில் கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்ற மூவரை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏ9 வீதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே யாழ்ப்பாணத்திலிருந்து சம்மாந்துறை நோக்கி காரில் பயணித்த மூவர் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 24, 28, 29 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து 1 கிலோ 126 கிராம் கேரளா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்க…

  13. ரவூல் ஹக்கீம் அவர்களின் செவ்வி

    • 0 replies
    • 351 views
  14. நெருக்கடியான அரசியல் சூழலால் அமெரிக்கா, ஜப்பான் உதவிகளை முடக்கும் – ரணில் எதிர்வுகூறல் இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியான அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் பில்லியன் கணக்கான அபிவிருத்தி நிதியுதவிகளை முடக்கும் என்று பதவியிறக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அவரது திடீர் பதவி நீக்கத்தின் பின்னர் இலங்கையில் ஜனநாயகத்தின் எதிர்காலம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தியாளர்களுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றிலேயே அவர் இந்த கருத்துக்களை வௌியிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “ஜப்பான் சுமார் 500 மில்லியன் டொலர் நிதியுதவிகளை வழங்க திட்டமிருந்தது. குறித்த திட்ட…

  15. புதிய பிரதமருக்கு ஆதரவு அளிக்க முடியாத நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம்: சித்தார்த்தன் புதிய பிரதமருக்கு ஆதரவு அளிக்க முடியாத நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம் என புளொட் அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தமிழீழ விடுதலை கழகத்தின் மத்தியகுழு கூட்டமும், வன்னி பிராந்திய புளொட் அமைப்பின் கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் கூட்டமும் இன்று (04) புளொட் அமைப்பின் தலைவரும், யாழ் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தலைமையில் கோவில்குளம் சந்தியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். நாட்டின் அரசியலில் ஏற்பட்…

  16. சரத் பொன்சேகாவிடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்டத்தை பறிப்பதற்கு சிறிலங்கா அதிபர் ஆலோசனை சரத் பொன்சேகாவிடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்டத்தைப் பறிப்பதற்கான, சட்ட நடைமுறைகள் குறித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆராய்ந்து வருகிறார் என்று, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அதிபரையும், முன்னாள் பாதுகாப்புச் செயலரையும் கொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக நாமல் குமார என்பவர் தகவல் வெளியிட்டிருந்தார். இதன் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தி வருகிறது. இந்த சதித் திட்டத்தில் சரத் பொன்சேகாவுக்கு தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்றும், அதனை மூடி மறைக்கும் வகையில் ரணில் விக்கிரமசிங…

  17. TNA என்ன முடிவெடுத்தாலும், சிறிசேனவும் மகிந்தவும் வடக்குகிழக்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள்… November 4, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொந்த நலனிற்காக ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்கள் சொந்த மக்களின் உண்மையான தேவைகள் குறித்து ஒருபோதும் சிந்திக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் என்ன முடிவை எடுத்தாலும் சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும் அது குறித்து கவலைப்படாமல் வடக்குகிழக்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முயல்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்…

    • 3 replies
    • 872 views
  18. "ஆட்சிக்காக பிரபாகரனையும் விலைபேசுவார் மஹிந்த" (நா.தினுஷா) தேசிய அரசாங்கத்தில் விடுதலை புலியாக தென்பட்ட வியாழேந்திரன், மஹிந்த அரசாங்கத்தில் தேசியவாதியாக மாறிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மஹிந்த அணியினர் ஆட்சி பலத்துக்காக பிரபாகரனையும் விலைபேசுவர் எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தன்மீதுள்ள வழக்குகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே ஜனாதிபதியை பகடைக்காயாக பயன்படுத்தி மஹிந்த அரசியல் நாடகம் நடத்தி வருகின்றார். சர்வாதிகார ஆட்சியினை நாட்டில் இருந்து ஒழிப்பதற்காகவும் குடும்ப ஆட்சியில் இருந்த நாட்டை காப்பாற்றுவதற்காகவும் 62 இலட்சம் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர். ஆனால…

  19. வியாழேந்திரனின் நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்படும் – சம்பந்தன்! பிரதி அமைச்சர் வியாழேந்திரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த மற்றும் ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான புதிய அரசாங்கத்தில் கிழக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக வியாழேந்திரன் நியமிக்கப்பட்டமை தொடர்பில் பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், “மஹிந்த ராஜபக்ஷவிற்கு நாடாளுமனற உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவார்கள் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் எமது கட்சியின் உறுப்பினரே மாறியுள்ளமை கேவலமான ஒரு செயல். வியாழேந்திரன் மீது ஏற்கனவே ச…

  20. நான் ஜனாதிபதியாவதையே மக்கள் விரும்புகின்றனர் என்கிறார் கோட்டா அமைச்சராவதில் தாம் உண்மையில் விரும்பம்கொண்டிருக்கவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட புளூம்பேர்க் செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆனால் அதிகமான மக்கள் தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இன்றையதினம் கொழும்பைத் தளமாகக் கொண்ட சண்டே டைம்ஸ் பத்திரிகை அதன் அரசியல் பத்தியில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை மையமாகக் கொண்டு கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் நகர்வுகளை கடந்த பல மாதங்களாக முன்னெடுத்துவருவதாகத் தெரிவித்துள்ளது. ‘வியாத்மக’ என்ற சிங்கள…

  21. மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் வர்த்தக மற்றும் வாணிப்பத்துறை அமைச்சுப் பொறுப்பை தான் கேட்டிருப்பதாகவும், அதனை வழங்கத் இணக்கம் தெரிவித்துள்ளதால் நாளைய தினம் காலை அவருடன் இணைந்துகொள்ளவுள்ளதாவும் ஈபிஆர்எல்எப் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஐ.பி.சி தமிழுக்குத் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்துகொள்வதற்கு பேரம்பேசி வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அதற்காக அவர்கள் பெற்றுக்கொள்ளவுள்ள சன்மானங்கள் தொடர்பிலான பட்டியலையும் வெளியிட்ட…

  22. ஜனாதிபதி மைத்திரியின் செயற்பாடு ஜெனீவாவில் பிரதிபலிக்கும்: பாக்கியசோதி சரவணமுத்து ஜனாதிபதி மைத்திரி தற்போது எடுத்துள்ள தீர்மானமானது, அடுத்த ஜெனீவா அமர்வில் இலங்கையை பாதிக்குமென மாற்றுக்கொள்கைகளுக்கான ஆய்வுநிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து எச்சரித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவர் இவ்வாறு எச்சரித்துள்ளார். பிரதமரை மாற்றியமை, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தமை ஆகியன அரசியலமைப்பிற்கு முற்றிலும் முரணானதென்றும், சட்டவிரோதமானதென்றும், ஜனநாயக மீறல் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். இதனால் பொருளாதாரம், நாட்டின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை என்பன…

  23. அரசியல் களத்தில் நன்றி உள்ளவர்களைக் கண்டறிவதில் பாரிய சவால்: மாவை தற்போதைய அரசியல் களத்தில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது பாரிய சவாலாக மாறியுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் இளைஞர் மகளிர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனை கூறினார். இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர், மகளிர் மாநாடும் தொழில் முயற்சியாண்மை வலுவூட்டல் தொடர்பான கருத்தரங்கும் இன்று வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் இடம்பெற்றது. இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது இனவிடுதலைக்கான போராட்டப் பயணத்தில் நன்றி எனும் வார்த்தையினை தேடியலைய வ…

  24. அரசியல் கைதிகளை விடுதலை செய்யமாட்டேன் என சிறிசேன பிடிவாதம் பிடித்தார்- மங்கள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பிடிவாதம்பிடித்து வந்தார் என மங்களசமரவீர தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் நடவடிக்கை எடுப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலிற்கு தனது டுவிட்டர் செய்தியில் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார். 2015 முதல் சிறிசேன விடுதலை செய்வதற்கு பிடிவாதமாக மறுத்து வந்த தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையாகவுள்ளனர் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இது இன்னொரு அரசியல்சந்தர்ப்பவாத நடவடிக்கை கபடநாடகம் எனவும் அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.