ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து கொள்ளவிருப்பதாக மஹிந்தவின் சகோதரரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார். ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக நாடாளுமன்றில் வாக்களிக்கப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்த நிலையில் கோட்டபாய ராஜபக்ச இந்த தகவலை தெரிவித்திருப்பதுடன் கூட்டமைப்பு பிளவு பட்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் போது உயிரிழந்த ஸ்ரீலங்கா இராணுவத்தினர் உள்ளிட்ட அரச ப…
-
- 1 reply
- 403 views
-
-
எதிர்வரும் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் – ஜனாதிபதி அறிவிப்பு எதிர்வரும் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். முற்பகல் 10 அளவில் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. http://athavannews.com/எதிர்வரும்-14-ஆம்-திகதி-நாட/
-
- 0 replies
- 305 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை LAKRUWAN WANNIARACHCHI இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இருவர், இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேசியுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோரே, ஜனாதிபதிய…
-
- 0 replies
- 267 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அது நடை பெறாது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்தியாவின் புதிய தலைமைமுறை தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். வியாழேந்திரன் கட்சி தாவியமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவரைப் பற்றி எமக்கு சந்தேகம் இருந்தது. எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு கட்சியால் அவர் நியமிக்கப்பட்டவர். அந்தக் கட்சியின் தலைவருக்கு சில வாரங்களாக கூறிக்கொண்டு வருகின்றேன். வியாழேந்திரனின் பேச்…
-
- 0 replies
- 436 views
-
-
November 4, 2018 Add Comment Share This! கடந்த சில நாட்களின் முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியினர் தமக்குள்ள மக்கள் பலத்தை காண்பிக்க மாபெரும் பேரணி நடாத்தியிருந்தனர். இதனைப் போன்றதே தமக்குள்ள மக்கள் பலத்தை காண்பிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவும் பேரணி ஒன்றில் பங்குபற்றுகின்றனர். பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள இப் பேரணி நாளை மதியம் பாராளுமன்ற வளாகத்தில் ஆரம்பிக்கவுள்ளது. மகிந்த ராஜபக்ச – மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திற்கு ஆதரவு கோரவும் ஒற்றுமையினை வெளிப்படுத்தவும் இப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறுகின்றது. …
-
- 0 replies
- 554 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்;தியாளர் கிளிநொச்சியில் இன்று(04) ஐதேகவின் ஆதரவாளர்கள் பாராளுமன்ற ஜனநாயகம் மீறியதாக தெரிவித்து எதிர்ப்பு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இன்று மதியம் பன்னிரண்டு மணியளவில் கிளிநொச்சி கண்ணன் கோவில் முன்பாக ஆரம்பித்த எதிர்ப்புக் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் வரை சென்றது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீறாதே மீறாதே பாராளுமன்ற ஜனநாயகத்தை மீறாதே எனும் கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர். அத்தோடு மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கோசங்களையும் எழுப்பியவாறும் எதிர்ப்பு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். http://globaltamilnews.net/2018/101997/
-
- 0 replies
- 301 views
-
-
கனடாவில் உள்ள கிழக்கு பாஉ, வியாளேந்திரன் கிழக்கு அபிவிருத்தி அமைச்சர் ஆனார் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டு உள்ளது. http://www.dailymirror.lk/art...ent-Dy-Minister--157830.html
-
- 51 replies
- 4.5k views
-
-
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 9ஆம் திகதி முதல் இழப்பீடு. டக்ளஸ் தேவானந்தா. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் 9ஆம் திகதி காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 320 பேருக்கும், அதனைத் தொடர்ந்து நண்பகல் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் 300 பேருக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன், அன்று மாலை யாழ்மாவட்ட செயலகத்தில் 170 பேருக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படவுள்ளன. இவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு புனரமைப்பு அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப…
-
- 1 reply
- 429 views
-
-
நாடாளுமன்றம் எப்போது கூடும்? – வெளியானது புதிய தகவல் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேசமும் வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதியே நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான சாத்தியப்பாடு காணப்படுவதாக அரசாங்க தகவல்களை மேற்கோள்காட்டி சண்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற சந்திப்பில், எதிர்வரும் 7ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படுமென ஜனாதிபதி தெரிவித்ததாக சபாநாயகர் குறிப்பிட்டார். அவ்வாறு 7ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுமாக இருந்தால், அதற்கான வர்த்தமானி நேற்று அல்லது நேற்று முன்தினம் வெளி…
-
- 1 reply
- 628 views
-
-
சர்வதேசத்தின் நலனுக்காகவே கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளது- கஜேந்திரன் இந்தியா மற்றும் மேற்குலகத்தின் நலனுக்காகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ளனர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களுக்கு ரணில் தரப்பினர் எந்தவொரு நன்மையையும் செய்யாத நிலையில், எந்த உத்தரவாதத்துக்கு இணங்க ஆதரவு வழங்கப்பட்டுள்ளது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். http://at…
-
- 1 reply
- 415 views
-
-
புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட சேலைகள் விற்பனையில்...: திருகோணமலை நகரில் பதற்றம் திருகோணமலை நகரில் உள்ள பிரதான ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட சேலைகள் விற்பனைக்கு வைத்திருந்ததால், பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்திற்கு திருகோணமலை ஜெயசுமராமய விகாரையின் விகாராதிபதி ஸ்தலத்திற்கு சென்றுள்ளார். அத்துடன் குறித்த இடத்திற்கு திருகோணமலை தலைமையக பொலிஸார் விரைந்து சென்றதுடன் அப்பகுதி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளார். http://www.virakesari.lk/article/43843
-
- 1 reply
- 449 views
-
-
மைத்திரியின் செயல்கள் வன்முறைக்கு வித்திடக்கூடும் – ஐ.நாவின் தலையீடு அவசியம் : November 3, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்மூடித்தனமான செயல்கள் இலங்கையில் வன்முறையை உருவாக்கும் சாத்தியம் உள்ளதாக தெரிவித்துள்ள ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இந்த விடயத்தில் ஐ.நா தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அரசியல் நெருக்கடி நிலவரங்கள் குறித்து தனது டுவிட்டர் பதிவில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்மூடித்தனமான செயல்கள் இலங்கையில் உறுதியற்ற வன்முறையை உருவாக்கும் சாத்தியம் உள்ளமையால் எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள…
-
- 3 replies
- 566 views
-
-
ஜனநாயகத்தை பாதுகாக்குமாறு கோரி மட்டு.வில் ஆர்ப்பாட்டம் ஜனநாயகத்தினை பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. "ஜனாதிபதியே ஜனநாயகத்தினை காப்பாற்று" என்னும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் மக்களின் ஜனநாயக கோரிக்கையினை புறந்தள்ளி ஜனாதிபதி மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் இங்கு கேஷங்கள் எழுப்பப்பட்டதுடன், சிறுபான்மை சமூகம் ஐக்கிய தேசிய கட்சியின் கோரிக்கையினை கருத்தில்கொண்டே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவுசெய்த நிலையில் அந்த கோரிக்கையினை புறந்தள்ளி ஜனாதிபதி இன்று செயற்படுவதாகவும் இத…
-
- 0 replies
- 307 views
-
-
கூட்டு எதிர்கட்சியின் நால்வருக்கு அமைச்சு பதவி? கூட்டு எதிர்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தினேஸ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில ஆகிய நால்வருக்கே இவ்வாறு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய அமைச்சரவை நியமனங்களில் இதுவரை கூட்டு எதிர்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் எவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை. இந்தநிலையில், அரசமைப்புக்கு அமைய மேலும் 15 அமைச்சர்களும், 24 இராஜாங்க, பிரதி அமைச்சர்களை நியமிப்பதற்கான வெற்றிடங்கள் நிலவுவதாகவும் இந்த வெற்றிடங்களுக்கே இவர்கள் நியமிக்கப்படவுள்ளதா…
-
- 0 replies
- 305 views
-
-
இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் வாக்கெடுப்பு நடத்த ஐ.நா. வலியுறுத்தல் இலங்கை அதிபர் சிறிசேனாவை தொடர்பு கொண்ட ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், அங்கு விரைவில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துமாறு வலியுறுத்தினார். #UNChief #AntonioGuterres #SriLanka நியூயார்க்: இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேயை கடந்த 26-ந் தேதி அதிரடியாக நீக்கிய அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தார். ஆனால் தனது பதவிநீக்கம் சட்டவிரோதமானது எனக்கூறிய ரனில் விக்ரமசிங்கே, தனது பெரும்பான்மையை நிரூபிக்க…
-
- 1 reply
- 415 views
-
-
தற்போதுள்ள கள நிலவரப்படி இரு தரப்பினரிடமும் உள்ள உறுப்பினர்கள் ! நாட்டிலுள்ள தற்போதைய கள நிலவரத்தின்படி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு 104 பேரின் ஆதரவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கு 99 உறுப்பினர்களின் ஆதரவும் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க 113 உறுப்பினர்கள் தேவைப்படுகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணியின் 6 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒருவரும் பொது நிலையில் உள்ளனர். புதிய அரசாங்கம் அமைந்ததன் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் 8 பேர் இணைந்து க…
-
- 2 replies
- 619 views
-
-
அமைச்சு பதவியை பெற்ற ஐ.தே.க. அமைச்சர், லண்டனுக்கு அவசர விஜயம்! பிரதமர் மஹிந்த – ஜனாதிபதி மைத்திரி அரசாங்கத்தில் கடந்த புதன்கிழமை அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட வசந்த சேனநாயக்க அவசரமாக லண்டனுக்கு சென்றுள்ளார். அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்றுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் குறித்த விஜயம் தனிப்பட்ட காரணங்களுக்கானது என மேற்கோள்காட்டி அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினரான ரொஷான் ரணசிங்க மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண ஆகியோரும் வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் வசந்த சேனநாயக்கவும் அவசரமாக லண்டனுக்கு சென்றுள்ளார். அத்துடன் நேற்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன ந…
-
- 0 replies
- 381 views
-
-
புதிய அரசாங்கத்துக்கான மக்கள் ஆதரவைக் காட்டும் பாரிய கூட்டம் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்த புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து நாளை (05) நண்பகல் 12.00 மணிக்கு பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது. அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவுள்ள சகல கட்சிகளின் ஆதரவாளர்களும் இதன்போது ஒன்றுகூடவுள்ளனர். ஐந்தாயிரம் பஸ்களில் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் ஆதரவாளர்கள் அழைத்து வரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்துடன் இணைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. கட்சி என்பவற்றின் ஆதரவாளர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்படுக…
-
- 0 replies
- 202 views
-
-
பாராளுமன்றத்தைக் கூட்ட முடியாமைக்கான காரணம் என்ன? – பிரதமர் மஹிந்த விளக்கம் 7 வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதனாலேயே பாராளுமன்ற கூட்டத்தை நடாத்த முடியாமல் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அல்ஜெஸீரா சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். தமக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போதிய உறுப்பினர்கள் உள்ளனர். 113 பெரும்பான்மையை தம்மால் நிரூபிக்க முடியும். தனது நியமனம் அரசியலமைப்புக்கு ஏற்பவே முன்னெடுக்கப்பட்டது. தான் தொடர்ந்தும் பிரதமராக கடமையாற்றவுள்ளேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://www.dailyceylon.com/171369
-
- 0 replies
- 163 views
-
-
இன்னும் 10 பேர் புதிய அரசாங்கத்துடன் இணையவுள்ளனர்- வாசு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இன்னும் 10 பேர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் கட்சிகள் நேற்று (03) நடாத்திய கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்வது தொடர்பிலும், பாராளுமன்றத்தைக் கூட்டும் போது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்துமே நேற்றைய கூட்டத்தில் விசேடமாக கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். http://www.dailyceyl…
-
- 0 replies
- 166 views
-
-
சம்பந்தனின் கோரிக்கையை நிராகரித்த மகிந்த உங்களின் கோரிக்கைக்கு இணங்கி விட்டு நான் எப்படி கார்ல்டன் இல்லத்துக்குத் திரும்ப முடியும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். இருவருக்கும் இடையில் நடந்த முறைசாரா கலந்துரையாடலின் போதே, மகிந்த ராஜபக்ச இவ்வாறு கேள்வி எழுப்பியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாக உள்ள- அதிகாரங்களை மத்திய அரசும், மாகாண அரசும் பகிர்ந்து கொள்ளும் வகையிலான, இணைந்த பொதுப் பட்டியலை (Concurrent List) நீக்க வேண்டும் என்று இரா.சம்பந்தன் கோரியிருந்தார். அப்போதே …
-
- 0 replies
- 246 views
-
-
அமெரிக்காவின் 460 மில்லியன் டொலர் நிதியுதவி சிறிலங்காவுக்கு கிட்டுமா? சிறிலங்காவின் அரசியல் குழப்பங்களினால், அமெரிக்காவின் பல மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் திட்ட உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வு அடுத்த மாதம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மிலேனியம் சவால் அமைப்பு, மூலமாக சிறிலங்காவுக்கு 460 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க அமெரிக்கா முடிவு செய்திருந்தது. சிறிலங்காவின் போக்குவரத்து துறையை அபிவிருத்தி செய்வதற்காக, வீதி வலையமைப்புகளை தரமுயர்த்துவதற்கும், கொழும்பு பெருநகர பேருந்து முறையை ஒழுங்கமைப்பதற்கும் இந்த நிதி செலவிடப்படவிருந்தது. இதற்கமைய 300 கி.மீ நீளமான நகர மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான வீதிகளை புனரமைப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இளைஞன் மாயம் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு! யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரின் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பாலிநகரை சேர்ந்த குகதாசன் உமேஷ் (வயது 21) எனும் இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். குறித்த இளைஞன் கடந்த 31ஆம் திகதி காலை முல்லைத்தீவிலிருந்து யாழிலுள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அன்றைய தினம் இரவு சகோதரியிடம் தான் கொழும்பு செல்வதாக கூறி இரவு 7 மணியளவில் சகோதரியின் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் மறுநாள் 1ஆம் திகதி தாயார் தொலைபேசி ஊடாக அழைப்பினை ஏற்படுத்த முயன்ற போது அவரது தொலைபேசி செயல…
-
- 0 replies
- 926 views
-
-
கூட்டமைப்பின் முடிவால் மைத்திரி அதிர்ச்சி – பேச்சுவார்த்தைக்கு அழைப்பு? எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 7ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது. நாட்டின் பிரதமர் யார் என்ற குழப்பம் எழுந்துள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவருக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று(சனிக்கிழமை) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து மஹிந்த ராஜபக்ஸ பதற்றமடை…
-
- 0 replies
- 333 views
-
-
தயார் நிலையில் அரச அச்சகம் – முக்கிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளதாக தகவல்! முக்கிய வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதற்காக அரச அச்சகம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் தலைமை அதிகாரியான கங்க லியனகே இதனைத் தெரிவித்துள்ளார். எந்த நேரத்திலும், முக்கியமான வர்த்தமானி அறிவிப்புகளை வெளியிட வேண்டியிருக்கும் எனவும், இதன்காரணமாக அரச அச்சக பணியாளர்களை தயாராக வைத்திருக்குமாறு ஜனாதிபதி செயலகமும், சபாநாயகர் செயலகமும் தமக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், நேற்று மாலை வரை, எந்த வர்த்தமானி அறிவிப்பும் அரசாங்க அச்சக திணைக்களத்துக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்…
-
- 0 replies
- 310 views
-