ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
அரசியல் நெருக்கடிக்கு சீனாவே காரணம் – ஐதேக குற்றச்சாட்டு கொழும்புச் செய்தியாளர்Oct 29, 2018 | 1:41 by in செய்திகள் சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து தாவுபவர்களுக்கு நிதியை வழங்கி, தற்போதைய அரசியலமைப்பு நெருக்கடிக்கு சீன அரசாங்கமே காரணமாக இருப்பதாக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். அலரி மாளிகையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், “புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கு நிதியைச் செலவிடுவதை சீனா கைவிட வேண்டும். ரணில் விக்ரமசிங்கவை நீக்கும், கூட்டு அரசாங்கத்தைக் கவிழ்க்கும் திட்டமானது ஒரு அனைத்துலக சதிவேலை. நாடாளுமன்ற உ…
-
- 0 replies
- 678 views
-
-
உடனடியாக மாகாணசபைதேர்தல்கள்- மகிந்த அறிக்கை மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதே தனது நோக்கம் என புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய ஜனநாய ஆரம்பமும் வெறுப்புணர்வு அரசியலை நிராகரித்தலும் என்ற அறிக்கையொன்றை விடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி அந்த அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளதாவது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கூட்டணியிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து ஐக்கியதேசிய கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் முடிவிற்கு வந்தது. இதன் பின்னர் புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பு ஜனாதிபதியின் தோள்களில் சுமத்தப்பட்டது.புதிய அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்துடன் பிரதம மந்திரி பதவியை ஏற்கு…
-
- 2 replies
- 691 views
-
-
இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றார் (2ஆம் இணைப்பு) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 22ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார். பிரதமர் செயலகத்தில் சற்றுமுன் அவர் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கை ஜனாதிபதியாக இரு தடவைகள் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ, மூன்று தசாப்தகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததால் சர்வதேச அளவில் பேசப்பட்ட தலைவராக காணப்படுகிறார். கடந்த 1945ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி பிறந்த மஹிந்த ராஜபக்ஷ, கடந்த 1970ஆம் ஆண்டு முதற்தடவையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். அதன் பின்னர் கடந்த 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் திகதிமுதல் பிரதமராக பதவி வகித்த அவர், 2005ஆம் ஆண்டு நவ…
-
- 0 replies
- 539 views
-
-
ஜனநாயக போராட்டத்துக்கு அழைப்பு: அகிலவிராஜ் காரியவசம் ஜனநாயகத்தை விரும்புகின்ற அனைத்து மக்களும் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளார். அலரி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த போராட்டம் நாளை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகையால் ஜனநாயத்தை நாட்டில் தொடர்ச்சியாக ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட அனைவரும் இதில் பங்குகொள்ள வேண்டியது அவசியமெனவும் அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்…
-
- 0 replies
- 476 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுவினர் நாளைய தினம் கொழும்பில் உள்ள மகசின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று விசேட சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளனர். குறித்த சிறைச்சாலைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கெனவே குறித்த சந்திப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச அண்மையில் பொறுப்பேற்றுள்ள நிலையில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனையடுத்து நீண்ட காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து காத்திரமான நடவடிக்கை ஒன்றை எடுப்பதற்காக நாளைய இந்த சந்திப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெர…
-
- 2 replies
- 1.8k views
-
-
மகிந்த சமரசிங்க – கெஹெலிய அரசாங்க ஊடக பேச்சாளர்கள்- மஹிந்த அமரவீர விவசாயத்துறை அமைச்சர் October 29, 2018 பாராளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த சமரசிங்க மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் அரசாங்க ஊடக பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். அதேவேளை புதிய அரசாங்கத்தின் விவசாயத்துறை அமைச்சராக மஹிந்த அமரவீர நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராமவில் இன்று நடைபெறும் பெரும்போகத்திற்கான பயிர் செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படு…
-
- 0 replies
- 252 views
-
-
மகிந்த இன்று பிரதமராக கடமை ஏற்கவுள்ளதாக தகவல் October 29, 2018 இன்று திங்கட்கிழமை மகிந்த ராஜபக்ஸ பிரதமராக கடமை ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் அலுவலகத்தில் இந்நிகழ்வு நடைபெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய அமைச்சரவையும் இன்று நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2018/101114/
-
- 0 replies
- 259 views
-
-
தமிழ் முற்போக்குக் கூட்டணியிடம் மகிந்த ஆதரவு தருமாறு கோரிக்கை October 29, 2018 புதிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு மகிந்த ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு அவர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கள அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு தான் விரும்பவில்லை எனவும் அதனால் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் வகையில் ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மனோ கணேசனுடன் தொடர்புகொண்டு தமது அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்…
-
- 0 replies
- 330 views
-
-
தெமட்டகொடவில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் உள்ள துப்பாக்கி சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கூட்டுத்தாபனத்திற்குள் வருகை சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் பதற்ற நிலமை ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே இவ்வாறு இருவர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறைத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. https://globaltamilnews.net/2018/101071/
-
- 6 replies
- 549 views
-
-
சிறிலங்கா நிலவரங்கள் குறித்து கரிசனையுடன் கவனித்து வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு சிறிலங்கா அதிபருக்கும், சபாநாயகருக்கும் அழுத்தம் கொடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர், ஹீதர் நுவேட் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். “சிறிலங்காவின் நிலவரங்களை அமெரிக்கா தொடர்ந்தும் கரிசனையுடன் கவனித்து வருகிறது. நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகருக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். யார் அரசாங்கத்துக்கு தலைமையேற்பது என்பதை உறுதி செய்யும் பொறுப்புக்களை நிறைவேற்ற, சிறிலங்கா மக்களால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை, அ…
-
- 4 replies
- 844 views
-
-
மஹிந்தவிற்கு ஆதரவு: ஆறுமுகன் தொண்டமானுக்கு வரவேற்பு. புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதையடுத்து ஹற்றனில் வரவேற்பு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது, ஹற்றன் நகருக்கு வருகை தந்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு நகரவாசிகள் பாரிய வரவேற்பினை அளித்து பொன்னாடை போர்த்தி வரவேற்பளித்தனர். இதன்போது நகரில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு அனைவரும் மகிழ்ச்சியடைந்ததோடு, புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவின் உருவப் படங்களை ஏந்தி கோஷமிட்டனர். இந்நிகழ்விற்கு நகரத்தில் பொலிஸாரின் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் நிலவரம் தொடர…
-
- 2 replies
- 640 views
-
-
மஹிந்தவை பிரதமராக ஏற்பதற்கு சர்வதேசம் தாமதம்: அரசியல் அவதானிகள். இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேசம் அந்நியமனத்தை ஏற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். எந்ததொரு நாட்டிலும் புதிதாக ஜனாதிபதி அல்லது பிரமர் பதவியேற்றால் ஏனைய நாடுகள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்கும் ஆனால் மஹிந்தவுக்கு சீனாவை தவிர வேறு எந்ததொரு நாடும் இன்னும் வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லையெனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக ஐக்கிய தேசிய கட்சியுடனான கூட்டணி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது ஏனைய நாடுகளும் எதிர்பார்த்திருக்காத ஒன்றெனவும் அரசியல…
-
- 0 replies
- 346 views
-
-
கூட்டமைப்பிற்குள் புது சிக்கல்: நான்கு எம்.பிக்கள் நடுநிலைமை? October 28, 2018 புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் திண்டாடி வருகிறார். அவர் பெரும்பான்மையை நிரூபிக்க போதிய அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, நவம்பர் 16ம் திகதி வரையும் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளார். தற்போதைய நிலையில் மஹிந்த ராஜபக்சவிற்கு, ஐ.தே.கவிலிருந்து பிரிந்து வந்த ஆனந்த அளுக்கமே உள்ளடங்கலாக 100 தொடக்கம் 102 வரையான எம்.பிக்களின் ஆதரவுள்ளது. ரவி கருணாநாயக்க தலைமையில் எத்தனை உறுப்பினர்கள் பிரிந்து வருவார்கள் என்பதிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என்பதிலுமே, யார் பிரதமர் என்பது தங்கியுள்ளது. …
-
- 4 replies
- 899 views
-
-
அரசியல் யாப்பை மதித்து செயற்படுங்கள் – பிரித்தானியா இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளின் முன்நகர்வுகள் தொடர்பில் கூர்ந்து அவதானித்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கு பொறுப்பான அமைச்சர் மார்க் பீல்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை கூறியுள்ளார். எனவே இலங்கை அரசியல் யாப்பிற்கு மதிப்பளித்து, சகல அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். ஆகவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கடமை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். http://athavannews.com/அரசியல்-யாப்பை-மதித்து-ச/
-
- 7 replies
- 1.2k views
-
-
டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் அமைப்பதில் 80 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக, அடுத்த அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என நம்பப்படும் கோத்தாபய ராஜபக்ச கடந்த செவ்வாய்க்கிழமை புதிதாக உருவாக்கப்பட்ட மேல்நீதிமன்றுக்குச் சென்றிருந்தார். அங்கு, கோத்தாபய ராஜபக்சவிடம் ‘மகிந்த தங்களை அடுத்த அதிபர் வேட்பாளராகக் களமிறக்காது, தங்களின் சகோதரரான பசில் ராஜபக்சவை அடுத்த அதிபர் வேட்பாளராக களமிறக்கவுள்ளதாக கூறப்படுகிறது’ என ஊடகங்கள் கேள்வியெழுப்பின. ‘எமது குடும்பத்திற்குள் பிரிவை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டே இவ்வாறான ஊடக அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. மகிந்த ராஜபக்ச அடுத்த அதிபர் வேட்பாளராக எவரையும் இன்னமும் நியமிக்கவில்லை. என்னிடம்…
-
- 0 replies
- 358 views
-
-
அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய பதில் பணிப்பாளர்கள் நியமிப்பு October 28, 2018 அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய பதில் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அந்தவகையில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக சரத் கோன்கஹவும் இலங்கை சுயாதீன தொலைக்காட்சி மற்றும் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக பேராசிரியர் சோமரத்ன திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பதில் தலைவராக வசந்த பிரியா ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். http://globaltamilnews.net/2018/101086/
-
- 0 replies
- 359 views
-
-
மீள்குடியேற்ற அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா! மீள்குடியேற்றம், இந்துவிவகார மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சராக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்படவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லாட்சி அரசாங்கம் பிளவடைந்து, இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இலங்கையின் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படவுள்ளது. அதில் குறிப்பாக ஐந்து முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் இன்று மாலை வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம் மீள்குடியேற்றம், இந்துசமய விவகாரம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சுப் பதவி டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த…
-
- 12 replies
- 2.5k views
-
-
ஜனாதிபதியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஐ.தே.க Editorial / 2018 ஒக்டோபர் 28 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 08:45 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கு மக்களுக்காக இன்று (28) மாலை ஆற்றிய உரையின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மீதும் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சரியான நிலை, ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்பவற்றை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதியின்-குற்றச்சாட்டை-மறுத்துள்ள-ஐ-தே…
-
- 0 replies
- 432 views
-
-
மஹிந்த கண்டிக்கு விஜயம் – தலதா மாளிகையில் விசேட வழிபாடு! புதிய பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டிக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார். உலங்கு வானூர்தியில், அஸ்கிரிய பொலிஸ் விளையாட்டரங்கில் இறங்கிய மஹிந்தவிற்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அதன் பின் கண்டி தலதா மாளிகைக்கு சென்ற அவர், மதவழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து ஆசிபெற்றார். அதனைத் தொடர்ந்து அஸ்கிரிய வராகொட ஸ்ரீஞானரத்ன தேரரைச் சந்தித்து ஆசிபெற்றதுடன், தனது நியமனம் குறித்தும் மஹிந்த அஸ்கிரிய பீடாதிபதிக்கு தெளிவுபடுத்தினார். இது தொடர்பாக அவர் அங்கு குறிப்பிடுகையில், “நான் முடிவு வரும் முன்னே அலரி…
-
- 0 replies
- 319 views
-
-
எமது ஆதரவு மஹிந்தவுக்கே - முத்துசிவலிங்கம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்குவோம் என இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பிரதி தலைவர் முத்து சிவலிங்கம் சற்றுமுன்னர் தெரிவித்தார். இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலம் முதல் நிலை இல்லாமலே இருந்தது. எனினும் தற்போது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு கீழ் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்த்துகொள்ள முடியும். குறிப்பாக தற்போது தோட்டத் தொழிலாளர்களின் முக்கிய பிரச்சினையாக உள்ள சம்பள பிரச்சினைக்கு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் தலைமையின் கீழ் தீர்வு எட்டப்படும் எனவும் தெரிவித்தார். http://www.virakesari.lk/artic…
-
- 1 reply
- 493 views
-
-
தமிழ் தலைமைகளின் தீர்மானத்திலேயே தமிழர்களின் தலைவிதி உள்ளது – ஆட்சி மாற்றம் குறித்து த.ம.வி.பு. இன்றைய அரசியல் சூழ்நிலையினை தமிழ் அரசியல் தலைமைகள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப் போகின்றார்கள் என்பதிலேயே தமிழர்களின் எதிர்கால தலைவிதி காணப்படுகின்றது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “சிறுபான்மை மக்களின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்நாடு அதளபாதாளத்திற்கு …
-
- 0 replies
- 238 views
-
-
மேலை நாடுகளின் தூதுவர்கள் ரணிலை சந்தித்து பேசியுள்ள அதேவேளை, சீனத்து தூதுவர் புதிய பிரதமர் மகிந்தவை சந்த்தித்து, தனது நாட்டு ஜனாதிபதியின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மகிந்தவை சந்தித்த முதல் வெளி நாட்டு தூதுவர் சீனத்தூதர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு, சீன ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீன தூதுவர் ஆ சாங் சுவான், மஹிந்த ராஜபக்ஷவை அவருடைய இல்லத்தில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சீனத் தூதரக உயர் அதிகாரிகளும் அவருடன் சென்றுள்ளனர்.
-
- 3 replies
- 959 views
-
-
நெருப்பில்லாமல் புகை வருமா? இது சிறிலங்கா அரசியலை பொறுத்தவரை இன்று மாலை இது பழையமொழி. புகையில்லாமல் நெருப்பு வந்து மகிந்த பிரதமாராகி விட்டமை புதிய செய்தி. எல்லா நகர்வுகளுமே டொமினோ கட்டைகள் போல படபடவென சரிந்தன. தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு விலகிய பின்னர் இவை யாவும் சடுதியாக படபடவென மாறின. படபடவென கொழும்பில் பட்டாசுகளும் வெடித்தன. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனா முன்னால் மகிந்த பிரதமராக பதவியேற்ற காட்சிகளும் இனி மகிந்த அரசாங்கத்துக்கு ஆதரவு என றிசாட் பதியுதீன் போன்றவர்கள் பல்டி அடித்த சாட்சிகளும் வந்தன. ஆகமொத்தம் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது. தனது தவணையை முழுமையாக முடிக்காத ராசியற்ற பிரதமர் என்ற ராசியை ரணில்…
-
- 8 replies
- 966 views
-
-
யாழ். சிறையில் கைதி தற்கொலை முயற்சி! யாழ். சிறைச்சாலையில் கைதி ஒருவர் தற்கொலை முயற்சி செய்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய கைதி ராஜேஸ்வரன் கஜன் என்ற இளைஞரே மலசல கூடத்திற்குள் தூக்கு போடுவதற்கு முயற்சித்துள்ளார். எனினும் அங்கிருந்த ஏனைய கைதிகளாலும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களாலும் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக யாழ். போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://athavannews.com/யாழ்-சிறையில்-கைதி-தற்கொ/
-
- 1 reply
- 416 views
-
-
யாழில் மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு October 28, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த கேபிள் ரீவி இணைப்பின் ஊடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நகரில் சட்டவிரோத கேபிள் இணைப்பினாலேயே இந்த விபத்து இடம்பெற்று அவர் உயிழந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில்இன்று முற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த இராசநாயகம் லீலாவதி 55 வயதான குடும்பப் பெண்ணே உயிரிழந்தார். கேபிள் ரீவி இணைப்பு வயரை அவர் பிடித்துக்கொண்ட போது, அதனூடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கியதிலேயே பெண் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில்…
-
- 0 replies
- 297 views
-