ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143294 topics in this forum
-
சிறிலங்கன் விமான நிறுவனத்திற்கு மீண்டும் மரமுந்திரிகையை விநியோகிக்க மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் லக்மன் கிரிஹெல்ல வழங்கிய ஆலோசனைக்கு அமைய, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்சிறி பண்டார கருணாரத்ன தெரிவித்துள்ளார். சிறிலங்கன் விமான நிறுவனம் பயணிகளுக்கு பெற்றுக்கொடுக்கும் மரமுந்திரிகை தொடர்பில் ஜனாதிபதியால் விமர்சிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/story/16/சிறிலங்கன்-விமான-நிறுவனத்த்துக்கு-மீண்டும்-மரமுந்திரிகை.html
-
- 0 replies
- 400 views
-
-
இந்த அரசாங்கம் குறிப்பிடத்தக்க வேலைத்திட்டங்களை செய்துள்ளதாகவும் குறைப்பாடுகள் இருப்பினும் அனைவரும் ஒரு நாடு என்ற ரீதியில் முன்னோக்கி செல்ல வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அம்பலந்தொட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கருத்துரைத்த அவர், இந்த நாட்களில் இடைக்கால அரசாங்கம், கூட்டணி அரசாங்கம் தொடர்பில் பேசப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது எனவும் கூட்டு அரசாங்கமாக இருந்து மக்களுக்கு சேவை செய்வோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.com/
-
- 0 replies
- 369 views
-
-
பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது தடை செய்யப்பட்ட நடவடிக்கையென, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. சீகிரியா பிரதேச பாடசாலையொன்றின் பதில் அதிபர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு, பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் நேற்று (15.10.18) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் எச். எம். ஆரியரத்ன, சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துவது முற்று முழுதான சட்டவிரோத நடவடிக்கையாகும். 18 வயதுக்கு குறைவான மாணவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளின் பிரதிபலன் என்னவென்று அவர்களுக்கு போதிய தெளிவு இல்லை. எனவே அவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துவது சட்டவிரோத நடவடி…
-
- 0 replies
- 266 views
-
-
புலிகளை விடுதலை செய்யுமாறு, கூட்டமைப்பு, அரசாங்கத்தை அச்சுறுத்துகிறது…. October 16, 2018 1 Min Read சிறைகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய வேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்தை அச்சுறுத்தி வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தெரிவித்துள்ளது. பத்தரமுல்லை – நெளும் மாவத்தையிலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில், நேற்று (15.10.18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோது, அக்கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர். ஜி.எல்.பீரிஸ், தவறான காரணங்களுக்காவும் சர்வதேசம், புலம்பெயர்த் தமிழ் அமைப்புகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்காகவும், புதிய அரசமைப்பை அரசாங்கம் கொண்டு வருவதற்கு…
-
- 1 reply
- 348 views
-
-
இலங்கைத் தீவில் சிறந்த கல்வி அறிவு கொண்டவர்களாக வரலாற்றில் ஈழத் தமிழர்களே இருந்துள்ளனர். பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்தில், அன்றைய சிலோன் மக்கள் சார்பில் ஒரு பிரதிநிதியாக சிறந்த கல்வியறிவு கொண்ட சேர் பொன் இராமநாதனே இருந்துள்ளார். சேர் பொன் இராமநாதன் சென்னை பிரசின்டசி கல்லூரியில் கற்றிருக்கிறார். சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் ஈழத் தமிழ் மக்களின் கல்வியை அழிக்க சிங்கள அரசுகள் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தன. தனிச்சிங்கள சட்டம், கல்வித் தரப்படுத்தல் சட்டங்களுடன் போர்க் காலத்தில் பள்ளிகள்மீது குண்டுகளை வீசி அப்பாவி மாணவர்களை தொகை தொகையாக கொன்றழித்தன. பள்ளிச் சீருடைகள் குருதியால் சிவப்பாகிவிட, சிதைக்கப்ட்ட குழந்தைகளையும் சிதைக்கப்ட்ட பள்ளிகளையும் ஈழமண் ஒருபோத…
-
- 4 replies
- 1k views
-
-
வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா? இறுதி முடிவு 17 ஆம் திகதி… October 15, 2018 வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதற்கான எண்ணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரிடம் இருக்கின்றது. ஆனால், எதிர்வரும் 17 ஆம் திகதி ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதால், அந்த சந்திப்பின் பின்னரே உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அவரது வீட்டில் இன்று (15.10.18) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், பல விடயங்கள் செய்து முடிப்பதாக சொன்ன விடயங்களை அரசா…
-
- 5 replies
- 595 views
-
-
அனந்தி தலைமையில் புதிய கட்சி உதயம்? வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று உதயமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினராக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அனந்தி சசிதரன் வெற்றி பெற்றிருந்தார். அந்த கட்சியின் உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி எடுத்திருந்த நிலையில், கட்சியிலிருந்து விலகியே செயற்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மாகாண சபையில் முதல்வருக்கு எதிராக தமிழரசுக் கட்சியினர் செயற்பட்ட போது முதல்வருக்கு ஆதரவாக நின்றிருந்தார். இதனால் முதலமைச்சரின் புதிய அமைச்சரவையில் மகளிர் விவகார அமைச்சராக…
-
- 1 reply
- 448 views
-
-
காட்டு யானைகளின் அச்சுறுத்தல் மத்தியில் மீள்குடியேறிய முள்ளிக்குளம் கிராம மக்கள் October 16, 2018 விடுவிக்கப்பட்ட காணிகளில் தற்காலிக கூடாரங்களை அமைக்க கடற்படை தடை: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இடம் பெயர்ந்து மீள் குடியேறிய முள்ளிக்குளம் மக்கள் தங்களுக்கு விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட காணியில் பாதுகாப்பு கருதி தற்காலிக கொட்டகைகளை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது கடற்படையினர் குறித்த நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளதாக பாதிக்கப்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மழை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு,காட்டு யானைகளினாலும் அந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக…
-
- 0 replies
- 327 views
-
-
கூட்டமைப்பு குறுகிய நோக்கங்களுக்காகவே அரசாங்கத்தின் பங்காளியாக செயற்படுகின்றது – மஹிந்த அணி. தமிழ் தேசிய கூட்டமைப்பு குறுகிய நோக்கங்களுக்கு மாத்திரமே அரசாங்கத்தின் பங்காளியாக செயற்படுகின்றது என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அந்த கட்சியின் தவிசாளரான பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘புதிய அரசியலமைப்பு உருவாகாவிடின் மீண்டும் யுத்த சூழல் ஏற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அரசாங்கத்திற்கு எச்சரித்தமையினை தொடர்ந்தே புதிய அரசியலமைப்பு தொடர்பிலான அறிக்கை இம்மாத இற…
-
- 0 replies
- 295 views
-
-
“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ” முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் காயமடைந்த பலரது காயங்களுக்குள் கிளஸ்டர் குண்டுகளின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இறுதிப் போரில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கொத்துக் குண்டுகளான கிளஸ்டர் குண்டுகளே பிரதான காரணமாகும். இவ்வாறு வடமாகாண சபை உறுப்பினரும் தமிழீழ வீடுதலைப்புலிகள் இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார். யாழ். நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே தமிழீழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான சபா.குகதாஸ் இவ்வாறு தெரிவித்தார். இனப்படுகொலையும் கிளஸ்டர் கொத்துக்குண்டுகளின் பயன்பாடு குறித…
-
- 3 replies
- 552 views
-
-
தோட்ட தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்புப் பெற்றுச் செல்லக்கூடாது: அமைச்சர் ஹரீன் குறைந்த வருமானம் பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று தோட்ட தொழிலாளர்கள் தொழில்புரிவதைக் குறைத்துக் கொள்ளவேண்டுமென அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்தார். பண்டாரவளை, பூனாகலை அம்பிட்டிகந்த தோட்டத்தில் அமைக்கப்பட்ட வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தோட்ட தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்று குறைந்த வருமானத்தில் தொழிலை முன்னெடுக்கவே விரும்புகின்றனர்.ஆனால் எவருமே சொந்த நாட்டில் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை. மலையகத்திலேயே பல தொழில்வாய்ப்புக்கள் இரு…
-
- 2 replies
- 432 views
-
-
ஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு! வவுனியாவில் இடம்பெற்ற விபத்தொன்றில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஓமந்தை விளக்குவைத்த குளம் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் 33 வயதுடைய ரனுவீர ரொசான் என்ற இராணுவ வீரரே உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்துத் தொடர்பாக ஓமந்தைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை குறித்த இராணுவ வீரர் பணியாற்றும் கனகராயன்குளம் இராணுவ முகாமில் இருந்து சைக்கிள் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஓமந்தை விளக்குவைத்…
-
- 0 replies
- 381 views
-
-
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது! வவுனியாவில் சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்ப உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் 600 நாட்களை எட்டியுள்ளது. இதனையடுத்து அவர்கள் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 12.30 மணியளவில் கந்தசாமி ஆலயத்தில் தேங்காய் உடைத்து விஷேட வழிபாடுகளை மேற்கொண்டனர். தொடர்ந்தும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பேரணியாக பிரதான வீதி வழியாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தமது போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். அத்துடன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தேங்காய் உடைத்து விஷேட பூஜ…
-
- 0 replies
- 273 views
-
-
கணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்.. October 15, 2018 இலங்கையின் வடக்கில் ஒருலட்சத்திற்கும் அதிகமான கணவனை இழந்த பெண்களும், கிழக்கில் 37 ஆயிரத்திற்கும் அதிகமான கணவனை இழந்த பெண்களும் உள்ளனர் என இந்தியாவிலிருந்து இலங்கை சென்று ஆய்வை முன்னெடுத்த தமிழகக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஆய்வை நிறைவு செய்த தமிழக குழுவினர், இன்று மீண்டும் இந்தியா திரும்பியுள்ளனர். இவர்கள் சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்ததோடு, ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் சார்பில் பேராசிரியர் ராமு.மணிவண்ணன் பல முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக பாலியல் தொல்லைகள், குடும்ப வறுமைகள், கடன் தொல்லைகள் என…
-
- 0 replies
- 343 views
-
-
TNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது…. October 15, 2018 இலங்கையின் பல்வேறு சிறைகளல் கடந்த பல ஆண்டுகளாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மனிதாபிமானமற்ற ரீதியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துவதனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெறுப்பேற்றுக் கொண்டுள்ளமை வரவேற்க்கத்தக்க விடயம் என முன்னான் வடகிழக்கு மகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த காலங்களில், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இவ்வாறே தமிழ் அரசியற் கைதிகள் விவகாரத்தில் வாக்குறுதி அளிப்பதுவும் பின்னர் அவற்றை காற்றிலே பறக்க விட…
-
- 0 replies
- 303 views
-
-
இராணுவத்தினரிடம் கணிணி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்… October 13, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. இராணுவத்தினரிடம் கணிணி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது. கிளிநொச்சி 57வது படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் கணிணி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 11 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. கிளிநொச்சியில் அமைந்துள்ள இராணுவத்தின் ஒத்துழைப்பு மையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் சிங்கள மொழியில் தமது கணணி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், சிங்கள மொழி மூலம் எழுத்து பிரதிகளை பெற்றுக்கொள்ளும் வகையிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி …
-
- 3 replies
- 666 views
-
-
இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்! வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் சில தினங்களில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியின் செயலாளர், இராணுவ மற்றும் கடற்படை பிரதானி உள்ளிட்டவர்களுடன், அரசதுறைசார் அதிகாரிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, யாழ்ப்பாணத்தில் தற்போது பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள கு…
-
- 1 reply
- 403 views
-
-
ஜனாதிபதி சீனாவுக்கும், பிரதமர் இந்தியாவுக்கும் விஜயம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். பிரதமர் ரணில், தனது தனிப்பட்ட விஜயமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இருப்பினும் இப்பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை, ரணில் சந்திப்பார் எனவும் கூறப்படுகின்றது. இதேவேளை போலந்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மைத்திரி, அங்கிருந்து சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதனால் எதிர்வரும் 5ஆம் திகதி வரவு– செலவு திட்ட உரையின்போது நாடாளுமன்றத்துக்கு செல்ல முடியாத நிலைமை ஜனாதிபதிக்கு ஏற்படும். இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால, வெளிநாடுகளுக்கு அதிகளவான சுற்றுப்பயணங…
-
- 2 replies
- 403 views
-
-
பெரும் விபத்து அதிகாரிகளின் சாதுரியத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது October 15, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.கோண்டாவில் பகுதியில் நேர் எதிரே ஒரே பாதையில் இரண்டு புகையிரதங்கள் வந்த போது நடைபெறவிருந்த பெரும் விபத்து அதிகாரிகளின் சாதுரியத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது. கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதமும் , கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த கடுகதி புகையிரதமும் கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் நேர் எதிரே வந்துள்ளது. அதனை அறிந்த புகையிரத கட்டுப்பாட்டு அதிகாரிகள் விரைந்து செயற்ப…
-
- 4 replies
- 672 views
-
-
October 15, 2018 Add Comment Share This! ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 22 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில் இலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணையை கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லது பிரித்தானியா இந்த பிரேரணையை கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதற்கான இராஜதந்திர முயற்சிகளும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லத…
-
- 0 replies
- 421 views
-
-
5 மாணவர்கள் உட்பட 11 பேரை வெள்ளை வானில் கடத்திச் சென்று, சட்ட விரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி ஒருவரை கைது செய்ய புலனாய்வுத் துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் குறித்த தளபதி பூரணமாக அறிந்திருந்தார் என்பதற்கான சாட்சிகள் பல வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே அவரைக் கைது செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கடந்த ஓகஸ்ட் மாதம் வரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் கோவை மேலதிக ஆலோசனை பெறுவதற்காக …
-
- 0 replies
- 179 views
-
-
‘போராட்டத்தை கைவிட கூறவில்லை’ Editorial / 2018 ஒக்டோபர் 15 திங்கட்கிழமை, மு.ப. 04:58 Comments - 0 அநுராதபுரம் சிறைச்சாலையில், உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்த போதிலும், அவர்களுடைய போராட்டத்தைக் கைவிடுமாறு கோரவில்லையென, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள மாவை எம்.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், அக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பாக, ஜனாதிபதியுடன் பேசிய விடயங்களை, அந்தக் கைதிகளைச் சந்தித்த த…
-
- 0 replies
- 715 views
-
-
ஜேர்மன் ஊடாக இலங்கை குறித்து 2019 இல் மற்றுமொரு பிரேரணை ? ஜெனிவா விவகாரத்தில் இராஜதந்திர நகர்வுகள் தீவிரம் (ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 22 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில் இலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணையை கொண்டுவரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லது பிரிட்டன் இந்த பிரேரணையை 2019ஆம் ஆண்டில் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதற்கான இராஜதந்திர முயற்சிகளும் இடம்பெறுவதாக தெரிகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையிலேயே ஐரோப்…
-
- 0 replies
- 675 views
-
-
மகனைத் தாக்க வந்தவர்கள் தாயை துடிதுடிக்க கொலை செய்த கொடூரம் : யாழில் பயங்கரம் மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய பகுதியில் இன்றிரவு 8 மணியளவில் இந்தக் கொடூரச் சம்பவம் இடம்பெற்றது. வீட்டுக்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று இந்தக் கொலையைச் செய்துள்ளதாக என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் சந்திரராசா விஜயகுமாரி (வயது-58) என்ற குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மகன் காயமடைந்துள்ளார். "இன்று ஞாயிற்றுக்கிழமை வீதியில் சென்ற என்னுடன் சிலர் முரண்பட்…
-
- 2 replies
- 869 views
-
-
ரவீந்திரவை விசாரணை செய்வதில் காலதாமதம் (எம்.எப்.எம்.பஸீர்) 11 மணவர்கள் கடத்தல் தொடர்பில் சந்தேகநபரான நேவி சம்பத்துக்கு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டில் முன்னாள் கடற்படை தளபதியான அத்மிரால் ரவீந்ர விஜேகுனரத்னவுக்கு எதிராக விசாரணைகள் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று காணாமல் ஆக்கியமை தொடர்பில் பிரதான சந்தேகநபரான நேவி சம்பத் எனபப்டும் கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன் கொமாண்டர் ஹெட்டிஆரச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சிக்கு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டில் முன்னாள் கடற்படை தளபதி…
-
- 0 replies
- 297 views
-