ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
சிவனடிபாதமலை பெயர் மாற்றமும், பெரும்பான்மையினரின் நிலைப்பாடும்!!! சிவனடிபாத மலை அடிவாரத்தில் பல வருடங்களாக மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பெயர்ப்பலகை அகற்றப்பட்டு புதிய பெயருடன் கூடிய பெயர்க்கல் அமைக்கப்பட்டமை கடந்த சில வாரங்களாக சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்டு வந்தது. இது குறித்த உண்மை நிலைமையறியாது சிலர் சமூக ஊடகங்களில் இனங்களுக்கிடையில் முறுகல்களை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பகிர்ந்திருந்தனர். இது குறித்து உண்மை நிலைமையை அறிய அவ்விடத்துக்கு நேரடியாக சென்றதில் சில தகவல்களைப்பெறக்கூடியதாக இருந்தது. சிவனடிபாத மலை புனித பிரதேசமானது மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் இரண்டுக்கும் உரித்தான நிலப்பரப்…
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழர்களின் ஒற்றுமையை காட்டிக்கொடுப்போருக்கு மக்கள் பாடம் புகட்டுவர் – செல்வம் தமிழர்கள் ஒன்றுபட்டே பயணிக்கவேண்டும். தமிழர்களின் ஒற்றுமையினை காட்டிக்கொடுப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடத்தினை புகட்டுவார்கள், மண்ணையும் எமது இருப்பினையும் விட்டுக்கொடுப்பதற்கு யாரும் முனையவேண்டாம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், குழுக்களின் பிரதிதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழ் தேசிய கூட்டமைப்பின் க…
-
- 2 replies
- 575 views
-
-
இராணுவத்தின் மருத்துவமனையில் இருந்த எனது பிள்ளை அதன் பின் இராணுவத்தின் முகாங்களில் இருந்ததாக தகவல் ஆனால் இப்ப எனது பிள்ளை எங்கே அரசாங்கம் ஏன் பொய்சொல்லுகிறது. என்பதை ஐ.நா அமர்வில் கூறி எனது பிள்ளையின் தீர்வைப்பெறலாம் என எண்ணி ஐ.நா அமர்விற்கு செல்லமுற்பட்டபோது ஸ்ரீலங்காவில் உள்ள சர்வதேச நாடுகளின் தூதரகங்கள் பயண அனுமதி மறுத்து ஸ்ரீலங்கா அரசுக்கு சாதகமாக செயற்படுகின்றது என்கிறார் வவுனியாவைச்சேர்ந்த திருமதி.. சண்முகம்பிள்ளை சறோஜா அவர்கள்..
-
- 2 replies
- 360 views
-
-
“புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட நாளில் யாழ்ப்பாணம் அதிரும்“: தமிழர்களிற்கு எச்சரிக்கையா? September 17, 2018 ஒக்ரோபர் 30ம் திகதி, யாழ்ப்பாணம் “அதிரும்“ விதமான நடவடிக்கையில் ஈடுபட போவதாக வடமாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினின் இணைப்பாளர் எச்சரித்ததாக குறிப்பிட்டுள்ள செய்தியாளர் ஒருவர், தன்னை மிரட்டியது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார். வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினின் ஊடக இணைப்பாளர் என்.எம் அப்துல்லாஹ் என்பவரால் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் தனக்கு விடுக்கப்பட்டதாக தெரிவித்து வலம்புரி பத்திரிகையின் அலுவலகச் செய்தியாளர் முறைப்பாடு வழங்கியுள்ளார். “முதலமைச்சரின் சொல்லைக் கெட்டு செய்தி போடுகிறீர்கள…
-
- 3 replies
- 1.1k views
-
-
வடமாகாண சபை உறுப்பினர் ஒருவரின் ஊடக இணைப்பாளர் அச்சுறுத்தியதாக பெண் ஊடகவியலாளர் முறைப்பாடு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண சபை உறுப்பினர் ஒருவரின் ஊடக இணைப்பாளர் என அறிமுகப்படுத்திய ஒருவர் தொலைபேசி ஊடாக தன்னை அச்சுறுத்தினார் என யாழில் உள்ள பெண் ஊடகவியலாளர் ஒருவர் யாழ். காவல்நிலையத்தில் ; முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அதேவேளை எதிர்வரும் 30ஆம் திகதி தமிழ் மக்கள் அதிரும் படியான செய்தி வரும் , அதை பிரசுரிக்க தயாராக இருங்கள் எனவும் தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழில்.இருந்து வெளிவரும் பத்திரி;கை ஒ…
-
- 3 replies
- 450 views
-
-
கிளிநொச்சியில் சற்றுமுன் மூன்று வாகனங்கள் விபத்து! ஐவர் படுகாயம்.. ஒருவர் கவலைக்கிடம் கிளிநொச்சி - கரடிபோக்கு சந்திக்கு அண்மையில் உள்ள பண்ணை ஒன்றுக்கு அருகில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. முறிகண்டிப் பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த மினி பஸ் ஒன்று பண்ணைப் பகுதியாக செல்லும் போது, திடீரென குறுக்கே வந்த மாடு ஒன்றுடன் மோதி, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்…
-
- 0 replies
- 516 views
-
-
சரத் பொன்சேகாவின் பீல்ட் மார்ஷல் பதவி பறிபோவதற்கான வாய்ப்புகள் கடந்த சில வாரங்களாக, பாதுகாப்புப் படையினர் மற்றும் இராணுவத் தளபதி உள்ளிட்டோரை பகிரங்கமாக விமர்சித்து வந்த, முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகாவின் பீல்ட் மார்ஷல் பதவி பறிபோவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த தீர்மானம் குறித்து, தமது ஆலோசகர்களுடன் கலந்துரையாடல்களை ஜனாதிபதி முன்னெடுத்து வருவதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை பொன்சேகாவின் விமர்சனங்கள் இராணுவத்தினரை கவலையடைச் செய்துள்ளதா…
-
- 0 replies
- 297 views
-
-
வடக்கு மாகாண சபை தோல்வியடைவதற்கு இந்த 4 காரணிகளுமே காரணம்
-
- 0 replies
- 334 views
-
-
சிறப்புற இடம்பெற்ற யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் தனிநாயகம் அடிகள் விழா யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நினைவு அரங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை 16.09.2018 பிற்பகல் 4 மணிக்கு யாழ். பிரதான வீதியில் உள்ள கலைத்தூது கலையகத்தில் மண்டபம் நிறைந்த ஆர்வலர்களின் பங்கேற்புடன் சிறப்புற இடம்பெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் உபதலைவர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் அடிகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு தனிநாயகம் அடிகள் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்தல் மலர் வணக்கம் செய்தலுடன் ஆரம்பமாகியது. யாழ். பிரதான வீதியில் தண்ணீர் தாங்கியின் முன்பாக அமைந்துள…
-
- 0 replies
- 318 views
-
-
ஐ.நா. செயலர் ஊடாக ஜனாதிபதிக்கு அழுத்தம்! ஆர்.ராம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்து உரிய பொறுப்புக்கூறலை அமுல்படுத்துவதிலிருந்து ஒருபோதும் விலகி நிற்கமுடியாது என்பதை ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அந்தோனியோ குர்த்தீஸ் ஊடாக அழுத்தம் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 24ஆம் திகதி ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். அதற்கு முன்னதாக, தனது பயணம் தொடர்பில் பல்வேற…
-
- 0 replies
- 267 views
-
-
19 ஆவது திருத்தத்தில் எனக்கு எந்த பிரச்சினையுமில்லை - மஹிந்த மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்திருக்கும் 20 ஆவது திருத்தம் நாட்டுக்கு தேவையற்றதொன்றாகும். அத்துடன் 19 ஆவது திருத்தத்தில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அநுராதபுரம் ஜயஸ்ரீ விகாரைக்கு நேற்று வழிபாட்டுக்காக சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழிபாடுகளின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கும் அரசியல…
-
- 0 replies
- 257 views
-
-
எனது கருத்தை விமர்சிப்பவர்களுக்கு சமஷ்டி பற்றி முழு அறிவு உண்டா? – சுமந்திரன் எம்.பி. கேள்வி “சமஷ்டி தொடர்பில் நான் கூறிய கருத்துக்களை விமர்சிக்கும் எங்கள் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கோ அல்லது வேறு எவருக்குமோ சமஷ்டிக் குணாதிசயங்கள் என்னவென்று சொல்லும் அறிவு உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே, சமஷ்டி, ஒற்றையாட்சி என்றால் என்ன என்று தெரிந்து புரிந்து அதற்கான கருத்துக்களை யாராவது முன்வைத்தால் அதற்கான பதில் கருத்தை நான் கூறலாம். சந்தர்ப்பவாதிகளுக்கு நான் பதில் கூறத் தேவையில்லை.” – இவ்வாறு குறிப்பிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் புதிய அரசமைப்பு உருவாக்கக் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. நேற்று யாழ…
-
- 38 replies
- 4.2k views
-
-
எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரம் மீனவர்கள்: கச்சதீவில் பரபரப்பு! இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் மீது கச்சதீவில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் சுமார் 250 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் அங்கு இலங்கைக் கடற்படையின் 20க்கும் மேற்பட்ட ரோந்துப் படகுகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, கச்சதீவுக…
-
- 0 replies
- 483 views
-
-
கிழக்கின் முதல்வராக தமிழர் ஒருவரே வருவார் ; ஸ்ரீகாந்தா கிழக்கின் முதல்வராக தமிழர் ஒருவரே வருவார் அதுவும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தான் வருவார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார் . நேற்று மடடக் களப்பு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலக அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த வருடத்துக்குள் தீர்வு இல்லை என்றால் நாங்கள் தீர்க்கமாக பேசி நல்லதொரு முடிவினை எமது மக்களுக்கு தெரிவிப்போம் ஆகவே மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கிழக்கை பொறுத்த வரையில் தமிழ் கட்சிக்குல் அறுதி பெரும்பாண்மையை பெற்று கொண்டதில்லை ஆகவே இங்கு ஆட்சி அமைப்பது…
-
- 2 replies
- 681 views
-
-
தப்பியோடிய அட்மிரல் ரவீந்திர அமெரிக்காவில் தஞ்சம் பாதுகாப்புப் படைகளின் பிரதானியும். முன்னாள் கடற்படைத் தளபதியுமான வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதற்குரிய ஆவணங்களை அவர் அமெரிக்கத் தூதுவராலயத்தில் கையளித்துள்ளார் என சிங்கள வார இதழொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. “உரிய ஆதாரங்கள் எதுவுமின்றி எனக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. என்னைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கலாம்” எனச் சுட்டிக்காட்டியே மேற்படி கோரிக்கையை அவர் விடுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. ரவீந்திர …
-
- 5 replies
- 726 views
-
-
சிவசேனை அமைப்பின் தலைவருக்கு PTIஆல் விசாரணைக்கு அழைப்பு எஸ்.நிதர்ஷன் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் (PTI) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதற்கமைய, கொழும்புக்கு நாளை மறுதினம் (18) விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிவசேனை அமைப்பை ஆரம்பித்தமை தொடர்பான தகவல்கள், பதிவு தொடர்பான ஆதாரங்கள், வங்கிக் கணக்கு தொடர்பான விவரம், வெளிநாட்டுப் பயணம் தொடர்பான விவரங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் முகமாகவே, அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதம், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால், சச்சிதானந்தனுக்கு இன்று (16) கையளிக்கப்பட்டது. http://www.ta…
-
- 0 replies
- 468 views
-
-
30 வருட கால யுத்த வடுக்களை மூன்று வருடங்களில் தீர்க்க முடியாது – விஐயகலா மகேஸ்வரன் 30 வருட கால யுத்த வடுக்களை மூன்று வருட காலத்தில் தீர்ப்பதென்பது சாதாரண விடயமல்ல என விஐயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. எனினும் 30 வருடமாக நிலவிய போரின் வடுக்களிற்கு 3 வருடத்தில் தீர்வு காண்பது என்பது சாதாரணவிடயமல்ல. எனினும் இந்த நல்லாட்சி அரசாங்கமானது மக்களுக்கு செய்யவேண்டிய பலவற்றை செ…
-
- 0 replies
- 362 views
-
-
மீனவர் பிரச்சினையை தீர்க்க அடுத்தவாரம் முக்கிய சந்திப்பு! – கண்டியில் செங்கோட்டையன் தெரிவிப்பு இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் காணப்படும் மீனவர் பிரச்சினை தொடர்பாக தீர்வினைப் பெறும் முகமாக தமிழகத்தில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் விஜயமுனி சொய்சாவுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனின் 102 வது பிறந்த தின நிகழ்வுகள் அவர் பிறந்த ஊரான கண்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத்…
-
- 0 replies
- 530 views
-
-
சீன பிரதமர் லி கெகியாங் இந்த மாதம் இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை பிற்போட்டுள்ளார் என்று தெரியவருகிறது. இந்த மாதம் சீன பிரதமர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். எனினும், இந்தப் பயணத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்தரமுல்லவில் காணி வங்கி திறந்து வைப்பது, சீன பிரதமர் லி கெகியாங்கின் இலங்கை பயணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். எதிர்காலத்தில் முதலீட்டாளர்கள் காணிகளை பெற்றுக் கொள்வதற்கு இந்தக் காணி வங்கி, உதவியாக இருக்கும். http://thinakkural.lk/article/18662
-
- 0 replies
- 521 views
-
-
யாழில்- இறைச்சி மேடைக்கு அனுப்பும் முன் காட்சி மேடையில் வைக்கப்பட்ட மாடு யாழில் மாடொன்றை காட்சிப்படுத்தி அதனை இறைச்சிக்காக வெட்டுப்படவுள்ளமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களஏற்படுத்தியுள்ளது. யாழ்.ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு முன்பாகவுள்ள காணி ஒன்றில் குறித்த மாடு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. அதனை இறைச்சிக்காக வெட்டப்படவுள்ளதாகவும் , அதன் ஒரு பங்கு இறைச்சி ஆயிரம் ரூபாய் எனவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். குறித்த மாடு யாழ்.குப்பிளான் பகுதியில் உள்ள ஒருவர் வளர்த்துள்ளார், குடும்பத்தின் பொருளாதார ந…
-
- 6 replies
- 1.4k views
-
-
"நீதிமன்றம் விடுவித்தபோதும் சிறை அதிகாரிகள் கணவரை விடுதலை செய்யவில்லை" கனகராயன்குளம் உணவக காணி உரிமையாளர் நேற்று முந்தினம் நீதிமன்றத்தினால் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும் சிறைச்சாலை அதிகாரிகள் அவரை விடுதலை செய்யவில்லையென அவரது மனைவி தெரிவித்துள்ளார். வவுனியா கனகராயன்குளம் உணவக உரிமையாளர் மற்றும் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியினால் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் கைக்கும், காலுக்கும் விலங்கிடப்பட்ட நிலையில் அனுமதிக்கப்ட்டுள்ள கெ.வசந்தகுமார் நேற்று முந்தினம் நீதிமன்றத்தினால் மூன்று பேரின் சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்ட போதும் சிறைச்சாலை அதிகாரிகள் தனது கணவரை விடுதலை செய்யவில்லை என…
-
- 0 replies
- 516 views
-
-
இலங்கைத் தமிழருக்கு சர்வதேசம் துரோகமிழைக்கிறது! இனப்படுகொலைப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் மக்களுக்கு அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சர்வதேசம் தவறியுள்ளதாகவும் அதன் மூலம் சர்வதேசம் அந்த மக்களுக்கு துரோகம் இழைத்து வருகின்றது எனவும் பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளரும், சனல்4 ஆவணப் படத்தின் இயக்குனருமான கெலும் மக்ரே குற்றம் சாட்டியுள்ளார். இலங்கைப் படையினர் மீதான போர்க்குற்றச்சாட்டுக்களை நீக்கிக்கொள்ளுமாறு எதிர்வரும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரின்போது யோசனையொன்றை முன்வைக்கவுள்ளமையுடன் பின்னர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா அமர்வின்போது இந்த யோசனையைப் பிரேரணையாகக் கொண்டுவரத் தாங்கள் திட்டமி…
-
- 3 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவுக்கு ஏவுகணைப் போர்க்கப்பலை வழங்குகிறது சீனா சீன கடற்படையினால் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைப் போர்க்கப்பல் ஒன்றை சிறிலங்காவுக்கு சீனா வழங்கவுள்ளது. 1993ஆம் ஆண்டு சீனக் கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ‘ரொங்லிங்’ என்ற ஏவுகணைப் போர்க்கப்பலே சிறிலங்கா கடற்படைக்கு வழங்கப்படவுள்ளது. தற்போது சீனாவில் உள்ள ஹூடோங் துறைமுகத்தில், இந்தக் கப்பலுக்கு மீள் பொருத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. சிறிலங்கா கடற்படையின் வண்ணம் தீட்டப்பட்டு, பி-625 என்ற தொடர் இலக்கமும் எழுதப்பட்டுள்ளது. இந்தப் போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களின் அணியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த நவீன போர்க்கப்பலின் பிரதான போராயுதமாக, ரி-79 வக…
-
- 2 replies
- 956 views
-
-
உலகில் உள்ள எல்லா நாடுகளிலும், சமஷ்டி குணாதிசயங்கள், ஒற்றையாட்சி குணாதிசயங்கள் இணைந்த அமைப்பே காணப்படுகின்றது என, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
-
- 6 replies
- 1.1k views
-
-
மனதளவில் அகதிகளாக வாழ்ந்து வரும் யாழ் முஸ்லீம் மக்களுக்கு யார் கைகொடுப்பார்கள்? யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் இன்று வரை அடிப்படை வசதிகள் இன்றியே வாழ்ந்து வருகின்றார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2009 ஆண்டிற்கு பின்னர் ஒப்பீட்டளவில் சிறியதாக மீள்குடியேற்றம் என்ற பெயரில் குறித்த மக்கள் மீள குடியமர்த்தப்பட்ட போதிலும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் பூரணமாக மேற்கொள்ளப்பவில்லை. அரச அரச சார்பற்ற அமைப்புகள் இக்காலத்தில் பல திட்டங்களை முன்மொழிந்துள்ள நிலையில் அரசியல் வாதிகள் சிலரின் வரட்டுகௌரவங்களினால் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை எனவும், அதனால் மக்களே பாதிக்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வகையில் …
-
- 2 replies
- 669 views
-