Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காணாமல் போனோர் அலுவலகம் திறப்பதற்கு திருகோணமலைக்கு வந்த இலங்கை இனவழிப்பு அரசின் அதிகாரிகளுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வாக்குவாதம்

    • 0 replies
    • 270 views
  2. கர­ண­வாய் பகு­தி­யில் பட்­டப்­ப­கல் வேளை­யில் வீடொன்­றுக்­குள் புகுந்த திரு­டர்­கள் 16 பவுண் தங்க நகை­களைக் கொள்­ளை­ய­டித்­துச் சென்­றுள்­ள­னர். இந்­தச் சம்­ப­வம் கர­ண­வாய் மத்தி, பாட­சாலை வீதி­யில் உள்ள சதா­னந்­த­மூர்த்தி என்­ப­வ­ரின் வீட்­டில் இடம்­பெற்­றுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. வீட்­டில் உள்ள அனை­வ­ரும் வேலைக்­குச் சென்­றி­ருந்த சம­யம் மூதாட்டி ஒரு­வரே அங்கு தங்­கி­யி­ருந்­தார் http://newuthayan.com/story/15/வீட்­டில்-இருந்த-16-பவுண்-நகைகள்-பட்டப்பகலில்-கொள்ளை.html

  3. வலி வடக்கில் கட்டுவன் மயிலிட்டி வீதியின் கிழக்குப் பகுதியில் இராணுவத்தின் ஆக்கிரப்பில் உள்ள மக்களுக்கு சொந்தமான காணிகளில் எஞ்சியிருக்கும் வீடுகள், மதில்கள், என்பவற்றை புல்டோசர் பயன்படுத்தி இடித்தழிக்கும் நடவடிக்கைகள் கடந்த ஒருவாரகாலமாக இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பற்றைகள் வெட்டி அகற்றப்பட்டு வீடுகள் இடித்தழிக்கப்பட்டு வெட்டவெளியான நிலத்தில், தென்னம்பிள்ளை நடும் நடவடிக்கைகளையும், இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர். இராணுவத்தின் இந்த நடவடிக்கை தமது காணிகள் இனி ஒருபோதும் விடுவிக்கப்படமாட்டாது என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக மக்கள் கூறுகின்றனர். வலி வடக்கில் இருந்து இட…

  4. குற்றவாளியென அறிவிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று 01 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன் காணாமல் போன ஊடகவிலயாளர் பிரகீத் எக்நெலிகொடவின் மனைவி, சந்தியா எக்நெலிகொடவிற்கு 50,000 ரூபா நட்ட ஈட்டினை ஒரு தடவையில் வழங்குமாறும் செலுத்தத் தவறினால் மேலும் மூன்று மாத சிறைத் தண்டனைடன் 3000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குறித்த ஒரு வருடத்துக்கான சிறைத் தண்டனை 06 மாதங்களில் நிறைவடையும் வகையில் விதிக்கப்பட்டுள்ளது. சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவத்தில் கடந்த மே மாதம் 24ம் திகதி ஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிக்க…

  5. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்று இனம் தெரியாத நபர்களால் தீக்கிரை ஆக்கப்பட்டு உள்ளது. வட்டுக்கோட்டையில் உள்ள குறித்த கல்வி நிறுவனத்திற்குள் நேற்று புதன்கிழமை இரவு உட்புகுந்த குழு ஒன்று தளபாடங்கள் மற்றும் கொட்டகைகள் என்பவற்றுக்கு தீயிட்டு கொளுத்தி உள்ளனர். குறித்த கல்வி நிறுவனத்தில் கற்பித்த ஆசிரியர் ஒருவர் பதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார் எனும் சந்தேகத்தில் நேற்றைய தினம் மாலை வட்டுக்கோட்டை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு இருந்தார். அந்நிலையில் நேற்றைய தினம் இரவு குறித்த ஆசிரியர் கற்பித்த தனியார் கல்வி நிறுவனம்…

  6. கதிர்காமம் கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரரை சுட்டுக் கொல்ல முயன்ற சம்பவத்தில் சந்தேகநபர் அடையாளங் காணப்பட்டுள்ளார். இவர் மஹாசென் ஆலயத்தின் பிரதான கப்புராளையான அசேல பண்டாரவெனவும், சந்தேகநபரின் வீட்டின் பின்புறமிருந்து, கைக்குண்டுகள் பத்தும் கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ள காவற்துறையினர், சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான கதிர்காமம் கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரருக்கு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவரின் நலனை விசாரிப்பதற்கு எவ…

  7. பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள உறுதிகளுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை சம்பந்தப்படுத்த வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க அரசாங்கத்தின் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் கொழ…

  8. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நுண் கடன் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறிப்பாக பெண்கள் நுண் கடன் பொறிக்குள் சிக்கி தவிக்கும் நிலையினை தவிர்க்கும் வகையிலும் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்ம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று(14-06-2018) காலை 10.30 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பமானது. கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாற்று திட்டங்களை வங்கிகள் ஊடாக மக்களிற்கு வழங்க கோரியும் மக்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது மாவட்ட…

  9. மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகள் இன்று (14) வியாழக்கிழமை 14 ஆவது நாளாக மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம் பெற்து. இந்தநிலையில் இன்று மதியம் குறித்த அகழ்வு பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதோடு,மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (18) அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படும் என விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ அகழ்வு பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். -அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,, மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் நகர் பகுதியில் உள்ள விற்பனை நிலைய…

  10. மஸ்தான் நியமனம் குறித்து சிறிலங்கா அதிபர் மீளாய்வு? சிறப்புச் செய்தியாளர்Jun 14, 2018 | 2:38 by in செய்திகள் இந்து சமய விவகார பிரதி அமைச்சராக இஸ்லாமியரான காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், இந்த நியமனம் சிறிலங்கா அதிபரால் மீளாய்வு செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்து மத விவகார பிரதி அமைச்சராக, காதர் மஸ்தான் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இதற்கு கூட்டு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இதனைக் கடுமையாக சாடியிருந்தார். அத்துடன், இந்த நியமனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்ப்பதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறு…

    • 2 replies
    • 672 views
  11. அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில், கோத்­த­பாய ராஜ­பக் ஷ போட்­டி­யி­டு வ­தற்கு அமெ­ரிக்கக் குடி­யு­ரிமை ஒரு தடை­யாக இருக்­காது என்று கூட்டு எதி­ர­ணியின் பாரா ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்­துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில் கூறி­யுள்­ள­தா­வது;அமெ­ரிக்க குடி­யு­ரி­மையைத் துறப்­பது தொடர்­பான, உண்­மை­யான சட்ட நிலையை விளக்­கு­மாறு கோத்­தா­பய ராஜ­பக்ச என்­னிடம் கேட்­டி­ருந்தார்.1952ஆம் ஆண்டின் குடி­வ­ரவு மற்றும் குடி­யு­ரிமை சட்­டத்தில், குடி­யு­ரி­மையைத் துறத்தல் தொடர்­பாக கூறப்­பட்­டுள்­ளது.இந்தச் சட்­டத்தின், 49(a) (5) பிரிவு, எந்­த­வொரு குடி­ம­கனும், தனது குடி­யு­ரி­மையைத் துறக்க விரும்­பினால், எந்தக் கட்­டுப்­பா­டு­களும் இன்றி அதனை செய்­யலாம் என்…

    • 0 replies
    • 729 views
  12. ஆஸ்திரேலியாவில், ஈழன் இளங்கோவின் இயக்கத்தில் உருவான திரைப்படம் “சாட்சிகள் சொர்க்கத்தில்’. இந்தத் திரைப்படத்துக்கு இலங்கை அரசு தடைவிதித்துள்ளது. இலங்கை படையினரால் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட தமிழர்கள் குறித்தும், அகதிகளாய் அயல் நாடுகளில் தமிழர் படும் அவலங்களையும், உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் இது. இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் துணைக் கதைகள், குறும்படங்களாக பல பன்னாட்டு விருதுகளை தட்டிச் சென்றவை என்பது குறிப்பிடத்தக்கது. http://newuthayan.com/story/12/சாட்சிகள்-சொர்க்கத்தில்-பாலச்சந்திரன்-திரைப்படத்துக்கு-இலங்கையில்-தடை.html

  13. மன்னார் மனித புதைகுழி: சித்தரவதையின் பின்னரே கொலை; ஆதாரங்கள் கிட்டுகிறது! June 14, 2018 மன்னார் சதொச மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டுவரும் மனித எச்சங்கள், கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பணியாற்றும் சட்டத்தரணிகள் குழாம் இந்த சந்தேகத்தை வெளியிட்டுள்ளது. மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் மனித எச்சங்களை தேடும் பணிகள் நேற்று புதன்கிழமை 13 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணிகளில், இரண்டு முழு …

  14. வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் ஆராய விசேட குழு வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி விசேட குழு ஒன்றை நியமிக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மோதலுக்கு பின்னர் வடக்கு கிழக்கில் சமூப மற்றும் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் அந்த பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தில் பாரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. இந்நிலையில் வடக்கு, கிழக்குக்கு அவசியமான அபிவிருத்திப் பணிகள் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவது குறித்து ஆராயும் நோக்கில் ஜனாதிபதி தலைமையில் இந்த குழு அமைக்கப்படவுள்ளது. இந்தக் குழுவில், பிரதமர், மாகாண ஆளுநர்கள், மாவட்ட செயலாளர்கள், படைகளின் தளபதிகள்…

    • 0 replies
    • 698 views
  15. முன்னாள் பிரதம நீதியரசரின் மனு தள்ளுபடி முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தாக்கல் செய்திருந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் (திருத்தம்) சட்டத்துக்கு எதிராகவே அவர், மனுத்தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை, பரிசீலனைக்கு உட்படுத்திய மூன்று நிதியரசர்கள் அடங்கிய குழாமே, மனுவைத் தள்ளுபடி செய்தது. http://www.tamilmirror.lk/செய்திகள்/முன்னாள்-பிரதம-நீதியரசரின்-மனு-தள்ளுபடி/175-217626

    • 0 replies
    • 629 views
  16. அமெரிக்கா எமக்கு உத்தரவிட முடியாது – என்கிறார் மகிந்த கார்வண்ணன்Jun 14, 2018 | 2:16 by in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவதையோ, அவர் அதிபராவதையோ அமெரிக்கா அனுமதிக்காது என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தம்மிடம் கூறியதாக வெளியான செய்திகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், கோத்தாபய ராஜபக்ச அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பது பற்றி, அதுல் கெசாப்புடனான சந்திப்பின் போது, எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை. அமெரிக்கா எமக்கு உத்தரவிட முடியாது. சிறிலங்காவை விட்டு வெளியேறும் அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பு மரியாதை நிமித்த…

  17. இந்துக்களை கொச்சைப்படுத்தவே மஸ்தானுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி – வடிவேல் சுரேஸ் nShare காதர் மஸ்தானுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டிலுள்ள இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயல் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 7 பேருக்கு இன்று பி…

  18. போராட்டத்திற்கு ஆதரவில்லை: வழக்கம்போல இயங்கும் யாழ்ப்பாணம்! June 11, 2018 வடமராட்சி கிழக்கில் கடலட்டை பிடிக்கும் விவகாரத்தில் வடக்கு மாகாணம் முழுவதிலும் விடுக்கப்பட்ட அரைநாள் கடையடைப்புக்குக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. வழக்கம்போல மக்கள், வர்த்தகர்கள் தமது வழமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனமே இந்த அரைநாள் கடையடைப்புக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை அழைப்புவிடுவித்தது. கட்சிகள், பொது அமைப்புக்களுடன் கலந்தாலோசிக்காமல் பகிரங்க அழைப்பாகவே இதனை விடுப்பதாக கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனம் சுட்டிக்காட்டியிருந்தது. இந்த நிலையிலேயே அரைநாள் கடையடைப்புக்கான அழைப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்ல…

  19. தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா? குளறுபடிக்கு ஜனாதிபதியும், பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்த அவர், “வன்னி மாவட்ட எம்பி நண்பர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக இருக்கட்டும். அதில் பிரச்சினை இல்லை. ஆனால், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சில் இருந்து இந்து கலாச்சார அமைச்சை பிரித்தெடுத்து, அதை வேறு ஒரு பொருத்தமான அமைச்சுடன் சேர்த்து விடுங்கள். மீன்வள துறை அமைச்சர், மீனவராகவும், கல்வி அமைச்சர், கல்வி பேராசிரியராகவும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், இதே விதி மத விவகார அமைச்சுகளுக்கு பொருந்தாது.…

  20. இராணுவ அதிகாரியை உருக வைத்த விஸ்வமடு மக்கள்! விஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து, அம்பேபுஸ்ஸ முகாமிற்கு இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் இராணுவ கேர்ணல் ரத்தனபிரிய பந்துவிற்கு அப்பகுதி மக்கள் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் இன்று தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அந்த பதிவில், சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மற்றும் விஸ்வமடு மக்கள் ஆகியோர் கண்ணீருடன் கேர்ணல் ரத்தனபிரிய பந்துக்கு பிரியாவிடை கொடுத்துள்ளனர். Rajith Keerthi Tennakoon …

    • 24 replies
    • 3.6k views
  21. இலங்கை ஆசியாவின் குப்பைத் தொட்டியாக மாறிவிட்டது சிங்கப்பூருடன் இலங்கை ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதால், இலங்கையை காதால் இழுத்து சென்று எட்கா ஒப்பந்தத்தில் கையொப்பமிட வைக்க இந்தியாவுக்கு முடியுமென மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கட்சி தலைமையகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கை சிங்கப்பூருடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் மிகவும் விசித்திரமாக உள்ளது. இலங்கையின் பொருளாதாரம் இப்போது சிங்கப்பூரிடம் சிக்கிக்கொண்டுள்ளது. மேலும் சிங்கப்பூருடனான ஒப்பந்தத்தினால் இலங்கை பொருளாதாரத்தின் அனைத்து வாசல்களும் திறக்கப்பட்டுள்…

  22. வடக்கு எதிர்க்கட்சி தலைவர் வீட்டில் போடப்பட்ட பணப்பையில் இருந்த 963 ரூபாய் பணத்தை காணவில்லை என யாழ்ப்பாண காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை கறுப்பு சட்டை போட்ட சிலரே நடத்தினார்கள் வடமாகாண சபை நடத்தவில்லை. அதனால் நான் வடமாகாண சபைக்கு வழங்கிய 7 ஆயிரம் ரூபாய் பணத்தினை திருப்பி தர வேண்டும் என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா சபையில் கோரி இருந்தார். அந்நிலையில் கிழக்கு பல்கலை கழக மாணவர்கள் , எதிர்க்கட்சி தலைவர் கோரிய பணத்தினை வழங்குவதற்காக கடந்த சில தினங்களாக பொதுமக்களிடம் ஒரு ரூபாய் வீதம் பணத்தினை சேகரித்து வந்தனர். வடமாகாண சபை அமர்வு நேற்றைய தினம் நடைபெற்று இருந்த போது சபைக்கு…

  23. மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகள் நேற்று (12) செவ்வாய்கிழமை 12 ஆவது நாளாக இடம் பெற்ற நிலையில் மாலை 5.30 மணியளவில் நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த பகுதியில் சூழ்ந்து கொண்டமையினால் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது. மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வு பணியில் களனி பல்கலைக்கழக ‘தொல்பொருள்’ அகழ்வு தொடர்பான கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும் பயிற்சி நிலையைச் சேர்ந்த நான்கு வைத்திய அதிகாரிகள் மற்றும் பல் நிபுணத்துவ வைத்திய அதிகாரி ஒருவரும் இணைந்து விசேட சட்டவைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினரும் , களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைம…

  24. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடம் பெற்ற இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட புலிகளின் குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்கும் யோசனைக்கு அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (13.06.18) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால் போரில் உயிரிழந்த புலிகளின் குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்குதல் தொடர்பான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது. எனினும் குறித்த யோசனைக்கு அமைச்சரவையில் ஏனைய அமைச்சர்கள் பலர் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளதோடு, பல படுகொலைகளை மேற்கொண்ட புலிகளின் குடும்பத்தினருக்கு நட்ட ஈடு…

  25. சிவில் பாதுகாப்புப் படையின் கேர்ணல் ரத்னபிரிய பந்துவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள், கண்ணீருடன் பிரியாவிடை வழங்கி, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்,கே.சிவாஜிலிங்கம் ஆகியோரை கன்னத்தில் அறைந்துள்ளனர் என, ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களது, இந்த உணர்வுகளுக்கு தலைவணங்கி, அவர்கள் இருவரும் தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமெனவும், அவர் இன்று (12.06.18) கொழும்பில் நடைபெற்ற எளிய அமைப்பின் ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.