ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
வடக்கில் வைத்திய சேவை பற்றாக்குறை பக்கச்சார்பான அரசியல் நடவடிக்கைகளா ? - எஸ்.சிவமோகன் கேள்வி (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) வடக்கில் வைத்திய சேவை பற்றாக்குறை பக்கச்சார்பான அரசியல் நடவடிக்கைகளா என்ற கேள்வி எழுகின்ற நிலையில், வடக்கில் மூடப்பட்டுள்ள 24 வைத்தியசாலைகளை சீர்செய்ய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன வடக்கின் சுகாதார வசதி பற்றாக்குறை குறித்து கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் அவர் பெயருக்கு களங்கம் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். கடை,…
-
- 4 replies
- 714 views
-
-
குறுக்கு வழியில் முதலமைச்சர் பதவியை குத்தகைக்கு எடுக்க முயலக் கூடாது – சிவமோகன் எம்.பி. ஆதங்கம்!! தாயக வலி கண்டவர்களுக்கே வடக்கு முதலமைச்சாராகத் தகுதி உண்டு. குறுக்கு வழி யில் முதலமைச்சர் பதவியை குத்தகைக்கு எடுக்க முயலக்கூடாது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் இவ்வாறு தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் சுதந்திரபுரம் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மே…
-
- 0 replies
- 533 views
-
-
சிறிலங்காவில் கால் வைத்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான, 62 நிறுவனங்கள் சிறிலங்காவில் முதலீடுகளைச் செய்திருக்கின்றன அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்று கொழும்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சீன வங்கியின் (Bank of China) முகாமையாளர் சுவான் வொங் தெரிவித்துள்ளார். “இவ்வாறு சிறிலங்காவில் முதலீடுகளைச் செய்துள்ள மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற 62 சீன அரசு நிறுவனங்களில் 26 நிறுவனங்கள் தமது பிராந்திய தலைமையகங்களை சிறிலங்காவிலேயே அமைத்துள்ளனர். இதனால் தான்,தெற்காசியாவில் எமது தலைமையகங்களில் ஒன்றாக சிறிலங்காவை தெரிவு செய்தோம். இந்த கிளை மாலைதீவு, பங்களாதேஸ், நேபாளம் போன்ற நாடுகளில் உள்ள எமது கிளைகளின் வணிக நட…
-
- 0 replies
- 441 views
-
-
வடக்கில் ஆயுதப் போராட்டம் பலமடைய 1981 தேர்தல் தான் காரணம் – மகிந்த தேசப்பரிய ஜனநாயகம், வாக்குரிமை, மற்றும் ஒரு நாட்டின் மக்களின் இறைமையைப் பாதுகாப்பதற்கு தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்த வேண்டியது முக்கியமானது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வாக்காளர் நாளை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அனுராதபுர மாவட்டச் செயலகத்தில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “சிறிலங்காவின் வரலாற்றில் மோசடிகள் நிறைந்த மூன்று தேர்தல்கள் நடந்தன. 1999ஆம் ஆண்டு நடந்த வடமேல் மாகாணசபைத் தேர்தல். 1982இல் நடந்த மக்கள் கருத்து வாக்கெடுப்பு. 1981இல் நடந்த யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் ஆகியனவே அவை. …
-
- 0 replies
- 339 views
-
-
கோத்தாவைச் சந்திக்கிறது 16 பேர் அணி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி வரும் புதன்கிழமை சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது. அந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளார். புஞ்சிபொரளையில் உள்ள திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் வரும் புதன்கிழமை மாலை 5 மணிக்கு இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்தச் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2018/06/11/news/31324
-
- 0 replies
- 424 views
-
-
முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் - மாவை (ஆர்.ராம்) வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பான எனது பெயர் முன்மொழியப்பட்டால் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்வேன் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று புதன்கிழமை இரவு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தக்கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சோ.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ரெலோ தலைவரும் பாராளுமன்…
-
- 7 replies
- 1.2k views
-
-
விக்னேஸ்வரன் முதலமைச்சர் இல்லையென்றால் தமிழினப்படுகொலை மூடிமறைக்கப்பட்டிருக்கும்- பொ.ஐங்கரநேசன் June 10, 2018 அரசியல்வாதிகள் சிலர் முதலமைச்சர் மீதும், வடக்கு மாகாணசபை மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளார்கள். இந்த அரசியல்வாதிகள் மாகாணசபை சரியாக இயங்கவில்லை என்றும், வந்த அபிவிருத்தித் திட்டங்களைத் திருப்பி அனுப்பியதைத் தவிர முதலமைச்சர் வேறு எதனையுமே செய்யவில்லை என்றும் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். உண்மையில், விக்னேஸ்வரன் முதலமைச்சராக இல்லாது போயிருந்தால், அரசுக்குச் சாமரம் வீசும் தமிழ்த் தலைவர்கள் முதலமைச்சர் நாற்காலியில் உட்காந்திருந்தால் நடைபெற்ற தமிழினப் படுகொலை உலக அரங்கில் மூடிமறைக்கப்பட்டிருக்கும் என்று வடக்கு மாகாணசபை உறுப்பினரும், தமிழ…
-
- 1 reply
- 829 views
-
-
கொக்குவிலில் வாள்வெட்டு!! – துரத்தி மடக்கிப் பிடித்த பிரதேச இளைஞர்கள்!! கொக்குவிலில் வாள்வெட்டில் ஈடுபட்ட குழு ஒன்று அந்தப் பகுதி இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் சற்று முன்னர் நடந்துள்ளது. 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த குழு ஒன்றே வாள்வெட்டை நடத்தியுள்ளது. வாள்வெட்டை நடத்திய குழுவைப் பிரதேச இளைஞர்கள் துரத்திச் சென்றனர். அந்தக் குழுவில் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் மடக்கிப் பிடிக்கப்பட்டார். அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். http://newuthayan.com/story/12/கொக்குவிலில்-வாள்வெட்டு-துரத்தி-மடக்கிப…
-
- 3 replies
- 696 views
-
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆயுதத்துடன் சிக்கிய நபர்! உயிர் தப்பினார் ரணில்? கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக ஜேர்மன் நோக்கி பயணிக்க முயற்சித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த பயணியின் பயணப்பையில் இருந்து எரிவாயு துப்பாக்கி ஒன்று கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையம் போன்ற அதிமுக்கிய பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படுகின்றது. நாட்டில் இருந்து செல்லும் மற்றும் வரும் பயணிகள் அனைவரும் கடுமையாக சோதனைக்குள்ளாக்கப்படுவது வழக்கம். அவ்வாறான சோதனையின் போதே இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும் துப்பாக்கி…
-
- 1 reply
- 693 views
-
-
'பாலியல் லஞ்சம்' - இலங்கை உயர்கல்வித் துறை அமைச்சர் கருத்தால் சர்ச்சை பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption( சித்தரிப்புப் படம்) இலங்கையின் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு, அங்குள்ள மாணவிகள் பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சில பாடங்களில் தேர்ச்சி அடைய முடியாது என்றுஇலங்கையின் உயர்கல்வி அமைச்சர் தெரிவித்த கருத்து, அங்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது, இந்த விடயத்தைக் கூறினார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள மாணவிகளிடம் அங…
-
- 1 reply
- 446 views
-
-
கவலைக்கும் பரிகாசத்துக்குமுரிய இலங்கை அரசியல் செயற்பாடுகள் தனிநாடு கோரி மூன்று தசாப்தகாலமாக போர் புரிந்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (பலநாடுகளினால் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டவர்கள்) கூட எத்தனையோ சந்தர்ப்பங்களில், இலங்கை அரசுடன் பேச்சுக்கள் நடத்தியுள்ளனர். இந்த நிலையில் அந்த நீண்டகாலப் போர் முடிந்து நாடு தற்பொழுது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை, அரசியல் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, நாட்டிலுள்ள சகல கட்சிகளும் தங்களுக்கிடையேயான பேதங்களை மறந்து ஒன்றாய் அமர்ந்து கூடிப்பேசி நாட்டின் தேசி…
-
- 0 replies
- 181 views
-
-
பாம்புக்கும் எனக்கும் நிறையவே தொடர்புண்டு!! – புதூரில் முதலமைச்சர்!! நாகங்களைத் தரிசிப்பதை, நாகதம்பிரான் கோயில்களுக்கு செல்வதை இறைவன் சித்தமாகவே நான் கருதி வருகின்றேன். எனக்கும் பாம்புகளுக்கும் இடையில் ஒரு உறவு உண்டு. என்னுடைய வாழ்வில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் போது அந்த நிகழ்வுக்கு முன் ஏதாவது ஒரு பாம்பு என் வீட்டிற்கு வந்து போகும். இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் அன்னதான மடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று ந…
-
- 0 replies
- 441 views
-
-
வாகரையில் அதிகரிக்கும் சிறார் துஷ்பிரயோகம், கண்டுகொள்ள யாருமில்லை? கதிரவெளி பொது நூலக வாசகர் வட்டம் கண்விழித்தது பதிப்பு: 2018 ஜூன் 10 15:37 புலம்: மட்டக்களப்பு, ஈழம் புதுப்பிப்பு: ஜூன் 10 17:13 மட்டக்களப்பின் கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு தொழில் முயற்சிகள் நிமித்தம் தென்னிலங்கையில் இருந்து வருகை தரும் தொழில் நிறுவனங்கள் வறுமைக்குட்பட்டுள்ள ஈழத் தமிழ்க் கிராமங்களில் தமிழ்ச் சிறார்களைத் தொழிலுக்கு அமர்த்துகின்றன. ஒரு சில இடங்களில் பாலியல் துஷ்பிரயோகமும் இடம்பெறுவதாக சமூக அக்கறை கொண்ட கிராமத்தவர்கள் கூர்மை செய்தித்தளத்திற்குத் தெரிவிக்கின…
-
- 0 replies
- 672 views
-
-
பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் கொழும்புக்கு இரகசியமாக வந்து சென்றதன் பின்னணி? மைத்திாிபால சிறிசேன. ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து விட்டு டில்லிக்குத் திரும்பிவிட்டார் இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு நெருக்கமான அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை கொழும்புக்கு வந்து, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துவிட்டு சென்றுள்ளதாக அமைச்சரவையின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவருடைய வருகை குறித்து கொழும்பு அரசியலில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இவருடைய வருகை திடீரெனவும் இரகசியமாகவும் அமைந்ததாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திங்கட்கிழமை காலை கொழும்புக்கு வந்த…
-
- 0 replies
- 310 views
-
-
கோத்தபாய வேட்பாளராக நிறுத்தப்படுவாரா? மகிந்த கருத்து அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் விடுக்கும் வேண்டுகோள்களை கருத்தில் எடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாவதற்கு கோத்தபாய ராஜபக்ச எவ்வளவு ஆதரவு தேவை என்பது எனக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் மத்தியில் கோத்தாபாய ராஜபக்ச குறித்து காணப்படும் கருத்தை கணக்கிலெடுத்துள்ளதாகவும், தனக்கும் தனது சகோதரரிற்கும் இடையில் எந்தவித கருத்துமுரண்பாடுகளும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 268 views
-
-
“கிளிநொச்சி வரும் ஜனாதிபதி மாமா அப்பாவையும் கூட்டிக்கொண்டு வரவேண்டும்” குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – கிளிநொச்சி… கிளிநொச்சி வரும் ஜனாதிபதி மாமா அப்பாவையும் கூட்டிக்கொண்டு வரவேண்டும் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சி வருகை தரவுள்ள ஜனாதிபதி மாமா எங்களுடைய அப்பாவையும் விடுவித்து கூட்டிக்கொண்டு வரவேண்டும் என ஆயுள் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். சிறுவர் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட நிகழ்வில் கலந்துகொள்ளவே ஜனாதிபத…
-
- 0 replies
- 393 views
-
-
இன, மத வெறுப்புகளைத் தூண்டும் கருத்துக்களை தவிர்க்கக் கோரிக்கை : ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை நமது நிருபர் மனித உரிமையைப் பாதுகாத்தல், மேம்படுத்தல் மற்றும் நாட்டின் அடிப்படை சுதந்திரம் ஆகியவை குறித்து இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பாராட்டியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், மதம் மற்றும் இன வெறுப்பு, வெறுப்பைத் தூண்டும் கருத்துக்களை விடுத்து சகிப்புத் தன்மையைக் கடைபிடித்தல் மற்றும் குற்றங்கள் தொடர்பில் தனது கவனத்தை செலுத்தும்படி அரசை வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய யூனியன் மற்றும் இலங்கை கூட்டு ஆணைக்குழுவி்ன் கீழுள்ள ஆட்சி சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகளுக்கான நடவடிக்கை குழுவின் மூன்றா…
-
- 1 reply
- 388 views
-
-
இலங்கை இராணுவத்தை 9 பிரிவுகளாக பிரித்து 9 மாகாணங்களில் நிலை நிறுத்தவும்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… இலங்கை இராணுவத்தை 9 பிரிவுகளாக பிரித்து நாட்டில் உள்ள 9 மாகாணங்களில் நிலை நிறுத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரச அலுவலகம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இந்த யோசனையை அமுல்படுத்துவதன் மூலம் 9 மாகாணங்களுக்கு இராணுவப் பிரிவுகள் கிடைக்கும். வடக்கில் அதிக எண்ணிக்கையிலான இராணுவத்தினர் நிலை கொண்டிருப்பதை தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள். இதனால், மாகாணங…
-
- 0 replies
- 538 views
-
-
64 பில்லியன் செலவில் இலங்கை விமானப்படைக்கு ஹெலிக்கொப்டர்கள் பல ஹெலிக்கொப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை 64 பில்லியன் ரூபாய் செலவில் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளை விமானப்படை மேற்கொண்டுள்ளது. ரஸ்யாவில் தயாரிக்கப்பட்ட எம் ஐ 171 எச் எஸ் ரக ஹெலிக்கொப்டர்களை ரஸ்யாவிடமிருந்து கொள்வனவு செய்வது குறித்து விமானப்படை வட்டாரங்கள் ஆர்வம் காட்டிவருகின்றன. மோதல் நடவடிக்கைகளிற்கும் படையினரின் போக்குவரத்திற்கும் பயன்படுத்தக்கூடிய இந்த வகை ஹெலிக்கொப்டர்கள் பத்தினை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. இதேவேளை இலங்கை விமானப்படை நான்கு எம் ஐ 17 ஹெலிக்கொப்டர்களை 14.3 பில்லியன் ரூபாய் செலவில் கொள்வனவு செய்வதற்கான ஆர்வத்தையும் வெள…
-
- 1 reply
- 465 views
-
-
ரஷ்யாவுக்கான தூதுவராக பொறுப்பேற்க தயானுக்கு மகிந்த பச்சைக்கொடி ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவராக கலாநிதி தயான் ஜெயதிலக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச பச்சைக்கொடி காண்பித்திருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா மற்றும் பாரிசுக்கான தூதுவராக முன்னர் பணியாற்றிய கலாநிதி தயான் ஜெயதிலகவை ரஷ்யாவுக்கான தூதுவராக நியமிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார். கலாநிதி தயான் ஜெயதிலக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவராகவும், அவரது ஆலோசகராகவும் இருப்பதுடன் தற்போதைய அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்து வருபவர். அ…
-
- 0 replies
- 265 views
-
-
'புதிய அரசியலமைப்பு வந்தாலும், வராவிடினும் நான் கட்சியிலிருந்து வெளியேறி விடுவேன்'....... தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ரி.விரூஷன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும் அல்லது அது உருவாக்கப்படாவிட்டாலும் இரண்டில் எது நடந்தாலும் நான் கட்சியைவிட்டு வெளியேறி விடுவேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குறிப்பாக தமிழரசுக் கட்சிக்குள் தங்களுக்கு எதிராக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் தொடர்ச்ச…
-
- 1 reply
- 255 views
-
-
இறந்த குழந்தை மீண்டும் உயிர் பிழைப்பதால் யாழில் பரபரப்பு! யாழ். சங்குப்பிள்ளையார் பகுதியில் மருத்துவர்களினால் உயிரிழந்து விட்டதாக உறுதிசெய்யப்பட்ட சிறுமி மீண்டும் உயிர் பெற்றுவருவதாக, குழந்தையின் குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த சிறுமி காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 15 ஆம் திகதி தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுமி நேற்று முன்தினம் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை அறிவித்ததையடுத்து சிறுமியின் பெற்றோர், இறுதிக் கிரியைகளை நடத்தவதற்கு ஏற்பாடுகளைச் …
-
- 1 reply
- 312 views
-
-
லங்கா இ நியூஸ் ஆசிரியரை திருப்பி அனுப்புமாறு பிரித்தானியாவிடம் கோரிய சிறிலங்கா அதிபர் லண்டனைத் தளமாக கொண்டு இயங்கும், லங்கா இ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் பிரதீப் சந்துருவன் சேனாதீரவை, கைது செய்யுமாறு அல்லது சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புமாறு பிரித்தானியாவிடம் கோரியுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிசை நேற்று பஜெட் வீதியில் உள்ள தமது இல்லத்துக்கு அழைத்த சிறிலங்கா அதிபர் அவருடன் நடத்திய சுமார் 30 நிமிடச் சந்திப்பின் போதே இவ்வாறு கோரியுள்ளார். இந்தச் சந்திப்பில் சிறிலங்கா அதிபரின் இணைப்புச் செயலர் சிறிலால் லக்திலக, பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன ஆகியோரும் பங்கேற்றனர். கொழ…
-
- 0 replies
- 306 views
-
-
மீனவர்களுக்கு எச்சரிக்கை நாட்டில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை வலுவடைந்திருப்பதால் மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரையில் காற்று நாட்டில் வீசக்கூடுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடருமென எதிர்பார்க்கப்படுவமாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாடு முழுவதும், குறிப்பாக மேல், தென், மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது. …
-
- 1 reply
- 338 views
-
-
சிறிலங்கா விமானப்படைத் தளபதிக்கு ஒரு ஆண்டு சேவை நீடிப்பு சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜயம்பதிக்கு சேவை நீடிப்பு வழங்கி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். சிறிலங்கா விமானப்படைத் தளபதி கடந்த மே 25 ஆம் நாளுடன் ஓய்வுபெறவிருந்தார். இந்த நிலையிலேயே அவருக்கு ஒரு ஆண்டு சேவை நீடிப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளார் சிறிலங்கா அதிபர். முப்படைகளின் தளபதி என்ற வகையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இதன் மூலம், அடுத்த ஆண்டு மே 25 ஆம் நாள் வரை, சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக, எயர் மார்ஷல் கபில ஜயம்பதி பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.puthinappalakai.net/2018/06/10/news/31318
-
- 0 replies
- 213 views
-