Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதிய தேசிய கொடியைக் கொண்டுவர சிவாஜிலிங்கம் முயற்சி புதிய தேசியக் கொடி ஒன்றை கொண்டுவருவதற்காக போராடவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் ஊடாக குறித்த புதிய தேசியக்கொடி ஒன்றினை அறிமுகப்படுத்தினால் நாட்டிற்குள் பிரச்சினைகள் ஏற்படாது என்றும் அவர் தமிழ்மிரருக்கு தெரிவித்தார். ஒரு நாட்டினது தேசியக்கொடியானது சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றாக அமையவேண்டும் என்றும்,தற்போது உள்ள தேசியக்கொடியானது சிங்கள இனத்தையும்,பௌத்த மத்ததையும் மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துவதாக உள்ளதாகவும் சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/புதிய-தேசிய…

  2. நீதிபதி இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு.! ரி.விரூஷன் யாழ். மணல்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவரை பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு 15 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்பளித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஜீலை மாதம் மணல்காட்டு பிரதேசத்தை சேர்ந்த 16 வயதினை விட குறைந்த பெண் பிள்ளையை கற்பழித்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் நான்கு பிள்ளைகளின் தந்தையான விக்டர் அருந்தவராஜா (47) என்பவர் எதிரியாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தார். யாழ்.மேல் நீதிமன்றில் இடம்பெற்ற குறித்த பாலியல் வல்லுறவு வழக்கில் அ…

  3. குப்பைகள் விரைந்து அகற்றப்படாவிடில் சில காலத்தில் யாழ்ப்பாண நகரம் குப்பை மேடாகக் காட்சியளிக்கும் விசேட திண்மக் கழிவு அகற்றல் வேலைத்திட்டம் – 2017 20.11.2017 குருநகர் ஐந்தாம் மாடி குடியிருப்புப் பகுதியில் யாழ் மாநகரசபையின் புதிய ஆணையாளர் திரு.ஜெயசீலன் அவர்களே, யாழ் பிரதேச செயலாளர் திரு.தயாநந்தன் அவர்களே, எனது அமைச்சின் செயலாளர்களே, உள்ளூராட்சி ஆணையாளர் அவர்களே, ஏனைய உயர் அதிகாரிகளே, யாழ்ப்பாணம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களே, உள்ளூராட்சி அமைச்சின் உத்தியோகத்தர்களே, இந்த நிகழ்வில் பங்கு பற்றுவதற்காக வருகை தந்திருக்கும் அனைத்து சகோதர சகோதரிகளே! தற்போது மழைக்காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வடபகுதியில் டெங்கு நோய்த் தாக்…

  4. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் பிர­தமர் ஆஜர்.! மத்­திய வங்­கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்குழுவில் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க சற்று முன்னர் ஆஜராகி உள்ளார். ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்குழு முன்­னி­லையில் ஆஜ­ராக கடந்த வியா­ழக்­கி­ழமை விடுக்­கப்­பட்ட அறி­வித்தலின் பிர­கா­ரமே அவர் இவ்­வாறு ஆஜ­ரா­கியுள்ளார். கடந்த 2015 பெப்­ர­வரி முதலாம் திகதி முதல் 2016 மார்ச் 31 ஆம் திகதி வரை­யி­லான காலப்­ப­கு­தியில் மத்­திய வங்­கியின் பிணை முறி விநி­யோகம் தொடர்பில் விசா­ரணை செய்­வ­தற்­காக உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் கே.டி.சித்­ர­சி­றியின் தலை­மையில் நீதி­ய­ரசர் பிர­சன்ன ஜய­வர்­தன மற்றும் ஓய்­வு­பெ…

  5. குண்டர்கள் தாக்கியபோது பாதுகாப்பு தரப்பினர் வேடிக்கை பார்த்தனர் படை­யினர் மீது நம்­பிக்­கை­யில்லை ; கிந்­தோட்டை முஸ்­லிம்கள் குற்­றச்­சாட்டு (எம்.பி.எம்.பைறூஸ்) பொலி­ஸாரும் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் பார்த்­தி­ருக்க, அவர்கள் முன்­னி­லை­யி­லேயே குண்­டர்கள் தமது வீடு­களைத் தாக்­ கி­ய­தாகக் குற்­றஞ்­சாட்டும் கிந்­தோட்டை பிர­ தேச முஸ்லிம் மக்கள், பிர­தே­சத்தில் பதற்­ற­மான சூழ்­நிலை நில­விய நிலையில் பாது­காப்புப் படை­யி­னரை பின்­வாங்கச் செய்­து­விட்டே இந்தத் தாக்­குதல் முஸ்­லிம்கள் மீது நடத்­தப்­பட்­ட­தா­கவும் விசனம் தெரி­வித்­தனர். அவ்­வா­றெனில் இதன் பின்­ன­ணியில் செயற்­பட்ட மறை­கரம் யார் என்­பதை கண்­ட­றிந்து அர­சாங்கம் நட­வ­டிக்கை எடு…

  6. இடைக்கால அறிக்கையை முழுமையாகப் படித்துவிட்டு விவாதிக்க வரலாம்! அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையில் தமிழர்களுக்கு எதுவும் இல்லை என்று கூறுபவர்கள் முதலமைச்சராக இருந்தாலும் அமைச்சர்களாக இருந்தாலும் அல்லது தேசியக் கொடியை ஏற்ற முடியாது என போலித் தேசியம் பேசுபவர்களாக இருப்பினும் அவர்களுடன் நேரடியாக விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். விவாதிக்க வருபவர்கள் இடைக்கால அறிக்கையை முதலில் முழுமையாகப் படித்துவிட்டு வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், தமிழ் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளைத் தெரியாதவர்களே மக்கள் மத்…

  7. புலிகளின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதா? – ஜனநாயகப் போராளிகள் கட்சியிடம் விசாரணை! முல்லைத்தீவில் நடத்தப்படும் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு மற்றும் வணக்க நிகழ்வுகளில் விடுதலைப் புலிகளின் எழுச்சி கீதங்கள் இசைக்க படுகின்றமை தொடா்பில் பொலிஸார் விசாரணை நடத்தினர். புதுகுடியிருப்பு ஜனநாயப் போராளிகள் கட்சி அலுவலகத்தில் பொலிஸார் இது தொடர்பில் விசாரணை ஒன்றையும் நடத்தியதாக தெரிவிக்கபடுகிறது. ஜனநாயக போராளிகளின் கட்சி அலுவலகத்தில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு நேற்றும்,நேற்றுமுன்தினமும் நடைபெற்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் தேனிசை செல்லப்பா உள்ளிட்ட பாடகர்கள் பாடிய இறுவெட்டு ஒன்று அவ்விடத…

  8. ஆறு தசாப்­த­மாக தமிழ் பிர­தி­நி­திகள் பின்­பற்றும் வழக்­கத்­தி­னையே நானும் பின்­பற்­றி­யுள்ளேன் மக்­களை திசை திருப்­பவே பிர­சாரம் என்­கிறார் வட­மா­காண கல்வி அமைச்சர் '(ஆர்.ராம்) தேசி­யக்­கொ­டியை நான் அவ­ம­திக்­க­வில்லை. தேசியக் கொடியை அவ­ம­திப்­பதே அர­சி­ய­ல­மைப்பு மீற­லாகும். அறு­பது வரு­டங்­க­ளாக தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் செயற்­பட்டு வந்­ததன் அடிப்­ப­டை­யி­லேயே நானும் நடந்­து­கொண்டேன் என்று வட­மா­காண கல்வி அமைச்சர் க.சர்­வேஸ்­வரன் தெரி­வித்தார். நான் தேசியக்கொடியை ஏற்ற மறுத்­த­மையால் பாரிய சல­ச­லப்பு உரு­வா­ன­தாக அர­சியல் உள்­நோக்­கத்­துடன் பிர­சா­ரங்­களை பூத­ாக­ர­மாக்­கி­யுள்­ள­தாக குற்றம் சாட்­டிய மாகாண கல்வி அமைச்சர் சர்­வேஸ்…

  9. சிறிதரன்,மாவை தீபமேற்றினால் ....................-முன்னாள் போராளிகள் எச்சரிக்கை

  10. கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராக இருந்த போது, சிறிலங்கா இராணுவத்தை அரசியல்மயப்படுத்தினார் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், ”கோத்தாபய ராஜபக்ச இராணுவத்துக்குள் அரசியல் செல்வாக்கைப் புகுத்த முயன்றதால், இராணுவம் இரண்டாக பிளவுபடுத்தப்பட்டது. இதுவும், மகி்நத ராஜபக்ச தனது அதிபர் பதவியை இழப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று. இராணுவத்தில் பணியாற்றிய போது, கோத்தாபய ராஜபக்ச, ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய போன்றவர்கள், குற்றங்களில் ஈடுபட்டனர். இப்போது அவர்கள் இராணுவத்தின் பெயரைக் கெடுக்கின்ற போலி தேச…

    • 3 replies
    • 367 views
  11. புதன்­கி­ழமை இந்­தியா செல்­கிறார் பிர­தமர் ரணில்.! பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்­வரும், புதன்­கி­ழமை உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு இந்­தியா செல்­ல­வுள்ளார். இரண்டு நாட்கள் பய­ண­மாக எதிர்­வரும் 22ஆம் ஆம் திகதி இந்­தி­யாவின் புது­டெல்­லிக்குச் செல்லும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அந்­நாட்டின் முக்­கிய தலை­வர்­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி மற்றும் முக்­கிய அமைச்­சர்கள், காங்­கிரஸ் கட்­சியின் தலை­வர்­கள் உள்­ளிட்ட அர­சியல் தலை­வர்­களைச் சந்­தித்து முக்­கிய பேச்­சுக்­க­ளையும் நடத்­த­வுள்ளார். குறிப்­பாக இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யி­லான அர­சியல், …

  12. ஊர­டங்கு தளர்த்­தப்­பட்டு முப்­படை, பொலிஸ் அதிரடிப்படையின் கட்­டுப்­பாட்டில் கிந்­தோட்டை பாது­காப்பு உறுதி; 19 பேர் கைது (எம்.எப்.எம்.பஸீர்) காலி, - கிந்­தோட்டை பகு­தியில் சிங்­கள –- முஸ்லிம் சமூ­கங்­க­ளுக்கு இடையே ஏற்­பட்ட முறுகல் நிலைமை வன்­மு­றை­யாக மாறி­யதால் நில­விய பதற்றம் மற்றும் பாதுகாப்பு அச்­சு­றுத்தல் ஆகி­யன கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன. இந் நிலையில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழ­மை­களில் இரவு நேரத்தை மையப்­ப­டுத்தி பிறப்­பிக்­கப்பட்ட ஊர­டங்கு உத்­தர­வும் தளர்த்­தப்பட்டு, பொலிஸார், பொலிஸ் விசேட அதி­ரடிப் படை­யினர் மற்றும் முப்­ப­டை­யி­னரின் பூரண கட்­டுப்­பாட்­டுக்குள் கிந்­தோட்டை பகு­தியை கொண்டு வந்­துள்­ள­தா­கவும…

  13. அவுஸ்ரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்டு நௌரு, பபுவா நியூகினியா, கிறிஸ்மஸ்தீவு, அவுஸ்ரேலிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 197 இலங்கையர்களை மீண்டும் கொழும்புக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, “சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்ரேலியா சென்று அங்கு புகலிடம் நிராகரிக்கப்பட்ட 197 இலங்கையர்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கிறிஸ்மஸ் தீவில் 12 பேரும், பபுவா நியூகினியாவில் 21 பேரும், அவுஸ்ரேலியாவில் 70 பேரும், நௌருவில் 94 பேருமாக, மொத்தம் 197 இல…

  14. கிந்தோட்டை பகுதிக்கு தொடர்ந்தும் பாதுகாப்பு : இனக்கலவரம் ஏற்பட்ட இடத்தில் பிரதமர்.! காலி, கிந்தோட்டை பிரதேசத்துக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்துள்ளார். நேற்று முன்தினம் கிந்தோட்டையில் குழப்பநிலை காரணமாக முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டது. அத்துடன் இரண்டு பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், பெற்றோல் குண்டு வீச்சுகளும் இதன்போது பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பிரதமரின் இந்த விஜயத்தின் போது அமைச்சர்களான வஜிர அபேவர்த்தன, சாகல ரத்நாயக்க ஆகியோரும் உடனிருந…

  15. புத்தரை பச்சை குத்திய பெண்ணுக்கு நட்ட ஈடு; அரசுக்கு மீயுயர் நீதிமன்றம் உத்தரவு புத்தரின் உருவத்தை கையில் பச்சை குத்திக்கொண்டதற்காக தடுத்து வைக்கப்பட்ட பிரித்தானிய பெண்ணுக்கு ஐந்து இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்குமாறு அரசுக்கு மீயுயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நயோமி கோல்மன் என்ற பிரித்தானிய சுற்றுலாப் பயணியான பெண் அண்மையில் இலங்கை வந்திருந்தார். அவரது கையில் புத்தரின் உருவம் பச்சை குத்தப்பட்டிருந்ததைக் காரணம் காட்டி கட்டுநாயக்க பொலிஸார் அவரை கைது செய்து விளக்கமறியலில் வைத்தனர். மீயுயர் நீதிமன்றில் இது குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அதன் தீர்ப்பு இன்று (15) வழங்கப்பட்டது. நயோமி புத்தரின் உருவத்தைப் பச்சை குத்திக்கொண்…

    • 2 replies
    • 488 views
  16. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய 41 பேர் கைது யாழ்ப்பாணம் கோப்பாய் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இரண்டு நாட்களுக்குள் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ்மா அதிபர் வழங்கிய பணிப்புரையின் கீழ் வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக 3 விசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம்,கோப்பாய், மானிப்பாய், மற்றும் சுன்னாகம் ஆகிய …

  17. யாழில் மஹிந்த அணி மும்முரம் செல்வநாயகம் கபிலன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் சார்பாக, யாழ். மாவட்டத்திலிருந்து உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் நடவடிக்கைகள், தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, கோப்பாய் தொகுதி வலி. மேற்கு பிரதேச சபை, வலி. தென் மேற்கு, வல்வெட்டித்துறை பிரதேச - நகர சபை, பருத்தித்துறை நகர சபை உள்ளிட்ட சபைகளில், பொதுஜன முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தத்தமது விண்ணப்பத்தில் கையொப்பம் இட்டு வருகின்றனர். அத்துடன், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஸ்ரீ லங்கா ப…

  18. தேசியக் கொடியை தூக்கிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன? தேசிய கொடியை தூக்க மறுத்த வட மாகாணசபை அமைச்சரை கண்டிப்போம். ஆனால், இன்று இந்த அமைச்சர் தேசிய கொடியை தூக்கவில்லை என்பதில் குறை காணும் தென்னிலங்கை தீவிரவாதிகள், அன்று தேசியக் கொடியை தூக்கிய சம்பந்தனுக்கு காட்டிய நல்லெண்ணம் என்ன? தமிழ் அரசியலில் இருக்கின்ற முற்போக்காளர்களை பலமடைய வைக்க சிங்கள அரசியல் தலைமைகள் தொடர்ந்தும் தவறிவிட்டன. இப்போதும்கூட சம்பந்தனை வெறுங்கையுடன் ஒன்றும் தராமல் ஓட்டிவிடத்தானே நீங்கள் முயல்கிறீர்கள்? ஒரே நாடு என்ற அடையாளத்துக்குள் வந்துவிட்ட சம்பந்தனை பலவீனப்படுத்தினால், வடக்கில் தீவிரவாதம் பலமடைவதை எவராலும் தடுக்க முடியாது. ஆகவே இன்று வடக்க…

  19. பொறி­முறை ரீதி­யான சித்­தி­ர­வதை தொடர்­கி­றது! தற்­போ­தைய அர­சின் காலத்­தி­லும் தமிழ் இளை­ஞர்­கள் தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­பட்டு சித்­தி­ர­வ­தை­க­ளுக்­கும், பாலி­யல் துன்­பு­றுத்­தல்­க­ளுக்­கும் உள்­ளாக்­கப்­ப­டு­கி­றார்­கள் என்­கிற குற்­றச்­சாட்டு மீண்­டும் எழுப்­பப்­பட்­டுள்­ளது. ‘அசோ­சி­யேட் பிரஸ்’ பன்­னாட்டு ஊட­கம் இது தொடர்­பாக அண்­மை­யில் அறிக்­கை­யிட்­டி­ருந்­தது. அதில் புலம்­பெ­யர் நாடு­க­ளில் தஞ்­ச­ம­டைந்த இளை­ஞர்­கள் பல­ரது உடல் க­ளில் காணப்­பட்ட காயங்­க­ளும் ஆதா­ர­மாக முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்த விட­யம் பூதா­கா­ர­மா­கக் கிளம்­பி­யதை அடுத்து…

  20. சில்­லறை விட­யங்­க­ளுக்­கும் இன்­றும் கையூட்டு கொடுக்­க­ வேண்­டி­யுள்­ளது கீழ் நிலை­யில் உள்ள மக்­கள் இன்­னும் சாதா­ரண விட­யங்­க­ளுக்­கும் கையூட்­டுக் கொடுக்க வேண்­டிய நிலமை உள்­ளது. கையூட்டு மற்­றும் ஊழல் விசா­ரணை ஆணைக்­குழு வேக­மா­கச் செயற்­பட வேண்­டும். அடி­மட்ட ஊழ லைத் தடுக்க இத­னூ­டா­கவே முடி­யும். அடி­மட்ட ஊழலைத் தடுத்­தால் மேல் மட்­டத்­தி­லும் ஊழ­லைத் தடுக்க முடி­யும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வியா­ழேந்­தி­ரன் தெரி­வித்­தார். நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று முன்தினம் 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு -– செல­வுத் திட்­டத்­தில் அரச தலை­வர், தலைமை அமைச்­சர், எதிர்க்­கட்சித் தலை­வர்…

  21. சமஷ்டி ஒன்றே ஓரளவுக்கு சிங்களவரின் பேரினவாதத்தை முறியடிக்கக் கூடியது! வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், பல்வேறு தரப்பினரிடமிருந்தும் தமக்குக் கிடைக்கும் பல கேள்விகளில் ஒன்றிற்கு வாராவாரம் பதிலளித்து வருகின்றார். அதன்படி இந்தவாரம் ஒரு கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார். குறித்த கேள்வியினையும் அதற்கான முதலமைச்சரின் பதிலினையும் இங்கே முழுமையாகத் தருகின்றோம். கேள்வி: தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வுகாண தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர்கள் படாதபாடுபடுகையில் அண்மையில் அரசியலுக்கு வந்த நீங்கள் அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதைப் பலரும் விமர்சனஞ் செய்கின்றார்கள். மற்றவர்களுடன் சேர்ந்து போகாமல் அவர்களின் …

  22. தமிழக அரசியல்வாதிகள் கருத்துக்களை வெளியிட முன்னர் இலங்கை வந்து நிலைமையை நேரில் பார்க்க வேண்டும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழக அரசியல்வாதிகள் கருத்துக்களை வெளியிடுவதற்கு முன்னதாக இலங்கைக்கு வந்து நிலைமைகளை நேரில் பார்வையிட வேண்டுமென அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல்வாதிகள் மத்திய மலைநாட்டுக்கு நேரில் வந்து செய்து நிலைமைகளை பார்வையிடாது கருத்து வெளியிடுவதில் பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக மாநில அரசியல்வாதிகள் எப்பொழுதம் ஈழத் தமிழர்கள் பற்றி மட்டுமே பேசி வருவதாகவும் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்;ந்து வரும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் பற்றியும் அவர்கள் எதிர்நோக்கி வரும் சவால்கள் பற்…

  23. Lycan VS Rox மோதல். “வாள்கள் மினுங்கும்” “பைக்” எல்லாம் கதறும்: “ஆவாக்கள்” கோலோச்சும் யாழ்ப்பாணம் – சுழிபுரம் கந்தசாமி யாழில்.இயங்கும் ஆவா குழுவுக்கும் தனு ரொக்ஸ் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களே கடந்த தினங்களில் யாழில்.நடைபெற்ற வாள் வெட்டு சம்பவங்கள் என காவற்துறை விசாரணைகளில் கண்டறியப்பட்டு உள்ளது. ஆவா குழுவை சேர்ந்த சன்னா என்று அழைக்கப்படும் பிரசன்னா, தேவா, மற்றும் பிரகாஸ் ஆகியோர் உள்ளதாகவும் , அவர்கள் பின்னால் பலர் உள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்து அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து இருந்தனர் அந்த நிலையில் தேவா மற்றும் பிரகாஸ் ஆகிய இருவரும் இந்தியாவுக்கு தப்பி சென்று இருந்த நிலையில் திருச்சி பொலிசாரினால் உரிய ஆவணங…

  24. தேசியக் கொடியை ஏற்ற மறுத்த விவகாரம்: சட்டமா அதிபரின் ஆலோசனை படி நடவடிக்கை வட மாகாண கல்வி அமைச்சர் எஸ்.சர்வேஸ்வரன் தேசியக் கொடியை ஏற்ற மறுத்த விவகாரம் தொடர்பில், சட்ட மா அதிபரின் ஆலோசனையின் படி, நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார். நாளை இது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில், வவுனியா பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட, சர்வேஸ்வரன், இலங்கை தேசியக் கொடியை ஏற்ற மறுத்தார். பல்லின மக்கள் வாழ்கின்ற இலங்கையின் தேசிய கொடியில் சிறுபான்மையினருக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை என்பதற்காகவே தான் தேசிய கொடியை ஏற்ற மறுப்பு தெரிவித்தத…

  25. விடுதலை புலிகளினால் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்த இரணைமடு காணி அளவிடப்படுகின்றது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இரணைமடு பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பராமரிப்பில் உள்ள அரச காணி அளவீட்டு பணிகள் இடம்பெற்ற வருகின்றன. விடுதலை புலிகளினால் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டு நூற்றுக்கணக்கான மக்களிற்கு வேலைவாய்பு வழங்கப்பட்ட பண்ணைக்காணியே இவ்வாறு நில அளவீடு செய்யப்பட்டு வருகின்றது. மீள்குடியேற்றத்தின் பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த காணி பின்னர் இராணுவ சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் குறித்த காணியினை அளவீடு செய்யும் பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.