ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
ஜெனிவா சமர் இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்றுவரும் 28ஆவதுகாலக்கிரம மீளாய்வு செயற் குழு கூட்டத்தொடரில் இன்று புதன்கிழமை இலங்கை குறித்து ஆராயப்படவுள்ளது. இதன்போது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் இலங்கை எவ்வாறான முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்படவுள்ளன. விசேடமாக அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி, பெல்ஜியம் , எஸ்டோனியா, நோர்வே, போர்த்துக்கல் மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகள் இலங்கை மீது கடும் அழுத்தத்தை பிரயோகிக்கும் வகையில் கேள்விகளை எழுப்பவுள்ளன. இந்த நாடுகள் இலங்கை தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிட்…
-
- 0 replies
- 134 views
-
-
யாழில் இன்று முன்னிரவு வாள்வெட்டு; நால்வர் படுகாயம்! (கோப்புப் படம்) யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் இன்று முன்னிரவு நடந்த வாள்வெட்டுத் தாக்குதலில் நான்குபேர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மானிப்பாய், சங்குவேலிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த 4 பேர் மீதே இனந்தெரியாத நபர்கள் குறித்த தாக்குதலினை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். கொழும்பு செல்வதற்காக ஆயத்தமாகி நின்றவர்களை ஏற்றுவதற்கு முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் குறித்த வீட்டுக்குச் சென்றுள்ளார். முன்னிரவு 7.30 மணியளவில் சுமார் 10 நபர்கள் வீட்டினுள் நுழைந்து அங்கு நின்றிருந்த அனைவரையும் …
-
- 1 reply
- 414 views
-
-
500 கோடி ரூபா நட்டஈடு கோரி அவன்ட் கார்ட் நிறுவனம் வழக்குத் தாக்கல் குளோபல் தமிழ் செய்தியாளர் 500 கோடி ரூபா நட்டஈடு கோரி அவன்ட் கார்ட் நிறுவனம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. சர்வதேச கடற் பரப்பில் பயணம் செய்யும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கி வந்ததாகவும், அந்த பணிகளை கடற்படையினர் பலவந்தமாக தம்மிடமிருந்து அபகரித்துக் கொண்டதாகவும் அவன்ட் கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் தமது நிறுவனத்திற்கு ஏற்பட்ட நட்டத்திற்காக கடற்படையினர் 500 கோடி ரூபா நட்டஈடு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளது. அவன்ட் கார்ட் மரிடைம் நிறுவனம் இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது. சட்ட மா அதிபர், பாதுகாப்புப் படைகளின் பிரத…
-
- 1 reply
- 257 views
-
-
பொய்ப் புகாரில் மன்னார் மீனவரின் 700 கிலோ பாறை மீன்களைப் பறித்த கடற்படையினர் மன்னார், பள்ளிமுனை மீனவர் ஒருவரின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பாறை மீன்களை கடற்படையினர் இன்று (14) காலை பறிமுதல் செய்தனர். மன்னார், பள்ளிமுனையைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நேற்று (13) திங்கட்கிழமை மாலை மீன் பிடிப்பதற்காக பள்ளிமுனை கடற்பகுதியில் இருந்து சக மீனவர்களுடன் கடலுக்குச் சென்றுள்ளார். அவர், இன்று காலை இரணைதீவு மேற்கு கடற்பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு சற்று தொலைவில் சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளார். இதன் போது தான் பிடித்த சுமார் 700 கிலோ பாறை மீன்களை பள்ளிமுனை கடற்கரைக்கு காலை 11 மணியளவில் கொண்டு வந்துள்ளார். அப்ப…
-
- 5 replies
- 424 views
-
-
நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை விற்கப்பட்டு விட்டது என விஜயகலா மகேஸ்வரன் கவலை. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை , சட்டத்துறை மற்றும் ஊடகத்துறை ஆகியன விற்கப்பட்டு உள்ளது. என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , நீதித்துறை , ஊடக துறை , சட்டத்துறையும் விற்கப்படுகின்றது. இந்த ஜனநாயக நாட்டில் நல்லாட்சி நிலவும் காலத்தில் அவை விற்கப்பட்டு உள்ளது. ஒரு சில பொறுப்பு உள்ள அதிகாரிகளால் தான் அவை விற்கப்பட்டன. அதனால…
-
- 17 replies
- 1.2k views
-
-
2 தடவைகள் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாயின் கணவன் : இன்று தீர்ப்பு வவுனியா - மறவன்குளம் பகுதியில் 16 வயதிற்கு குறைந்த சிறுமி ஒருவரை பாலியல் வன்புனர்வு புரிந்த குற்றத்திற்காக 55வயதுடைய சிறிய தந்தைக்கு 20 வருட கடூழியச்சிறைத் தண்டனையை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டு மறவன்குளம் பகுதியில் தனிமையிலிருந்த 16 வயதிற்கு குறைந்த சிறுமியை தாயின் இரண்டாவது கணவனான 55 வயதுடைய வைரமுத்து சிவலிங்கம் இரண்டு தடவைகள் பாலியல் வண்புனர்வுக்குட்படுத்தியுள்ளார். இதையடுத்து குறித்த நபரை வவுனியா பொலிஸார் கைது செய்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். கடந்த வருடம…
-
- 2 replies
- 466 views
-
-
வட்டிக்கு சட்டத்தரணிகள் வழங்கும் உடன்படிக்கைகள் சட்டவிரோதமானவை – மா.இளஞ்செழியன். மீற்றர் வட்டி, நாள் வட்டி , மாத வட்டி என்பன சட்டவிரோதமாவை. காசோலைக்கு பணம் வழங்குவதும் சட்டவிரோதமானது. அந்தப் பணத்தை மோசடியாக நீதிமன்றில் வழக்குப் போட்டு மீளப்பெறுவதும் தவறு. மீற்றர் வட்டிக்கு சட்டத்தரணிகள் அல்லது நொத்தாரிசுகள் வழங்கும் உடன்படிக்கைகளும் சட்டவிரோதமானவை. வங்கிகளால் அறவிடப்படும் அல்லது வழங்கப்படும் வட்டிகளே சட்டபூர்வமானவை என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணம், சுதுமலை பகுதியில் திரையரங்கம் அமைப்பதற்காக 47 இலட்சத்துக்கு 85 ஆயிரம் ரூபா பணம் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் திரையரங்கம் அமைப்பதற்கான வ…
-
- 1 reply
- 341 views
-
-
தமிழ் அரசியலின் தலைவிதி! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுக்கோப்புக்கு ஏதோவொரு ஆபத்து நேரப் போகின்றதென்று தமிழ் மக்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்ததற்கு ஏற்ப அந்த ஆபத்து நேர்ந்தே விட்டது! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுக்கோப்பானது நீண்ட கால இழுபறிக்குப் பின்னர் இறுதியில் சிதைந்தே போய் விட்டது. அடுத்த வருட ஆரம்பத்தில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகின்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், வட கிழக்கு தமிழினத்தின் ஒட்டுமொத்த கூட்டமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை களமிறங்கப் போவதில்லை. அது இப்போது முற்றாக…
-
- 0 replies
- 279 views
-
-
பணமோசடியில் சமுர்த்திக் கடன் வசூலிப்பு உத்தியோகத்தர்கள்? யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் சமுர்த்திக் கடன் வசூலிப்பு உத்தியோகத்தர்கள் பணமோசடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டை விசாரித்து நடவடிக்கைகள் எடுப்பதற்கு கணக்குப் பரிசோதனைக் குழு அனுப்பப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலக சமுர்த்தி வட்டாரங்கள் தெரிவித்தன. இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெல்லிப்பழைப் பகுதியில் உள்ள சமுர்த்தி பண வசூலிப்பு உத்தியோகத்தர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தெரி விக்கப்…
-
- 0 replies
- 369 views
-
-
நினைவுகூரல்… கொழும்பு, அத்துருகிரியவில் 2008ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் “ரகு” என்றழைக்கப்படும் குமாரசாமி நந்தகோபனின் 9ஆவது ஆண்டு நினைவு தினம், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் அதன் பொதுச் செயலாளர் பிரசாந்தன் தலைமையில் இன்று (14) நினைவுகூரப்பட்டது. (படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா) http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/நினைவுகூரல்/46-207140
-
- 0 replies
- 270 views
-
-
இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதனுடனான நேர்காணல் இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதனுடனான நேர்காணல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் கட்டாயமாக நீக்கப்படவேண்டும். ஏனெனில் அந்தச் சட்டம் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதற்கு ஏற்றதொரு சூழ்நிலையை ஏற்படுத்துகின்றது’’ என இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார். ‘சுடர் ஒளி’ பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். கேள்வி: சித்திரவதைகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக முறைப்பா…
-
- 1 reply
- 446 views
-
-
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள்? மழைக்கு முளைக்கும் காளான்களாக தேர்தல் வந்ததும் புதிய அரசியல் கூட்டணிகள் உருவாக ஆரம்பித்துவிட்டன. அதில் முதலாவதாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் , ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பும் இணைந்து ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணிக்கு தமிழ் மக்கள் பேரவை ஆதரவு என்று நேற்று அந்த அமைப்பு விடுத்த அறிக்கையில் மறைமுகமாகத் தெரிவித்திருந்தது. தேர்தல் அரசியல் என்பது சந்தர்ப்பவாதக் கூட்டு என்பது இந்தக் கூட்டணி மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இந்தக் கூட்டணியில் உள்ள தமிழ்க் காங்கிரஸ் கட்சி,…
-
- 0 replies
- 461 views
-
-
இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணி ஆரம்பம்! மாவீரர் நாளினை முன்னிட்டு இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது. மாவீரர் நாளை சிறப்பாக நினைவு கூரும் வகையில் இன்றையதினம் செவ்வாய் கிழமை (14-11-2017) காலை விளையாட்டு கழக உறுப்பினர்கள்,கிராம பொதுமக்கள், கிராம அமைப்புக்கள் மற்றும் மதகுருமார்கள் இணைந்து சிரமதான பணியில் ஈடுபட்டனர். எந்த அரசியல் கட்சிகளின் தலையீடும் இல்லாமல் கிராம மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து இந்த சிரமதான பணியினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இரணைப்பாலை கிராமத்தின் 25 ஏக்கர் என்று அழைக்கப்படும் பகுதியில் இறுதி நேரத்தில் வீரகாவியமான பல நூற்றுக்கணக்கான மாவீரர்களின் வித்து…
-
- 0 replies
- 384 views
-
-
கூட்டமைப்பின் உட்கட்சிப் பூசல்; ஆயர் தலைமையில் பேச்சுவார்த்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் வளர்ந்துவரும் உட்கட்சிப் பூசல்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான விசேட சந்திப்பொன்று ஆயர் ஜோசப் கிங்ஸ்லி ஸ்வாம்பிள்ளை தலைமையில் நேற்று (11) நடைபெற்றது. கூட்டமைப்பை விட்டு விலக ஈபிஆர்எல்எப் மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் முடிவெடுத்திருப்பதையடுத்தே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டமைப்பு எடுக்கும் முடிவுகளுடன் ஒத்துப் போக முடியாதிருப்பதைக் காரணம் காட்டியே மேற்படி கட்சிகள் விலக முடிவெடுத்திருப்பதாக அறிவித்திருந்தன. குறிப்பாக, கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பிரதானிகள் தமிழர்களின் நலனைக் கருத்திற்கொள்ள…
-
- 9 replies
- 793 views
-
-
தமிழரசு கட்சியுடன் சேர்ந்து இயங்க மாட்டோம். – ஈ.பி.ஆர்.எல்.எப். அறிவிப்பு:- புதிய அரசியல் சாசனம் தொடர்பில் தமிழரசு கட்சி எடுத்த முடிவுவானது , தமிழ் மக்களின் ஆணையை மீறிய செயலாகும். அதனால் இனியும் அவர்களுடன் சேர்ந்து இயங்க முடியாது. அவர்கள் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடவும் முடியாது என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.பொது நூலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , தமிழ் அரசுக் கட்சி மக்களின் ஆணையை முழுமையாக உதா…
-
- 6 replies
- 703 views
-
-
பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை தெல்லிப்பழையில் ஆரம்பம் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நேற்று தெல்லிப் பழை ஆதார மருத்து வமனையில் ஆரம்பமானது. போரால் அவயவங்கள் பாதிக்கப் பட்டு பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை செய்யவேண்டிய வட பகுதியைச் சேர்ந்த 100 பேருக்கு இலவசமாகச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படு கின்றது. நேற்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதிவரை சத்திரசிகிச்சை நடை பெறவுள்ளது. பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை நிபுணரான அமெரிக்கா வைச் சேர்ந்த கலாநிதி திசேரா தலைமையில் 4 வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் கொண்ட 30 பேர் அடங்கிய குழு சத்திரசிகிச்சைகளை மேற்கொள்கின்றது. ht…
-
- 0 replies
- 215 views
-
-
வாள்வெட்டுக் குழு வீடு புகுந்து தீ வைப்பு- கல்வியங்காட்டில் சம்பவம் வாள்வெட்டுக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் இருந்து பிணையில் வந்திருந்தவரின் வீட்டுக்குள் புகுந்த மற்றொரு வாள்வெட்டுக் குழு பொருள்களை அடித்துச் சேதப்படுத்தி தீ வைத்துள்ளது. இந்தச் சம்பவம் கல்வியங்காடு முக்குறுணிப் பிள்ளையார் வீதியிலுள்ள ஒழுங்கையில் நேற்றிரவு இடம்பெற்றது. பல இடங்களில் வாள்வெட்டு நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 பேரில் ஒருவர் பல மாதங்களாக யாழ்ப்பாண நீதிவான் மன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். சில மாதங்களுக்கு முன்ன…
-
- 0 replies
- 418 views
-
-
கிளிநொச்சியை அழுக்காக்கியுள்ள கழிவு துணிகள் கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணிக்குள் குவிந்து காணப்படும் ஆடைத் தொழிற்சாலை கழிவு துணிகளால் அயலில் வாழுகின்ற பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலையின் கழிவு துணிகளை தனிநபர் ஒருவர் கொள்வனவு செய்து அதனை மூலப்பொருளாக பயன்படுத்தி சிறு தொழில் முயற்சி ஒன்றில் ஈடுப்பட்டு வருகின்றார். அவர் தான் கொள்வனவு செய்யும் கழிவு துணிகளை தனது காணியில் வெட்ட வெளியில் களஞ்சியப்படுத்தியுள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பெருமளவு கழிவு துணிகள் இவ்வாறு குப்பை மேடு போன்று காணப்பட்டு வருகிறது. அத்தோடு அண்மையில் பெய…
-
- 0 replies
- 325 views
-
-
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மாபெரும் பேரணியில்.! பல வருடங்களாக சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும், அவர்களின் விடுதலையை விரைவுபடுத்துமாறு கோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்று யாழில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக மாணவர்களுடன் யாழ். தொழில்நுட்ப கல்லூரி, உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மாணவர்களும் இணைந்துகொண்டனர். பல்கலைக்கழக முன்றலில் இருந்து 10.30 மணிக்கு ஆரம்பமான பேரணி பலாலி வீதி, நாவலர் வீதி, கோவில் வீதி வழியாக சென்றது. கோவில் வீதியில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் வீத…
-
- 0 replies
- 281 views
-
-
பிரதேசவாதத்தினால் தமிழர்கள் தனிநாட்டினை இழந்தது முஸ்லிம்களுக்கு ஒரு படிப்பினையை ஏற்படுத்துமா?ஒரு சிறுபான்மை சமூகம் பலமான நிலையில் ஒற்றுமையாக இருந்தால் அது ஆட்சியாளர்களுக்கு தலையிடியை ஏற்படுத்தும். இதனால் சிறுபான்மை சமூகத்தினுள் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக பிரதேசவாதத்தினை விதைப்பது ஆட்சியாளர்களின் தந்திரமாகும். தமிழீழ விடுதலை போராட்டம் வெற்றியடைந்து வடகிழக்கு மாகானங்களின் பெரும்பான்மையான பிரதேசங்களை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் வைத்துக்கொண்டு விடுதலைப் புலிகள் ஆட்சி செய்தபோது, அவர்களை வெற்றிகொள்வதற்காக இலங்கை இராவத்தினர்கள் மட்டுமல்ல, இந்திய இரானுவத்தினர்கள் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோல்வி அடைந்தது.அன்று புலிகள் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியதற்கு அவர்களது இராணுவ ப…
-
- 0 replies
- 377 views
-
-
அமைச்சர் கபீர் ஹாசிமுக்கு எதிராக... கண்டி - கொழும்பு வீதி மாவனெல்லை - கனேதென்ன பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனேதென்ன - கம்பளை வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாகவே, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து அமைச்சர் கபீர் ஹாசிமுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாகவும் எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பிடிக்கப்பட்ட படங்களே இவை.. http://tamil.adaderana.lk/news.php?nid=2633&mode=head
-
- 0 replies
- 322 views
-
-
மும்பை நோக்கி பயணித்த விமானமொன்று அவசரமாக கட்டுநாயக்கவில் தரையிறக்கம்.! கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருந்து மும்பாய் நோக்கி பயணித்த விமானம் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. 138 பயணிகளுடன் நேற்று இரவு 11.47 மணியளவில் மும்பை நோக்கி பயணித்த யு.எல் 141 என்ற விமானம் கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. பின்னர் அதிலிருந்த பயணிகள் வேறு ஒரு விமானம் ஊடாக இன்று அதிகாலை 3.34 மணியளவில் மும்பை நோக்கி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/27012
-
- 0 replies
- 164 views
-
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்யுமாறு ஐ.தே.க அழுத்தம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி அழுத்தம் கொடுக்க உள்ளது. ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்வது குறித்த விடயத்தில் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக் கொள்ளத் தயாரில்லை என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்வதாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தமது…
-
- 0 replies
- 177 views
-
-
‘நல்லாட்சி வெளிவேடம்’ “நல்லாட்சி அரசாங்கம், தமிழ் மக்களை ஏமாற்றுகிறது. அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைத் திருப்திப்படுத்துவதற்காக வெளித்தோற்றத்தில், உதவுவதுபோல் நடிக்கிறது” என, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நாடாளுமன்றத்தில் நேற்று (13) தெரிவித்தார். வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரைநிகழ்த்துகையில், “இந்த வரவு - செலவுத் திட்டத்தில் சலுகைகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன எனக் கூறப்படுகின்ற போதிலும், அரசம…
-
- 0 replies
- 217 views
-
-
முஸ்லிம் சமூகத்தின் முதுகில் நிரந்தர அடிமைச்சாசனம் எழுதப்படும் அபாயம் புதிய அரசியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் முதுகின் மீது நிரந்தரமான அடிமைச் சாசனமொன்று எழுதப்படும் அபாயம் இருப்பதாக அஞ்சுகிறோம் என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பெண் எழுத்தாளர் எஸ்.யு. கமர்ஜான் பீ.பி. எழுதிய "நான் மூச்சயர்ந்த போது" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா வத்தளை ஹூணுப்பிட்டி சாஹிரா மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், தேர்தல் முறை மாற்றம், பு…
-
- 0 replies
- 324 views
-