ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
(ரெ.கிறிஷ்ணகாந்) தனது திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மின்னுயர்த்தியினுள் (லிப்ட்) வெகுநேரமாக தான் சிக்குண்டதால் திருமணத்துக்கான முகூர்த்த நேரம் கடந்த நிலையில் சம்பிரதாயங்கள் எதனையும் மேற்கொள்ளாது பதிவுத் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு குறித்த 5 நட்சத்திர ஹோட்டல் நிர்வாகத்தால் தான் அசெளகரியத்துக்கு உள்ளானதாக மணமகனான சட்டத்தரணி வருண நாணயக்கார அந்த ஹோட்டலுக்கு எதிராக நட்டஈடுகோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், திருமண தினத்தன்று மின்னுயர்த்தியில் சிக்குண்டு தான் அசெளகரியத்துக்குள்ளானமைக்கு நட்டஈடாக குறித்த ஹோட்ட…
-
- 6 replies
- 583 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (18-10-2017)
-
- 0 replies
- 225 views
-
-
தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தை காண யாழ்ப்பாண தியைரங்குகளில் இரசிகர் கூட்டம் அலைமோதுகின்றது.
-
- 12 replies
- 832 views
-
-
வடக்கில் இப்போதே கூட்டாட்சியா நாட்டில் இருவேறு சட்டங்களா என்று கேள்வி எழுப்பியது மகிந்த அணி போராட்டங்களுக்கு நீதிமன்றில் தடை உத்தரவுகள் பெறப்படுவதிலும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதிலும், வடக்கிலும் தெற்கிலும் ஒவ்வொரு முறைமை பின்பற்றப்படுகின்றது. வடக்குக்கு இப்போதே கூட்டாட்சி வழங்கப்பட்டு விட்டதா ? இவ்வாறு மகிந்த அணி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியது. நாடாளுமன்றத்தில் மகிந்த அணி எழுப்பிய கேள்விக்கு அரச தரப்பு வழங்கிய பதிலின் பின்னரான கருத்து மோதலின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. ‘‘மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கான போராட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ந…
-
- 0 replies
- 462 views
-
-
வாள் வெட்டுக்குழுவினர் பெற்றோல் குண்டுவீச்சு வீடு புகுந்த வாள்வெட்டுக் கும்பல், வீடு மீது தாக்குதல் நடத்தி பெற்றோல் குண்டுவீசி சேதம் விளைவித்துள்ளது. இந்தச் சம்பவம் மானிப்பாய் செல்லமுத்து விளையாட்ட ரங்க வீதியிலுள்ள வீடொன்றினுள் நேற்றுமுன்தினமிரவு இடம்பெற்றது என்று முறையிடப்பட்டது. சம்பவம் இடம்பெற்ற வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் மானிப்பாய் பொலிஸார் வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இரவும் மானிப்பாய் லோட்டன் வீதியில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றதாகத் த…
-
- 0 replies
- 321 views
-
-
புதிய அரசமைப்பு நிறைவேறாமல் தடுத்து நிறுத்துவதே எமது பொது இலக்கு மகிந்த தரப்பின் முக்கிய புள்ளி பசில் ராஜபக்ச தெரிவித்தார் மகிந்த அலையின் மூலம் உருவான சிறிலங்கா பொதுஜன முன்னணி யின் திரைக்குப் பின்னால் இருந்து செயற்படும், மகிந்த தலைமையிலான முன்னாள் அரசில் அமைச்சரொருவராகச் செயற்பட்ட மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரரான பசில் ராஜபக்சவுடனான நேர்காணலில், தங்களது எதிர்கால அரசியல் செயற்பாடு கள் தொடர்பாக பசில் ராஜபக்சவால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் கீழே தொகுத்துத் தரப்படுகின்றன. கேள்வி: எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நடத்தப்படுமெனக…
-
- 0 replies
- 391 views
-
-
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் படம் மெர்சல். தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு கேளிக்கை வரி, சென்சார் பிரச்சனை, விலங்கு நல வாரியம் நோட்டீஸ் என ஒரு பக்கம் பல பிரச்சனைகள் இருந்தாலும், ரசிகர்களின் ஆரவாரம் மறுபக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மெர்சல் வெளியாகவுள்ள தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. இந்நிலையில் மெர்சல் படத்தை வரவேற்பதில் தமிழகத்திற்கு இணையான அளவிற்கு இலங்கை ரசிகர்களும் முனைப்பு காட்டி வருகின்றனர். அங்கு ஒரு லட்சம் மதிப்பில், 80 அடியில் விஜய்க்கு கட்- அவுட் வைத்துள்ளனர். மேலும் பல இடங்களில் சிறிய அளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்…
-
- 20 replies
- 2.9k views
-
-
வடக்கு, கிழக்கை இணைக்க முடியாது வடக்குக் கிழக்கு இணைப்பை ஒரு சாரார் விரும்பாவிட்டால் பலாத்காரமாக அதனை ஒருபோதும் செய்ய அனுமதிக்க முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வெறுமனே சுயநலத்துக்காகவோ, சிலரைத் திருப்திப்படுத்துவதற்காகவோ சந்தர்ப்பவாதத்துக்காகவோ மேற்கொள்ளும் அரசியல், சமூகத்திற்கு ஏற்புடையதல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். சிரேஷ்ட உரை பெயர்ப்பாளரும், சமூகவியல் ஆய்வாளருமான எம் எம் ராஸிக் எழுதிய “ஹெம்மாத்தகமை முஸ்லிம்களின் வரலாறு” என்ற நூலின் வெளியீட்டு விழா மருதானை மாளிகாகந்தை அஷ் ஷபாப் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்ச…
-
- 1 reply
- 570 views
-
-
சோமவன்சவின் கட்சி பசிலின் புதிய கட்சியுடன் சங்கமம் பசில் ராஜபக்ச தலைமையில் உதயமாகியிருக்கும் இலங்கை மக்கள் முன்னணி கட்சியில், காலஞ்சென்ற சோமவன்ச அமரசிங்கவின் கட்சி இணைந்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களுள் ஒருவரான சோமவன்ச அமரசிங்க, கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி நிலையையடுத்து அதிலிருந்து விலகி புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தார். ‘ஜனதா சேவக பக்சய’ (மக்கள் சேவைக் கட்சி) என்ற பெயரிலான இந்தக் கட்சி, அவரது மரணத்தையடுத்து தொய்வடைந்திருந்தது. இந்நிலையில், பசில் ராஜபக்ச தலைமையில், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உட்படப் பல முக்கியஸ்தர்களைக் கொண்டு உருவாகியிருக்கும் இலங்கை பொதுமக்கள் முன்னணி என்ற கட்சியுடன் ஜனதா சேவக பக்சய இணைந்துகொண்டது. …
-
- 0 replies
- 458 views
-
-
“தேர்தலில் போட்டியிடுவது சந்தேகமே” ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தாம் போட்டியிடுவது சந்தேகமே என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தீபாவளி தினமான இன்று (18) தெஹிவளை விஷ்ணு கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்திய மகிந்த ராஜபக்சவிடம், கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தின் கீழ், நுவரெலியாவில் நான்கு புதிய பிரதேச சபைகளை நிறுவ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, அம்பகமுவ பிரதேச சபை மூன்றாகப் பிரிக்கப்பட்டு அம்பகமுவ, நோர்வூட் மற்றும் மஸ்கெலியா பிரதேச சபை என்று பெயரிடப்படவுள்ளது. …
-
- 0 replies
- 263 views
-
-
முல்லைத்தீவு கடலில் இரு இளைஞர்கள் மாயம் முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். முல்லைத்தீவு கடலில் நீராடிக் கொண்டிருந்த 7 பேரில் இருவர் திடீரென அலையில் இழுத்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். இவ்வாறு காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். https://news.ibctamil.com/ta/internal-affairs/Two-boys-missing-in-the-sea
-
- 1 reply
- 1.1k views
-
-
அம்பாறையில் தீபாவளி விசேட பூஜை… உலகவாழ் இந்து மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள், அம்பாறை மாவட்டத்திலும் இன்று(18) சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும், தீபாவளியை முன்னிட்டு அக்கரைப்பற்று ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலயத்தில், க.சிவராசா குருக்கள் தலைமையில் விசேட பூஜைகள் இடம்பெற்றன. இதில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டனர். மக்கள் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் தீபாவளி பண்டியை கொண்டாடி வருகின்றனர். ( படப்பிடிப்பு – வி. சுகிர்தகுமார் ) http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/அம்பாறையில்-தீபாவளி-விசேட-பூஜை/46-205755 …
-
- 3 replies
- 644 views
-
-
அரசியல் தீர்மானம் எடுத்து அரசியல் கைதிகளை விடுவியுங்கள் : சபையில் சம்பந்தன் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உண்ணா விரதமிருக்கும் அரசியல் கைதிகளின் அரசியலமைப்பு உரிமை முற்றாகமறுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் அரசியல் ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டு விடுவிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார். அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகள் இல்லை எனக் கூறமுடியாது எனச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன், அரசாங்கம் இப்பிரச்சினையில் தீவிரமான தன்மையைக் காட்டாமையினால் தாங்கள் மக்கள் மத்த…
-
- 2 replies
- 315 views
-
-
ரூ.2 கோடி பெறுமதியான கஞ்சா கடத்தல்; சந்தேக நபர்கள் விபரம் வெளியானது சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் நேற்று (17) பகல் வத்தளையில் கைது செய்யப்பட்டவர்களின் விபரத்தை பொலிஸார் இன்று வெளியிட்டனர். தலைமன்னாரைச் சேர்ந்த ராஜா என்ற திரவியம் ராஜேந்திரன் (56) மற்றும் கொலன்னாவையைச் சேர்ந்த மொஹமட் சல்மான் (35) ஆகிய இருவரையுமே தாம் கைது செய்துள்ளதாக போதைத் தடுப்புப் பிரிவு பொலிஸார் இன்று தெரிவித்தனர். அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட நிலையில், கிளிநொச்சியில் வேன் ஒன்றின் மூலம் 137.5 கிலோ எடையுடைய கஞ்சாவைக் கடத்திச்சென்றபோதே மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டனர். http://www.virakesari.lk/article/25959
-
- 0 replies
- 288 views
-
-
ஜே.ஆரின் பேரன் நேரடி அரசியலில்! முன்னாள் ஜனாதிபதி காலஞ்சென்ற ஜே.ஆர்.ஜெயவர்தனவின் பேரனான பிரதீப் ஜெயவர்தன நேரடி அரசியலில் குதிக்கவுள்ளதாகத் தெரியவருகிறது. இவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் நேரடி அரசியலில் களமிறங்கவுள்ளதாகத் தெரியவருகிறது. தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நாளை (19) நடைபெறவுள்ளது. http://www.virakesari.lk/article/25960
-
- 0 replies
- 364 views
-
-
வெளியிலிருந்து வருபவர்கள் யாரையும் நாம் முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை- சி.வி.கே.சிவஞானம் இனிவரும் காலங்களில் வடமாகாண முதலமைச்சராக இறக்குமதிகளைக் கொண்டு வரப்போவதில்லை என, தமிழரசுக் கட்சி முடிவெடுத்துள்ளதாக வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபைக்கான அடுத்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் ஸ்ரீபவனை நியமிப்பதற்கு தமிழசுக் கட்சி அவருடன் பேச்சு நடத்தியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு விளக்கமளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், ஊடகங்களில் சில செய்திகள் ஊகத்தின் அடிப்படையில் வெளிவருகின்றன. இருப்பினும் இறக்கு…
-
- 3 replies
- 557 views
-
-
‘இலங்கை கண்டுபிடிப்பாளர்’ விருதை பெற்ற மாணவன் 0 SHARES ShareTweet அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ்குமார் என்ற மாணவருக்கு ‘இலங்கை கண்டுபிடிப்பாளர்’ என்ற அரச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. குறித்த விருதானது, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், அமைச்சர் சுசில்பிரேம ஜெயந்தவினால் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தேசிய விஞ்ஞான மன்றத்தில் விஞ்ஞான ஆராய்ச்சியாளராகவும், தேசிய விஞ்ஞான மற்றும் தொழினுட்ப ஆணைக்குழுவினால் இளம் விஞ்ஞானி என்ற அரச அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://newuthayan.com/story/38109.html
-
- 0 replies
- 260 views
-
-
இலங்கை முஸ்லிம்களுக்கு அரபுலகும் முஸ்லிம் நாடுகளும் கைகொடுத்து உதவும் என்று நினைப்பது மடமைத்தனம் ரோஹிங்யா நல்ல படிப்பினை என்கிறார் – அமைச்சர் ரிஷாத் இலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்களும் பிரச்சினைகளும் ஏற்படும் போது அரபுலகும் முஸ்லிம் நாடுகளும் கைகொடுத்து உதவுமென்று நாம் நம்பிக்கை கொண்டிருப்பது மடமைத்தனமானதெனவும் ரோஹிங்யா முஸ்லிம்களின் அவலங்கள் நமக்கு நல்ல படிப்பினையாக அமைந்துள்ளதெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திஹாரிய ஈமானிய அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக் கிழமை திஹாரியில் நடை பெற்ற போது பிரதம அதிதிய…
-
- 4 replies
- 559 views
-
-
மக்களிடம் செல்வாக்கை இழந்து வருவதாக சம்பந்தன் கவலை-சபையில் மனம் திறந்து பேசினார் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் அடிப்படை உரிமை முற்றாக மறுக்கப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் கூறினார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து கைதிகளையும் அரசியல் ரீதியான தீர்மானம் ஒன்றை எடுத்து விடுதலை, செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கைதிகளை விடுதலை செய்ய வேண்டிய அவசியம் குறித்து சர்வதேச பிரமானங்களுக்கு அமைவாக பல்வேறு காரணங்களை உதாரணம் காண்பித்து உ…
-
- 2 replies
- 530 views
-
-
ஊர்ப் பிள்ளைகளைச் சாவடித்து அதிலே அரசியல் செய்யாதீர்கள்! தேர்தலில் இழந்த பதவிகளையும், அரசியல் கதிரைகளையும் மீண்டும் பிடிப்பதற்காக அரசியல் கைதிகளின் உயிரைப் பயன்படுத்தி ஊர்ப் பிள்ளைகளைச் சாவடித்து அதில் அரசியலை செய்ய வேண்டாம் என்று கஜேந்திரகுமார் அணியினரைக் கேட்டுக்கொள்கிறேன். அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பேசிவரும் கஜேந்திரகுமார் இத்தனை ஆண்டுகளில் ஒரு தடவையாவது சிறைச்சாலைக்குச் சென்று அவர்களைச் சந்தித்துக் கதைத்துள்ளாரா? தமிழ் மக்களைச் சாவடித்து அதில் அரசியல் இலாபம் காணும் செயல்களை உடனடியாக இவர்கள் க…
-
- 1 reply
- 661 views
-
-
மர்மக்கோட்டை கேகாலையில் கண்டுபிடிப்பு சுமார் 500 வருடங்களுக்கு முற்பட்ட மர்மக்கோட்டை கேகாலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கோட்டை போர்த்துக்கேயர் காலத்துக்குரியது எனத் தெரியவருகிறது. அடர்த்தியான காட்டுப்பகுதியில் உள்ள இந்தக் கோட்டை சப்ரகமுவ மாகாணத்துக்கு இலகுவாகச் செல்லும் நோக்கில் கட்டப்பட்டிருக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. பிரதேச மக்களின் உதவியுடன் கண்டு பிடிக்கப்பட்டுள்ள இந்தக் கோட்டையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. http://newuthayan.com/story/38155.html
-
- 0 replies
- 283 views
-
-
2297 பேர் உயிரிழந்த அவலம் - பொலிஸ் ஊடக பேச்சாளர் இந்த வருடத்தில் கடந்த 10 மாதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 2297 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். வீதிகளில் வீதி ஒழுங்குகளை விதிகளை மீறி வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவரும் பொலிஸ் தலைமையகம், வீதி ஒழுங்குகளை பின்பற்றுபவர்களை கௌரவிக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். கொழும்பு, கண்டி மற்றும் குருநாகல் ஆகிய நகரங்களில் கடந்த காலங்களில் …
-
- 0 replies
- 350 views
-
-
நவீன சிறைச்சாலை திறப்பு ஹம்பாந்தோட்டை, அங்குனகொலபெலெஸ்ஸவில் புதிய சிறைச்சாலை கட்டடத் தொகுதி, சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மற்றுமு; இந்துமத கலாசார அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் இன்று (16) திறந்து வைக்கப்பட்டது. நவீன சிறைச்சாலை வசதிகள் 01. சிறைக் கைதிகள் தொடர்பான சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அமைக்கப்பட்ட முதலாவது சிறைச்சாலை 02. ஆண்கள், பெண்கள் உள்ளடங்கலாக 1500 கைதிகள் சிறைப்படுத்தி வைத்திருக்க முடியும் 03. 65 ஏக்கர் வளாகம் 04. நவீன தொழில்நுட்பம், பூரண பாதுகாப்பு 05. வைத்தியசாலை, தொழிற்பயிற்சி நிலையம், கைத்தொழில் கட்டம் 06. சிறைச்சாலை அதிகாரிகளுக்கான தங்குமிடம் 07. மைதானம், 400 ம…
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
இந்தியர்களை வெளியேற்றுமாறும் வேதனத்தை வழங்குமாறும் தெரிவித்து கல்குடா மதுபான தொழிற்சாலை முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் சர்ச்சைக்குள்ளான கல்குடா பகுதியில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மதுபானதொழிற்சாலை வாயிலை மறித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்குடா மதுபானசாலையில் தாங்கள் வேலை செய்தபோதும் கடந்த 7 ஆம் மாதத்தில் இருந்து தங்களை வேலையில் இருந்து நிறுத்தியிருந்த நிலையில் தாங்கள் வேலை செய்த சுமார் மூன்று மாதங்களுக்குரிய வேதனம், குறித்த கம்பனியின் வேலைகளை முன்னெடுத்துச் செல்லும் நிறுவனத்தால் வழங்கவேண்டிய தொகை இழுத்தடிப்பு செய்திருந்த நிலையில் நேற்றைய தினம் ஊழியர்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 426 views
-
-
வெலிக்கடை சிறைச்சாலை சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பம் !! 2012 ம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் அரச பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு காரணமாக 27 கைதிகள் மரணமடைந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து தற்போது போலீசார் புதிதாக விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக சட்ட மா அதிபர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார். 2012ம் ஆண்டு நவம்பர் 9ம் திகதி அன்று வெலிக்கடை சிறைச்சாலையில் மோதல் சம்பவம் நடந்தது. இந்த கொலைகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்யும்படி அரசாங்கதிற்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு சிறை கைதிகளின் உரிமைகளுக்காக போராடும் அமைப்பின் தலைவர் சுதேஷ் நந்திமால் டி சில்வா தாக்கல் செய்த மனு விச…
-
- 0 replies
- 410 views
-