Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எல்லை நிர்ணய குழுவின் தலைவரானார் தவலிங்கம் மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயிக்கும் குழுவின் தலைவராக கே.தவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இக் குழுவில் தவலிங்கம் உட்பட மேலும் ஐந்து பேர் அந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/25320

  2. யாழில் 100 பேருக்கு பிளாஸ்ரிக் சர்ஜரி சத்திரசிகிச்சை வடக்கு மாகாணத்தில் போரின் காரணமாக ஏற்பட்ட காயங்களின் அடையாளங்களைப் போக்கும் வகையிலான பிளாஸ்ரிக் சர்ஜரி சிகிச்சை, நவம்பர் மாதத்தில் 100 பேருக்கு மேற்கொள்ளவுள்ளதாக கலாநிதி அமுதா கோபாலன் தெரிவித்தார். கொட்டாஞ்சேணை 306 B1 இலக்க மாவட்ட லயன்ஸ் கிளப் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள குறித்த சத்திர சிகிச்சை தொடர்பில் நேற்று யாழ்பாடி விடுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் கலாநிதி அமுதா கோபாலன் மேலும் விபரம் தெரிவிக்கையில் , வடக்கு மாகாணத்தில் போரின் காரணமாகவும், விபத்துக்கள், தீக்காயங்கள் காரணமாகவும் ஏற்பட்ட காயங்களின் அடையாளங்களைப் போக்கும் வகையி…

  3. புதிய அர­ச­மைப்புக்கு அனை­வ­ரும் ஆத­ரவு! Share நியூ­சி­லாந்து நாட்­டின் அர­ச­மைப்பை ஒத்த புதிய அர­ச­மைப்பு ஒன்­றுக்­கான வரைபை அனைத்­துத் தரப்­பி­ன­ரும் ஏற்­றுக்­கொண்­டுள்­ள­னர் என்று பன்­னாட்டு அரங்­கில் நேற்­றுத் தெரி­வித்­தார் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. முதல் தட­வை­யா­கச் சகல கட்­சி­க­ளும் புதிய மாற்­றம் ஒன்றை உரு­வாக்­கும் முயற்­சிக்கு இணக்­கம் தெரி­வித்­துள்­ளன என்­றும் அவர் தெரி­வித்­தார். சார்க் நாடு­க­ளின் சபா­நா­ய­கர்­கள் மற்­றும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சங்­கத்­தின் 8ஆவது மாநாடு கொழும்­பில் நேற்று ஆரம்­ப­மா­னது. அரச தலை­வர் மைத்­தி­ர…

  4. வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் வியாபாரத்தில் ஈடுபட்ட குழுவினரை நேற்று மாலை 5.30 மணியளவில் வவுனியா 119 பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் முற்றுகையிட்டனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் வியாபாரம் தொடர்பான கூட்டம் வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெறுவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த விடுதியினை முற்றுகையிட்டு விசாரணைகளை மேற்கொண்டனர். இதன் போது கூட்டத்தினை ஒழுங்கமைத்தவர்கள் இது பிரமிட் வியாபாரம் இல்லை, இலங்கையில் பதிவு செய்யப்பட்ட குளோபல் நிறுவனம் என தெ…

  5. காணாமல் போனவர்களின் உறவினர்கள், வடக்கில் முன்னெடுத்துவரும் போராட்டமானது நியாயமானதே எனவும் அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு விரைவில் வழங்கப்படும் எனவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(04) இடம்பெற்றது.இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “காணாமல் போன தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது, அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா, சிறைச்சாலைகளில் எத்தனை பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அறியத்தருமாறு அவர்கள் கேட்கின்றனரே தவிர காணாமல் போனவர்களை தேடித்தாருங்கள் என்று கேட்கவில்…

    • 0 replies
    • 225 views
  6. 2018ஆம் ஆண்டுக்கான பல்வகைமை விசா சீட்டிழுப்பு நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பமாகியுள்ளது என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. கிறீன்கார்ட் லொட்டரி என அழைக்கப்படும், இந்தத் திட்டம் 2017 ஒக்டோபர் 03 ஆம் திகதி முதல், 2017 நவம்பர் 7 ஆம் திகதி வரை இணையம் மூலமாக விண்ணப்பிப்பதற்காகத் திறந்திருக்கும். பல்வகைமை விசா சீட்டிழுப்பு நிகழ்ச்சி திட்டம் எழுந்தமான விதத்தில் தெரிவுசெய்யப்பட்ட, விண்ணப்பதாரிகள் அமெரிக்க விசாவுக்கு தேர்முகதேர்வுக்கு உள்ளாவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. அவர்கள், அதில் தகுதிபெற்றால் சட்டபூர்வமான நிரந்தரமான அமெரிக்க குடியிருப்பாளர்களாக மாறுவார்கள். கருத்தில் கொள்ளவேண்டிய சில பரிந்துரைகள்: - லொத்தருக்கு விண்ணப்பிப்ப…

    • 0 replies
    • 358 views
  7. தலைமன்னார் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் Share தலைமன்னார் பியர் பகுதி மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் மக்களுக்கு இது வரை வீட்டுத்திட்டம் எவையும் வழங்கப்படவில்லை எனவும், வீட்டுத்திட்டம் வழங்குவதில் முறைக்கேடு இடம் பெற்றுள்ளதாகவும் கூறி அப் பகுதி மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமன்னார் பியர் பகுதியைச் சேர்ந்த சுமார் 50 இற்கும் அதிகமானவர்கள் இணைந்து, மன்னார் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இவ் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். …

    • 1 reply
    • 391 views
  8. மன்னாரில் சூரியசக்தி திட்டத்துக்கு அமைச்சர் பதியுதீன் கடும் எதிர்ப்பு 3 மின்­சா­ரத் தேவைக்­காக மன்­னா­ரில் நூறு மெகா­வோற் சூரிய சக்தி மின்­சா­ ரத்­தைத் தயா­ரிப்­ப­தற்கு மின்­சக்தி அமைச்சு எடுத்­துள்ள நட­வ­டிக்­கைக்கு அமைச்­ச­ர­வை­யில் அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீன் தனது கடும் எதிர்ப்­பைத் தெரி­வித்­துள்­ளார். இந்­தத் திட்­டத்­தால் மன்­னா­ரில் சுற்­றா­ட­லுக்­குப் பெரும் பாதிப்பு ஏற்­ப­டு­மெ­ன­வும் இந்­தத் திட்­டத்­துக்குச் சம­யத் தலை­வர்­க­ளும் பொது­மக்­க­ளும் ஆட்­சே­பம் தெரி­வித்­தி­ருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார். மின்­சக்தி அமைச்­சர் ரஞ்­சித் சியம்­ப­லா­…

    • 3 replies
    • 433 views
  9. ‘பெரும்பான்மை தலைவர்களை இசையச் செய்வது முயல்கொம்பானது’ “புதிய அரசமைப்பு விடயத்தில் பெரும்பான்மை இனத் தலைவர்களை இசையச் செய்வதென்பது, முயல்கொம்பான விடயமாகும்” என, இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு, வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் நேற்று (03) நடைபெற்ற கலைவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இந்த நாட்டிலே தற்போது புரட்டப்பட்டிருக்கின்ற புதிய பக்கங்கள், எமது கனவை நனவாக்குகின்ற செயற்பாட்டைச் செய்து கொண்டிருக்கின்றன. ஒரு ஜனநாயக நாட்டின் நடவடிக்கைகளின் முற்றுப்புள்ள…

  10. ‘சம்பந்தனுடன் கலந்துரையாடவுள்ளேன்’ சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுடன் கலந்துரையாடவுள்ளேன் என வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில், இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பத்தாவது நாளாகவும் இன்றும் (04) உண்ணாவிரதம் இருக்கும் சுலக்ஸன், திருவருள், தர்சன் ஆகியோரை நேற்று (03) நேரில் சென்று சந்தித்தேன். அவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு மேலாக வவுனியாவ…

    • 2 replies
    • 376 views
  11. 2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் வடக்கில் எந்தவொரு தனியார் காணியையும் அரசாங்கம் கைப்பற்றவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். “மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கில் படையினரிடம் உள்ள தனியார் காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும். நிலம் இல்லாதவர்களுக்கு அரசாங்கம் காணிகளை வழங்கும். மகிந்த ராஜபக்ச 2005ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கில் எந்தவொரு தனியார் காணியும் அரசாங்கத்தினால் கைப்பற்றப்படவில்லை. இந்திய அமைதிப்படை மற்றும் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்…

    • 3 replies
    • 495 views
  12. அரசியல் தீர்வை வழங்க அனைத்துக் கட்சிகளது உதவியை கேட்கிறார் ரணில் 60 ஆண்டுகாலமாக வழங்க முடியாமலிருக்கும் அரசியல் தீர்வை வழங்க ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அர்ப்பணிப்பாக செயற்படுகின்ற நிலையில், அதற்கு நாடாளுமன்றத்திலுள்ள ஒட்டுமொத்த உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டுமென ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்ரீலங்கா நாடாளுமன்ற ஜனநாயகம் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகாலத்தை கொண்டாடுகின்ற தினத்தில் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை வழங்க முடியாமையிட்டு தான் கவலையடைவதாகவும் பிரதமர் கூறினார். ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் 70ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இன்றைய தினம் விசேட அமர்வு இ…

  13. மக்கள் மீது சி.வி.க்கு அளவுகடந்த பாசம் இதனால்தான் தெற்கில் விமர்சனம் என்கிறார் பஷில் (ரி.விரூஷன்) நாட்டில் போர்க்­குற்­றங்கள் எவையும் இடம்­பெ­ற­வில்லை, ஆனாலும் சில குற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ளன. அது தொடர்­பாக தற்­போது அர­சாங்கம் சில நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. வடக்கு மக்கள் மீது விக்­கி­னேஸ்­வரன் கொண்­டுள்ள அளவு கடந்த பாசமே அவரை தெற்கில் உள்­ள­வர்கள் விமர்­ சிக்க கார­ண­மாகும் என்று முன்னாள் அமைச்­ச­ரான பஷில் ­ரா­ஜ­பக் ஷ தெரி­வித்தார். இரண்டு நாட்கள் விஜயம் மேற்­கொண்டு வடக்­குக்கு வந்­துள்ள முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ இங்கு தமது புதிய கட்­சி­யான ஸ்ரீலங்கா பொது­ஜன பெரமுன கட்சியின் செயற்­பா­டு­களை ஆர…

    • 8 replies
    • 579 views
  14. மட்டக்களப்பிற்கு விஜயம் செய்கின்றார் எதிர்க்கட்சி தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய எதிர்வரும் 06ஆம் திகதி அவர் விஜயம் மேற்கொள்வார் என கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுவாமி விபுலானந்தரது 125ஆவது ஆண்டு பிறந்த தின நினைவையொட்டி சுவாமி விபுலானந்தர் மாநாடும் கலைவிழாவும் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வதற்கே அவர் வருகை தரவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி…

  15. சக்தி டிவி செய்திகள் 8PM (04-10-2017)

  16. இலட்சாதிபதியாக கரை திரும்பிய மீனவர்- கடலில் என்ன கிடைத்தது தெரியுமா? மட்டக்களப்பு பேத்தாழை பகுதியைச் சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர் ஒருவருக்கு 2,500 கிலோகிராமிற்கு அதிக நிறையுள்ள சுறாமீன்கள் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேத்தாழை பகுதியைச் சேர்ந்த மீன்பிடி படகு உரிமையாளரான எஸ்.அகிலகுமார் என்பவருக்கே இந்த அதிஷ்டம் கிடைத்துள்ளது. கடந்த சில தினங்களாக கடலில் தங்கியிருந்து இன்று கரை திரும்பிய குறித்த மீனவருக்கு இந்த அதிஷ்டம் கிடைத்துள்ளது. இன்றைய நிலையில் குறித்த மீன்களின் முதற்கட்ட விலை பத்து இலட்சத்து முப்பதாயிரத்திற்கும் அதிகளவு பெறுமதியானது என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கடந்த …

  17. முழுமையான உறுப்பினர்களின் பிரசன்னமின்றி நடைபெற்ற பாராளுமன்றின் 70 ஆவது ஆண்டு நிறைவு அமர்வு சார்க் நாடுகளின் சபாநாயகர்களுக்கு கௌரவம் (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) இலங்­கையில் பாரா­ளு­மன்ற ஜன­நாயகம் நிலை­நாட்­டப்­பட்டு 70ஆண்­டுகள் நிறை­வ­டை­வதை முன்­னிட்டு நடை­பெற்ற விசேட பாரா­ளு­மன்ற அமர்வு சார்க் நாடு­களின் சபா­ நாய­கர்­களின் பங்­கேற்­புடன் சிறப்­பாக நடை­பெற்­றது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இந்த விசேட அமர்வு நடை­பெற்­றி­ருந்­தது. பாது­காப்பு பலப்­ப­டுத்தப் பட்­டி­ருந்த நிலையில் சார்க் நாடு­களின் தேசியக் கொடிகள் மற்றும், இலங்கை நாட்டு தேசியக் கொடி­களால் பாராளுமன்ற வளாகம் அலங்­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. பாரா­ளு­மன…

  18. கொழும்பு - தூத்துக்குடி கப்பல் சேவை மீண்டும்! கொழும்புக்கும் தமிழகத்தின் தூத்துக்குடிக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமான முதலீட்டாளர்களைத் தெரிவுசெய்ய விண்ணப்பங்களை கோர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. துறைமுகங்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இது குறித்து முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/25308

  19. அமைச்­ச­ர­வையில் ஹக்கீம் ரிஷாத் கடும் வாக்­கு­வாதம் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான வட்­டா­ரங்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­ப­ட­வுள்ள மீளாய்­வுக்­கு­ழுவின் முஸ்லிம் உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளவர் தொடர்பில் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீ­முக்கும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும், அமைச்­ச­ரு­மான ரிஷாட் பதி­யு­தீ­னுக்­கு­மி­டையில் நேற்று அமைச்­ச­ர­வையில் கடும் வாக்­கு­வாதம் இடம்­பெற்­றுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்­றுக்­காலை அமைச்­ச­ர­வைக்­கூட்டம் இடம்­பெற்­றது. இந்த கூட்­டத்தின் போது உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்­கான…

  20. வரலாற்றில் பெயர் பதிக்கும் பிரதமரின் பின்லாந்துப் பயணம் வரலாற்றிலேயே முதன்முறையாக பின்லாந்துக்கு விஜயம் செய்யும் இலங்கைப் பிரதமர் என்ற பெயரை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிவுசெய்யவுள்ளார். பிரத்தியேக விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (5) வியாழக்கிழமை ஜேர்மன் பயணமாகவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பின்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளார். பின்லாந்து விஜயத்தின்போது புதிய அரசியலமைப்பு தொடர்பாகவும், இரு நாட்டு வர்த்தக மற்றும் பொருளாதாரத் துறைகளில் புதிய தொடர்புகளை ஏற்படுத்துவது பற்றியும் அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தவுள்ளார். வரலாற்றில் முதற்றடவையாக இலங்கை பிரதமர் ஒருவர் பின்லாந்து…

  21. பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்ப துடிக்கும் பிள்ளைகளும் பிள்ளைகளை விட்டுப்பிரிய மறுக்கும் பெற்றோர்களும் “நீ இருக்க ஒரு கருவறை இருந்தது என் வயிற்றில்” “ஆனால் நான் இருக்க ஒரு இருட்டறை கூட வா இல்லை உன் வீட்டில்” என்பது போல ஒரு மனம் நெகிழும் சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெறுள்ளது. மட்டக்களப்பு பதுளை வீதியில் அமைந்திருக்கும் அயல் கிராமமான கித்துள் கிராமத்தில் பிள்ளைகளை விட்டு பிரிவதற்கு மனம் இல்லாமல் தவிக்கும் பெற்றோர்கள் தங்களது ஆதங்கத்தை இவ்வாறு தெரிவிக்கின்றனர். தங்களது இறுதிக் காலத்திலாவது தாங்கள் பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளைகளுக்கு பக்கத்தில் இருந்து தங்களது இறுதிப் பயணம் அமையவேண்டும் என்று எதிபார்த்து இருக்கும் …

  22. சிவனொளிபாதமலைக்கு புதிய பெயர் என்ன தெரியுமா ? சிவனொளிபாதமலைக்கு சிங்கள மொழியில் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன்படி இதுவரைகாலம் “ஸ்ரீபாத ” என சிங்களமொழியில் அழைக்கப்பட்டுவந்த சிவனொளிபாதமலைக்கு தற்போது “கௌதம ஸ்ரீபாத” என சிங்கள மொழியில் பெயர்சூட்டப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/25303

  23. கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தின் வைரவிழா வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் எதிர்ப்பையும் மீறி வெகுசிறப்பாக நடைபெற்றுள்ளது.

    • 3 replies
    • 345 views
  24. 182 தொண்­ட­ரா­சி­ரி­யர்­க­ளுக்கு வடக்­கில் நிரந்தர நிய­ம­னம் கொழும்புக் கல்வி அமைச்சு அனு­மதி Share வடக்கு மாகாண தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளில் நிரந்­தர நிய­ம­னம் வழங்க தெரி­வா­கிய 182 பேரின் பெயர்ப் பட்­டி­யல் நேற்­றைய தினம் வடக்கு மாகா­ணக் கல்வி அமைச்­சுக்கு கிடைத்­தது. வடக்கு மாகா­ணத்­தின் 12 கல்வி வல­யங்­க­ளி­லும் தற்­போது தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளா­கப் பணி­யாற்­று­ப­வர்­களை இலங்கை ஆசி­ரி­யர் சேவைக்­குள் உள்­ளீர்க்­கும் நோக்­கில் கொழும்பு கல்வி அமைச்­சால் நேர்­மு­கத் தேர்வு நடாத்­தப்­பட்­டது. நேர்­மு­கத் தேர்­வில் ஆயி­ரத்து 44பேர் பங்கு கொண்­டி­ருந்­த­னர். …

  25. மத்திய வங்கி ஆளுநர் வடக்குக்குப் பயணம் Share மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இரண்டு நாள்கள் பயணமாக வடக்கு மாகாணத்துக்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் 6 ஆம், 7 ஆம் திகதிகளில் வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் அவர், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் கிராமங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்களின் வாழ்வாதார நிலமைகளை அவர் ஆராயவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/34317.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.