ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143354 topics in this forum
-
கொலையின் பின் 4 முறைப்பாடுகள் பருத்தித்துறையில் இளைஞன் உயிரிழந்த சம்பவங்களின் பின்னரான செயற்பாடுகள் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் 4 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் சந்தேக நபராகக் குற்றஞ்சாட்டப்படும் சஞ்சீவன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரின் தந்தையார், தனது வீட்டுக்குள் புகுந்து பொருள்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் தேவை என்று முறையிட்டுள்ளார். தமது பேருந்துகள் சிலவற்றுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் முறைப்பாடு செய்துள்ளனர். …
-
- 1 reply
- 341 views
-
-
உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் 13 ஆவது சர்வதேச மாநாடு யாழ்ப்பாணத்தில் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்னனின் கோரிக்கைக்கு அமைவாக உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் 13 ஆவது சர்வதேச மாநாடானது இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் நடாத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜசூரியன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1974 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழர் ஆராச்சி மாநாட்டில் இவ் உலக தமிழர் பண்பாட்டு இயக்கமானது உருவாக்கப்பட்டது. இது உருவாக்கப்பட்ட நோக்க…
-
- 2 replies
- 279 views
-
-
தமிழர்களின் கோயில்கள், காணிகளை நானே கைப்பற்றினேன் -ஹிஸ்புல்லா
-
- 6 replies
- 458 views
-
-
மயிலிட்டியின் சிறப்பான வெற்றியில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்! மயிலிட்டியின் மீட்பிற்காக ஆரம்பத்திலிருந்து நம்பிக்கையுடனும், மனம் தளராமலும் முன்னேறி ஆரம்ப கட்டமாக மயிலிட்டியின் இதயமான துறைமுகத்தை மீட்டெடுத்துள்ளோம். 03 ஜூலை 2017 அன்று மயிலை மக்கள் தாய்நிலத்திலும், புலத்திலும் அத்தருணத்தில் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. 27 வருடங்களாக சோகத்தில் அழுதுகொண்டிருந்த மக்கள் அன்று ஆனந்ததில் அழுதார்கள். மயிலிட்டிச் சந்தி வரைதான் விடுவார்கள் துறைமுகம் விடமாட்டார்கள் என்றே பலர் எண்ணியிருந்தோம். மாறாக மேற்கிலிருந்து காசநோய் வைத்தியசாலை நிலம், துறைமுகம், கண்ணகை அம்மன் கோவில், முருகன் கோவில் என குறுகிய நிலப்பரப்பிலடங்கிய அனைத்தையும் விடுவ…
-
- 3 replies
- 575 views
-
-
செப்.1 முதல் பொலித்தீன் பாவனைக்கு தடை (ரொபட் அன்டனி) உணவுகளை பொதிசெய்யும் பொலித்தீன்களை (லஞ்சீட்) உள்நாட் டில் தடைசெய் யவும் அதன் இறக்குமதி உற்பத்தி விற்பனை ஆகியவற்றை முற்றாக தடைசெய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன் தேசிய மத,சமூக, கலா சார நிகழ்வுகளிலும் அரசியல் விழாக்களிலும் பொலித்தீன் பயன்படுத்தப் படுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அரசாங்கம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது. பொலித்தீன்களினால் பொதி செய் யப்பட்ட உலர் உணவுப்பொருட் கள் விற்பனை செய்தலையும் தடை செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அரசாங்கத் தகவல் திணைக்களத…
-
- 0 replies
- 598 views
-
-
ஐநா குழுவினர் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கு ஐந்து நாள் பயணமாக வருகை தந்துள்ள ஐநாவின் மனித உரிமைகளுக்கும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்குமான சிறப்பு பிரதிநிதி பென் எமர்ஸன் நேற்று புதன்கிழமை மாலை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான நீதிபதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்ட நடைமுறையில் மனித உரிமை நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றது என்பதை நேரடியாகக் கண்டறிவதற்காகவே பென் எமர்ஸன் இலங்கைக்கு வந்துள்ளார். முதலில் பென் எமர்ஸன் தலைமையிலான ஐநா குழுவினர், அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு எட்டு வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதத் தடைச்…
-
- 1 reply
- 442 views
-
-
அநுராதபுரம் இராணுவ முகாம் ஆயுதங்கள் மாயம் அநுராதபுரம், கலத்தேவ பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தின் கவசப் படைப்பிரிவிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையிலிருந்து, ஆயுதங்கள் சில மாயமாகியுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த முகாம் அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, அநுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தின் குற்ற விசாரணைப் பிரிவினர் மற்றும் பொலிஸ் மோப்பநாய்ப் பிரிவினர் இணைந்து, இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, குறித்த முகாமின் கட்டளையதிகாரின் ஆணைப் பிரகாரம், முகாமைவிட்டு எந்தவொரு வீரரோ அல்லது அதிகாரியோ வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முகாமின் ஆயுதக் க…
-
- 0 replies
- 446 views
-
-
புதிய அரசியலமைப்பை கைவிடவே கூடாது காணாமல்போனோர் சட்டமூலம் வேண்டும் என்கிறது ஜே.வி.பி. (ஆர்.யசி) அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிக்கு அமைய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண் டும். எந்தக் காரணங்களுக்காகவும் புதிய அரசியலமைப்பை கைவிடக்கூடாது. புதிய அரசியல் அமை ப்பை உருவாக்க வேண்டும் என்ற அழுத் தம் தொடர்ச்சியாக வழங்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதை தடுக்கும் சட்டமூலம் மிகவும் அவசியமானதாகும். உடனடியாக சட்டமூலத்தை கொண்டுவர வேண்டும் எனவும் அக்கட்சி குறிப்பிட்டது. மக்கள் விடுதலை முன்னணி யின் செய்தியாளர் சந்திப்ப…
-
- 0 replies
- 325 views
-
-
இளைஞன் கொலை;பொலிஸ் மீதான குற்றச்சாட்டு விசாரணை இடம்பெறுகிறது யாழில் சி.ஐ.டியினர் தெரிவித்தனர் பருத்தித்துறையில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இளைஞன் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டமை தொடர்பில்,பொலிஸாருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளன. குற்றஞ்சாட்டப்படும் பொலிஸாரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. பக்கச் சார்பின்றி விசாரணை இடம்பெறும். இவ்வாறு வடமராட்சியில் விசாரணையில் ஈடுபட்டுள்ள கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவின் அதிகாரியான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கு…
-
- 0 replies
- 200 views
-
-
’மதத்துடன் அரசியல் செய்யாதீர்கள்’ விகாரைகளைக் கட்டுப்படுத்துவதற்கோ அல்லது விகாரை நடவடிக்கைகளில் தலையிடவோ, தனக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இளம் பிக்குமார் ஒன்றியத்தைச் சேர்ந்த பிக்குகளை, அலரி மாளிகையின் இன்று (12) காலை சந்தித்துக் கலந்துரையாடிய போதே, பிரமர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், 'இந்த விளையாட்டை நிறுத்துங்கள். மதத்தை இழுக்காதீர்கள். நாங்களும் பௌத்தர்கள் தான். எங்களாலும் எதையும் சொல்ல முடியும். மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கவே, பௌத்தர்கள் பலர் வாக்களித்தார்கள். மதத்துடன் அரசியல் நடத்தாதீர்கள். இது, உள்ளூராட்சிமன…
-
- 3 replies
- 491 views
-
-
நெடுந்தீவு அருகே மண்டபம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராமேசுவரம்: ராமேசுவரம், மண்டபம், பாம்பன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 300 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 5-க்கும் மேற்பட்ட சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களிடம் இங்கு வந்து மீன் பிடிக்…
-
- 1 reply
- 501 views
-
-
பாராளுமன்றத்திற்கு சென்று கோழிக்கறியும் மினரல் வாட்டரும் குடிக்கிறார்கள் மக்கள் பிரசனை பற்றி கவலை இல்லை
-
- 0 replies
- 272 views
-
-
இலவு காத்த கிளிகளாக சம்பந்தனும் சுமந்திரனும் புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையோ, அரசமைப்புத் திருத்தத்துக்கான தேவையோ தற்போது காணப்படவில்லை என்று பௌத்த மகா சங்கங்கள் கடந்த வாரம் கூட்டாக அறிவித்திருக்கின்றன. இவ்வாறான தீர்மானமொன்றுக்கு பௌத்த மகா சங்கங்கள் வரும் என்று ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டிருந்தன. ஆனாலும், அந்த அறிவிப்பு சற்றுத் தாமதமாக, குறிப்பாக அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை வெளியாகவிருந்த தருணத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த நிலைமை, இரா.சம்பந்தனின் பெரும் கனவொன்றின் மீது கற்களை வீசியிருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தன்னுடைய காலத்துக்குள் தீர்வொன்றைப் பெற்றுக்…
-
- 3 replies
- 397 views
-
-
ஊழல் ஒழிப்பு காரியாலயத்தை மூடத் தீர்மானம் ஊழல் ஒழிப்பு செயலாளர் காரியாலயத்தை மூடிவிடுவதற்கான தீர்மானம் அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2015 ஜூலை 2 ஆம் திகதி தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த பிரேரணை அங்கீகரிக்கப்பட்ட பின் இந்தக் காரியாலயம் திறக்கப்பட்டது. 2016 நவம்பர் 22 ஆம் திகதி அதன் ஒரு வருடப் பதவிக்காலம் முடிந்தபின் மற்றுமொரு பிரேரணையின் படி பதவிக்காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது. அதன் பிரகாரம் கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி பதவிக்காலம் மீண்டும் முடிவடைந்தது. இந்தக் காரியாலயத்தின் …
-
- 0 replies
- 622 views
-
-
மணற்காடு சம்பவம்: அறிக்கையிட யாரும் வரவில்லை மணற்காட்டுப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தினால், இளைஞனொருவன் பலியான சம்பவம் தொடர்பில், அறிக்கையிடுவதற்கு, அந்த கன்டர் ரக வாகனத்தின் சாரதியாகப் பணியாற்றியவரோ அல்லது அந்தவாகனத்தில் பயணித்த நபர்களில் யாரேனும் ஒருவரோ, செவ்வாய்க்கிழமை வரையிலும் முன்வரவில்லையென, பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது. பருத்தித்துறை, மணற்காட்டுப் பகுதியில், பொலிஸாரின் சமிக்ஞையை மீறி பயணித்த கன்டர் ரக வானத்தின் மீது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், துன்னாலையைச் சேர்ந்த 24 வயதான யோகராசா தினேஸ் என்ற இளைஞர் பலியானார். இந்தச் சம்…
-
- 0 replies
- 306 views
-
-
‘அந்த அறிவிப்பு பழிவாங்கும் முயற்சி’ “தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பழிவாங்குவதற்காகவே தான் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகக் கூறி வருகின்றார். இதன் மூலம் கிழக்கு மாகாணசபைக்கு பெரும்பான்மையாகத் த.தே.கூவிலிருந்து எவரும் தெரிவு செய்யப்படக்கூடாது என்ற வக்கிரப் போக்கு மாத்திரமே கோடிட்டுக் காட்டப்படுகின்றது” என, இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதி தலைவர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதி தலைவர் பா.அரியநேத்திரனை, நேற்று (12) தொடர்புகொண்டு கே…
-
- 0 replies
- 319 views
-
-
சம்பந்தன் அமைதி கலைய வேண்டும் எதிர்க்கட்சித் தலை வர் இரா.சம்பந்தன் நாட் டில் இடம்பெறும் அசாதாரண நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்காது அமைதியாக உள்ளார். எனினும் அவர் அமைதி கலைத்து அரசாங் கம் மேற்கொள்ளும் முறையற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். கூட்டு எதிரட்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிடிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் நாட்டுக்குப் பாதகம் ஏற்படுத…
-
- 0 replies
- 283 views
-
-
தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியதை சம்பந்தன் கைவிட்டாலும் நான் கைவிடமாட்டேன் – வடமாகாண முதலமைச்சர்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை எந்தவித காரணங்கொண்டும் குழப்பக்கூடாது எனவும் அப்படிக் குழப்பினால் அது தென்னிலங்கைக்குச் சாதகமாகிவிடும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று அரசியல் கட்டுரைகள் எழுதும் ஆய்வாளர்களைச் சந்தித்து அவர்களுக்கு தனது நிலைப்பாடு தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவரின் உரையில் தெரிவித்ததாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை எக்காரணங்கொண்டும் நாம் பலவீனப்படுத்தக்கூடாது. இந்தச் சந்தர்ப்பத்தில் அப்படிச் செய்தால் அது தென்னிலங்கை அரசுத் தரப்புக்…
-
- 1 reply
- 361 views
-
-
’கோப்பை எனது கையில் திணித்துவிட்டனர்’ - - எஸ்.நிதர்ஷன் "ஆளுநரிடம் செல்வதற்கான உள்ளே சென்ற போது, வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானக் கோப்பை (பைல்) என்னுடைய கையில் கொண்டுவந்து திணித்து விட்டார்கள். எல்லோரும் கெட்டிக்காரர்கள்தானே? இல்லாவிட்டால் எப்படி மாகாண சபை உறுப்பினராகத் தெரிவாவது?" என, வட மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் கோப்பாய்த் தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில், சமகால அரசியல் கருத்தரங்கும் கேள்வி - பதில் நிகழ்ச்சியும், நீர்வேலி கந்தசுவாமி ஆலய வடக்கு வீதி மண்டபத்தில் இன்று (11) நடைபெற்றது. அங்குவைத்து அவர் மேலும் தெரிவிக்கையில், "வடம…
-
- 7 replies
- 772 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (12-07-2017)
-
- 0 replies
- 213 views
-
-
11 தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயம்: முன்னாள் கடற்படை பேச்சாளருக்கு சிக்கல் 2008ம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், சந்தேகநபராக, முன்னாள் கடற்படைப் பேச்சாளர் ஒருவர் பெயரிடப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜராகாது தவித்து வரும், கடற்படையின் லுத்தினல் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியை கைதுசெய்யுமாறு, கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல், குறித்த சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிர…
-
- 3 replies
- 861 views
-
-
தென்னிலங்கை மீனவர்களுக்கு முல்லை மாவட்ட கடற்றொழில் திணைக்களம் துணை முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டும் சட்டவிரோதமான தொழில்கள் அனைத்திற்கும் முல்லை மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களம் உறுதுணையாக இருக்கின்றது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையதின் பொருளாளர் எ.மரியராசா இக் குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களால் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி மீன்பிடித்தல்…
-
- 1 reply
- 313 views
-
-
நல்லாட்சி அரசாங்கம் வடகிழக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்ற தொடர்ந்து முன்னிற்கும் : டி.எம் சுவாமிநாதன் நல்லாட்சி அரசாங்கம் வடகிழக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்ற தொடர்ந்து முன்னிக்கும் என மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரவித்துள்ளார். யாழ் நீர்வேலியில் அமைந்துள்ள காமாட்சி அம்பாள் கூட்டுறவு கைத்தொழில் சங்கத்தின் விற்பனை நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போது அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் வாழும் கடற்தொழிலாளர்கள் ,விவசாயிகள் மற்றும் ஏனைய கைத்தொழில்களில் ஈடுபடுவோரின் வாழ்கை தரத்தினை முன்னேற்றுவதற்கு நாங்கள் ப…
-
- 0 replies
- 151 views
-
-
நாங்கள் முஸ்லிம்களை தங்களோடு வைத்திருக்க முஸ்லிம் கட்சிகளை நம்பியிருந்தமையே தாங்கள் செய்த மிகப் பெரும் தவறு. தற்போது அத் தவறை சரி செய்து முஸ்லிம் மக்கள் விடயங்களை முஸ்லிம் அரசியல் வாதிகளை விடுத்து நேரடியான பொறிமுறைகள் அமைத்து கையாண்டு கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற இளைஞசர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.. நேற்று 11-07-2017ம் திகதி கூட்டு எதிர்க்கட்சியின் இளைஞ்சர் மாநாடு இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்ட முஸ்லிம் இளைஞர்கள், முஸ்லிம் மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை கவிழ்க்க இடம்பெற்றுக்கொண்டிருந்த சூழ்ச்சியை அறியாது அதில் அகப்பட்டுக் கொண்டதாக மன வேதனையோடு கருத்துக்களை பரிமாறினார்கள். …
-
- 0 replies
- 323 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திப்பில் மகிழ்ச்சி – அஸ்கிரி பீட பதிவாளர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திப்பதில் மகிழ்ச்சி என அஸ்கிரி பீட பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அஸ்கிரி பீடாதிபதியை சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். ஏதேனும் தப்பான அபிப்பிராயங்கள் நிலவினால் அதனை தீர்ப்பதற்கு இது ஒர் நல்ல சந்தர்ப்பம் என அவர் குறிப்பிட்டுள்ளார். வட மாகாண முதலமைச்சரின் சில கடும்போக்குடைய நிலைப்பாடுகள் வருத்தம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். h…
-
- 0 replies
- 281 views
-