ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143359 topics in this forum
-
சக்தி டிவி செய்திகள் 8PM (22/06/2017)
-
- 0 replies
- 224 views
-
-
’குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்கிறார் சி.வி’ Comments - 0 Views - 20 தனக்கு மிகவும் நெருக்கமானவரான ஐங்கரநேசனுக்கு எதிராக முதலமைச்சர் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்ட போது முதலமைச்சரை வற்புறுத்தி, மாகாண சபையிலே ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் எமது உறுப்பினர்களே காரணமாக இருந்தார்கள். அவர், உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்கிறார் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு, இன்று (16) அவர் அனுப்பிய அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தாவது, "இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை…
-
- 55 replies
- 3.1k views
-
-
சபை அமைதியாக நடைபெறுகிறது: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- June 22, 2017 June 22, 2017 Add Comment Share This! வடமாகாண சபையின் 97ஆவது அமர்வு மிக அமைதியாக நடைபெற்று வருகின்றது. வடமாகாண சபையின் 97ஆவது அமர்வு இன்று காலை 10 மணியளவில் கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் ஆரம்பமானது. வடமாகாண சபையின் கடந்த 14ஆம் திகதி அமர்வு ஒத்திவைக்கப்பட்ட பின்னர் அன்றிரவு அவைத்தலைவர் மூன்று அமைச்சர்கள் உட்பட ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் 16 பேருடன் ஆளூநரை சந்தித்து, முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்தார். …
-
- 2 replies
- 508 views
-
-
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சரண் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நிதிமன்றில் சரணடைந்தார். http://www.virakesari.lk/article/21096
-
- 10 replies
- 599 views
-
-
திருவள்ளுவரின் உருவச்சிலை திரைநீக்கம் -எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா மட்டக்களப்பு பிள்ளையாரடியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவரின் உருவச்சிலை செவ்வாய்க்கிழமை (20) மாலை திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர்> டாக்டர் வி.ஜி.சந்தோஷத்தால் திருவள்ளுவரின் உருவச்சிலை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/திருவள்ளுவரின்-உருவச்சிலை-திரைநீக்கம்/46-199096
-
- 6 replies
- 1.2k views
-
-
அவைத்தலைவருக்கும் முதல்வருக்கும் இடையிலான பனிப்போர் தொடர்கிறது . Written by Chief Editor | June 22, 2017 | Comments Off on அவைத்தலைவருக்கும் முதல்வருக்கும் இடையிலான பனிப்போர் தொடர்கிறது . வடக்கு மாகாணசபையின் 97 வது அமர்வு இன்று நடைபெற்றது. முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஆளுனரிடம் வழங்கப்பட்டு மீளப்பெறப்பட்ட நிலையிலும் இரண்டு அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளநிலையிலும் இரண்டு அமைச்சர்கள் விடுப்பில் செல்ல மறுத்தும் உள்ள நிலையில் இன்றைய அமர்வு சர்ச்சைகள் நிறைந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும் எந்தவித ஆரவாரமும் இன்றி அமைதியாக இது வரையில் எதுவும் நடைபெறாததது போல நடைபெற்று முடிந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். அவைத்தலைவ…
-
- 0 replies
- 479 views
-
-
நாட்டில் அண்மைக்காலமாக சர்ச்சைக்குரிய நபராக வலம் வந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் நேற்றைய தினம் நீதிமன்றில் சரணடைந்து பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த சரணடைவும், கைதும் போலியாக சித்தரிக்கப்பட்டவை எனவும் இவற்றிக்கு பின்னணியில் பல சதிகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஞானசார தேரருக்கு இரண்டு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் நேற்று நீதிமன்றில் சரணடைந்த அவர் சென்ற வேகத்திலேயே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். இதுவரை, அவருக்கு மரண அச்சுறுத்தல் இருக்கின்றது. கைது செய்து அவரை கொலை செய்து விடவும் திட்டம் தீட்டப்பட்டு விட்டது. அதனாலேயே அவர் தலைமறைவாகி விட்டார் என பொதுபல சேனா தெரிவித்து வந்தது. அவர் நீதியைக்கண்ட…
-
- 3 replies
- 384 views
-
-
விக்னேஸ்வரன் வடக்கையும் சம்பந்தன் கொழும்பையும் காப்பாற்றத் துடிக்கின்றனர் – காசியானந்தன்! Posted By: 0333on: June 19, 2017In: இலங்கைNo Comments Print Email வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழீழ மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு தன் கடமைகளைச் செய்துவருகின்றார் என இந்திய ஈழத் தமிழர் நட்புறவுக் கழகத்தின் தலைவர் காசியானந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் அரசியல் குழப்பம் தொடர்பாக அவர் அண்மையில் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தந்தை செல்வாவின் அறப்போராட்டத்தின் மூலமும், தலைவர் பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தின் மூலமும் தமிழீழ விடுதலைக்காக போராடிய பேராற்றல் இன்று உலகம்முழுவதும் பர…
-
- 38 replies
- 1.4k views
-
-
வடக்கு, கிழக்கில் செயற்படுகின்ற நிதி நிறுவனங்களின் கொள்கை குறித்து சபையில் டக்ளஸ் கேள்வி வடக்கு – கிழக்கு மாகாணங்களில் சில நிதி நிறுவனங்கள் குடும்பங்களை குறிப்பாக, பெண் தலைமைத்துவக் குடும்பங்களை மாத்திரமே இலக்கு வைத்து, கடன் வழங்குவதன் பின்னணி என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் (22) நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக, கிளிநொச்சி, முல்லைதீவு, வவுனியா, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில், எல்லையோரக் கிராமங்களிலும், மிகவும் பின்தங்கிய கிராமங்களிலும் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வருமானம் குறைந்த குடும்பங்களை இலக்கு வைத்து இலங்…
-
- 0 replies
- 433 views
-
-
டெனீஸ்வரன், சத்தியலிங்கம் அமைச்சுகள் மீது மட்டுமே விசாரணை! புதிதாக அமைக்கப்படவுள்ள விசாரணைக் குழு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் ஆகியோரின் அமைச்சுக்கள் மீது மட்டுமே விசாரணை நடத்தும் என்று தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். வடக்கு மாகாண கல்வி மற்றும் விவசாய அமைச்சுக்களுக்கு பொருத்தமானவர்களை அமைச்சர்களாக நியமிப்பதற்கு அனைத்து உறுப்பினர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். http://uthayandaily.com/story/7732.html
-
- 1 reply
- 277 views
-
-
பல்கலைக்கழக மாணவர்களை குறைக்கூற மாட்டேன் - ஜனாதிபதி (லியோ நிரோஷ தர்ஷன்) அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு அநீதி இழைத்து, அவர்களது வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்வதுடன் இலவசக் கல்வியை ஒழிப்பதற்கு அரசு முயற்சிப்பதாக சிலர் தற்போது மக்களுக்கு சுட்டிக்காட்ட எத்தனிக்கின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதற்காக அவர்கள் பல்கலைக்கழக மாணவர்களை தவறான பாதையில் இட்டுச் செல்கின்றனர். அத்தகைய முறையற்ற அரசியல் துண்டுதல் செயல்களுக்காக எந்தவொரு பல்கலைக்கழக மாணவரையும் குறை கூறப் போவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பொலன்னறுவை லங்காபுர மகா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசே…
-
- 0 replies
- 232 views
-
-
முழங்காவில் பொலிஸ்நிலையம் பொது மக்களால் முற்றுகை சுமார் முந்நூறுக்கும் மேற்ப்பட்ட கிராமமக்கள், மதத் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புகள் நாச்சிக்குடா சந்தியில் இருந்து முழங்காவில் பொலிஸ் நிலையம் வரை பேரணியாகச் சென்று பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாக எமது கிளிநொச்சிப் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 17 ம் திகதி இரவு முழங்காவில் கரியாலை நாகபடுவான் தேவாலய திருவிழாவை முடித்துக் கொண்டு வீதிக்கு வந்த பதின்மூன்று வயதான அ.அபினேஸ் என்ற சிறுவனை மன்னார் பகுதியில் இருந்து வந்த கார் மோதிவிட்டு விபத்தையடுத்து கார் தப்பியோட்டிருந்தது குறித்த…
-
- 3 replies
- 328 views
-
-
காணாமற்போனோர் செயலகம் வன்னியிலும் அமையவேண்டும் சபையில் நேற்று சம்பந்தன் கோரிக்கை காணாமல்போனவர்களைக் கண்டறிவதற்கான அலுவலகம் காலதாமதமாக அமைக்கப்பட்டாலும் அதன் செயற்பாடுகளை அரசு துரி தப்படுத்தவேண்டுமென வலியுறுத்தியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன். அத்துடன், காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான தலைமையகம் கொழும்பில் அமைக்கப்பட்டாலும் வடக்கிலுள்ளவர்கள் முறைப்பாடுகளைச் செய்ய வன்னியிலும் ஓர் அலுவலகம் அமைக்கப்படவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் ந…
-
- 5 replies
- 673 views
-
-
பட்டதாரிகளான 35 போராளிகளுக்கு வேலைவாய்ப்பு மறுவாழ்வளிக்கப்பட்டு விடு விக்கப்பட்டுப் பட்டதாரிகளான, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 35 பேர், மீள்குடியேற்ற பட்டதாரிகளான மற்றும் மறுவாழ்வு அமைச்சின் வெற்றிடங்களுக்கு உள்வாங்கப்படுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இவர்களுக்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் 29 ஆம் திகதி அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாண ஆளுநர் கூரேயின் வேண்டுகோளுக்கு அமைவாக, தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே அனுமதி வழங்கப்பட்…
-
- 3 replies
- 301 views
-
-
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். நல்லூர் முருகன் கோவிலுக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பின் பேரில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வடமாகாண முதலமைச்சர் அலுவலகம் வரையில் பேரணியாக செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சருக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக "தமிழர்களின் அரசியலை தலைமையேற்க விக்னேஸ்வரன் ஐயா வருக" என ஆர்ப்பாட்டத்த…
-
- 43 replies
- 3.2k views
-
-
காணாமற்போனோர் அலுவலக சட்டமூலம் நிறைவேறியது காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (ஸ்தாபித்தலும் நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும் (திருத்தச்) சட்டமூலம், நாடாளுமன்றத்தில் இன்று (21) நிறைவேறியது. http://www.tamilmirror.lk/செய்திகள்/காணாமற்போனோர்-அலுவலக-சட்டமூலம்-நிறைவேறியது/175-199139 காணாமற்போனவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக செயற்பட வேண்டும் என பிரதமர் தெரிவிப்பு காணாமல் போனவர்களின் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் அல்லது சட்டவிரோதமாக வெளிநாடு சென்றிருக்கலாம் என இதற்கு முன்னர் பாராளுமன்றத்திலும், தேசிய தைப்பொங்கல் நிகழ்விலும் குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்…
-
- 3 replies
- 442 views
-
-
வடமாகாண சபை அமர்வில் இன்று ஆசன ஒழுங்கு மாறும் வடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வில் ஆசன ஒழுங்குகள் தற்காலிகமாக மாற்றப்படும் என்று பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர்கள் இருவர் பதவி விலகியமையால் அவர்கள், முன்வரிசை ஆசனங்களிலிருந்து இடமாற்றப்படுவார்கள் என்று தெரிய வருகின்றது. வடக்கு மாகாண சபையில் முன்வரிசையில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முதலாவதாகவும், கல்வி முன்னாள் அமைச்சர் த.குருகுலராசா இரண்டாவதாகவும், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மூன்றாவதாகவும், விவசாய முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நான்காவதாகவும்…
-
- 0 replies
- 535 views
-
-
இலங்கை வரும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் (லியோ நிரோஷ தர்ஷன்) உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இலங்கைக்கு வரவுள்ளார். இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தல் மற்றும் புதிய துறைகளில் உறவுகளை கட்டியெழுப்புதல் என்பன ரஷ்ய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்திக் நோக்கமாக அமைந்துள்ளது. எதிர்வரும் ஜுலை மாதம் முதல் வாரத்தில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சரின் இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உறுதியான திகதி அறிவிக்கப்பட வில்லை. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் உத்தியோகப்பூர்வ அரச விஜயத்தை மேற்கொண்டு ரஷ்யா சென்றிருந்தா…
-
- 0 replies
- 268 views
-
-
ஐ.நா. தீர்மானத்துக்கு அரசு செயல் வடிவம் பரிந்துரைகளை ஒருங்கிணைக்க அமைச்சரவைக் குழு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை விவகாரம் தொடர்பில் நிறைவேற்றப்பட் டுள்ள தீர்மானத்தில் முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகளை ஒருங்கிணைப்பதற்காக அமைச்சரவைக் குழுவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சரவை இணைப் பேச்சாளரான கயந்த கருணாதிலக்க மேற்படி தகவலை வெளியிட்டார்.அவர் மேலும் தெரிவித்ததாவது: ஐ.நா. மனித…
-
- 0 replies
- 144 views
-
-
காணாமல்போனோர் அலுவலகம் ஏன் நிறுவப்பட்டது ; நாமல் கேள்வி காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் நிறுவுவதின் ஊடாக எவரும் தண்டிக்கப்படமாட்டார்கள் என பிரதமர் கூறுவதாயின் ஏன் இப்படி ஒரு அலுவலகம் நிறுவப்பட்டது. சிறைச்சாலைக்குள் நுழைந்து தேடும் அளவிற்கு அலுவலகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அப்படியாயின் ஏன் இவ்வளவு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டு எதிரணி ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் தாபித்தலும் நிர்வகித்தலும் பணிகளை நிறைவேற்றுதல் திர…
-
- 0 replies
- 252 views
-
-
5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் : மற்றுமொரு கடற்படை வீரர் சி.ஐ.டி.யால் கைது கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர் பகுதிகளிலிருந்து வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றொரு கடற்படை வீரரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே இந்த விவகாரத்தில் 5 கடற் படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே தற்போது மற்றொரு கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலையில் உள்ள ருஹுனு கடற்படை முகாமில் சேவையாற்றி வந்த கடற்படை வீரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாயவுப் பிரிவின் உயர் அதிகா…
-
- 1 reply
- 458 views
-
-
வடமாகாண அரசியல் நாடகம் முடிவுக்கு வந்தது : வடமாகாண ஆளுநர் வடமாகாணசபை ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட அரசியல் நாடகம் முடிவுக்கு வந்துள்ளதாக வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே தெரிவித்தார். வடமாகாண விவசாயம் மற்றும் கல்வி அமைச்சுக்களை முதலமைச்சர் பொறுப்பேற்றுக்கொண்டதுடன் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெற்ற நிகழ்வுகள் ஆளுநர் அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 30 வருட போரின் பின்னர் ஏற்பட்ட முதலாவது வடமாகாண சபையில் இவ்வாறான குழப்ப நிலைகள் ஏற்பட்டதுடன் அவை சுமூகமாக நிறைவடைந்துள்ளமை மக…
-
- 2 replies
- 510 views
-
-
சிவாஜிலிங்கம், ரிஷாட், ஞானசாரருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம் இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு கலங்கம் ஏற்படும் வகையில் பேசப்பட்ட கருத்துகள் தொடர்பில், இதுவரையில் 21 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார். இக்குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். கே.சிவாஜிலிங்கம், அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோருக்கு எதிரான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்ப…
-
- 0 replies
- 286 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்ற நிலையில், அதில் கலந்துகொண்டுள்ள 17 வயதான ஈழத்து சிறுவன் ஒருவர் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார். இந்த கூட்டத்தொடரில் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அந்த வகையில், ஈழத்தை சேர்ந்த 17 வயதான மாணவர் ஒருவரும் இந்த கூட்டத்தொடரில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளார். குறிப்பிபாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் மற்றும் அதற்கு பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற பெற்ற மனித உரிமை மீறல்களை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். http://www.tamilwin.com/special/01/149757?ref=home…
-
- 7 replies
- 678 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (21/06/2017)
-
- 0 replies
- 252 views
-