ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143368 topics in this forum
-
கொழும்பில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணிகள் தற்காலிகமாக இராணுவத்தினரிடம் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அகற்றப்படாமல் வீதியோரங்களில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்கான பணிகளை தற்காலிகமாக இராணுவத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். குப்பை முகாமைத்துவத்துக்கான தனியானதொரு பொறுப்பதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்பதுடன் மக்களும் தமது பொறுப்புணர்ந்து குப்பைகளை வகைப்பிரித்து சேகரித்தால் மாத்திரமே நாட்டில் எழுந்துள்ள குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொ…
-
- 0 replies
- 304 views
-
-
உறுப்பினர்கள் 38 பேரும் நிலைப்பாட்டை தெரிவித்ததும் நடவடிக்கை எடுப்பேன் : வடக்கு ஆளுநர் வட மாகாண சபையின் 38 உறுப்பினர்களும் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான தமது நிலைப்பாட்டை என்னிடம் தெரிவித்ததும் நான் முதலமைச்சரிடம் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோருவேன் என்று வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். தற்போது வடக்கில் என்ன நடக்கின்றது என்று நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிக்கையிட்டு வருகின்றேன். சட்டத்தின் பிரகாரம் செயற்படுமாறு ஜனாதிபதி என்னை பணித்துள்ளார் என்றும் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே சுட்டிக்காட்டினார். வடக்கு…
-
- 0 replies
- 398 views
-
-
சி.விக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை? -எம்.றொசாந்த் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர், முயற்சித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியை சேர்ந்த சிலரே, முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு முயற்சிகளை தற்போது முன்னெடுத்து வருகின்றனர். அதற்காக, எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனும் தற்போது பேச்சுக்களை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …
-
- 31 replies
- 2.8k views
- 1 follower
-
-
முதலமைச்சரை நீக்குவதற்காக நீண்டகாலமாக வடமாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன் மற்றும் அயுப் அஸ்மின் ஆகியோர் திட்டமிடல் செய்தமை தற்போது ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது. வடமாகாண சபையின் உறுப்பினரான விந்தன் கனகரத்தினம் விசாரணைக்குழுவுக்கு செய்த முறைப்பாட்டில் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டபோதும் விசாரணைக்குழு அதனை உள்ளடக்கியிருக்கவில்லை. கடந்த 09 – 02 – 2016 அன்று விந்தனை சந்தித்த அஸ்மின் முதல்வர் விக்கினேஸ்வரனை விலக்கவேண்டும் என்றும் அதற்கு அவரது வலக்கையை உடைக்கவேண்டும் என ஆசனத்தின் கைப்பிடியை காட்டியுள்ளார். அதன் தொடர்ச்சியாக வடமாகாண சபையின் இன்னொரு உறுப்பினரான ஜிரி லிங்கநாதனை அழைத்து உங்களுக்கு விவசாய அமைச்சராக கொண்டுவரவேண்டும் என சுமந்திரன் சேர் விரும்புகின்றார். …
-
- 0 replies
- 362 views
-
-
மூதூர் பெருவெளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்டோர் விடுதலை! துரோகமும் சதியும்!! மூதூரின் பெரியவெளி கிராமத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மூன்று சிறுமிகள் பற்றிய வழக்கு இன்று மூதூரின் நீதிமன்றத்தினால் புலனாய்வுப்பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டதுடன் அவ்வழக்கில் இனங்காணப்பட்ட 6 குற்றவாளிகளையும் நீதிமன்றம் உடனடியாக விடுதலைசெய்த கொடுமை இன்று நடந்துள்ளது. அண்மையில் 7 – 8–வயதுடைய மூன்று சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்தபோது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த குழுவினரே இத்தகைய தகாத செயலில் ஈடுபட்டிருந்தனர். இவ்விடயம் வழக்குக்கு கொண்டுவரப்பட்ட சமயங்களில் அச்சமூகத்தைச் சேர்ந்த பலர் நீதிமன்ற முன்றலில் திரண்டு பாதிக்கப்பட்டவர்களை மறைமுகமாக அச்சுறு…
-
- 25 replies
- 1.4k views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (16/06/2017)
-
- 0 replies
- 322 views
-
-
முதலமைச்சருக்கு ஆதரவான வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆளுநருடன் சந்திப்பு http://globaltamilnews.net/archives/29906
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழ் மக்களின் அபிமானம் பெற்றவொரு தலைவராகவும் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒருவராகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் விளங்குகிறார். அவரை பதவிநீக்கம் செய்ய முயல்வது எமது கண்களை நாமே குத்திக் கொள்ளும் செயலாகவே அமையும் என நாடுகடந்த தமழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அறிக்கையில், வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் C.V விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மான முயற்சி குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சருக்கு ஆதரவாகத் தமிழ் அமைப்புகளும் மக்களும் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கும் தனது தோழமை கலந்த ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிற…
-
- 0 replies
- 371 views
-
-
முதலமைச்சரின் நிலைப்பாடுகளுக்கு எதிராக சிறிலங்காஅரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுவரும் சதி நடவடிக்கைகளுக்கு, எதிர்ப்பு தெரிவித்தும், முதலமைச்சரின் கோட்பாடுகளுக்கான மக்கள் ஆதரவை வெளிப்படுத்தியும் இன்று நடைபெற்ற கடையடைப்பிற்கு எமது கோரிக்கையை ஏற்று ஒத்துழைப்பு தந்த அனைத்து உள்ளங்களுக்கும் தமிழ் மக்கள் பேரவை நன்றிகளை தெரிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், காலநெருக்கடி மிகுந்த சூழலில், மிகக்குறுகிய முன்னறிவித்தலின் மத்தியிலும், தாமாக முன்வந்து ஆதரவு வெளிக்காட்டிய வர்த்தகப்பெருமக்கள், போக்குவரத்து சங்கங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழக சமூகம், ஊடகங்கள் செயற்பாட்டாள…
-
- 0 replies
- 308 views
-
-
வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாணத்தில் இன்று ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஹர்த்தாலுக்கு வவுனியா வடக்கு வர்த்தகர் சங்கம் பூரண ஆதரவை வழங்கியதுடன், இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். அந்த வகையில் வவுனியா வடக்கில் கனகராயன்குளம், நெடுங்கேணி ஆகிய பகுதிகளில் கடைகள் மூடப்பட்டு பூரண ஆதரவு வழங்கப்பட்டிருந்தது. குறித்த பகுதிகளில் பாடசாலைகள் மற்றும் அரச திணைக்களங்கள் வழமைபோன்று செயற்பட்ட போதிலும் மாணவர்களின் வருகையும், அரச உத்தியோகத்தர்களின் வருகையும் குறைவாக காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 295 views
-
-
விசாரணையை ஆரம்பித்தது முதல் அதை கொண்டு சென்ற படிகள் உட்பட அனைத்திலும் வடமாகாண முதலமைச்சர் தவறு செய்துள்ளார் என வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் கூறியுள்ளார். வடமாகாண வீதி போக்குவரத்து அமைச்சின் மன்னார் மாவட்ட உப அலுவலகத்தில் இன்று மாலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இடம் பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில், வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் எவ்வளவு நிதி மோசடி செய்தார்? எங்கு செய்தார்? எப்போது செய்தார் என்ற தொகை மதிப்பீட்டை உங்களினால் வெளிப்படுத்த முடியுமா? முடியாது. அறிக்கை வெளி வந்தவுடன் இரண்டு நீதிபதிகளும், முன்னாள் அரச அதிபரும் இந்த விடயங்களை கணக்காய்வுக்கு உட்…
-
- 0 replies
- 477 views
-
-
நுவரெலியா - நானுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் பலியான சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் 7 பேர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பெலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி , குறித்த அதிகாரிகள் நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, உயிரிழந்த சிறுமியின் சடலம் ரதல்ல கீழ்ப்பிரிவு தோட்ட பொது மயானத்தில் இன்றைய தினம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/community/01/149296?ref=ho…
-
- 1 reply
- 268 views
-
-
கிளிநொச்சியில் வழமைக்கு திரும்பிய பெரும்பான்மையான வர்த்தக நிலையங்கள் வடக்கு மாகாண முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஹர்தால் காரணமாக கிளிநொச்சியின் இயல்பு நிலையும் இன்று காலை பாதிக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சியில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டிருந்ததோடு போக்குவரத்து சேவைகளும் வழமைக்கு மாறாக குறைவாகவே காணப்பட்டது இருப்பினும், கிளிநொச்சியின் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு கிளிநொச்சியின் வர்த்தக செயற்பாடுகள் இப்பொழுது வழமைக்குத் திரும்பிக்கொண்டுள்ளதனை அவதானிக்க கூடியதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார். …
-
- 5 replies
- 483 views
-
-
முடிவெடுக்கும் அதிகாரத்தை முதலமைச்சரிடம் விட்டு விடுங்கள் ஜனாதிபதி வட மாகாண சபை விவகாரத்தில் தீர்மானம் எடுக்கும் முழு அதிகாரத்தையும் முதலமைச்சரிடம் விட்டுவிடுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வட மாகாண ஆளுநர் ரெஜினோலட் குரேயிடம் வலியுறுத்தியுள்ளார். ஊழல் மோசடிக்கு எதிராக செயற்படுவது நல்லாட்சியின் கோட்பாடு என்பதால் முதலமைச்சரின் தீர்மானத்தில் மத்திய அரசு தலையிடுவது முரண்பாடாக அமையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வடமாகாண அமைச்சர்களின் ஊழல் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவி நீக்குமாறு கோரி வடமாகாண சபையில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலரும், ரெலோ கட்சியிலிருந்து தமிழரசுக் கட்…
-
- 9 replies
- 670 views
-
-
நோயாளர் பராமரிப்பில் அக்கறையில்லை பணப்பதுக்கலில் அக்கறை செலுத்தும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிருவாகம் "அபிவிருத்தி" எனும் மண் குதிரை ஒன்றை காண்பித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிருவாகம் பாரிய பணப்பதுக்கலில் ஈடுபட்டு வருகிறது. இந்த பதுக்கல் நிகழ்வுக்கு அவ் வைத்தியசாலையில் கடமையாற்றும் பல துறைசார் நிபுணர்கள், பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் என பலரும் உடந்தையாக இருப்பதாக மிக வேதனையானது. இந்த அதிகாரிகளுக்கு நிருவாகம் பணப்பட்டுவாடா செய்வதில்லை.தமக்கு உதவுவதற்காக கடமை நேரத்தை வியாபார தேவைக்காக பயன்படுத்த உதவுவதே நிருவாகத்தின் நன்றிக்கடன். கடந்த மாதத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிருவாகம் 100 கதிரைகளை கொள்வனவு செய்தது. இந…
-
- 0 replies
- 237 views
-
-
விசேட அதிரடிப்படையினர் ரோந்து எஸ்.நிதர்ஷன் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக, யாழ்ப்பாணத்தில் இன்று (16) ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், யாழ். குடா நாட்டில் இன்று பரவலாக விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இன்றையதினம், பாடசாலைகள், வியாபார நிலையங்கள் எவையும் இயங்கவில்லை. போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/விசேட-அதிரடிப்படையினர்-ரோந்து/71-198781
-
- 0 replies
- 330 views
-
-
பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமை தொடர்பில் உடனடியாக தலையீட வேண்டும்..! (ஆர்.யசி) சிறுபான்மை இனத்தவர் மீதான அடக்கு முறைகள் மற்றும் அவர்கள் மீதான அழுத்தம் குறித்து சர்வதேச தரப்பு கண்டனம் தெரிவிப்பதாக ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் ஆலோசகர் போல் கொட்ப்ரி தெரிவித்தார். பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமை தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையின் அண்மைக்கால செயற்பாடுகள் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமை மற்றும் கடைகள் தீ வைக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் நிலைப்பாடு எவ்வாறானது என வினவியபோதே அவர் மேற்கண்ட…
-
- 0 replies
- 166 views
-
-
வடமாகாண முதலமைச்சரின் செயற்பாட்டிற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம். அத்துடன் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொடும்பாவி எரிப்போம் என தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி உறுப்பினர் க.ஞானசீலன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் நேற்று இரவு இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி என்ற வகையில் வடமாகாண முதலமைச்சரின் செயற்பாட்டிற்கு நாம் எமது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். முதலமைச்சர் இரண்டு நீதிபதிகளையும், ஒரு அரச உத்தியோகத்தரையும் வைத்து இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தியிருந்தார். …
-
- 5 replies
- 419 views
-
-
வடமாகாணசபைக்கு வந்த சோதனை -நிலாந்தன் அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கைக்குப் பின் வடமாகாணசபைக்கு வந்திருக்கும் சோதனை எனப்படுவது முதலாவதாக தமிழ்த்தேசியத்திற்கு வந்த சோதனைதான். இரண்டாவதாக தமிழ் ஜனநாயகத்திற்கு வந்த சோதனைதான். மூன்றாவதாக அமைச்சர்களுக்கு வந்த ஒரு சோதனை அது. நான்காவதாக விக்கினேஸ்வரனுக்கும் அது சோதனைதான். முதலாவதாக அது எப்படி தமிழ்த்தேசியத்திற்கு ஒரு சோதனையாக வந்திருக்கிறது என்று பார்க்கலாம். ஆட்சி மாற்றத்தின் பின் அம்மாற்றத்திற்குப் பங்காளியாக இருந்த கூட்டமைப்பானது அரசாங்கத்தோடு குறைந்தளவு எதிர்ப்பையும், கூடியளவு இணக்கத்தையும் பேணும் ஒரு நடைமுறையைப் பின்பற்றி வருகிறது. மகிந்தவின் காலத்தில் தன்னைப் புலிநீக்கம் செய்து கொண்ட கூட்டமை…
-
- 8 replies
- 721 views
-
-
வடமாகாண சபை நிலைமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஐபிசி தமிழுக்கு பிரத்தியேக நேர்காணல்
-
- 6 replies
- 552 views
-
-
கடையடைப்புக்கு அழைப்பு எஸ்.நிதர்ஷன் மாகாணசபை உறுப்பினர்கள் சிலரினால், வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கண்டித்து, வடக்கு மாகாணத்தில் நாளை (16) கடையடைப்பை மேற்கொள்ளுமாறு, தமிழ் மக்கள் பேரவை கேட்டுள்ளது. "இந்த குறுகிய முன்னறிவிப்பை பொறுத்துக்கொண்டு, இனத்தின் நலன்கருதி எமது உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்குடன், அனைவரும் இந்தக் கடையடைப்புக்கு ஆதரவு தரவேண்டுமென நாம் விநயமுடன் வேண்டுகிறோம். மேலும், பதவி போன்ற அற்ப பேரங்களுக்காக கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காது, எமக்காக புரியப்பட்ட தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் மனதில் கொண…
-
- 9 replies
- 580 views
-
-
முல்லைத்தீவில் கஞ்சாவுடன் மூவர் கைது முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் மூவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 60 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கஞ்சா போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/20947
-
- 0 replies
- 147 views
-
-
நாட்டுக்குத் தீ வைக்க முயற்சிக்கிறார் மகிந்த முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்த நாட்டுக்கு மீண்டும் தீ வைப்பதற்கு முயற்சி செய்கின்றார் .இவ்வாறு ஐக்கிய தேசிய காட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.அவர் தெரிவித்ததாவது, போர் முடிந்த பின்னர் நாட்டில் இனங்களிடையே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு மகிந்தவுக்கு அதிகம் இருந்தது. நாட்டில் இலங்கையர் என்ற ஓரினம் மட்டும் தான் உள்ளது என்று அவர் கூறினார். அவரால் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியவில்லை. அவரது ஆட்சியில் தான் முஸ்லிம்களுக்கு எதிராகவும் தமிழர்…
-
- 0 replies
- 389 views
-
-
வடக்கில் இன்று பூரண ஹர்த்தால் இயல்புநிலை பாதிப்பு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக வடகிழக்கில் இன்றைய தினம் பூரண ஹர்த்தால் இடம்பெற்றுவருகின்றது. ஹர்த்தாலை முன்னிட்டு வடமாகாணமெங்கும் கடைகள் பூட்டப்பட்டு பாடசாலைகள், வங்கிகள் அரச தனியார் நிறுவனங்கள் அனைத்தின் செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் வடக்கின் இயல்புநிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். குறித்த பொது கடையடைப்புக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/20928
-
- 7 replies
- 1.2k views
-
-
முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளி ஒருவருக்கு மரண தண்டனை முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொனராகல் உயர் நீதிமன்றம் நேற்றைய தினம் இவ்வாறு மரண தண்டனை விதித்துள்ளது. மட்டக்களப்பு வெள்ளாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான முன்னாள் போராளி ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 21ம் திகதி தனமல்வில பிரதேசத்தின் ஊவ குடாஓய அலிமங்கட பிரதேசத்தில் உப காவல்துறை பரிசோதகர் மற்றும் இரண்டு காவல்துறை கான்ஸ்டபிள்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை மற்றும் அவர்களது ஆயுதங்களை களவாடியமை ஆகியனவே இந்த முன்னாள் புலிப் போராளிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களாக…
-
- 0 replies
- 379 views
-