ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
பழைய நினைவுகளை மீட்டிய முள்ளிவாய்க்கால் இலைக்கஞ்சி:- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் கிழக்கில் இன்று காலை ஒன்பது மணிக்கு இடம்பெற்றது இன் நிகழ்வில் சுவிஸ் அருள்மிகு சூரிச் சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கத்தின் இன் ஏற்பாட்டில் வருகைதந்த அனைவருக்கும் இலைக் கஞ்சி வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட கஞ்சியை குடித்த மக்கள் நாட்டில் நிலவிய யுத்தத்தின் போது அக் கொடிய யுத்தத்தின் கடைசி வாரங்களில் தமது உயிரைக் காப்பாற்றிய உணவு என விரும்பி அருந்தியதனை காணக் கூடியதாக இருந்தது அத்துடன் மக்கள் பிரதிநிதிகளும் “இது உணமையாகவே எமது பழைய நினைவுகளை மீட்டிப் பார்க்க வைக்கின்றது ஆனால் இவற்றை நினைக்…
-
- 0 replies
- 476 views
-
-
யுத்த வெற்றிக்கான தேசிய நிகழ்வு இன்று மஹிந்த அணியும் கொண்டாடுகின்றது (க.கமலநாதன்) யுத்த வெற்றிநாளை கொண்டாடும் நோக் கில் இரண்டு நிகழ்வுகள் கொழும்பில் இன் றும் நாளையும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளன. இன்றைய தினம் இடம்பெறவுள்ள தேசிய யுத்த வெற்றிநாளுக்கான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலும் மற்றுமொரு யுத்த வெற்றி விழா நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலும் இடம்பெறவுள்ளன. யுத்தகாலத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவு கூறும் யுத்த வெற்றிநாளுக்கான தேசிய நிகழ்வு நாளையதினம் பாராளுன்ற மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு ஜனாதிபதி மைத்திர…
-
- 0 replies
- 304 views
-
-
கிளிநொச்சியில் மஹாசேன் பலகாய அட்டகாசம் இருந்து கிளிநொச்சிக்கு பேருந்து ஒன்றில் வந்த மஹாசேன் பலகாய சிங்கள இனவாதக் கும்பல் ஒன்று கிளிநொச்சி நகரின் நடுவில் உள்ள மின்கம்பங்களில் தேசியக் கொடியினை பறக்கவிட்டு தப்பி ஓடி உள்ளனர் இன்று நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இலங்கையின் தேசியக் கொடியில் முஸ்லீம் மற்றும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற இரு நிறங்களும் அற்ற இலங்கை தேசியக் கொடிகளை பறக்கவிட்ட சிங்கள இனவாதக் கும்பல்யாழ் நோக்கி ஓடினர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, மீண்டு நல்லிணக்கத்துடன் இன மத பேதமின்றி வாழ்ந்து கொண்டுள்ள கிளிநொச்சி மக்களின் மனதை காயப்படுத்தியதுடன் இனவாதத்தையும் குறித்த கும்பல் வித்தைத்…
-
- 1 reply
- 478 views
-
-
பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் : சந்தேக நபர்களை கைது செய்ய விசேட பொலிஸ் குழு முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்ய விசேடபொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் நேரடி கண்காணிப்பின் கீழ் பொலிஸ் மா அதிபர் அலுவலக பிரதானி பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் மேற்பார்வையில் பொலிஸ் தலைமையகத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கீழ் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் உத்தரவிற்கு அமைவாக இக்குழு பொலி…
-
- 0 replies
- 227 views
-
-
ஜனநாயக போராளிகள் கட்சியின் நினைவேந்தல் நிகழ்வு GALLE ஜனநாயக போராளிகள் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று இரட்டைப்புளியடியில் நடைபெற்றது. இன்று மாலை 4 மணியளவில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். http://uthayandaily.com/story/3351.html
-
- 0 replies
- 191 views
-
-
கடைசி தமிழன் இருக்கும் வரை மறக்க முடியாத மே 18! மாவீரர்கள், சூழ்ச்சியினால் வீழ்ந்து போன வலியினைப் பற்றி நிறைய கட்டுரைகளை வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறேன். சானல் 4 ஒவ்வொரு முறை ஈழப் படுகொலைகளைப் பற்றி காணொளி வெளியிட்ட போதும் அது அமீரக நேரம் அதிகாலை மூன்றறை மணியாயிருக்கும், இரவு முழுதும் கண்விழித்து நமது பெண்களும் பிள்ளைகளும் அலறி அழும் காட்சிகளைப் பார்த்து கையாலாகாதவனாய் வான் பார்த்து அழுதிருக்கிறேன். பதுங்கு குழிக்குள் இருந்து சிறுமியொறுத்தி அப்பா வாங்கோல் வாங்கோல் என்று அலறிக் கொண்டிருந்த போதே குண்டு விழுந்து செத்துப் போன தகப்பானாயும் நானிருந்தேன், குழிக்குள் இருந்து கதறிய பிள்ளையாயும் நானிருந்தேன், மரத்தடியில் குலுக்கோஸ் பாட்டில்களைக் கையில் பிடித்துக் கொண்…
-
- 0 replies
- 689 views
-
-
கேப்பாப்புலவு மக்களின் காணிகள் மிக விரைவில் விடுவிக்கப்படும் ; கேப்பாப்புலவில் எதிர்க்ட்சித் தலைவர் கேப்பாப்புலவு காணியில் 432 ஏக்கர் காணி உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், 70 ஏக்கர் காணியை விடுவிக்க படைத்தரப்பு 400 மில்லியன் ரூபா தேவை எனக் கோருகிறது எனவும் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, கேப்பாப்புலவு பகுதியில் 80 ஆவது நாளாக தொடர்ந்து இராணுவ வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்தித்த எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்மந்தன், இராணுவ முகாமுக்குள் சென்று இரா…
-
- 1 reply
- 159 views
-
-
தமிழ் மக்களுக்கு தனியான நாடு இல்லாத நிலையிலும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் தமது பிரச்சினைகளுக்கு சார்பாக ஐரோப்பிய நாடுகளை கொண்டிருக்கும் போது 47 முஸ்லிம் நாடுகளை பின் புலமாகக்கொண்ட இலங்கை முஸ்லிம்களால் ஏன் தம் பிரச்சினையை இந்நாடுகளுக்கு கொண்டு செல்ல முடியவில்லை..? இக்கேள்விக்கான பதிலை கடந்த பத்து வருடங்களாக நாம் சொல்லிக்கொண்டிருக்கின்றோம். உலமா கட்சியின் ஸ்தாபகத்தின் பிரதான நோக்கங்களில் இதுவும் ஒன்று. ஆனால் அதனை ஜீரணிக்கும் பண்பு, அறிவு முஸ்லிம் சமூகத்திடம் இல்லை. 47 முஸ்லிம் நாடுகள் இருக்கின்றன என்றால் அவற்றில் பெரும்பாலானவை அறபு மொழி பேசும் நாடுகளாகும். ஏனைய நாடுகளில் அறபு முக்கியமான மொழியாகு…
-
- 3 replies
- 832 views
-
-
மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் அருட்தந்தை சுவாமிநாதன் அவர்களினால் ஆத்மசாந்தி பிரார்த்தனை நடத்தப்பட்டதுடன் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய ஈகச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மௌன இறைவணக்கமும் செலுத்தப்பட்டது. இதன்போது வடகிழக்கில் நடத்தப்பட்ட இனப்படுகொலைகள், கடத்தல்கள், காணாமல்போனவர்கள் தொடர்பில் உரிய பதில்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. குறித்த விபரங்களை தற்போதுள்ள கூட்டாட்சி அரசு பாராளுமன்றத்தின் ஊடாக வெளியிட வேண்டும். இதனை யார் செய்தார்கள் என்ற விசாரணைகளுக்கு முதல் இலங்கையில் எத்தனை படுக…
-
- 0 replies
- 472 views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் பல்கலைக்கழக முன்றலிலுள்ள நினைவிடத்தில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. 'மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது தமிழ் இன அழிப்பு நாள் மே 18' எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்பட்ட இந்த நினைவேந்தல் நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக வரலாற்றில் முதல் தடவையாக அண்மையில் புதிதாகப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் தெரிவாகிய பேராசிரியர் ரட்ணம் விக்னேஸ்வரன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார். நினைவேந்தல் நிகழ்வை அவர் ஈகைச் சுடரேற்றி ஆரம்பித்து வைத்ததுடன் அதனைத் தொடர்ந்து மாணவர்களுடன் இணைந்து அஞ்சலி நிகழ்வுகளிலும் கலந்து கொண்டுள்ளார். புதிய துணைவேந்தரின் இத்தகைய அணுகுமுறையைப் …
-
- 0 replies
- 249 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின், சிறுபான்மை விவகார பணிப்பாளர் றீட்டா ஐசக்கிடம் இலங்கை முஸ்லிம்கள் சார்பில் இன்று, 18 ஆம் திகதி முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இலங்கை முஸ்லிம்கள் சார்பில், சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் அமைப்பின் (JMC – I) தலைவர் அனீஸ் ரவுப் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். அண்மைய நாட்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத நடவடிக்கைள், வெறுப்புப் பேச்சுக்கள், பள்ளீவாசல்கள் மீதான தாக்குதல்கள் பற்றி அதில் விபரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் தரப்புகள் முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இனவாதச் செயற்பாட்டை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுப்பதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை விவகார பணிப்பாளர் றீட்டா ஐசக் இதுதொடர்பில்…
-
- 2 replies
- 351 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடை உத்தரவு பாதிரியார் ஒருவராலும் பொது அமைப்புகளாலும் முள்ளிவாய்க்கள் தேவாலயம் ஒன்றிற்கு அருகில் நாளையதினம் மேற்கொள்ள இருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது குறித்த தடை உத்தரவில் சமர்ப்பிக்கப்பட்ட ஏ அறிக்கைக்கு அமைவாக முள்ளிவாய்க்கால் கிழக்கு கத்தோலிக்க இல்லத்திற்கு அருகில் நினைவேந்தல் செய்வதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் சமாதானத்திற்கும் அமைதிக்கும் பங்கம் ஏற்படும் எனக்கருதி பாதிரியார் இராயேந்திரன் எழில்ராயன் உட்;பட அனைவருக்…
-
- 3 replies
- 582 views
-
-
சக்தி டிவி செய்திகள் 18th May 2017, 8PM
-
- 0 replies
- 368 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. யுத்தம் நிறைவடைந்து எட்டாண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச தர நிர்ணயங்களை பின்பற்றக்கூடிய வகையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் , மனித உரிமை மீறல்களுக்கு துணை நிற்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் இரண்டு ஆண்டுகள் ஆட்சி நடத்தி வரும் அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்…
-
- 0 replies
- 496 views
-
-
கொழும்பில் புயல் காற்றுடன் கடும் மழை (காணொளி) கொழும்பில் தற்போது கடுமையான புயல் காற்றுடன் மழை பெய்து வருகின்றது. குறிப்பாக மேல் மாகாணத்தில் கடுமையான மழை பெய்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வீதிகளில் மிக குறுகிய நேரத்துக்குள் நீர் நிறைந்துள்ளமையால் வாகன சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். Tags http://www.virakesari.lk/article/20124
-
- 1 reply
- 274 views
-
-
கல்லுண்டாயில் இறைச்சிக் கழிவுகளை கொட்டி வந்தவர் நேற்றிரவு சிக்கினார் யாழ். மாநகர சபை ஊழியர்களின் முயற்சியில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு டிமிக்கி விட்டு நீண்ட நாட்களாக கல்லுண்டாய் வெளியில் மாட்டு எலும்புகளைக் கொட்டிவந்த படி வாகனம் நேற்றையதினம் இரவு கையும் மெய்யுமாக மடக்கிப்பிடிப்பட்டது. பசு மாட்டை இறைச்சியாக்கி அதன் கழிவுகளைக் கொண்டுவந்து கல்லுண்டாய் வெளியில் கொட்டிய போதே யாழ்ப்பாணம் மாநகர சபை ஊழியர்களால் வாகனம் பிடிக்கப்பட்டது. சாரதி வாகனத்தை அந்த இடத்தில் கைவிட்டுத் தப்பித்தார். எனினும் அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்…
-
- 0 replies
- 395 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக இரத்ததான நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மு.பிரசாந்தன் தலைமையில் இடம்பெறும் மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்தியர் H.W.N.I.கருணாசேன மற்றும் வைத்தியசாலை தாதியர்கள், ஊழியர்கள், மலேரியா ஒழிப்புக் குழுவினர் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர். …
-
- 0 replies
- 414 views
-
-
அஞ்சலி செலுத்துவதை தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் (ஆர்.ராம்) இறுதி யுத்தத்தின் போது பெருந்தொகையாக எமது மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது எம் எல்லோ ரினதும் கடமை. அதனைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி மாபெரும் மனிதப்பேரவலம் நிகழ்ந்தேறிய முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவ…
-
- 2 replies
- 360 views
-
-
பிரபாகரனின் அழிவையிட்டு மனம் வருந்திய ஞானசாரதேரர் பிரபாகரனைப்போன்று வரலாற்றில் இடம்பிடிக்குமாறு அமைச்சர் மனோவுக்கும் அறிவுரை (க.கமலநாதன்) பிரபாகரன் இருந்த போது கிழக்கில் புராதன சொத்துக்களை அழிக்க முஸ்லிம்களுக்கு இடம்கொடுக்கவில்லை. எனவே பிரபாகரனின் அழிவையிட்டு நான் வருந்துகின்றேன் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். அரச கரும் மொழிகள் அமைச்சில் நேற்று புதன் கிழமை அமைச்சர் மனோ கணேசனுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேரர் மேலும் தெரிவிக்கையில், தற்காலத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள புராதன சொத்துக்களை இஸ்லாமியர்கள் தமது குடியிருப்புக்களாக மாற்றிக்கொண்டுள்…
-
- 3 replies
- 412 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில் அஞ்சலி -எம்.றொசாந்த், எஸ்.திருச்செந்தூரன் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் எட்டாவது ஆண்டு நினைவு நிகழ்வு, யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் கல்விசாரா ஊழியர்கள் என பலரும் பங்குகொண்டு, சுடரேற்றி, போரில் உயிரிழந்த ஆன்மாக்களை நினைவு கூர்ந்ததுடன் மூன்று நிமிட அக வணக்கமும் செலுத்தினர். - See more at: http://www.tamilmirror.lk/196855/ய-ழ-பல-கல-க-கழகத-த-ல-அஞ-சல-#sthash.nuq3oo9u.dpuf
-
- 2 replies
- 737 views
-
-
முல்லை. பயணத்தை கைவிட்டார் மைத்திரி அரச தலைவர் மைத் திரிபால சிறிசேனவின் முல்லைத்தீவுப் பயணம் கைவிடப் பட்டதாக, முல்லைத்தீவு மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அரச தலைவரின் பயணத்துக்கு எதிர்ப்புக் கிளம்பியிருந்த நிலையில், அது கைவிடப்பட்டது. வறுமை ஒழிப்புத் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வை முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று நடத்தத் திட்டமிடப்பட்டி ருந்தது. இந்த நிகழ்வில் முதன்மை விருந்தின ராக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாகும். அன்றைய தினம் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, முல்லை…
-
- 0 replies
- 204 views
-
-
அவர்கள் அமைதியாய் உறங்க இன்றேனும் ஒற்றுமையாய்... இன்று மே 18. வன்னிப் பெருநிலப்பரப்பில் உயிரிழந்த எங்கள் உறவுகளுக்கு மனம் மெய் மொழிகளில் அஞ்சலியைச் செலுத்துகின்ற நாள். இன்று காலை 9.30 மணிக்கு மெளன அஞ்சலி செலுத்தப்படும். எங்கள் உறவுகளே! உங்கள் இழப்பால் நாம் எல்லாம் இழந்தோம். இந்தப் பிறவியில், இந்த யுகத்தில் உங்களை இனிக் காண்பதற்கு வாய்ப்பே இல்லை என்றாயிற்று. எத்தனை இடப்பெயர்வுகள், எத்தனை கஷ்டங்கள் இவற்றை எல்லாம் கடந்து எப்படியும் உயிரைக் காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையோடு எதிர்நீச்சல் போட்ட உங்களை முள்ளிவாய்க்காலைத் தாண்ட விடாமல் உயிரறுத்த கொடுமையை நினைக்கும் போதெல்லாம் தலை வெடித்துச் சிதறும். …
-
- 0 replies
- 546 views
-
-
இது சிங்களவர்களின் நாடு : அதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் : அமைச்சர் மனோவிடம் அதிகார தொனியில் இனவாதமாக பேசிய ஞானசார : தகாத வார்த்தைகளும் பாவிப்பு (Video) 'இந்த நாடு யாருடையது? சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை நீங்கள் ஒத்து கொள்கின்றீர்களா?' என ஞானசார தேரர் அமைச்சர் மனோ கணேசனிடம் அதிகார தொனியில் கேள்வி கேட்க அதற்கு அமைச்சர், 'தேரரே இந்த நாடு சிங்கள, தமிழ் முஸ்லிம்..' என பதிலளிக்க முற்பட்டபோது இடைமறைத்த தேரர், 'இல்லை இல்லை இந்த நாடு யாருக்கு சொந்தமானது?' என கேட்க, அமைச்சர் 'இந்த நாட்டில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்று கூற முற்பட்ட போது, கோபமடைந்த தேரர் முறையற்ற சொற்களை பாவித்து இந்த நாடு பௌத்தர்களுக்கு சொந்தமானது என்று தெரிய…
-
- 5 replies
- 320 views
-
-
முல்லைத்தீவில் ஹர்த்தால் -ரொமேஸ் மதுசங்க வடக்கில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூறும் வகையில், இன்று வியாழக்கிழமை (18) முழுவதும், முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த ஹர்த்தால் காரணமாக, பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகள் முடங்கிப்போயுள்ள போதிலும், அரச நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அனைத்தும், வழமையான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது. - See more at: http://w…
-
- 1 reply
- 304 views
-
-
முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள் நெஞ்சமெலாம் பதைபதைக்க, உலகம் முழுதும் வேடிக்கை பார்த்திருக்க, ஆயிரக்கணக்கான எம் உறவுகள் கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கப்பட்ட கோரம் நிகழ்ந்து இன்றோடு எட்டு ஆறு ஆண்டுகள். தமிழ்த் தேசியத்தைச் அழித்து- அதன் ஒட்டுமொத்த அரசியல் பலத்தையும் சிதைத்து, எம்இனத்தை நிரந்தரமாக அடிமைப்படுத்த சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் நிகழ்த்திய ஊழித் தாண்டவம் அது. ‘பயங்கரவாதம்’ என்ற ஒற்றைச் சொல்லுக்குள் எமது இனத்தின் ஒட்டுமொத்த உரிமைகளும் அடக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, சிங்களத்தில் காலடிக்குள் வீழ்த்தப்பட்ட நாள் இது. அதை உலகமே ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது. கைதட்டி வரவேற்றது. முள்ளிவாய்க்காலில் கொட…
-
- 0 replies
- 252 views
-