ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
கேப்பாப்புலவு மக்களின் காணிகள் மிக விரைவில் விடுவிக்கப்படும் ; கேப்பாப்புலவில் எதிர்க்ட்சித் தலைவர் கேப்பாப்புலவு காணியில் 432 ஏக்கர் காணி உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், 70 ஏக்கர் காணியை விடுவிக்க படைத்தரப்பு 400 மில்லியன் ரூபா தேவை எனக் கோருகிறது எனவும் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, கேப்பாப்புலவு பகுதியில் 80 ஆவது நாளாக தொடர்ந்து இராணுவ வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்தித்த எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்மந்தன், இராணுவ முகாமுக்குள் சென்று இரா…
-
- 1 reply
- 160 views
-
-
தமிழ் மக்களுக்கு தனியான நாடு இல்லாத நிலையிலும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் தமது பிரச்சினைகளுக்கு சார்பாக ஐரோப்பிய நாடுகளை கொண்டிருக்கும் போது 47 முஸ்லிம் நாடுகளை பின் புலமாகக்கொண்ட இலங்கை முஸ்லிம்களால் ஏன் தம் பிரச்சினையை இந்நாடுகளுக்கு கொண்டு செல்ல முடியவில்லை..? இக்கேள்விக்கான பதிலை கடந்த பத்து வருடங்களாக நாம் சொல்லிக்கொண்டிருக்கின்றோம். உலமா கட்சியின் ஸ்தாபகத்தின் பிரதான நோக்கங்களில் இதுவும் ஒன்று. ஆனால் அதனை ஜீரணிக்கும் பண்பு, அறிவு முஸ்லிம் சமூகத்திடம் இல்லை. 47 முஸ்லிம் நாடுகள் இருக்கின்றன என்றால் அவற்றில் பெரும்பாலானவை அறபு மொழி பேசும் நாடுகளாகும். ஏனைய நாடுகளில் அறபு முக்கியமான மொழியாகு…
-
- 3 replies
- 833 views
-
-
மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் அருட்தந்தை சுவாமிநாதன் அவர்களினால் ஆத்மசாந்தி பிரார்த்தனை நடத்தப்பட்டதுடன் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய ஈகச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மௌன இறைவணக்கமும் செலுத்தப்பட்டது. இதன்போது வடகிழக்கில் நடத்தப்பட்ட இனப்படுகொலைகள், கடத்தல்கள், காணாமல்போனவர்கள் தொடர்பில் உரிய பதில்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. குறித்த விபரங்களை தற்போதுள்ள கூட்டாட்சி அரசு பாராளுமன்றத்தின் ஊடாக வெளியிட வேண்டும். இதனை யார் செய்தார்கள் என்ற விசாரணைகளுக்கு முதல் இலங்கையில் எத்தனை படுக…
-
- 0 replies
- 473 views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் பல்கலைக்கழக முன்றலிலுள்ள நினைவிடத்தில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. 'மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது தமிழ் இன அழிப்பு நாள் மே 18' எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்பட்ட இந்த நினைவேந்தல் நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக வரலாற்றில் முதல் தடவையாக அண்மையில் புதிதாகப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் தெரிவாகிய பேராசிரியர் ரட்ணம் விக்னேஸ்வரன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார். நினைவேந்தல் நிகழ்வை அவர் ஈகைச் சுடரேற்றி ஆரம்பித்து வைத்ததுடன் அதனைத் தொடர்ந்து மாணவர்களுடன் இணைந்து அஞ்சலி நிகழ்வுகளிலும் கலந்து கொண்டுள்ளார். புதிய துணைவேந்தரின் இத்தகைய அணுகுமுறையைப் …
-
- 0 replies
- 250 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின், சிறுபான்மை விவகார பணிப்பாளர் றீட்டா ஐசக்கிடம் இலங்கை முஸ்லிம்கள் சார்பில் இன்று, 18 ஆம் திகதி முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இலங்கை முஸ்லிம்கள் சார்பில், சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் அமைப்பின் (JMC – I) தலைவர் அனீஸ் ரவுப் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். அண்மைய நாட்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத நடவடிக்கைள், வெறுப்புப் பேச்சுக்கள், பள்ளீவாசல்கள் மீதான தாக்குதல்கள் பற்றி அதில் விபரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் தரப்புகள் முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இனவாதச் செயற்பாட்டை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுப்பதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை விவகார பணிப்பாளர் றீட்டா ஐசக் இதுதொடர்பில்…
-
- 2 replies
- 352 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடை உத்தரவு பாதிரியார் ஒருவராலும் பொது அமைப்புகளாலும் முள்ளிவாய்க்கள் தேவாலயம் ஒன்றிற்கு அருகில் நாளையதினம் மேற்கொள்ள இருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது குறித்த தடை உத்தரவில் சமர்ப்பிக்கப்பட்ட ஏ அறிக்கைக்கு அமைவாக முள்ளிவாய்க்கால் கிழக்கு கத்தோலிக்க இல்லத்திற்கு அருகில் நினைவேந்தல் செய்வதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் சமாதானத்திற்கும் அமைதிக்கும் பங்கம் ஏற்படும் எனக்கருதி பாதிரியார் இராயேந்திரன் எழில்ராயன் உட்;பட அனைவருக்…
-
- 3 replies
- 583 views
-
-
சக்தி டிவி செய்திகள் 18th May 2017, 8PM
-
- 0 replies
- 369 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. யுத்தம் நிறைவடைந்து எட்டாண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச தர நிர்ணயங்களை பின்பற்றக்கூடிய வகையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் , மனித உரிமை மீறல்களுக்கு துணை நிற்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் இரண்டு ஆண்டுகள் ஆட்சி நடத்தி வரும் அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்…
-
- 0 replies
- 497 views
-
-
கொழும்பில் புயல் காற்றுடன் கடும் மழை (காணொளி) கொழும்பில் தற்போது கடுமையான புயல் காற்றுடன் மழை பெய்து வருகின்றது. குறிப்பாக மேல் மாகாணத்தில் கடுமையான மழை பெய்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வீதிகளில் மிக குறுகிய நேரத்துக்குள் நீர் நிறைந்துள்ளமையால் வாகன சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். Tags http://www.virakesari.lk/article/20124
-
- 1 reply
- 275 views
-
-
கல்லுண்டாயில் இறைச்சிக் கழிவுகளை கொட்டி வந்தவர் நேற்றிரவு சிக்கினார் யாழ். மாநகர சபை ஊழியர்களின் முயற்சியில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு டிமிக்கி விட்டு நீண்ட நாட்களாக கல்லுண்டாய் வெளியில் மாட்டு எலும்புகளைக் கொட்டிவந்த படி வாகனம் நேற்றையதினம் இரவு கையும் மெய்யுமாக மடக்கிப்பிடிப்பட்டது. பசு மாட்டை இறைச்சியாக்கி அதன் கழிவுகளைக் கொண்டுவந்து கல்லுண்டாய் வெளியில் கொட்டிய போதே யாழ்ப்பாணம் மாநகர சபை ஊழியர்களால் வாகனம் பிடிக்கப்பட்டது. சாரதி வாகனத்தை அந்த இடத்தில் கைவிட்டுத் தப்பித்தார். எனினும் அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்…
-
- 0 replies
- 396 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக இரத்ததான நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மு.பிரசாந்தன் தலைமையில் இடம்பெறும் மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்தியர் H.W.N.I.கருணாசேன மற்றும் வைத்தியசாலை தாதியர்கள், ஊழியர்கள், மலேரியா ஒழிப்புக் குழுவினர் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர். …
-
- 0 replies
- 415 views
-
-
அஞ்சலி செலுத்துவதை தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் (ஆர்.ராம்) இறுதி யுத்தத்தின் போது பெருந்தொகையாக எமது மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது எம் எல்லோ ரினதும் கடமை. அதனைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி மாபெரும் மனிதப்பேரவலம் நிகழ்ந்தேறிய முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவ…
-
- 2 replies
- 361 views
-
-
பிரபாகரனின் அழிவையிட்டு மனம் வருந்திய ஞானசாரதேரர் பிரபாகரனைப்போன்று வரலாற்றில் இடம்பிடிக்குமாறு அமைச்சர் மனோவுக்கும் அறிவுரை (க.கமலநாதன்) பிரபாகரன் இருந்த போது கிழக்கில் புராதன சொத்துக்களை அழிக்க முஸ்லிம்களுக்கு இடம்கொடுக்கவில்லை. எனவே பிரபாகரனின் அழிவையிட்டு நான் வருந்துகின்றேன் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். அரச கரும் மொழிகள் அமைச்சில் நேற்று புதன் கிழமை அமைச்சர் மனோ கணேசனுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேரர் மேலும் தெரிவிக்கையில், தற்காலத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள புராதன சொத்துக்களை இஸ்லாமியர்கள் தமது குடியிருப்புக்களாக மாற்றிக்கொண்டுள்…
-
- 3 replies
- 413 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில் அஞ்சலி -எம்.றொசாந்த், எஸ்.திருச்செந்தூரன் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் எட்டாவது ஆண்டு நினைவு நிகழ்வு, யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் கல்விசாரா ஊழியர்கள் என பலரும் பங்குகொண்டு, சுடரேற்றி, போரில் உயிரிழந்த ஆன்மாக்களை நினைவு கூர்ந்ததுடன் மூன்று நிமிட அக வணக்கமும் செலுத்தினர். - See more at: http://www.tamilmirror.lk/196855/ய-ழ-பல-கல-க-கழகத-த-ல-அஞ-சல-#sthash.nuq3oo9u.dpuf
-
- 2 replies
- 739 views
-
-
முல்லை. பயணத்தை கைவிட்டார் மைத்திரி அரச தலைவர் மைத் திரிபால சிறிசேனவின் முல்லைத்தீவுப் பயணம் கைவிடப் பட்டதாக, முல்லைத்தீவு மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அரச தலைவரின் பயணத்துக்கு எதிர்ப்புக் கிளம்பியிருந்த நிலையில், அது கைவிடப்பட்டது. வறுமை ஒழிப்புத் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வை முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று நடத்தத் திட்டமிடப்பட்டி ருந்தது. இந்த நிகழ்வில் முதன்மை விருந்தின ராக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாகும். அன்றைய தினம் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, முல்லை…
-
- 0 replies
- 205 views
-
-
அவர்கள் அமைதியாய் உறங்க இன்றேனும் ஒற்றுமையாய்... இன்று மே 18. வன்னிப் பெருநிலப்பரப்பில் உயிரிழந்த எங்கள் உறவுகளுக்கு மனம் மெய் மொழிகளில் அஞ்சலியைச் செலுத்துகின்ற நாள். இன்று காலை 9.30 மணிக்கு மெளன அஞ்சலி செலுத்தப்படும். எங்கள் உறவுகளே! உங்கள் இழப்பால் நாம் எல்லாம் இழந்தோம். இந்தப் பிறவியில், இந்த யுகத்தில் உங்களை இனிக் காண்பதற்கு வாய்ப்பே இல்லை என்றாயிற்று. எத்தனை இடப்பெயர்வுகள், எத்தனை கஷ்டங்கள் இவற்றை எல்லாம் கடந்து எப்படியும் உயிரைக் காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையோடு எதிர்நீச்சல் போட்ட உங்களை முள்ளிவாய்க்காலைத் தாண்ட விடாமல் உயிரறுத்த கொடுமையை நினைக்கும் போதெல்லாம் தலை வெடித்துச் சிதறும். …
-
- 0 replies
- 547 views
-
-
இது சிங்களவர்களின் நாடு : அதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் : அமைச்சர் மனோவிடம் அதிகார தொனியில் இனவாதமாக பேசிய ஞானசார : தகாத வார்த்தைகளும் பாவிப்பு (Video) 'இந்த நாடு யாருடையது? சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை நீங்கள் ஒத்து கொள்கின்றீர்களா?' என ஞானசார தேரர் அமைச்சர் மனோ கணேசனிடம் அதிகார தொனியில் கேள்வி கேட்க அதற்கு அமைச்சர், 'தேரரே இந்த நாடு சிங்கள, தமிழ் முஸ்லிம்..' என பதிலளிக்க முற்பட்டபோது இடைமறைத்த தேரர், 'இல்லை இல்லை இந்த நாடு யாருக்கு சொந்தமானது?' என கேட்க, அமைச்சர் 'இந்த நாட்டில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்று கூற முற்பட்ட போது, கோபமடைந்த தேரர் முறையற்ற சொற்களை பாவித்து இந்த நாடு பௌத்தர்களுக்கு சொந்தமானது என்று தெரிய…
-
- 5 replies
- 321 views
-
-
முல்லைத்தீவில் ஹர்த்தால் -ரொமேஸ் மதுசங்க வடக்கில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூறும் வகையில், இன்று வியாழக்கிழமை (18) முழுவதும், முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த ஹர்த்தால் காரணமாக, பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகள் முடங்கிப்போயுள்ள போதிலும், அரச நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அனைத்தும், வழமையான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது. - See more at: http://w…
-
- 1 reply
- 305 views
-
-
முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள் நெஞ்சமெலாம் பதைபதைக்க, உலகம் முழுதும் வேடிக்கை பார்த்திருக்க, ஆயிரக்கணக்கான எம் உறவுகள் கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கப்பட்ட கோரம் நிகழ்ந்து இன்றோடு எட்டு ஆறு ஆண்டுகள். தமிழ்த் தேசியத்தைச் அழித்து- அதன் ஒட்டுமொத்த அரசியல் பலத்தையும் சிதைத்து, எம்இனத்தை நிரந்தரமாக அடிமைப்படுத்த சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் நிகழ்த்திய ஊழித் தாண்டவம் அது. ‘பயங்கரவாதம்’ என்ற ஒற்றைச் சொல்லுக்குள் எமது இனத்தின் ஒட்டுமொத்த உரிமைகளும் அடக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, சிங்களத்தில் காலடிக்குள் வீழ்த்தப்பட்ட நாள் இது. அதை உலகமே ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது. கைதட்டி வரவேற்றது. முள்ளிவாய்க்காலில் கொட…
-
- 0 replies
- 253 views
-
-
காணாமலாக்கப்பட்ட உறவுகள் முன்னிலையில் ஜனாதிபதி, பிரதமர் பதிலளிக்கவேண்டும் (ஆர்.ராம்) ஜுலை மாதம் 5ஆம் திகதி் காணாமலாக்கப்பட்ட உறவுகளை கொழும்புக்கு அழைத்து வரும்போது ஜனாதிபதி, பிரதமர் நேரடியாக தமது கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்று காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உடனடியாக உரிய பதிலை அளிக்காதவிடத்து புதிய ஆட்சியாளர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை இல்லாது போய்விடும் எனவும் அவ்வொன்றியம் எச்சரித்துள்ளது. காணாமல் போனோருக்கான சட்டமூலத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வல…
-
- 0 replies
- 246 views
-
-
அரசாங்கத்திற்கு மஹிந்த ராஜபக்ஸ சவால் விடுத்துள்ளார் அரசாங்கத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சவால் விடுத்துள்ளார். அரசாங்கத்திற்கு வெற்றி பெறுவோம் என்ற தைரியம் இருந்தால் மூன்று மாகாணசபைத் தேர்தல்களையும் நடத்துமாறு ரத்தினபுரியில் வைத்து அவர் சவால் விடுத்துள்ளார். தேர்தல்களில் வெற்றியீட்ட முடியும் என அரசாங்கம் பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவ்வாறு என்றால் ஏன் அரசாங்கத்தினால் தேர்தல்களை நடத்த முடியவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் நடத்தினால் யாருக்கு மக்கள் ஆதரவு காணப்படுகின்றது என்பதனை தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ள மகிந்த பல்வேறு காரணங்களை காண்பித்து அரசாங்கம் மாகாணசபைத் தேர்த…
-
- 0 replies
- 395 views
-
-
இன்று ‘மே 18’ நினைவேந்தல் சண்முகம் தவசீலன் யுத்தம் நிறைவுக்கு வந்த மே 18 ஆம் திகதியான இன்று (18) முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்வேறு தரப்பினரால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தமிழர் தாயகப் பகுதிகளில் 2006 ஆம் ஆண்டு வாகரை மண்ணில் உச்சம் பெறத்தொடங்கிய கோரத் தாண்டவம், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் வரலாறு காணாத பேரவலத்தை விதைத்திருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த மானிடப் பேரவலத்தின் எட்டாவது ஆண்டு நினைவு தினமே இன்று (18) அ…
-
- 0 replies
- 569 views
-
-
‘சட்டத்தைத் திருத்தும் வரையிலும் காத்திருக்க தேவையில்லை’ கவிதா சுப்ரமணியம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் எனும் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக காத்திருக்கவேண்டிய தேவையில்லை என்று சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அச்சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலக சட்டத்துக்கு, அமைச்சர் ஒருவரை நியமிப்பதோடு, அலுவலகத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி, காணாமல் போனோர் குடும்ப ஒன்றியத்தினால் கையளிக்கப்பட்ட மகஜரை பெற்றுகொண்டு கருத்து தெரிவித்த போதே, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் …
-
- 0 replies
- 169 views
-
-
மட்டக்களப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்! மட்டக்களப்பு ஆரயம்பதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார். சுமார் 29 வயது மதிக்கத்தக்க முகமட் மஷ்பி என்பவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி போலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாகிச்சூடு தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/20107
-
- 0 replies
- 206 views
-
-
இலங்கை, சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இந்த ஆண்டினுள் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாக சீனப் பிரதமர் லீ கெகியான் தெரிவித்துள்ளார். இலங்கைப் பிரதமருக்கும், சீனப் பிரதமருக்குமிடையிலான சந்திப்பு பீஜிங் நகர சீன பொது மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். போக்குவரத்து, நிதி, வணிகம் போன்ற துறைகளை அடிப்படையாகக்கொண்டு, ஆசியாவில் பொருளாதார மற்றும் போட்டிமிகு நிலைமைக்கு மாற்றமடையவும், அதன் ஊடாக இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக முன்னேற்றமடையவும் தேவையான ஒத்துழைப்பு மற்றும் உதவியை இலங்கைக்கு வழங்க சீனா தயாராகவுள்ளது என்றும் கூறினார். "அதற்குத் தேவையான முதலீட்டுச் சூழலை இலங்கையில் உருவாக்க வேண்டும். நிலைபே…
-
- 0 replies
- 418 views
-