Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாட்டில் சீனி உற்பத்தியினை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சீனி கம்பனிக்கு சொந்தமான பெல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளுக்கு கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி நேற்றுமுன்தினம் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, கரிம உரம் மற்றும் ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்டு கரிம சீனி உற்பத்தி தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், சீனி உற்பத்தியை விநியோகிப்பதற்கான முறையான விநியோக வலையமைப்பை உருவாக்குவது மற்றும் தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேலை சுட்டெண்ணை தயாரிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. https://thinakkur…

  2. யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் வசிக்கும் 42 வயதான யுவானிஸ் நேசராசா என்பவர், மூன்று பிள்ளைகளின் தந்தையாக, நிமோனியாக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். இவர் 30ஆம் தேதி முதல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். வெள்ளிக்கிழமை இரவு, அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததால், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவரது உடலைப் பரிசோதனை செய்து, திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் விசாரணைகளை நடத்தினார். நிமோனியாக் காய்ச்சலே உயிரிழப்பிற்கு காரணமாக இருக்கின்றது என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதியாக கண்டறியப்பட்டுள்ளது. https://jettamil.com/young-family…

    • 0 replies
    • 207 views
  3. வனஇலாகாவின் ஆக்கிரமிப்பால் வன்னிமக்கள் நிர்க்கதியில்: ரவிகரன் எம்.பி January 4, 2025 வன்னியில் வனவளத் திணைக்களத்தின் அத்துமீறிய அபகரிப்புக்காரணமாக தமிழ் மக்கள் தமது பூர்வீக குடியிருப்புக்காணிகளையும், பூர்வீக விவசாய வாழ்வாதாரக் காணிகளையும் இழந்து நிர்க்கதியாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியதுடன், வனஇலாவின் இச்செயற்பாட்டுக்கு தனது கடுமையான எதிர்ப்பினையும் வெளியிட்டார். மன்னார் – மடு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 03.01.2025 நேற்று இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் மடு பிரதேசசெயலகப் பகுதிக்குட்பட்ட சோதிநகர், இரணைஇலுப்பைக்குளம், மழுவராயர் கட்டையடம்பன், கரையார் கட்டினகுளம் உள்ளிட்ட பகுதிகளில் வனவளத் தி…

    • 1 reply
    • 271 views
  4. தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது”: கஜேந்திரகுமார் எம்.பி. கருத்து December 31, 2024 “தமிழரசுக் கட்சி பிரதான கட்சியாக உள்ளமையால் அந்தக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது.” இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். மேலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை இழந்த பாதையைத் தொடர்கின்ற வகையில் கட்சியின் முடிவுகள், பதவிகள் அமையக்கூடாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பைச் சரியாகப் புரிந்துகொண்டு, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலரின் ஆதிக்கத்தைக் கட…

      • Thanks
      • Downvote
      • Haha
      • Like
    • 16 replies
    • 1.1k views
  5. முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சாரதியாக பணியாற்றியவர் விளக்கமறியலில்! முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய் பாதுகாவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார். எனினும் பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிமன்றில் முன்வைத்த சமர்ப்பணங்களுக்கு அமைய, குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு மாற்றப்பட்டது. இந்தநிலையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.…

      • Haha
    • 3 replies
    • 448 views
  6. தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் புதிய அரசியலமைப்பை ஆதரிப்போம் January 3, 2025 3:37 pm தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் மாத்திரமே புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான பூரண ஆதரவை வழங்க முடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளார். அதிகாரப் பகிர்வு மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல் என்பன புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதாக உறுதியளித்துள்ள நிலையில் அதற்கான பணிகளை விரைவில் ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளதாக…

      • Thanks
      • Like
    • 6 replies
    • 720 views
  7. நாடாளுமன்ற பதவிகளுக்கு வெளியிலிருந்து அதிகாரிகளை நியமிக்க தீர்மானம் – எழும் கடும் எதிர்ப்புகள்! நாடாளுமன்ற பதவிகளுக்கு வெளியிலிருந்து உயர் அதிகாரிகளை நியமிக்கும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு நாடாளுமன்ற ஊழியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக , தற்போது பணிபுரியும் அதிகாரிகளின் பதவி உயர்வு முறைக்கேற்பவே அதிகாரிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இவ்வாறு, வெளியிலிருந்து ஆட்களை பணிக்கு அமர்த்துவதால் நீண்டகாலமாக சேவை புரியும் அதிகாரிகளுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் அநேகமானோர் சுட்டிக்காட்டியுள்ளனர். நாடாளுமன்றத்தின் அரச நிர்வாக சேவையின் உயர் …

  8. கனகராயன்குளம் பகுதியில் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்த காணி விடுவிப்பு - ஜெகதீஸ்வரன் எம்.பி. 04 Jan, 2025 | 11:04 AM வவுனியா வடக்கு, கனகராயன்குளம் பகுதியில் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காணி ஒன்றினை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, வவுனியா வடக்கு, கனகராயன்குளம் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான காணி ஒன்று 2009 ஆண்டுக்கு பின் பொலிஸாரால் பயன்படுத்தப்பட்டு வந்தது. குறித்த காணியை விடுவிக்க அப் பகுதி மக்கள் பல தட…

  9. 03 Jan, 2025 | 03:43 PM (எம்.மனோசித்ரா) நாட்டு மக்களின் 76 ஆண்டு கால சாபம் குறித்து பேசிய தேசிய மக்கள் சக்தியே இன்று மக்களுக்கு பெரும் சாபமாகியிருக்கிறது. 100 நாட்களில் அரிசியின் விலையை நூறு ரூபாவால் அதிகரிக்கச் செய்திருக்கிறது. 24 மணித்தியாலங்களில் செய்து காட்டுவதாகக் கூறிய விடயங்களில் ஒன்றையேனும் 100 நாட்கள் கடந்தும் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (3) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 76 ஆண்டுகளின் பின்னர் இம்முறை அத…

      • Like
      • Haha
    • 4 replies
    • 283 views
  10. Published By: DIGITAL DESK 3 03 JAN, 2025 | 02:25 PM வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பெற்றோர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (03) காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி அதிபர் கல்லூரியின் வளர்ச்சியை சீர்குலைப்பதாகவும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும், அவரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பெற்றோர்கள் இணைந்து இன்றையதினம் காலை 7.30 மணியளவில் பாடசாலை நுழைவாயிலில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குற…

  11. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள காரைநகர் படகுத் தளத்தை புனரமைப்பதற்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. இந்திய அரசாங்கத்தின் 290 மில்லியன் ரூபாய் மானிய உதவியுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2024 டிசம்பர் 16ஆம் திகதியன்று இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் அப்போதைய இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் க்சேணுகா திரேனி செனிவிரத்ன ஆகியோரால் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டது. இதன்படி, இலங்கையின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், காரைநகர் படகுத் தளத்தை புனரமைக்க இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கொ…

  12. மன்னார் காற்றாலை மின் உற்பத்தி குறித்து இன்று எடுக்கப்பட்ட தீர்மானம் January 3, 2025 09:56 pm மன்னார் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவை உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதோடு, குறித்த அறிவிப்பை ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க விடுத்துள்ளார். மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று (03) பிற்பகல் 2 மணியளவில் மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் மன்னார் ரயில் போக்குவரத்து சேவைகள், திண்மக் கழிவு அகற்றுதலில் உள்ள சிக்கல்கள், காற…

    • 1 reply
    • 340 views
  13. 03 JAN, 2025 | 03:17 PM சீனாவில் பரவிவரும் புதிய வைரஸ் தொடர்பில் இலங்கை எச்சரிக்கை நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவில் காணப்படும் நிலைமையை உன்னிப்பாக அவதானிப்பதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு சீனாவில் பரவும் புதிய வைரஸ் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. சீனாவில் காணப்படும் நிலைமை குறித்து முழுமையாக ஆராய்ந்த பின்னர் மேலதிக தகவல்களை பொதுமக்களிற்கு வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/202887

  14. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக காற்றுமாசு உயர்வடைந்திருந்த நிலையில், அது தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்ததாவது: நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் வளித்தரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. நவம்பர் மாதம் 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காற்றுமாசு நிலை (சுட்டெண்) அதிகளவில் ஏற்பட்டிருந்த நிலையில், டிசெம்பர் மாதம் 2ஆம் திகதிமுதல் நிலைமை மெல்லமெல்ல இயல்புக்குத் திரும்புகின்றது. காற்றின் வடிவம் மாறி வீசுகின்றபோது (மாறுபட்ட சுழற்சி நிலை) அயல் நாடுகளில் இருந்து மாசுத் துணிக்கைகள் அதிகளவில் எடுத்து வரப்பட…

  15. நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய அத்து மீறிய ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துவதற்கு இயலாது விட்டால் எம்மை வேறொரு பிரதேசத்திற்கு மாற்றி விட்டு நெடுந்தீவை இந்தியாவுக்கு வழங்கி விடுங்கள் என நெடுந்தீவு இளம்பிறை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவரும் சமாச பிரதிநிதியுமான சத்தியாம்பிள்ளை தோமாஸ் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (3) யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நெடுந்தீவு கடற்பரப்பில் பல வருட காலமாக இந்தியா அத்து மீறிய இழுவை படகுகளினால் எமது மீனவர்கள் பாரிய இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். கடந்த 29 ஆம் திகதியும் இந்தியா அத்துமீறிய இழுவைப் படகுகள…

  16. 04 OCT, 2024 | 06:31 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதி திட்டங்களைத் தற்காலிகமாக முடக்குமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவை மேலும் நீடிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான 16 வங்கிக் கணக்குகள் மற்றும் 05 ஆயுள் காப்புறுதித் திட்டங்களை ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி வரை தற்காலிகமாக முடக்குமாறு கொழும்பு மேல் …

  17. மாத்தறை சிறைச்சாலை சம்பவம்; மேலும் ஒரு கைதி உயிரிழப்பு! மாத்றை சிறைச்சாலையில் மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்து வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளார். அதன்படி, இந்த சம்பவத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 02 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் (01) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 12 கைதிகள் காயமடைந்த நிலையில், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் ஒரு கைதி உயிரிழந்தார். கைதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஜி மற்றும் எஃப் விடுதிகளின் மீது அருகில் இருந்த மரத்தின் கிளை ஒன்று விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த கைதிகள் 25, 27, 32, 3…

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,திஸாநாயக்க, இலங்கையில் இந்தியா மற்றும் சீனாவின் செல்வாக்கை சமநிலைப்படுத்தும் சவாலை எதிர்கொள்கிறார் கட்டுரை தகவல் எழுதியவர்,அன்பரசன் எத்திராஜன் பதவி,தெற்காசிய பிராந்திய ஆசிரியர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் புதிய இடதுசாரி அதிபரும் அவரது கட்சியும் பெற்ற பிரமிக்க வைக்கும் தேர்தல் வெற்றி அந்நாட்டு அரசியல் சூழலை மாற்றியுள்ளன. ஆனால், இலங்கையில் நிதி நெருக்கடி நிலவும் நிலையில் அந்நாட்டின் புதிய தலைவர்கள், தங்கள் பிரசார வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குக் கடினமான சூழல் நிலவுகிறது. செப்டம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவின் குறிப்…

  19. 03 JAN, 2025 | 11:01 AM சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி விளம்பரங்கள் தொடர்பில் மிகவும் கவனமாக இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பல்வேறு பொருட்கள் அதிக சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி விளம்பரங்களில் உள்ள இணைப்புகளுக்குள் நுழைவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். இவ்வாறான போலி விளம்பரங்களில் உள்ள இணைப்புகளுக்குள் நுழைவது மிகவும் ஆபத்தானது எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/202853

  20. இந்தியா சோலார் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்! திருகோணமலை முத்து நகர் விவசாயக் காணிகளை இந்திய சோலார் திட்டத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது குறித்த முத்து நகர் கிராமத்தில் பல வருட காலமாக தாம் இரு போக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாய காணிகளும் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் குறித்த காணிகளை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான காணி என வர்த்தமாணியின் அடிப்படையில் கையகப்படுத்திய அரச இயந்திரம் தற்போது அதனை இந்தியா சோலார் திட்டத்திற்கு வளங்க திட்டமிட்டிருப்பதாக அறியக்கிடைத்திருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட…

  21. அநுராதபுரம்(anuradhapura) கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் கணித பாட அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வகையில் நடத்த உத்தேசிக்கப்பட்ட கணித பாட முகாமை நடத்தாமல் போலியானஆவணங்களை சமர்ப்பித்து 600,000 ரூபாவிற்கும் அதிகமான தொகையை முறைகேடாக பயன்படுத்திய அனுராதபுரம் பிராந்திய பெண் கல்வி பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக வடமத்திய மாகாண பிரதம செயலாளர் வருண சமரதிவாகர ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பித்துள்ளார். இதனடிப்படையில், அனுராதபுரம் பிராந்தியக் கல்விப் பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக வடமத்திய மாகாண பிரதம செயலாளர் வருண சமரதிவாகரவினால் NCP/CS/ED/15/111/2/40 என்ற கடிதத்துடன் ஐந்து குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை16.07.2024.அன்று தாக்கல் செய்ய…

  22. அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான கல்வித் தவணைகள் மற்றும் 2024 க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான கல்வி அமைச்சின் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் கல்வித் தவணைகள் ஒழுங்காக நடத்தப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை 2025 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் நடத்தக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதே சமயம், 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2025 ஆம் ஆண்டு அக்டோபர்/நவம்பர் மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள மற்றும் தமிழ் பாடசாலை கல்வ…

    • 0 replies
    • 337 views
  23. 78,375 வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் ஸார்ப் நிறுவனத்தினால் எழுபத்தெட்டாயிரத்து முன்னூற்று எழுபத்தைந்து (78375) அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்றதை தொடர்ந்து மக்களின் மீள்குடியேற்றம், விவசாய நடவடிக்கைகள், உட்கட்டுமான நடவடிக்கைகள் என்பவற்றை துரிதப்படுத்தும் வகையில் பல்வேறு தொண்டு நிறுவனங்களால் சர்வதேச நாடுகளின் நிதியுதவியுடன் உள்ளூர் பணியாளர்களை கொண்டு வெடி பொருட்களை அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் க…

    • 0 replies
    • 203 views
  24. திருகோணமலையில் இலங்கை அரச படையினரால் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 19 வருடங்கள் கடந்துள்ளபோதும் இதுவரையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  25. சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, போலியான முறையில் ஆவணங்களை தயாரித்து, மோட்டார் திணைக்களத்தின் ஊடாக போலி இலக்கங்களுடன் பதிவு செய்யப்பட்டு பயன்படுத்திய வாகனங்கள் மூன்று கைப்பற்றப்பட்டுள்ளன. பின்வத்த பொலிஸ் பிரிவில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலுக்கு அமைய வலான மோசடி தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அந்த அதிகாரிகள் குழு 2024 டிசெம்பர் 31ஆம் திகதியன்று இராணுவம் பயன்படுத்தும் வாகனத்தை போன்ற Mitsubishi வாகனத்தை தமது பொறுப்பின் கீழ் கொண்டு வந்தனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பிரகாரம், Land Rover ஜீப் வாகனங்கள் இரண்டு, ரத்மலானை பிரதேசத்தில் வைத்து 2025.01.01 அன்று பொலிஸா…

    • 0 replies
    • 151 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.