ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
வெளிநாட்டிலிருந்து வந்தவரிடம் கப்பம் கோரிய நான்காவது சந்தேகநபரும் கைது வீட்டில் வாளும் மீட்பு வெளிநாட்டிலிருந்து தாயகம் வந்திருந்தவரிடம் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நான்காவது சந்தேக நபர் நாகர்கோவில் கிழக்கில் அவரது வீட் டில் வைத்துக் கைது செய்யப்பட்டார் எனப் பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். அவர் கைது செய்யப்படும்போது அவருடைய வீட்டிலிருந்து வாளும் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர். வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரிடம், நாகர்கோவிலைச் சேர்ந்த 4 பேர் கப்பம் கோரியதாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. மார்ச் மாதம் 29 ஆம…
-
- 17 replies
- 876 views
-
-
பயன்படுத்த முடியாத நிலையில் துப்பாக்கிகள் மீட்பு கிளிநொச்சி முகமாலை பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையில் 82 ரி 56 ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. முகமாலை பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருக்கும் டாஸ் நிறுவனத்தினரால் நேற்று புதன்கிழமை இவை கண்டுப்பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. பரல் ஒன்றினுள் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் முழுமையாக காணப்படவில்லை என்பதுடன் குறித்த துப்பாக்கிகள் அனைத்தும் பளை பொலிஸாரிடம் குறித்த நிறுவனத்தால் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tags http://www.virakesari.lk/article/19173
-
- 1 reply
- 299 views
-
-
வைத்தியர் வீட்டின் மீது குண்டு தாக்குதல் ; யாழில் சம்பவம் யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் வைத்தியரொருவரின் வீடொன்றின் மீது நேற்றிரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த குண்டுத் தாக்குதலில் சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியரின் தந்தைக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த சிலரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/19201
-
- 0 replies
- 282 views
-
-
புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்! கௌதம புத்தரின் பிறந்தநாளான ‘வேசக்’ தினத்தை முன்னிட்டு, மே மாதம் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஐ.நா சபையின் சர்வதேச மாநாடு இலங்கையில் நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக இலங்கையின் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷ் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள புத்த மதத்தினர், கௌதம புத்தர் பிறந்தநாளை ‘வேசக்’ என்ற புனிதநாளாகக் கொண்டாடிவருகின்றனர். இலங்கையில் வேசக் தினத்துக்கு பாரம்பர்ய விடுமுறை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு வேசக் தினத்தையொட்டி, சர்வதேச மாநாடு நடத்த ஐ.நா சபை முடிவுசெய்துள்ளது. இலங்கையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில், 100-க…
-
- 2 replies
- 358 views
-
-
காணிகளை விடுவிப்பது தொடர்பில் இராணுவத்துடன் பேசுவதில் அர்த்தமில்லை முல்லைத்தீவு கலந்துரையாடலின் பின்னர் சுமந்திரன் அதிருப்தி (கே.குமணன்) கேப்பாப்புலவு மக்களின் பூர்வீக நிலங்களை விடுவிப்பது தொடர்பில் இராணுவ தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தப்பயனும் இல்லை. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து காணிகளை விடுவிக்க முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் எம்.எ. சுமந்திரன் தெரிவித்தார். மக்கள் மாற்றுக் காணிகளை எடுக்கப்போவதில்லை என்பதை உறுதியாக தெரிவித்து வருகின்றனர். ஆகவே அதே நிலைப்பாட்டில் இருந்து மக்களின் சொந்த நிலங்…
-
- 4 replies
- 349 views
-
-
அறிமுகமாகிறது இணையத்தின் மூலம் கடவுசீட்டு பெறும் வசதி..! இணையத்தின் மூலம் விண்ணப்பித்து கடவுச் சீட்டுக்களை பெறும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, குடிவரவு குடியகல்வு திணைக்களம் செயற்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், இணையவழி விண்ணப்ப சமர்ப்பிப்புகளை மேற்கொண்டு கடவுசீட்டுகளை பெறுவதற்கான நடவடிக்கையாக இணையத்தின் மூலம் கடவுசீட்டு பெறும் திட்டம் நடைமுறை படுத்தப்படவுள்ளது. மேலும் குறித்த திட்டத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும், திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக கடவுச் சீட்டுக்களை புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களை இணையத்தின் மூலம் அன…
-
- 0 replies
- 260 views
-
-
மரணங்களுக்கு பொறுப்பேற்கிறோம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜூன் மாதத்தில் வீடுகள் என்கிறார் பிரதமர் (எம்.சி.நஜிமுதீன்) மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட மரணங்களுக்கு பொறுப்புக்கூற நாம் கடமைப்பட்டுள்ளோம். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதமளவில் புதிய வீடுகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம் என்று பிர தமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொலன்னாவ மீதொட்டமுல்லவில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை நேற்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர்…
-
- 0 replies
- 169 views
-
-
111 ஏக்கரையும் ஒரு வீதியையும் விடுவிப்பதற்கு படை இணக்கம் ஆயினும் திகதி குறித்து இன்னும் முடிவு இல்லை கேப்பாபிலவில் 67 குடும்பங் களுக்குச் சொந்தமான 111 ஏக் கர் காணியையும், வற்றாப் பளை–புதுக்குடியிருப்பு முதன்மை வீதியை யும் விடுவிப்பதற்குப் பாதுகாப்புத் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். மக்கள் அடர்த்தியாக வாழ்ந்த பகுதியில் பாதுகாப்புத் தரப்பின் முக்கிய கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் விடுவிப்புத் தொடர்பில் அடுத்த மட்டத்தில் – அரச தலைவர் – தலைமை அமைச்சர் மட்டத்தில் பேசவேண்டியுள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். …
-
- 0 replies
- 197 views
-
-
ராணுவம் சொகுசு வாழ்வு காணி விடுவிப்பு சந்தேகம் : கேப்பாபிலவுக் காணிகளை நேரில் பார்வையிட்ட பின் மக்கள் தெரிவிப்பு எங்கள் காணிகளில் இராணுவத்தினர் சொகுசாக இருக்கின்றனர். காணிகளை விடுவிப்பார் கள் என்பதில் நம்பிக்கை குறைவாகவே உள்ளது. இன்று காணி களை விடுவிப்பார்கள் என்றே எதிர்பார்த்தோம். ஏமாற்றமாக இருக்கின்றது. போராடாமல் இருந்திருந்தால் ஜென்மத்துக்கும் காணிக்குள்ளே சென்றிருக்கவே முடியாது. கேப்பாபிலவு இராணுவ முகாம் காணிகளைப் பார்வையிட்ட பின்னர் மக்கள் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தனர்.அவர்கள் மேலும் தெரிவித்ததாவது, எங்களது காணிகள் அடையாளம் காண முடியாதவாறு இராணுவத்த…
-
- 0 replies
- 165 views
-
-
பிரித்தானிய அமைச்சர் இலங்கைக்கான பயணத்தை ரத்து செய்துள்ளார் பிரித்தானிய அமைமச்சர் அலோக் சர்மா இலங்கைக்கான பயணத்தை ரத்து செய்துள்ளார். அலோக் சர்மா இந்த வாரம் இலங்கைக்கு பயணம் செய்ய உத்தேசித்திருந்தார். எனினும் ஜூன் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து இவ்வாறு இலங்கை பயணத்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் பல முக்கிய பிரதிநிதிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/24449
-
- 1 reply
- 248 views
-
-
-
- 0 replies
- 417 views
-
-
நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் அழித்து வருகின்றது-ஜனநாயக போராளிகள் கட்சி (காணொளி) அனு 7 hours ago காணொளி, தமிழீழம், முக்கிய செய்திகள் 24 Views மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களின் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது. மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில், தியாக தீபம் அன்னை பூபதியின் 29 வது வருட நினைவு நிகழ்வை, மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ள மதுபானை, கல்குடாவில் அமைக்கப்படவுள்ள மதுபான தொழில்சாலை, தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கான தமிழ்…
-
- 0 replies
- 300 views
-
-
வெற்றிடமோ 308 இடங்கள் விண்ணப்பித்தோரோ 294 பேர் கணித,விஞ்ஞான பாட ஆசிரியர் பதவிகளுக்கே இந்த நிலை வடக்கு மாகாணத்தில் கணித, விஞ்ஞான பாடங்களுக்கு 308 வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில், 294 பேரே இதற்கு விண்ணப்பித்துள்ளனர். இதனால் போட்டிப் பரீட்சை நடத்தாது, நேர்முகத் தேர்வை நேரடியாக நடத்தி நியமனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாணப் பாடசாலைகளில் காணப்படுகின்ற கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களுக்குரிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக, பட்டதாரிகளிடமிருந்து மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழுவினால் விண்ணப்பங…
-
- 3 replies
- 551 views
-
-
அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்வொன்றில் இலங்கையின் பிரபல சிங்கள பாடகர் சுனில் பெரேரா கலந்து கொண்டார். அமெரிக்காவின் ஹுஸ்டன் பகுதியில் கடந்த ஞாயிற்கு கிழமை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுனில் பெரேரா வெளியிட்ட கருத்தினால் குழப்பமான நிலை ஒன்று ஏற்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையின் அரசியல் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியதுடன், அவரை தாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் பௌத்த மதத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையை நீக்க வேண்டும். இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தமிழர் அல்லது முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 6 replies
- 833 views
-
-
இந்தியா மீதான குற்றச்சாட்டு – நழுவுகிறார் மகிந்த அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைந்ததற்கு, இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’வே காரணம் என்று குற்றம்சாட்டி வந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, தற்போது அந்த நிலைப்பாட்டில் இருந்து நழுவத் தொடங்கியுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு மகிந்த ராஜபக்ச செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார். அதில், “2015 தேர்தலில் உங்களின் தோல்விக்கு, இந்தியாவே குறிப்பாக, ‘றோ’ அமைப்பே காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தீர்கள். எப்படி இருக்கிறது?” என்று மகிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், சிரித்துக் கொண்டே, “உங்களுக்குத் தெரியும், நான் கடந்த காலத்துக்குள் செல்வதற்கு விரும்பவ…
-
- 3 replies
- 499 views
-
-
எங்கள் மக்களின் காணியை எவருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது! சம்பந்தன் – குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்:- போர் முடிந்துவிட்டது, விடுதலைப் புலிகளும் தற்போது இல்லை. இந்த நிலையில் எங்கள் மக்களுடைய காணிகளை எவருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது என்று எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். காணிப் பிரச்சினை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத் தளபதி, படைத்தளபதிகள், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு, கொழும்பில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித…
-
- 27 replies
- 1.3k views
-
-
'ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்பிக்கப்படும்' -எஸ்.நிதர்ஸன் “இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் படையினருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய, வட - கிழக்கு மாகாணங்களில், மக்களின் காணிகளில் அமைந்துள்ள படைமுகாம்களுக்கு காணி உரிமையாளர்களுடன் சென்று பேச்சுவார்த்தை நடத்தி ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்பிக்கப்படும்” என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அலுவலகத்தில், புதுவருடத்தை ஒட்டி சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றது. இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த நாடாளு…
-
- 1 reply
- 299 views
-
-
நூல் விநியோகம் இடைநிறுத்தம் -எஸ்.என்.நிபோஜன் "கரை எழில்" நூலில் எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சர்ச்கைக்குரிய கருத்தின் காரணமாக, அந்நூல் விநியோகம் இடைநிறுத்தப்பட்டதாக, கரைச்சி கலாசார பேரவை தெரிவித்துள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தினால், வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகின்ற கலாசார நிகழ்வில், 'கரை எழில்' எனும் நூலும் வெளியிடப்படுவது வழமை. ஒவ்வொரு வருடமும் பல்வேறு ஆக்கங்களுடன் வெளியிடப்படுகின்ற கரை எழில் நூலில், 'கிளிநொச்சியும் மலையக தமிழர்களும்' எனும் தலைப்பில், எழுத்தாளர் ஒருவரின் கட்டுரையும் வெளிவந்திருந்தது. குறித்த…
-
- 2 replies
- 593 views
-
-
கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது யாழ்ப்பாணம், சாவகச்சேரி குடாரிப்பு பகுதியில் ஒரு தொகை கேரள கஞ்சாவை கடத்த முயன்ற நபரொருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இலங்கை கடற்படைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குநித்த நபர் 6.265 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் கடத்தும் போது கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபரையும் மோட்டார் சைக்கிள் மற்றும் கேரள கஞ்சாவையும் மேலதிக விசாரணைக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். http://www.virakesari.lk/article/19154
-
- 0 replies
- 348 views
-
-
எங்கள் தெருவெங்கும் அன்னை பூபதிகள்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஈழத்தில் அன்னையர்களின் போராட்டத்திற்கு தனித்துவமான இடமுண்டு. தாய்மை உலகில் உன்னதமான உணர்வு. மனிதர்கள் மாத்திரமின்றி அனைத்து உயிரினங்களிலும் தாய்மை மிகவும் உன்னதமானதாக கருதப்படுகிறது. விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களிலும் தாய்மையின் மகத்துவத்தை உணரலாம். ஈழத்து அன்னையர்களின் வாழ்வு துயரத்தில் தோய்ந்தது. இன்றைக்கு ஈழமெங்கும் அன்னையர்கள் தவித்து வாழும் ஒரு வாழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக, அவர்களின் விடுதலைக்காக, நீதிக்காக ஈழத்தில் அன்னையர்கள் தெருவில் வாழும் ஒரு போராட்டத்திற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 564 views
-
-
அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது தமிழர் தாயகப்பகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய படையினரை வெளியேறக்கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் குருந்த மர நிழலில் ஒருமாத காலமாக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம் இன்று புதன்கிழமை பகல் 9-30மணிக்கு கிளிநொச்சில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றுள்ளது வட மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை ப.அரியரத்தினம் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர். தமிழ் மக்கள் தமது விடுதலைப்போராட்டத்தில்…
-
- 0 replies
- 469 views
-
-
குப்பை மேடு சரிவு : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு கொலன்னாவை, மீதோட்டமுல்லை குப்பைமேடு சரிந்ததில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த அனர்த்தத்தால் 145 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 180 குடும்பங்களைச் சேர்ந்த 625 பேர் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். மீட்புப்பணியில் இராணுவத்தினர், விமானப்படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடையலாம் என தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/19056
-
- 18 replies
- 2.7k views
-
-
மக்களின் பிரச்சினைகளில் அக்கறையற்ற அரசியல்வாதிகள் ஓரங்கட்டப்பட வேண்டும்: வியாழேந்திரன் I மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தேடிக் கொடுக்க திராணியற்றிருக்கும் அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலில் ஓரங்கட்டப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியில் நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கிலே உள்ள சில அரசியல் தலைமைத்துவங்களின் அரசியல் சுயநலப் போக்கு காரணமாக மக்களின் காணிகளை இழக்க வேண்டியேற்பட்டுள்ளது. முன்…
-
- 0 replies
- 229 views
-
-
காணாமல்போனோர் அலுவலகம் குறித்த சட்டம் தொடர்பில் ஜனாதிபதி விரைவில் முடிவெடுப்பார் – கருணாசேன ஹெட்டியாராச்சி காணாமல்போனோர் அலுவலகத்தை அமைப்பது குறித்த சட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் முடிவெடுப்பார் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். காணாமல்போனோர் அலுவலகத்தை உருவாக்கும் சட்டம் கடந்த வருடம் இறுதிப் பகுதியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் தொடர்பில், பாதுகாப்புத் தரப்பினர் ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தனர். இது தொடர்பில் தமக்குள்ள ஆட்சேபனைகள் குறித்து 15 பக்கங்களடங்கிய ஆவணத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகவும் அதற்கு விர…
-
- 0 replies
- 153 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகம் சிறிலங்காவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் – ஜப்பான் வலியுறுத்தல் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பயன்பாடு, திறந்த மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டியதும், சிறிலங்கா அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியதும், சிறிலங்காவின் நிலையான அபிவிருத்திக்கு முக்கியமானது என்று சிறிலங்கா- ஜப்பானிய பிரதமர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டணிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 12ஆம் நாள் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயை ரோக்கியோவில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். ஜப்பானியப் பயணத்தை முடித்துக் கொண்டு, சிறிலங்கா பிரதமர் கடந்த ஞாயிற்றுக…
-
- 0 replies
- 163 views
-