ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
கொடும்பாவி எரிப்பு தவறு: அடைக்கலநாதன் க.அகரன் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டமை மனவருத்தத்தை தருகின்றது என்று தெரிவித்துள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்களால், வட மாகாணத்தின் பல இடங்களிலும் வட மாகாண அமைச்சர் டெனிஸ்வரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டமை தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'கருத்துக்களை கருத்துக்களால் பேசி தீர்த்துக்கொள்ள சந்தர்ப்பங்களை ஏ…
-
- 0 replies
- 375 views
-
-
வலிவடக்கு ஊறணியில் 500மீற்றர் நீளமான கரையோரப்பகுதி மக்களிடம் கையளிப்பு யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த ஊறணி பகுதியில் அண்மையில் மக்களிடம் வழங்கப்பட்ட கரையோரப் பகுதியில் மேலும் 500 மீற்றர் நீளமான கரையோரப்பகுதி நேற்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த தை மாதம் 14ம் திகதி ஊறணி பகுதியில் கரையோரமான 2 கிலோ மீற்றர் நீளமான பகுதியும், தரையில் 2 ஏக்கர் நிலமும் மக்களுடைய கோரிக்கைக்கு இணங்க மக்களிடம் மீள கையளிக்கப்பட்டிருந்தது. மேற்படி ஊறணி பகுதியில் கடந்த வருடம் இறுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டபோதும், மக்களுடைய அடிப்படை வாழ்வாதா ரத்திற்கான கடற்றொழிலை செய்வதற்கான கடற்பகுதி வி…
-
- 0 replies
- 357 views
-
-
வடமாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா? நிலாந்தன்:- ‘பன்னாட்டு சட்ட நிபுணர்களையும் நீதிபதிகளையும் வரவழைத்து வட மாகாண சபையே போர்க்குற்ற விசாரணையை நடாத்த முடியுமா? என்று ஆராயுங்கள். சட்ட ஏற்பாடுகள் அதற்கு இடம் கொடுக்குமா? என்பதைக் கண்டறியுங்கள். எமது மக்கள் நீதி பெற வேண்டுமானால் இதுவே ஒரே வழி’ இவ்வாறு கூறியிருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன். மன்னார் வட்டக்கண்டல் படுகொலை நினைவு நிகழ்வில் கடந்த திங்கட்கிழமை உரையாற்றிய பொழுது அவர் மேற்கண்டவாறு கூறி இருக்கிறார். 32 ஆண்டுகளுக்கு முன் மன்னாரில் வட்டக்கண்டலில் 76 பொதுமக்கள் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். வடமாகாண சபையானது இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றிய …
-
- 0 replies
- 743 views
-
-
யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட உள்ளது யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தை சுற்றி மனித சங்கிலிப் போராட்டமொன்று நடத்தப்படும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவ நோக்கங்களுக்காக யாழ்ப்பாணத்தின் அதிகளவு காணிகள் மீட்கப்படுவதற்கு இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் வட மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடக்கில் காண…
-
- 0 replies
- 243 views
-
-
"புலிகள் மட்டுமே சுதந்திரமாக உள்ளனர்" : பந்துல எம்.பி (க.கமலநாதன்) நாட்டில் சுதந்திரம் நிலைக்க முன்னோடியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் விரட்டி அடிக்கபடுவதால் நாட்டில் சுதந்திரம் நிலைக்கின்றது என்று கூற முடியாது. எனவே இன்று நாட்டின் உண்மையான மற்றும் நிலையான சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டவர்களை விடுத்து புலிகளின் சுதந்திரத்திற்காக மாத்திரமே நல்லாட்சி அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கின்றதென கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்துள குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்ய கொழும்பு வெலிகடை புதிய …
-
- 0 replies
- 265 views
-
-
மசாஜ் நிலையத்தை அகற்றுமாறு கோரி சுதந்திர தினத்தில் வவுனியாவில் கறுப்புக் கொடி மசாஜ் நிலையத்தை அகற்றுமாறு கோரி வவுனியா தேக்கவத்தை ஏ-9 வீதியின் இரு பகுதியிலும் சுதந்திரதினத்தில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் பெரும்பான்மையின மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் தேக்கவத்தை தெவட்ட செவன என்னும் பெயரில் மசாஜ் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இதனை அகற்றுமாறு பொலிசார் உள்ளிட்ட பல தரப்பிடமும் அப்பகுதி மக்கள் தெரிவித்த போதும் இதுவரை எந்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையிலேயே சுதந்திர தினம் இன்று நாடு பூராகவும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் வவுனியாவில் கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பு …
-
- 1 reply
- 409 views
-
-
தகவல் அறியும் சட்டம் அரசாங்கத்தினால் நடைமுறைக்கு கொண்டு வந்த சில மணித்தியாலங்களே கடந்த நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் செய்தி சேகரிக்க வவுனியா பிராந்திய ஊடகவியலாளருக்கு வவுனியா அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார இன்று தடை விதித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரச அதிபர் தலைமையின் கீழ் இ.போ.சபையினர், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர், வவுனியா வர்த்தக சங்கத்தினர், மக்கள் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இடம்பெறுள்ளது. இ.போ.சபை ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் மற்றும் வவுனியா புதிய பேருந்து நிலைய பிரச்சினை தொடர்பில் இதில் ஆராயப்பட்டன. இதன்போது கூட்டம் ஆரம்பிப்பதற்கு 5 நிமிடங்கள் முன்னதாக செய்தி சேகரிக்க அனும…
-
- 0 replies
- 347 views
-
-
இரணைமடுக் குளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் ஒரு திட்டம் முன்பு தயாரிக்கப்பட்ட போதும் பல்வேறு காரணங்களால் அத்திட்டம் முழுமை பெறவில்லை. அதன் காரணமாக பூநகரிப் பிரதேசத்திற்கான குடிநீர் விநியோகம் தற்காலிகமாக தடைப்பட்டிருந்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பூநகரி பிரதேச வைத்தியசாலையில் இன்று குடிநீர் சுத்திகரிப்பு செயற்திட்டத்தை ஆரம்பித்து வைத்த பின் உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், பூநகரி பிரதேச வைத்தியசாலையின் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக குடிநீர் தினமும் தண்ணீர்பௌசர்கள் மூலமாக கொண்டு வந்து நிரப்பப்டுகின்ற போதும் பௌசர்கள் வரமுடியாத நாட்களில் இவ்வைத்தியசாலையில் குடிநீர…
-
- 1 reply
- 419 views
-
-
சுமந்திரனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம் அரசாங்கம் கூறுகிறது (ரொபட் அன்டனி) தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்குத் தேவையான மற்றும் போதுமான பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ண தெரிவித்தார். கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு அச்சுறுத் தல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலைமை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வினவியபோதே அமைச்சர் ராஜித சேனாரட்ண மேற…
-
- 5 replies
- 634 views
- 1 follower
-
-
யாழில் 17 ஆயுதக்குழுக்களாம் யாழ், குடா நாட்டில் வாள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டுள்ள 17 குழுக்கள் இயங்கி வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழுக்களின் பெரும்பாலான குழுக்கள் வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டிருப்பது முக்கிய அம்சம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழில் இயங்கும் இந்த குழுக்கள் கடந்த சில வருடங்களில் குடாநாட்டில் 127 வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளன. கூலிப்படையாக செயற்படும் இந்த குழுக்கள் பணத்தை பெற்றுக்கொண்டு பலரை வெட்டி காயப்படுத்தியுள்ளனர். கொலை, வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை தாக்…
-
- 5 replies
- 668 views
-
-
கேப்பாப்புலவு மக்களின் மண்மீட்பு போராட்டம் தொடர்கிறது ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி (கே.குமணன்,கண்டாவளை நிருபர்) முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி விமானப்படை முகாமின் முன்பாக கொட்டும் பனியிரவையும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று நான்காவது நாளாகவும் இடம்பெற்றது. கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு கிராமத்தில் 84 குடும்பங்களுக்கு சொந்தமான 40 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை கையகப்படுத்தி விமானப்படைத்தளம் அமை…
-
- 5 replies
- 802 views
-
-
இலங்கையின் எந்தப் பகுதியிலும் இராணுவ முகாம்களை அமைக்க சீனாவிற்கு அனுமதியில்லை: இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் இராணுவ முகாம்களை அமைப்பதற்கு சீனாவிற்கு அனுமதி வழக்கப்பட மாட்டாது என சீனாவிற்கான இலங்கைத் தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். எந்தவொரு பகுதியும் இராணுவ நோக்கங்களுக்காக வழங்கப்படாது எனவும், அண்டை நாடுகள் பற்றி கவனம் செலுத்தியே தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் சீன முதலீட்டாளர்களுக்கு அறிவித்துள்ளார். அண்டை நாடுகள் சந்தேகத்திற்கோ பதற்றத்திற்கோ உள்ளாகும் வகையிலான சூழ்நிலையை உருவாக்கப் போவதில்லை எனத் தெரிவித்த அவர், இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து செயற்பட உள்ளதாகவும், ஹம்பாந்தோட்ட…
-
- 1 reply
- 367 views
-
-
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் பிரதி இராஜாங்க செயலாளர் அஞ்செலா அக்லெர் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வமான விஜயத்தினை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை காலமும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளராக நிஷா பிஷ்வால் பதவி வகித்து வந்திருந்தார். இவரது இராஜினாமாவினை தொடர்ந்து, அஞ்செலா அக்லெர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இலங்கைக்கு வந்துள்ள அஞ்செலா அக்லெர் வெள்ளிக்கிழமை வரைக்கும் தங்கியிருந்து அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பினை நடத்தவுள்ளார். அத்துடன் இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ர…
-
- 3 replies
- 776 views
-
-
மெல்ல கொல்லும்.....? ஆர். ராம் "முகாமில இருந்த பொடியங்களை தனித்தனியே ஆமி கூட்டிக்கொண்டு போய் கதைப்பினம். புலிகளைப்பற்றி கேப்பினம். அவையளுக்காக சி.ஐ.டி. வேலை பாக்கிறதுக்கு கேப்பினம் " பல நேரங்களிலையும் யோசிச்சன். ஆனால் என்னால ஊகிச்சுக்கொள்ளவே முடியல. கொஞ்சம் பாரம் தூக்கி நடக்கக் கூட முடியாது. பாரங்கள் ஏதும் தூக்கினால் கால் நிலையாய் நிக்காது. ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. என்ட நிலைமை இப்பிடி இருக்கு எண்ட நினைச்சுக்கொண்டே தொடர்ந்தும் இருப்பன். இப்படியே ஒன்றிரண்டு வருசம் போனாப்பிறகு எனக்கு பொழுதுபடுகிற நேரத்தில கண்பார்வையும் குறைஞ்சுகொண்டு போய்யிட்டுது. அதோட பகல் மு…
-
- 9 replies
- 1.5k views
-
-
முல்லைத்தீவில் பூரண கடையடைப்பு… முல்லைத்தீவு, கேப்பாப்புலவு - பிலவுக்குடியிருப்பு கிராம மக்கள், அவர்களது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஐந்தாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களுக்கு ஆதரவளிக்கும் முகமாக, முல்லைத்தீவு மாவட்டம் தழுவிய ரீதியில், முல்லைத்தீவு நகரம், புதுக்குடியிருப்பு நகரம் மற்றும் முள்ளியவளை தண்ணீரூற்று ஆகிய நகரில் கடைகள் அடைக்கப்பட்டு, பூரணகரத்தல் இன்று (04) அனுஷ்டிக்கப்பட்டது. (படப்பிடிப்பு: சண்முகம் தவசீலன் ) - See more at: http://www.tamilmirror.lk…
-
- 0 replies
- 502 views
-
-
இலங்கை சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது லண்டனில், தமிழர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையின் சுதந்திர தினத்தை அனைத்து இலங்கையரும் கொண்டாட வரும்படி லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று லண்டன் தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராணுவமே வடக்கை விட்டு வெளியேறு , அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரியும், இலங்கையின் சுதந்திரதின நிகழ்வானது தமிழர்களுக்கான சுதந்திரமல்ல என விடுதலைப்புலிகளின் கொடியினை ஏந்தியவாறு போராட்டம் இடம்பெற்று வருகின்றது. ஒடுக்கப்படும் மக்களாகிய எங்களுக்கு இந்த நாள் கொண்டாடும்…
-
- 0 replies
- 367 views
-
-
ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்காக.....: பிரென்சு பாராளுமன்ற வளாக்கில் இடம்பெற்றிருந்த அனைத்துலக சட்டங்களுக்கு அமைய ஈழத்தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையினை வென்றடைவது தொடர்பான கருத்தரங்கின் பதிவுகள்
-
- 1 reply
- 381 views
-
-
‘யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டத்திற்காக’ 2010ல் ஆசிய அபிவிருத்தி வங்கியால் 130 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் வசதி மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்திற்கான உள்ளுர்ச் செலவுகளுக்கான 26 மில்லியன் டொலர் நிதியானது சிறிலங்கா அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியிருந்தது. யாழ்ப்பாண நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் வாழும் 300,000 மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வசதியை வழங்குதலும் யாழ்ப்பாண நகரைச் சேர்ந்த 80,000 மக்களுக்கு சுகாதார வசதியை வழங்குவதையும் நோக்காகக் கொண்டே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான மூல நீரானது கிளிநொச்சி இரணைமடுக் குளத்திலிருந்து பெற்றுக்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இரணைமடுக் குளத்தின் …
-
- 1 reply
- 886 views
-
-
எம் மக்கள் கஸ்ரப்பட்டுக்கொண்டிருக்கும் போது எங்களுக்கு என்ன சுதந்திரம் – வடக்கு முதலமைச்சா் நான் இன்று( 04-02-2017) நல்ல பணிகளையே செய்துகொண்டிருக்கிறன், தற்போது கேப்பாபிலவில் கஸ்ரப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களை காணச் செல்கின்றேன், ஆகவே மக்கள் கஸ்ரப்பட்டுக்கொண்டிருக்கும் போது எங்களுக்கு என்ன சுதந்திரம், எனவே நான் கலந்துகொள்ளாதன் விசயம் அதுதான் என வடக்கு மாகாண முதலமைச்சா் க.வி விக்கினேஸ்வரன் அவா்கள் தெரிவித்துள்ளாா். இன்று 04-02-2017 கிளிநொச்சி பூநகரி வைத்தியசாலையில் சத்தியசாயிபாபா அமைப்பினரால் வைத்தியசாலைக்கும்,பொது மக்களுக்குமாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததன் பி…
-
- 0 replies
- 744 views
-
-
யாழ். மாவட்ட செயலகத்துக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்) எம்.றொசாந்த் இலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ். மாவட்டச் செயலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டபோது, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மாவட்டச் செயலகத்துக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பதில் கூற வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், தொடர்ந்தும் காணிகள் ஆக்கிரமிப்பது நிறுத்தப்பட வேண்டும், இனப் படுகொலைக்கு நீதி வேண்டும் மற்றும் சர்வதேச விசாரணை மேற்கொள…
-
- 4 replies
- 659 views
-
-
பூமி தினத்தினை முன்னிட்டு வடக்கில் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனைகள் மற்றும் அதன் பயன்பாடுகளுக்கு முற்றாக தடை விதித்து வடக்கு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்தல் விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 82 ஆவது தீர்மானத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் விடயம் தொடர்பில் வடக்கில் உள்ள 5 மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகளால் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டது. இலங்கை அரசு 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 மைக்ரோன் அளவிற்கும் குறைவான தடிப்பை கொண்ட பிளாஸ்டிக் உற்பத்தி விற்பனை மற்றும் பயன்பாடுகளுக்கு தடை விதித்திருந்தது. குறித்த சட்டத்தினை மீறுவோருக்கு எதிராக 10 ஆயிரம் ரூபா அபராதமும் 2 வருடங்களுக்கு குறையாத சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட…
-
- 0 replies
- 461 views
-
-
சிறிலங்காவின் 69 ஆவது சுதந்திர நாள் இன்று கொழும்பில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்ற அதேவேளை, வடக்கில் கறுப்புநாளாகவும், துக்கநாளாகவும் கடைப்பிடிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் நாள், சிறிலங்கா சுதந்திரமடைந்ததை நினைவு கூரும் வகையில் இன்று காலை 8.30 மணியளவில் காலி முகத்திடலில் தேசியக்கொடியேற்றல், மற்றும் இராணுவ அணிவகுப்புகள் என்பன சிறிலங்கா அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளன. சிறிலங்காவின் படைபலத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான படையினர் மற்றும் போர்த்தளபாடங்களைக் காட்சிப்படுத்தும் இராணுவ அணிவகுப்பு இன்றைய சுதந்திர நாள் நிகழ்வில் முக்கிய அம்சமாக இடம்பெறவுள்ளது சிறிலங்காவுக்கு சுதந்திரம் கிடைத்து இன்றுடன் 69 ஆண்டு…
-
- 0 replies
- 368 views
-
-
அரசாங்கம் தப்புக்கணக்கு விரைவில் ஆட்சியை பிடிப்போம் என்கிறது கூட்டு எதிரணி (ரொபட் அன்டனி) கூட்டு எதிரணி விரைவில் ஆட்சியை மக்களின் ஆதரவுடன் பிடித்தே தீரும். யாரும் எதிர்பாராதவகையில் கூட்டு எதிரணிக்கான மக்களின் ஆதரவு பெருகிவருகிறது. மஹிந்த ராஜபக் ஷ இவ்வாறு மீண்டும் அரசியலுக்கு வந்து மக்களின் ஆதரவை அமோக மாக பெறுவார் என அரசாங்கம் கனவிலும் நினைத்திருக்காது. மஹிந்தவின் விடயத்தில் அரசாங்கம் தப்புக்கணக்குப் போட்டுவிட்டது என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலியரம்புக்வெல்ல தெரிவித்தார். கூட்டு எதிரணி தொடர்ந்து மக்களுக்காக அனைத்து ம…
-
- 1 reply
- 375 views
-
-
வவுனியாவில் உண்ணாவிரதம் மேற்கொள்பவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடம் வவுனியாவில் இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பானது இன்றைய தினம் இரண்டாம் நாளாக தொடர்கின்ற உண்ணாவிரத போராட்டத்தில் 13 இ.போ.ச ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இ.போ.ச ஊழியர்கள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு அவர்களின் உடல் நிலையை சோதனையிடுவதற்காக சென்ற வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் இருவரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர். வட மாகாணம் முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்ற நிலையில், இன்றைய தினம் தமத…
-
- 0 replies
- 339 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு எப்பொழுது சுதந்திரம்? -குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் தம்பி இன்றைக்கு பஸ் இல்லையாம். ஸ்ரீலங்கா சுதந்திரதினமாம். தெரியாத்தனமாய் வந்திட்டன். எப்பிடி போறது என்று கேட்டார் மன்னாரிலிருந்து வந்த செல்வி அக்கா. ஓ இன்றைக்கா அந்த கறுப்பு நாள் என்று நினைத்துக் கொண்டேன். நாங்கள் ஸ்ரீலங்கா பிரஜைகள் இல்லை என்பதையும் எங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதையும் இந்தக் காலையின் இயல்பான உரையாடல் உணர்த்தி விட்டுப் போவதாகவே கருதுகிறேன். கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர தினத்தை ஆயுத அடக்குமுறை கொண்டு நிர்பந்தமாக கொண்டாட வைத்தார். இம்முறை வடக்கு கிழக்கில் சுதந்திரதினம் என்பதே பல…
-
- 0 replies
- 592 views
-