Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொடும்பாவி எரிப்பு தவறு: அடைக்கலநாதன் க.அகரன் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டமை மனவருத்தத்தை தருகின்றது என்று தெரிவித்துள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்களால், வட மாகாணத்தின் பல இடங்களிலும் வட மாகாண அமைச்சர் டெனிஸ்வரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டமை தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'கருத்துக்களை கருத்துக்களால் பேசி தீர்த்துக்கொள்ள சந்தர்ப்பங்களை ஏ…

  2. வலிவடக்கு ஊறணியில் 500மீற்றர் நீளமான கரையோரப்பகுதி மக்களிடம் கையளிப்பு யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த ஊறணி பகுதியில் அண்மையில் மக்களிடம் வழங்கப்பட்ட கரையோரப் பகுதியில் மேலும் 500 மீற்றர் நீளமான கரையோரப்பகுதி நேற்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த தை மாதம் 14ம் திகதி ஊறணி பகுதியில் கரையோரமான 2 கிலோ மீற்றர் நீளமான பகுதியும், தரையில் 2 ஏக்கர் நிலமும் மக்களுடைய கோரிக்கைக்கு இணங்க மக்களிடம் மீள கையளிக்கப்பட்டிருந்தது. மேற்படி ஊறணி பகுதியில் கடந்த வருடம் இறுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டபோதும், மக்களுடைய அடிப்படை வாழ்வாதா ரத்திற்கான கடற்றொழிலை செய்வதற்கான கடற்பகுதி வி…

  3. வடமாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா? நிலாந்தன்:- ‘பன்னாட்டு சட்ட நிபுணர்களையும் நீதிபதிகளையும் வரவழைத்து வட மாகாண சபையே போர்க்குற்ற விசாரணையை நடாத்த முடியுமா? என்று ஆராயுங்கள். சட்ட ஏற்பாடுகள் அதற்கு இடம் கொடுக்குமா? என்பதைக் கண்டறியுங்கள். எமது மக்கள் நீதி பெற வேண்டுமானால் இதுவே ஒரே வழி’ இவ்வாறு கூறியிருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன். மன்னார் வட்டக்கண்டல் படுகொலை நினைவு நிகழ்வில் கடந்த திங்கட்கிழமை உரையாற்றிய பொழுது அவர் மேற்கண்டவாறு கூறி இருக்கிறார். 32 ஆண்டுகளுக்கு முன் மன்னாரில் வட்டக்கண்டலில் 76 பொதுமக்கள் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். வடமாகாண சபையானது இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றிய …

  4. யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட உள்ளது யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தை சுற்றி மனித சங்கிலிப் போராட்டமொன்று நடத்தப்படும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவ நோக்கங்களுக்காக யாழ்ப்பாணத்தின் அதிகளவு காணிகள் மீட்கப்படுவதற்கு இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் வட மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடக்கில் காண…

  5. "புலிகள் மட்டுமே சுதந்திரமாக உள்ளனர்" : பந்துல எம்.பி (க.கமலநாதன்) நாட்டில் சுதந்திரம் நிலைக்க முன்னோடியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் விரட்டி அடிக்கபடுவதால் நாட்டில் சுதந்திரம் நிலைக்கின்றது என்று கூற முடியாது. எனவே இன்று நாட்டின் உண்மையான மற்றும் நிலையான சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டவர்களை விடுத்து புலிகளின் சுதந்திரத்திற்காக மாத்திரமே நல்லாட்சி அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கின்றதென கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்துள குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்ய கொழும்பு வெலிகடை புதிய …

  6. மசாஜ் நிலையத்தை அகற்றுமாறு கோரி சுதந்திர தினத்தில் வவுனியாவில் கறுப்புக் கொடி மசாஜ் நிலையத்தை அகற்றுமாறு கோரி வவுனியா தேக்கவத்தை ஏ-9 வீதியின் இரு பகுதியிலும் சுதந்திரதினத்தில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் பெரும்பான்மையின மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் தேக்கவத்தை தெவட்ட செவன என்னும் பெயரில் மசாஜ் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இதனை அகற்றுமாறு பொலிசார் உள்ளிட்ட பல தரப்பிடமும் அப்பகுதி மக்கள் தெரிவித்த போதும் இதுவரை எந்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையிலேயே சுதந்திர தினம் இன்று நாடு பூராகவும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் வவுனியாவில் கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பு …

  7. தகவல் அறியும் சட்டம் அரசாங்கத்தினால் நடைமுறைக்கு கொண்டு வந்த சில மணித்தியாலங்களே கடந்த நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் செய்தி சேகரிக்க வவுனியா பிராந்திய ஊடகவியலாளருக்கு வவுனியா அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார இன்று தடை விதித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரச அதிபர் தலைமையின் கீழ் இ.போ.சபையினர், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர், வவுனியா வர்த்தக சங்கத்தினர், மக்கள் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இடம்பெறுள்ளது. இ.போ.சபை ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் மற்றும் வவுனியா புதிய பேருந்து நிலைய பிரச்சினை தொடர்பில் இதில் ஆராயப்பட்டன. இதன்போது கூட்டம் ஆரம்பிப்பதற்கு 5 நிமிடங்கள் முன்னதாக செய்தி சேகரிக்க அனும…

  8. இரணைமடுக் குளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் ஒரு திட்டம் முன்பு தயாரிக்கப்பட்ட போதும் பல்வேறு காரணங்களால் அத்திட்டம் முழுமை பெறவில்லை. அதன் காரணமாக பூநகரிப் பிரதேசத்திற்கான குடிநீர் விநியோகம் தற்காலிகமாக தடைப்பட்டிருந்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பூநகரி பிரதேச வைத்தியசாலையில் இன்று குடிநீர் சுத்திகரிப்பு செயற்திட்டத்தை ஆரம்பித்து வைத்த பின் உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், பூநகரி பிரதேச வைத்தியசாலையின் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக குடிநீர் தினமும் தண்ணீர்பௌசர்கள் மூலமாக கொண்டு வந்து நிரப்பப்டுகின்ற போதும் பௌசர்கள் வரமுடியாத நாட்களில் இவ்வைத்தியசாலையில் குடிநீர…

  9. சுமந்­தி­ரனின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளோம் அர­சாங்கம் கூறு­கி­றது (ரொபட் அன்­டனி) தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­தி­ரனின் பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவ­ருக்குத் தேவை­யான மற்றும் போது­மான பாது­காப்பை அர­சாங்கம் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது என்று அமைச்­ச­ர­வையின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ண தெரி­வித்தார். கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்திரனின் உயி­ருக்கு அச்­சு­றுத் தல் ஏற்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் நிலைமை தொடர்பில் அர­சாங்­கத்தின் நிலைப்பாட்டை வின­வி­ய­போதே அமைச்சர் ராஜித சேனா­ரட்ண மேற…

  10. யாழில் 17 ஆயுதக்குழுக்களாம் யாழ், குடா நாட்டில் வாள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டுள்ள 17 குழுக்கள் இயங்கி வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழுக்களின் பெரும்பாலான குழுக்கள் வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டிருப்பது முக்கிய அம்சம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழில் இயங்கும் இந்த குழுக்கள் கடந்த சில வருடங்களில் குடாநாட்டில் 127 வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளன. கூலிப்படையாக செயற்படும் இந்த குழுக்கள் பணத்தை பெற்றுக்கொண்டு பலரை வெட்டி காயப்படுத்தியுள்ளனர். கொலை, வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை தாக்…

  11. கேப்பாப்புலவு மக்களின் மண்மீட்பு போராட்டம் தொடர்கிறது ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி (கே.குமணன்,கண்டாவளை நிருபர்) முல்­லைத்­தீவு கேப்­பா­ப்பு­லவு மக்கள் தமது சொந்த நிலத்தை கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள விமா­னப்­ப­டை­யினர் அதனை விடு­விக்­க­வேண்­டு­மெனக்கோரி விமா­னப்­படை முகாமின் முன்­பாக கொட்டும் பனி­யி­ர­வையும் சுட்­டெ­ரிக்கும் வெயி­லையும் பொருட்­ப­டுத்­தாது முன்­னெ­டுத்­துள்ள தொடர் கவ­ன­யீர்ப்புப் போராட்டம் நேற்று நான்காவது நாளாகவும் இடம்பெற்றது. கேப்­பாப்­பு­லவு பிலக்­கு­டி­யி­ருப்பு கிரா­மத்தில் 84 குடும்­பங்­க­ளுக்கு சொந்­த­மான 40 ஏக்­க­ருக்கு மேற்­பட்ட காணி­களை கைய­கப்­ப­டுத்தி விமா­னப்­ப­டைத்­தளம் அமை…

    • 5 replies
    • 802 views
  12. இலங்கையின் எந்தப் பகுதியிலும் இராணுவ முகாம்களை அமைக்க சீனாவிற்கு அனுமதியில்லை: இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் இராணுவ முகாம்களை அமைப்பதற்கு சீனாவிற்கு அனுமதி வழக்கப்பட மாட்டாது என சீனாவிற்கான இலங்கைத் தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். எந்தவொரு பகுதியும் இராணுவ நோக்கங்களுக்காக வழங்கப்படாது எனவும், அண்டை நாடுகள் பற்றி கவனம் செலுத்தியே தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் சீன முதலீட்டாளர்களுக்கு அறிவித்துள்ளார். அண்டை நாடுகள் சந்தேகத்திற்கோ பதற்றத்திற்கோ உள்ளாகும் வகையிலான சூழ்நிலையை உருவாக்கப் போவதில்லை எனத் தெரிவித்த அவர், இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து செயற்பட உள்ளதாகவும், ஹம்பாந்தோட்ட…

  13. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் பிரதி இராஜாங்க செயலாளர் அஞ்செலா அக்லெர் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வமான விஜயத்தினை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை காலமும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளராக நிஷா பிஷ்வால் பதவி வகித்து வந்திருந்தார். இவரது இராஜினாமாவினை தொடர்ந்து, அஞ்செலா அக்லெர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இலங்கைக்கு வந்துள்ள அஞ்செலா அக்லெர் வெள்ளிக்கிழமை வரைக்கும் தங்கியிருந்து அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பினை நடத்தவுள்ளார். அத்துடன் இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ர…

  14. மெல்ல கொல்லும்.....? ஆர். ராம் "முகா­மில இருந்த பொடி­யங்­களை தனித்­த­னியே ஆமி கூட்­டிக்­கொண்டு போய் கதைப்­பினம். புலி­க­ளைப்­பற்றி கேப்­பினம். அவை­ய­ளுக்­காக சி.ஐ.டி. வேலை பாக்­கி­ற­துக்கு கேப்­பினம் " பல நேரங்­க­ளி­லையும் யோசிச்சன். ஆனால் என்­னால ஊகிச்­சுக்­கொள்­ளவே முடி­யல. கொஞ்சம் பாரம் தூக்கி நடக்கக் கூட முடி­யாது. பாரங்கள் ஏதும் தூக்­கினால் கால் நிலையாய் நிக்­காது. ஒரு அடி கூட எடுத்து வைக்க முடி­யாது. என்ட நிலைமை இப்­பிடி இருக்கு எண்ட நினைச்­சுக்­கொண்டே தொடர்ந்தும் இருப்பன். இப்­ப­டியே ஒன்­றி­ரண்டு வருசம் போனாப்­பி­றகு எனக்கு பொழு­து­ப­டு­கிற நேரத்­தில கண்­பார்­வையும் குறைஞ்­சு­கொண்டு போய்­யிட்­டுது. அதோட பகல் மு…

  15.  முல்லைத்தீவில் பூரண கடையடைப்பு… முல்லைத்தீவு, கேப்பாப்புலவு - பிலவுக்குடியிருப்பு கிராம மக்கள், அவர்களது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஐந்தாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களுக்கு ஆதரவளிக்கும் முகமாக, முல்லைத்தீவு மாவட்டம் தழுவிய ரீதியில், முல்லைத்தீவு நகரம், புதுக்குடியிருப்பு நகரம் மற்றும் முள்ளியவளை தண்ணீரூற்று ஆகிய நகரில் கடைகள் அடைக்கப்பட்டு, பூரணகரத்தல் இன்று (04) அனுஷ்டிக்கப்பட்டது. (படப்பிடிப்பு: சண்முகம் தவசீலன் ) - See more at: http://www.tamilmirror.lk…

  16. இலங்கை சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது லண்டனில், தமிழர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையின் சுதந்திர தினத்தை அனைத்து இலங்கையரும் கொண்டாட வரும்படி லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று லண்டன் தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராணுவமே வடக்கை விட்டு வெளியேறு , அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரியும், இலங்கையின் சுதந்திரதின நிகழ்வானது தமிழர்களுக்கான சுதந்திரமல்ல என விடுதலைப்புலிகளின் கொடியினை ஏந்தியவாறு போராட்டம் இடம்பெற்று வருகின்றது. ஒடுக்கப்படும் மக்களாகிய எங்களுக்கு இந்த நாள் கொண்டாடும்…

  17. ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்காக.....: பிரென்சு பாராளுமன்ற வளாக்கில் இடம்பெற்றிருந்த அனைத்துலக சட்டங்களுக்கு அமைய ஈழத்தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையினை வென்றடைவது தொடர்பான கருத்தரங்கின் பதிவுகள்

  18. ‘யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டத்திற்காக’ 2010ல் ஆசிய அபிவிருத்தி வங்கியால் 130 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் வசதி மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்திற்கான உள்ளுர்ச் செலவுகளுக்கான 26 மில்லியன் டொலர் நிதியானது சிறிலங்கா அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியிருந்தது. யாழ்ப்பாண நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் வாழும் 300,000 மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வசதியை வழங்குதலும் யாழ்ப்பாண நகரைச் சேர்ந்த 80,000 மக்களுக்கு சுகாதார வசதியை வழங்குவதையும் நோக்காகக் கொண்டே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான மூல நீரானது கிளிநொச்சி இரணைமடுக் குளத்திலிருந்து பெற்றுக்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இரணைமடுக் குளத்தின் …

  19. எம் மக்கள் கஸ்ரப்பட்டுக்கொண்டிருக்கும் போது எங்களுக்கு என்ன சுதந்திரம் – வடக்கு முதலமைச்சா் நான் இன்று( 04-02-2017) நல்ல பணிகளையே செய்துகொண்டிருக்கிறன், தற்போது கேப்பாபிலவில் கஸ்ரப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களை காணச் செல்கின்றேன், ஆகவே மக்கள் கஸ்ரப்பட்டுக்கொண்டிருக்கும் போது எங்களுக்கு என்ன சுதந்திரம், எனவே நான் கலந்துகொள்ளாதன் விசயம் அதுதான் என வடக்கு மாகாண முதலமைச்சா் க.வி விக்கினேஸ்வரன் அவா்கள் தெரிவித்துள்ளாா். இன்று 04-02-2017 கிளிநொச்சி பூநகரி வைத்தியசாலையில் சத்தியசாயிபாபா அமைப்பினரால் வைத்தியசாலைக்கும்,பொது மக்களுக்குமாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததன் பி…

  20.  யாழ். மாவட்ட செயலகத்துக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்) எம்.றொசாந்த் இலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ். மாவட்டச் செயலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டபோது, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மாவட்டச் செயலகத்துக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பதில் கூற வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், தொடர்ந்தும் காணிகள் ஆக்கிரமிப்பது நிறுத்தப்பட வேண்டும், இனப் படுகொலைக்கு நீதி வேண்டும் மற்றும் சர்வதேச விசாரணை மேற்கொள…

  21. பூமி தினத்தினை முன்னிட்டு வடக்கில் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனைகள் மற்றும் அதன் பயன்பாடுகளுக்கு முற்றாக தடை விதித்து வடக்கு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்தல் விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 82 ஆவது தீர்மானத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் விடயம் தொடர்பில் வடக்கில் உள்ள 5 மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகளால் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டது. இலங்கை அரசு 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 மைக்ரோன் அளவிற்கும் குறைவான தடிப்பை கொண்ட பிளாஸ்டிக் உற்பத்தி விற்பனை மற்றும் பயன்பாடுகளுக்கு தடை விதித்திருந்தது. குறித்த சட்டத்தினை மீறுவோருக்கு எதிராக 10 ஆயிரம் ரூபா அபராதமும் 2 வருடங்களுக்கு குறையாத சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட…

  22. சிறிலங்காவின் 69 ஆவது சுதந்திர நாள் இன்று கொழும்பில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்ற அதேவேளை, வடக்கில் கறுப்புநாளாகவும், துக்கநாளாகவும் கடைப்பிடிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் நாள், சிறிலங்கா சுதந்திரமடைந்ததை நினைவு கூரும் வகையில் இன்று காலை 8.30 மணியளவில் காலி முகத்திடலில் தேசியக்கொடியேற்றல், மற்றும் இராணுவ அணிவகுப்புகள் என்பன சிறிலங்கா அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளன. சிறிலங்காவின் படைபலத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான படையினர் மற்றும் போர்த்தளபாடங்களைக் காட்சிப்படுத்தும் இராணுவ அணிவகுப்பு இன்றைய சுதந்திர நாள் நிகழ்வில் முக்கிய அம்சமாக இடம்பெறவுள்ளது சிறிலங்காவுக்கு சுதந்திரம் கிடைத்து இன்றுடன் 69 ஆண்டு…

  23. அரசாங்கம் தப்புக்கணக்கு விரைவில் ஆட்சியை பிடிப்போம் என்கிறது கூட்டு எதிரணி (ரொபட் அன்­டனி) கூட்டு எதி­ரணி விரைவில் ஆட்­சியை மக்­களின் ஆத­ர­வுடன் பிடித்தே தீரும். யாரும் எதிர்­பா­ரா­த­வ­கையில் கூட்டு எதி­ர­ணிக்­கான மக்­களின் ஆத­ரவு பெரு­கி­வ­ரு­கி­றது. மஹிந்த ராஜ­பக் ஷ இவ்­வாறு மீண்டும் அர­சி­ய­லுக்கு வந்து மக்­களின் ஆத­ரவை அமோ­க மாக பெறுவார் என அர­சாங்கம் கன­விலும் நினைத்­தி­ருக்­காது. மஹிந்­தவின் விட­யத்தில் அர­சாங்கம் தப்­புக்­க­ணக்குப் போட்­டு­விட்­டது என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லி­ய­ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார். கூட்டு எதி­ரணி தொடர்ந்து மக்­க­ளுக்­காக அனைத்து ம…

  24. வவுனியாவில் உண்ணாவிரதம் மேற்கொள்பவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடம் வவுனியாவில் இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பானது இன்றைய தினம் இரண்டாம் நாளாக தொடர்கின்ற உண்ணாவிரத போராட்டத்தில் 13 இ.போ.ச ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இ.போ.ச ஊழியர்கள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு அவர்களின் உடல் நிலையை சோதனையிடுவதற்காக சென்ற வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் இருவரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர். வட மாகாணம் முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்ற நிலையில், இன்றைய தினம் தமத…

  25. ஈழத் தமிழர்களுக்கு எப்பொழுது சுதந்திரம்? -குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் தம்பி இன்றைக்கு பஸ் இல்லையாம். ஸ்ரீலங்கா சுதந்திரதினமாம். தெரியாத்தனமாய் வந்திட்டன். எப்பிடி போறது என்று கேட்டார் மன்னாரிலிருந்து வந்த செல்வி அக்கா. ஓ இன்றைக்கா அந்த கறுப்பு நாள் என்று நினைத்துக் கொண்டேன். நாங்கள் ஸ்ரீலங்கா பிரஜைகள் இல்லை என்பதையும் எங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதையும் இந்தக் காலையின் இயல்பான உரையாடல் உணர்த்தி விட்டுப் போவதாகவே கருதுகிறேன். கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர தினத்தை ஆயுத அடக்குமுறை கொண்டு நிர்பந்தமாக கொண்டாட வைத்தார். இம்முறை வடக்கு கிழக்கில் சுதந்திரதினம் என்பதே பல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.