Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யோகி, புதுவை, பாப்பா, எழிலன், மலரவன் உள்ளிட்ட 41 பேருக்கு என்ன நடந்தது சபையில் சிறிதரன் எம்.பி. கேள்வி; உறவினர்கள் திண்டாடுவதாகவும் தெரிவிப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) யுத்தத்தின் போதும் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்த மற்றும் அசா­தா­ரண சூழலின் போதும் காண­ாமல்­போ­ன­வர்கள் மீண்டும் வரு­வார்கள் என அவர்­க­ளது உற­வி­னர்கள் எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவர்­க­ளுக்கு அர­சாங்கம் வழங்­கப்­போ­கின்ற பதில் என்ன என கேள்வி எழுப்­பிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­தரன் நேற்று சபையில் கேள்வி எழுப்­பினார். இறுதி யுத்­தத்தின் போது இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த தமி­ழீழ விடு­த­லைப்­ப…

  2. மட்டு.மாவட்டத்தில் கடும் மழை : இயல்பு வாழ்க்கை பாதிப்பு.! (ஜவ்பர்கான்) மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது. தொடரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 74.8 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பணிப்பாளர் கே.சூரியகுமார் தெரிவித்தார். அடை மழை காரணமாக பல வீதிகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் தவணைப்பரீட்சைகள் பாடசாலைகளில் ஆரம்பமாகியுள்ளமையால் மழைகாரணமாக மாணவர்களும் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இருப்பினும், நீண்ட இடைவெள…

  3. கட்சியை விட்டு நானாக வெளியேறப் போவதில்லை வடமாகாண எதிா்கட்சிக்தலைவா் தவராசா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி ஈபிடிபி கட்சியை விட்டு நானாக வெளியேறப் போவதில்லை, அத்தோடு வடக்குமாகாண சபையின் எதிா்க் கட்சி தலைவா் பதவியை மாற்றம் செய்யக்கோரி ஜக்கிய மக்கள் சுந்தர முன்ணனியின ் செயலாளருக்கு கடிதம் அனுப்பிய விடயம் தொடா்பிலும் எனக்கு எதுவும் தெரியாது என வடக்கு மாகாண எதிா்க் கட்சி தலைவா் சி.தவராசா தெரிவித்துள்ளாா். வடக்கு மாகாண சபையின் எதிா்க் கட்சி தலைவா் பதவியிலிருந்து தவராசாவை நீக்கி அந்த இடத்திற்கு கிளிநொச்சியின் ஈபிடிபியின் மாகாண சபை உறுப்பினா் வை.தவநாதனை நியமிக்குமாறு கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினரும…

  4. ஆவா குழு சந்­தேகநபர்­க­ளுக்கு புலம்பெயர் புலி உறுப்­பி­னர்­க­ளி­ட­மி­ருந்து நிதி உத­விகள் மன்­றுக்கு அறி­வித்­தது ரி.ஐ.டி; ஆதா­ரங்­களை சமர்ப்­பிக்க நீதிவான் உத்­த­ரவு 11 சந்­தேகநபர்­க­ளுக்கு விளக்­க­ம­றியல்; பேஸ்புக்கில் 'சட்' செய்த இரு­வ­ருக்கு பிணை (எம்.எப்.எம்.பஸீர்) வடக்கில் செயற்­படும் 'ஆவா' குழு­வுக்கு புலம்பெயர் வாழ் முன்னாள் புலி உறுப்­பி­னர்கள் நிதி உதவி அளித்துவரு­வ­தாக பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் நேற்று கொழும்பு நீதிவான் நீதி­மன்­றுக்கு அறி­வித்­த னர். ஆவா குழு சந்­தேக நபர்கள் எனக் கரு­தப்­ப­டுவோர் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைதுசெய்­யப்­பட்­டமை, விசா­ரணை செய்­யப்­ப­டு­கின்­றமை தொடர்பில் மேல­திக நீதிவான் அரு…

  5. இன, மத ரீதியில் பதற்றத்தை ஏற்படுத்த பாரிய சதி முயற்சி நல்லிணக்கத்தையும் குழப்ப முயற்சி; ஜனாதிபதியும் பிரதமரும் கடும் அவதானம் என்கிறது அரசாங்கம் (ரொபட் அன்­டனி) நாட்டில் மத ரீதி­யா­கவும் இன­ரீ­தி­யா­கவும் விரி­சல்­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் ஏற்­ப­டுத்தி நாட்டை அழி­வுக்­குட்­ப­டுத்­து­வ­தற்கு சில சக்­திகள் சதிமுயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கின்­றமை தொடர்பில் அர­சாங்கம் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளது. இது தொடர்பில் அர­சாங்கம் மிகவும் கவ­ன­மா­கவும் பொறுப்­பு­டனும் செயற்­பட்டு வரு­கின்­றது என்­பதை நாட்டு மக்­க­ளுக்கு அறி­விக்­கின்றோம் என்று இணை அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார். தேசிய நல்­லி­ணக்…

  6. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எவரும் தடுத்து வைக்கப்படவில்லை – அரசாங்கம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்பய்பட்டு எவரும் தடுத்து வைக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு அமர்வுகளில் பங்கேற்றுள்ள இலங்கைப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் மேன்முறையீடு செய்ய முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இலங்கை நேற்றைய தினம் பதிலளித்துள்ளது. சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ப…

  7. கேரள கஞ்சா வைத்திருந்த இளைஞன் கைது யாழ்ப்பாணம் - இளவாளை - மாதகல் பிரதேசத்தில் பொலிஸாரால் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது பொலிஸாரால் 9 கிலோ 305 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த சுற்றிவளைப்பின் போது 24 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/13569

  8. பொருத்து வீட்டுத்திட்டத்தால் நாடாளுமன்றில் வாக்குவாதம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உத்தேசிக்கப்பட்ட பொருத்து வீட்டுத் திட்டத்தால் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. குறித்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே கோரிக்கை விடுத்த தாக தேசிய கலந்துரையாடல்கள், சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சரின் தகவலை நிராகரித்தனர். நாடாளுமன்றில் நடைபெற்றுவரும் வரவு - செலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்ட…

  9. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆளுனர்களாக இருந்த முன்னாள் படை அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, மற்றும் றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம ஆகியோர் இணைந்து எழுதிய நூலை, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று வெளியிட்டு வைத்தார். மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, மற்றும் றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம ஆகியோர் இணைந்து எழுதிய “குழப்பநிலை மற்றும் உறுதிநிலை- வட-கிழக்கு சிறிலங்காவில் போருக்குப் பிந்திய அபிவிருத்தியும், நல்லிணக்கமும் ( “Conflict & Stability” – post war development and reconciliation in NE Sri Lanka ) என்ற தலைப்பிலான இந்த நூலின் வெளியீட்டு விழா ஹெக்டர் கொப்பேகடுவ ஆராய்ச்சி நிலையத்தில் நேற்றுமாலை இடம்பெற்றது. போருக்…

  10. மட்­டக்­க­ளப்பில் பௌத்த தேரர் ஒருவர் நடந்துகொண்­டுள்ள வித­மா­னது எந்­த­வ­கை­யிலும் ஏற்றுக்கொள்­ளப்­பட முடி­யாத விடய­மாகும். எனவே, இந்த விடயம் தொடர்பில் அர­சாங்கம் பக்­க­ச்சார்­பற்ற விசா­ர­ ணையை நடத்தும் என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான டாக்டர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். மதத் தலை­வர்கள் எப்­போதும் அஹிம்­சை­யு­டனும் அமை­தி­யான முறை­யிலும் சமூ­கங்கள் மத்­தியில் நம்­பிக்கை ஏற்­படும் வகை­யிலும் நடந்து கொள்ள வேண்டும். இல்­லா­விடின் பாரிய களங்­கமே ஏற்­பட்டு விடும் என்றும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டினார். மட்­டக்­க­ளப்பில் தேரர் ஒருவர் அரச அதி­கா­ரி­களை கடும் தொனியில் விமர்­சித்து தாக்­குதல் நடத்த முயற்சி செய்­த­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் அர­ச…

  11.  'ஆவா'வில் முன்னாள் இராணுவ வீரர் வடக்கில் இயங்கிவரும் ஆவா குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர், இராணுவத்தில் சேவையாற்றியவர் என்று, நாடாளுமன்றத்தில் இன்று, அறிவிக்கப்பட்டது. - See more at: http://www.tamilmirror.lk/186086/-ஆவ-வ-ல-ம-ன-ன-ள-இர-ண-வ-வ-ரர-#sthash.4ruZHPV4.dpuf  'இராணுவத்தினால் 'ஆவா' இயக்கப்படவில்லை' வடக்கில் இயங்கிவரும் ஆவா குழு, இராணுவத்தினரால் இயக்கப்படும் குழுவல்ல என்றும் இராணுவத்தில் சேவையாற்றியவர்கள் அதில் உள்ளனரா என்பது தொடர்பிலான விசாரணைகள் முன்னெ…

  12. தற்போது வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சிறுவர்கள் தனது 16 வயதினை பூர்த்தி செய்ததன் பின்னர் ஆயுதம் ஏந்தப் போவது நிச்சயிக்கப்பட்ட ஒன்று என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இதனை பாராளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து முன்னாள் போராளிகள் பலரையும் அவரது உறவினர்கள் இராணுவத்தினரிடம் கையளித்திருந்தனர். மற்றும் பல போராளிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர். எனினும், அவ்வாறு இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் ஒப்படைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளை இது வரையிலும், கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது. அல்லது எங்கே என்று சொல்ல…

  13. வடக்கு,கிழக்கிலும் கால் பதிக்கிறது சீனா யுத்ததினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வ தற்கும், பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கும் அப்பகுதிகளில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ள சீன அரச நிறுவனமான சீ.எஸ்.ஆர். இணக்கம் தெரிவித்துள்ளது. புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவி ருத்திக் குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கும் சீ.எஸ்.ஆர். நிறுவனத்தின் பிரதித்தலைவர் தலைமையிலான பணிப்பாளர் சபை குழுவுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இன்று புதன்கிழமை இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நடை பெற்றது. இலங்கையின் அபிவி…

  14. கிளிநொச்சியில் எலிக் காய்ச்சல் காரணமாக ஒருவா் மரணமடைந்துள்ளாா். என மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 13-11-2016 அன்று வயல் விதைப்பில் ஈடுப்பட்ட பின்னா் கா ய்ச்சல் காரணமாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கிளிநொச்சி மருதநரைச் சோ்ந்த மாரிமுத்து விசுவநாதன் வயது 57 என்பவரே எலிக் கா ய்ச்சால் காரணமாக 15-11-2016 செவ்வாய் கிழமை மரணமடைந்துள்ளாா். எனவே இது தொடா்பில் பொது மக்களை அவதானமாக இருக்குமாறும் குறிப்பாக விவசாயிகளை மிகவும் அவதானமாக இருக்குமாறு மாவட்ட சுகாதார துறையின் கேட்டுக்கொண்டுள்ளனா். எலிக்காய்ச்சல் ஒரு பக்ரீரியா எனும் நுண்ணுயிர் வகையைச் சேர்ந்த கிருமியால் உருவாகிறது. இக் கிருமி தொற்றிய எலிகளின் சிறுநீர் ஊடாகவே அந்த பக்ரீரியா …

  15. சித்திரவதைகள் விவகாரத்தில் எவ்வித நெகிழ்வு போக்கும் பின்பற்றப்படாது – சட்ட மா அதிபர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு சித்திரவதைகள் விவகாரத்தில் எவ்வித நெகிழ்வு போக்கும் பின்பற்றப்படாது என சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார். சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் அமைப்புக் கூட்டத் தொடரில் பங்கேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை பாதுகாப்பு அதனை மேம்படுத்துதல் தொடர்பில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தடுத்து வைக்கப்படும் போது இடம்பெறும் சித்திரவதைச் சம்பவங்கள் தொடர்பில் வெளிப்படையானதும் சுயாதீனமானதுமான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். சர்வ…

  16. வீதி விபத்­து­களால் உயி­ரி­ழப்­போரின் எண்­ணிக்­கையை கட்­டுப்­ப­டுத்தும் நோக்கில் சுகா­தார அமைச்சு தேசிய விபத்து தவிர்ப்பு வாரத்­தினை நேற்று செவ்­வாய்க்­கி­ழமை தொடக்கம் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக சுகா­தார சேவைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. எதிர்­வரும் 18 ஆம் திகதி வரை இது தொடர்­பாக மக்­களை தெளி­வு­ப­டுத்தும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் டாக்டர் பாலித மஹி­பால தெரி­வித்தார். கடந்த செப்­டம்பர் மாதம் 30ஆம் திகதி முதல் இது­வரை இடம்­பெற்ற வீதி விபத்­துக்­களில் இரண்­டா­யி­ரத்­துக்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் அவர் மேலும் சுட்­டிக்­காட்­டினார். இலங்­கையில் திடீர் விபத்­து­களால் பாதிக்­கப்­ப­டு­வோரின் எண்­ண…

  17. ராவய சிங்கள பத்திரிகையின் 30 ஆவது வருட பூர்த்தியைமுன்னிட்ட நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றபோது... ராவய சிங்கள பத்திரிகையின் 30 ஆவது வருட பூர்த்தியைமுன்னிட்ட நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றபோது அந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் , அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் மேடையில் நிற்பதையும் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டிருப்பதையும் ஏனையோர் நிகழ்வை பார்வையிடுவதையும் படங்களில் காணலாம். http://content.epaper.virakesari.lk/…

  18. ஆட்சி மாறலாம் நட்பில் மாற்றம் கூடாது ; சீன தூதுவர் (லியோ நிரோஷ தர்ஷன்) ஆட்சி மாற்றங்கள் இரு நாட்டு உறவுகளை பாதிப்பதாக அமைந்து விட கூடாது . இலங்கையின் அபிவிருத்தி பணிகளில் சீனா வெளிப்படையானதும் தனித்துவமானதுமான ஒத்துழைப்புகளையே என்றும் வழங்கும் என இலங்கைக்கான சீன தூதுவர் யீ ஷியான்லியங் தெரிவித்தார். கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இன்று இடம்பெற்ற சீன - இலங்கை வர்த்தக கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இலங்கைக்கான சீன தூதுவர் யீ ஷியான்லியங் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு என்பது வெறுமனே இரு நாடுகளுக்கு உடையதாக கருதப்பட முடியா…

  19. யாழ் கல்லுன்டாய்வெளிப் பகுதியில் வாள்வெட்டுக்குள்ளாகிய நிலையில் ஒருவர் மீட்பு யாழில் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் ஒருவரை பொலிசார் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிசைக்காக அனுமதித்து உள்ளனர்.யாழ்.கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்று புதன் கிழமை இரவு 7 மணியளவில் வாள் வெட்டுக்கு இலக்காகிய நிலையில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் வீதியில் கிடந்துள்ளர். அதனை அவதானித்த வீதியால் சென்றவர்கள் மானிப்பாய் பொலிசாருக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் படுகாயமடைந்த நிலையில் இருந்தவரை மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிக்கிச்சைக்காக அனுமதித்தனர்.குறித்த வாள் வெட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள…

  20. சுவிட்சலாந்தில் இருந்து 9 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுவிட்சலாந்தில் இருந்து 9 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இன்றையதினம் நாடுகடத்தப்பட்ட இவர்கள் விசேட விமானம் மூலம் கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தப்பட்ட 9பேரும் இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் 6 மாதங்களிலிருந்து 2 வருடங்கள் வரை சுவிட்சலாந்தில் வசித்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையை வந்தடைந்த இவர்களிடம் இலங்கை குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். http://globaltamilnews.net/archives/7198

  21. முழங்காவில் பகுதியில் வாள்வெட்டு: இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் -எஸ்.என்.நிபோஜன் முழங்காவில் நாச்சிக்குடாப் பகுதி கடையொன்றில் இன்று மாலை இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இளைஞர்கள் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி முழங்காவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . இதனால், குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுப்பதற்கு, முழங்காவில் பொலிஸார் கண்காணிப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல் எதனையும் பெற முடியவில்லை. மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - See mor…

  22. வட மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள்: ஜி.ரி.லிங்கநாதன் முறைப்பாடு வட மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து, வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் இன்று முறைப்பாடு செய்தார். வட மாகாண அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக, மாகாண முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம் சமர்ப்பிப்பதற்காக, மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் தமது முறைப்பாட்டைக் கையளித்தார். வட மாகாண பிரதம செயலாளர் செயலகத்திலுள்ள ஆவணங்கள் விசாரணைக்குழுவிடம் இந்த முறைப்பாடு கையளிக்கப்பட்டது. Share This http://newsfirst.lk/tamil/2016/11/வட-மாகாண-அமைச்சர்கள்-மீத/

  23. சர்ச்சைக்குரிய பிக்குவின் மற்றுமொரு செயற்பாட்டால் செங்கலடியில் பதற்றம் (சசி) நீதிமன்ற ஆணையையும் மீறி பதுளை வீதியில் உள்ள பன்குடாவெளி பிரதேசத்தில் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சியை மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி மேற்கொண்டுள்ளதால் குறித்த பகுதியில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் மற்றும் பொதுமக்கள் பௌத்த பிக்குவை அங்கிருந்து வெளியுற்றுவதற்கு பொலிசாரின் உதவியுடன் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி பிற மாவட்டங்களில் இருந்து சிங்கள மக்களை பஸ் வண்டிகளில் ஏற்றி வந்து பதுளை வீதியில் உள்ள பன்குடாவெளி பிரதேசத்தில் பௌத்த வ…

  24. புலம் பெயர் தமிழ் மக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய பிக்கு பொலிஸில் முறைப்பாடு தொடர் சர்ச்சையில் சிக்கி வரும் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி புலம் பெயர் தமிழ் மக்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த முறைப்பாட்டில் புலம் பெயர் தமிழ் மக்களால் தொடர்ந்து தமது தொலைபேசியிற்கு அழைப்பு வருகின்றது என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதன்போது அவரின் தொலைபேசியிற்கு அழைப்பினை மேற்கொண்டவர்களின் இலக்கங்களும் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/13549

  25. கடமையின்போது அச்சுறுத்தல் வருமாயின் கிராம சேவையாளர்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.! அரசாங்க நிருவாக சக்கரத்தின் அடிமட்டத்தில் இருக்கின்ற மிக முக்கியமான சேவையாளர்கள் என்கின்ற வகையில் ஒவ்வொரு கிராம சேவகரினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என மட்டக்களப்பு ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத் தலைவர் எஸ். ஞானசிறி கேட்டுள்ளார். மட்டக்களப்பில் உள்ள புத்த பிக்கு ஒருவரால் கிராம அலுவலர் ஒருவர் அச்சுறுத்தப்பட்டது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம அலுவலர்களால் இன்று கறுப்புப் பட்டி எதிர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது. இந்த கறுப்புப் பட்டி எதிர்ப்புப் போராட்டம் பற்றி கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு ஐக்கிய …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.