ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143425 topics in this forum
-
யாழ்.பொலிஸ்நிலைய கட்டடம் அடுத்த மூன்று மாதங்களில் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு யாழ் அசோகா ஹோட்டலில் இயங்கி வரும் பொலிஸ்நிலையம் இன்னும் மூன்றுமாதங்களில் முற்றாக அகற்றப்பட்டு அந்தக் கட்டடம் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுமென பொலிஸ்நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். பொலிஸ்நிலையத்திற்கென பண்ணைப் பகுதியில் புதிய பொலிஸ் நிலைய கட்டடம் அமைக்கப்பட்டு கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.எனினும் பழைய பொலிஸ் நிலையத்தில் யாழ் பிராந்திய பொலிஸ் பிரிவு போக்குவரத்துதுறைப் பொலிஸ் பிரிவு தற்போது இயங்கி வருகின்றன. இந்தநிலையில் அடுத்த ம…
-
- 0 replies
- 257 views
-
-
ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி.! மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று காலை ஓட்டமாவடியில் இடம்பெற்றதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். டாக்டர் பதியுதீன் மாவத்தை ஓட்டமாவடி இல.1 சேர்ந்த முகம்மது அலியார் செய்யது இப்றாகிம் (45) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். இன்று காலை மேற்படி நபர் ரயில் பாதை அருகாமையினால் நடந்து செல்லும்போது ரயிலில் ஏறும் படிக்கட்டு பகுதி உடலில் அடிபட்டதினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பத்தினை நேரில் பார்த்த பொது மக்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக…
-
- 0 replies
- 353 views
-
-
தொழில்சார் நிபுணர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியது அவசியமானது தொழில்சார் நிபுணர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியது அவசியமானது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தொழில்சார் நிபுணர்கள் அரசியல் மற்றும் பொதுத்துறைப் பணிகளில் ஈடுபட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தேர்தலுக்கு முன்னதாக மட்டுமே தொழில்சார் நிபுணர்கள் அரசியலில் ஈடுபடுகின்றார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் எதிர்கால அரசாங்கமொன்றில் தொழில்சார் நிபுணர்களின் பங்களிப்பு முக்கியமானதாக அமையும் என தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136398/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 288 views
-
-
இலங்கையில் அதிகரிக்கவுள்ள உல்லாசப்பயணிகளின் வருகை மாஸ்டர் கடன் அட்டைகளை வழங்கும் நிறுவனம் எடுத்த கணிப்பொன்றின்மூலம் 2016ம் ஆண்டில் சர்வதேச உல்லாசப் பயணிகளின் வேகமான அதிகரிப்பை அனுபவிக்கும் உலக நாடுகள் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தைப் பெறுவதாக அறிவித்துள்ளது. தேர்ந்தெடுத்த 132 நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளதன் மூலம் உல்லாசப் பயணிகள் வருகை இந்த ஆண்டு 19.57 வீதத்தால் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த நிறுவனம் அளித்த புள்ளி விபரங்களின்படி உலகில் மிக அதிகமாக விஜயம் செய்யும் 10 நகரங்களில் ஏழு நகரங்கள் ஆசியாக் கண்டத்திலேயே உள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டடுள்ளது. இதில் ஐந்து நகரங்கள…
-
- 0 replies
- 256 views
-
-
மட்டக்களப்பில் தடம்புரண்டது உதயதேவி Published by Priyatharshan on 2016-09-22 10:59:39 (சசி) மட்டக்களப்பில் பரீட்சார்த்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த உதய தேவி புகையிரதம் இன்று காலை தடம் புரண்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக பயணிகள் எவரும் குறித்த புகையிரதத்தில் பயணிக்காததால் எந்தவித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து பல மணி நேர முயற்சியின் பின் தடம்புரண்ட புகையிரம் சீர்செய்யப்பட்டு வழமை நிலைக்கு திரும்பியது. இச் சம்பவம் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/artic…
-
- 8 replies
- 850 views
-
-
'எழுக தமிழ்' நிகழ்வுக்கு 'நாம் ஆதரவு': இ.தொ.கா தெரிவிப்பு எம்.செல்வராஜா “எழுக தமிழ்” பேரணியில் முன்வைக்கப்பட்ட விடயங்களையும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் நியாய பூர்வமான கருத்துகளையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழு மனதுடன் ஆதரவு அளிக்கிறது என, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். ஆகவே, முதலமைச்சரின் இம்முயற்சிகளுக்கு வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் மட்டுமின்றி, முழு மலையக மக்களும் எத்தகைய கருத்து வேறுபாடுமின்றி அனைவரும் தத்தமது பூரண பங்களிப்புகளை வழங்க வேண்டியது, காலத்தின் அவசிய தேவையாக இருப்பதாவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில், அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், …
-
- 0 replies
- 290 views
-
-
'சி.வியை கைது செய்' வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை உடனடியாக கைதுசெய்து சிறையில் அடைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரியுள்ளார். கொழும்பில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார். தமிழ் மக்கள் பேரவையினால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணிக்கு அரசாங்கத்தின் வளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வரலாற்றில் முதல்முறையாக தமிழ் பிரிவினைவாத ஆர்ப்பாட்டத்துக்கு அரசாங்கத்தின் அனுசரனை கிடைத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அதேபோல, இனவாதத்தை கக்குகின்ற சி.வி.விக்ன…
-
- 3 replies
- 555 views
-
-
மாகாணசபை உறுப்பினர்கள் வெளிநாடு செல்ல அனுமதி பெற வேண்டும் மாகாணசபை உறுப்பினர்கள் வெளிநாட்டு பயிற்சிகளுக்கு செல்ல திறைசேரியின் அனுமதி பெற வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக அவர் இதனை அறிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/11792
-
- 2 replies
- 401 views
-
-
பிரபா கூறியது சரியே -என்கிறார் பந்துல சிங்கள மக்களுக்கு எந்தவொன்றும் நீண்ட நாட்களுக்கு நினைவில் நிற்பதில்லையென புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியி ருந்ததாகவும், அக்கருத்து சமகாலத்துடன் ஒப்பிடும்போது உண்மையானதாக தென்படுவதாகவும் மஹிந்த சார்பு குழு பாராளு மன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். எமது நாட்டில் கடந்த 30 வருடங்களாக என்ன நடந்தது என்பதை மக்கள் மறந்துள்ளனர்.மஹிந்த ராஜபக்ஷவுக்கு அடிக்க ஆரம்பி க்கும் போது, அவருடன் இருந்த சிலர் வரப்பிரசாதங்கள் கிடைக்கும் இடங்களுக்கு சென்று அமர்ந்துகொண்டனர். மஹிந்த ராஜபக்ஷவுக்கு அடிக்கும் ஒவ்வொரு அடியையும், அவருடன் இருந்து கொண்டு திருப்பி அடிப்பதற்கே, கூட்டு…
-
- 0 replies
- 351 views
-
-
மருதங்கேணி கடற்கரையில் 82 கிலோ கஞ்சா மீட்பு இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 82 கிலோகிராம் கேரளா கஞ்சாவை மருதங்கேணி கடற்கரையில் வைத்து பளை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.எனினும் குறித்த சம்பவத்தின்போது சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக பளைப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, இந்தியாவில் இருந்து கடல் வழியாக கேரள கஞ்சா ஒரு தொகுதி மருதங்கேணி கடற்பரப்பினூடாக கொண்டு வருவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து கிளிநொச்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் றோசான் ராஜபக்ச மற்றும் பளைப் பொலிஸ் பரிசோதகர் அடங்கிய குழுவினர் குறித்த…
-
- 3 replies
- 332 views
-
-
விக்னேஸ்வரனின் செயற்பாடுகளில் அரசாங்கத்துக்கு அதிருப்தி! - மஹிந்த அமரவீர [Tuesday 2016-09-27 07:00] வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதத்தை தூண்டி நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளை சீர்குலைக்க முயற்சி செய்வதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அவரது அண்மைக்கால செயற்பாடுகள் அரசாங்கத்துக்கு திருப்தியளிக்கும் விதத்தில் இல்லையெனவும் அவர் தெரிவித்தார். 'தற்போதைய அரசாங்கம் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வையும், சமாதானத்தையும் ஏற்படுத்த பல்வேறு நடவடிக்ைககளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு தடவை இனவாதத்தை தூண்டும் விதத்தில் வட மாகாண முதலமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். எனவே அத்…
-
- 1 reply
- 366 views
-
-
விசேட செய்தியாளர்)கடந்த காலங்களில் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டி புலம்பெயர் தமிழர்கள் ஜெனீவா முன்றலில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள். ஐ.நாவில் தற்போது 33ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பலத்த எதிர்பார்ப்பினை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த நிலையில், மிகவும் அமைதியான போக்கு ஐ.நா சபையின் உள்ளகத்தில் இடம்பெற்று வருவதாக அறியமுடிகின்றது. இவற்றுக்கு முழுமையான நீதி வெகு விரைவில் கிடைக்க வேண்டும் எனவும், இலங்கையில் இடம்பெற்ற அநீதிக்கு சர்வதேச விசாரணையே தீர்வு என்றும் முழக்கமிட்டவாறு ஐ.நா முன்றலில் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள். …
-
- 0 replies
- 407 views
-
-
குரும்பசிட்டியில் மீட்கப்பட்ட ஆயுதங்களின் விவரம் -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, குரும்பசிட்டி பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து ஒரு தொகை ஆயுதங்கள், நேற்றுத்திங்கட்கிழமை (26) மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, 60 ஆர்.வி.ஜி எறிகணைகள், 40 மில்லிமீற்றர் எறிகணைகள் – 66, 60 மில்லிமீற்றர் எறிகணைகள் 28, 81 மில்லிமீற்றர் எறிகணைகள் 70, டி.பி.என்.ஜி – 1600, சிக்ஸ்டி மோட்டார் பரா 4 மற்றும்ஆர்.வி.ஜி சார்ஜர் - 30 ஆகியன மீட்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை (25) கிணற்றை தூர்வாறும்போதே, ஆயுதங்கள் இருப்பது அவதானிக்கப்பட்டு, பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசேட அதிரடிப் படைய…
-
- 1 reply
- 286 views
-
-
யாழ்.பல்கலையில் அமைக்கப்பட்ட நீர்வடிகட்டியை திறக்க வருகிறார் ஜனாதிபதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு வரும் நீர்வடிகட்டியை எதிர்வரும் 2 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைக்கவுள்ளார். யாழ்ப்பணப் பல்கலைக்கழக ஆண் மாணவர்கள் விடுதியில் போதிய நீர் வடிகட்டிகள் இன்மையால் குடிதண்ணீரைப் பெற்று க்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்வதாக மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் ஜனாதிபதிக்கும் கடந்த மாதம் எழுத்து மூலம் கோரிக்கையை விடுத்தனர். இந்நிலையில் மாணவர்களின் குடிதண்ணீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்பிரகாரம் மாணவர் வளாக…
-
- 0 replies
- 280 views
-
-
ட்ரோன் கமெராவால் பதற்றம் படுகொலை செய்யப்பட்டு, பொரளை கனத்தை மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள, சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம், ஐந்தரை வருடங்களின் பின்னர், இன்று செவ்வாய்க்கிழமை (27) தோண்டியெடுக்கப்பட்டது. அங்கு செய்திகளை சேகரிப்பதற்கு சென்றிருந்த ஊடகவியலாளர்களை மயானத்துக்குள் செல்வதற்கு பொலிஸார் அனுமதியளிக்கவில்லை. இதனால், கம்பிகளுக்கு வெளியே ஊடகவியலாளர்கள் நின்றுகொண்டிருந்தனர். இந்நிலையில், கனத்தை மாயனத்துக்குள் ட்ரோன் கமெரா சுற்றிதிரிந்தமையால், பொலிஸார் கலவரம் அடைந்தனர். வானிலிருந்து படம்பிடித்த அந்தக் கமெராவைப் பிடிப்பதற்குப் பொலிஸாரினால் முடியவில்லை. எனினும், கனத்தை மயானத்தின் பாதுகாப்பு…
-
- 1 reply
- 311 views
-
-
தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நடத்தியதால்தான் இலங்கை அரசு தீர் வைத் தரவில்லை என்று நம் அரசியல் தலைமையில் இருக்கக் கூடிய சிலர் கருத்துத் தெரிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இடமில்லை. அந்தளவுக்கு எங்களிடையே அற்பத்தனமான அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. எழுக தமிழ் எழுச்சிப் பேரணி யாராலும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத அளவில் வெற்றி அளித்துள்ளது. எம் வர்த்தகப் பெருமக்கள் ஒவ்வொருவரும் தாமாக உணர்ந்து தங்கள் வர்த்தக நிலையங்களை, சந்தைகளை பூட்டி பேரணிக்கு ஆதரவு கொடுத்தமை மகத்தான சாதனை எனலாம். ஒட்டுமொத்தத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாக ஒற்றுமைப்பட்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியமை, எல்லாவற்றையும் நாங்களே தீர்மானிப்பவர்க…
-
- 0 replies
- 262 views
-
-
சர்வதேச தகவல் அறியும் உரிமை தொடர்பான மாநாடு நாளை கொழும்பில் சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சுடன் இணைந்து அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச தகவல் அறியும் மாநாடு நாளை புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமாகின்றது. இந்த மாநாட்டில் இந்தியாவின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார் . மேலும் மாநாட்டில் .120 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர் என்று ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணா…
-
- 0 replies
- 239 views
-
-
காலியில் நிலநடுக்கம் காலியில் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளததாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. - See more at: http://www.tamilmirror.lk/182678/க-ல-ய-ல-ந-லநட-க-கம-#sthash.IqDStvf1.dpuf
-
- 0 replies
- 269 views
-
-
நீதவான்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு இலங்கையில் நீதவான்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிரேஸ்ட சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைத்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு நீதவான்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதுடன், மின்னஞ்சல்களையும் ஹக் செய்துள்ளதாகவும் இந்த நடவடிக்கையானது மிகவும் மோசமான நீதிமன்றின் சுயாதீனத் தன்மையில் தலையீடு செய்யும் நிகழ்வு எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது எனவும் பாரத லக்ஸ்மன் பிரேம…
-
- 0 replies
- 213 views
-
-
அரசியலும், தமிழர்கள் மீதான அடக்கு முறையும் தலை விரித்தாடிய காலப்பகுதியில் முழு உலகத்தையும் தமிழர் பக்கம் பார்க்க வைத்த ஒரு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடந்தது. அதுதான், தமிழர்களுக்கான ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தியாகத் தீபம் திலீபன் உண்ணாவிரதம் இருந்தார். தொடர்ந்து 12 நாட்கள் தமிழர்களுக்காக உண்ணா விரதமிருந்து தன்னுயிரை நீத்த மாவீரனின் நினைவை சற்றே மீட்டுப்பார்ப்பதில் ஒவ்வொரு தமிழனும் பெருமையடைய வேண்டும். http://www.tamilwin.com/history/01/118914?ref=home
-
- 3 replies
- 605 views
- 1 follower
-
-
எழுகதமிழ் இனவாதசெயல்-அரசாங்கம் தமிழ் மக்கள் பேரவையினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் பேரணி யானது முற்றிலும் இனவாதச் செயலாகும் என்று குற்றம் சாட்டியுள்ள ஊடகத்துறை பிரதிய மைச்சர் கருணாரட்ன பரணவித்தாரன, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னே ஸ்வரனின் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக நல்லிணக்க முயற்சிகளையே பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டினார். வடக்கு முதலமைச்சர் கூறுவதுபோன்று வடக்கில் எந்தவொரு புதிய பௌத்த விகாரை களோ, சிங்களக் குடியேற்றங்களோ அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பிரதியமைச்சர் கூறினார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் உரையாற்றிய வடமாகாண முதல மைச்சர் விக்னேஸ்வர…
-
- 1 reply
- 448 views
-
-
திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் கல்லடி கிராமத்திலுள்ள மலைநீதியம்மன் ஆலயத்தின் மடப்பள்ளி, அங்குள்ள பௌத்த துறவியொருவரால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. காலை 10.30 மணியளவில் ஆளரவம் இல்லாத நேரத்தில் ஆலயத்தின் பின்னால் மறைந்து வந்த காவியுடை தரித்த பௌத்த துறவி, கோயிலின் மடப்பள்ளிக்குத் தீவைத்து விட்டு அருகிலுள்ள ரஜமகா விகாரைக்குள் சென்று புகுந்து கொண்டதாக சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, குறித்த சம்பவத்தை உடனடியாக கிராம உத்தியோகத்தர் கனகசுந்தரம் ஜெயரூபன் பிரதேச செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து, சேருநுவர பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும் ஸ்தலத்திற்கு விரைந்து பதற்றத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன…
-
- 3 replies
- 610 views
-
-
இரு இளைஞர்களை காணவில்லை . ஐந்து இராணுவத்தினருக்கு விளக்கமறியல் - 11 இராணுவத்தினருக்கு பிடியாணை யாழ். அச்சுவேலி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் காணாமல் போனமைக்கு காரணம் எனும் குற்றசாட்டில் 16 இராணுவத்தினரில் , ஐந்து இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளதுடன் ஏனைய 11 பேருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அச்சுவேலி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் கடந்த 1998ம ஆண்டு ஜனவரி மாதம் 20 ம் அச்செழு இராணுவத்தினரால் பிடித்து செல்லப்பட்ட பின்னர் காணாமல் போயிருந்தனர். அது தொடர்பில் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில், குறித்த வழக்கு நடைபெற்று வந்த வேளை இன்றைய தினம் திங்கட்கிழமை மன்றில் முன்னிலையாகுமாறு 16 இராணுவத்தின…
-
- 3 replies
- 539 views
-
-
யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணி, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை தரும் என்ற ஏமாற்றும் செயற்பாடாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிகாரம் மற்றும் பிரதிநிதித்துவம் என்பவற்றை கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த செயற்பாட்டை காட்டிலும் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான முறையில் தீர்வைக்காண முன்வரவேண்டும் என்று வடக்கின் அரசியல் கள சுதந்திர கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர் எழுத்தாளம் சிவராசா கருணாகரன், ஆய்வாளர்கள் ராஜன் ஹூல் மற்றும் அஹிலன் கதிர்காமர் ஆகியோர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். விளைவுகளை நோக்காமல் தமிழ் உணர்வுகளை இவ்வாறு தூண்டுவதன் மூலம் மீண்டும் வன்ம…
-
- 9 replies
- 612 views
-
-
எவரும் எவரையும் ஏமாற்ற முடியாது. யாரும் யாரிடமும் ஏமாறப் போவதுமில்லை. யாரையும் யாரும் ஏமாற்றி ஒரு முறையான அரசியல் சாசனத்தை உருவாக்க முடியாது என்று எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். மாகாண சபைகளுக்கு பாரியளவு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இவ்வாறு பகிர்வதன் மூலமே மாகாண அமைச்சுக்கள் தங்கள் அதிகாரங்களுக்கு உட்பட்ட மக்களுக்கான சேவைகளை பூரணமாகச் செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ஏற்பட இருக்கின்ற அரசியல் தீர்வு இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் எல்லா இன மதத்தவர்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும். எவரையும் எவரும் ஏமாற்றி …
-
- 9 replies
- 949 views
-