ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
சமாதானத்தை ஏற்படுத்துபவர்கள் இளைஞர்களே-ஐ.நா செயலர் இலங்கையில் சமாதானத்தை மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் பங்குதாரர்கள் இந்நாட்டின் இளைஞர்கள் என ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்தார். உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள செயலாளர் நாயகம் காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டில் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை ஏற்படுத்தும் செயற்பாட்டில் இந்நாட்டின் இளைஞர்களுக்கு பாரிய பங்களிப்பு செய்ய சந்தர்ப்பம் உள்ளது என அவர் தெரிவித்தார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு, தேய…
-
- 4 replies
- 580 views
-
-
முள்ளிவாய்க்கால் கிழக்கில் கடற்படைமுகாமிற்கு இடமில்லை! இன்றைய கலந்துரையாடலில் எடுத்துரைப்பு! இறுதிப்போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் கடற்படை முகாம் அமைக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று அப் பகுதி மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் எடுத்துரைத்துள்ளனர். கரைத்துறைப்பற்று பிரேதச செயலகத்தில் முள்ளிவாய்க்கால் கிழக்கு காணிப் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலில் இந்த விடயம் எடுரைக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் தேவைக்காக முள்ளிவாய்க்கால் கிழக்கில் சுமார் 600 ஏக்கர் காணியை சுவீகரிக்கும் பொருட்டு காணி அளவீடு செய்யும் நடவடிக்கை இன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு பின்னர், பிற் போடப்பட்டது. இதனையடுத் தே க…
-
- 1 reply
- 333 views
-
-
ஐ.நா செயலரின் யாழ். விஜயத்தின்போது கவனயீர்ப்பு போராட்டம் யாழ். மாவட்டத்திற்கு நாளை விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனினுடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் உறவினர்கள், தமிழ் அரசியல் கைதிகளின் விடு தலை, காணி பறிப்புக்கள், மீள்குடியேற்றம் போன்றவற்றிற்கான தீர்வைக் கோரி, யாழ். மாவட்ட செயலகம் முன்பாக நாளை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடு க்கப்படவுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், இந்த கவனயீர்ப்பு போரா ட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்திற்கு மு…
-
- 1 reply
- 367 views
-
-
ஜனாதிபதி-ஐ.நா.செயலர் சந்திப்பு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி மாளிகையில் இன்று (வியாழக்கி ழமை) இரவு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று மாலை கொழும்பை வந்தடைந்த ஐ.நா. செயலாளர் நாயகம், நேற்று மாலை பிரதமர் ரணில் விக்கிரசிங்கவுடனான சந்திப்பை மேற்கொண்டிருந்தார். அதனையடுத்து, இன்று காலை காலியில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்ற பின்னர், கொழும்பு திரும்பி ஜனாதிபதியைச் சந்தித்திருந்தார். இந்நிலையில், நாளை வட பகுதிக்கு விஜயம் செய்யும் பான் கீ மூன், யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேச…
-
- 0 replies
- 375 views
-
-
வெள்ளை வேன் கடத்தல்களுடன் கடற்படை தளபதியே தொடர்புபட்டி ருந்தாலும் உடனடியாக கைது செய்யவும் - கொட்டாஞ்சேனை தமிழர் இருவரின் கடத்தல் விவகாரம் தொடர்பில் நீதிவான் உத்தரவு (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற வெள்ளை வேன் கடத்தல்கள் தொடர்பில் கடற்படை தளபதி நிலையிலிருந்து உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் அதில் குற்றம் புரிந்தவர்கள் தொடர்பில் சந்தேகிக்கப்படுவோரை கைது செய்து உடன் நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறும் கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்தார். ஏற்கனவே 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் …
-
- 1 reply
- 390 views
-
-
முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனை விபரங்கள் அறிவிப்பு விஷ ஊசி விவகாரம் தொடர்பில் இவ்வாரம் முதல் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவி க்கப்பட்டுள்ளது, குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மத்தியில் தமது உடல் நலம் தொடர்பில் நிலவுகின்ற கவலைகளைக் கருத்தி ற்கொண்டு, வட மாகாணசபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அவர்களது நலன்கள் தொடர்பாக எமது அமைச்சு கவனம் செலுத்தத் தீர…
-
- 1 reply
- 415 views
-
-
வந்தார் மூன் மூன்று நாள் இலங்கை விஜயத்தினை மேற்கொண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான்கி மூன் இலங்கை வந்துள்ளார். இன்று மாலை 7.30 மணிஅளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் இவர் இன்றிரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதாகவும் நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து, இளைஞர் நிகழ்வொன்றில் பங்குகொள்ளும் பொருட்டு காலிக்கு சென்று இன்றைய தினம் இரவு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இராபோசனத்தில் கலந்து கொள்வார் என எதிர்பாக்கப்படுகின்றது. மேலும் அவர் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவை …
-
- 9 replies
- 780 views
-
-
வீரவன்சவின் மூத்த சகோதரர் கைது நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின், மூத்த சகோதரரான சரத் வீரவன்ச, பொலிஸ் நிதிக் குற்ற மோசடி பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கடந்த அரசாங்கத்தின் போது, அரசாங்க வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/180917/வ-ரவன-சவ-ன-ம-த-த-சக-தரர-க-த-#sthash.gScMoMoc.dpuf
-
- 0 replies
- 281 views
-
-
ஐ.நா. செயலருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரது வருகையினைக் கண்டித்தும், கொழு ம்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கு எதிரில் இன்று (வியாழக்கிழமை) காலை எதி ர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச விசாரணைக்கு இடமளிக்க போவதில்லை என தெரிவித்து சிங்கள பேரினவாத அமைப்புக்களினால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைமையிலான பேரினவாத அமைப்புக்க ளான ராவணாபலய அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புக்கள் இந்த ஆர்ப்பா ட்ட த்தில் கலந்து கொண்டன. இராணுவத்தை பழிவாங்கவும்…
-
- 1 reply
- 683 views
-
-
காணாமற்போனோர் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினாலேயே நீதி கிட்டும்-சுமந்திரன் காணாமல்போனோர் தொடர்பிலான உண்மைகளை கண்டறிவதற்கான காணா மல்போனோர் அலுவலகச் சட்டம் மிகவும் முக்கியமான ஒரு சட்டம் என தெரி வித்ததுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த சட்டத்திற்கு அமைய அமைக்கப்படவுள்ள காணாமல்போனோர் அலுவலகத்தை யும் வரவேற்றுள்ளார். எவ்வாறாயினும் குறித்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதி லேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பது தங்கியுள்ளதாகவும் கொழும்பில் அனுட்டிக்கப்பட்ட சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 311 views
-
-
ஐ.நா அலுவலகத்துக்கு கடும் பாதுகாப்பு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்துக்கு முன்பாக கடும், பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு மேலதிக பாதுகாப்புக்காக, விசேட அதிரடிப்படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு, புதன்கிழமை இரவு இலங்கையை வந்தடைந்தார். அவருடைய வருகையை எதிர்த்தும், சர்வதேச விசாரணைக்கான அதிகாரங்களை பிரயோகிக்க வேண்டாமென வலியுறுத்தியும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது. இதேவேளை, போரினால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் மக்…
-
- 0 replies
- 309 views
-
-
வர்த்தகர் சுலைமான் படுகொலை :பிரதான சந்தேகநபர் உட்பட எழுவர் கைது கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் வசித்துவந்த வர்த்தகர் மொஹமட் சுலைமா னின் கொலை தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஏழு பேரை பொலி ஸார் கைதுசெய்துள்ளனர். கொலையை மேற்கொண்ட சந்தேகநபரையும் அதன்பின்னர் வர்த்தகரின் சடல த்தை வாடகை வாகனம் மூலம் கொழும்பில் இருந்து மாவனெல்ல, ஹெம்மா த்தகம பகுதிக்கு கொண்டு செல்ல இணங்கிய குழுவினரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆடைத்தொழில்துறையை சேர்ந்த பிரபல வர்த்தகரான மொஹமட் சுலைமான், கப்பம் கோரப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டிருந்தார். கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு…
-
- 0 replies
- 365 views
-
-
யாழில்உயர்பாதுகாப்பு வலயங்களிலுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்படா-இராணுவம் திட்டவட்டம் யாழ்ப்பாணத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள பொது மக்களின் காணிகளை விடு விக்கும் போது தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது. இதனால் இராணுவ முகாம்களுக்குத் தேவையான காணிகள் தொடர்ந்தும் வைத்துக்கொண்டு ஏனைய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவபேச்சாளர் மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். “இராணுவ முகாம்கள் சில காரணங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு அமைக…
-
- 1 reply
- 347 views
-
-
பான் கீ மூன்-பிரதமர் சந்தித்துப் பேச்சு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அலரிமாளிகையில் சற்றுமுன்னர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/180857/ப-ன-க-ம-ன-ப-ரதமர-சந-த-த-த-ப-ப-ச-ச-#sthash.Tnd14zgO.dpuf
-
- 1 reply
- 400 views
-
-
விடுதலைப் புலி சந்தேகநபர் மரணம்: முன்னாள் இராணுவ வீரருக்கு தண்டனை முன்னாள் இராணுவ லுத்தினல் ஒருவருக்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் 20 இலட்சம் ரூபா நஸ்டஈடும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கைதுசெய்யப்பட்ட நிலையில் தப்பிச் செல்ல முற்பட்டதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சந்தேகநபர் ஒருவரை, கவனயீனமாக துப்பாக்கியால் சுட்டு அவரது மரணத்துக்கு காரணமானதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 1998ம் ஆண்டு பேதுருதுடுவ இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரே இவ்வாறு பலியானார். இதன்படி சம்பந்தப்பட்ட இராணுவ வீரருக்கு எதிராக சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. நீண்…
-
- 3 replies
- 590 views
-
-
பரவிப்பாஞ்சானில் 3.5 ஏக்கர் காணி விடுவிப்பு -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் 3 ½ ஏக்கர் காணி, இன்று புதன்கிழமை (31) விடுவிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். பரவிப்பாஞ்சானில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையில் 4 ஆவது கட்டமாக இது அமைந்துள்ளது. காணிகளை விடுவிக்குமாறு அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மேற்கொண்ட தொடர் போராட்டம் மற்றும் கோரிக்கைகள் காரணமாக முதற்கட்டமாக ஒரு தொகுதி காணியும், இரண்டாம் கட்டமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் 4.5 ஏக்கர் காணி விடு…
-
- 1 reply
- 450 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை திருப்திபடுத்த படைவீரர் நினைவுத் தூபிகள் அகற்றப்படுகின்றன – மஹிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை திருப்திபடுத்தும் நோக்கில் படைவீரர் நினைவுத் தூபிகள் அகற்றப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். குருணாகல் மாலிகாபிட்டி பகுதியில் எதிர்வரும் 4ம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை திருப்திபடுத்தும் நோக்கில் மாலிகபிட்டியவிற்கு அருகாமையில் அமைந்துள்ள படைவீரர் நினைவுத் தூபி அகற்றப்பட உள்ளதாகத் தமக்க தகவல் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 403 views
-
-
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்குக் கடத்தப்பட்ட தங்க பிஸ்கட்டுகள் பிடிப்பட்டது யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இருந்து இந்தியாவுக்குக் கடல் மார்க்கமாகக் கடத்திச் செல்லப்பட்டதாகக் கருதப்படும் ஐந்தரை கிலோ நிறையுடைய தங்க பிஸ்கட்டுகளை காங்கேசன்துறை கடற்படையினர் கைப்பற்றியிருக்கின்றனர். சிறிய ரக படகொன்றில் இந்தக் கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரைக் கடற்படையினர் கைது செய்துள்ளதுடன், அவர்கள் பயணம் செய்த படகையும் கைப்பற்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் நூறு கிராம் எடையுள்ள 55 தங்க பிஸ்கட்டுகள் என்று கடற்படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவல் ஒன்றையடுத்து 30-ஆம்தேதி காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைப்ப…
-
- 0 replies
- 649 views
-
-
பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்ளாது நுகேகொடை வழியாக தும்முல்ல சந்தியின் ஊடாக கொள்ளுபிட்டி வரை வந்த பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கொள்ளுபிட்டி சந்தியில் வைத்து இந்த கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/180845/பல-கல-க-கழக-ம-ணவர-கள-ன-ப-ரண-ம-த-கண-ண-ர-ப-ப-க-ப-ரய-கம-#sthash.vpdN4nHd.dpuf
-
- 0 replies
- 217 views
-
-
கிரிக்கெட் ரசிகர்கள் மீது கண்ணீர் புகைப்பிரயோகம் இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் தம்புள்ளை விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற இறுதி, ஒருநாள் போட்டியை பார்வையிடுவதற்காக சென்றிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் மீது பொலிஸார், தண்ணீர் தாரைப்பிரயோகம் மேற்கொண்டதுடன் கண்ணீர்ப் புகைப்பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். இறுதிப் போட்டியை பார்வையிடுவதற்கு தங்களுக்கு டிக்கெட் கிடைக்காமையால், பெருந்திரளான ரசிகர்கள், குருணாகல்-கொழும்பு பிரதான வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை களைப்பதற்கே பொலிஸார், தண்ணீர் தாரைப்பிரயோகம் மேற்கொண்டதுடன் கண்ணீர்ப் புகைப்பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். - See mor…
-
- 0 replies
- 388 views
-
-
இலங்கை விவகாரத்தில் வகித்த பங்கு நல்ல பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளதாக நோர்வேயின் முன்னாள் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.1998ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான ஏற்பாட்டாளராக சொல்ஹெய்ம் கடமையாற்றியிருந்தார்.இந்தக் குறிப்பிட்ட காலப்பகுதியில் பல முக்கிய விடயங்களை தாம் கற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.அரசியல் தலைவர்கள், கெரில்லா தலைவர்கள், பயங்கரவாதத் தலைவர்கள் போன்ற அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் சில வேளைகளில் சில தரப்பினர் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள விரும்பாத போதிலும் பேச்சுவார்த்தைகளை கைவிடக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எரிக் சொல்ஹெய்…
-
- 5 replies
- 677 views
-
-
நல்லூர்த் திருவிழாவுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து தற்போது இடம்பெற்று கொண்டிருக்கின்ற நல்லூர்க் கந்தனின் தேர்த்திருவிழாவுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி வாழ்த்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு தமிழ் மிரர் பத்திரிகையால் வெளியிடப்படும் இந்த விசேட மலருக்கு எனது வாழ்த்துச் செய்தியினை அனுப்பி வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். நம்நாட்டின் பிரசித்தி பெற்ற இந்து சமய வழிப்பாட்டுத் தலங்களில் நல்லூர் கந்தசுவாமி திருத்தலம் முதன்மையானதாகும்.…
-
- 4 replies
- 677 views
-
-
பணம் கொடுத்து நாட்டை விட்டு தப்பினார்களா விடுதலைப் புலிகள்? இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற போது, பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு பணம் கொடுத்து, 200-க்கும் மேற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நாட்டை விட்டு தப்பியோடியதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கோப்புப் படம் காணமால் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார். இறுதிக் கட்டப் போர் நடைபெற்ற போது 200-க்கும் மேற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் சமரவீர, இவர்களுக்குள் அந்த அமைப்பின் முக்கிய தலைவர்…
-
- 8 replies
- 999 views
-
-
கடுங்காற்று: 20 வீடுகள் சேதம்... அம்பாறையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (30) இரவு, இரண்டு நிமிடங்கள் வீசிய கடுங்காற்றினால் 20 வீடுகள் சேதமாகியுள்ளன. (படப்பிடிப்பு: வசந்த சந்திரபால) - See more at: http://www.tamilmirror.lk/180833/கட-ங-க-ற-ற-வ-ட-கள-ச-தம-#sthash.32KsBgbN.dpuf
-
- 0 replies
- 365 views
-
-
மண்ணுக்குள் புதையுண்ட ரோலர் இயந்திரம் : மக்கள் பெரும் அச்சத்தில்.! கினிகத்தேனை - பொல்பிட்டிய புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு நீர் உள்வாங்கும் சுரங்கப்பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோலர் இயந்திரம் மண் தாழிறக்கத்தால் முற்றாக மண்ணால் புதையுண்டிருப்பதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கும் பொலிஸார், சுரங்கப்பாதையில் மேற்புற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளில் சில வீடுகள் சரிந்து விழும் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்தனர். ஏற்கனவே இவ்விடத்தில் 50 அடி ஆழத்தில் வீடு ஒன்று புதையுண்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளத…
-
- 0 replies
- 457 views
-