Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சமஷ்டி முறையை இலங்கையில் பசைப்போட்டு ஒட்ட முடியாது : சுவிஸ் தூதுவர் சுவிட்ஸர்லாந்தின் சமஷ்டி முறையை இலங்கையில் பசைப்போட்டு ஒட்ட முடியாது. ஆனால் அதிகார பகிர்வை, ஓரு நாட்டை பிளவுபடுவதும் அலகாக கருத்துப்பட கூறுவது தவறானது. உலகில் ஐம்பதற்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகாரப் பகிர்வை அடிப்படையாக கொண்ட சமஷ்டி முறையிலான நிர்வாகம் காணப்படுகின்றது. இங்கு தனி நாடாக அதிகார பகிர்வை உள்வாங்கிய அலகுகளை கருதுவதில்லை என இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் ஹெயின் வோல்கர் நெடர்குன் தெரிவித்தார். போரின் பின்னரான இலங்கையின் முன்னேற்றங்கள் வரவேற்கப்பட வேண்டிய விடயங்களாகும். ஆனால் கடந்த கால மோதல்களுக்கு தீர்வு காண அவை போதுமானதல்ல. மாறாக அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாழ…

  2. கூட்டு எதிர்கட்சியின் எதிர்ப்பு பேரணி வரலாறு படைக்கும் (படங்கள் இணைப்பு) (கா. சந்திரன்)நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் மேற்கொள்ளப்பட உள்ள எதிர்ப்பு பேரணி வரலாறு படைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்துக்கு எதிராக மஹிந்த தரப்பு ஆதரவாளர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் கூட்டு எதிரணியினர் கண்டியில் மேற்கொள்ள உள்ள பாத யாத்திரையில் பொது மக்களை ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கும் வகையில் இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக கூட்டு எதிர்க்கட்சியினர் துண்டு பிரசுரங்களை பகிர்ந்தளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அங்கு மேலும் கருத்து தெரிவித்த ப…

  3.  வெல்லாவெளியில் மூவர் கொலை -ஏ.எச்.ஏ.ஹுஸைன் மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/177760/வ-ல-ல-வ-ள-ய-ல-ம-வர-க-ல-#sthash.TUAPeLXv.dpuf  முக்கொலை... மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேர், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். (படங்கள்: வசந்த சந்திரபால) …

  4. சாவகச்சேரி சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு -வி.விஜயவாசகன், ரொமேஸ் மதுசங்க சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் சிற்றூழியர்கள், இன்று திங்கட்கிழமை (25), 3 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அச்சுவேலி வைத்தியசாலையில் கடமையாற்றும் சிற்றூழியர் ஒருவர், கடந்த வாரம் பொதுமகன் ஒருவரால் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும், அதற்கு நீதி கோரியுமே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கைகலப்பில் ஈடுபட்டு படுகாயமடைந்த ஒருவரை, அச்சுவேலி வைத்தியசாலைக்கு கடந்த 23ஆம் திகதி சிகிச்சைக்கு கொண்டு சென்றவர்கள், வைத்தியசாலையில் நின்றவர்களுடன் முரண்பட்டு, அங்கு கடமையாற்றும் சிற்றூழியரை கடுமையாக தாக்கியுள்ளனர். …

  5. புண்ணிய பூமியில் படகுத் துறையா? சைவசமய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) மாலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகவும், யாழ்ப்பாணத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாகவும் திகழும் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு அண்மையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியில், மீன்பிடி இறங்குதுறைக்கான ஆரம்ப கட்டப் பணிகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ´புண்ணிய பூமிய…

  6. யாழில் கொடுரமான முறையில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை யாழ் - சங்காணை பகுதியில் 54 வயது முதியவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அராலி கிழக்கு ஐயனார் கோவிலடி பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் ஞானரத்தினம் என்பவரே, இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று காலையில் சங்காணை சந்தைக்கு பொருட்கள் வாங்குவதற்கு சென்றுள்ளார். பின் வீடு திரும்பும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அராலி - சங்கானை வீதியில் தலைவேறு உடம்பு வேறாக வெட்டப்பட்ட நிலையில் இவர் சடலமாக காணப்பட்டுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் சடலத்தினைப் பார்வையிட்டுள்ளனர். இது குறித்த மேலதிக வி…

  7. பரவிப் பாஞ்சானில் ஒருபகுதி காணிகளை விடுவிக்க நடவடிக்கை- கிளிநொச்சி பரவிபாஞ்னில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பரவிப் பாஞ்சான் ஒருபகுதி காணிகளை உடனடியாக விடுவிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார் கடந்த பதின்மூன்றாம் திகதி பரவிப் பாஞ்சான் காணிகளை விடுவிக்க கோரி காணி உரிமையாளர்கள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மகஜா் ஒன்றை கையளித்தனர் அதற்கான பதிலை எதிர்பார்த்து இன்றைய தினம் 25-07-2016 பத்து மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்த வேளையே அவர்…

  8. தெற்கிலே சிங்களம் மட்டும் என்றால் வடக்கில் தமிழ் மட்டும் என்பதே பதிலடி Posted on July 24, 2016 தெற்கிலே சிங்களம் மட்டும் என்ற கொள்கை முன்னெடுக்கப்பட்டால் அதற்கு பதிலடியாக வடக்கில் தமிழ் மட்டும் என்ற கொள்கை முன்னெடுக்கப்படும். அதேபோல் வடக்கில் தமிழ் மட்டும் என்ற கொள்கை முன்னெடுக்கப்பட்டால் அதற்கு பதிலடியாக தெற்கில் சிங்களம் மட்டும் என்ற கொள்கை முன்னெடுக்கப்படும். யாழ் பல்கலைக்கழக சம்பவத்தை நாம் இப்படித்தான் பார்க்க வேண்டும். அச் சம்பவம் முழு நாட்டுக்கும் தந்திருக்கும் செய்தி இதுதான். தென்னிலங்கையில் உள்ள பல்கலைக்கழக மாணவர் மற்றும் பேராசிரியர் சமூகத்துக்கு ஒரு யோசனை சொல்ல விரும்புகிறேன். முடியுமானால், இங்கே உங்கள் பீடங்களில் நிகழ்ச்சிகளை …

    • 2 replies
    • 440 views
  9. சகவாழ்வா? இனவாதமா? என சிங்கள மக்கள் முடிவு செய்ய வேண்டும் ; அமைச்சர் மனோ கூட்டு எதிரணியின் உத்தேச பாதயாத்திரை ஒரு இனவாத யாத்திரை. இதனை நிராகரிப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு நல்ல செய்தியை சிங்கள மக்கள் தர வேண்டும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பதுளை ஹாலி-எலவில் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேராவினால் நேற்று நடத்தப்பட்ட ‘சகோதரத்தவ விளையாட்டு விழாவில்’ அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், கூட்டு எதிரணியின் உத்தேச பாதயாத்திரை ஒரு இனவாத யாத்திரை. மேல…

  10. வடக்கு மாகாணசபையை புறக்கணித்து வடமாகாண மீள்குடியேற்ற செயலணி விரிவாக்கம் வடக்கு மாகாணசபையை புறந்தள்ளி அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் உருவாக்கப்பட்ட வடமாகாண மீள்குடியேற்ற செயலணியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு இணைத்தலைவர்களைக் கொண்டதாக விரிவாக்கியுள்ளார். போரினால் இடம்பெயர்ந்த, சிங்கள், முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக, ரிசாத் பதியுதீன் தலைமையில், அமைச்சர் பைசர் முஸ்தபாவை உள்ளடக்கிய செயலணி ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி அளித்திருந்தது. இந்த மீள்குடியேற்ற நடவடிக்கை வடமாகாணத்தில் உள்ள பாரம்பரிய சிங்களக் குடியேற்றக் கிராமங்களையும், திருகோணமலை மாவட்டத்தில் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள எல்லைக் கிராமங்களையும்…

    • 2 replies
    • 479 views
  11.  கவனயீர்ப்பு போராட்டம் -தீசான் அஹமட் அரசாங்கத்தினால் வட, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பகுதியளவில் வீடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் குச்சவெளி பிரதேச செயலகத்தில் பக்கச்சார்புகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, இன்று (25) காலை குச்சவெளி இரணைக்கேணி 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஏ.எம்.எம்.சியாம் என்பவர், கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். தகுதியானவர்களுக்கு பதிலாக தகுதியற்றவர்களுக்கு இவ்வீட்டுத் திட்டத்தில் வீடுகள் வழங்கப்படுவதற்கு குச்சவெளி பிரதேச செயலகத்தினால் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்…

  12. தமிழ் தின போட்டியில் மட்டு. மாணவி சாதனை. 2016ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் தின போட்டியில் தனி இசைப்போட்டியில் மட்டக்களப்பு மாணவி முதலிடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார். மட். வின்சன்ட் மகளிர் தேசிய உயர்தரப் பாடசாலை மாணவி சிவநாதன் சிவஸ்சியா முதல் இடத்தினைப் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். அகில இலங்கை ரீதியான தமிழ் தின போட்டியில் ஐந்தாம் பிரிவில் தனி இசைப்போட்டியில் சிவநாதன் சிவஸ்சியா இந்த முதல் இடத்தினைப்பெற்றுள்ளார். மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய உயர்தரப் பாடசாலையில் 13ம் தரத்தில் கலைப்பிரிவில் கற்றுவரும் இவர் பாடசாலையில் பல்வேறு பகுதிகளில் …

  13.  முத்தம் கொடுத்த இளைஞனுக்கு பிணை செல்வநாயகம் கபிலன் பெண்ணொருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததுடன், அப்பெண்ணுக்கு பலவந்தமாக முத்தம்கொடுத்த குற்றச்சாட்டில் கைதான தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனை, மல்லாகம் மாவட்ட பதில் நீதவான் என்.தம்பிமுத்து, 50 ஆயிரம் ரூபாய் சரீரரப்பிணையில் செல்லுமாறு உத்தரவிட்டார். இதேவேளை, சனிக்கிழமை தோறும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி கையொப்பம் இடுமாறும் அவ்விளைஞனுக்கு நீதவான் உத்தரவிட்டார். தெல்லிப்பழை மணல்குளம் பகுதியில் இச்சம்பவம் சனிக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸில் ச…

  14. மஹிந்த ராஜபக்ஷ புதிய அரசியலமைப்பை எதிர்ப்பது எந்த அடிப்படையில் ? - ஜனாதிபதி நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவையென்றும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்திய மஹிந்த ராஜபக்ஷ இன்று புதிய அரசியலமைப்பை எதிர்பை எதிர்ப்பது எந்த அடிப்படையில் என கேள்வி எழுப்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,சர்வதேசத்திற்கு நாட்டை காட்டிக் கொடுக்கவில்லையென்றும் எனக்கு சர்வதேசத்துடன் எந்தவிதமான தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலும் கிடையாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தவிசாளரும், அமைச்சருமான மறைந்த தர்மசிறி சேனாநாயகவின் 16 ஆவது வருடாந்த நினைவு தின நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை வரகாபொல நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதிய…

  15. பாதயாத்திரையை யாரும் தடுக்க முடியாது :ஜனாதிபதியும் பிரதமரும் கடும் முயற்சி என்கிறார் தினேஷ் அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிரணி நடத்தவுள்ள பாதயாத்திரையை தடுத்து நிறுத்த பல்வேறு முயற்சிகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றன. நீதிமன்றம் வரை சென்று எமது பாதயாத்திரையை நிறுத்தவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார் என பொது எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். பிரதமர் என்ன செய்தாலும் எமக்கு எதிராக என்ன முயற்சிகளை எடுத்தாலும் எமது பாதயாத்திரையை தடுக்க முடியாது. தீர்மானித்தபடி எதிர்வரும் 28ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பதையாத்திரை இடம்பெற்றே தீரும் எனவும் அவர் குறிப்பிட்டார். பொது எதிரணியின் பாதயாத்திரை தொடர்பில் வின…

  16. “தமிழை வளர்த்த பனையை வளர்ப்பது தமிழர் கடமை” “தமிழை வளர்த்த பனையை வளர்ப்பது தமிழர் கடமை” — பனை அபிவிருத்தி வாரத் தொடக்க விழாவில் அமைச்சர் பொ. ஐங்கரநேசன். தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் ஓலைச் சுவடிகளிலேயே எழுதப்பட்டது. சங்க இலக்கியங்கள், பதினெண்கீழ் கணக்கு நூல்கள், தேவாரத் திருமுறைகள், சித்த மருத்துவ நூல்கள் என்று தமிழை வளப்படுத்திய அத்தனை நூல்களும் ஓலைச் சுவடிகள் வழியாகவே எங்களிடம் கையளிக்கப்பட்டன. தமிழை வளர்த்தது பனை. பனை இல்லாமல் இருந்திருந்தால் தமிழுக்கு இவ்வளவு வளங்களும் வந்து சேர்ந்திராது. தமிழை வளர்த்த பனையை வளர்ப்பது எமது கடமை என்று வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடமாகாண பனை…

  17. தமிழ் - சிங்கள மாணவர்களிடையே மோதல் ; யாழ்.பல்கலைக்கழகத்தில் பதற்றம் (காணொளி இணைப்பு ) (ரி.விரூஷன்) யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்குமிடையில் மோதல் இடம்பெற்றுவருவதால் யாழ்.பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். யாழ்.பல்கலைக்கழகத்தின் 2 ஆம் வருட விஞ்ஞானபீட மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றவேளையிலேயே இம் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வழமைபோன்று குறித்த நிகழ்வில் தமிழ்கலாசார முறைப்படி மேளதாள வாத்தியங்களோடு மாணவர்களின் வரவேற்கு நிகழ்வு இடம்பெறுவதாகவும் இம்முறை வழமைக்கு மாறாக கண…

  18. அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் ஊடகங்களுக்கு பிரதமர் எச்சரிக்கை அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் ஊடகங்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் தனியார் ஊடகங்களுக்கு பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஊடகங்களுக்கு இடமளிக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எம்முடன் விளையாட முயற்சிக்க வேண்டாம் என பிரதமர் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை பணியிலிருந்து நீக்குவதற்கு ஒரு பத்திரிகை முயற்சிப்பதாகவும் மற்றுமொரு பத்திரிகை நாட்டின் பொருளா…

    • 1 reply
    • 257 views
  19. பெற்ற தந்தையை இரண்டு புதல்வர்கள் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். அனுராதபுரம் கெபிற்றிக்கொல்லாவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய புதல்வர்கள் தலைமறைவாகியுள்ளனர். கடந்த 22ம் திகதி புதல்வர்களின் தாக்குதலுக்குள்ளான தந்தை பதவியா மருத்துவனையில்அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் பொலிஸ் உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது. மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவித்து குறித்த நபரைவைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர். பதவியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் பின்னர்; அனுராதபுரம்மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அனுராதபுரம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த க…

  20. யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதலை பயன்படுத்தி, தமிழ் மாணவர்கள் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திணித்து அவர்களை ஒடுக்கும் சதித் திட்டமொன்று அரங்கேற்றப்பட்டு வருவதாக நவசமசமாஜ கட்சிகட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன குற்றம்சாட்டியுள்ளார். தென்பகுதியைச் சேர்ந்த இனவாதிகளின் இந்த முயற்சிக்கு அரசாங்கம் துணை போனால் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவோ, தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவோ முடியாது போய்விடும். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று. தமிழ் மாணவர்களுக்…

  21. ஒரு பல்கலைக்கழகம் தனது பிரதேசத்தை சேர்ந்த‌ கலாசாரத்துக்கு முக்கியதுவம் கொடுப்பதை யாராலும் தவறென குறிப்பிடமுடியாது என களனி பல்கலைகழகத்தின் வரலாற்று பேராசிரியர் கல்கந்த தர்மானந்த சேரர் குறிப்பிட்டுள்ளார். மேலும், களனிப் ப‌ல்கலைக்கழக்த்திலோ பேராதெனிய பல்கலைக்கழகத்திலோ பெரும்பாலான நிகழ்வுகள் அவர்களின் பிரதேசம் சார்ந்த முறைப்படியே நடைபெற்று வருவதால் யாழ்ப்பான பல்கலைக்கழகமும் தமது பிரதேச கலாசாரத்துக்கு முன்னுரிமை கொடுப்பதனை தவ‌றென கூறமுடியாது. தமிழர்கள் சிங்களவர்களை தாக்குகிறார்கள் என தென்னிலங்கையிலும், இராணுவத்தின் துணையுடன் சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களை தாக்குகிறார்களென வடக்கிலும் ஒரு பயப்பீதி உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் நிலமை அவ்வாறல்ல, பல…

  22. உறுகாமத்திட்டத்தின் கீழ் உள்ள சிறுபோக வேளாண்மைச் செய்கை அறுவடை விழா சித்தாண்டி வயல் பிரதேசத்தில் இன்று நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் முரளிதரன் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பொன்றை விடுத்துள்ளார். குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவிக்கையில், குறித்த அறுவடை நிகழ்வுக்கு நீண்ட தூரம் இருந்து வருகை தந்திருக்கும் அமைச்சர் நீர்பாசன மற்றும் நீர் வள முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜித் விஜிதமுனி சொய்சா மற்றும் பிரதி அமைச்சர், முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்திருக்கின்றார்கள். இவர்களைப் பாராட்டவ…

    • 1 reply
    • 444 views
  23. விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கமென தேசிய கலந்துரையாடல்கள், சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு காக்கைத்தீவு பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் மனோ கணேசன், அங்கு ஊடகவியலாளர் சிலர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே, விடுதலைப் புலி பயங்கரவாதம் உட்பட அனைத்து பயங்கரவாதமும் ஒழிக்கப்பட்டு நாட்டை முன்னோக்கி நகர்த்தும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இந்த நாட்டில் நல்லிணக்கம் அவசியம். இந்த நாட்டில் வாழும் சிங்களம், தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியில் வெட்டிக்கொள்ளாமல், கொலைசெய்யாமல் நாம் முன்னோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றோம். அதுமட்டுமன்றி கடந்…

    • 1 reply
    • 534 views
  24. கொக்காவில் விபத்தில் இருவர் பலி -எஸ்.என். நிபோஜன் கொக்காவில் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30க்கு இடம்பெற்ற விபத்தில் வவுனியாவைச் சேர்ந்த அல்பட் ஜெயக்குமார் (வயது 24) மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அவரது மனைவியான பிரஷாந்தினி (வயது 23) ஆகியோர் பலியாகியுள்ளனர். அவர்களின் ஒன்றரை வயது குழந்தை காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். யாழிலிருந்து வவுனியாநோக்கி பயணித்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் கொழும்பிலிருந்து யாழ்நோக்கி பயணித்த மினி பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதுண்டதிலேயே இவ்விருவரும் பலியாகியுள்ளது. சாரதி, அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்…

  25. மட்டக்களப்பு உறுகாம திட்டத்தின் கீழ் உள்ள சிறுபோக வேளாண்மை கண்டத்திற்குரிய அறுவடை விழா சித்தாண்டி சின்னாளன்வெளி கண்டத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மன்) நீண்ட காலத்திற்குப்பின் இன்றைய தினம் நடைபெற்ற அறுவடை விழாவில் கலந்து கொண்டிருந்தார். அமைச்சர் காமினி விஜித் விஜிதமுனி சொய்சா கலந்துகொண்ட குறித்த அறுவடை நிகழ்வுக்கு மிகவும் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன், அதிதிகளுக்கு பொன்னாடை மற்றும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. குறித்த, நிகழ்வுக்கு நீர்பாசன மற்றும் நீர் வள முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜித் விஜிதமுனி சொய்சா, அமைச்சின் செய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.