ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
ஜனாதிபதி ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ள ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என சிறீரெலோ இயக்கத்தின் யாழ். மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்திருந்தும், இதுவரையில் அவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. நடைபெற்று முடிந்ததேர்தலின் போது, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ளும…
-
- 0 replies
- 366 views
-
-
இனப்படுகொலைக்கான நீதியில்தான் ஈழத் தமிழரின் இருப்பு! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்: (UNHRC இன் 32 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மனித உரிமைப் பேரவையின் 32ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் முக்கிய இடத்தை வகிக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இலங்கை தொடர்பில் பேரவையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது பிரேரணையின் முக்கிய விடயமாக கருதப்பட்டது. இந்தப் பிர…
-
- 0 replies
- 370 views
-
-
இலங்கை குறித்த அறிக்கையை எதிர்பார்த்திருக்கிறோம் : ஜெனிவாவில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை விவகாரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை கள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைனின் வாய்மூல அறிக்கையை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம். அதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை தொடர்பான விபரமான அறிக்கையை முன்வைக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜெனிவாவுக்கான பிரதிநிதி ரொடரிக் ச்ரிவேன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமானது. அதில் உரை நிகழ்த்துகையிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜெனிவாவுக்கான பிரதிநிதி ரொடரிக் ச்ரிவேன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 286 views
-
-
கரப்பான்பூச்சியை கண்டு பயந்த ஹொங்கொங் நாட்டு பெண்ணுக்கு உதவுவது போல் அவருடன் பாலியல் சேட்ட்டையில் ஈடுபட்ட ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றது. சுண்டுக்குழி பகுதியில் வங்கி முகாமையாளர் ஒருவர் வீட்டின் அறைகளை வாடகைக்கு கொடுத்துள்ளார். அங்கு தங்கியிருந்த ஹொங்கொங் நாட்டு பெண் ஒருவர் அறைக்குள் கரப்பான்பூச்சியைக் கண்டுள்ளார். அலறியடித்துக்கொண்டு அங்கிருந்த ஊழியரிடம் இதனை தெரிவித்துள்ளார். பின்னர் கரப்பான்பூச்சிக்கு மருந்து அடிக்க வந்த இளைஞர் பெண்ணை கட்டிப் பிடித்து தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்த போது, அப் பெண்மணி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அத்துடன், குறித்த வீட்டிற்கு பொலிஸார் …
-
- 4 replies
- 643 views
-
-
கூடிக் கலந்து தீர்மானங்களை எடுக்காமல் தான்தோன்றித்தனமாகத் தீர்மானங்களை எடுப்பதால் தான் சமூகம் மற்றும் கட்சிப் பிரிவினைகள் ஏற்படுகின்றது என தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாம் கூறுபவற்றை மற்றவர்கள் ஏற்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். இன்னொரு வரும் அவ் வாறே தீர்மானித்து எதிர்பார்க்கின்றார். இதுவே முரண்பாடுகளை அதிகம் வளர்க்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். வடலியடைப்பு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் அனுசரணையின் கீழ் இயங்கும் அறிவகம் கணனிக் கல்வி நிலையத்தில் கணனி மென்பொருள் ஆரம்பக் கற்கை நெறிகளை நிறைவு செய்த மாணவ மாணவிகளு க்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் நேற்றைய தினம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெர…
-
- 0 replies
- 312 views
-
-
முகப்புப் புத்தகம் மற்றும் கூகுள் நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சிறீலங்காவுக்குப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ மற்றும் சாலக ரத்நாயக்கவின் அழைப்பையேற்றே மேற்படி நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளர்களான மார்க் சூக்கம்பேர்க் மற்றும் சுந்தர்ப்பிச்சை ஆகியோரே சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். http://thuliyam.com/?p=30175
-
- 0 replies
- 296 views
-
-
1990.06.11 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் பொலிஸ் நிலையங்கள் விடுதலைப்புலிகளால் சுற்றி வளைக்கப்பட்ட போது, மேலிடத்து அரச உத்தரவின் பேரில் ஆயுதங்கள் தம்வசமிருந்தும் விடுதலைப்புலிகளுக்கு தாக்குதல் நடத்தாமல் தம்மிடமிருந்த அனைத்து ஆயுதங்களையும் விடுதலைப்புலிகளிடம் ஒப்படைத்து விட்டு, சரணடைந்த 800 பொலிஸ் அதிகாரிகளில் 600 பேர் தமிழ் பேசும் சமூகத்தைச்சார்ந்த முஸ்லிம்களாவார்கள். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச புதிய ஆயுதங்களை கிழக்கு பொலிஸ் நியங்களுக்கு வழங்கி, ஒரு வாரத்தில், கிழக்கு விடுதலைப்புலிகளின் கட்டளைத்தலைமைகளான கருணா அம்மான் மற்றும் கரிகாலன் தலைமையிலான குழுவினரிடம் ஒப்படைக்க, 800 பொலிஸ் பாதுகாப்புப் படையினரின் உயிர் தாரை வார்க்கப்பட்டது. சரணடைந்தவர்கள் திருக்கோவில் பகு…
-
- 0 replies
- 344 views
-
-
இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்பு மறு சீரமைப்பு முயற்சியில் மக்கள் கருத்தறிவதற்காக உருவாக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை அரசியலமைப்பு மறுசீரமைப்பு பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி மக்கள் கருத்தறியும் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஆட்சிமாற்றம் இடம்பெற்றதன் பின்னர் அரசாங்கம் அரசியலமைப்பு மறுசீரமைப்பு முயற்சியினை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக மக்களுடைய கருத்துக்கள் அறிந்து கொள்வதற்காக மக்கள் கருத்தறியும் குழு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த குழு தமது பணிகளை நிறைவு செய்து தமது இறுதி அறிக்கையை அரசியலமைப்பு பேரவையிடம்…
-
- 0 replies
- 278 views
-
-
யாழ்ப்பாணம் - ஆவரங்கால் சிவன்கோவிலுக்கு அருகில் பருத்தித்துறை வீதியில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஊனமுற்ற வயோதிபர் உற்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது, வயோதிபர் ஒருவர் ஊனமுற்றோருக்கான மூன்று சில்லு சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக மோதியுள்ளது. இதன் காரணமாகவே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும் சம்பவ இடத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இருவரும் படுகாயமுற்றதால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், வீதியோரம் காயங்களுடன் இருந்த ஊனமுற்ற வயோதிபருக்கு ச…
-
- 2 replies
- 520 views
-
-
(பிரான்ஸ் தமிழர் உரிமை மையத்தின் பொதுச்செயலாளர் ச.வி.கிருபாகரன், ஐரோப்பாவில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறார். கடந்த 25வருடங்களுக்கு மேலாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டங்களில் கலந்து கொண்ட அனுபவங்களை உடைய கிருபாகரன் இலங்கை தமிழர் விடயத்தில் ஐ.நா.மனித உரிமை பேரவையின் அண்மைக்கால நிலைப்பாடுகள் பற்றி வழங்கிய விசேட செவ்வி ) கேள்வி - கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்பது மாதங்கள் கடந்துள்ளன. இதில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? பதில் - எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனால் சர்வதேச சமூகத்திற்கு ஏதோ செய்கிறோம் என்பதை காட்டுவதற்காக சிறிலங்கா அரசாங்கம் தந்த…
-
- 0 replies
- 311 views
-
-
வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டாம் என கண்டி அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வராகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார். அஸ்கிரிய மகாநாயக்கரை அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று சந்தித்த போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சலாவ இராணுவ ஆயுதக் களஞ்சியம் வெடித்துச் சிதறியதனைத் தொடர்ந்து வடக்கு இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது. எனினும் வடக்கின் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது. இராணுவ முகாம்களை அந்தந்த இடங்களில் பாராமரிப்பதன் மூலம் நாட்டையும் நாட்டு மக்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்து கொள்ள முடியும். நாட்டின் அனைத்து இன சமூகங்களுடனும் புரிந்துணர்வுடன் செயற்படுதல் உலக நாடுகளுடன் நட்புடன் செயற்படு…
-
- 0 replies
- 286 views
-
-
மேர்வினுக்கு 40 வருடங்கள் சிறை குடு மேர்வின் என்றழைக்கப்படும் வேலாயுதன் மெனியஸூக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய கொழும்பு மேல் நீதிமன்றம், அவருக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக இனங்கண்டு, அவருக்கு தலா 20 வருடங்கள் என்றடிப்படையில் 40 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. - See more at: http://www.tamilmirror.lk/174594/ம-ர-வ-ன-க-க-வர-டங-கள-ச-ற-#sthash.GH2mxqn0.dpuf
-
- 0 replies
- 325 views
-
-
ஐ.நா தீர்மானத்தை அமுல்படுத்த அனைத்து இலங்கையர்களும் பங்களிப்பு செய்ய வேண்டும் - அல் ஹூசெய்ன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு அனைத்து இலங்கையர்களும் அர்த்தபூர்வமான பங்களிப்பினை வழங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சஹிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். தீர்மானங்களை அமுல்படுத்தும் போது அனைத்து இலங்கையர்களதும் பங்களிப்பது அவசியமானது என இன்றைய தினம் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32ம் அமர்வுகளின் ஆரம்ப உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இடைக்கால நீதி முழு அளவிலான தந்திரரோபய அடிப்படையில் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டுமென தெரிவித்துள்…
-
- 1 reply
- 255 views
-
-
பசில் ராஜபக்ஸ பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த கடந்த கால ஆட்சியின் போது, அவரது விலை மதிப்பான நாய்கள் இரண்டை பராமரிக்கும் பொறுப்பானது 6 இராணுவ சிப்பாய்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இராணுவ சிப்பாய்கள் பசிலின் நாய்களை பராமரித்தல், உணவுகளை வழங்குதல், மருந்து கொடுத்தல் சொல்லும் கட்டளைகளுக்கு கீழ் பணிய வைத்தல் போன்ற பயிற்சிகளை வழங்கி வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த இராணுவ சிப்பாய்கள் 'நாய் அணி' என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பசில் ராஜபக்ஸ கோல்டன் ரிட்ரிவர் எனும் இனத்திலான நாயை அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும் இதன் பெறுமதி 7 இலட்சம் ரூபா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில…
-
- 0 replies
- 333 views
-
-
கடந்த சனிக்கிழமை இலங்கையில் இருந்து சென்ற 44 அகதிகள், தாம் சென்ற படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இந்தோனேஷியாவில் தவித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களை மீண்டும் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்க இந்தோனேஷிய அதிகாரிகள் தீர்மானம் எடுத்திருப்பதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்டுள்ளதாக லோக்ங்க (Lhoknga) மாவட்ட இராணுவத் தலைமை அதிகாரி தாருல் அமிக் தெரிவித்துள்ளார். குறித்த படகை சோதனைக்குட்படுத்திய போது முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய் ஒருவர் இருந்ததாகவும், தகுந்த பயணச்சீட்டுகள் கூட இவர்களிடம் இல்லை எனவும் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இல…
-
- 0 replies
- 358 views
-
-
வடக்கில் உள்ள மேலதிகமான இராணுவ முகாம்களை அகற்றுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் வடக்கில் இருந்து இராணுவத்தினரை முற்றாக வெளியேற்ற வேண்டும் என்ற யோசனைக்கு தமது கட்சி இணங்காது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். வடக்கில் மக்களின் சொத்துக்களை இராணுவம் தொடர்ந்தும் பயன்படுத்தி வருவதாகவும் அது அவசிமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் இராணுவம் தொடர்ந்தும் விடுதிகளையும் வேறு வர்த்தகங்களிலும் ஈடுபட்டு வருகிறது. தேசிய பாதுகாப்புக்கு தேவையான முகாம்களை மாத்திரம் வைத்து கொண்டு ஏனைய காணிகளை பொதுமக்களிடம் மீள கையளிக்க வேண்டும் எனவும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். http://ww…
-
- 0 replies
- 308 views
-
-
'மஹிந்த, சர்வதேசத்துக்கு பொய் சொல்கின்றார்' முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையில் பொய் பிரசாரம் செய்தது போதாதென்று இப்போது சர்வதேச ரீதியில் பொய் கூறுகின்றார் என அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 'மத்தல சர்வதேச விமான நிலையம் இன்னும் நெற்களஞ்சியசாலையாக பயன்படுத்தப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ, ஜப்பானுக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது தெரிவித்துள்ளார். ஆனால் அங்கிருந்த நெல், கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே அகற்றப்பட்டு விட்டன' என அமைச்சர் மேலும் கூறினார். …
-
- 1 reply
- 297 views
-
-
யாழ் நீதிமன்ற தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு:- யாழ். நீதிமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதம் 20ம் திகதி புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த முற்பட்ட போது, நீதிமன்ற வளாகத்தின் மீது இளைஞர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டனர். இதனுடன் தொடர்புடையதாக கூறப்படும் 130க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். இதன்படி, குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன் முன்னிலையில் இரண்டு பிரிவுகளாக விசாரணைக்கு எடுத்துக்க…
-
- 0 replies
- 225 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் - CHR பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென மனித உரிமை மற்றும் ஆய்வுகளுக்கான நிலையம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 20 பக்கங்களைக் கொண்ட நீண்ட அறிக்கையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32ம் அமர்வுகள் ஆரம்பாகியுள்ள நிலையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகள் சந்தேக நபர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதனை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. சந்தேக நபர்களை புனிதர்களாக கருதி செயற்பட வேண்டுமென கோரவில்லை எனவும், ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட நியத…
-
- 0 replies
- 258 views
-
-
'செய்திக்காக சிறுவர்களை பலிகொடுக்காதீர்கள்' 'சிறுவர்கள் தொடர்பில் செய்தி வெளியிடும்போது ஊடகங்கள் தம்மை பற்றி மட்டுமே சிந்தித்து செயற்படுவதுடன் அது தொடர்புடைய சிறுவர்களது எதிர்காலம் குறித்துச் சிந்திப்பதில்லை' என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சகல ஊடகங்களும் சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்களாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி கூறினார். பொலனறுவை ரோயல் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற தேசிய சிறுவர் சபை தேர்தல் மற்றும் தலைமைத்துவ பயிற்சி வேலைத்திட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூற…
-
- 0 replies
- 360 views
-
-
கல்லோயாப் படுகொலைகள் மட்டக்களப்பு அம்பாறை 11. Juni um 21:10 · இன்று ஜூன் 11 - கல்லோயா படுகொலை என்பது ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை விடுதலை பெற்றபின்னர் இலங்கையில் இடம்பெற்ற சிறுபான்மை இலங்கைத் தமிழர் மீதான பெரும்பான்மை சிங்களவரின் முதலாவது பெரும் இனவெறித்தாக்குதல்!! இந்த கோர வெறி தாக்குதல் 1956 ஆம் ஆண்டில் ஜூன் 11 ஆம் நாள் ஆரம்பித்து தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம்பெற்றது. இந்த கொடிய நிகழ்வில் உள்ளூர் பெரும்பான்மையின சிங்களக் குடியேற்றவாதிகள், மற்றும் கல்லோயாக் குடியேற்றத்திட்ட அவையின் ஊழியர்களும் இணைந்து அரச வண்டிகளில் வந்து நூற்றுக்கணக்கான …
-
- 0 replies
- 821 views
-
-
விகாரை ஒன்றுக்கு நன்கொடை சேகரிப்பதாக கூறி, டிக்கெட்டுக்களை விற்பனை செய்து பணத்தினை சேகரித்து வந்த தேரர் உட்பட மூன்று பேரை சிலாபம் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். தான் சேவை புரியும் விகாரையில் கட்டுமான நடவடிக்கைக்காக பணம் தேவைப்படுகிறது எனக் கோரி டிக்கெட் புத்தகங்களை அச்சுபிரதி செய்து விற்பனை செய்துள்ளதால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் இவ்வாறான கட்டுமான நடவடிக்கை இடம்பெறவில்லை என விகாரையின் பங்களிப்பு சபை, பொலிஸாருக்கு அறிவித்துள்ளது. இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து அச்சுபிரதி செய்யப்பட்ட பல டிக்கெட் புத்தகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட தேரர் சிலாபத்தில் உள்ள விகாரை ஒன்றின் தேரர் என்ப…
-
- 1 reply
- 433 views
-
-
இலங்கைப் படையினரின் வெடிபொருள் களஞ்சியங்களை தென்பகுதியில் இருந்து வடக்கு நோக்கி நகர்த்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. சலாவ சிறிலங்கா இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தை அடுத்து, அனுராதபுர மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிய வெடிபொருள் களஞ்சியங்களை அமைக்க இராணுவம் திட்டமிட்டுள்ளதாக அத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சன அடர்த்திமிக்க பகுதியில் அமைந்துள்ள வியாங்கொட மத்திய ஆயுதக் களஞ்சியத்தையும் அகற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெலிசறை, சாலாவ, வியாங்கொட ஆயுதக் களஞ்சியங்கள் மாத்திரம் பாதுகாப்பானவை என்று கருதப்பட்டன. எனினும் சாலாவ ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதால…
-
- 1 reply
- 404 views
-
-
இனி ஒருபோதும் யுத்தம் ஏற்படப்போவதில்லை என தான் நம்புவதாக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்தும் இராணுவத்தினர் வடக்கில் நிலைத்திருப்பது பொதுமக்களின் நன்மைக்காகவென்றும்,அவர்களின் நன்மைக்காக இராணுவம் முழுமூச்சுடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். படைத் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே கட்டளைத் தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் வடக்கில் நிகழும் அனர்த்த நிலைமைகள், வேறு அசம்பாவிதங்களின் போது இராணுவத்தினர் மக்களுடன் இணைந்து சேவையாற்றுகின்றனர். சாதாரண பொதுமக்களின் அனைத்து பிரச்சினைகளையும் அருகில் இருக்கும் படை முகாம்களில் முன்வைத்தால் தீர்வ…
-
- 6 replies
- 1.7k views
-
-
வீட்டு கழிவுப் பொருட்களுக்கு தீ வைத்த பெண் ஒருவர் அதே தீயினுள் கருகி உயிரிழந்துள்ளார் என வலிகாமம் வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வலிகாமம் வடக்கு மக்கள் தங்கிருக்கும் சபாபதிப்பிள்ளை முகாமில் குப்பை கொழுத்திய பெண் ஒருவர் உடம்பில் தீ பற்றிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த முகாமில் வசிந்து வரும் பிரபாகரன் அஸ்ரினா (23) என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 5ம் திகதி குறித்த பெண் குப்பை கொழுத்திவிட்டு அருகில் இருந்த தண்ணீர் தாங்கியில் மண்ணெண்ணை போத்தலை வைத்துள்ளார். இந்நிலையில் மண்ணெண்ணை போத்தல் காற்றினால் குறித்த பெண்ணின் உடலில் விழுந்த நிலையில் …
-
- 1 reply
- 500 views
-