Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கைத்தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கை அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரனான வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், போலியான காணி உறுதிப்பத்திரத்தின் ஊடாகக் காணியை விற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கொழும்பு-10ஐ வசிப்பிடமாகக் கொண்ட, அப்துல் காசிம் மொஹமட் சலானி என்பவர், நவம்பர் மாதம் 16ஆம் திகதியன்று செய்த முறைப்பாட்டுக்கு அமையவே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாக, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவின் கவனத்துக்கே, குற்றப்புலனாய்வுப் பிரிவினர், நேற்று செவ்வாய்க்கிழமை கொண்டுவந்தனர். அதன்படி தலைமன்னாரில் உள்ள 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40 ஏக்கர் காணியே இவ்வ…

    • 4 replies
    • 497 views
  2. ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கைகளே எமது வெற்றியாகும் : ஊழல் எதிரான சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு இலஞ்ச ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக கடந்த ஒன்றரை வருடங்களாக அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளே எமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மேலும் இலங்கையை முற்றாக ஊழல் அற்ற நாடாக உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தலைமையில், லண்டன் நகரில் இடம்பெறகின்ற ஊழல் எதிர்ப்பு சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். இம் மாநாட்டில் கருத்து தெரிவித்த பிரித்தானிய …

  3. சித்திரவதை முகாம்கள் இல்லை : அரசாங்கம் (ப.பன்னீர்செல்வம்) திருகோணமலை கடற்படை முகாமுக்குள் எந்தவிதமான சித்திரவதை முகாம்களும் இல்லையென அரசாங்கம் நிராகரித்துள்ளது. சில இடங்களில் சில பொலிஸார் அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இவை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுமென்றும் அரசு தெரிவித்தது. கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடாகவியலாளர் மாநாட்டிலேயே அரசாங்கம் இத்தகவல்களை அரசு வெளியிட்டது. இங்கு உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரத்தன ஐ.நா. குழுவினர் அரசுக்கு அறிவிக்காமலேயே திருகோணமலையிலுள்ள கடற்படை முகாமு…

    • 1 reply
    • 518 views
  4.  பிரித்தானியாவுக்கு பயணமானார் ஜனாதிபதி பிரித்தானியாவில் நடைபெறும் ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று புதன்கிழமை (11) முற்பகல் லண்டன் பயணமானார். ஜனாதிபதியும் தூதுக்குழுவினரும் இன்று (11) முற்பகல் 10.05க்கு எமிரேட்ஸ் EK 651 விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் பயணமாகினர். பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனின் தலைமையில் பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்குபற்றும் ஊழலுக்கெதிரான சர்வதேச மாநாடு, நாளை வியாழக்கிழமை (12) லண்டன் நகரில் ஆரம்பமாகவுள்ள அதேநேரம், …

    • 13 replies
    • 671 views
  5. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று லண்டனில் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய அரசியல் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்றவர்கள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒரு போர்க்குற்றவாளி என்றும், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கு தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர். 2009ஆம் ஆண்டு மே மாதம், பெருமளவிலான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் சி்றிலங்காவின் பதில் பாதுகாப்பு அமைச்சராக மைத்…

    • 2 replies
    • 722 views
  6. பசில் கைது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/172053/%E0%AE%AA%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%A4-#sthash.UHLn6Sce.dpuf

  7. முன்னாள் போராளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு செல்வநாயகம் கபிலன் தலைச்சுற்று ஏற்பட்டு கீழே விழுந்ததில், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி புதன்கிழமை (11) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பரந்தன் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் விக்னேஸ்வரன் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பில் கடந்த 14 வருடங்களாக இருந்த இவருக்கு கடந்த 06ஆம் திகதி ஏற்பட்ட திடீர் தலைச்சுற்று காரணமாக, தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. உடனடியாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்…

  8. பஷில் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை.! பாரிய நிதி மோசடி ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு மாத்தறை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடுமையான நிபந்தனைகளுடன் சற்றுமுன்னர் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 50 ஆயிரம் ரொக்கப் பிணையிலும் 16 இலட்ச மூன்று சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு வெளிநாட்டிற்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது கடவுச் சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் காலை 9 மணி முதல் 12 மணிக்கு இடையில் நிதி குற்றப் பிரிவுக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட…

  9. முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு ஆரம்ப சுடரினை ஏற்றும் நிகழ்வு செம்மணியில் இடம்பெற்றது முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு ஆரம்ப சுடரினை ஏற்றும் நிகழ்வு யாழ்.மாவட்டத்தில் அதிகளவானவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட செம்மணி பகுதியில் இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றது. வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132080/language/ta-IN/article.aspx

  10. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் வடமாகாணத்தில் 2000 மில்லியன் ரூபா செலவில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை அமைக்க நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது. வவுனியா மாவட்டத்திற்கு என கூறப்பட்டு நிறைவேற்றப்பட்ட இத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வவுனியா மாவட்டத்தில் 5 ஏக்கர் நிலம் கோரப்பட்டது. அதனை ஓமந்தைப் பகுதியில் அமைப்பதன் மூலம் அது உபநகரமாக எழுச்சி பெறுவதுடன் வவுனியாவின் நீண்டகால அபிவிருத்திக்கும் உந்து சக்தியாக அமையும் என வவுனியா மாவட்டத்தைப் பிரதிசித்துவப்படுத்தும் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் வலியுறுத்தி ஓமந்தைப் பகுதியைத் தெரிவு செய்தனர். ஆனால் மத்திய கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் நகரில் இருந்து 2 3 கிலோமீற்ற…

    • 0 replies
    • 332 views
  11. வடக்கு மாகாண சபை தயாரித்த தீர்வுத்திட்ட வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தரிடம் கையளிக்காததால் வடக்கு மாகாண சபையின் இளம் உறுப்பினர்கள் கடும் கோபம் உற்றுள் ளனர் என்பதை நேற்று முன்தினம் நடந்த மாகாண சபைக் கூட்டத்தொடரில் காணமுடிந்தது. வடக்கின் முதலமைச்சர் மீது குற்றம் சுமத்தும் தமது வழமையான நடவடிக்கைக்கு ஒரு நல்ல துரும்பு கிடைத்ததுபோல் இளம் உறுப்பினர்கள் சீறிப் பாய்ந்தனர். வடக்கு மாகாண சபை தயாரித்த தீர்வுத்திட்டத்தை யாரிடம் ஒப்படைக் வேண்டுமோ அவர்களிடம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கையளித்திருந்தார். இந்நிகழ்வு கொழும்பில் நடைபெற்றது. தீர்வுத் திட்ட வரைபை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரிடம் யாழ்ப்பாணத்தில் வைத…

    • 0 replies
    • 463 views
  12. மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் - சந்திரிக்கா மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற கால மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடைபெற்று வரும் விசேட கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் சமாதானத்தை வென்றெடுக்க கடந்த அரசாங்…

  13. யாழிலிருந்து கொழும்பு வரவேண்டிய அதி சொகுசு பஸ் சுவரை இடித்து வீட்டையும் மோதி விபத்துக்குள்ளானது யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு பய­ணிகள் பஸ் ஒன்று நேற்று அதி­காலை புத்­தளம் பகு­தியில் விபத்­துக்­குள்­ளா­னதில் அதில் பய­ணித்­த­வ­ர்களில் ஐந்து பேர் காய­ம­டைந்து புத்­தளம் வைத்­தி­ய­சாலையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக புத்­தளம் பொலிஸார் தெரி­வித்­தனர். யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து பய­ணி­களை ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கிப் பய­ணித்துக் கொண்­டி­ருந்த குறித்த அதி சொகுசு பஸ் நேற்று அதி­காலை 3.15 மணி­ய­ளவில் புத்­தளம் டிப்போ சந்­தி­யி­லுள்ள வீட்டின் மதிலை உடைத்துக் கொண்டு விபத்…

  14. ஜனா­தி­பதி மைத்­திரி பிரி­ட்டன் பிர­தமர் டேவிட் கெம­ரூனை இன்று சந்­திக்­கிறார் இரண்டு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு பிரித்­தா­னி­யா­வுக்குச் சென்­றுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று காலை அந்­நாட்டு பிர­தமர் டேவிட் கெம­ரூனை சந்­தித்துக் கலந்­து­ரை­யா­ட­வுள்ளார். அத்­துடன் ஊழல் ஒழிப்பு தொடர்பில் உலக நாடு­களின் தலை­வர்கள் பங்­கு­பற்றும் சர்­வ­தேச மாநாட்டில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சிறப்­பு­ரை­யாற்­ற­வுள்ளார். ஊழல் ஒழிப்பு தொடர்பில் உலக நாடு­களின் தலை­வர்கள் கலந்து கொள்ளும் சர்­வ­தேச மாநாடு லண்­டனில் இன்று இடம்­பெ­ற­வுள்­ளது. இதில் கலந்து கொள்­வ­தற்­காக உலக நாடு­களின் தலை­வர்கள் மற்றும் சிவில் சமூ­கத்­தின…

  15. மனித உரிமைகள் செயல்திட்டமொன்றை வரைய அமைச்சரவை அனுமதி [ Thursday,12 May 2016, 03:08:20 ] தேசிய மனித உரிமைகள் செயல்திட்டமொன்றை வரைவதற்கு அமைச்சர்கள் மட்டத்திலான குழுவொன்றை அமைப்பதற்‌கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மனித உரிமைகள் தொடர்பான அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொள்ளும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளை இலக்காகக் கொண்டு இந்த செயல்திட்ட வரைபு உருவாக்கப்படவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த யோசனையை அமைச்சரவைக்கு முன்வைத்துள்ளார். நாட்டு மக்களின் மனித உரிமைகளை நிலைநாட்டும், பலப்படுத்தும் மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் அரசின் கொள்கைக்கு அமைவாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நல்ல…

  16. பிலிப்பைன்ஸில் இலங்கையர் மரணம்! தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும்! 12-05-2016 01:25:00 பிலிப்பைன்ஸில் உள்ள இலங்கைக்கான தூதரகத்தினால் வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் பிரிவுக்கு, நேசதுரை ரெஜினோல்ட் சேவியர் என்பவர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் டுபாய் நாட்டில் பொறியியலாளராக கடமையாற்றியுள்ளதோடு கடந்த 10 வருடங்களாக பிலிப்பைன்ஸில் வாழ்ந்து வந்துள்ளார். அவரின் பிறந்த திகதி 1958.12.09 ஆகவும் பிறந்த இடம் வெள்ளவத்தை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு சஞ்ஜீவ் சேவியர் எனும் பெயருடைய மகனொருவர் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேசதுரை ரெஜினோல்ட் சேவியர் என்பவரின் உறவினர்கள் எவரேனும் இருப்பின் அல்லது உறவினர்கள் தொடர்பான ஏதேனும் …

  17. முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டி, இந்துபுரம் மற்றும் வசந்தநகர் ஆகிய பகுதிகளில் தற்போது கசிப்பு காய்ச்சுதலும் விற்பனை செய்தலும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேற்படி கிராமங்களில், என்றுமில்லாதவாறு தற்போது கசிப்பு காய்ச்சி, விற்பனை செய்யும் நடவடிக்கைகளும் போதைப்பொருள் பாவனைகளும் அதிகரித்துள்ளன. சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்க வேண்டிய மதுவரித்திணைக்களம் கிளிநொச்சியில் இயங்குவதனாலும், பொலிஸ் நிலையம் 25 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மாங்குளம் பகுதியிலும் அமைந்திருப்பதால், உரிய அதிகாரிகளுக…

    • 0 replies
    • 314 views
  18. சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் நினைவஞ்சலி -எம்.றொசாந்த் டெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரத்தினத்தின் 30ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு, அமைப்பின் யாழ். மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் தலைமையில், அன்னார் சுட்டுக்கொல்லப்பட்ட கோண்டாவில் கிழக்கு கோகுலவீதி அன்னங்கை தோட்ட வெளியில் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்றது. - See more at: http://www.tamilmirror.lk/171752#sthash.adjj3IMf.dpuf

  19. தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி எழுதினார் எனக் கூறப்பட்ட 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூல் அவசர கதியில் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றது. யாழ். பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறை விரிவுரையாளர் விமல் சுவாமிநாதன் மொழிபெயர்த்திருக்கும் இந்த நூலை தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு வெளியிடுகின்றது. இதேவேளை ஒரு கூர்வாளின் நிழலில் நூலை தமிழினி எழுதவில்லை. சிலரின் தேவைகளுக்காக அவர்களின் கருத்துக்களை தமிழினியின் கருத்துக்களாக அவரின் கணவர் ஜெயக்குமாரனின் துணையுடன் நூலாக வெளியிட்டுள்ளனர் எனப் பல தரப்பினரும் சாடி வருகின்றனர். இந்நிலையிலேயே நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை சிங்கள மொழி பெயர்ப்பு நூலான…

  20. மகிந்த ஆட்சியின் பிரமுகர்களுக்கு எதிரான விசாரணைகளுக்கு 'இடையூறு' இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஊழல் விசாரணைகளுக்கு தற்போதைய அரசாங்கத்தில் இடையூறுகள் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சர் ராஜித சேனாரத்ன முந்தைய ஆட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவருக்கு எதிரான ஊழல் விசாரணையில் பிரதான சாட்சியாளராக உள்ள வாகன ஓட்டுனர் ஒருவரை, சாட்சியாளராக செயற்பட வேண்டாம் என்றுகூறி காவல்துறையினர் தாக்கியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த திங்களன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சரின்…

  21. யாழ்ப்பாணத்தின் சமூகவிரோதம் பற்றி அலரிமாளிகையில் கூட்டம் நடத்துவது வெட்கப்படவேண்டியது:- 11 மே 2016 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் சந்திரகுமார்:- தற்போது இனத்திற்கான உரிமை பிரச்சினையை விட இனத்திற்குள் நடக்கின்ற சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்துவது பற்றி பேச வேண்டிய நிலைக்கு தமிழ் தரப்பு தள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற சமூக விரோத செயற்பாடுகள் தொடா்பில் செவ்வாய் கிழமை அலரி மாளிகையில் அவசர கூட்டத்தை நடத்துகிறது என்றால் இதனைவிட வெட்கப்பட வேண்டிய விடயம் வேறு என்ன இருக்ககப் போகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் மு.சந்திரகுமார் அவா்கள் குறிப்பிட்டுள்ளார். செவ்வாய் கிழமை கிளிநொச்சி பழைய கச்சேரியில்…

  22. மஹிந்த விரைவில் கைதாவார் : வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ளார் : அரசாங்கம் (ப.பன்னீர்செல்வம்) மஹிந்த ராஜபக்ஷ ஊழல், மோசடி, திருட்டு என கறைபடிந்த சரிதை கொண்டவர். எனவே அவர் தன்னை கறைபடியாத தலைவர் எனக் கூற முடியாது. சதாம் ஹுசைன், கடாபி, ஹொஸ்னி முபாரக் போன்ற தலைவர்களும் பல கோடி ரூபாய்களை பதுக்கி வைத்து இன்று வரை அவை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுபோன்றே இலங்கையின் சட்டங்களில் சிக்கிக் கொள்ளாத வண்ணம் மிகவும் சூட்சுமமாக மஹிந்த ராஜபக்ஷ நாட்டிலிருந்து பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளார் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மோசடிக்கார கும்பலும் சட்டத்திலிருந்து தப்பிக்க இடமளிக்கமாட்டோம். விரைவில் இவர்கள் க…

  23. சென்னையிலிருந்து வந்து எம்மை கொலை செய்ய திட்டம் தீட்டினர் ஜனாதிபதி உட்பட எம்மை கொலை செய்வதற்கும் மஹிந்த அணி முயற்சிகளை மேற்கொண்டது. இன்னமும் எமக்கு மரண அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. சென்னையிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு வந்து எம்மை கொலை செய்து விட்டு கொலையாளிகள் தப்பிவிடுவார்கள். இதனால் கொலையாளிகள் யாரென்பதை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். இவ்வாறு திட்டம் தீட்டப்பட்டது என அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரத்தன தெரிவித்தார். கடந்த தேர்தல்களில் நாம் வெற்றி பெற்றிருக்காவிட்டால் இன்று நாம் உயிரோடு இல்லை. இவையனைத்தையும் தெரிந்துகொண்டு தான் பலப்பரீட்சையில் இறங்கினோம் எனவும் தெரிவித்தார். http://www.virakesa…

  24. கிளிநொச்சி அதிபர் மீது பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளது இதற்கு பலர் பல அர்த்தங்களைக் கூற முற்படலாம் அதிபர் தனது கடமையைச் செய்வதில் என்ன தவறு முதலாவது அப்படி அதிபர் செய்த விடயம் ஆசிரியைகளைின் மனங்கள் பாதிக்கும் படி அமைந்திருக்குமாக இருந்தால் குறித்த அதிபர் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நேரத்தை பின்பற்றியமையில் குற்றங் காண்பது சரியா…. ஒரு ஆசியர் நியமனத்தின் போது ஆசிரியர் ஒருவர் நியமனம் பெறும் வரை எங்கு செல்லவும் தயார் எங்கும் பணி செய்வோம் என வரிக்கு வரி கூறுவது யாவரும் அறிந்தது அப்படி இருக்கையில் நேரத்தை உரிய முறையில் பின்பற்றாமை சரியாயின் அதிபர் செய்தமை தவரா அதிபர் யாருக்காக இந்த முடிவை எடுத்தார். யாழ்ப்பானத்தில் இருந்து ஒரு ஆசிரியர் ஏனைய மாவட்டங்களுக்…

  25.  முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் நாளை முதல் அனுஷ்டிப்பு -எம்.றொசாந்த் 1948 ஆம் ஆண்டு முதல் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் அனைவரையும் நினைவுகூறும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நாளை 12ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 18 ஆம் திகதி புதன்கிழமை வரையில் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்;ப்பாணம் ஊடக அமையத்தில் புதன்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கூறுகையில், 'யாழ்;ப்பாணத்தில் அதிகமானவர்கள் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்ட செம்மணிப் பகுதியில் நாளை வியாழக்கிழம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.