ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143451 topics in this forum
-
பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை? பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை குறைநிரப்புப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட போது பாராளுமன்றில் மிகவும் சொற்பளவான உறுப்பினர்களே பிரசன்னமாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் மொத்தமாக 163 பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய தினம் அவையில் பிரசன்னமாகியிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அவை அமர்வுகளை புற…
-
- 0 replies
- 156 views
-
-
பாராளுமன்ற விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை உச்ச நீதிமன்றிற்கு கிடையாது – லக்ஸ்மன் கிரியல்ல:- பாராளுமன்ற விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை உச்ச நீதிமன்றிற்கு கிடையாது என அவைத் தலைவரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். குறைநிரப்புப் பிரேரணை உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை எனவும், இதற்கு எதிராக உச்ச நிதிமன்றில் வழக்குத் தொடர உள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கூறி வருவதாகத் தெரிவித்துள்ளார். எனினும் எதிர்க்கட்சியினரால் இதனைச் செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அமரர் அனுர பண்டாரநாயக்க சபாநாயகராக கடமையாற்றிய காலத்தில் பாராளுமன்ற விவகாரங்களில் உச்ச நீதி…
-
- 0 replies
- 216 views
-
-
இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி.! இலங்கையின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியானது 3 பில்லியன் நிதி உதவி வழங்க ஒப்புக்கொண்டதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். குறித்த இந்நிதி உதவியானது 3 வருட காலத்திற்கு சலுகை வட்டி அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கடந்த 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை ஜேர்மனியில் நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிதி அமைச்சர் குறித்த மாநாட்டில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. இதில் குறித்த மாநாட்டில் 67 நாடுகள் கலந்துகொண்டிருந்தன. http://www.virakesari.lk/article/612…
-
- 1 reply
- 305 views
-
-
மட்டக்களப்பில் ஓளவையாருக்குச் சிலை! [Sunday 2016-05-08 08:00] மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் பழந் தமிழ்ப் புலவர் ஒளவையாருக்கு சிலையொன்று அமைக்கப்பட்டு நேற்றுத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்றின் நாற்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டே, வேல்முருகன் குடும்பத்தினரால் இந்தச் சிலை திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் பழந் தமிழ்ப் புலவர் ஒளவையாருக்கு சிலையொன்று அமைக்கப்பட்டு நேற்றுத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்றின் நாற்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டே, வேல்முருகன் குடும்பத்தினரால் இந்தச் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறு…
-
- 3 replies
- 438 views
-
-
இலங்கையில் முதலீடு செய்ய புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு சம்பந்தர் அழைப்பு இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மேம்பாட்டுக்கு உதவ புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்வர வேண்டும் என நாட்டின் எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் சம்பந்தர் வடகிழக்கு மக்களுக்கு உதவுவது புலம்பெயர்ந்தோரின் கடமை சம்பந்தர் தற்போது வடக்கு கிழக்கு பகுதிகளில் பொருளாதார அபிவிருத்திகளை விரைவுபடுத்த அரசு சில திட்டங்களைத் தீட்டிவரும் வேளையில், புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழகர்கள் அங்கு முதலீடு செய்து, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என அவர் கோ…
-
- 2 replies
- 624 views
-
-
விரைவில் அரசியல் தீர்வை முன்வைப்பதைத் தவிர மாற்று வழியில்லை.! நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட வேண்டுமாயின் விரைவில் அரசியல் தீர்வை முன்வைப்பதைத் தவிர மாற்று வழியில்லை என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா. சம்பந்தன் தெரிவித்தார். இன்றைய அரசு இதனை உணர்ந்து செயல்படுவதாகவே நாம் உணருகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார். அவுஸ்திரேலியா திருகோணமலைச்சங்கம் மற்றும் அவுஸ்திரேலியா மருத்துவர் உதவி அமைப்பு, சிட்னி சைவ மன்றம் (முருகன் ஆலயம்) ஆகியவற்றின் 4.5 மில்லியன் நிதியுதவியுடன் பாதிக்கப்பட்ட கிராமமான தென்ன மரவடி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட சமூக நிலைய கையளிப்பு வைபவத்தில் பிரதம அத…
-
- 1 reply
- 395 views
-
-
வில்பத்து சரணாலயத்தில் மின்னல் தாக்கி 4 யானைகள் பலி இலங்கையில் மின்னல் தாக்கி நான்கு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் தினைக்களம் கூறுகின்றது. உயிரிழந்த யானைகள் மீதான பிரேத சோதனையிலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். வட மத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள வில்பத்து சரணாலயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு தாய் யானையும் மூன்று குட்டிகளும் இவ்வாறு உயிரிழந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் ஓரிரு நாட்களுக்கு முன்னதாக நடந்திருக்கலாம் வன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வில்பத்து வன பிரதேசத்தின் எல்லையில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் கிராமவாசி ஒருவர்…
-
- 0 replies
- 462 views
-
-
முன்னாள் போராளிகளின் கைது : விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது : அரசாங்கம் (ஆர்.யசி) யுத்த குற்றங்கள் தொடர்பில் உள்ளக பொறிமுறை சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜூன் மாதம் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படும் நிலையில் அந்த அறிக்கை சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் வகையிலும் அதே நிலையில் உண்மைகளை கண்டறியும் வகையிலும் பலமான ஒன்றாக அமையும். வருட இறுதிக்குள் நிரந்தர தீர்வை எட்டும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்பதில் உறுதியாக உள்ளது என அரசாங்கம் தெரிவித்தது. முன்னாள் போராளிகளின் கைது மற்றும் முகாம்கள் தொடர்புடைய பாதுகாப்பு விடயங்களில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அரசாங்கம் குறிப்பிட்டது. இலங்கை அரசாங்கத்தின…
-
- 0 replies
- 575 views
-
-
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் சிக்குண்டு, இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்துச் சம்பவம், கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்றுள்ளது. வட்டக்கச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த பரந்தன் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 24 வயதுடைய ரிக்ஷன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனுடன் மேலும் இருவர் பயணித்தாகவும் அவர்கள் அலைபேசியில் கதைத்துக்கொண்டு சென்றமையினால் புகையிரதம் வருவதை அவதானிக்காமையினாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இருவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilmirror.lk/171714#sthash.O4QJiKl5…
-
- 0 replies
- 381 views
-
-
ஆண்களை காதலித்து பண மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட ரேனுகா இரவிச்சந்திரன் என்ற யுவதி தொடர்பில் தகவல் அறிந்தோர் சுன்னாகம் பொலிஸ் நிலைய அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எல்.துஸ்மந்த வேண்டுகோள் விடுத்துள்ளார். 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி சுன்னாகம், தாவடி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு வந்திருந்த மேற்படி பெண் குறித்த யுவதி கொழும்பில் வசித்து வருவதாக கூறிய, சுன்னாகம்- தாவடி பகுதியில் உள்ள நபருடன் தொடர்பினை பேணி, அவருடைய வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில், பகல் வேளையில் அனைவரும் உறக்கத்தில் இருந்தபோது, மயக்கமருந்து தெளித்து 8 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியா…
-
- 2 replies
- 443 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொக்கரிப்புகளுக்கு அடிபணியாது.! யுத்தத்தில் சிக்குண்டு தமிழ் மக்கள் வேதனையில் தவித்தபோது மகிந்த அரசாங்கத்துடன் இருந்த டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்கள் பற்றி எந்த அக்கரையும் கொள்ளாது தனது சுகபோக அரசியலில் வாழ்ந்துவிட்டு இன்று தன்னால் எதுவும் முடியாத நிலையில் போலி வார்த்தைகளையும் கொக்கரிப்புக்களையும் செய்து வருவது வேடிக்கையான விடயமாகவே பார்க்கவேண்டி இருக்கின்றது. ஆனால் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இவர்களது எந்தவிதமான கொக்கரிப்பிற்கும் அடிபணியாது என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். திருக்கோயில் விபுலானந்தா அக…
-
- 1 reply
- 347 views
-
-
குப்பைக்கூழங்களாகும் நீர்நிலைகள்... மொஹொமட் ஆஸிக், மு.இராமச்சந்திரன் நீர்நிலைகளை அசுத்தப்படுத்துவதால் நீரில் வாழும் ஜீவராசிகள் வெகுவாக உயிரிழப்பதாகவும் மீன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே, பொதுமக்கள் இதுகுறித்து அவதானம் செலுத்த வேண்டுமெனவும் சூழலியலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். பிங்கா ஓயாவில் வீசப்படும் பிளாஸ்திக் போத்தல்கள், யோகட் கோப்பைகள், பொலிதீன் பைகள் உள்ளிட்ட உக்காத பொருட்கள் காரணமாக மஹாவலி கங்கையில் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன.உக்காத பொருட்களை உட்கொள்ளும் மீன் உள்ளிட்ட உயிரனங்கள் உயிரிழந்து வருவதாக சூழலயிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, மஹாவலி ஆற்று நீரை தமது அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்த…
-
- 0 replies
- 419 views
-
-
மற்றொரு மே 18 வருகிறது. இது ஏழாவது நினைவுநாள். ஆட்சி மாற்றத்தின் பின்வரும் இரண்டாவது நினைவு நாள். கடந்த ஆண்டு நிலைமைகள் ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்திருந்தன. கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் தெட்டம் தெட்டமாக நினைவு நாளை அனுஷ;டித்தன. ஆனால் அது ஒரு கூட்டுச் செயற்பாடாக அமையவில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை காவல்துறை தடை செய்தது. அது பற்றி ஏனைய கட்சிகள் வாயைத் திறக்கவில்லை. இம்முறையும் அரசாங்கம் கடந்த ஆண்டைப் போலவே நிலைமைகளைக் கையாளும் என்று கருத இடமுண்டு. அண்மைக் காலங்களாக இடம்பெற்று வரும் கைது நடவடிக்கைகள் நினைவுகூரும் நிகழ்வுகளை தடுக்கும் நோக்கிலானவை என்று ஓர் அபிப்பிராயம் உண்டு. ஆட்சி மாற்றத்தின் பின் தமிழ் மக்களுக்க…
-
- 1 reply
- 351 views
-
-
இந்த வருடத்துக்குள் அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதுடன், இதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை, தென்னவன் மரபு அடிக் கிராமத்தில் ,40 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட சமூக மண்டபத்தை கையளிக்கும் நிகழ்வு, சனிக்கிழமை (07) பகல் நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'இந்தத் தருணத்தில் மக்கள் நிதானமாக இருக்க வேண்டும். மக்களைக் குழப்பவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல தீயசக்திகள் எமது மக்களைக் குழப்பி அதன் மூலம் அரசியல் தீர்வைத் தடுக்கலாம். எனவே, நாட்டின் அரசியல் தீர்வுக்கு நாம் அனைவ…
-
- 0 replies
- 352 views
-
-
பொருளாதார மத்திய நிலையம் வவுனியா எல்லைக்குள் - தாண்டிக்குளத்தில் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, வவுனியா மாவட்டத்தில் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்ட பொருளாதார மத்திய நிலையம், வேறு மாவட்டத்துக்கு மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசினால் கடந்த ஆண்டு பட்ஜட்டில், வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு 400 மில்லியன் ரூபா முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டது. இதற்குரிய காணியை இனங்காண்பதில் இன்னமும் முடிவு எட்டப்படவில்லை. பொருளாதார மத்திய நிலையம் வவுனியா நகரிலிருந்து மூன்று கிலோ மீற்றர் சுற்றாடலில் அமைக…
-
- 0 replies
- 185 views
-
-
ஐ.நா மனித உரிமைப் பேரவையிடம் சரணடையும் மஹிந்த ராஜபக்ஸ ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தற்போது மனித உரிமைப் பேரவையிடம் சரணடைந்துள்ளார். தமது பாதுகாப்பு குறைக்கப்பட்டமை குறித்து மனித உரிமைப் பேரவையிடம் முறைப்பாடு செய்துள்ளார். தமக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரிடம் மஹிந்த ராஜபக்ஸ எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார். தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த மீளவும் படையினரை கடமையில் அமர்த்துமாறு மஹிந்த ராஜபக்ஸ, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணைய…
-
- 0 replies
- 250 views
-
-
நாட்டின் ஸ்திரத்தன்மையை குழப்ப முயற்சி – குற்றப் புலனாய்வுப் பிரிவு நாட்டின் ஸ்த்திரத்தன்மையை குழப்ப சில தரப்பினர் முயற்சித்து வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வடக்கில் மீளவும் யுத்தம் இடம்பெறக் கூடுமெனவும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீள இயங்கத் தொடங்கியுள்ளதாகவும் சில தரப்பினர் திட்டமிட்ட வகையில் பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த தரப்பினர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அரசியல்வாதிகள், பாதுகாப்பு தரப்பினைச் சேர்ந்தவர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட சில தரப்பினர் இவ்வாறு நாட்டில் குழப்ப நிலைமையை விளைவிக்க முயற்சித்து வருக…
-
- 0 replies
- 286 views
-
-
இராணுவத்தை வெளியேற்றுவது அரசாங்கத்தின் கடமையாகும் 'வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதா அல்லது வைத்திருப்பதா என்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்' என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார் கிளிநொச்சி மாவட்ட செயலாக்கத்தில் சனிக்கிழமை(07) இடம்பெற்ற அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 'இந்த இடத்தில் இராணுவம் இருக்கத் தேவையில்லை அவர்களை வைத்திருக்கவும் தேவையில்லை என அடித்து சொல்ல வேண்டியத…
-
- 0 replies
- 228 views
-
-
ஜனாதிபதி மைத்திரியின் பிரித்தானிய விஜயம் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பம் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் செவ்வாய்கிழமை பிரித்தானியா மற்றும் இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதன்கிழமை பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனை சந்திக்கவுள்ளதுடன்இசனிக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்த சந்திப்புகளின் போது இலங்கையின் புதிய முன்னேற்றங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து இரு தலைவர்களும் உரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நான்கு நாள் உத்திய…
-
- 0 replies
- 321 views
-
-
இலங்கையில் சித்திரவதை தொடர்கிறது: ஐ.நா 08-05-2016 09:20 AM இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்தும் தமிழர்கள் மீதான சித்திரவதை தொடர்கிறது என ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரி தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதை, ஏனைய வன்கொடுமை, மனிதாபிமானமற்ற தண்டனை சிறப்பு அறிக்கையாளர் ஜூவான் மெண்டஸ் தெரிவித்தார். எட்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த அவர், கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவருடன், நீதித்துறையின் சுதந்திரம் மீதான அறிக்கையாளர் மோனிகா பிண்டோவும் வருகைதந்திருந்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் (தமிழர்கள் மீதான) …
-
- 0 replies
- 378 views
-
-
படையினர் வசமுள்ள நிலங்கள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் ஆலோசனை! [Sunday 2016-05-08 08:00] வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள நிலங்கள் தொடர்பிலும், அதனை விடுவிப்பது தொடர்பானதுமான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் அபயக்கோன் தலைமையில் இடம்பெற்றது. நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், தற்போது படையினரிடம் உள்ள மொத்தக் காணிகளின் விவரங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள நிலங்கள் தொடர்பிலும், அதனை விடுவிப்பது தொடர்பானதுமான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் அபயக்கோன் தலைமையில் இடம்பெற்றது. நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், தற்போது படையினரிடம் உள்ள மொத்தக் காணிகளின் வி…
-
- 0 replies
- 354 views
-
-
புலம்பெயர் நாடுகளில் தேடுதலை ஆரம்பித்தது: ரி.ஐ.டி [ Saturday,7 May 2016, 03:01:52 ] தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளுக்கு பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் உயர் மட்டக்குழு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் முக்கிய விசாரணையாளர்கள் 7 பேர் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் நோக்குடன் புலம்பெயர் நாடுகளிலிருந்து செயற்படுபவர்களை இலக்கு வைத்து குறித்த குழு தேடுதலில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்தக்குழுவினர் இரண்டு பிரிவாக விசாரணைகள தீவிரமாக முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சர்வதேச பொலிஸாருடன் இணைந்து…
-
- 3 replies
- 621 views
-
-
ஐ.நா பொதுச் சபை விசேட அமர்வில் சந்திரிக்கா பேச உள்ளார் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் விசேட அமர்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பேசவுள்ளார். எதிர்வரும் 10 மற்றும் 11ம் திகதிகளில் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் இந்த அமர்வு நடைபெறவுள்ளது. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்து அமர்வில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து சந்திரிக்கா உரையாற்றவுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131881/language/ta-IN/article.aspx
-
- 2 replies
- 595 views
-
-
உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் வளாக புகுவிழா நிகழ்வுகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (01) பிரித்தானியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. திரு.இன்பன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மூன்று மாவீரர்களின் தாயாரான திருமதி இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம், தமிழகத்தின் பிரபல பாடகர் திரு.டி.எல்.மகாராஜன், நாடுகடந்த தமிமீழ அரசாங்கத்தின் பிரித்தானிய அவை உறுப்பினரும் இரண்டு மாவீரர்களின் சகோதரனுமாகிய திரு.திருக்குமரன், கடற்கரும்புலி மாவீரர் காந்தரூபனின் தந்தை மற்றும் மாவீரர் சிரித்திரனின் சகோதரர் திரு.ஒப்பிலான் ஆகியோர் பொதுச்சுடர்களினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சிய கொடியினை பிரித்தானிய காவல்துறையை சேர்ந்த திரு.சுரேசும், தமிழீழ தேசியக் கொடி…
-
- 15 replies
- 1.7k views
-
-
காணாமல் போனவர்கள், சித்திரவதைகள் குறித்து ஐ.நா. வல்லுநர்கள் கவலை இலங்கையில் போர் நடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போது சித்திரவதைகள் குறைந்துள்ளபோதிலும் அதற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என ஐ நாவின் இரண்டு உயரதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இன்றைய செய்தியாளர் சந்திப்பில் மொனிக்கா பின்டோ மற்றும் யுவான் இ மென்டிஸ் அரசின் அழைப்பை ஏற்று அங்கு ஒருவார காலம் பயணம் மேற்கொண்டிருந்த ஐ நாவின் இரண்டு உயரதிகாரிகள் தமது பயணத்தின் முடிவில் இக்கருத்தை வெளியிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான வல்லுநர்கள் மொனிக்கா பின்டோ மற்றும் யுவான் இ மென்டிஸ், தமது பயணத்தின் முடிவில் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்தின்போது இக…
-
- 0 replies
- 340 views
-