ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143456 topics in this forum
-
த.ம.விடுதலைப்புலிகளின் மேதினம்... தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஏற்பாடுசெய்திருந்த மேதின நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை (01) பிற்பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் மட்டக்களப்பு நகர் வரை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு முன்பாக மாபெரும் மேதினக்கூட்டம் நடைபெற்றது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உபதலைவர் கே.யோகவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான திரவியம் மற்றும் மகளிர் அணித்தலைவர …
-
- 5 replies
- 620 views
-
-
'ஊடகங்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யுங்கள்' உலகளாவிய ரீதியில் ஊடகங்களுக்கு எதிரான அடக்கு முறைகள் அதிகரித்து வரும் இந்த சந்தர்ப்பத்தில், இலங்கையில் உள்ள ஊடகங்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக எடுக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஊடக சுதந்திரதினத்தையொட்டி அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கேட்டுள்கொண்டுள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, 'நூற்றியென்பது …
-
- 0 replies
- 265 views
-
-
வட மாகாணத்திலும் 12.30 மணியுடன் பாடசாலைகளை மூடுமாறு கோரிக்கை எம்.றொசாந்த் நாடளாவிய ரீதியில் தற்போது நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக, வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளை பகல் 12.30 மணியுடன் மூடுவது தொடர்பில் பல்வேறு தரப்பினரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வட மாகாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக பாடசாலை கட்டடங்களுக்குள் இருந்து மாணவர்களால் கல்வி பயில முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வன்னிப் பகுதியிலுள்ள பாடசாலைகள், இந்த வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு, மாணவர்கள் வகுப்பறையும் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் கல்வி போதிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதன் காரணம…
-
- 0 replies
- 247 views
-
-
மஹிந்தவின் பாதுகாப்பு ஏன் நீக்கப்பட்டது? : பாதுகாப்பு செயலாளர் விளக்கம் முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளது. இராணுவ பாதுகாப்பிற்கு பதிலாக பொலிஸ் பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முரணாக எவருக்கும் பாதுகாப்பு வழங்க அனுமதி இல்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 103 இராணுவமும் 103 பொலிஸ் உள்ளிட்ட 256 பாதுகாப்பு தரப்பினர் இப்போதுவரையில் அவரின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் இப்போதி…
-
- 0 replies
- 331 views
-
-
புலிகளின் முன்னாள் புலனாய்வு பொறுப்பாளர் கொழும்புக்கு மாற்றம் வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹூஸைன், வடிவேல் சக்திவேல் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான பிரபா என்றழைக்கப்படும் கலைநேசன் (வயது 46), மட்டக்களப்பில் வைத்து பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் (ரி.ஐ.டி) நேற்றுத் திங்கட்கிழமை (02) காலை, கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள தங்களது வீட்டுக்கு நேற்றுக் காலை 6.30க்கு வந்த, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர், தனது கணவனைக் கைது செய்து அழைத்துச் சென்றதாக, அவரது மனைவி கயல்விழி தெரிவித்துள்ளார். தன்னுடைய கணவரை விசாரணை செய்ய வேண்டும் என, இனந்தெரிய…
-
- 0 replies
- 319 views
-
-
நினைவு தினம் எமது விடுதலைப் போராட்டம் மிக விரைவில் கௌரவமான நிலையை எட்டுமென நினைக்கின்றோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். சர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு, ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தினம் இன்று திங்கட்கிழமை யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, 2005ம் ஆண்டுக்கும் 2015ம் ஆண்டுக்கும் இடையில் ஜனநாயகம் கேள்விக்குறியாக இருந்தது அதனை எவரும் மறுக்க முடியாது. தேர்தல்கள் நடந்துவிட்டால், ஜனநாயகம் மலர்ந்து விட்டது என எவரும் கருத முடியாது. …
-
- 1 reply
- 271 views
-
-
இந்தியாவிலிருந்து மற்றுமொருஅகதிகள் குழு இன்று வருகிறது 'இந்தியாவிலிருந்து, 24 அகதிகள் இன்று செவ்வாய்க்கிழமை (03) தாயகம் திரும்பவுள்ளனர்' என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை (02) அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய (UNHCR) வசதிப்படுத்தலுடன் இந்த 24 அகதிகளும் இன்று இலங்கைக்கு வரவுள்ளனர். இவர்கள் மதுரையிலிருந்து மிஹின்லங்கா விமானசேவை (ஆது…
-
- 0 replies
- 174 views
-
-
'பிரபாவின் ஆவி கிளம்புகையில் பாதுகாப்பைப் பிடுங்குவதா?' பாநூ கார்த்திகேசு 'பிரபாகரனின் ஆவி கிளம்பியுள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்டிருந்த விசேட இராணுவப் பாதுகாப்பை விலக்குவது எந்தவகையில் நியாயமானது?' என, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். 'வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு, கிழக்குக்கு சமஷ்டியைப் பெற்றுத் தருமாறு கேட்கின்றார். வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு, தமிழ் அரசுக் கட்சி கோரிக்கை விடுக்கின்றது. தமிழீழமே வேண்டும் என்று ஜெயலலிதா, தேர்தல் பிரசாரம் செய்கின்றார். புலம்பெயர்ந்த தமிழர்களின் செல்வாக்கும் மேற்குலக நாடுக…
-
- 0 replies
- 473 views
-
-
புலிகளின் துப்பாக்கிக்கு மஹிந்தவை இரையாக்க அரசாங்கம் முயற்சி பாதுகாப்பை மீள்வழங்க கோரி மஹிந்த அணி அவசர கடிதம் விடுதலை புலிகளின் துப்பாக்கிக்கு மஹிந்த ராஜபக்ஷவை இரையாக்க நல்லாட்சி அரசாங்கம் முயற்சித்துள்ளது. இராணுவ பாதுகாப்பை மீள் வழங்காவிடின் பாரிய நெருக்கடிகளை எதிர் கொள்ள நேரிடும் என சுட்டிக்காட்டி மஹிந்த அணியினர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். பிரதமர் மற்றும் ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்று விஜயகலாவுடன் பொங்கல் உண்ணுவதற்கு தேவையான சூழலை மஹிந்த ராஜபக்ஷவே ஏற்படுத்திக் கொடுத்தார். அந்த நன்றி உணர்வை மறந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பழிவாங்குவதற்கு அரசாங்கம் பாதுகாப்பை…
-
- 1 reply
- 262 views
-
-
இரனைமடுவிலிருந்த யாழ்ப்பாணத்திற்கு நீர் கொண்டு செல்வது தவிர்க்க முடியாதது "சுண்ணாகம் நிலத்தடி நீரில் எம்மால் நியமிக்கப்பட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குழுவின் ஆய்வின்படி எண்ணெய் கசிவுகள் கலந்துள்ளது" - அமைச்சர் ரவூப் ஹக்கீம் இரனைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர்கொண்டு செல்லப்படுவது தவிர்க்கபட முடியாதது. என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று திங்கள் கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வட மாகாண குடிநீர்திட்டம் தொடர்பிலான உயர் மட்ட கலந்துரையாடலின் பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் . அங்கு அவர் மேலும் தெரிவிக்கையி…
-
- 4 replies
- 432 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைகென புலம்பெயர் உறவுகளால் 85 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய ஆண்கள் விடுதிக்கான கட்டடம் நேற்று திறந்துவைக்கப்பட்டது இதன்போது, பிரதம அதிதியாக கலந்துகொண்ட வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் கட்டடத்தை திறந்துவைத்தார். இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர்கள் ரவிகரன், சிவநேசன், கமலேஸ்வரன், பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/170275/%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%B1%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B5-%E0%AE%B4-#stha…
-
- 5 replies
- 857 views
-
-
[ புதன்கிழமை, 02 மார்ச் 2016, 11:15.38 AM GMT ] திருகோணமலை, மூதூர் கிழக்கு சீதனவெளிக் கிராமத்தில் 10 கோடி ரூபாய் செலவில் புதிய ஆடைத் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. இத் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை 11.00க்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணசிங்கம், மாகாணசபை உறுப்பினர்களான கு.நாகேஸ்வரன், ஜெ.ஜெனார்த்தனன், அர்.எம்.அன்வர் உட்பட பலர் கலந்துகொண்டனர். 3.5 ஏக்கர் காண…
-
- 2 replies
- 441 views
-
-
ஒற்றுமையாக இருந்தால் அடுத்த மேதினத்தை வேறு சூழலில் அனுஸ்டிக்க முடியும் நாம் ஒற்றுமையாக பயணித்தால் அடுத்த மேதினத்தை வேறு ஓர் சூழலில் அனுஸ்டிக்க முடியும். என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்து உள்ளார். யாழ்.மருதனார் மடத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மேதின கூட்டத்தில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , தொழிலாளர்கள் பொறுத்த வரையில் முக்கியமான புனிதமான தினம். தங்களுடைய அந்தஸ்ஸ உரிமைகளை பெறுவதற்காக சர்வதேச ரீதியில் பல போராட்டங்களை நடாத்தி உள்ளார்கள். இந்த நாட்டில் புதிய அரசியல்சாசனத்தை உருவாக்குவதற்கு முயற்சிகள் எடுக்கபப்டுகின்றன அவ்விதமான…
-
- 6 replies
- 520 views
-
-
முல்லைத்தீவு கொக்கிளாயில் தனியார் காணியில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விகாரையை அகற்றுமாறு கோரி வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண பிரதி காவல்துறை மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கொக்கிளாயில் தனியாருக்குச் (மணிவண்ணதாஸ்) சொந்தமான காணியில் விகாரை அமைக்கப்பட்டுவருவது சட்டவிரோதமான செயல் என முதலமைச்சர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த விகாரையை அமைத்துவரும் பௌத்த பிக்குவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விகாரையின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்துவரும் நிலையிலேயே வடக்கு மாகாண முதலமைச்சர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதேவேளை போருக்குப் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்…
-
- 0 replies
- 365 views
-
-
சிறீலங்காவின் முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் நினைவுதினம் அனுட்டிப்பு! சிறீலங்காவின் முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் 23ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் அனுட்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிபர் மைத்திரிபாலசிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ரணசிங்க பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பிரேமதாசவின் குடும்பத்து முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதன்போது புதுக்கடை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரரேமதாசவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. சிறீலங்காவின் 3ஆவது அதிபராகிய ரணசிங்க பிரேமதாச 1950-1989ஆண்டு வரையான 39ஆண்டுகள் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் பல அளப்பரிய சேவை…
-
- 2 replies
- 351 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் தென் பக்க முடிவும், திருகோணமலை மாவட்டத்தின் வட திசை தொடக்கமும்தான் கொக்கிளாய். அதாவது இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கினதும், கிழக்கினதும் இதயம் கொக்கிளாய். இப்போது இதயத்தில் பிரச்சினை. தமிழர்களின் இதய நிலத்துக்கு அபாயம். 1984 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதி அது. கடற்றொழில் நிமித்தம் நீர்கொழும்பு பக்கமிருந்து வந்து, கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குடியேறியிருந்த 13 சிங்கள குடும்பங்களுக்கும் , கொக்கிளாயின் பூர்வ குடிகளான தமிழர்களுக்கும் இடையில் முறுகல்நிலை உண்டானது. சிங்களவர்கள் தமிழர்களின் வீடுகளை சூறையாடினர். தமிழர்கள் சிங்களவர்களின் வாடிகளைக் கொளுத்தினர். பொலிஸும், ஊர்காவல் படையும் களத்தில் குதித்தது. தமிழர்களை அடித்துத் துவம்…
-
- 4 replies
- 892 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் சமூகவிரோதிகளின் கூடாரமாக அமைய இடமளிக்கக்கூடாது: பொலிசாருக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல்: முப்பது வருட கால குண்டு வெடிப்புகளினால் அவலப்பட்ட யாழ் குடாநாடு சமூக விரோதச் செயற்பாட்டாளர்களின் கூடாரமாக அமைய இடமளிக்கக் கூடாது. யாழ் குடாநாட்டை அச்சுறுத்தும் சமூகவிரோதிகள் அனைவரையும் கண்காணித்து, கைது செய்து நீதிமன்றங்களில் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கடந்த வெள்ளியன்று அறிவுறுத்தியுள்ளார். யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் சமூக விரோதச் செயற்பாடுகள் தலையெடுத்துள்ள சூழலில், யாழ் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் யாழ் மேல் நீதிம…
-
- 0 replies
- 302 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒற்றுமை தொடருமா? இலங்கையில் பெருமபான்மையான தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உரசல்கள் வலுத்து வருவது போலத் தோன்றுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பெரிய கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி, இதர கட்சிகளை உதாசீனம் செய்து, கூட்டமைபை பலவீனப்படுத்துகிறது என, அதில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியான ஈ பி ஆர் எல் ஃப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். யாழ்பாணத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டம் இதற்கு ஒரு உதாரணம் என்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன். யாழ்ப்பாணம் மருதனாமடுப் பகுதியில் ஞாயிறன்று நடைபெற்ற மேதினக் கூட்டம் முழுமையாக தமிழரசுக் கட…
-
- 0 replies
- 424 views
-
-
மகிந்தவின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளாது, மகிந்த அணியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு எதிர்வரும் நாட்களில் ஒன்று கூடவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, குமார வெல்கம, மகிந்த யாப்பா அபேவர்த்தன, மகிந்தானந்த அழுத்கமகே, பவித்திரா வன்னியாராட்சி ,விதுர விக்கிரமநாயக்க, பிர…
-
- 0 replies
- 254 views
-
-
தற்போது தனி மனிதனாக இருந்தாலும் சந்தோசமடைகின்றேன் எனது பாதுகாப்பு படைகள் விலக்கப்பட்டு நான் தனி மனிதனாக இருந்தாலும் இந்த நாட்டை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டெடுத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது வரை காலமும் எனது பாதுகாப்புக்காக சேவையாற்றிய அனைத்து இராணுவ வீரர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதோடு உங்கள் சேவையை நான் கௌரவப்படுத்துகின்றேன். மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 102 இராணுவத்தினரும் இன்று திரும்பப் பெறப்பட்டு பொலிஸாரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/5867
-
- 0 replies
- 363 views
-
-
வாய்கால் அமைக்க வழியில்லை எவ்வாறு பாலம் அமைப்பது? நாமல் இந்த அரசாங்கத்தால் ஒரு வாய்காலை கூட அமைக்க முடியாத நிலையில் எவ்வாறு இலங்கை - இந்தியாவுக்கு இடையில் பாலம் அமைக்க முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், வெளிநாட்டு கடன்களை கட்டுப்படுத்துவதாக கூறி வற் வரியை உயர்த்தியுள்ளது. மேலும் இலங்கை இந்தியாவுக்கு இடையில் பாலம் அமைக்கப்போவதாக கூறுகின்றது. சர்வதேசத்திடம் இருந்து 1085 பில்லியன் ரூபாவை கடனாக பெற்ற இந்த அரசாங்கத்தால் எவ்வித பாலமோ அல்லது வாய்க்காலோ அமைத்ததாக தெரியவில்லை. மேலும் கிருலப்பனையில் இடம்பெற்ற மேதினக் க…
-
- 0 replies
- 868 views
-
-
நாமலின் விதி சில தினங்களில் தெரியும் - ரவி கருணாநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் விதியினை நாளை அல்லது மறுநாள் வரும் போது பார்க்க முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் மேதின பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்று வருகின்ற விசாரணைகளின்படி நாமல் ராஜபக்ஷ பணம் மறைக்கப்பட்ட இடம் மற்றும் அவருடை அரண்மனை பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் கடந்த ஆட்சியின் போது ஊழல், மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் மக்கள் முன்னிலையில் முழங்கால் இடச்செய்யவுள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். http://www.virakesari.lk/article/5873
-
- 0 replies
- 372 views
-
-
ஜே.வி.பி.யின் மேதினக் கூட்டம் நிறைவு: ஜோர்ச் கலந்துகொண்டார் (ஆர்.யசி) புதிய பொருளாதாரம், புதிய சமூகத்திற்கான மக்களை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணியின் மேதினக் கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது. ஜே.வி.பி யின் அரசியல் உறுப்பினர்கள் தொழிற்சங்க அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் மற்றும் சர்வதேச தொழிற்சங்க அமைப்புகளின் பிரதானிகள் என சகலரும் ஜே.வி.பி யின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மக்கள் விடுதலை முன்னணி நடத்திய மேதினக் கூட்டம் இம்முறை தெகிவளை எஸ்.ஜே.எஸ் ஜெயசிங்க மைதானத்தில் ஆரம்பமாகியது. இன்று நண்பகல் 12மணிக்கு தெகிவளையில் ஆரம்பித்த இந்த மேதின ஊர்வலம் கொழு…
-
- 1 reply
- 405 views
-
-
விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டு புலனாய்வுப் பொறுப்பாளர் பிரபா கைது? [ Monday,2 May 2016, 04:21:12 ] தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பிரபா என்கின்ற கலைநேசன் இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள அவரது வீட்டில் வைத்து காத்தான்குடி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மனைவி கயல்விழி தெரிவித்துள்ளார். காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்ற கலைநேசனை அங்கு பதிவு செய்துவிட்டு, மேலதிக விசாரணைக்காக கல்முனைக்கு கொண்டு செல்வதாக தெரிவத்து அழைத்து சென்றுள்ளதாக அவ…
-
- 3 replies
- 816 views
-
-
வன்னிப்பிரதேசங்களில் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவின் கண்காணிப்பிலுள்ள முன்பள்ளிகளில் கல்விகற்கும் மாணவர்கள் சி.எஸ்.டி இராணுவச் சின்னம் பொறிக்கப்பட்ட சீருடையை அணிந்து முன் பள்ளிகளில் கற்றல் நடவடிக்கை யில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கல்விகற்கும் மாணவர்களை இராணுவ படைப்பிரிவில் இணைக்க முயற்சிக்கும் முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். வன்னியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் வெளிப்படையாக இருந்த இராணுவ மயமாக்கல் தற்போதைய மைத்திரி நல்லாட்சியில் மிகவும் இரகசியமான முறையில் நன்கு திட்டமிட்ட வகை யில் இடம்பெற்று வருகின்றது. வன்னியில் இராணுவத்திற்காக பொதுமக்களது உறுதிக் காணி அபகர…
-
- 0 replies
- 360 views
-