Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அவசர வேண்டுகோளை, சம்பூர் அனல்மின் நிலையத்துக்காக போராடும் பசுமை, திருகோணமாலை அமைப்பு விடுத்துள்ளது. அந்த அறிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், நிலக்கரி அனல் மின்னிலையத்திற்கெதிரான போராட்டமும் கடந்த சில தினங்களாக பத்திரிகைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரினதும், கிழக்கு மாகாண சபையின் கல்வியமைச்சரினதும் நிலக்கரி அனல் மின் நிலையத்தைப் பற்றி, பேசியதாக வெளிவரும் செய்திகள் சிறிது அசுவாசத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு, அனல்மின் நிலையத்தை அமைப்பது தொடர்பான, மக்களின் கவலைகளை இந்தியாவுடனும் இலங்கையுடனும் பேசவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு இனத்தினையும் இப்பகுதியையும் பிரதிநிதித்துவம் செய்ய…

    • 0 replies
    • 387 views
  2. வாகன நெரிசலை குறைக்க விரைவில் சுரங்கப்பாதை நிர்மாணம்.! Published by Rasmila on 2016-04-17 09:07:56 நீண்ட காலமாக கண்டி நகர பிரதேசங்களில் நிலவி வரும் வாகன நெருக்கடிகளைப் போக்குவதற்கு விரைவில் தென்னக்கும்பர பிரதேசத்திலிருந்து கெட்டம்பே வரையில் சுரங்கப்பாதை ஒன்றினை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்‑ ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். குண்டகசாலை தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற வீதி அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே அமைச்சர் லக்‑ ஷ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்தார். அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில், நீண்ட காலமாக கண்டி நகர பிரதேசங்க…

  3. கோதபாயவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை? குளோபல் தமிழ்ச்செய்தியாளர்:- 17 ஏப்ரல் 2016 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு கோரிக்கை விடுக்க உள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை தவிர்க்கும் நோக்கில் கோதபாய ராஜபக்ஸ திடீரென அமெரிக்கா பயணம் செய்துள்ளமை குறித்து முறைப்பாடு செய்யப்பட உள்ளது. விசாரணைகளை தவிர்க்கும் வகையில் கோதபாய ராஜபக்ஸ திடீரென அமெரிக்கா சென்றுள்ளதாகவும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கத் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி …

  4. புலிகளின் இராணுவ பலத்தை அரசியல் பலமாக மாற்றுமாறு பிரபாகரனிடம் கோரினேன்! - என்கிறார் சம்பந்தன் [Sunday 2016-04-17 09:00] விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ பலத்தை அரசியல் பலமாக மாற்றுமாறு தலைவர் தம்பி பிரபாகரனிடம் கேட்டேன் என்று தெரிவித்துள்ளார் எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ பலத்தை அரசியல் பலமாக மாற்றுமாறு தலைவர் தம்பி பிரபாகரனிடம் கேட்டேன் என்று தெரிவித்துள்ளார் எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்…

  5. அரசியல் கைதிகளை விடுதலை செய்ய சிறைச்சாலை திறப்பு என்னிடம் இல்லை ; சம்பந்தன் [ Sunday,17 April 2016, 05:13:43 ] தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான முழுமையான முயற்சிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனிற்கும், விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை மாலை நல்லுாரில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் கைதிகளின் சுகாதார வசதிகள் தொடர்பாக எதிர்கட்சி தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்ப…

  6. 65 ஆயிரம் வீடுகளை பெறுபவர்களின் பெயர், விபரங்கள் வெளிவந்துள்ளது வடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் மூலம் வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகளின் பெயர் விபரங்கள் இணையத்தளம் ஊடாக பகிரப்பட்டுள்ளன. இந்த பெயர் விபரங்கள் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத விவகார அமைச்சின் ( resettlementmin.gov.lk ) இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதன் முதல் கட்டமாக யாழ். மாவட்டத்தின் சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, மருதங்கேணி மற்றும் சண்டிலிப்பாய் பிரதேசங்களுக்கான வீட்டுப் பயனாளிகளின் பெயர் விபரங்கள் இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 65 ஆயிரம் வீடுகளுக்…

    • 1 reply
    • 1.2k views
  7. யாழ்.மண் சாதாரண பூமி கிடையாது. அந்த மண்ணை சாதாரணமாக நாங்கள் கருதுவதில்லை. இதுவொரு புண்ணிய பூமி, இதுவொரு இலக்கிய பூமி. இதுவொரு சிந்தனை பூமி, இதுவொரு அறிவுடைய பூமி என இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியாவில் சட்டம் மற்றும் நீதித்துறைக்கான முதலா வது அமைச்சர் கலாநிதி பி.ஆர். அம்பேத்கார் அவர்களது 125 ஆவது பிறந்த தினத்தினையும், தமிழ் சித்திரைப்புத்தாண்டை கொண்டாடும் முகமாகவும் யாழ். இந்திய துணைத்தூதரகம் மற்றும் வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற புத்தாண்டு பட்டிமன்ற நிகழ்வு நேற்று முன்தினம் யாழ். நல்லூர் சங்கிலியன் தோப்பில் யாழ். இந்திய துணைத் தூதுவர் ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து…

    • 15 replies
    • 936 views
  8. அற்ப சொற்ப சலுகைக்காக விலை போவதாக இருந்தால் த.தே கூட்டமைப்பு எத்தனையோ அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருக்க முடியும் மட்டக்களப்பு பெரிய போரதீவு பட்டாபுரம் கிராமத்தில் சித்திரைப்புத்தாண்டு நிகழ்வில் கலந்துகொண்ட பா.உ சதாசிவம் வியாழேந்திரன் உரையாற்றுகையில் தற்போது இந்த நாட்டில் ஏற்பட்டிக்கின்றதான ஒரு சிறந்த நல்லாட்சியான சூழ்நிலையை நாம் பார்க்கக்கூடியதாகவுள்ளது. காரணம் கடந்த அரசில் மக்கள் நடமாடும் போது அனைவருக்கும் பின்னால் ஒரு துப்பாக்கி இருப்பது போன்ற உணர்வுவை கானக்கூடியதாகயிருந்தது ஆனால் தற்போது இந்த நல்லாட்சி அரசில் அப்படியான உணர்வு துளியும் இல்லை அதாவது முன்னைய அரசை விட இந்த அரசில் சுதந்திரம் அதிகரிப்பதை காணக்கூடியதாகவுள்ளது. தற்போது இந்த அரசு நல்லாட்சி என்ற ஒரு தீ…

    • 0 replies
    • 266 views
  9. தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள மானிடம் இயற்றை விவசாயப் பண்ணையை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்ட பலர் பார்வையிட்டதுடன் இதுபோன்ற இயற்கை விவசாயத்தை மேம்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர். தற்போது விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் இராசாயன உரம் மற்றும் கிருமிநாசினிகளின் தாக்கத்தினால் மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் விவசாயத்திற்கு இரசாயனத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று பலமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் விவசாயிகள் தொடர்ந்தும் அவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தெல்லிப்பழை…

    • 7 replies
    • 942 views
  10. கல்விப் பொதுத் தராதர பெறுபேறுகள் அண்மையில் வெளியானதையடுத்து, தேசிய தரப்படுத்தில் செய்யப்பட்டதில் வடக்கு மாகாணம் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது. இந்தவிடயம் தனக்குக் கவலையளிப்பதாக ஈழ மக்கள் ஜனனாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவரின் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த காலங்களில் வடக்கின் கல்வி நிலையை மேம்படுத்த நாம் அயராது பல நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். யுத்தம் நிலவிய காலங்களில் தரைப்பாதை போக்குவரத்துகள் முடக்கப்பட்டிருந்த நிலையில்கூட கடல் மார்க்கமாக கல்வித் துறை சார்ந்த பல்வேறு உபகரணங்களை கொண்டு சென்றும். பல்வேறு ஏற்பாடுகளை முன்னெட…

    • 7 replies
    • 1.1k views
  11. இரா சம்பந்தன் மற்றும் வட மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது . எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய ஆர்.சம்பந்தன், வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் வட மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று மாலை யாழ் கோப்பாய் வீதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், அதனுடாக தமிழ் மக்களுக்கு எற்படுத்தப்பட இருக்கின்ற நன்மைகள், மீள்குடியேற்றப்பட்டுள்ள மற்றும் மீள்குடியேற்றப்படாத இடங்களில் மக்களுக்கான தேவைகள், நில அளவை மூலம் அத்துமீறி மக்களின் இடங்களை கைப்பற்றல…

  12. கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு inShar தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பாரளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகனின் தாயார் எதிர்க்கட்சித் தலைவரிடம் தமது மகனின் விடுதலை தொடர்பில் கவனத்திற்குக் கொண்டுவந்தார். காணொளியில் காண்க… http://newsfirst.lk/tam…

  13. தனுஷ்கோடியில் கரையொதுங்கியது தலைமன்னார் படகு: அதில் பயணித்த இருவரைக் காணவில்லை inSha தமிழகத்தின் ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதியில் கரையொதுங்கிய படகு தலைமன்னாரிலுள்ள ஒருவருக்குச் சொந்தமானது என தெரியவந்துள்ளது. தனுஷ்கோடியை அண்மித்துள்ள அரிச்சல்முனை பகுதியில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கிடமான இலங்கைப் படகொன்று கரையொதுங்கியுள்ளதாக பிரதேச மீனவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் தமிழக சுங்க அதிகாரிகளினால் குறித்த படகு மீட்கப்பட்டது. அதில் 25 குதிரை வலுக்கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருந்ததுடன், 30 லிற்றர் மண்ணெண்ணெய் மற்றும் மீன்பிடி வலைகளும் காணப்பட்டதாக தமிழகத்…

  14. <p>Your browser does not support iframes.</p> அரசாங்கத்தின் தேவைக்கேற்பவே புத்தாண்டு சுப நேரம் கணிக்கப்பட்டது இந்த முறை புத்தாண்டிற்கான சுப நேரம் கணிக்கப்பட்டது அரசாங்கத்தின் தேவைக்கு ஏற்பவே என்று ஜோதிடர்கள் தன்னிடம் தெரிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். கண்டி மல்வத்து அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷவிடம், புத்தாண்டு சுப நேரம் குறித்து ஊடகவியலாளர்கள் கருத்து கேட்ட போது மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார். அவர் அங்கு கூறியதாவது, "உண்மையில் எனக்கும் அறியக்கிடைத்தது. ஏன் மாலை வேளையில் சுப நேரம் வந்ததென்று. சிலர் எனக்கு அதை எடுக்க வேண்டாம் என்றனர். எனினும் பொதுவாக நாம் எடுத்தோம். …

  15. கடல் எல்லை விஸ்தரிப்பு குறித்த இலங்கையின் கோரிக்கைக்கு பங்களாதேஸ் அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பினை விஸ்தரிப்பதற்காக இலங்கை ஐக்கிய நாடுகள் சபையிடம் அனுமதி கோரியிருந்தது. எனினும், இந்தக் கோரிக்கை தொடர்பில் பங்களாதேஸ் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையின் இந்தக் கோரிக்கை பங்களாதேஸின் கடற்பரப்பின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் அமைந்துள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு கடற்பரப்பினை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என பங்காளதேஸ் அறிவித்துள்ளது. பங்களாதேஸின் கடல் எல்லையை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என பங்களாதேஸ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. http://globaltamilnews.net/GTMNEditor…

  16. “கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் இந்த அமீர் அலி போன்றவர்களை உங்கள் பகுதிகளுக்கு அழைத்து விருந்து வைக்க வேண்டாம். இது போன்ற விழாக்களுக்கு அதிதியாக அழைக்க வேண்டாம். அவ்வாறு செய்தவீர்களேயானால் நீங்கள் தமிழினத்துக்கு செய்யும் துரோகமாகும் ஏனென்றால் இவர் போன்றவர்கள் நியாயமான ஒரு தீர்வு வரகூடாது என்பதில் குறியாக இருக்கின்றார்கள்” என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். சித்திரை வருட கலாசார விழா இன்று(15) பெரியபோரதீவு பட்டாபுர கிராமத்தில் இன்று சித்திரை கலாசார விழாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில்அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மேலும் உரையாற்றுகையில்உர…

    • 0 replies
    • 458 views
  17. யாழ்ப்­பாணம் நுணாவில் பகு­தியில் சிவில் உடையில் வானில் வந்­த­வர்­க ளால் இளம் குடும்­பஸ்தர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது­செய்­யப்­பட்டுள்ளார். இது தொடர்பில் கைது செய்யப்பட்டவரின் தாயாரால் யாழ். மனி­த­ உ­ரிமை ஆணைக்­கு­ழுவில் நேற்றை­ய ­தினம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இரா­ச­துரை ஜெயந்தன் என்ற இளம் குடும்­பஸ்­தரே இவ்­வாறு கைது­செய்­யப்­பட்டுள்ளார். கைது சம்­பவம் தொடர்­பாக இளம் குடும்­பஸ்­த­ரது தாயார் தெரி­வித்­த­தா­வது, கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை காலை எனது வீட்­டிற்கு மோட்டார் சைக்­கிளில் சிவில் உடையில் ஒரு­சிலர் வந்­தனர். அவர்­களின் கையில் துப்­பாக்கி இருந்தது. இந்­நி­லையில் அவர்கள் தம்மை பொலிஸார் எனத் தெரி­வித்­த­துடன் எனது வீட்டை சோத­னை­யிட வ…

    • 0 replies
    • 438 views
  18. புத்தாண்டின் பிறப்பை ஒட்டி நேற்று முன்தினம் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து பட்டிமன்ற நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் முத்திரைச் சந்திப் பகுதியில் அமைந்துள்ள சங்கிலியன் தோப்பு வெளியரங்கில் நடைபெற்ற இப்பட்டிமன்ற நிகழ்வுக்கு இந்தியா வில் இருந்து பட்டிமன்றப் பேச்சாளர்கள் ராஜா, திருமதி பாரதி பாஸ்கர் ஆகியோர் வருகை தந்திருந்தனர். பட்டிமன்றத்தை பார்ப்பதற்கு ஏகப்பட்ட மக்கள் குழுமியிருந்தமைதான் இங்கு கவனத்துக்குரிய விடயம். அதிலும் இளைஞர்களே அதிகம் என்பது மிகவும் கவனத்துக்குரியது. இதற்கு மேலாக பட்டிமன்றத்தை பார்ப்பதற்காக வந்தவர்கள் பட்டிமன்றத்தில் பேசப்பட்ட விடயங்களை மிகவும் உன்னிப்பாக செவிமடுத…

    • 0 replies
    • 410 views
  19. வடக்கில் சிங்கள குடியேற்றத்தை மேற்கொண்டு பௌத்த மதத்தினை நிலைநிறுத்தவே வடக்கில் இராணுவம் தொடர்ந்து நிலை கொண்டு உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடக்கில் 15 இராணுவ டிவிசன்கள் உண்டு. ஒரு மாவட்டத்தில் 3 டிவிசன்கள் வீதம் 5 மாவட்டத்திலும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் இராணுவத்தினர் வடக்கில் நிலை கொண்டு உள்ளனர். இவ்வாறு இராணுவம் வடக்கில் நிலை கொண்டிருப்பதற்கு காரணம் சிங்கள குடியேற்றங்களை அச்சமின்றி மேற்கொள்ளவும் , பௌத்த மதத்தினை நிலை நிறுத்தவுமே. இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு கு…

    • 0 replies
    • 320 views
  20. பொலிஸ் நிலையத்தில் திருடப்பட்ட துப்பாக்கிகள் விகாரையில் மீட்பு மாத்தளை - லக்கல பொலிஸ் நிலையத்தில் திருடப்பட்ட துப்பாக்கிகள் இன்று காலை லக்கல - வெலேலெவெல சந்தகல விகாரையில் மீட்கப்பட்டுள்ளன. குறித்த விகாரையின் தலைமை தேரரால் தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து குறித்த துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லக்கல பொலிஸ்நிலையத்தில் இருந்து 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள குறித்த விகாரையின் நீர்த்தாங்கிக்கு அருகில் குறித்த துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த ஆயுதங்களில் ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும், 5 கைத்துப்பாக்கிகளும் மீடகப்பட்டுள்ளன. இது தொடர்…

  21. ஜனா­தி­பதி– வடக்கு முதல்வர் திங்களில் சந்­திப்பு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்கினேஸ்­வ­ர­னுக்கும் இடை­யி­லான விசேட சந்­திப்பு எதிர்­வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்­பெ­ற­வுள்­ளது. ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெ­ற­வுள்ள இந்த சந்­திப்பில் வடக்கு மக்­களின் காணிப் பிரச்­சினை மற்றும் சிவில் நிர்­வா­கத்­திற்­கான தடைகள் என்­பன குறித்து கலந்­து­ரை­யா­டப்­படும். வடக்கில் சிவில் நிர்­வாகம் இரா­ணு­வ­ம­ய­மாக்­கப்­பட்­டுள்­ள­மை­யினால் ஜன­நா­யக உரி­மை­களை அனு­ப­விப்­பதில் தமிழ் மக்கள் சவால்­களை எதிர்கொள்­வ­தாக, கடந்த வாரத்தில் இடம்­பெற்ற வட மாகாண சபை அமர்­விலும் அதற்கு முன்­னரும் பல சந்­தர்ப்­…

  22. சம்பந்தரின் இருமுகங்கள்: சாதிக்குமா? பாதிக்குமா? சிறிலங்கா அரச கட்டமைப்பில் மாற்றம் நிகழ்ந்த பின் எதிர்க்கட்சிகளே இல்லாதநிலையில் வலிய நுழைக்கப்பட்ட சம்பந்தர் சிறிலங்கா அரச கட்டமைப்பின்எதிர்க்கட்சித்தலைவர் ஆனார். எதிர்க்கட்சி தலைவர் ஆன சம்பந்தர் தற்போது இரண்டு பாத்திரங்களைஏந்திக்கொண்டு திரிகின்றார். முதலாவதாக சிறிலங்கா என்ற நாட்டின் தலைவர்களில்ஒருவராக அதுவும் எதிர்க்கட்சித்தலைவராக செயற்படவேண்டிய நிலையில் உள்ளார். இரண்டாவதாக தமிழர் தரப்பின் தலைமைத்துவ பிரதிநிதியாக தமிழர்களின்தலைவராகவும் தன்னை காட்டிக்கொள்ளவேண்டிய நிலை அவருக்கு உள்ளது. அண்ணளவாக 70 வீதத்திற்கு மேலான சனத்தொகையை கொண்ட இலங்கைத்தீவின்அரச கட்டமைப்பிற்கு எதிர்க்கட்சி தலைமைத்துவ பொறுப்பு எடுப்பது எ…

    • 2 replies
    • 1k views
  23. வடமாகாண சபை அமைச்சரவையை மாற்றுமாறு கோரும் விண்ணப்பம் சம்பந்தனிடம் கையளிப்பு [ Saturday,16 April 2016, 03:26:44 ] வடமாகாண சபையில் அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று மாகாண சபை உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட விண்ணப்பம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்மந்தனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்மந்தன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வடமாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்களை சந்தித்து அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும், வடமாகாண சபையின் தேவைகள் பிரச்சினைகள் தொடர்பாக பேசியுள்ளார். கோப்பாய் - இராசபாதை வீதியில் உள…

  24. துர்முகி நிகழ்வுகள்... துர்முகி வருடப் பிறப்பை, நேற்று புதன்கிழமை (13) மாலை மற்றும் இன்று வியாழக்கிழமை (14) பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இதனையொட்டி நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் விசேட பூஜை, வழிபாடுகளும் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இவற்றை இங்குள்ள படங்களில் காணலாம். மலையகம்: எஸ்.கணேசன், பா.திருஞானம், மு.இராமசந்திரன் அம்பாறை: வி.சுகிர்தகுமார் புத்தளம்: க.மகாதேவன் - See more at: http://www.tamilmirror.lk/170120/%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%A8-%E0%AE%95%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B3…

  25. திருகோணமலையில் இராணுவத்தினரால் கடந்த 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்தி அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் சர்வதேச மன்னிப்பு சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலையில் கொல்லப்பட்ட 5 மாணவர்கள் படுகொலை உட்பட15 மனித உரிமைகள் மீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரித்த குழு 2009 ஆம் ஆண்டு தனது அறிக்கையை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் வழங்கியது. ஆனால் இந்தச் சம்பவங்கள் குறித்து இதுவரை சந்தேகத்தின் அடிப்படையில் எவரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு நீதி வேண்டி நீண்டகாலம் காத்திருக்கின்றனர். எனவே, பொறுப்…

    • 0 replies
    • 348 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.