Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (2ம் இணைப்பு) நாமல் ராஜபக்ச அடுத்த வராம் கைதுசெய்யப்படலாம் ; மஹிந்த தகவல் [ Monday,15 February 2016, 03:34:35 ] தனது மகன் நாமல் ராஜபக்ச அடுத்த வாரமளவில் கைதுசெய்யப்படலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு, கொச்சிக்கடை - ரன்வெல் விடுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனது குடும்பத்தை தண்டிக்கவும் ஆதரவாளர்களை பழிவாங்கவுமே நிதிக்குற்றப்புலானாய்வை அலரிமாளிகையில் இயக்கி வருகின்றனர் எனவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார். புலனாய்வு பிரிவிற்கான பொலிஸ் மா அதிபராக ஜே.வி.பி யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.…

  2. ஐ.நாவில் தமிழில் பேசிய மகிந்த, தமிழில் தேசியகீதம் பாடியதை எதிர்ப்பது ஏன்? - வடமத்திய மாகாண முதலமைச்சர் கேள்வி [Monday 2016-02-15 07:00] ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய போதும் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த போதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தமிழில் உரையாற்றினார். அவ்வாறிருக்கையில் தேசிய சுதந்திர நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதில் என்ன தவறு உள்ளதென வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன கேள்வி எழுப்பினார். ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய போதும் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த போதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தமிழில் உரையாற்றினார். அவ்வாறிருக்கையில் தேசிய சுதந்திர நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படு…

  3. திருகோணமலையை தனிச் சிங்கள மாவட்டமாக மாற்ற 30 ஆண்டுத் திட்டம்! - சுரேஸ் பிரேமச்சந்திரன் [Monday 2016-02-15 07:00] திருகோணமலையை தனிச்சிங்கள மாவட்டமாக மாற்ற அரசாங்கம் 30 ஆண்டு திட்டம் ஒன்றை 2011 ஆம் ஆண்டில் திட்டமிட்டு அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தையும் பெற்று செயற்படுத்தி வருகின்றது. இத்திட்டத்திற்கு வடமத்திய மாகாண அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, மாத்தளை உட்பட பல மாவட்டங்கள் உள் வாங்கப்பட்டுள்ளன என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். திருகோணமலையை தனிச்சிங்கள மாவட்டமாக மாற்ற அரசாங்கம் 30 ஆண்டு திட்டம் ஒன்றை 2011 ஆம் ஆண்டில் திட்டமிட்டு அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தையும் பெற்று செயற்படுத்தி வ…

  4. போர்க்குற்ற விசாரணை தற்போது ஆரம்பிக்கப்படாது ; ரணில் கூறியதாக தகவல் [ Monday,15 February 2016, 00:49:44 ] ஜெனீவா மனித உரிமைச் சபை தீர்மானத்தின்படி போர்க்குற்ற விசாரணைகள் தற்போதைக்கு நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூத்த அமைச்சர்கள் சிலரிடம் கூறியதாக அமைச்சரவைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மனித உரிமைச் சபையின் ஆணையாளர் செயிட் ரா-அத் அல் ஹுசைன் கொழும்புக்கு சென்று திரும்பிய பின்னர் அரசாங்கம் இந்த நிலைப்பாட்டை எடுத்ததாகவும், உள்ளக பொறிமுறையின் மூலம் விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு காலம் எடுக்கும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியதாக மூத்த அமைச்சர் ஒருவர் எமது ஜ.பி.சி தமிழ் செய்தியாளரிடம் தெரிவித்தார். …

  5. கட்சித்தாவல்கள் கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்குள்ளாக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் .சித்தார்த்தன்- புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கும் செயற்­பா­டுகள், கூட்­ட­மைப்­பினுள் கட்­சித்­தா­வல்கள், வெளிநாட்டுச் சந்­திப்­புக்கள், தென்­னி­லங்­கையின் மாறாத நிலைப்­பா­டுகள், பிராந்­திய, சர்­வ­தேச நாடு­களின் ஆட்­சி­மாற்­றத்தின் பின்­ன­ரான நிலைப்­பா­டுகள் தொடர்­பாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான தமிழ் மக்கள் விடு­தலைக் கழ­கத்தின் (புளொட்) தலை­வரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் வழங்­கிய செவ்­வியில், தீர்வு விட­யத்தில் அதி­யுச்ச கோரிக்­கை­க­ளையே முன்­…

  6.  பழிவாங்கல்கள் தொடர்வதற்கு இடமளிக்க முடியாது: மஹிந்த -எம்.இஸட்.ஷாஜஹான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் பலரை ஒழுக்காற்று நடவடிக்கை எனக் கூறி கட்சியிலிருந்து வெளியேற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கான கூட்டத்திற்கு உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த உறுப்பினர்களில் 95 சதவீதத்தினர் வருகை தந்துள்ளனர். இவர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை என்று கூறி, இவர்களையும் கட்சியிலிருந்து வெளியேற்றினால், இவர்கள் செல்வதற்கு ஒரு இடம் வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நீர்கொழும்பு, கொச்சிக்டை பிரதே…

  7. இன்று உலகம் முழுவதிலும் அனுஸ்டிக்கப்படும் உலக காதலர் தினத்தை எதிர்த்து மட்டக்களப்பு காத்தான்குடியில் பாரியளவில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதுடன் துண்டுப்பிரசுர வினியோகம் மற்றும் எதிர்ப்பு பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டன. முஹாஸபா மீடியா நெட்வேர்க்கின் அனுசரணையுடன் மற்றும் இளைஞர் தலைமைத்துவ கற்கைநெறியை தொடரும் மாணவர்கள் உட்பட சமூக அமைப்புக்கள இதனை ஏற்பாடு செய்துள்ளன. காதல் எனும் பெயரால் கற்பை சூறையாட ஒருதினம் தேவையா.? புறக்கணிப்போம் இந்த கலாச்சார சீரழிவை எனும் சுவரொட்டிகள் பொது இடங்களில் பெருமளவு ஒட்டப்பட்டுள்ளதுடன் இளைஞர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் துண்டுப்பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன. முஸ்லிம்கள் சார்பாக குர்ஆன…

  8. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை [ ஞாயிற்றுக்கிழமை, 14 பெப்ரவரி 2016, 03:03.04 AM GMT ] இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையல் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பது குறித்து மீளவும் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ஆக்ராவிலிருந்து இலங்கையின் மாத்தறை வரையில் அதிவேகப் பாதை அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் அதி வேக நெடுஞ்சாலைகளை பெருப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 96000 கிலோ மீற்றராக காணப்படும் இந்திய அதிவேக நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கையை இரண்டு லட்சம் கிலோ மீற்றராக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய பெருந்தெருக்கள் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார…

  9. புனர்வாழ்வின் பின்னர்விடுவிக்கப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களை மீண்டும் கைதுசெய்யுமாறு கோருவோம் 14 பெப்ரவரி 2016 யுத்தகுற்ற விசாரணைகள் இடம்பெறும்பட்சத்தில் புனர்வாழ்வின் பின்னர்விடுவிக்கப்பட்ட 12,000 விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் மீண்டும் கைதுசெய்யுமாறு அரசாங்கத்தை கோருவோம் என புதிய எச்சரிக்கையை விடுத்துள்ள சிறிசேன அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான சம்பிக்க ரணவக்க இலங்கையின் யுத்தகுற்ற விசாரணை பொறிமுறையில் சர்வதேபங்களிப்பினை தீவிரமாக எதிர்ப்போம் என மீண்டும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வடக்கில் மத சுதந்திரமில்லை என்ற சர்ச்சைக்குரிய கருத்தினையும் முன்வைத்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும்ஆங்கில வாரபத்திரிகையொன்றிற்கு இதனை அவர் தெரிவித்து…

  10. பசில் ராஜபக்ஸவினால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு ஊழல் மோசடி அம்பலம் 14 பெப்ரவரி 2016 முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவினால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு ஊழல் மோசடி சம்பவமொன்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஊவா மாகாணசபைத் தேர்தல்களின் போது அப்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் உத்தரவிற்கு அமைய இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை 5.22 மில்லியன் ரூபா பெறுமதியான 8000 ரீசர்ட்கள் தைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு பிரச்சாரம் தேடும் நோக்கில் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இந்த பணத்தை செலவிட்டள்ளது. 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் திகதி உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இந்த ரீசர்ட்கள் தைக்கப்பட்ட…

  11. இன,மத அவமரியாதையை தடுப்பது ஊடகங்களின் பொறுப்பு எந்தவொரு மதத்தையும் , இனத்தையும் அவமரியாதை செய்யும் செயற்பாடுகளை தடுப்பது ஊடகங்களின் பொறுப்பாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் . நேற்று பதுளையில் ஊடகவியலாளர்களை சந்தித்த பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார் . அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியின் நல்லாட்சியின் கீழ் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி புதிய பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், அதன்படி முதலீட்டாளர்கள் புதிய வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்துக் கொண்டிருகின்றனர் . ஜனநாயகம் மோசடி தொடர்பாக இலங்கை சர்வதேசத்தில் பெற்றிருந்த அவப்பெயரில் இருந்து…

  12. அல் ஹூசெய்னுக்கு எதிராக வழக்குத் தொடர தீர்மானம் 14 பெப்ரவரி 2016 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரiவியன் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னுக்கு எதிராக வழக்குத் தொடர வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் சிலர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனங்களை மீறிச் செயற்பட்டுள்ளதாக அல் ஹூசெய்ன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றில் இந்த வழக்குத் தொடரப்பட உள்ளது.இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் வகையில் அல் ஹூசெய்ன் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் 13.2 பிரகடனம் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விடயம் குறித்து வெளிநாட்டு நீதவான்களிடம் சட்ட ஆலோசனைப் பெற்றுக்…

  13. வடக்கில் மீள்குடியேற்றம்: ஜனாதிபதியின் முடிவு வெளியாகவுள்ளது! [ ஞாயிற்றுக்கிழமை, 14 பெப்ரவரி 2016, 05:05.52 AM GMT ] வடக்கில் படையினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான அறிக்கை இந்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. மீள்குடியேற்ற பிரதியமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ்வின் தகவல்படி, இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி, மீள்குடியேற்றம் தொடர்பில் இறுதி முடிவை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பெரும்பாலும் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீள்குடியேற்றம் தொடர்பாக அண்மையில் குழு ஒன்று அமைக்கப்பட்டன்பேரில் அந்தக்குழு ஆராய்ந்து தமது அறிக்கையை தயாரித்துள்ள…

  14. காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு சா்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உதவி [ Sunday,14 February 2016, 04:04:46 ] கடத்தப்பட்டவர்கள், காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து உதவியளிக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. காணாமல்போனவர்களுக்கு உதவியளிப்பது தொடர்பாக கொழும்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது என்றும் வடக்கு கிழக்கு பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து உதவியளிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் காண…

  15. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயத்தின் பின் நிலவும் மர்ம மௌனம்? [ ஞாயிற்றுக்கிழமை, 14 பெப்ரவரி 2016, 04:48.48 AM GMT ] ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயத்தின் பின் மர்ம மௌனம் ஒன்று நிலவி வருவதாக திவயின பத்திரிகை செய்தி விமர்சனம் ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இதுவரை கடும் போக்கையே கடைப்பிடித்துள்ளது. அதிலும் குறிப்பாக இளவரசர் செய்யித் ஹுசைன் ஆணையாளராக பதவியேற்றது முதல் இலங்கை தொடர்பில் கடுமையான கருத்துக்களையே வெளியிட்டு வந்துள்ளார். …

  16. சிறுநீரக வியாபார சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க இந்திய குழு வருகிறது 13-02-2016 01:05 PM சிறுநீரக வியாபாரத்தில் இலங்கை வைத்தியர்களுக்கு தொடர்புள்ளதாக என்பது பற்றி விசாரிப்பதற்காக இந்திய பொலிஸ் அதிகாரிகள், இலங்கைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐதராபாத் பொலிஸார் இங்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை - இந்தியாவுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்தில் இலங்கை வைத்தியர்கள் இருவருக்கு தொடர்புள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/165980#sthash.J4jsGpBr.dpuf

  17. புதிய கட்சி உருவாக்கம் ; சுதந்திரக் கட்சி உறுப்புரிமையை இழக்க நேரிடும் [ Sunday,14 February 2016, 05:24:01 ] புதிய கட்சி ஒன்றை உருவாக்கும் பணியில் பங்கேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் உறுப்புரிமையை இழக்க நேரிடுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவருக்கு ஆதரவான கூட்டு எதிர்க்கட்சியினர் புதிய கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், புதிய கட்சியில் இணைந்து கொள்ளும் அனைவரும் தராதரம் பாராது கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். …

  18. தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா பிறந்த இடம் தெரியுமா? [ சனிக்கிழமை, 13 பெப்ரவரி 2016, 05:46.20 PM GMT ] விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா நுவரெலியா போதனா வைத்தியசாலையில் பிறந்ததாக தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 1989ஆம் ஆண்டு துவாரகா நுவரெலிய வைத்தியசாலையில் பிறந்தபோது அவரை பராமரித்ததாக கூறப்படும் சிங்கள மருத்துவ மாது ஒருவர் இந்த கதையை கூறியுள்ளார். ஜேவியின் கிளர்ச்சி இடம்பெற்ற காலக்கட்டத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக குறித்த மருத்துவமாது பெண் கருத்துரைக்கையில், ஒரு வியாழக்கிழமையில் வைத்தியசாலையில் பிள்ளைப்பேறுக்காக அனுமதிக்கப்பட்ட மதிவதனி என்ற பெண், சனிக்க…

  19. தமிழரின் கதாநாயகன் பிரபாகரனே! விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கதாநாயகனாக இருந்தார் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ராஜபக்ச ஆட்சியை வெளிப்படையாக கண்டிக்கும் வகையிலேயே. மக்கள் உங்களைத் தோற்கடித்தனர் என்று நினைக்கிறீர்களா என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். வடக்கு மாகாணத்தில் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்தால், மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். இது ஒன்றும் ஆச்சரியமில்லை. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை இதில் கடுமையான தாக்கத்தை ஏ…

  20. புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் இல்லை : கூட்டமைப்பிற்கு அரசு தெரிவிப்பு புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் இல்லை என்றும், 13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள சில அதிகாரபரவாலாக்கல் முறைகள் உட்புகுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு அரசாங்கம் கூறியுள்ளது. புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் தொடர்பாக பேச்சு நடத்தி அந்த விடயங்களை யாப்பில் இணைத்துக் கொள்வது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனிடம் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக அரசாங்கம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளுட…

  21. எனது அரசால்தான் ராஜபட்ச சர்வதேச தண்டனையில் இருந்து தப்பினார்:சிறீசேனா By கொழும்பு First Published : 14 February 2016 12:13 AM IST இலங்கை அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றதால்தான், முன்னாள் அதிபர் ராஜபட்ச, போர்க் குற்றங்களுக்கான சர்வதேச நீதிமன்றத்தின் தண்டனையிலிருந்து தப்பித்துள்ளார் என்று அந்த நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா தெரிவித்தார். இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் அண்மையில் அங்கு விசாரணை மேற்கொண்டது. இதனை விமர்சிக்கும் வகையில், இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபட்ச வெளியிட்ட அறிக்கையில், "இலங்கையில் விசாரணை நடத்த ஐ.நா.குழுவை அனுமதித்தது, இலங்கை அ…

  22. அனைத்துலகச் சைவ மாநாடு யாழ். பல்கலையில் ஆரம்பம்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை சமூகத்தினர் சிவாகமங்களும், திருமுறைகளும் புலப்படுத்தும் சைவப் பண்பாட்டுக் கூறுகளும் சமூக நல்லிணக்கச் சிந்தனைகளும் என்ற கருப்பொருளை முன்னிலைப்படுத்தியும், இந்து நாகரிகத்துறை சமூகத்தை நோக்கி பயணிக்கின்றது என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாகவும் ஏற்பாடு செய்துள்ள முதலாவது அனைத்துலகச் சைவ மாநாட்டின் ஆரம்பநாள் நிகழ்வுகள் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நேற்று இடம்பெற்றன. இந்து நாகரிகத்துறை பேராசிரியர் மா.வேதநாதன் தலைமையில் இடம்பெற்ற ஆரம்பநாள் நிகழ்வுகளின் போது பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஷ்ட பேராசி…

    • 2 replies
    • 592 views
  23. யாழ்.பல்கலைக்கழகத்தில் விரிவுரை மண்டபங்களில் சிங்கள மாணவ ஜோடிகள் அநாகரீகமாக நடந்து கொள்ளும் நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி விரிவுரை மண்டபங்களில் “ரொமான்ஸ் பண்ணாதீர்கள்” என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சிங்கள மாணவ ஜோடிகள் விரிவுரை மண்டபத்திற்குள் ஜோடியாக இருந்தல் மற்றும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருத்தல் மற்றும் முத்தமிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மாணவர்களால் கொடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் மேற்படி சிங்கள மாணவர்களிடம் இது தொடர்பாக தெரியப்படுத்தியபோதும் அது தொடர்பாக அந்த மாணவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளாத நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் இந்த திடீர் சுவர் ஒட்டி முடிவை எடுத்துள்…

  24. தமிழில் தேசிய கீதம் பாடி­ய­தன்­மூலம் தமிழீழ கீதம் பாடப்­ப­டு­வதை நிறுத்­தி­யுள்ளோம். இது அர­சாங்­கத்­துக்கு கிடைத்த பெரு வெற்­றி­யாகும் என ஐக்­கிய தேசிய கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார். ஐக்­கிய தேசிய கட்சி தலைமைக் காரி­யா­லயமான சிறி­கொ­த்தாவில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் கூறு­கையில், நாட்டின் 68ஆவது சுதந்­திர தினத்தின் போது தமிழில் தேசிய கீதம் இசைக்­கப்­பட்­டது. இது­தொ­டர்பில் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினர் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர். இவர்கள் இதன் மூலம் மீண்டும் நாட்டில் இன­வா­த…

  25. சிங்கள மக்கள் ஒரு அடி வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி வைக்க தயார் February 6, 2016 09:19 am இலங்கையின் 68 வது சுதந்திரதினத்தில் தழிழரின் உரிமைக்காக தேசிய கீதம் தமிழில் இடம்பெற்றது மிகவும் வரவேற்கதக்கது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். தழிழ் மக்கள் சிங்கள மக்களுடன் சரிசமமாக சகோதரத்துவத்துடன் இருக்க இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்ற செய்தியினை நேற்று முன்தினம் அரசாங்கம் தந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த சந்தோசத்தினை எடுத்துக்காட்டும் முகமாக நான் யாழ் நாக விகாரகைக்கு வந்து வழிபாட்டில் ஈடுபட்டதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். யாழ் ஸ்ரீ நாக விகாரையில் நேற்றைய தினம் சமய வழிபாட்டில் ஈ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.