ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
கடத்தப்பட்ட இளைஞன் சொல்லும் கதை (வீடியோ) நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டர் ரக வாகனத்தில் கடத்தி, கடுமையாக தாக்கி, விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞன் இவ்வாறு கூறுகின்றார். நான் கடமையாற்றும் நிறுவனத்துக்குள் வந்த இனதெரியாத நபர்கள் மூவர், கொஞ்சம் வெளியே வா, நாங்கள் உன்னுடன் பேசவேண்டும், வா வெளியே போவம் என்றனர். நான் சொன்னேன், என்னால் வரமுடியாது. நான் வேலைச்செய்துகொண்டிருக்கின்றேன். என்னுடைய பொஸ்ஸிடம் (முகாமையாளர்) கேட்டுவிட்டு அழைத்துச்செல்லுங்கள் என்றேன். இல்லை, இல்லை, பொஸ்ஸிடம் கேட்கவேண்டியதில்லை என்று கூறியவர்கள் என…
-
- 0 replies
- 542 views
-
-
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் ~தமிழ் மக்கள் பேரவை| என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு, அந்த அமைப்பு அரசியல் கட்சி அல்ல, எந்தக் கட்சிக்கும் மாற்றீடானதோ அல்லது போட்டியானதோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டபோதிலும், அந்த அமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்ட உறுப்பினர்கள், அவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் ஆகியவை அந்த அமைப்பின் நோக்கம் குறித்து தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. இந்தப் பேரவையின் கூட்டுத் தலைவர்களில் ஒருவராகச் செயற்படும் மாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன், சி.சிற்றம்பலம் உட்பட பெரும்பாலானோர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். அதனால்தான் கூட்டமைப்பு பிளவுபட்டுவிடுமோ என்ற கவலை தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது. …
-
- 5 replies
- 799 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு! ஜே.வி.பி கடும் எதிர்ப்பு [ வியாழக்கிழமை, 24 டிசெம்பர் 2015, 03:47.51 AM GMT ] சபை அமர்வுகளில் பங்கேற்கும் எம்.பியொருவருக்கு ஒருநாள் வருகைக்காக வழங்கப்படும் கொடுப்பனவை 500 ரூபாவிலிருந்து 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் திட்டத்துக்கு ஜே.வி.பி. கடும் எதிர்ப்பை வெளியிட்டது. நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டமொன்றின்போதே கொடுப்பனவு அதிகரிப்புக்கான யோசனை, அரச தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது இதற்கு ஜே.வி.பி. கடும் எதிர்ப்பை வெளியிட்டது. "எம்.பிக்களுக்கு ஒருநாள் வருகைக்காக வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்படுவதற…
-
- 0 replies
- 373 views
-
-
மன்னாரில் சிங்களவர்களை தமது படகுகளில் ஏற்றி கடலை சுற்றிக்காட்டும் கடற்படை! தமிழர்களுக்கு அனுமதி மறுப்பு [ வியாழக்கிழமை, 24 டிசெம்பர் 2015, 03:45.41 AM GMT ] தமிழ் பிரதேசங்களில் இருந்து மன்னாருக்கு வரும் மக்கள் மன்னார் கடல் பகுதிகளுக்குச் சென்று படகு மூலம் கடலில் சுற்றிப்பார்ப்பதற்கு தொடர்ச்சியாக கடற்படையினர் அனுமதி மறுத்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்ட மக்கள் உற்பட ஏனைய தமிழ் பிரதேசங்களில் உள்ள மக்கள் தாழ்வுபாடு, பேசாலை மற்றும் வங்காலை போன்ற கடற்பகுதிகளுக்குச் சென்று படகில் கடலுக்குச் சென்று கடல் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விருப்பத்துடன் செல்கின்றனர். ஆனால் கடற்படையினர் பல்வேறு காரணங்களை காட்டி அவர்கள் கடலில் சுற்றிப்பார…
-
- 0 replies
- 369 views
-
-
ப. தெய்வீகன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீது அதிருப்தி கொண்ட குழுவினர் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் 'தமிழ் மக்கள் பேரவை' என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளனர். இந்த அமைப்பானது ஓர் அரசியல் கட்சி அல்ல என்றும் எந்தக் கட்சிக்கும் மாற்றீடானதோ போட்டியானதோ அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளபோதும் அந்த அமைப்பில் கலந்துகொண்டவர்களின் முன்னுக்கு பின் முரணான பேட்டிகளும் அவர்கள் கடந்த காலங்களில் வலியுறுத்திவந்த விடயங்களின் பின்னணிகளும் பேரவையின் எதிர்காலமும் நோக்கமும் எந்தத் திசையை நோக்கியவை என்பதை தெளிவாகவே வெளிக்காட்டி நிற்கின்றன. இந்த முன்னணியின் உருவாக்கம் எனப்படுவது தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரை பல்வேறு வழிகளிலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்ப…
-
- 13 replies
- 1.1k views
-
-
அமெரிக்க சான் என்டோனியோவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளதாக sacurrent.com என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது. குடிவரவு அதிகாரிகளின் வழமையான சோதனையின் போது சமன் ரன்தெனிய என்பவர் இந்த மாதம் முதலாம் திகதியன்று கைதுசெய்யப்பட்டார். இதன் பின்னர் அவரின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளையும் நாடு கடத்தவுள்ளதாக குடிவரவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எதிர்வரும் ஜனவரி 7ம் திகதிக்கு முன்னர் நாட்டில் இருந்து வெளியேறாவிட்டால் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கைதுசெய்யப்பட்ட சமன் தற்போது பியர்சால் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை தமது மூன்று பிள்ளைகளுக்கும் சிங்களம் தெரி…
-
- 1 reply
- 602 views
-
-
இலங்கை - பரதேனியா பல்கலைக்கழகத்தில் 1973ம் அண்டு நுழைவுபெற்று உயர் கல்விகற்ற தமிழ் பட்டதாரி மாணவா்கள் 53 பேர்வரை 40 வருடங்களின் பின்னர் தமது பழைய இனிய பல்கலை நினைவுகளை மீட்குமுகமாகவும் நண்பா்களை சந்திக்து அளவளாவும் முகமாகவும் மாபெரும் ஒன்றுகூடல் விழா நிகழ்வை வவுனியாவிலுள்ள hotel princes rose விடுதி மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளார்கள். உலகின் பல திசைகளில் இருந்தும் பசுமை நிறைந்த நினைவுகளோடும் கனவுகளோடும் பலர் கலந்துகொள்ளவுள்ள இந்நிகழ்வு எதிர்வரும் தை மாதம் 16ம் 17ம் திகதிதிகளில் நடைபெறவுள்ளதாகவும் இந்நிகழ்வுக்கு வருகைதரவுள்ள பரதேனியா பல்கலைகழகத்தில் 1973ம் ஆண்டு பல்கலை அனுமதிபெற்று கல்விபயின்ற அனைவரையும் நிகழ்வு ஏற்ப்பாடாளா்கள் அன்போடு அழைக்கிறார்கள் - இந்நிகழ்வு இரண்டுநாட…
-
- 1 reply
- 559 views
-
-
'தமிழ் மக்கள் பேரவை உருவாக சம்பந்தனே காரணம்' -எம்.றொசாந்த் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாகுவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனே காரணமாகும். ஆனால் இந்த அமைப்பு கூட்டமைப்புக்கு குடைச்சல் கொடுக்கும் அமைப்பு அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இது குறித்து அவர் திங்கட்கிழமை (21) தமிழ்மிரருக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், நாடாளுமன்றம் ஒரு தேசிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் சபையாக எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்க…
-
- 26 replies
- 3.2k views
-
-
விபத்து ஏற்படாமல் எப்படி? Video -எம்.றொசாந்த் கச்சேரி நல்லூர் வீதியில் உள்ள இந்த பாதுகாப்பற்ற கடவையின் ஊடாக தினமும் பாடசாலை மாணவர்கள் யாழ். மாவட்ட செயலகத்தில் கடமையாற்றுபவர்கள் என பலர் சென்று வருகின்றனர். அக் கடவையில் பாதுகாப்பு கதவுகள் இல்லை. சிவப்பு விளக்கு ஒளிர்வதுடன், சமிஞ்சை ஒலி எழுப்படும். அது மட்டுமே அக் கடவையில் ரயில் வருவதற்கான அறிகுறிகளாகும். அதனை சிலர் கவனத்தில் எடுக்காது அக்கடவையினை கடந்து செல்கின்றனர். இதனால் உயிராபத்து ஏற்பட கூடிய விபத்துக்கள் இடம்பெறும் அபாயம் உள்ளது. இப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கடவையின் ஊடாக கடந்த மாதம் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன…
-
- 0 replies
- 546 views
-
-
தான் யோகா பயிற்சியில் ஈடுபடும் படத்தை தனது அனுமதியின்றி நாமல் வெளியிட்டுள்ளாா் - மகிந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் யோகா பயிற்சியில் ஈடுபடும் படத்தை தனது மகன் நாமல் ராஜபக்ச அனுமதியின்றி வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பிரகீத் காணமற்போன விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள புலானய்வாளர்களை சந்திப்பதற்காக வெலிக்கடை மருத்துவமனைக்கு சென்ற வேளையே அவர் இதனை தெரிவித்துள்ளார். நான் யோகபயிற்சில் கடந்த சில வருடங்களாக ஈடுபட்டு வருகிறேன், எனினும் இந்த விடயம் ஊடகங்களிற்கு தெரியாது, கடந்தவாரம் நான் எனது மகனுடன் யோகா பயிற்சிநிலையத்திற்கு சென்றதை தொடர்ந்தே வெளியுலகிற்கு இந்த விடயம் தெரியவந்து…
-
- 1 reply
- 513 views
-
-
வடக்கு முதல்வர் - அமைச்சர்கள் இடையே கருத்து முரண்பாடுகள்! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையில் இணைத் தலைமைப் பதவியை ஏற்றுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளன என அறியமுடிகின்றது. யாழ். மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை மூடிய அறையினுள் வைத்து இரகசியமாக உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பொறுப்பை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஏற்றுக்கொண்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும், கூட்டமைப்பு மீது அதிருப்தியடைந்தவர்களுமே குறித்த அமைப்பில் ஒன்றிணைந்துள்ளனர் என்ற…
-
- 1 reply
- 309 views
-
-
வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள காணிகள் விற்பனை -குணசேகரன் சுரேன் உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட கீரிமலை, மாவிட்டபுரம் ஆகியவற்றை அண்மிய பகுதிகளில் அமைந்துள்ள காணிகள், அவற்றினது உரிமையாளர்களால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் தற்போது மக்கள் மீளக்குடியேறி வருகின்ற நிலையில், அம்மக்கள் தங்களுக்கு மேலதிகமாகவுள்ள காணிகளை விற்பனை செய்து வருகின்றனர். அத்துடன், விடுவிக்கப்பட்ட பகுதிகளில் காணிகள் இருந்தும், இடம்பெயர்ந்ததின் காரணமாக யாழ்ப்பாணத்தின் வேறு இடங்களில் காணிகளைக் கொள்வனவு செய்தவர்களும் வெளிநாடுகளில் தஞ்சமடைந்தவர்களுமே, இவ்வாறு தங்களது காணிகளை விற்பனை செய…
-
- 1 reply
- 722 views
-
-
ரக்பி வீரர் வசீம் தாஜுடீன் படுகொலை தொடர்பில் பிரதான சந்தேகநபரான கப்டன் திஸ்ஸ, கடல் மார்க்கமாக நாட்டை விட்டு தப்பி செல்ல முயற்சிப்பதாக குற்றப் புலனாய்வு திணைககளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. தாஜுடீன் கொலையை விசாரிக்கும் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம், மேலும் சில கடற்படை வீரர்கள் முன்னாள் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் அவர்களின் உதவியுடனே கடல்மார்க்கமாக திஸ்ஸ நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே, கப்டன் திஸ்ஸவிற்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு இருந்தும் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பதால் அவரை தொடர்ந்து, கண்காணித்து வருவதாவும் குற்றப் புலனாய்வு த…
-
- 0 replies
- 589 views
-
-
இந்த நாடு சிங்களவர்களுக்கு மாத்திரம் அல்ல ஏனைய சமூகத்தினருக்கும் உரித்தானது என நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்து என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ‘இந்த நாட்டில் விக்கிரமபாகுவிற்கோ, விமலுக்கோ, வேறு சிங்களவர்களுக்கோ இது எங்கள் நாடு, எங்கள் தேசம் என்று சவால் விடவோ, அச்சுறுத்தவோ முடியாது. இந்த நாட்டில் வேறு இனம், வேறு காலச்சாரம், வேறு பண்பாடு, வேறு மதத்தினைக் கொண்ட சமூகத்தினர் வாழ்கின்றனர். அவர்கள…
-
- 0 replies
- 524 views
-
-
இலங்கை பணிப்பெண்ணுக்கான தீர்ப்பில் மாற்றம் இலங்கை பணிப்பெண் ஒருவருக்கு கல்லால் அடித்துக்கொலை செய்யுமாறும் வழங்கப்பட்ட தீர்ப்பை, சவுதி அரேபிய நீதிமன்றம் மாற்றியுள்ளது. அதற்கு பதிலாக, சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/162247/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A3-%E0%AE%A3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%AE-#sthash.gZo2IvJ1.dpuf
-
- 1 reply
- 688 views
-
-
[ புதன்கிழமை, 23 டிசெம்பர் 2015, 12:53.25 PM GMT ] எங்களிடம் மனச்சஞ்சலம் ஏற்படுகின்றபோது ரணில் விக்கிரமசிங்கவுக்கு அல்லது சிங்கள இனவாத அரசியலை நடத்துகின்றவர்களுக்கு மகிழ்ச்சியான விடயமாக அமையும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் – கச்சாய் பொது நூலகத்தில் இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். http://www.tamilwin.com/show-RUmtzCRXSWksyC.html அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ”தமிழ்தேசியக் கூட்டமைப்பு என்பதுகூட, பலமான சக்தியாக இருக்கின்றபோதுதான்,நாங்கள் மக்கள் தந்த ஆணையோடு நடக்கின்றபோதுதான், ஏனையவர்களும் எ…
-
- 0 replies
- 660 views
-
-
-சொர்ணகுமார் சொரூபன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்திருந்தால், தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவு தெரிவித்திருப்பேன். ஏனெனில், கூட்டமைப்பில் எனக்கு இடமிருந்திருக்காது என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், மக்களிடம் அதிக ஆதரவு பெற்றவர்கள் கூட்டமைப்பினர். அதிலிருந்து முரண்பட்டவர்களே இந்த அமைப்பை ஆரம்பித்துள்ளனர் என எனக்குத் தோன்றுகின்றது. மாகாண சபை என்ற வரப்பிரசாதம் கூட்டமைப்பின் கையில் இருக்கும் போது, அதன்மூலம் நிறைய செய்திருக்க முடிய…
-
- 0 replies
- 670 views
-
-
ஹிருனிகாவின் வாகனத்தில் நபர் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் 6 பேர் கைது பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவின் வாகனத்தில் நபர் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹிருனிகா பிரேமசந்திரவின் டிபென்டர் ரக வாகனத்தில் நேற்றைய தினம் நபர் ஒருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேரை காவல்துறையினர் இன்றைய தினம் கைது செய்துள்ளனர். கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் காவல்துறையினர் கைபற்றியுள்ளனர். இதேவேளை, கடத்தப்பட்ட நபர் தம்மை ஹிருனிகா பிரேமசந்திர மிரட்டியதாகவும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாகவும் முறைப்பாடு செய்துள்ளார்…
-
- 5 replies
- 949 views
-
-
பண்பாட்டுப் பேரவையின் நிசாந்தனிற்கு விளக்கமறியல் தமிழர் பண்பாட்டுப் பேரவையின் தலைவர் என்று கூறிக் கொண்டு திரிந்தவரும் யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சுவீகரன் நிசாந்தன் திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிமன்று நேற்று உத்தரவிட்டுள்ளது. யாழ்.சோமசுந்தரம் அவனியூவைச் சேர்ந்த இவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். விசாரணைகளின் பின்னர் அவர் திருட்டுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. யாழ்.பிறவுண் வீதியிலுள்ள அழகு நிலையம் ஒன்றில் அவர் திருடியுள்ளதாகக் கடந்த ஜனவரி மாதம் யாழ்.பொலிஸ…
-
- 0 replies
- 685 views
-
-
பொலிஸ் நிலையத்தில் தீ முட்டியவர் உயிரிழப்பு -செல்வநாயகம் கபிலன் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டுக்குள் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை(20) மாலை தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (22) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இராசையா பிரதீபன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்ற தாபரிப்பு வழக்கு ஒன்றின் எதிராளியான குறித்த நபர் வழக்கு தவணைகளில் நீதிமன்றத்துக்குச் சமூகமளிக்காததால் அவருக்கு எதிராக 18ஆம் திகதி நீதிமன்றத்தால் பிடியாண…
-
- 0 replies
- 529 views
-
-
செல்வச் சந்நிதியில் பட்ஜெட் திருமணங்கள் குணசேகரன் சுரேன் வசதி குறைந்தவர்கள் மற்றும் குறைந்த செலவில் திருமணத்தை நடத்தி முடிப்பவர்களுக்கு தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் சிறந்த வரப்பிரசாதமாக இருக்கின்றது. திருமண சுப நாட்களில் செல்வச்சந்நிதி ஆலயத்தில் குறைந்தது 4 திருமணங்கள் நடைபெறும். இந்தளவுக்கு அங்கு திருமணங்கள் நடைபெறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம், குறைந்த செலவில் திருமணம் நடத்தி முடிக்கலாம் என்பதாகும். திருமணம் நடத்துவதற்காக ஆலயத்துக்கு 6000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மேற்கொண்டு, தானமானது விரும்பிய ரீதியி;ல் வழங்க முடிவதுடன் ஐயருக்கான தட்சணை 500 ரூபாய் தொடக்கம் 2000 ரூபாய் வழங்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 623 views
-
-
எம்.பிக்களுக்கான 1 நாள் கொடுப்பனவு 20ஆயிரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு நாள் வருகைக்கான கொடுப்பனவாக வழங்கப்படும் தொகையை 500 ரூபாவிலிருந்து 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது அரசாங்க தரப்பில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் வருகைக்காக தற்பொழுது ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது 500 ரூபா மாத்திரமே. இது 19500.00 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. ஒரு மாதத்துக்கு 8 நாட்கள் நாடாளுமன்றம் கூடுகின்றது. இதற்கேற்ப, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 160000.00 (ஒரு லட்சத்து 60 ஆயிரம்) ரூபா கிடைக்கப் பெறுகின்றது. ஏற்கனவே, வழங்கப்பட்ட கொடுப்பனவின்…
-
- 4 replies
- 556 views
-
-
கோத்தபாய மீது குற்றம் சுமத்தினால் கைது செய்தவர்கள் விடுதலையாக முடியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீது குற்றம் சுமத்தினால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விடுதலையாக முடியும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்ச குற்றம் செய்தார் என குற்றச்சாட்டை முன்வைத்திருந்தால், தற்போது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். கோத்தபாயவை குற்றவாளியாக்க சில தரப்பினர் தீவிர முயற்சி எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். புத்திஜீவிகள், கலைஞர்கள், படைவீரர்களிடம் விசாரணை நடாத்துவது நகைப்பிற்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார். நிதி மோசடி தவிர்ப்புப் ப…
-
- 0 replies
- 306 views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் ஆரம்பமும் பின்னணியும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் (இணைத்)தலைமையேற்றிருக்கும் 'தமிழ் மக்கள் பேரவை' என்கிற புதிய சிவில் சமூக அமைப்பொன்று கடந்த சனிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றது. சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்தி தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் புதிய மாற்றுக் கூட்டணி உருவாக்கப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்புக்கள் சில தரப்புக்களினால் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அவர் புதிய அமைப்பொன்றுக்கு தலைமையேற்றிருக்கின்றார். அரசியல்- சமூக முனைப்புள்ள அமைப்பொன்றின் தோற்றம் இயல்பாகவே நிறைய உரையாடல்க…
-
- 0 replies
- 469 views
-
-
9ஆம் திகதி விசேட அறிவிப்பு 23-12-2015 03:45 AM ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிப்பிரமாணம் செய்து, ஒருவருட நிறைவைக் கொண்டாடும், 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதியன்று, விசேட அறிவிப்பொன்று விடப்படவுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றம் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. புத்தாண்டின் கன்னியமர்வு 8ஆம் திகதி ஆரம்பமாவதுடன், மறுநாள் சனிக்கிழமையும் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் அரசாங்கத்தினால் யோசனையொன்று முன்வைக்கப்படவுள்ளது. அந்தயோசனை தொடர்பில் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதன் பின்னரே முடிவெடுக்கப்படவுள்ளதாக அறியம…
-
- 0 replies
- 790 views
-