Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அற்ப சலுகைகளுக்காக அரசுடன் முரண்பட முடியாது! - அரசியல் தீர்வே முக்கியம் என்கிறார் சம்பந்தன் [Sunday 2015-12-13 09:00] அற்ப விடயங்களுக்காக அரசாங்கத்துடன் முரண்பட்டு நாம் அடைய வேண்டிய பிரதான இலக்கான அரசியல் தீர்வு விவகாரத்தைப் பலவீனப்படுத்தி விடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார். அடையவிருக்கும் அரசியல் தீர்வை மையமாகக்கொண்டே எதிர்வரும் 19 ஆம் திகதியும் வரவு – செலவுத் திட்டத்துக்கு த.தே.கூ. ஆதரவு நல்க இருக்கின்றது. அற்ப விடயங்களுக்காக அரசாங்கத்துடன் முரண்பட்டு நாம் அடைய வேண்டிய பிரதான இலக்கான அரசியல் தீர்வு விவகாரத்தைப் பலவீனப்படுத்தி விடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும…

  2. மகேஸ்வரி நிதியத்தின் மீதான விசாரணை ஆரம்பம் - நா.நவரத்தினராசா யாழ்.மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் சங்கத்துக்கு மகேஸ்வரி நிதியத்தினர் வழங்கவேண்டிய 10 மில்லியன் ரூபாய் நிதி தொடர்பான விசாரணை, கோப்பாய் பொலிஸார் மற்றும் இரகசியப் பொலிஸார் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மகேஸ்வரி நிதியத்துக்கு மணல் ஏற்றி இறக்குவதற்காக பாரவூர்தி உரிமையாளர்கள் வழங்கிய 5,000 ரூபாய் அங்கத்துவ வைப்புப் பணம் மற்றும் ஒவ்வொரு முறையும் மணல் ஏற்றியிறக்கும் போது வழங்கிய 300 ரூபாய் சேமநிதி என 10 மில்லியன் ரூபாய் நிதியை திரும்பத் தரக்கோரி பாரவூர்தி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அத்துடன், மகேஸ்வரி நிதியத்தில் மணல் ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்ட பாரவூர்திக…

  3. நிலத்தடி நீரில் எண்ணெய் கசிவு: அறிக்கை தெளிவுபடுத்தப்பட வேண்டும் வலிகாமம் பகுதியிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமை தொடர்பில் நிபுணர் குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையானது தெளிவாக வெளியிடப்பட வேண்டுமென வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016ஆம் ஆண்டு வரவு - செலவுத்திட்டத்தின் விவசாய, கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நிலத்தடி நீரில் எண்ணெய் கசிவு இல்லையென்று கூ…

    • 1 reply
    • 431 views
  4. குரோதப் பேச்சுக்களுக்கு எதிரான சட்டமூலம் வாபஸ் : அரசு தீர்மானம் குரோதப் பேச்சுக்களுக்கு எதிரான சட்டமூலத்தை வாபஸ் பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தை அடுத்த மாதமளவில் விவாதத்திற்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் எதிர்க்கட்சியினர் மற்றும் சிவில் அமைப்புக்களிடம் இருந்து எழுந்த எதிர்ப்பலைகளை கருத்திற்கொண்டு அதனை வாபஸ் பெற தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கிரியெல்ல கூறினார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி அதற்குப் பதிலாக குரோதப் பேச்சுக்களுக்கு எதிரான சட்டமொன்றை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித…

  5. முதலமைச்சர் நிதியத்துக்கு அனுமதி வழங்கப்படாது விட்டால் போராட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண முதலமைச்சர் நிதியத்துக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். அவ்வாறு அனுமதி வழங்கப்படாவிட்டால், ஜனாதிபதி செயலகத்தின் முன்பாகவும், நாடாளுமன்றத்தின் முன்பாகவும் நாங்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். 13 ஆவது திருத்தத்தினுள் வைத்து கழுத்தறுப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்ற இந்த நிலையில் சர்வதேச சமூகத்துக்கு எமது நிலைப்பாட்டைச் சொல்ல வேண்டிய நேரம் தற்போது வந்துள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் வரவு- செலவுத் திட்ட கொள்கை விளக்க உரை மீது கருத்…

  6. 'தற்போதைய அரசியல் பாதை வித்தியாசமானது' தமிழரது தற்போதைய அரசியல் பாதை வித்தியாசமானது.அதற்கு அடிப்படை பொறுமை காக்க வேண்டும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். காந்தியூர் சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தேர்தலின் போது, தமது தீவிரமான நிலைப்பாடுகளை முன்வைத்து மக்கள் மத்தியில் சொற்பளவேனும் ஆதரவைப் பெற்றிராதவர்கள் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அதன் அரசியற் போக்கையும் அழிக்க வன்முறையைக் கையிலெடுத்திருப்பதாக குற்றம் சுமத்தினார். இவ் வன்முறைப் போக்கின் வெளிப்பாடே ஜெனீவா, பேர்ன், டொரன்டோ, சிட்னி போன்ற நகரங்களில் தன…

  7. சும்மா இருக்கும் இராணுவம் மூலம் வடிகால்களை துப்புரவு செய்யலாம் : வடக்கு முதல்வர் கருத்து இராணுவத்தினர் இங்கு சும்மா தானே இருக்கின்றனர் எனவே அவர்களைக் கொண்டு, அவர்கள் அடைத்த வெள்ளவாய்க்கால்களையும்- கான்களையும் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். இது தொடர்பில் அவர்களுடன் பேச வேண்டும் என்று தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன். வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் அமைச்சு மீதான விவாதம் நேற்று இடம்பெற்றது. இதன்போது இறுதியில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். விவாதத்தின் போது ஆளுங்கட்சி உறுப்பினர் க.விந்தன், யாழ்.நகரில் கடந்த காலங்களில் இராணுவத்தினர் சுற்றிவ…

  8. கல்லடி விவேகானந்தா மகளீர் மகா வித்தியாலய மாணவி அரியதாஸ் சதுர்ஸியா மூன்றாம் இடத்தைப்பெற்று (astro) வானவில் மற்றும் வணக்கம் மலேசியா நடாத்திய "மாணவர் முழக்கம்" எனும் பேச்சுப் போட்டியில் கல்லடி விவேகானந்தா மகளீர் மகா வித்தியாலய மாணவி அரியதாஸ் சதுர்ஸியா மூன்றாம் இடத்தைப் பெற்று சர்வதேசரீயில் சாதனை படைத்துள்ளார். அகில இலங்கையில் நடைபெற்ற இப்போட்டியில் முதலிடத்தைப் பெற்ற இம்மாணவி சென்னையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று தமிழுக்கும் எமது மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். http://www.battinaatham.com/description.php?art=1720

  9. சரணடைந்தோர் விவகாரம்; இராணுவமே பொறுப்புகூற வேண்டும் - பரணகம ஆணைக்குழு [ Thursday,17 December 2015, 02:57:03 ] இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களுக்கு இராணுவமே பொறுப்புக் கூற வேண்டுமென காணாமற் போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஐனாதிபதி ஆனைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் குறித்த ஆணைக்குழு தொடர்ச்சியாக இறுதி நாள் விசாரணைகளை நடத்தியது. காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணையொன்றின் போது ஆணைக்குழுவின் தலைவர் முன்பாக தயாயொருவர் தனது சாட்சியங்களை வழங்கினார். இதன் போது அவர் தன்னுடைய கணவரை த…

  10. இந்தியா-இலங்கை இடையே கடல் பாலம், சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் தெரிவிப்பு! [Thursday 2015-12-17 09:00] தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் போக்குவரத்து வழித்தடங்களை வலுப்படுத்தும் விதமாக, இந்தியா-இலங்கை இடையே கடல் பாலம், சுரங்கப்பாதை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக, மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் நேற்று அளித்த அறிக்கையில், ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு, ரூ.24,000 கோடி மதிப்பில் கடல் பாலம், சுரங்கப்பாதை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் போக்குவரத்து வழித்தடங்களை வலுப்…

  11. பட்ஜட்டில் திருத்தம் செய்துகொள்வதால் அரசுக்கு ரூ.7 ஆயிரம் மில்லியன் இழப்பு! [ புதன்கிழமை, 16 டிசெம்பர் 2015, 10:55.53 PM GMT ] வரவு - செலவுத் திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதால் அரசுக்கு கிடைக்கவுள்ள வருமானத்தில் 7 ஆயிரம் மில்லியன் ரூபாவரை இழப்பு ஏற்படும்... என்றும், அதை எவ்வாறு ஈடுசெய்வது என்பது தொடர்பில் எதிர்வரும் 19 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுதாக்கல் ஆகியன முடிவடைந்தப் பின்னர், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆரம்பமானது. இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு…

  12. இரணைமடுத் திட்டமே யாழ்.மாவட்ட குடிதண்ணீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு! யாழ். குடாநாடு மற்றும் தீவகப் பகுதிகளின் குடிதண்ணீர்ப் பிரச்சினைக்கு இரணைமடு குடிதண்ணீர்த் திட்டமே நிரந்தரத் தீர்வாகும் என்று நாடாளுமன்றில் தெரிவித்த நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், வடக்கு மக்களின் பிரதிநிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினால் அந்த மக்களுக்கு மிகக் குறைந்தளவான செலவில் இரணைமடு பாரிய குடிதண்ணீர்த் திட்டத்தை அமுல்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நீர்வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டhர். அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில், வடக்குஇ கி…

  13. காணாமற்போனவரின் தாய் ஒருவருக்கு மகிந்த கூறிய பதில்! [Thursday 2015-12-17 08:00] காணாமல்போன மகனைத் தேடியலைந்த நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் இருந்தபோது அவரை நேரில் சந்தித்தோம். எமது உறவுகள் தொடர்பாக கேள்வியெழுப்பியபோது உங்கள் பிள்ளைகள், கணவன்மார் வேறு பெண்களை திருமணம் முடித்துக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டனர். அவர்கள் யாரையும் நாம் பிடிக்கவில்லை என்று கூறினாரென தாயொருவர் சாட்சியமளித்தள்ளார். காணாமல்போன மகனைத் தேடியலைந்த நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் இருந்தபோது அவரை நேரில் சந்தித்தோம். எமது உறவுகள் தொடர்பாக கேள்வியெழுப்பியபோது உங்கள் பிள்ளைகள், கணவன்மார் வேறு பெண்களை திருமணம் முடித்துக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டனர். அவர்க…

  14. வலுவான இலங்கையை எதிர்பார்க்கிறது அமெரிக்கா! - கொழும்பில் தோமஸ் ஷனோன் தெரிவிப்பு [Thursday 2015-12-17 08:00] ஜனநாயகத்திற்குப் புத்துயுர் அளிப்பதற்கு மக்களுக்குப் பலம் உள்ளது என்பதற்கு இலங்கை ஒரு சிறந்த முன்னுதாரணம் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசர் தோமஸ் ஷனோன் தெரிவித்துள்ளார். கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தூதுவர் ஷனோன் மேற்படி கருத்துகளை வெளியிட்டார். ஜனநாயகத்திற்குப் புத்துயுர் அளிப்பதற்கு மக்களுக்குப் பலம் உள்ளது என்பதற்கு இலங்கை ஒரு சிறந்த முன்னுதாரணம் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசர் தோமஸ் ஷனோன் தெரிவித்துள்ளார். கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நேற்று ந…

  15. பிரபாகரன் - மஹிந்த டீல், நாமல் கனவு கலைந்தது – டிலான் [ புதன்கிழமை, 16 டிசெம்பர் 2015, 05:40.46 PM GMT ] மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டு 13 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொண்டதாக, அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 2004ம் ஆண்டு சபாநாயகர் ஒருவரை கூட நியமிக்க முடியாத அரசாங்கமே தம்மிடம் இருந்ததாகவும், பின்னர் மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட்சியுடன் டீல் (ஒப்பந்தம்) ஒன்றை போட்டு 13 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொண்டதாகவும் டிலான் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மஹிந்த புலிகளுடன் டீல் ஒன்றை போட்டதாக சிலர…

  16. ஸ்ரீலங்கா சிறைகளிலுள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் [ Thursday,17 December 2015, 03:02:18 ] ஸ்ரீலங்கா சிறைகளிலுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும் எனக்கோரி இராமேஸ்வரத்தில் மீனவக் குடும்பங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் நேற்று புதன்கிழமை இராமேஸ்வரம் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்ரீலங்கா கடற்பரப்பில் வைத்து மாயமான மீனவக் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். கடந்த மாதம் 28ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற சுடலைமணி, அந்தோணி, இராமச்சந்திரன், ஹமீது உள்ளிட்ட நால்வர் ஸ்ரீலங்கா கடற்ப…

  17. இலங்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பான் கீ மூன் கவனம் - குளோபல் தமிழ் செய்தியாளர் கொழும்பு:- 17 டிசம்பர் 2015 இலங்கையில் இந்த ஆண்டு ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கவனம் செலுத்தியுள்ளார். இந்த ஆண்டின் முக்கிய விடயங்களில் ஒன்றாக இலங்கையில் ஏற்பட்ட மாற்றத்தையும் பான் கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் ரீதியான முன்னேற்றம், சுமூகமான முறையில் இலங்கையிலும் நைஜீரியாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்தி, காலநிலை மாற்றம், முரண்பாட்டு தீர்வு மற்றும் மனிதாபிமான உதவி போன்றன தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு பங்களிப்பு வழங்கியுள்ள…

  18. பரராஜசிங்கத்தின் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது : சந்திரகாந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினாருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும் போது அங்கு நின்ற ஊடகவியலாளர்களிடம் மேற்கண்டவாறு கூறினார். 2005ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தில் திருப்பலி பூசையில் ஈடுபட்டுக்கொணடிருந்த…

  19. மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி பிரதேசத்தில் இடம்பெற்ற கால்நடைப் பண்ணையாளர்களுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் இடம்பெற்ற சர்வதேச நியதியை முற்று முழுதாக புறந்தள்ளப்பட்ட யுத்தத்தால் நாம் பலவாறு பலவற்றை இழந்தோம். ஆனால் இன்று அவ்வாறானதொரு அராஜக ஆட்சி முறை வீழ்த்தப்பட்டு நல்லாட்சி என்கின்ற ஒரு ஆட்சி முறைமையினை நாம் எல்லோரும் சேர்ந்து ஏற்படுத்தியிருக்கின்றோம். நாம் எதிர்க்கட்சியில் இருந்து பழக்கப்பட்டவர்கள், குறைகளை கண்டுகண்டு தெரிவித்துக் கொண்டிருந்தோம் ஆனால் தற்போது அந்தக் குறைகளை நிவர்த்தி செய்யும் அளவிற்கு சற்று எழு…

    • 0 replies
    • 461 views
  20. அதில்” பாதிப் பதில் வேண்டாம்- சகல அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்” “கூட்டரசாங்கம் பென்ஷனுக்கு வேட்டு, ஈபிஎப், ஈரிஎப் ஐ கொள்ளையடிக்கிறது” “உரமானியம் நாசம் அரசாங்கத்தின் குண்டில் சிக்காதிருப்போம்” “சகல காணாமலாக்குதல்களையும் வெளிப்படுத்து” “பைக் -த்ரீவீல் வாகனங்களுக்கு விதித்த வரியைச் சுருட்டிக் கொள்” “குமார் குணரெத்தினத்தை நாடு கடத்தாதே உடன் விடுதலை செய்” போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் ஒட்டப்பட்டு காணப்பட்டுள்ளன. செய்தி: Tamils24.com

    • 0 replies
    • 438 views
  21. கிளிநொச்சியில் பாதுகாப்பான புகையிரத கடவையை அமைக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் [ புதன்கிழமை, 16 டிசெம்பர் 2015, 05:48.30 PM GMT ] நீதிக்கும் ஜனநாயகத்துக்குமான மக்கள் அமைப்பினர் பாதுகாப்பான புகையிரத கடவையை அமைக்க கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். எதிர்வரும் வெள்ளி காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் நடத்தப்படவுள்ளது. பாதுகாப்பான புகையிரத கடவை இல்லாததனால் இதுவரை 19 பேர் ரயிலில் மோதி பலியாகி உள்ளனர். இது தொடர்பாக புகையிரத திணைக்களத்துக்கு எடுத்துக்கூறி இருந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த போராட்டத்துக்கு சமூக ஆவலர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்டத்தின் ஜனநாயக…

  22. இலங்கையில் கறுப்புப் பட்டியலிடப்பட்டவரின் வரிசையில் கவிஞர் ஜெயபாலன் இலங்கையில் கறுப்புப் பட்டியலிடப்பட்டவர்களின் வரிசையில் கவிஞர் ஜெயபாலன் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கம் அண்மையில் கவிஞரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பகிரங்க அழைப்பு விடுத்திருந்தது.எனினும், ஜெயபாலனின் பெயர் கறுப்புப் பட்டியலிடப்பட்டவர்களின் வரிசையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஜெயபாலனுக்கு எதிரான தடை தொடர்ந்தம் அமுலில் இருப்பதாகவும் தடையை அதிகாரிகள் இதுவரையில் நீக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சினால் கவிஞருக்கு அண்மையில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.…

  23. கூட்டமைப்பு எம்.பிக்களும் மாவட்ட இணைத் தலைவர்கள் : நியமனம் வழங்கினார் ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டு ஜனாதிபதியினால் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்துக்கு, மாவை.சேனாதிராஜாவும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு சி.சிறீதரனும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு க.சிவமோகனும், மன்னார் மாவட்டத்துக்கு சாள்ஸ் நிர்மலநாதனும், வவுனியா மாவட்டத்துக்கு செல்வம் அடைக்கலநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு க.சிறீநேசன் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக…

    • 22 replies
    • 1.1k views
  24. ஈபிடிபியினரும் இராணுவத்தினருமே எனது மகனை கடத்தினர்! பொய் சொன்ன டக்ளஸ் தேவானந்தா [ செவ்வாய்க்கிழமை, 15 டிசெம்பர் 2015, 03:20.41 PM GMT ] அம்மா.. இங்கே பாருங்கள் நான் இங்கே இருக்கிறேன்... என என்னுடைய பிள்ளை ஈ.பி.டி.பி முகாமிற்குள் இருந்து கத்தினான். என்னுடைய பிள்ளையை பார்க்க ஓடிச் சென்றபோது அங்கு நின்ற படையினர் துப்பாக்கியை கொண்டு என்னை சுடுவதற்கு துரத்தினார்கள் என அராலி செட்டியார் மடத்தைச் சேர்ந்த இராசேந்திரம் துளசிமலர் என்ற தாய் கதறியழுது சாட்சியமளித்துள்ளார். காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வுகள் இன்றைய தினம் சங்கானை பிரதேச செயலகத்தில் நடைபெற்றிருந்த நிலையில் குறித்த சாட்சியம் வழங்கப்பட்டிருக்கின்றது. குறித்த சாட்சியத்தில…

  25.  'இராணுவ அதிகாரி எனது மகனை கூட்டிக்கொண்டு திரிந்தார்' -எம்.றொசாந்த் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட தனது மகனை கஜபாகு இராணுவ பிரிவைச் சேர்ந்த சுரேஸ் என்ற இராணுவ அதிகாரி தலைமையிலான குழுவினர் சுற்றிவளைப்புக்களின் போது, முகத்தை துணியால் கட்டிய நிலையில் கொண்டு திரிந்ததாக காணாமற்போன ஐயம்பிள்ளை நிரூபன் (காணாமற்போகும் போது வயது 20) என்பவரின் தாயார் சாட்சியமளித்தார். காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளுக்கான அமர்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (16) நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.