Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தபால் பெட்டி சின்னத்தில் ஜனநாயக தேசிய கூட்டணியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கையளித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கடந்த தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்புவாக்கை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. [எ] அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்! (newuthayan.com) அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்! (newuthayan.com)

      • Haha
      • Like
      • Thanks
    • 22 replies
    • 1.2k views
  2. 11 Oct, 2024 | 01:10 PM சவுதி அரேபியாவின் ரியாத் நகரை நோக்கிப் பயணித்த விமானம் ஒன்று சுமார் ஒரு மணிநேரத்தின் பின்னர் தொழினுட்ப கோளாறினால் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாது. இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (10) இரவு இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானச் சேவைக்குச் சொந்தமான யு.எல் - 265 விமானமே இவ்வாறு தரையிறங்கியுள்ளது. இதனையடுத்து, இந்த விமானத்தில் பயணித்த பயணிகளில் சிலர் வேறு விமானத்தில் சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், ஏனையவர்கள் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி ஒருவர…

  3. மதுபானசாலை விவகாரம் - யாழ் வேட்பாளர்கள், முன்னாள் எம்.பி.க்களுக்கு கீதநாத் காசிலிங்கம் சவால் 11 Oct, 2024 | 02:06 PM யாருக்கும் மதுபானசாலைஅனுமதி பெற்றுக்கொடுக்கவில்லை என வெளிப்படையாக வாக்குமூலம் வழங்குமாறு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் யாழ் மாவட்ட வேட்பாளர் கீத்நாத் காசிலிங்கம் சவால் விடுத்துள்ளார். இன்று அவர் பதிவிட்டுள்ள சமூக வலைத்தள பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். “நான் என்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டேன். உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. அத்துடன் நான்; எனக்கோ என்னுடைய குடும்…

  4. 11 Oct, 2024 | 04:19 PM எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 47 கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் 4 சுயேட்சைக் குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான சரத் சந்திர தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று மதியம் 12 மணியளவில் நிறைவுக்கு வந்திருந்தது. அந்த வகையில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். …

  5. 11 Oct, 2024 | 04:26 PM ரொபட் அன்டனி இலங்கையில் பொதுவாக நோக்குமிடத்து சாதகமான வளர்ச்சி நிலை தெரிகிறது. வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது. ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வலுவடைந்துள்ளது. பணவீக்கம் குறைந்திருக்கிறது. வட்டி விகிதங்களும் அதிகரிக்கப்படவில்லை. தனியார் கடன்கள் அதிகரித்திருக்கின்றன. அரச வருமானமும் அதிகரித்திருக்கிறது. ஆனால், மறுபுறம் வறுமை அதிகரிப்பு உள்ளிட்ட சவாலான நிலையும் நீடிக்கிறது என்று உலக வங்கியின் இலங்கை குறித்த பொருளாதார நிபுணர் ஸ்ருதி லக்டகியா தெரிவித்தார். இலங்கையின் எதிர்கால வாய்ப்புகள் தொனிப்பொருளில் இலங்கை தொடர்பான புதிய அரையாண்டு அறிக்கை வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வி…

  6. 11 Oct, 2024 | 05:48 PM எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகள், 17 சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தன. அவற்றில் 17 அரசியல் கட்சிகளும் 14 சுயேட்சை குழுக்களும் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதேவேளை மூன்று கட்சிகளும் மூன்று சுயேட்சை குழுக்களும் நிராகரிக்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார். வேட்புமனுவின் பின் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (11) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய ஜனநாயக முன்னணி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய தேசிய சுதந்திர …

  7. வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் சார்பில் கையளித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் செயற்பாடுகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளன. இந்நிலையில், சத்தியக் கடதாசியை சமர்ப்பிக்க தவறியமையினால் வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1403789

      • Like
    • 11 replies
    • 608 views
  8. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர். உலக உணவுத் திட்டத்தின் ஊடாக இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு பிரதிநிதிகள் இதன்போது இணக்கம் தெரிவித்தனர். இலங்கையில் உணவு நெருக்கடி நிலைமை தற்போது குறைவாக உள்ள போதிலும், தேவை ஏற்படும் போது புதிய வேலைத்திட்டங்கள் மூலம் இலங்கைக்கு ஆதரவளிக்க உலக உணவுத் திட்டத்தின் தலைவர்கள் ஜனாதிபதியின் செயலாளரிடம் விருப்பம் தெரிவித்தனர். உலக உணவுத் திட்டத்தின் உள்ளூர் பணிப்பாளர் அப்துல் ரஹீம் சித்திக், அரசாங்க பங்காளித்துவ அதிகாரி முஸ்தபா நி…

  9. சிஐடியின் புதிய தலைவராக சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பி. அம்பவில நியமிக்கப்பட்டுள்ளார் இவர் முன்னர் பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றி வந்ததுடன், சட்டவிரோதபணபரிமாற்றங்கள், பிரமிட் திட்ட மோசடி போன்றவை குறித்த விசாரணைகளிற்கு பொறுப்பாக செயற்பட்டிருந்தார். இதேவேளை சிஐடியின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்துவந்த சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ரொகான் பிரேமரட்ண உட்பட ஐந்து பிரதிபொலிஸ்மா அதிபர்களை தேசிய பொலிஸ் ஆணைக்குழு இடமாற்றம் செய்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளது பெண் பிரதிபொலிஸ்மா அதிபர் ஒருவரும் இடமாற்றப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/196035

  10. ஐக்கிய அமெரிக்காவினால் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்ட பீச் கிங் (360 ER) ரக கண்காணிப்பு விமானத்தை உத்தியோபூர்வமாக ஏற்கும் வைபவம் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நேற்று (10) இடம்பெற்றது. இந்த வைபவத்தில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் ( ஓய்வு பெற்ற ) சம்பத் துய்யகொந்தா மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச மற்றும் அமெரிக்க கடற்படையின் பசுபிக் பிராந்திய கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவன் கொளர் ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கை விமானப்படையின் விளக்கம் 3 கடல் சார்ந்த படைப்பிரிவில் இந்த பீச் கிங் ரக விமானம் இணைக்கப்பட உள்ளது. அந்த வகையில் சம்பிரதாய முறை நீர் வரவேற…

  11. இலங்கை அரசாங்கம் கடந்த கால கொள்கைகளை தொடர்வதற்கும் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை எதிர்ப்பதற்கும் தீர்மானித்தமை ஏமாற்றமளிக்கின்றது - சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கையின் புதிய அரசாங்கம் கடந்த கால கொள்கைகளை தொடர்வதற்கும் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை எதிர்ப்பதற்கும் தீர்மானித்தமை ஏமாற்றமளிக்கின்றது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரதி பிராந்திய இயக்குநர் பாபு ராம் பண்ட் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளமை இலங்கையில் காணப்படும் மனித உரிமைகள் கரிசனை குறித்து சர்வதேச சமூகம் தொடர்ந்தும் கவனம் செலுத்தவேண்டிய…

  12. இலங்கை தமிழ் அரசு கட்சி - மட்டக்களப்பில் வேட்புமனு தாக்கல் செய்தனர் Vhg அக்டோபர் 10, 2024 எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீட்டு சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் - சாணக்கியன் தலைமையில் இன்று வியாழக்கிழமை (10-10-2024) ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். கட்சியின் வேட்பாளர்கள்..... 1:-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்- சாணக்கியன் 2:-முன்னாள்.பா.உறுப்பினர் ஞானமுத்து - சிறினேசன் 3:- மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் மேஜர் தியாகராசா- சரவணபவன் 4:-ஏறாவூர் பற்று முன்னாள் தவிசாளர்…

  13. மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகூடிய ஆசனங்களை பெறும்‌ கட்சியாக எமது கட்‌சி காணப்படும்‌ என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது : சிவனேசதுரை சந்‌திரகாந்தன்‌ ! By kugen எதிர்வரும்‌ பாராளுமன்ற தேர்தலில்‌ எமது கட்‌சி கிழக்கு மாகாணத்தில்‌ அதிகூடிய வாக்குகளை பெறும்‌ எனும்‌ நம்பிக்கை எமக்கு உள்ளது, இது வரலாற்றில்‌ ஓர்‌ திருப்புமுனையாக கூட இருக்கலாம்‌, என தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சியின்‌ தலைவர்‌ சிவனேசதுரை சந்‌திரகாந்தன்‌ தெரிவித்துள்ளார்‌. இன்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல்‌ செய்து விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்‌ போதே அவர்‌ இதனை தெரிவித்தார்‌. அவர்‌ மேலும்‌ தெரிவிக்கையில் , மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகூடிய ஆசனங்களை பெறும்‌ கட்சியாக எ…

  14. திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி இம்முறை வீட்டுச் சின்னத்தில் போட்டி : எம். ஏ சுமந்திரன் ! By kugen திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி இம்முறை வீட்டுச் சின்னத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர் என்றும் முதன்மை வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச. குகதாசன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்டப் பணிமனையில் வியாழக்கிழமை (10)மாலை இடம் பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்தும் தெரிவிக்கையில். நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளோம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் நால்வரும் ஏனைய கட்சிகளுடன் மூவருமாக மொத…

  15. மாலதியின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் adminOctober 11, 2024 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 37 வது நினைவேந்தல் நிகழ்வு நேற்று (10) வியாழக்கிழமை மாலை மன்னார் ஆக்காட்டி வெளியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. குடும்ப உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் போராளிகள்,உறவினர்கள்,உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர். இதன் போது அவரது உருவப்படத்திற்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு,மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. https://globaltamilnews.net/2024/207359/

  16. யாழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவாக இப் புதிய கட்சி போட்டியிடவுள்ளது. இதில் தமிழரசுக் கட்சியில் அதிருப்பியடைந்துள்ளவர்கள் மற்றும் வேறு சில கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சிவில் சமூக பிரதிநிதிகள் எனப் பலரையும் உள்ளடக்கி இக் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுவை நாளை காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்ய உள்ளனர். இக் கட்சியின் உருவாக்கம் மற்றும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதன் தலைவரான ஐனாதிபதி சட்டத்தரணி தவராசா இன்றைய ஊடக சந்திப்பில் இதனை அறி…

  17. பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ ஆகியோர் போட்டியிடவோ தேசியப் பட்டியலில் இடம்பெறவோ மாட்டார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷ தேர்தலில் நேரடியாக போட்டியிடாமல் அவரது பெயர் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. எனினும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சசீந்திர ராஜபக்ஷ மொனராகலை மாவட்டத்திலும், நிபுண ரணவக்க மாத்தறை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளதாக அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களில் பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் கையொப்பமிடும்…

  18. ஓமந்தை, கதிரவேலு பூவரசன் குளம் பகுதியில் காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை (10.10) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஓமந்தை, கதிரவேலு பூவரசன் குளம் பகுதியில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கிடையில் காணி தொடர்பாகச் சிறிய பிணக்கு ஒன்று இருந்து வந்துள்ளது. இந்நிலையில் குறித்த காணியில் மாமன் மற்றும் மருகன் ஆகிய இருவரும் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த நபர்கள் குறித்த இருவர் மீதும் மிளகாய்த் தூளை அள்ளி வீசிவிட்டு அவர்களை விரட்டி வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக ஊர்மக்கள் தெரிவிக்கின…

  19. வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு! 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (11) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைகிறது. இது தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் அளித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்காக மொத்தம் 349 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. நேற்றைய நிலவரப்படி 147 அரசியல் கட்சிகளும் 94 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன. தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் பிரகாரம், வேட்பாளர்களுக்கான செலவீன வரம்பு தொடர்பான விபரங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, வ…

  20. இலங்கையின் பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டில் 4.4 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது முந்தைய முன்னறிவிப்புகளை விஞ்சும் என்று உலக வங்கி (WB) வியாழக்கிழமை (10) தெரிவித்துள்ளது. உலக வங்கியின் 'எதிர்காலத்திற்கான திறப்பு' என்ற தலைப்பிலான இலங்கையின் இரு ஆண்டுகால மேம்படுத்தல், எவ்வாறாயினும், மீட்சி பலவீனமாக உள்ளது என்றும், பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுதல், கடனை வெற்றிகரமாக மறுசீரமைத்தல் மற்றும் நடுத்தர கால வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் வறுமையைக் குறைப்பதற்கும் தொடர்ச்சியான கட்டமைப்பு சீர்திருத்தங்களைச் சார்ந்துள்ளது என்றும் எச்சரித்துள்ளது. கொழும்பில், வியாழக்கிழமை (10) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கருத்துரைத்த போதே உலக வங்கியின்…

  21. இன்று (ஒக்டோபர் 10) முதல் ஒரு வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை மீண்டும் பொலிஸ் சேவையில் நியமிக்க பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. R Tamilmirror Online || மீண்டும் பொலிஸ் சேவையில் ஷானி அபேசேகர

  22. அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்! எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். மருத்துவர் அர்ச்சுனா கடந்த ஐனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் மாறி மாறி ஆதரவு தெரிவித்ததுடன் இறுதி நேரத்தில் அனுரகுமார திசாநாயக்கவிற்கு ஆதரவை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்து இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்! (newuthayan.com)

  23. 10 Oct, 2024 | 03:04 PM ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலயாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வடபகுதி மக்கள் நலன் கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கடிதமொன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் குறிப்பிடப்படுவதாவது, எம்மால் ஆரம்பிக்கப்பட்ட, ஆரம்பிக்கப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டிருந்த முக்கிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதத்தில் அடங்கியுள்ள முக்கிய விடயங்கள் கடந்த காலத்தில் எம்மால் இனங்கண்டு, சிபாரிசு செய்து, அனுமதி பெறப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு, தொடரப்பட வேண்டிய மற்றும் ஆரம்பிக்கப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டிருந்த …

      • Thanks
      • Like
      • Haha
    • 23 replies
    • 1.3k views
  24. 10 Oct, 2024 | 04:58 PM (எம்.நியூட்டன்) இனத்தின் விடுதலைக்காக யார் செயற்படுவார்கள் என்பதை தீர்மானிக்கும் காலம் மக்கள் கைகளில் உள்ளது. அவர்களே முடிவெடுப்பார்கள் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் முதன்மை வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் தலைவரை சந்தித்து ஆசி பெற்ற பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், தமிழ் மக்களின் விடுதலைக்காக யார் செயற்படுவார்கள் என்பதை தீர்மானிக்கும் சக்தி மக்கள். அவர்கள் யார் வேண்டும், வேண்டாம் என்பதை முட…

      • Like
    • 3 replies
    • 329 views
  25. 10 Oct, 2024 | 06:53 PM தேசிய மக்கள் சக்தி திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (10) கையளித்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் க. இளங்குமரன், எம்.மோகன், பூ. சிறிதரன், கா. பிரகாஷ், இ. வெண்ணிலா, ஜெ.ரஜீவன், எஸ்.சிறிபவானந்தராசா, தே.தஜீவன், உ. கீர்த்தி ஆகியோர் போட்டியிடவுள்ளனர். யாழ். மாவட்டத்தில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ள தேசிய மக்கள் சக்தி வேட்புமனு தாக்கல் | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.