ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
ஐ.நா போர்க்குற்ற அறிக்கையும் அழிக்கப்படும் சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கையும் 09/17/2015 இனியொரு.. நீதிமன்ற விசாரணை முறைமை அல்லாத ஐக்கிய நாடுகள் சபை மனித் உரிமைப் பேரவையின் போர்க்குற அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது தீவிர குற்றங்களை முன்வைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அல் ஹுசைன், அறிக்கை குறித்துக் கூறும் போது பயங்கரமான வன்முறைகள் இலங்கையில் நடைபெற்றுள்ளன என்றார். முன்று லட்சம் இடம்பெயர்ந்த பொதுமக்கள் உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களின் முகாம்களில் சர்வதேசச் சட்டங்களுக்கு முரணான காலப்பகுதி முழுவதும் வைக்கப்பட்டிருந்தனர் என அறிக்கை குறிப்பிடுகிறது. அ…
-
- 2 replies
- 537 views
-
-
கொழும்பிற்கு வெளிப்புற சுற்றுவட்ட அதிவேக வீதியூடாக கடுவெலயில் இருந்து கடவத்தை வரையான பகுதி திறக்கப்பட்டுள்ளதை அடுத்து, கடவத்தையில் இருந்து மாத்தறை வரை இன்று (18) முதல் பஸ் சேவைகள் ஆரம்பமாகின்றன. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் இணைந்து பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தெருக்கல் அமைச்சின் செயலாளர் பி.சீ. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய கடவத்தையில் இருந்து மாத்தறை வரை பயணம் செய்வதற்காக 500 ரூபா கட்டணம் அறவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடவத்தையில் இருந்து காலி வரையான பயணத்திற்கு 400 ரூபா கட்டணம் அறவிடப்படும் என அமைச்சின் செயலாளர் கூறினார். கடவத்தை நகரிலிருந்து அதிகாலை 5.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் ஒவ்வொர…
-
- 0 replies
- 351 views
-
-
அனைத்துலக விசாரணையே நியாயம் தரும் – 170 கத்தோலிக்க குருமார் ஐ.நாவுக்கு கடிதம்SEP 18, 2015 | 3:29by புதினப்பணிமனைin செய்திகள் அனைத்துலக விசாரணை மட்டுமே, சிறிலங்காவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுத்தரும் என்று, வடக்கு-கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 170 கத்தோலிக்க குருமார்கள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணை தேவை என்று கோரி வந்த அமெரிக்காவும், இப்போது தவறான வழிநடத்தல் காரணமாக தமது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது. நாட்டில் இரண்டு தேர்தல்கள் நடைபெற்ற பின்னர், புதிதாக அமைந்துள்ள தேசிய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் என ஐ.நா. தவறாக நம்புகிறது. சிறிலங்காவில் தவறிழைத்தவர்கள் தண்…
-
- 1 reply
- 417 views
-
-
ஐ.நா அறிக்கை குறித்து மூச்சு விடாதாம் இந்தியா – தீர்மான வரைவின் மீதே குறிSEP 17, 2015 | 2:39by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக, இந்தியா கருத்து எதையும் வெளியிடாது என்று கூறப்படுகிறது. சிறிலங்காவில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றதை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த அறிக்கையை, இந்தியா கவனமாக ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியிட்டுள்ள புதுடெல்லி அதிகார வட்டாரங்கள், எனினும், இதுபற்றிய கருத்துகள் எதையும் இந்தியா வெளியிட வாய்ப்பில்லை என்று கூறியுள்ளன. இந்த அறிக்கைக்கு மேலாக, இந…
-
- 3 replies
- 479 views
-
-
5வயதுச் சிறுமி கொட்டதெனியாவில் ஈவிரக்கமின்றி வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு துணித் துண்டு ஒன்றினால் கழுத்து இறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் கொலைக்கான குற்றவாளியை கைது செய்து மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று ஹம்பகாவில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தடயங்கள் மற்றும் சிறுமி உறங்கிய கட்டில் மெத்தையில் காணப்படும் கால் தடங்கள் தொடர்பாக பொலிஸார் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை உடன் கைது செய்ய விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பி…
-
- 9 replies
- 786 views
-
-
முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளரிடம் ஆறு மணிநேரம் விசாரணை SEP 18, 2015 | 3:10by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரிகேடியர் அருண வன்னியாராச்சியிடம் ஆறு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட அவரிடம், காவல்துறை அதிகாரிகள் ஆறு மணிநேரம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலம் ஒன்றையும் பதிவு செய்துள்ளனர். பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்ட காலப் பகுதியில், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக பிரிகேடியர் அருண வன்னியாராச்சியே பணியாற்றியிருந்தார். இந்த …
-
- 0 replies
- 529 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் கலப்பு சிறப்பு நீதிமன்றத்தின் ஊடான சர்வதேச விசாரணை தொடர்பில் முழுமையான தெளிவு வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நேற்றைய தினம் வெளியான ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை தொடர்பில் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து வெளியிட்டார். மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தமது அறிக்கையினை வெளியிடும்போது இந்த அறிக்கை ஒரு மனித உரிமை சார்ந்த விசாரணை ஊடாக உருவாக்கப்பட்ட அறிக்கை எனவும் குற்றவியல் விசாரணை ஊடாக வெளியான அறி…
-
- 2 replies
- 380 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பாக, சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் விசாரணை அதிகாரிகளைக் கொண்ட விசேட நீதிமன்றத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தும் ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கையையும் அதன் பரிந்துரைகளையும் தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இவ்வாறானதொரு விசாரணை நடைபெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல காலமாக தொடர்ச்சியாக அறைகூவல் விடுத்து வந்ததுடன், தற்போது மேற்படி சர்வதேச அமைப்பு இது தொடர்பாக பரிந்துரைகளை தமது அறிக்கையில் உட்படுத்தியிருப…
-
- 1 reply
- 291 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் கலப்பு சிறப்பு நீதிமன்றத்தின் ஊடான சர்வதேச விசாரணை தொடர்பில் முழுமையான தெளிவு வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நேற்றைய தினம் வெளியான ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை தொடர்பில் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து வெளியிட்டார். மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தமது அறிக்கையினை வெளியிடும்போது இந்த அறிக்கை ஒரு மனித உரிமை சார்ந்த விசாரணை ஊடாக உருவாக்கப்பட்ட அறிக்கை எனவும் குற்றவியல் விசாரணை ஊடாக வெளியான அறி…
-
- 0 replies
- 498 views
-
-
யாழ்ப்பாணத்தில் அலரி விதை கலாசாரம் தீவிரமாக பரவி வருவதாக,யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர்.க.நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.தேசிய விஷ ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நச்சுத்தன்மையுடைய வீட்டுப் பாவனைப் பொருட்களால் அநாவசியமாக ஏற்படும் விபத்துக்களைத் தவிர்ப்போம் எனும் தொனிப்பொருளில் விசேட பத்திரிகையாளர் மாநாடு ஒன்று இன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர்.க.நந்தகுமாரன் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. பொது வைத்திய நிபுணர்களான ந.சுகந்தன், எஸ்.சிவன் சுதன் ஆகியோர் இதில் கலந்து கொண்டு, வீட்டுப்பாவனைப் பொருட்களால் ஏற்படும் நஞ்சூட்டல்கள் தொடர்பாகவும் அவற்றை தவிர்ப்பது தொடர்பாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். வைத்த…
-
- 0 replies
- 725 views
-
-
வல்வெட்டித்துறை கடற்கரையில் இருந்து பத்து கிலோமீற்றர் தூரம் வரை வந்த இந்திய மீனவர்களின் றோலர்கள் செவ்வாய்க்கிழமை (08) , அப்பகுதியிலிருந்து சிறிய கண்ணாடி இழைப்படகுகளில் சென்ற மீன்வர்களின் வலையை நாசமாக்கியதில் இரண்டு இலட்சம் தொடக்கம் மூன்று இலட்சம் வரை நட்டம் ஏற்பட்டதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் காற்றுக்கடலாக இருந்ததனால் கடற்படையினர் கடலில் இல்லாததால், 500 வரையான றோலர்களில் வந்த இந்திய மீனவர்களே இவ்வாறு அட்டகாசம் புரிந்ததாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு கடற்படையினர் தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ள போதிலும், கடலில் காற்று அதிகமாக வீசும் சந்தர்ப்பங்களில் அவர்கள் வருவதில்லை என மீனவர்கள் கவலை வ…
-
- 29 replies
- 2.5k views
- 1 follower
-
-
கலப்பு நீதிமன்றம் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என முன்னாள் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றம் இலங்கை மட்டுமன்றி உலகின் எந்தவொரு நாட்டினதும் இறையாண்மைக்கு எதிரானது. வெளிநாட்டு நீதிபதிகள் வேறு நாடுகளில் கடமையாற்றிய காலம் காலணித்துவ ஆட்சியின் போதேயாகும். சுதந்திரமான நாடுகளில் வெளிநாட்டு நீதிபதிகள் கடமையாற்றுவதில்லை. கடந்த காலங்களில் இவ்வாறான ஓர் நீதிமன்றம் கம்போடியாவில் காணப்பட்டது. பாரிய மனித படுகொலைகளை மேற்கொண்ட தோல்வியடைந்த பொல்போட்டின் சிகப்பு இராணுவம் குறித்தே விசாரணை நடத்தப்பட்டது. அரசாங்கம் குறித்தோ இராணுவம் குறித்தோ விசாரணை நடத்தப்படவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் …
-
- 2 replies
- 698 views
-
-
ஐ.நா முன்மொழிந்துள்ள கலப்பு நீதிமன்ற விசாரணை – தமிழர் தரப்பின் கருத்து என்ன?SEP 17, 2015 | 1:36by புதினப்பணிமனைin செய்திகள் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்னகள் தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் தெரிவித்துள்ளனர். அதேவேளை, சிறிலங்காவில் நடத்தப்படும் கலப்பு விசாரணையை ஏற்க முடியாது என்று, கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், “போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா வெளியிட்…
-
- 0 replies
- 343 views
-
-
அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை வலியுறுத்துகிறது அமெரிக்காவின் தீர்மான வரைவுSEP 17, 2015 | 2:19by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்கால மீறல்களை விசாரிக்க அனைத்துலக நீதிபதிகள், சுதந்திரமான வழக்குத் தொடுனர்களை உள்ளடக்கிய பொறிமுறையை உருவாக்குவதற்கு, வலியுறுத்தும், தீர்மான வரைவையே அமெரிக்கா தயாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா முன்வைக்கவுள்ள சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தின் முதலாவது வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப தீர்மான வரைவு, சிறிலங்கா அரசாங்கத்திடம் நேற்று அமெரிக்காவினால் கையளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த முதலாவது தீர்மான வரைவில், சிறிலங்காவில் இடம்ப…
-
- 0 replies
- 407 views
-
-
இலங்கை குறித்த ஐநா மனித உரிமைக் கவுன்சில் அறிக்கையின் மீதான தீர்மானம் இந்தக் கூட்டத்தொடரின் இறுதியில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படலாம் என்று ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் பேச்சாளர் ரூபர்ட் கோல்வில் தெரிவித்துள்ளார். பிபிசியிடம் இது குறித்து பேசிய கோல்வில், இது ஒரு பெரிய அறிக்கை. 9 ஆண்டு காலகட்டத்தில் நடந்த விஷயங்களை அது பரிசீலிக்கிறது. அது எப்படி இலங்கைக்குள்ளும் வெளிநாடுகளிலும் எப்படி பார்க்கப்படுகிறது என்பதை பார்க்க்கவேண்டும். பின்னர், ஐநா மன்ற மனித உரிமைக் கவுன்சிலில் ஒரு தீர்மான வரைவு முன்வைக்கப்படும். அதையொட்டி ஒரு தீர்மானத்தை அவர்கள் கொண்டுவர விரும்பினால் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி, அதை அடுத்த சில நாட்களில் கொண்டு வருவார்கள். இந்தத் தீர்மானம் கவுன்சில…
-
- 0 replies
- 635 views
-
-
யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக சர்வதேச திரைப்பட விழா நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலை அரங்கில் வெகு கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவினுடைய சின்னமாக யாழ். இசைக்கருவி அறிமுகம் செய்யப்பட்டது. தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் லெனின் உட்பட பல திரைமுகங்கள் சின்னத்தை வெளியிட்டு வைத்தனர். அத்தோடு யூரோப்பியன் பனோராமவின் "போனிக்ஸ்' என்னும் ஜேர்மனிய குறுந்திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் 7 நாள்கள் இடம்பெறும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் சுமார் 80 குறும் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட இந்த விழாவுக்கு வடக்கு மாகாண முதலமைச்ச…
-
- 0 replies
- 213 views
-
-
தமிழ் மக்களுக்கு நேற்றைய நாள் சந்தோசமான நாள் என்று குறிப்பிட்டுள்ள வடக்கு முதல்வர் தமிழ் நாடு சட்ட மன்றத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் தருணத்தில் ஐ.நா. விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயங்கள் குறித்து வடமாகாண முதலமைச்சர் சி.வீ.விக்கினேஷ்வரன் ஊடங்கங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் எங்களுக்கு ஒரு முக்கியமான நாள். இதுவரை காலமும் நாம் பலவிதங்களிலே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடைய எதிர்காலம் பற்றி நாங்கள் யோசித்து என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வந்தோமோ அதற்கு ஒரு பதில் கிடைப்பது போன்று சில நடவடிக்கைகள் நடந்துள்ளன. முதலில் நாம் தமிழ…
-
- 0 replies
- 350 views
-
-
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் ஹுசைன் வெளியிட்ட அறிக்கை குறித்து இந்தியா கருத்து எதனையும் வெளியிடவில்லை. எனினும் அமெரிக்காவும் ஏனைய மேற்கத்தைய நாடுகளும் சமர்ப்பிக்கவுள்ள யோசனையின் பின்னரே கருத்தை கூறமுடியும் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்திய நாளிதழின் தகவல்படி, இந்திய வெளியுறவு அமைச்சு இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ள ஹைபிரைட் நீதிமன்றம் தொடர்பில் கருத்து எதனையும் இப்போதைக்கு வெளியிடாது. 30வது மனித உரிமைகள் அமர்வின் இறுதியில் அமெரிக்கா இலங்கையின் உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவாக முன்வைக்கவுள்ள யோசனை வரைக்கும் பொறுத்திருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை தரப்புக்கள் தெரிவித்துள்ளன. அமெரி…
-
- 2 replies
- 389 views
-
-
கலப்பு விசாரணைப் பொறிமுறை என்பது தான் இலங்கைத் தீவுக்கான அறுதியான, உறுதியான ஒரு விடயமாக இருக்கும் என்பதைப் பலரும் உணர்ந்துள்ளார்கள். இலங்கைக்கு ஆதரவாக ரஸ்யா, சீனா செயற்பட முடியாத நிலையை இது உருவாக்கியுள்ளது. அத்துடன், இனப்படுகொலை என்ற சொற்பதம் ஐ.நா. விசாரணைக்குழுவின் தீர்மானத்தில் இடம்பெறவில்லை. மாறாக யுத்தக் குற்றம் என்ற வகையறாவிலே இலங்கையில் இடம்பெற்ற விவகாரம் பார்க்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல விடயங்களை நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா பகிர்ந்து கொண்டார். ஐ.நா. கூறியதை இலங்கை நடைமுறைப்படுத்தமா? - சி.சிறிதரன் ஐயம்! ஐ.நா போர்க்குற்ற அறிக்கை குற்றவியல் விசாரணை அறிக்கையல்ல! இலங்கை அரசாங்கம் நாம் மனித உரிமைகளை எப்படி கடைப்பிடிக்க வேண்டும்? (தமிழில…
-
- 0 replies
- 362 views
-
-
போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையின் மூலம், இலங்கையின் நீதித்துறை கேலிக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ளக விசாரணை நடத்தி, அதன் மூலம் தீர்வை பெற்றுக்கொள்ளும் சூழ்நிலை காணப்படும் போது, இலங்கையில் கலப்பு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்குமாறு ஐ.நா வலியுறுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கை குறித்து சர்வதேச சமூகம் இரட்டைக் கொள்கையை கடைப்பிடித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று வெளியான ஐ.நா அறிக்கையானது, இலங்கையின் குறிப்பாக கடந்த ஆட்சியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=140696&a…
-
- 0 replies
- 259 views
-
-
இலங்கைப் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்றும், அதில் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என்றும் ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. இலங்கையின் தற்போதைய குற்ற வழக்கு விசாரணை நடைமுறைகள் போதுமான வலு பெற்றிருக்கவில்லை என்பதால் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்' என்று இந்தப் பரிந்துரை குறிப்பிட்டுள்ளது. இந்த சிறப்பு நீதிமன்றம் பன்னாட்டு நீதிபதிகள், உள்நாட்டு நீதிபதிகளைக் கொண்டதாக இருக்கும் என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரைக்குத் தொடக்க நிலையிலேயே இலங்கை அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. "ஐ.நா. நீதிமன்றம், சர்வதேச நீதிபதிகள் இதையெல்லாம் இலங…
-
- 0 replies
- 256 views
-
-
ஐ.நா விசாரணை அறிக்கையில், போர்க்குற்றவாளிகள் எவரது பெயர்களும் உள்ளக்கப்படவில்லை, இந்தநிலையில் ஏற்கனவே அதில் இடம்பெற்றிருந்த பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது. இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்பான குற்றவாளிகள் தொடர்பான பெயர்களை வெளியிடும் நோக்கம் ஐ.நாவுக்கு இல்லை என்று ஐ.நா ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐ.நா விசாரணை அறிக்கையில், குற்றவாளிகள் என்று எவருடைய பெயரும் உள்ளடக்கப்படாது. இது மனித உரிமைகள் குறித்த விசாரணையேயாகும். இது குற்றவியல் விசாரணை அல்ல.” என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேவேளை, இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள இன்னர் சிற்றி பிரஸ், அனைத்துலக ரீதியில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட…
-
- 0 replies
- 232 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறீதரன் ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர். குறித்த விசாரணை அறிக்கையானது எமது தமிம் சமூகமும் உள்நோக்கி பார்வையொன்றை செலுத்துவதற்கு உபயோகமானதாக இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், நாங்கள் உண்மைத்துவத்துடன் வருங்காலத்தில் செயற்பட வேண்டும் எனவும் உண்மையைக் கண்டறிவதில் உறுதியாக இருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி இன்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையின் பின்னர் உண்மையான கட்டமைப்பை இலங்கை அரசு ஏற்று…
-
- 0 replies
- 202 views
-
-
இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் முகமாக தலைமன்னாருக்கு தனுஸ்கோடிக்கும் இடையிலான பாலம் அமைப்பது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மூன்று நாள் பயணமாக புதுடெல்லி சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும், வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன் போது நான்கு ஒப்பந்தங்களும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இன்று சந்தித்துப் பேசியுள்ளனர். இதன் போதே பாலம் அமைப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதன்படி, இத்திட்டத்திற்காக 5 பில்…
-
- 12 replies
- 1.6k views
-
-
ஐ.நா விசாரணை அறிக்கையின் பரிந்துரைகள்! [Thursday 2015-09-17 09:00] இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் கடந்த கால தோல்விகளின் காரணமாகவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்…
-
- 0 replies
- 421 views
-